ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு தினந்தோறும் பாபா நினைவு படுத்துகின்றார் - தேகி
அபிமானி ஆகுங்கள், ஏனெனில் புத்தி இங்குமங்கும் அலைகின்றது.
அஞ்ஞான காலத்திலும் கூடக் கதைகள் முதலியவற்றைக் கேட்கும் போது
புத்தி வெளியில் அலைகின்றது. இங்கும் கூட புத்தி அலைகின்றது.
அதனால் தினந்தோறும் பாபா சொல்கிறார், தேகி அபிமானி ஆகுங்கள்.
அவர்களோ சொல்வார்கள், நான் சொல்வதன் மீது கவனம் வையுங்கள்,
தாரணை செய்யுங்கள் என்று. சாஸ்திரம் சொல்கிறார்கள் என்றால்
வசனத்தில் கவனம் வையுங்கள் என்பார்கள். இங்கோ பாபா
ஆத்மாக்களுக்கு சொல்லிப் புரிய வைக்கிறார், நீங்கள் அனைவரும்
மாணவர்கள், தேகி அபிமானி ஆகி இருங்கள். சிவபாபா வருகின்றார்,
படிப்பு சொல்லிக் கொடுப்பதற்காக. சிவபாபா படிப்பு சொல்லிக்
கொடுப்பதற்காக வருகிறார் என்று புரிந்து கொண்டிருக்கிற வேறு
எந்த ஒரு கல்லூரியும் இருக்காது. அத்தகைய ஒரு பாடசாலை
சங்கமயுகத்தில் நிச்சயமாக இருக்க வேண்டும். மாணவர்கள்
அமர்ந்துள்ளனர், பரமபிதா பரமாத்மா வருகின்றார். நமக்குப்
படிப்பு சொல்லிக் கொடுக்க என்பதையும் அறிந்துள்ளனர். சிவபாபா
வருகிறார், நமக்குக் கற்றுத் தருவதற்காக. முதல்-முதல் விஷயம்
சொல்கிறார், நீங்கள் தூய்மையாக வேண்டுமானால் என்னை நினைவு
செய்யுங்கள் என்று. ஆனால் மாயா அடிக்கடி மறக்கச் செய்து
விடுகிறது. அதனால் பாபா எச்சரிக்கை செய்கின்றார். யாருக்காவது
சொல்லிப் புரிய வைப்பதானாலும் முதலாவது விஷயம், பகவான் யார்
என்பதைச் சொல்லிப் புரிய வையுங்கள். பதீத பாவன், துக்கத்தை
நீக்கி சுகம் கொடுக்கக் கூடிய பகவான் எங்கே இருக்கிறார்? -
இதையும் சொல்லுங்கள். அவரை அனைவருமே நினைவு செய்கிறார்கள்.
எப்போதாவது ஆபத்து வந்தால் சொல்கிறார்கள், பகவானே கருணை
காட்டுங்கள். யாரையாவது காப்பாற்ற வேண்டு மானாலும் பகவானே, ஓ.
காட்ஃபாதர், எங்களை துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று அவரை
அழைக் கிறார்கள். துக்கமோ அனைவருக்குமே உள்ளது. இதுவோ
உறுதியாகத் தெரிந்துள்ளது - அதாவது சத்யுகம் சுகதாமம் என்றும்
கலியுகம் துக்கதாமம் என்றும் சொல்லப்படுகிறது. இதைக் குழந்தைகள்
அறிவார்கள். ஆனாலும் மாயா மறக்கச் செய்து விடுகிறது. இந்த
நினைவில் அமர வைக்கிற வழக்கமும் டிராமாவில் உள்ளது. ஏனென்றால்
அநேகர் உள்ளனர், அவர்கள் நாள் முழுவதும் நினைவு செய்வதே இல்லை.
ஒரு நிமிடம் கூட நினைவு செய்வதில்லை. பிறகு நினைவு
படுத்துவதற்காக இங்கே அமர்த்தி வைக்கப்படுகின்றனர். நினைவு
செய்வதற்கான யுக்தி சொல்கிறார் என்றால் உறுதி ஆகி விடுவார்கள்.
