02.06.24 காலை முரளி
ஓம் சாந்தி 18.02.20 பாப்தாதா,
மதுபன்
பிரம்மா பாபாவிற்கு சமமாக தியாகம், தபஸ்யா மற்றும் சேவையின்
வைப்ரேஷன் (எண்ண அலைகளை) உலகில் பரப்புங்கள்
இன்று மிகவும் சக்திவானாகிய பாப்தாதா தன்னுடைய சக்திசாலி
குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம்
நினைவு நாளாக இருப்பதுடன் சக்திசாலியான நாளாகவும் இருக்கிறது.
இன்றைய தினம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சர்வ சக்திகளையும்
மனம் விரும்பிக் கொடுக்கும் தினம் (உயில்) உலகில் அனேக விதமான
வில் அதாவது உயில் இருக்கும். ஆனால் பிரம்மா பாபா,
தந்தையிடமிருந்து கிடைத்த அனைத்து சக்திகளையும் குழந்தைகளுக்கு
உயில் எழுதிக் கொடுத்து விட்டார். இந்த மாதிரி ஆன்மீக உயிலை
வேறு யாரும் எழுதிக் கொடுக்க முடியாது. தந்தை சிவபாபா பிரம்மா
பாபாவை ஸ்தூலமாக இவ்வுலகில் பொறுப்பாளர் ஆக்கினார். மேலும்
பிரம்மா பாபா குழந்தைகளுக்கு பொறுப்பாளர் ஆகுக என்ற வரதானத்தைத்
தந்து, (உயில்) செய்து கொடுத்தார். இந்த வில் குழந்தைகளுக்கு
சகஜமாக சக்திகளின் அனுபவத்தை செய்வித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்று தன்னுடைய முயற்சி மூலம் சக்திகளின் பிராப்தி ! இது
பிரபுவின் உயில் மூலம் கொடுப்பினை ! இது பிரபுவின் வரதானம் !
இந்த பிரபுவின் வரதானம் நடந்துக் கொண்டிருக்கிறது. வரதானத்தில்
முயற்சி செய்வதற்கான கடின உழைப்பு இருப்பதில்லை. ஆனால் சுலபமாக
மற்றும் இயல்பாகவே கருவி ஆக்கி, நடத்திக் கொண்டிருக் கின்றனர்.
(அன்று) எதிரில் கொஞ்சம் பேர் தான் இருந்தார்கள், ஆனால்
பாப்தாதாவிடமிருந்து, விசேஷமாக பிரம்மா பாபாவிடமிருந்து
விசேமாக இந்த வில் கிடைத்தது. மேலும் எந்தக் குழந்தைகளுக்கு
தந்தை வில் செய்திருந்தாரோ அந்த அனைத்து குழந்தைகளும் (ஆதி
ரத்தினங்கள் மற்றும் சேவையின் பொறுப்பிலிருக்கும் குழந்தைகள்)
நல்ல முறையில் காரியத்தில் ஈடுபடுத்தினார்கள் என்பதையும்
பாப்தாதா பார்த்தார். மேலும் அந்த உயிலின் காரணமாக இந்த பிராமண
குடும்பம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
குழந்தைகளின் விசேஷத்தின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட வேண்டும்
என்று இருந்தது, மேலும் அது ஆகிக் கொண்டிருக்கிறது.
பொறுப்பாளர் ஆகியிருக்கும் மற்றும் ஒத்துழைப்பு கொடுக்கும்
இரண்டு விதமான குழந்தைகளில் இரண்டே விசேஷங்கள் மிக நல்லதாக
இருந்தது. முதல் விசேஷம், ஸ்தாபனையின் ஆதி ரத்தினமாக
இருந்தாலும் சேவையின் ரத்தினமானாலும் சரி, இரு பாலரிடமும்
குழுவின் ஒற்றுமை மிக மிக நல்லதாக இருந்தது. யாரிடமும் ஏன்?
