03-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தனக்குத் தான் ராஜ திலகத்தை இடுவதற்கான தகுதி மிக்கவராக ஆகுங்கள். எந்த அளவு படிப்பை படித்து ஸ்ரீமத்படி நடக்கிறீர்களோ அந்த அளவு ராஜதிலகம் கிடைத்து விடும்.

கேள்வி:
எந்த நினைவில் இருந்தீர்கள் என்றால் இராவண தன்மையின் (மாயையின்) நினைவு மறந்து போகும்?

பதில்:
நாம் கணவன் மனைவி அல்ல, நாம் ஆத்மாக்கள், நாம் பெரிய பாபா (சிவபாபா) விடமிருந்து சிறிய பாபாவின் (பிரம்மா) மூலம் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். இந்த நினைவு இராவண தன்மையின் (மாயையின்) நினைவை மறக்க வைத்து விடும். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் என்ற நினைவு வந்தது என்றால் இராவண தன்மையின் நினைவு நீங்கி விடும். இதுவும் கூட தூய்மையாக இருப்பதற்கான மிக நல்ல யுக்தி ஆகும். ஆனால் இதில் முயற்சி தேவை.

பாடல்:
உங்களை அடைந்து நாங்கள் . . .

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். பாருங்கள் அனைவரும் திலகத்தை இங்கே (புருவ மத்தியில்) இடுகின்றனர். இந்த இடம் ஒன்று ஆத்மாவின் இருப்பிடம், மற்றொன்று ராஜ திலகம் இங்கே இடப்படுகிறது. இது ஆத்மாவின் அடையாள மாகத்தான் இருக்கிறது. இப்போது ஆத்மாவுக்கு தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி தேவை. உலகின் இராஜ்ய திலகம் தேவை. சூரிய வம்ச-சந்திர வம்சத்து மஹாராஜா-மஹாராணி ஆவதற்காக படிக்கிறீர்கள். படிப்பது என்பது தனக்குத் தானே ராஜதிலகம் இடுவதாகும். நீங்கள் இங்கே வந்ததே படிப்பதற்காக. இங்கே (புருவ மத்தியில்) வசிக்கக்கூடிய ஆத்மா சொல்கிறது - பாபா நாங்கள் உங்களிடமிருந்து உலகின் சுயராஜ்யத்தை அவசியமாக பிராப்தி செய்வோம். தனக்காக ஒவ்வொருவரும் தனது முயற்சியை செய்ய வேண்டும். நாங்கள் நல்ல குழந்தைகளாக ஆகிக்காட்டு வோம் என்று சொல்கின்றனர். நாம் எப்படி நடக்கிறோம் என தங்களுடைய நடத்தையைப் பார்த்தபடி இருக்க வேண்டும். நாங்கள் எங்களுக்கு இராஜதிலகத்தை இடுவதற்காக தகுதி மிக்கவர்களாக ஆகியுள்ளோமா இல்லையா என நீங்களே அறிய முடியும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நல்ல குழந்தைகளாக ஆகிக் காட்ட வேண்டும். பாபா நாங்கள் உங்களுடைய பெயரை விளங்கச் செய்வோம். நாங்கள் உங்களுடைய உதவியாளராக அதாவது எங்களுக்கே உதவியாளராக ஆகி பாரதத்தின் மீது எங்களது இராஜ்யத்தை நடத்துவோம். பாரதவாசிகள் சொல்கின்றனர் அல்லவா - எங்களுடைய இராஜ்யம். ஆனால் பாவம் அவர்களுக்கு நாம் விஷம் நிறைந்த நதியில் வீழ்ந்து கிடக்கிறோம் என்பதே தெரியாது. ஆத்மாக்களாகிய நம்முடைய இராஜ்யம் இல்லை. இப்போது ஆத்மா தலை கீழாகத்தொங்கிக் கொண்டிருக்கிறது. உண்பதற்கு கூட கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது பாபா சொல்கிறார் - இப்போது நம்முடைய குழந்தைகளுக்கு உணவு கூட கிடைப்பதில்லை, இப்போது நாம் சென்று இவர்களுக்கு ராஜயோகம் கற்பிக்கலாம். ஆக தந்தை இராஜயோகம் கற்பிப்பதற்காக வருகிறார். எல்லைக்கப்பாற் பட்ட தந்தையை நினைவு செய்கின்றனர். அவரே புதிய உலகைப் படைப்பவர் ஆவார். தந்தை பதீத பாவனரும் ஆவார், ஞானக்கடலும் ஆவார். இது உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. நம்முடைய பாபா ஞானக்கடல், சுகக் கடலாக இருப்பவர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். இந்த மகிமைகளை உறுதியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மறக்காதீர்கள். தந்தையின் மகிமைகள் அல்லவா? அந்த தந்தை மறு பிறவிகள் அற்றவர். கிருஷ்ணரின் மகிமைகள் முற்றிலும் வேறானதாகும். பிரதம மந்திரி, ஜனாதிபதி இவர்களின் மகிமைகள் வேறு வேறாக இருக்கின்றன அல்லவா? எனக்கும் கூட இந்த நாடகத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த பார்ட் (நடிப்பு) கிடைத்துள்ளது. இது எல்லைக்கப்பாற்பட்ட நாடகம், இதன் ஆயுள் எவ்வளவு என நாடகத்தில் நடிகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? தெரியவில்லை என்றால் அவர்கள் அறிவற்றவர்கள் என்று சொல்லலாம். ஆனால் இதைத் தெரிந்து கொள்வதில்லை. மனிதர்கள் என்னவாக இருந்து என்னவாக ஆகி விடுகின்றனர் என்ற வித்தியாசத்தை தந்தை வந்து புரிய வைக்கிறார். 84 பிறவிகள் எப்படி எடுக்கப் படுகிறது என்பது மனிதர்களுக்கு முற்றிலும் தெரியாது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது, படங்கள் இருக்கின்றன அல்லவா? சோம்நாத் கோவிலி லிருந்து எவ்வளவு செல்வங்களை திருடிச் சென்றார்கள். எவ்வளவு செல்வங்கள் இருந்தன. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இங்கே எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை சந்திப்பதற்காக வந்திருக் கிறீர்கள். பாபாவிடம் ராஜதிலகத்தை ஸ்ரீமத்படி அடைவதற்காக வந்துள்ளோம் என குழந்தைகள் அறிவார்கள். கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும் என தந்தை கூறுகிறார். பிறவி பிறவிகளாக விஷ நதியில் மூழ்கிக் களைத்துப் போகவில்லையா? நான் பாவி, நிர்க்குணமான தோல்வியடைந்த எனக்குள் எந்த குணமும் இல்லை என்று சொல்லவும் செய்கின்றனர், அப்படி யெனில், கண்டிப்பாக ஒரு சமயத்தில் இருந்தன, அந்த குணங்கள் இப்போது இல்லை.

இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் - நாம் உலகின் எஜமானாக அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்களாக இருந்தோம். இப்போது எந்த குணமும் இல்லை. இதையும் தந்தை புரிய வைக்கிறார். குழந்தைகளைப் படைப்பவர் தந்தையே ஆவார். ஆக தந்தைக்குத்தான் அனைத்து குழந்தைகளின் மீதும் இரக்கம் ஏற்படுகிறது. என்னுடைய நடிப்பும் நாடகத்தில் இருக்கிறது என தந்தை கூறுகிறார். எந்த அளவு தமோபிரதானமாக ஆகியுள்ளனர். பொய்யான (தவறான) பாவங்கள், சண்டை என என்னென்னவெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. நாம் ஒரு சமயத்தில் உலகின் எஜமானாக இரட்டை கிரீடதாரியாக இருந்தோம் என்பதை அனைத்து பாரதவாசி குழந்தைகளும் மறந்து விட்டனர். நீங்கள் உலகின் எஜமானாக இருந்தீர்கள், பிறகு நீங்கள் 84 பிறவிகள் எடுத்து வந்தீர்கள் என்று தந்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். ஆச்சரிய மாக உள்ளது, 84 பிறவிகளுக்குப் பதிலாக 84 லட்சம் பிறவிகள் என்று ஏற்படுத்தி விட்டார்கள், பிறகு கல்பத்தின் ஆயுளைக் கூட லட்சக்கணக்கான வருடங்கள் என்று சொல்லி விடுகின்றனர். அடர்ந்த காரிருளில் இருக்கின்றனர் அல்லவா?. எவ்வளவு பொய்! பாரதம் தான் உணமையான கண்டமாக இருந்தது, பாரதம் தான் பொய்யான கண்டமாக இருக்கிறது. பொய்யான கண்டமாக யார் ஆக்கியது, உண்மையான கண்டமாக யார் ஆக்கியது - இது யாருக்கும் தெரியாது. இராவணனைப் பற்றி முற்றிலும் தெரியாது. பக்தர்கள் இராவணனை எரிக்கின்றனர். யாராவது தார்மீக மனிதர்கள் இருந்தாலும் அவர்களுக்குச் சொல்லுங்கள் - மனிதர்கள் என்னென்னவெல்லாம் செய்கின்றனர். சத்யுகம், அதை சொர்க்கம் என சொல்கிறீர்கள், அங்கே சைத்தானாகிய இராவணன் எங்கிருந்து வந்தான்? நரகத்தின் மனிதர்கள் அங்கே எப்படி இருக்க முடியும்? அப்போது இது தவறு என புரிந்து கொள்வார்கள். நீங்கள் இராம இராஜ்யத்தின் படத்தை வைத்து புரிய வைக்கலாம் - இதில் இராவணன் எங்கிருந்து வந்தான்? நீங்கள் புரிய வைக்கவும் செய்கிறீர்கள், ஆனால் புரிந்து கொள்வதில்லை. அரிதாக யாராவது வெளிப்படுகின்றனர். நீங்கள் எவ்வளவு குறைந்த அளவில் இருக்கிறீர்கள், இன்னும் முன்னால் போகப்போக எத்தனை பேர் நிலைக்கப் போகிறார்கள் என புரியும்.