பாபாவின் நினைவு மூலம் தான் நாம் சதோபிரதான் ஆகவேண்டும்.
சதோபிரதான் ஆவதற்காக பாபா முதல் தரமான உண்மையான யுக்தி
சொல்லியிருக்கிறார். பதீத பாவனரோ ஒருவர் தான். அவர் வந்து
யுக்தி சொல்கிறார். இங்கே குழந்தைகளாகிய நீங்கள் எப்போது
பாபாவுடன் யோகத் திலிருக்கிறீர்களோ அப்போது சாந்தியில்
இருக்கிறீர்கள். புத்தியோகம் அங்கே இங்கே சென்றது என்றால்
சாந்தியில் இல்லை, அசாந்தியில் இருப்பதாக அர்த்தம். எவ்வளவு
நேரம் புத்தியோகம் இங்கே அங்கே சென்றதோ அந்த அளவு அது
பலனற்றதாகும். ஏனென்றால் பாவமோ நீங்குவதில்லை. உலகம் இதை
அறிந்திருக்கவில்லை - பாவம் எப்படி நீங்குகிறது என்று. இவை
மிகவும் ஆழமான விஷயங் களாகும். பாபா சொல்லியிருக்கிறார், என்
நினைவிலேயே அமர்ந்திருங்கள். ஆக, எதுவரை நினைவின் கம்பி
இணைந்துள்ளதோ அவ்வளவு நேரம் வெற்றி தான். கொஞ்சமாவது புத்தி
இங்கே அங்கே சென்றது என்றால் நேரம் வீணாயிற்று, பலனற்றுப்போனது.
பாபாவின் கட்டளை யாவது, குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்,
நினைவு செய்யவில்லை என்றால் பலனில்லை. இதனால் என்னவாகும்?
நீங்கள் விரைவாக சதோபிரதான் ஆக மாட்டீர்கள். பிறகு பழக்கமாகி
விடும். இது நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஆத்மா இந்த
பிறவியின் பாவங்களை அறிந்துள்ளது. எனக்கு நினைவு இல்லை என்று
யாராவது சொல்லலாம். ஆனால் பாபா சொல்கிறார், வயது 3-4
வருடங்களில் இருந்தே அனைத்து விஷயங்களும் நினைவிருக்கும்.
பின்னாளில் எவ்வளவு பாவங்கள் நடைபெறு கின்றனவோ அந்த அளவு
ஆரம்பத்தில் நடைபெறுவதில்லை. நாளுக்கு நாள் பார்வை குற்றமானதாக
ஆகிக் கொண்டே போகின்றது. திரேதாவில் இரண்டு கலைகள் குறைந்து
விடுகின்றன. சந்திரனுக்கு இரண்டு கலைகள் எவ்வளவு சமயத்தில்
குறைகின்றன? கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துக் கொண்டே செல்கின்றன.
பிறகு 16 கலை சம்பூர்ணம் (முழுமை) என்றும் சந்திரனைச்
சொல்கின்றனர். சூரியனுக்குச் சொல்வதில்லை. சந்திரனுடையது ஒரு
மாதத்தின் விஷயம். இது பிறகு கல்பத்தின் விஷயம். நாளுக்கு நாள்
கீழே இறங்கிக் கொண்டே செல்கின்றனர். பிறகு நினைவு யாத்திரை
மூலம் மேலே ஏற முடியும். பிறகு நாம் நினைவு செய்ய வேண்டும்,
மேலேறிச் செல்ல வேண்டும் என்ற தேவையே இருக்காது.
சத்யுகத்திற்குப் பிறகு கீழே இறங்க வேண்டும். சத்யுகத்திலும்
நினைவு செய்தால் கீழே இறங்கவே மாட்டார்கள். டிராமாவின் அனுசாரம்
இறங்கியே ஆக வேண்டும். ஆக, நினைவு செய்வதே இல்லை. கீழே இறங்க
வேண்டியதும் அவசியம். பிறகு நினைவு செய்வதற்கான உபாயம் பாபாவே
சொல்கிறார். ஏனென்றால் மேலே செல்ல வேண்டும். சங்கமயுகத்தில்
தான் வந்து பாபா கற்றுத் தருகிறார் - இப்போது உயரும் கலை
ஆரம்பமாகின்றது. நாம் மீண்டும் நமது சுகதாமத்திற்குச் செல்ல
வேண்டும். பாபா சொல்கிறார், இப்போது சுகதாமம் செல்ல
வேண்டுமானால் என்னை நினைவு செய்யுங்கள். நினைவினால் ஆத்மா
நீங்கள் சதோபிரதான் ஆகிவிடுவீர்கள்.