என்ன? எப்படி என்ற எண்ணமே இல்லை. இன்னொரு விசேஷம் - ஒருவர்
கூறினால் இன்னொருவர் ஏற்றுக் கொள்கிறார். இந்த அதிகப் படியான
சக்திகளின் உயிலின் விசேஷம் வாயு மண்டலத்தில் இருந்தது. எனவே
பொறுப்பாள ராகியிருக்கும் ஆத்மாக்களுக்கு பாபா, பாபா தான்
தென்பட்டுக் கொண்டிருந்தார்.
அந்த மாதிரி நேரத்தில் பொறுப்பாளராக ஆகியிருக்கும்
குழந்தைகளுக்கு உள்ளப்பூர்வமாக அன்பை வழங்குகிறார். தந்தையின்
அதிசயமோ இருக்கவே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் அதிசயமும்
குறைந்தது அல்ல. மேலும் அந்த நேரத்தின் குழு நாம் அனைவரும்
ஒன்று என்ற ஒற்றுமை தான் இன்று வரை சேவையை வளர்ச்சியடையச்
செய்து கொண்டிருக்கிறது. ஏன்? பொறுப்பாளர் ஆகியிருக்கும்
குழந்தைகளின் அஸ்திவாரம் உறுதியாக இருந்தது. இன்றைய தினமும்
குழந்தைகளின் அதிசயத்தின் பாடலை பாப்தாதா பாடிக் கொண்டிருந்தார்.
நாலாபுறங் களிலிருந்தும் குழந்தைகள் அன்பின் மாலையை
அணிவித்தார்கள். மேலும் தந்தை குழந்தைகளின் அதிசயக் காரியத்தை
புகழ்பாடிக் கொண்டிருந்தார். இவ்வளவு காலம் நடக்கும் என்று
நினைத் தீர்களா? எவ்வளவு காலம் கடந்து சென்று விட்டது. அனைவரின்
வாயிலிருந்தும் உள்ளத் திலிருந்தும் இப்பொழுது செல்ல வேண்டும்,
செல்ல வேண்டும் என்று தான் வெளிவந்தது, ஆனால் இப்பொழுது
அவ்யக்த ரூபத்தின் சேவை நடக்க வேண்டும் என்று பாப்தாதா
தெரிவித்திருந்தார். சாகார பாபா காலத்தில் இவ்வளவு பெரிய ஹால்
கட்டினாரா? பாபாவின் மிகச் செல்லமான இரட்டை வெளிநாட்டுக்
குழந்தைகள் வந்திருந்தனரா? விசேஷமாக இரட்டை வெளிநாட்டினருக்கு
அவ்யக்த பாலனை மூலமாக ஆன்மீக ஜென்மம் கிடைக்க வேண்டும்
என்றிருந்தது, இவ்வளவு அனைத்துக் குழந்தைகளும் வர வேண்டும்
என்றிருந்தது, எனவே பிரம்மா பாபாவிற்கு தன்னுடைய பௌதீக உடலை
விட வேண்டியதாக இருந்தது. இரட்டை வெளிநாட்டினருக்கு நாம்
அவ்யக்த பாலனைக்குப் பாத்திரமானவர்கள் என்ற போதை இருக்கிறது.
பிரம்மா பாபாவின் தியாகம் விசேஷமாக நாடகத்தில்
அடங்கியிருக்கிறது. தொடக்கத்திலிருந்து பிரம்மா பாபாவின்
தியாகம் மற்றும் குழந்தைகள் உங்களுடைய பாக்கியம்
அடங்கியிருக்கிறது. அனைவரையும் விட தியாகத்தின் நம்பர் ஒன்
உதாரணமாக பிரம்மா பாபா ஆனார். அனைத்தும் பிராப்தி ஆகி இருந்தும்
தியாகம் செய்வதைத் தான் தியாகம் என்று சொல்வது. நேரத்திற்குத்
தகுந்தாற்போல் பிரச்சனைகளின் காரணமாக செய்யும் தியாகத்தை
சிரேஷ்ட தியாகம் என்று கூற முடியாது. பார்த்தீர்கள் என்றால்
தொடக்கத்திலிருந்தே உடல், மனம், பணம், செல்வம், சம்மந்தம் என்ற
அனைத்து பிராப்திகள் இருந்த போதிலும் தியாகம் செய்தார்.