ஆக, பாபா புரிய வைத்துள்ளார் - ஆத்மாவின் சிறிய அடையாளத்தையும் இங்கேதான் (புருவ மத்தி) காட்டுகின்றனர். பெரிய அடையாளம் ராஜதிலகமாகும். இப்போது தந்தை வந்துள்ளார். தனக்கு பெரிய திலகத்தை எப்படி வைப்பது, நீங்கள் சுயராஜ்யத்தை எப்படி பிராப்தியாக செய்ய முடியும் என்பதற்கான வழியைக் காட்டுகிறார். அதன் பெயரை இராஜயோகம் என வைத்துள்ளார். கற்றுக் கொடுப்பவர் தந்தை ஆவார். கிருஷ்ணர் தந்தையாக ஆக முடியாது. அவர் குழந்தை. பிறகு ராதை யுடன் சுயம்வரம் நடக்கும்போது ஒரு குழந்தை பிறக்கும். மற்றபடி கிருஷ்ணருக்கு இவ்வளவு ராணியர்கள் இருப்பதாகக் கூறி விட்டனர், இது பொய்யல்லவா! ஆனால் இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது, இப்படிப்பட்ட விசயங்களை மீண்டும் கேட்கப் போகிறீர்கள். இப்போது குழந்தை களாகிய உங்கள் புத்தியில் உள்ளது - ஆத்மாக்களாகிய நாம் எப்படி மேலேயிருந்து நடிப்பை நடிப்பதற்காக வருகிறோம். (ஆத்மா) ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்று எடுக்கிறது. இது மிகவும் சகஜமாக உள்ளது அல்லவா. குழந்தை பிறந்தது என்றால் - இதைச் சொல் என கற்றுக் கொடுக் கின்றனர், கற்றுக்கொடுக்கும்போது கற்றுக் கொள்கிறது. உங்களுக்கு பாபா என்ன கற்றுக் கொடுக் கிறார்? தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் சொல்கிறார். நீயே தாயும் தந்தையும்... என பாடவும் செய்கிறீர்கள். ஆத்மா பாடுகிறது அல்லவா, அளவற்ற சுகம் கிடைக் கிறது. சிவபாபா நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இங்கே நீங்கள் சிவபாபாவிடம் வந்திருக்கிறீர்கள். பாகீரதம் எனில் மனித வடிவிலுள்ள இரதம் அல்லவா? இதில் பரமபிதா பரமாத்மா வீற்றிருக்கிறார், ஆனால் ரதத்தின் பெயர் என்ன? பெயர் பிரம்மா என இப்போது நீங்கள் அறிவீர்கள், ஏனெனில் பிரம்மாவின் மூலம் பிராமணர்களைப் படைக்கிறார் அல்லவா? முதலில் உச்சிக் குடுமி போன்ற பிராமணர்கள் உருவாகின்றனர், பிறகு தேவதைகள். முதலில் பிராமணர்கள் தேவைப்படுகின்றனர், ஆகையால் விராட ரூபமும் காட்டி யுள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் தான் பிறகு தேவதைகள் ஆகின்றீர்கள். தந்தை மிகவும் நல்ல முறையில் புரிய வைக்கிறார், ஆனாலும் கூட மறந்து விடுகின்றனர். குழந்தைகளே, நாம் கணவன், மனைவி அல்ல, நாம் ஆத்மாக்கள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள் என தந்தை சொல்கிறார். நாம் பெரிய பாபாவிடமிருந்து சிறிய பாபா மூலம் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக் கிறோம் என்றால், இராவண குணங்களின் நினைவு மறந்து விடும். இது தூய்மையாய் இருப்பதற் கான நல்ல யுக்தியாகும். பாபாவிடம் பல ஜோடிகள் (தம்பதியர்) வருகின்றனர், இருவருமே பாபா என அழைக்கின்றனர். எப்போது நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் என நினைவு வருகின்றதோ பிறகு இராவண பழக்க வழக்கத்தின் நினைவு மறந்து விட வேண்டும். இதில் உழைக்க வேண்டியுள்ளது. முயற்சியின்றி எதுவும் நடக்காது. நாம் பாபாவுடையவர் ஆகியுள்ளோம், அவரைத்தான் நினைவு செய்கிறோம். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழியும் என பாபாவும் சொல்கிறார். 84 பிறவிகளின் கதை முற்றிலும் சகஜமானதுதான். மற்றபடி தந்தையை நினைவு செய்வதில் முயற்சி தேவைப்படுகிறது. முயற்சி செய்து குறைந்த பட்சம் 8 மணி நேரம் நினைவு செய்யுங்கள் என்று தந்தை சொல்கிறார். ஒரு மணி நேரம். . . அரை மணி நேரம். . . வகுப்பிற்கு வந்தீர்கள் என்றால், தந்தை நமக்கு கற்பிக்கிறார் என நினைவு வரும். இப்போது நீங்கள் தந்தையின் முன்னால் இருக்கிறீர்கள் அல்லவா? தந்தை குழந்தைகளே, குழந்தைகளே என சொல்லிப் புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் கேட்கிறீர்கள். கெட்டதை கேட்காதீர்கள். . . என தந்தை சொல்கிறார். இதுவும் கூட இப்போதைய விஷயம்தான்.

