02-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
தங்களுக்குள் மிக மிக ஆன்மீக அன்புடன் இருக்க வேண்டும்,
ஒருபொழுதும் கருத்து வேறுபாடுகளில் வரக் கூடாது.
கேள்வி:
ஒவ்வொரு பிராமணக் குழந்தையும்
தனது மனதிற்குள்ளாகவே எந்த விஷயத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும்?
பதில்:
தனது உள்ளத்தைக் கேளுங்கள் - 1)
நான் ஈஸ்வரனின் உள்ளத்தில் அமர்ந்திருக்கிறேனா? 2) நான் எந்த
அளவிற்கு தெய்வீக குணங்களை தாரணை செய்திருக்கிறேன்? 3)
பிராமணனாகிய நான் ஈஸ்வரிய சேவை யில் தடங்கல் ஏற்படுத்துகிறேனா?
4) சதா இனிமையாக இருக்கிறேனா? நமக்குள் ஒற்றுமை இருக்கிறதா? 5)
நான் சதா ஸ்ரீமத்படி நடக்கிறேனா?
பாடல்:
கள்ளங்கபடமற்றவரது மகிமை
தனிப்பட்டது ........
ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் ஈஸ்வரிய வம்சத்தினர்களாக இருக்கிறீர்கள்.
முன்பு அசுர வம்சத்தினர் களாக இருந்தீர்கள். கள்ளங்கபடமற்றவர்
என்று யாரைக் கூறுகிறோம்? என்பது அசுர வம்சத்தினர்களுக்குத்
தெரியாது. சிவன் வேறு, சங்கர் வேறு என்பதும் தெரியாது. அந்த
சங்கர் தேவதை ஆவார், சிவன் தந்தை ஆவார். எதையும் அறியாமல்
இருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய வம்சத்தினர்கள்
அதாவது ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக இருக்கிறீர்கள். அவர்கள்
இராவணனின் அசுர குடும்பத்தினர்கள் ஆவர். எவ்வளவு வித்தியாசம்
இருக்கிறது! இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தில் ஈஸ்வரனின்
மூலம் ஒருவருக்கொருவர் ஆன்மீக அன்புடன் எப்படி இருப்பது? என்று
கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பிராமண குலத்தில் ஒருவருக்கொருவர்
இந்த ஆன்மீக அன்பை இங்கேயே நிறைத்துக் (வளர்த்துக்) கொள்ள
வேண்டும். யாரிடத்தில் முழுமையான அன்பு இல்லையோ அவர்கள்
முழுமையான பதவியும் அடையமாட்டார்கள். அங்கு ஒரே தர்மம், ஒரே
இராஜ்யம் இருக்கும். தங்களுக்குள் எந்த சண்டையும் இருக்காது.
இங்கு இராஜ்யமே கிடையாது. பிராமணர்களிலும் தேக அபிமானத்தின்
காரணத்தினால் கருத்து வேறு பாடுகளில் வந்துவிடுகிறீர்கள்.
இவ்வாறு கருத்து வேறுபாடுகளில் வருபவர்கள் தண்டனை அடைந்து பிறகு
தேர்ச்சி பெறுவர். அங்கு ஒரே தர்மத்தில் இருப்பீர்கள். ஆக அங்கு
அமைதி இருக்கும். இப்போது அந்தப் பக்கம் அசுர வம்சம் அல்லது
அசுர குடும்பத்தினர். இங்கு ஈஸ்வரிய குடும்பத்தினர்.
எதிர்காலத்திற்காக தெய்வீக குணங்களை தாரணை செய்து
கொண்டிருக்கிறீர்கள். தந்தை அனைத்து குணங்களிலும்
நிறைந்தவர்களாக ஆக்குகின்றார். அனைவரும் ஆகிவிடுவது கிடையாது.