உடலையும் தியாகம் செய்தார். அனைத்து சாதனங்கள் இருந்த போதிலும்
அவர் பழையதிலேயே இருந்தார். சாதனங்கள் வரத் தொடங்கி விட்டன.
சாதனங்கள் இருந்த போதிலும், சாதனாவில் உறுதியாக இருந்தார்.
பிரம்மாவின் இந்த தபஸ்யா குழந்தைகள் உங்கள் அனைவரின்
பாக்கியத்தை உருவாக்கிச் சென்றது. நாடகப்படி அந்த மாதிரி
தியாகத்தின் உதாரண ரூபம் பிரம்மா தான், மேலும் இந்த தியாகம்
தான் எண்ண சக்தியின் சேவைக்கான விசேஷ பங்கை உருவாக்கியது.
அதனால் எண்ண சக்தி மூலம் புதுப்புது குழந்தைகள் வேகமாக
வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பிரம்மா
பாபாவின் தியாகத்தின் கதையைக் கேட்டீர்களா?
பிரம்மாவின் தபஸ்யாவின் பலன் குழந்தைகளாகிய உங்களுக்கு
கிடைத்துக் கொண்டிருக்கிறது. தபஸ்யாவின் பிரபாவம் இந்த மதுபன்
பூமியில் நிரம்பியிருக்கிறது. கூடவே குழந்தைகளும்
இருக்கிறார்கள், குழந்தைகளின் தபஸ்யாவும் இருக்கிறது, ஆனால்
பொறுப்பானவர் என்றோ பிரம்மா பாபாவைத்தான் கூறுவோம். மதுபன்
தபஸ்யா பூமிக்கு யாரெல்லாம் வருகிறார்களோ அந்த பிராமணக்
குழந்தைகளும் இங்கே உள்ள வாயு மண்டலம், வைப்ரேஷன் சகஜயோகி ஆக்கி
விடுகிறது என்று அனுபவம் செய்கிறார்கள். யோகா செய்வதற்கு
கடினமாக அனுபவம் ஆவதில்லை, சுலபமாக செய்ய முடிகிறது. மேலும்
எப்படிப்பட்ட ஆத்மா வந்தாலும் அவரும் ஏதாவது அனுபவம் செய்து
தான் செல்கிறார். ஞானத்தை புரிந்துக் கொள்ளவில்லை, ஆனால்
அலெகிகமான அன்பு மற்றும் அமைதியை அனுபவம் செய்து தான்
போகிறார்கள். ஏதாவது தனக்குள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தை செய்து தான் செல்கிறார். இது பிரம்மா மற்றும் பிராமணக்
குழந்தைகளின் தபஸ்யாவின் பிரபாவம். கூடவே சேவையின் விதியாகவும்
விதவிதமான சேவையை குழந்தைகள் நடைமுறையில் செய்வித்து
காண்பித்தார்கள். அதே விதி களை இப்பொழுது நீங்கள் விஸ்தாரத்தில்
கொண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே எப்படி பிரம்மா
பாபாவின் தியாகம், தபஸ்யா, சேவையின் பலன் குழந்தைகள் உங்கள்
அனைவருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அதே போல் ஒவ்வொரு
குழந்தையும் தன்னுடைய தியாகம், தபஸ்யா மற்றும் சேவையின்
அதிர்வலைகளை (வைப்ரேஷன்) உலகில் பரப்ப வேண்டும். எப்படி
அறிவியலின் பலம் தன்னுடைய பிரபாவத்தை பிரத்யக்ஷ ரூபத்தில்
காண்பித்துக் கொண்டிருக் கிறது. அந்த மாதிரி அறிவியலை
உருவாக்குவதும் அமைதி பலம். அமைதி பலத்தை இப்பொழுது
பிரத்யக்ஷமாக (வெளிப்படையாக) காண்பிப்பதற்கான நேரம் இது. அமைதி
பலத்தின் வைப்ரேஷனை அதிவேகத்தில் பரப்புவதற்கான சாதனம் - மனம்,
புத்தியின் ஒருமுகப்பட்ட நிலை. இந்த ஒருமுகப்பட்ட நிலையின்
பயிற்சியை அதிகரிக்க வேண்டும். ஒருமுகப்பட்டதின் சக்திகள்
மூலமாகத்தான் வாயு மண்டலத்தை உருவாக்க முடியும். குழப்பத்தின்
காரணமாக சக்திசாலி யான வைப்ரேஷன் உருவாக முடிவதில்லை.