நாம் ஞானக் கடலாகிய தந்தையிடம் அவர் முன்னால் வந்துள்ளோம் என இப்போது குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். ஞானக் கடல் தந்தை உங்களுக்கு முழு சிருஷ்டியின் ஞானத்தை கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு எடுப்பதும், எடுக்காததும் அவரவர்களைப் பொறுத்த தாகும். தந்தை வந்து இப்போது நமக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் இப்போது இராஜ யோகம் கற்றுக் கொள்கிறோம். பிறகு எந்த சாஸ்திரம் முதலானவற்றின் பக்தியின் அம்சமும் இருக்காது. பக்தி மார்க்கத்தில் ஞானம் கிஞ்சித்தும் (சிறிதளவும்) இல்லை, ஞான மார்க்கத்தில் பிறகு பக்தி சிறிதளவும் இல்லை. ஞானக் கடல் வரும்போது ஞானம் சொல்வார். அவருடைய ஞானமே சத்கதிக்கானதாகும். சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவர்தான், அவர்தான் பகவான் என அழைக்கப்படுகிறார். அனைவரும் ஒரு பதீத பாவனரைத்தான் அழைக்கின்றனர், பிறகு இன்னொருவர் எப்படி இருக்க முடியும்? இப்போது தந்தையின் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் உண்மையான விசயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளே, நான் உங்களை எவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கிவிட்டுச் சென்றேன் என தந்தை சொல்லி யிருக்கிறார். 5 ஆயிரம் வருடங்களின் விசயம் ஆகும். நீங்கள் இரட்டை கிரீடதாரிகளாக இருந்தீர்கள், தூய்மை யின் கிரீடமும் இருந்தது, பிறகு இராவண இராஜ்யம் ஏற்பட்டபோது நீங்கள் பூஜாரிகளாக ஆகி விடுகிறீர்கள். இப்போது தந்தை படிப்பிக்க வந்துள்ளார் எனும்போது அவரின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும், பிறருக்கும் புரிய வைக்க வேண்டும். நான் இந்த சரீரத்தை கடனாக எடுக்க வேண்டி யுள்ளது என தந்தை சொல்கிறார். மகிமை அனைத்தும் அந்த ஒருவருடையது ஆகும், நான் (பிரம்மா) அவருடைய ரதமாக இருக் கிறேன். நான் காளை மாடு அல்ல. பலியாவது அனைத்தும் உங்கள் மீது, பாபா உங்களுக்கு சொல்கிறார், இடையில் நான் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மட்டும் தனியாக எப்படி சொல்வார்? உங்களுக்குக் கூறுகிறார், நானும் கேட்டுக் கொள்கிறேன். இவர் (பிரம்மா) கூட முயற்சி செய்யும் மாணவர் ஆவார். நீங்களும் மாணவர்கள். இவரும் படிக்கிறார். தந்தையின் நினைவில் இருக்கிறார். எவ்வளவு குஷியில் இருக்கிறார். லட்சுமி நாராயணரைப் பார்த்து குஷி ஏற்படுகிறது - நாம் இப்படி ஆகப்போகிறோம். நீங்கள் இங்கே வந்ததே சொர்க்கத்தின் இளவரசன் - இளவரசி ஆவதற்கு. இராஜயோகம் அல்லவா. லட்சியம் குறிக்கோளும் உள்ளது. படிப்பிக்கக் கூடியவரும் அமர்ந்திருக்கிறார், பிறகு ஏன் அவ்வளவு குஷி இல்லை? உள்ளுக்குள் மிகவும் குஷி ஏற்பட வேண்டும். பாபாவிடமிருந்து நாம் ஒவ்வொரு கல்பமும் ஆஸ்தியை எடுக்கிறோம். இங்கே ஞானக்கடலிடம் வருகிறோம், நீரின் விசயம் அல்ல. இதை தந்தை அருகில் அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்களும் இவர்கள் (தேவதைகள்) போல் ஆவதற்காக படித்துக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு மிகவும் குஷி ஏற்பட வேண்டும் - நாம் இப்போது நம் வீட்டிற்குச் செல்கிறோம். இப்போது யார் எவ்வளவு படிக்கிறீர்களோ அந்த அளவு உயர் பதவி அடைவீர்கள். ஒவ்வொருவரும் தம் முயற்சியைச் செய்ய வேண்டும். மனச் சோர்வு அடைந்து விடாதீர்கள். மிகப் பெரிய லாட்டரியாகும். புரிந்து கொண்டிருந்தாலும் பிறகு ஆச்சரியப்படும்படியாக ஓடிப்போய் படிப்பை விட்டு விடுகின்றனர். மாயை எவ்வளவு பலம் வாய்ந்தது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தனக்குத் தானே இராஜ திலகத்தை வைத்துக் கொள்வதற்காக தகுதி மிக்கவராக வேண்டும். நல்ல குழந்தைகளாகி, நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். நடத்தையை மிகவும் ராயலாக வைத்துக் கொள்ள வேண்டும். தந்தைக்கு முழுமையான உதவியாளர் ஆக வேண்டும்.