நீங்கள் உலகத்திலிருந்து வேறுபட்டவர்கள். வைகுண்டம்
இவ்வுலகத்திலிருந்து முற்றிலும் தனிப்பட்டது. வைகுண்டம்
இருந்தது. இப்போது இல்லை. கல்பத்தின் ஆயுள் நீண்டதாகச் சொல்லி
விட்ட காரணத்தால் மறந்து விட்டுள்ளனர். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு வைகுண்டம் மிகவும் அருகில் தென்படுகின்றது. இன்னும்
கொஞ்சம் சமயமே உள்ளது. நினைவு யாத்திரையில் குறைவு உள்ளது.
அதனால் இன்னும் நேரம் உள்ளது என நினைக்கின்றனர். நினைவு
யாத்திரை எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவு இல்லை. டிராமா
திட்டப்படி நீங்கள் செய்தியைக் கொண்டு செல்கிறீர்கள்.
யாருக்கும் செய்தி சொல்வ தில்லை என்றால் சேவை செய்வதில்லை என்று
பொருள். முழு உலகத்திற்கும் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும்
- அதாவது பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என்று.
கீதை படிப்பவர்கள் அறிவார்கள், ஒரு கீதை சாஸ்திரத்தில் தான்
இந்த மகாவாக்கியம் உள்ளது. ஆனால் அதில் கிருஷ்ண பகவான் வாக்கு
என எழுதியிருப்பதால், யாரை நினைவு செய்வது? சிவனுக்கு பக்தி
செய்கிறார்கள். ஆனால் ஸ்ரீமத் படி நடப்பதற்கு யதார்த்த ஞானம்
இல்லை. இச்சமயம் உங்களுக்கு ஈஸ்வரிய மத் (வழி) கிடைக்கின்றது.
இதற்கு முன்பு இருந்தது மனிதர்களின் வழிமுறை. இரண்டுக்கும்
இரவு-பகலுக்குள்ள வேறுபாடு! மனித வழிமுறை சொல்கிறது, ஈஸ்வரன்
சர்வவியாபி என்று. ஈஸ்வரனின் வழிமுறை சொல்கிறது, அப்படி இல்லை
என்று. பாபா சொல்கிறார், நான் வந்திருக்கிறேன் சொர்க்கத்தினை
ஸ்தாபனை செய்வதற்காக எனும் போது நிச்சயமாக இது நரகம் தான்.
இங்கே 5 விகாரங்கள் அனைவரிடமும் பிரவேசமாகியுள்ளன. அதனால் தான்
விகாரி உலகத்திற்கு நான் வருகிறேன், நிர்விகாரி ஆக்குவதற்காக.
யார் ஈஸ்வரனின் குழந்தைகளாக ஆகியிருக்கிறார்களோ அவர் களிடம்
விகாரமோ இருக்க முடியாது. இராவணனின் சித்திரத்தைப் பத்துத்
தலைகள் உள்ளதாகக் காட்டுகின்றனர். இராவணனின் சிருஷ்டி
நிர்விகாரி என்று ஒருபோதும் யாரும் சொல்ல முடியாது. நீங்கள்
அறிவீர்கள், இப்போது இராவண இராஜ்யம், அனைவருக்குள்ளும் 5
விகாரங்கள் உள்ளன. சத்யுகத்தில் உள்ளது இராம ராஜ்யம், அங்கே
எந்த ஒரு விகாரமும் கிடையாது. இச்சமயம் மனிதர்கள் எவ்வளவு
துக்கத்தில் உள்ளனர்! சரீரத்திற்கு எவ்வளவு துக்கம்
ஏற்படுகின்றது! இது துக்க உலகம். சுகதாமத்திலோ சரீர சம்பந்தமான
துக்கம் கூட இருக்காது. இங்கோ எத்தனை ஆஸ்பத்திரிகள்
நிறைந்துள்ளன! இதை சொர்க்கம் என்று சொல்வதும் கூட பெரும்
தவறாகும். ஆகவே புரிந்து கொண்டு மற்றவர்களுக்குச் சொல்லிப்
புரிய வைக்க வேண்டும். அந்தப் படிப்பு யாருக்காவது சொல்லிப்
புரிய வைப்பதற்கு அல்ல. பரீட்சையில் பாஸாகி விட்டால் வேலைக்குப்
போய்விடுகிறார்கள். இங்கோ நீங்கள் அனைவருக்கும் செய்தி சொல்ல
வேண்டும். ஒரு பாபா மட்டுமே அனைவருக்கும் கொடுக்க முடியாது.