ஒருமுகப்பட்ட சக்தி அதிகம் வேண்டும் என்று இன்று பாப்தாதா
பார்த்தார். இப்பொழுது தன்னுடைய சகோதர, சகோதரிகளின் துக்க
நிகழ்வுகள் மாறிவிட வேண்டும் என்று அனைத்துக் குழந்தைகளுக்கும்
ஒரே ஒரு திட எண்ணம் இருக்க வேண்டும். உள்ளத்தில் இரக்க உணர்வு
இருக்க வேண்டும். அறிவியலின் சக்தி இவ்வளவு குழப்பத்தை
ஏற்படுத்த முடியும் என்றால், இத்தனை அனைத்து பிராமணர்களின்
அமைதியின் சக்தி, இரக்கமனமுடைய பாவனை மூலமாக குழப்பத்தை மாற்றம்
செய்ய முடியாதா என்ன? எப்பொழுது செய்யத்தான் வேண்டும்,
நடக்கத்தான் வேண்டும் என்றால் இந்த விசயத்தின் மேல் விசேஷ கவனம்
வையுங்கள். எப்பொழுது நீங்கள் கிரேட், கிரேட் கிராண்ட் ஃபாதரின்
(முப்பாட்டனாரின்) குழந்தைகள் என்றால், அனைவருமே உங்களுடைய
தலைமுறையினர், கிளைகள், குடும்பத்தினர் மற்றும் நீங்களே அனைத்து
பக்தர்களின் இஷ்ட தேவனாகவும் இருக்கிறீர்கள், நான் இஷ்ட தேவன்
என்ற போதை இருக்கிறதா? பக்தர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்,
அதை நீங்கள் கேட்கிறீர்களா? ஹே ! இஷ்ட தேவனே என்று அவர்கள்
கதறுகிறார்கள், நீங்கள் அதைக் கேட்க மட்டும் தான் செய்கிறீர்களா,
அவர் களுடைய கூக்குரலுக்கு பதில் தருவதில்லையா? எனவே
பக்தர்களின் இஷ்ட தேவனே இப்பொழுது அவர்களுடைய கூக்குரலைக்
கேளுங்கள், கேட்க மட்டும் செய்யாதீர்கள், அவர்களுக்கு பதிலும்
கூறுங்கள் என்று பாப்தாதா கூறுகிறார். என்ன பதில் கொடுப்பீர்கள்?
மாற்றம் ஆவதின் வாயு மண்டலத்தை உருவாக்குங்கள். உங்களுடைய பதில்
அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் அவர்களும்
அலட்சியமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். கதறுகிறார்கள் பிறகு அமைதி
யாகி விடுகிறார்கள்.
பிரம்மா பாபாவிற்கு ஒவ்வொரு காரியம் செய்வதில் இருந்த
உற்சாகத்தைப் பார்த்திருக்கிறீர்கள். எப்படி தொடக்க காலத்தில்
சாவி வேண்டும் என்ற ஊக்கம் இருந்தது. இப்பொழுது கூட பிரம்மா
பாபா சிவ பாபாவிடம் வீட்டுக் (சொர்க்கம்) கதவுகளின் சாவியைக்
கொடுங்கள் என்று கூறுகிறார். ஆனால் உடன் செல்பவர்கள் தயாராக
வேண்டும் இல்லையா ! தனியாக என்ன செய்வார்? இப்பொழுது உடன்
செல்ல வேண்டுமா? இல்லை பின்னால் செல்வதா? உடன் செல்ல வேண்டும்
இல்லையா? எனவே ஒரு வேளை தந்தை சாவி கொடுக்கிறார் என்றால்,
குழந்தைகள் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்களா என்று
குழந்தைகளிடம் கேளுங்கள் என்று பிரம்மா பாபா கூறுகிறார்.