யார் ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி மாலையில்
மணிகளாக ஆகின்றனர். யார் ஆகவில்லையோ அவர்கள் பிரஜைகளாக
ஆகிவிடுவர். அங்கு தெய்வீக அரசாங்கம் இருக்கும். 100 சதவிகிதம்
தூய்மை, அமைதி, சுகம் இருக்கும். இந்த பிராமண குலத்தில்
இப்பொழுது தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். சிலர் நல்ல
முறையில் தெய்வீக குணங்களை தாரணை செய்கின்றனர், மற்றவர்களையும்
செய்வித்துக் கொண்டிருக்கின்றனர். எப்பொழுது ஆத்ம அபிமானியாக
இருப்பீர்களோ அப்பொழுது தான் ஈஸ்வரிய குலத்தில் தங்களுக் குள்
ஆன்மீக அன்புடன் இருப்பீர்கள். ஆகையால் தான் முயற்சி செய்துக்
கொண்டே இருக்கிறீர்கள். கடைசியிலும் கூட அனைவரின் மனநிலையும்
ஏக்ரஸாக, ஒரே மாதிரியானதாக ஆகிவிடாது. பிறகு தண்டனை அடைந்து
பதவி குறைந்துவிடும். குறைந்த பதவி அடைவார்கள். பிராமணர்
களிலும் கூட தங்களுக்குள் இனிமையாக இருக்கவில்லையெனில்,
தங்களுக்குள் உப்புத் தண்ணீர் போன்று இருக்கின்றனர், தெய்வீக
குணங்களை தாரணை செய்யவில்லையெனில் உயர்ந்த பதவி எப்படி அடைய
முடியும்? உப்புத் தண்ணீராக இருப்பதால் சில நேரங்களில் ஈஸ்வரிய
சேவையில் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அவர்களது
நிலை என்ன ஆகும்? அவர்களால் அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைய
முடியாது. ஒருபுறம் இனிமையாக இருப்பதற்கு முயற்சி செய்து
கொண்டிருக்கின்றனர், மற்றொருபுறம் மாயை உப்பு நீராக
ஆக்கிவிடுகிறது. இதன் காரணத் தினால் சேவைக்குப் பதிலாக தீங்கு
(டிஸ்சர்விஸ்) செய்கின்றனர். நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்
தினர்கள் என்று தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். ஈஸ்வரனின்
கூடவே இருக்கிறீர்கள். சிலர் கூடவே இருக்கின்றனர், சிலர் மற்ற
மற்ற ஊர்களில் இருக்கின்றனர், இருப்பினும் சேர்ந்து
இருக்கிறீர்கள் அல்லவா! தந்தையும் பாரதத்தில் தான் வருகின்றார்.
சிவபாபா எப்பொழுது வருகின்றார்? வந்து என்ன செய்கின்றார்?
என்பது மனிதர்களுக்குத் தெரியாது. உங்களுக்கு இப்பொழுது
தந்தையின் மூலம் அறிமுகம் கிடைத்திருக்கிறது. படைப்பவர் மற்றும்
படைப்பின் முதல், இடை, கடையை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள்.
இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது? இது எப்படிப்பட்ட நேரம்?
என்பது உலகத்தினர்களுக்குத் தெரியாது, முற்றிலும் காரிருளில்
இருக்கின்றனர்.
குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பவராகிய தந்தை வந்து முழு
செய்தியையும் கூறியிருக் கின்றார். கூடவே ஏ! சா-க்கிராம்களே!
என்னை நினைவு செய்யுங்கள் என்றும் கூறுகின்றார். இவ்வாறு
சிவபாபா தனது குழந்தைகளுக்குக் கூறுகின்றார். நீங்கள் தூய்மை
ஆக விரும்புகிறீர்கள் அல்லவா! அழைத்துக் கொண்டே இருந்தீர்கள்.
இப்பொழுது நான் வந்திருக்கிறேன். பாரதத்தை மீண்டும் சிவாலயமாக,
ஆக்குவதற்காக சிவபாபா வந்திருக்கின்றார். இராவணன் வைஷ்யாலய மாக
ஆக்கிவிட்டார். நாங்கள் தூய்மையற்றவர்களாக, விஷமுடையவர் களாக
ஆகிவிட்டோம் என்று தாங்களே பாடுகின்றனர். பாரதம் சத்யுகத்தில்
முழுமையாக விகாரமற்றதாக இருந்தது. விகாரமற்ற தேவதைகளை
விகாரமுள்ள மனிதர்கள் பூஜை செய்கின்றனர். பிறகு விகாரமற்ற
வர்களே விகாரிகளாக ஆகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது.