யார் மிகவும் சாமர்த்தியசாலிகளாக உள்ளனரோ அவர்கள் ஆசிரியர்கள்
எனப்படு கிறார்கள். திறமை குறைந்தவர்கள் என்றால் மாணவர்கள்
எனப்படுகிறார்கள். நீங்கள் அனைவருக்கும் பாபாவின் செய்தியைக்
கொடுக்க வேண்டும். பகவானை அறிவீர்களா எனக் கேட்க வேண்டும். அவரோ
அனைவருக்கும் தந்தையாக இருப்பவர். ஆக, முக்கியமான விஷயம்
பாபாவின் அறிமுகம் கொடுப்பது. ஏனென்றால் யாருக்குமே தெரியாது.
உயர்ந்த வரிலும் உயர்ந்தவர் தந்தை - முழு உலகையும்
தூய்மையாக்குபவர். முழு உலகமும் தூய்மை யாக இருந்தது. அதில்
பாரதம் இருந்தது. வேறு எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களும் சொல்ல
முடியாது - நாங்கள் புது உலகத்திற்கு வந்திருக்கிறோம் என்று.
அவர்களோ புரிந்து கொண்டிருக் கிறார்கள், நமக்கு முன்பு யாரோ
இருந்து சென்றிருக் கிறார்கள் என்று. கிறிஸ்துவும் கூட
நிச்சயமாக ஒரு சரீரத்தில் வருவார். அவருக்கு முன்பு நிச்சயமாக
யாரோ இருந்திருக்கிறார்கள். பாபா அமர்ந்து புரிய வைக்கிறார்,
நான் இந்த பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசமாகிறேன். பிரம்மாவின்
சரீரத்தில் வருகிறார் என்பதையும் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
அட, பிராமணர்களோ அவசியம் வேண்டும். பிராமணர்கள் எங்கிருந்து
வருவார்கள்? நிச்சயமாக பிரம்மாவிடமிருந்து தான் வருவார்கள்
இல்லையா? நல்லது, பிரம்மாவின் தந்தை பற்றி எப்போதாவது
கேட்டிருக்கிறீர்களா? அவர் கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர் (மனித
குலத்தின் முதல் தந்தை). அவருக்கு சாகாரத் தந்தை யாரும்
கிடையாது. பிரம்மாவின் சாகாரத் தந்தை யார்? யாராலும் சொல்ல
முடியாது. பிரம்மாவோ பாடப்பட்டிருக்கிறார். பிரஜாபிதாவாகவும்
இருக்கிறார். எப்படி நிராகார் சிவபாபா என்று சொல்கிறீர்கள்.
அவருடைய தந்தை யார், சொல்லுங்கள். பிறகு சாகார் பிரஜாபிதா
பிரம்மாவின் தந்தை யார் சொல்லுங்கள். சிவபாபாவோ
தத்தெடுக்கப்பட்டவரல்ல. இந்த பிரம்மா தத்தெடுக்கப் பட்டவர்.
இவரை சிவபாபா தத்தெடுத் திருக்கிறார் எனச் சொல்வீர்கள்.