எவரெடியாக இருக்கிறீர்களா அல்லது ரெடியாக இருக்கிறீர்களா?
ரெடியாக அல்ல, எவரெடியாக இருக்க வேண்டும். தியாகம் தபஸ்யா
மற்றும் சேவை என்ற மூன்று பரீட்சைகளும் முடிந்ததா? பிரம்மா பாபா
தான் அன்புக் கண்ணீர் வடிக்கிறேன் என்று புன் சிரிக்கிறார்
மேலும் பிரம்மா பாபா அந்தக் கண்ணீர்த் துளிகளை முத்துக்குச்
சமமாக இதயத்தில் நிரப்பவும் செய்கிறார், ஆனால் அனைவரும்
எப்பொழுது எவரெடி ஆவார்கள் என்ற எண்ணமும் ஓடுகிறது. தேதி
கொடுக்க வேண்டும் நாங்களோ எவரெடி என்று நீங்கள் கூறுவீர்கள்.
ஆனால் உங்கள் துணைவர்களாக உங்களுடன் இருக்கிறார்களே அவர்களையும்
ஆக்குங்கள் அல்லது அவர்களை விட்டு விட்டுச் சென்று விட்டார்
என்று நீங்கள் கூறுவீர்கள். பிரம்மா பாபாவும் சென்று விட்டார்
என நீங்கள் கூறுவீர்கள் தானே! ஆனால் அவருக்கோ இந்தப் படைப்பை
படைக்க வேண்டியதாக இருந்தது. வேகமாக வளர்ச்சி செய்வதின்
பொறுப்பு இருந்தது. எனவே அனைவரும் எவரெடியாக இருக் கிறீர்களா,
ஒருவர் அல்ல, அனைவரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் இல்லையா?
அல்லது தனியாகச் செல்வீர்களா? அனைவரும் எவரெடியாக
இருக்கிறீர்களா அல்லது ஆகி விடுவீர்களா? பதில் கூறுங்கள்.
குறைந்தது 9 லட்சமோ உடன் செல்ல வேண்டும். இல்லை யென்றால்
எவர்கள் மீது ராஜ்யம் செய்வீர்கள் ? தன் மேல் இராஜ்யம்
செய்வீர்களா? எவரெடி ஆகுங்கள் மேலும் எவரெடி ஆக்குங்கள் ! என்ற
சுபபாவனை தான் பிரம்மா பாபாவிடம் குழந்தைகளுக்காக இருக்கிறது.
இன்று வதனத்தில் அனைத்து விசேஷ ஆதி ரத்தினங்களும், சேவையின் ஆதி
ரத்தினங்களும் வெளிப் பட்டார்கள். நாங்களோ தயார் என்று
அட்வான்ஸ் பார்ட்டி கூறீனார்கள். எந்த விசயத்திற்காக தயாராக
இருக்கிறார்கள்? பிரத்யக்ஷ்த்தின் முரசு கொட்டியது என்றால்
நாங்கள் அனைவரும் பிரத்யக்க்ஷமாகி புது உலகப் படைப்பிற்கு
பொறுப்பாளர் ஆவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்களோ புது
உலகைப் படைப்பவரே வாருங்கள் என்று வரவேற்கிறோம். இப்பொழுது
அனைத்துக் காரியங்களும் உங்கள் மீது இருக்கிறது. வந்து விட்டார்....
வந்து விட்டார்... என்ற முரசு கொட்டுங்கள். முரசு கொட்ட வருமா?
முரசு கொட்ட வேண்டும் இல்லையா? தேதியை வாங்கி வாருங்கள் என்று
பிரம்மா பாபாவும் கூறுகிறார். தேதி இல்லாமல் காரியமும்
நடப்பதில்லை என்று நீங்களும் கூறுகிறீர்கள் இல்லையா? எனவே
இதற்கான தேதியை நிச்சயம் செய்யுங்கள். தேதியை முடிவு செய்ய
முடியுமா? தந்தையோ நீங்களே நிச்சயம் செய்யுங்கள், இன்றே முடிவு
செய்யுங்கள் என்று கூறுகிறார். மாநாட்டின் தேதியை முடிவு
செய்தீர்கள், இதற்காகவும் மாநாடு நடத்துங்களேன். வெளி நாட்டினர்
என்ன நினைக்கிறீர்கள், தேதியை நிச்சயம் செய்ய முடியுமா ? தேதியை
நிர்ணயம் செய்வீர்களா? ஆம் அல்லது இல்லை என்று கூறுங்கள்.