விகாரமற்றவர்கள் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தனர், பிறகு
விகாரிகளாக, பூஜாரிகளாக ஆகின்றனர், அப்பொழுது தான் பதீத பாவனனே
வாருங்கள், வந்து விகார மற்றவர்களாக ஆக்குங்கள் என்று
அழைக்கின்றனர். இந்த கடைசிப் பிறவியில் நீங்கள் தூய்மையாக
ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். என் ஒருவனை நினைவு செய்தால்
உங்களது பாவங்கள் அழிந்துவிடும் மற்றும் நீங்கள் தமோபிர
தானத்தி-ருந்து சதோபிரதான தேவதைகளாக ஆகிவிடுவீர்கள், பிறகு
சந்திரவம்சி சத்திரிய குடும்பத்தில் வருவீர்கள். இந்த நேரத்தில்
ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக இருக்கிறீர்கள், பிறகு 21 பிறவிகள்
தெய்வீக குடும்பத்தில் இருப்பீர்கள். இந்த கடைசிப் பிறவியை
நீங்கள் இந்த ஈஸ்வரிய குடும்பத்தில் கடக்கிறீர்கள். இதில்
நீங்கள் முயற்சி செய்து அனைத்து குணங்களிலும் சம்பன்ன
மானவர்களாக ஆக வேண்டும். நீங்கள் பூஜைக்குரியவர்களாக
இருந்தீர்கள், உண்மையில் இராஜ்யம் செய்தீர்கள், பிறகு
பூஜாரிகளாக ஆகியிருக்கிறீர்கள். இதைப் புரிய வைக்க வேண்டும்
அல்லவா! பகவான் தந்தையாக இருக்கின்றார். நாம் அவரது குழந்தைகள்
எனில் குடும்பம் ஆகி விடுகிறது அல்லவா! நீங்கள் தாய், தந்தையாக
இருக்கிறீர்கள், நாம் குழந்தைகள் ..... என்று பாடவும்
செய்கிறீர்கள் எனில் குடும்பம் ஆகிவிடுகிறது அல்லவா! இப்பொழுது
தந்தையிட மிருந்து சுகமான உலகம் கிடைக்கிறது. நீங்கள்
நிச்சயமாக நமது ஈஸ்வரிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்று
தந்தை கூறுகின்றார். ஆனால் நாடகப்படி இராவணனின் இராஜ்யத்தில்
வந்த பிறகு நீங்கள் துக்கத்தில் வருகிறீர்கள், என்னை
அழைக்கிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் மிகச் சரியான (ஈஸ்வரிய)
குடும்பத்தில் இருக்கிறீர்கள். பிறகு உங்களுக்கு எதிர்கால 21
பிறவிகளுக்கான ஆஸ்தி கொடுக்கிறேன். இந்த ஆஸ்தியானது 21
பிறவிகளுக்கு தெய்வீக குடும்பத்திலும் நிலைத்திருக்கும்.
தெய்வீகக் குடும்பம் சத்யுகம், திரேதாயுகம் வரை இருக்கும்.
பிறகு இராவண இராஜ்யம் ஆகின்றபொழுது நாம் தெய்வீகக்
குடும்பத்தினர்கள் என்பதை மறந்துவிடுகிறீர்கள். விகார
மார்க்கத்தில் செல்வதன் மூலம் அசுர குடும்பத்தினர்களாக
ஆகிவிடுகிறீர்கள். 63 பிறவிகளாக ஏணியில் கீழே இறங்கி வந்தீர்கள்.
இந்த முழு ஞானமும் உங்களது புத்தியில் இருக்கிறது. யாருக்கு
வேண்டுமென்றாலும் நீங்கள் புரிய வைக்க முடியும். உண்மையில்
நீங்கள் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள். சத்யுகத்திற்கு
முன்பு க-யுகம் இருந்தது. சங்கமத்தில் நீங்கள் மனிதனி-ருந்து
தேவதைகளாக உருவாக்கப்படுகிறீர்கள். இடையில் இருப்பது சங்கமம்
ஆகும். உங்களை பிராமண தர்மத்தி-ருந்து தெய்வீக தர்மத்திற்கு
அழைத்து வருகிறேன். லெட்சுமி நாராயணன் இந்த இராஜ்யத்தை எவ்வாறு
அடைந்தனர்? என்பது புரிய வைக்கப்படுகிறது. அதற்கு முன்பு அசுர
இராஜ்யம் இருந்தது, பிறகு தெய்வீக இராஜ்யம் எப்பொழுது, எப்படி
ஏற்பட்டது? கல்ப கல்பம் சங்கமத்தில் வந்து உங்களை பிராமணன்,
தேவதை, சத்ரிய தர்மத்திற்கு அழைத்து வருகிறேன் என்று தந்தை
கூறுகின்றார். இது பகவானின் குடும்பமாகும். அனைவரும் பரம்பிதா
என்று கூறுகின்றனர். ஆனால் தந்தையை (பிதாவை) அறியாத
காரணத்தினால் ஏழைகளாக ஆகி விட்டனர். அதனால் தான் காரிருளை (அஞ்ஞானத்தைப்)
போக்கி வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக தந்தை வருகின்றார்.