விஷ்ணுவை சிவபாபா தத்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல
மாட்டீர்கள். இதையோ நீங்கள் அறிவீர்கள், பிரம்மா தான் விஷ்ணு
ஆகிறார். தத்தெடுக்கப் பட்டவரல்ல. சங்கர் பற்றியும்
சொல்லப்பட்டுள்ளது. அவருக்கு பாகம் எதுவும் கிடையாது. பிரம்மாவே
விஷ்ணு ஆகிறார், விஷ்ணுவே பிறகு பிரம்மா ஆகிறார். இது 84
பிறவிகளின் சக்கரம். சங்கர் பிறகு எங்கிருந்து வந்தார்?
அவருடைய படைப்புகள் எங்கே? பாபாவுக்கோ படைப்புகள் உள்ளனர். அவர்
அனைத்து ஆத்மாக்களின் தந்தை, மற்றும் பிரம்மாவின் படைப்பு
மனிதர்கள் அனைவரும் ஆகும். சங்கரின் படைப்பு எங்கே? சங்கர்
மூலம் எந்த ஒரு மனித உலகமும் படைக்கப்படுவதில்லை. பாபா வந்து
இந்த அனைத்து விஷயங்களையும் சொல்லிப் புரிய வைக்கிறார். பிறகும்
கூடக் குழந்தைகள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு வரின்
புத்தியும் நம்பர்வார் உள்ளது இல்லையா? எவ்வளவு புத்தியோ அந்த
அளவு ஆசிரியரின் படிப்பை தாரணை செய்ய முடியும். இது எல்லையற்ற
படிப்பு. படிப்பின் அனுசாரம் தான் நம்பர்வார் பதவி பெறுகின்றனர்.
படிப்பு ஒன்று தான் - மனிதரிலிருந்து தேவதை ஆவதற்கானது. ஆனால்
இராஜ்யம் உருவாகின்றது இல்லையா? இதுவும் புத்தியில் வரவேண்டும்,
நாம் எந்த மாதிரிப் பதவி பெறுவோம்? இராஜா ஆவது என்றால் அது
முயற்சியின் காரியமாகும். இராஜாக்களிடம் தாச-தாசிகளும் வேண்டும்.
தாச-தாசிகளாக யார் ஆகிறார்கள், இதையும் நீங்கள் புரிந்து கொள்ள
முடியும். நம்பர்வார் புருஷார்த்தத்தின் (முயற்சியின்) அனுசாரம்
ஒவ்வொருவருக்கும் தாச-தாசிகள் கிடைப்பார்கள். ஆகவே பலபிறவிகளாக
தாச-தாசியாக ஆகிற மாதிரி படிக்கக் கூடாது. உயர்ந்தவராக
ஆவதற்குப் புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
ஆக, உண்மையான சாந்தி பாபாவின் நினைவில் தான் உள்ளது. கொஞ்சம்
கூட புத்தி இங்கே அங்கே சென்றால் நேரம் வீணாகி விடும். வருமானம்
குறைந்து விடும். சதோபிரதான் ஆகமுடியாது. இதுவும் புரிய
வைக்கப்பட்டுள்ளது - அதாவது கைகளால் காரியம் செய்து கொண்டே
இருங்கள், மனதால் நினைவு செய்யுங்கள். சரீரத்தை ஆரோக்கியமாக
வைத்திருப் பதற்காக நடந்து சுற்றி வருவது, இதெல்லாம்
செய்யுங்கள். ஆனால் புத்தியில் பாபாவின் நினைவு இருக்க வேண்டும்.
துணையில் (அருகில்) யாராவது இருந்தால் வேண்டாத பேச்சுகளில்
ஈடுபடக் கூடாது. ஒவ்வொருவருடைய மனமும் சாட்சியாக உள்ளது. பாபா
புரிய வைக்கிறார், இத்தகைய நிலையில் சுற்றி வாருங்கள்.