2. நாம் மாணவர்கள், பகவான் நமக்கு கற்பிக்கிறார் என்ற குஷியில் படிப்பை படிக்க வேண்டும். ஒரு போதும் முயற்சியில் மனச் சோர்வடையக் கூடாது.

வரதானம்:
தனது அதிகாரத்தின் சக்தி மூலம் திரிமூர்த்தி என்ற படைப்பை உதவியாளராக மாற்றக்கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.

மூன்று விதமான சக்திகள் (மனம், புத்தி, சம்ஸ்காரம்) இது படைப்பவராகிய உங்களின் படைப் பாகும். இவற்றை தனது அதிகாரத்தின் சக்தி மூலம் உதவியாளராக மாற்றிக் கொள்ளுங்கள். எப்படி இராஜா தான் எந்த செயலும் செய்வதில்லை. ஆனால் செய்ய வைக்கிறார். செய்யக்கூடிய இராஜ்யத்தின் பணியாளர்கள் தனியாக இருப்பார்கள். அது போல ஆத்மாவும் செய்யவைக்கக் கூடியவராகும். செயல்படுவது இந்த விசேஷ மூன்று சக்திகளாகும். எனவே மாஸ்டர் படைப்பவர் என்ற வரதானத்தை நினைவில் வைத்து திருமூர்த்தி சக்திகளையும் சாக்கார கர்மேந்திரியங் களையும் சரியான பாதையில் நடத்துங்கள்.

சுலோகன்:
அவ்யக்த் பாலணையின் வரதானத்தின் அதிகாரத்தை பெறுவதற்காக தெளிவானவர் ஆகுங்கள்.

அவ்யக்த இஷாரா: ஆன்மீக இராயல்டி மற்றும் தூய்மையின் பர்ஸ்னாலிட்டியை தாரணை செய்யுங்கள்.

தூய்மை என்றால் பிரம்மச்சரியம் மட்டும் கிடையாது, இது அஸ்திவாரமாக இருக்கிறது, ஆனால் இதன் கூடவே மேலும் நான்கும் இணைந்து இருக்கிறது. கோபம் மற்றும் இதனுடைய துணைவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அந்த மகா பூதங்களை தியாகம் செய்து, அதன் கூடவே அதனுடைய யாரெல்லாம குழந்தை குட்டிகள் சிறியளவில், பெரியளவில் இருக்கிறார் களோ, அவற்றையும் தியாகம் செய்யும் பொழுது தான் தூய்மையின் ஆன்மீக பர்ஸ்னாலிட்டியின் தாரணையாகும்.