இப்பொழுது சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தை
களாகிய நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், தெய்வீக
குணங்களை தாரணை செய்து கொண்டிருக்கிறீர்கள். சிவஜெயந்தி
கொண்டாடுகின்றனர், சிவஜெயந்திக்குப் பிறகு என்ன ஆகும்?
என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அவசியம் தெய்வீக
இராஜ்யத்தின் ஜெயந்தி ஏற்பட்டிருக்க வேண்டும். சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்யும் இறை தந்தை சொர்க்கத்தில் வரமாட்டார் அல்லவா!
நான் நரகம் மற்றும் சொர்க்கத்தின் இடையில் சங்கமத்தில்
வருகிறேன் என்று கூறு கின்றார். சிவராத்திரி என்று
கூறுகிறீர்கள் அல்லவா! ஆக இரவில் நான் வருகிறேன். இதை
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்ள முடியும். யார்
புரிந்துக் கொள்கிறார்களோ அவர்கள் மற்றவர்களுக்கும் தாரணை
செய்விக்கிறார்கள். யார் எண்ணம், சொல், செய-ல் சேவைக்குத்
தயாராக இருக்கிறார்களோ அவர்கள் தான் உள்ளத்தில் அமர முடியும்.
எந்த அளவு சேவையோ அந்த அளவு உள்ளத்தில் அமர முடியும். சிலர்
ஆல்ரவுண்ட் வேலை செய்கின்றனர். அனைத்து காரியமும் கற்றுக்
கொள்ள வேண்டும். உணவு சமைப்பது, ரொட்டி சமைப்பது, பாத்திரம்
கழுவுதல் ...... இதுவும் சேவை அல்லவா! தந்தையின் நினைவு தான்
முதல் விசயமாகும். அவரது நினைவின் மூலம் தான் பாவங்கள் அழிகிறது.
இங்கு ஆஸ்தி அடைகிறீர்கள். அங்கு அனைத்து குணங்களும்
நிறைந்தவர்களாக இருப்பீர்கள். இராஜா ராணி எப்படியோ அவ்வாறே
பிரஜைகள் இருப்பார்கள். துக்கத்திற்கான விஷயம் இருக்காது. இந்த
நேரத்தில் அனைவரும் நரகவாசிகளாக இருக்கின்றனர். அனைவரும்
கீழிறங்கும் கலையில் இருக்கின்றனர். மீண்டும் இப்பொழுது
முன்னேறும் கலை ஏற்படும். அனைவரையும் துக்கத்தி-ருந்து
விடுவித்து சுகத்திற்கு தந்தை அழைத்துச் செல்கிறார். அதனால்
தான் தந்தையை விடுவிக்கக் கூடியவர் (-பரேட்டர்) என்று கூறப்படு
கின்றார். நாம் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து
கொண்டிருக்கிறோம், தகுதியானவர்களாக ஆகிக் கொண்டி ருக்கிறோம்
என்ற போதை இங்கு உங்களுக்கு இருக்கிறது. யார் மற்றவர்களை
இராஜ்ய பதவி யடைவதற்கு தகுதியானவர்களாக ஆக்குகிறார்களோ
அவர்களைத் தான் தகுதியானவர்கள் என்று கூறலாம். படிப்பதற்கு
அதிகமானவர்கள் வருவார்கள் என்பதையும் தந்தை புரிய வைத்திருக்
கின்றார். அனைவரும் 84 பிறவிகள் எடுப்பர் என்பது கிடையாது. யார்
சிறிதளவே படிப்பார்களோ அவர்கள் தாமதமாக வருவார்கள். ஆக
பிறப்பும் குறைவாக இருக்கும். சிலர் 80, சிலர் 82, யார்
சீக்கிரமாக வருவார்கள், யார் தாமதமாக வருவார்கள் ...... அனைத்
திற்கும் ஆதாரம் படிப்பில் இருக்கிறது. சாதாரண பிரஜைகள்
தாமதமாக வருவார்கள். அவர்களுக்கு 84 பிறவிகள் இருக்க முடியாது.