பாதிரியார்கள் முற்றிலும் சாந்தியில் செல்கின்றனர். நீங்கள்
ஞான விஷயங்களை நாள் முழுவதும் பேசுவதில்லை. பிறகு அமைதியாக
இருந்து (நாக்கை சாந்தியில் கொண்டுவருவது) சிவபாபாவின் நினைவில்
ரேஸ் பண்ண வேண்டும். எப்படி பாபா சொல்கிறார் - சாப்பிடும் போது
பாபா நினைவில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்களது சார்ட்டைப்
பாருங்கள். (பிரம்மா) பாபா தம்மைப் பற்றிச் சொல்லும் போது
சொல்கிறார், நான் மறந்து விடுகிறேன் என்று. பாபாவுக்குச்
சொல்கிறேன், நான் முழு நேரமும் நினைவில் இருப்பேன். நீங்கள் என்
இருமலை நிறுத்துங்கள். சுகரைக் குறையுங்கள். எனக்கு நான் என்ன
முயற்சி செய்கிறேனோ அதைச் சொல்கிறேன். ஆனால் நானே மறந்து
விடுகிறேன் எனும் போது இருமல் எப்படிக் குறையும்? பாபாவின்
துணையில் என்ன செய் கிறேனோ அதை உள்ளபடி சொல்லி விடுகிறேன். பாபா
குழந்தை களுக்குச் சொல்கிறார், குழந்தைகள் பாபாவிடம்
சொல்வதில்லை, வெட்கம் வருகின்றது. பெருக்கி சுத்தம் செய்யுங்கள்,
உணவு சமையுங்கள். அப்போதும் சிவபாபா நினைவில் செய்யுங்கள்,
அப்போது சக்தி வரும். இதற்கும் யுக்தி வேண்டும். இதில்
உங்களுக்கு நன்மை ஏற்படும். பிறகு நீங்கள் நினைவில்
அமர்வீர்களானால் மற்றவர்களுக்கும் கவர்ச்சி ஏற்படும். ஒருவர்
மற்றவர்களுக்குள் கவர்ச்சி ஏற்படத் தான் செய்கிறது இல்லையா?
எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் அதிகமாக நினைவில் அமர்கிறீர்களோ
அவ்வளவு நல்ல அமைதி நிலவும். ஒருவர்-மற்றவர் மீதான பிரபாவம்
டிராமாவின் படி ஏற்படத் தான் செய்கிறது. நினைவு யாத்திரையோ
மிகவும் நன்மை செய்யக் கூடியது. இதில் பொய் பேசுவதற்கான தேவை
இல்லை. உண்மையான தந்தையின் குழந்தை கள் என்றால்
உண்மையானவர்களாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு
அனைத்தும் கிடைக்கின்றது. உலகத்தின் இராஜபதவி கிடைக்கிறது
என்றால் பிறகு பேராசையில் 10-20 சேலைகள் முதலியவற்றை ஏன்
சேர்த்து வைக்கிறீர்கள்? அநேகப் பொருள்களைச் சேர்த்து
வைப்பீர்களானால் சாகும் போது அது நினைவு வரும். அதனால் உதாரணம்
சொல்கின்றனர், கணவனிடம் மனைவி சொன்னார், ஊன்று கோலை
விட்டுவிடுங்கள், இல்லையென்றால் இதுவும் கூட நினைவு வரும்.
சிறிதும் நினைவு இருக்கக் கூடாது. இல்லையென்றால் தனக்குத் தானே
கஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். பொய் சொல்வதால் நூறு
மடங்கு பாவம் சேர்கின்றது. சிவபாபாவின் பண்டாரா சதா
நிறைந்துள்ளது. அதிகமாக வைத்துக் கொள்வதற்கும் கூடத் தேவை என்ன
இருக் கிறது? யாருக்காவது திருட்டு நடந்து விட்டால் அனைத்தும்
கொடுக்கப்பட்டு விடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜபதவி
கிடைக்கின்றது. அப்படி இருக்கும் போது உடை முதலியவை கிடைக்காதா?
தவறான செலவு மட்டும் செய்யக் கூடாது. ஏனெனில் சொர்க்கத்தின்
ஸ்தாபனைக்காக அபலைகள் தான் உதவி செய்கின்றனர். அவர் களுடைய
பணத்தை இதுபோல் வீணடித்து விடக்கூடாது. அவர்கள் உங்களுக்குப்
பரிபாலனை செய்கிறார்கள் என்றால் உங்களது கடமை அவர்களுக்குப்
பரிபாலனை செய்வது. இல்லையெனில் நூறு மடங்கு பாவம் தலை மீது
ஏறிவிடும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல்
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.