நல்லது - தாதி ஜானகியுடன் ஆலோசனை செய்து செய்யுங்கள். நல்லது.
பாரதம் மற்றும் வெளி நாடுகளின் நாலாபுறங்களிலும் உள்ள,
பாப்தாதாவின் மிக நெருங்கிய, மிக அன்பான மற்றும்
விலகியிருக்கும், பாப்தாதா அனைத்துக் குழந்தைகளும் அன்பில்
மூழ்கியிருந்து அன்பில் ஐக்கியமான சொரூபத்தில்
அமர்ந்திருக்கிறார்கள் என்று பாப்தாதா பார்க்கிறார். கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள் மேலும் சந்திப்பின் ஊஞ்சலில் ஆடிக்
கொண்டிருக்கிறார்கள். தூரமாக இல்லை, ஆனால் கண்களின் எதிரில்
கூட இல்லை, நிரம்பியிருக்கிறார்கள். அப்படி நேரெதிரில்
சந்திப்பு செய்து கொண்டிருக்கும் மற்றும் அவ்யக்த ரூபத்தில்
அன்பில் ஐக்கியமாகியிருக்கும் குழந்தைகளுக்கு, எப்பொழுதும்
தந்தைக்குச் சமமாக தியாகம், தபஸ்யா மற்றும் சேவையின் நிரூபணம்
கொடுக்கும் உண்மையான குழந்தைகளுக்கு, எப்பொழுதும் ஒருமுகப்பட்ட
சக்தி மூலம் உலகை மாற்றம் செய்யக் கூடிய உலகை மாற்று,
குழந்தைகளுக்கு, எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக தீவிர முயற்சி
மூலமாக பறக்கும் டபுள் லைட் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் மிக
மிக மிக அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
வரதானம்:
ஒவ்வொரு சுவாசத்திலும் நினைவு மற்றும் சேவையின் சமநிலை மூலம்
ஆசிர்வாதங்களைப் பெறக்கூடிய சதா மகிழ்ச்சி நிறைந்தவர் ஆகுக.
நினைவின் தொடர்பு சதா இணைந்திருக்க வேண்டும் என்று எப்படி கவனம்
வைக்கிறீர்களோ, அது போல் சேவையிலும் கூட சதா தொடர்பு
இணைந்திருக்க வேண்டும். சுவாச-சுவாசத்திலும் நினைவு மற்றும்
சுவாச-சுவாசத்திலும் சேவை இருக்க வேண்டும் - இதைத் தான் சமநிலை
என்பார்கள். இந்த சமநிலை மூலம் சதா ஆசிர்வாதங்களை அனுபவம்
செய்து கொண்டே இருப்பீர்கள் மற்றும் இந்த சப்தம் தான்
மனதிலிருந்து வெளிப்படும் -- ஆசிர்வாதங்களால் வளர்ந்து
கொண்டிருக்கிறேன். முயற்சியிலிருந்து, யுத்தத்திலிருந்து
விடுபட்டு விடுவீர்கள். என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகளில்
இருந்து விடுபட்டு சதா மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன்
இருப்பீர்கள். பிறகு வெற்றி பிறப்புரிமையின் ரூபத்தில் அனுபவம்
ஆகும்.
சுலோகன்:
பாபாவிடம் இருந்து பரிசு பெற வேண்டுமானால் தன்னிடமிருந்து
மற்றும் துணையில் இருப்பவர்களிடம் இருந்து தடையற்று
இருப்பதற்கான சர்ட்டிஃபிக்கேட் (சான்றிதழ்) கூடவே இருக்க
வேண்டும்.