தாமதமாக வந்துக் கொண்டேயிருப்பார்கள். யார் முற்றிலும்
கடைசியில் இருப்பார் களோ அவர்கள் அவர்கள் திரேதாயுக கடைசியில்
பிறப்பு எடுப்பார்கள். பிறகு விகார மார்க்கத்தில் செல்வார்கள்.
கீழே இறங்குவது ஆரம்பமாகிவிடுகிறது. பாரதவாசிகள் எப்படி 84
பிறவிகள் எடுத்தனர்? அதற்கு இந்த ஏணிப்படி விளக்குகிறது. இந்த
சக்கரம் நாடகத்தின் ரூபத்தில் இருக்கிறது. யார் பாவனமாக
இருந்தார்களோ அவர்களே இப்பொழுது பதீதமாக ஆகியிருக்கின்றனர்.
பிறகு மீண்டும் பாவன தேவதைகளாக ஆகின்றனர். தந்தை எப்பொழுது
வருகின்றாரோ அப்பொழுது அனைவருக்கும் நன்மை ஏற்படுகிறது, அதனால்
தான் இதை புருஷோத்தம யுகம் என்று கூறப்படு கிறது. அனைவருக்கும்
நன்மை செய்வதால் அனைத்து புகழும் தந்தைக்கே ஆகும். சத்யுகத்தில்
அனைவருக்கும் நன்மை ஏற்பட்டிருந்தது, எந்த துக்கமும் இல்லாமல்
இருந்தனர். நாம் ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக இருக்கிறோம்
என்பதையும் புரிய வைக்க வேண்டும். ஈஸ்வரன் அனை வருக்கும் தந்தை
ஆவார். நீங்கள் தான் தாய், தந்தை என்று இங்கு தான்
பாடுகிறீர்கள். அங்கு தந்தை என்று மட்டுமே கூறப்படுகிறது. இங்கு
குழந்தைகளாகிய உங்களுக்கு தாய், தந்தை கிடைத் திருக்கின்றார்.
இங்கு குழந்தைகளாகிய நீங்கள் தத்தெடுக்கப்படுகிறீர்கள். தந்தை
படைக்கிறார் எனில் தாயும் இருப்பார். இல்லையெனில் படைப்புகள்
எவ்வாறு நிகழும்? சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் தந்தை எப்படி
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார் என்பதை பாரத வாசிகளும்
அறியவில்லை, அயல்நாட்டினரும் அறியவில்லை. இப்பொழுது புது உலக
ஸ்தாபனை மற்றும் பழைய உலக விநாசம் அவசியம் இந்த சங்கமத்தில்
தான் நிகழும். இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள்.
என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார்.
ஆத்மாவானது பரம்பிதா பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா
பரமாத்மாவைப் பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது ....... இந்த
அழகான சந்திப்பு வேறு எங்கு நிகழும்! அழகான சந்திப்பு அவசியம்
இங்கு தான் நிகழும். பரமாத்மா தந்தை இங்கு தான் வருகின்றார்,
இது தான் கல்யாணக்காரி, அழகான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
ஜீவன் முக்திக் கான ஆஸ்தியை அனைவருக்கும் கொடுக்கின்றார்.
ஜீவன்பந்தனத்தி-ருந்து விடுபட்டு விடுகிறீர்கள்.
சாந்திதாமத்திற்கு அனைவரும் செல்வீர்கள், பிறகு எப்பொழுது
வருவீர்களோ அப்பொழுது சதோபிரதானமாக இருப்பீர்கள். தர்ம
ஸ்தாபனையின் பொருட்டு வருவீர்கள். கீழே உங்களது எண்ணிக்கை
அதிகரிக்கின்றபொழுது இராஜ்யத்திற்காக முயற்சி செய்வீர்கள்,
அதுவரை எந்த சண்டை சச்சரவும் இருக்காது. சதோபிரதானத்தி-ருந்து
ரஜோவிற்கு வருகின்றபொழுது சண்டை சச்சரவுகள் ஆரம்பமாகின்றன. முத-ல்
சுகம், பிறகு துக்கம். இப்பொழுது முற்றிலும் துர்கதி
அடைந்திருக்கிறீர்கள். இந்த க-யுக உலகம் விநாசம், பிறகு சத்யுக
உலகம் ஸ்தாபனை ஆகிவிடும். பிரம்மாவின் மூலம் விஷ்ணுபுரி ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. யார் எப்படி முயற்சி செய் கிறார்களோ
அதன்படி விஷ்ணுபுரிக்கு வந்து பிராப்திகளை அடைவார்கள். இது
புரிந்துக் கொள் வதற்கு மிக மிக நல்ல விசயமாகும். நாம்
ஈஸ்வரனிடமிருந்து எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆஸ்தியடைந்து
கொண்டிருக்கிறோம் என்ற மிகுந்த குஷி குழந்தைகளாகிய உங்களுக்குள்
இருக்க வேண்டும். எந்த அளவிற்கு முயற்சி செய்து தன்னை
சரியானவராக ஆக்கிக் கொள்கிறீர்களோ ...... நீங்கள்
சரியானவர்களாக ஆக வேண்டும். கடிகாரத்தின் முட்கள் இருக்கிறது
அல்லவா! முள் மிகவும் சரியாக இருக்கும். குழந்தைகளில் சிலர்
மிகவும் சரியானவர்களாக ஆகிவிடுகின்றனர். சிலர் சரியானவர்களாக
ஆகவில்லை என்றால் பதவி குறைந்துவிடுகிறது. முயற்சி செய்து
சரியானவர்களாக ஆக வேண்டும். இப்பொழுது அனைவரும் சரியாக நடந்துக்
கொள்வது கிடையாது. அதிர்ஷ்டத்தின் சித்திரத்தை உருவாக்கக்
கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். அதிர்ஷ்டம் உருவாக்கிக் கொள்ளும்
முயற்சியில் குறை இருக்கிறது. அதனால் குறைந்த பதவி அடைகிறீர்கள்.
ஸ்ரீமத் படி நடக்காத காரணத்தினால், அசுர குணங்களை விடாத
காரணத்தினால், யோகாவில் இல்லாத காரணத்தினால் இவை அனைத்தும்
ஏற்படுகிறது. யோகா இல்லையெனில் பண்டிதர் போன்று
ஆகிவிடுகிறீர்கள். யோகா குறைவாக இருப்பதால் சிவபாபாவின் மீது
அன்பு இருப்பது கிடையாது. தாரணையும் குறைவாக ஏற்படுகிறது, அந்த
குஷி இருப்பது கிடையாது. முகமும் பிணம் போன்று ஆகிவிடுகிறது.
உங்களது முகம் தேவதைகளைப் போன்று சதா புன்முறுவலுடன் இருக்க
வேண்டும். தந்தை உங்களுக்கு எவ்வளவு ஆஸ்தி கொடுக்கின்றார்!
யாராவது ஏழைக் குழந்தை செல்வந்தரிடம் சென்றுவிட்டால் அவருக்கு
எவ்வளவு குஷி ஏற்படும்! நீங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தீர்கள்.
இப்பொழுது தந்தை தத்தெடுத்திருக்கின்றார் எனில் குஷி இருக்க
வேண்டும். நாம் ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக ஆகியிருக்கின்றோம்.
ஆனால் அதிர்ஷ்டம் இல்லையெனில் என்ன செய்ய முடியும்! பதவி
குறைந்துவிடும். பட்டத்து ராணியாக ஆவது கிடையாது. பட்டத்து
ராணிகளாக ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார். பிரம்மா,
விஷ்ணு, சங்கர் மூவரும் சிவனின் குழந்தைகள் என்று நீங்கள்
யாருக்கு வேண்டுமென்றாலும் புரிய வைக்க முடியும். பிரம்மாவின்
மூலம் பாரதத்தை மீண்டும் சொர்க்கமாக ஆக்குகின்றார். சங்கர்
மூலம் பழைய உலகம் விநாசம் ஆகிறது, பாரதத்தில் தான்
குறைவானவர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார் கள். பிரளயம்
ஏற்படுவது கிடையாது, ஆனால் அதிகம் அழிந்துவிடும்பொழுது பிரளயம்
ஏற்பட்டது போன்று ஆகிவிடும். இரவு பகல் வித்தியாசம் இருக்கும்.
அவர்கள் அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்றுவிடுவார்கள். இது
பதீத பாவன் தந்தையின் காரியமாகும். ஆத்ம அபிமானி யாக ஆகுங்கள்
என்ற தந்தை கூறுகின்றார். இல்லையெனில் பழைய சம்மந்தங்களின்
நினைவு வந்துக் கொண்டேயிருக்கும். சிறிதளவாக இருந்தாலும் கூட
புத்தி சென்றுக் கொண்டேயிருக்கிறது. பற்றற்றவர்களாக ஆகவில்லை,
எனில் இது கலப்பட நினைவு என்று கூறப்படுகிறது. சத்கதியை அடைய
முடியாது. ஏனெனில் துர்கதியில் இருப்பவர்களை நினைவுச் செய்துக்
கொண்டே இருக்கின்றனர். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாப்தாதாவின் உள்ளத்தில் இடம் பெறுவதற்காக எண்ணம், சொல்,
செயல் மூலம் சேவை செய்யவேண்டும். மிகவும்
சீர்திருத்தமடைந்தவர்களாக, ஆல்ரவுண்டர்களாக ஆக வேண்டும்.
2) பழைய சம்மந்தம் எதுவும் நினைவிற்கு வராத அளவிற்கு ஆத்ம
அபிமானிகளாக ஆக வேண்டும் தங்களுக்குள் மிக மிக ஆன்மீக அன்புடன்
இருக்க வேண்டும், உப்பு நீர் போன்று இருக்கக் கூடாது.
வரதானம்:
உலக மாற்றத்திற்கான சிரேஷ்ட காரியத்தில் தனது விரல் கொடுக்கக்
கூடிய மகான் மற்றும் பணிவானவர் ஆகுக.
ஸ்தூலத்தில் உணவு தயாரிக்கும் போது அதில் அனைத்து பொருட்களையும்,
சில சாதாரண இனிப்பு அல்லது உப்பு குறைவாக இருந்தாலும் உயர்ந்த
உணவாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக இருக்காது. அதே
போன்று உலக மாற்றத்திற்கான இந்த சிரேஷ்ட காரியத்திற்கு ஒவ்வொரு
இரத்தினமும் அவசியமாகும். அனைவரது விரலும் தேவைப்படுகிறது.
அனைவரும் அவரவர்களுக்கு ஏற்றாற் போன்ற மிக மிக அவசிய மானவர்கள்,
சிரேஷ்ட மகாரதிகள் ஆவர். ஆகையால் தனது காரியத்தின் உயர்ந்த
மதிப்பை அறியுங்கள், அனைவரும் மகான் ஆத்மாக்களாக இருக்கிறீர்கள்.
ஆனால் எந்த அளவிற்கு மகானாக இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு
பணிவானவர் களாகவும் ஆகுங்கள்.
சுலோகன்:
தனது குணத்தை சரளமானதாக ஆக்கும் போது அனைத்து காரியங்களும்
சரளமாகி விடும்.
அவ்யக்த சமிக்கை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தன்முக்த் ஆக
இருந்து ஜீவன் முக்த் மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், நாசூக்கான நேரமாக
இருந்தாலும், பிரச்சனைகள், குழப்பங்கள், சூழ்நிலைகள் இரண்டு
மடங்கு பெரிதாக இருந்தாலும் அதன் பாதிப்பி-ருந்து விடுபட்டு
இருங்கள். வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இந்த அனைத்து விதவிதமான
பந்தனங்களிலிருந்தும் முக்தியாக இருங்கள். சூட்சுமத்திலும் ஒரு
பந்தனம் கூட இருக்கக் கூடாது. இவ்வாறு ஒவ்வொரு பிராமணக்
குழந்தையும் பந்தனத்திலிருந்து முக்தி, ஜீவன்முக்தி அடைய
வேண்டும். சங்கம யுகத்திலேயே இந்த ஜீவன் முக்தி ஸ்திதியை பலனாக
அனுபவம் செய்ய வேண்டும்.