05-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
"இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போதைய
ஈஸ்வரிய குழந்தையும் வருங்காலத்தில் ராஜகுமாரனாக ஆகக்
கூடியவர்கள்! நீங்கள் எந்த ஒரு பொருள் மீதும் ஆசை வைக்கக்
கூடாது. யாரிடமும் எதையும் யாசிக்கவும் கூடாது.
கேள்வி:
உடல் நலத்தைச் சரியாக
வைத்திருப்பதற்கு எந்த ஓர் ஆதாரம் வேண்டியதில்லை?
பதில்:
அநேகக் குழந்தைகள்
நினைக்கிறார்கள், வைபவங்களின் (உபகரணங்கள், பொருட்கள்)
ஆதாரத்தில் உடல் நலம் சரியாக இருக்கும் என்று. ஆனால் பாபா
சொல்கிறார், குழந்தைகளே, இங்கே நீங்கள் பொருட்கள் மீது ஆசை
வைக்கக் கூடாது. வைபவங்களால் உடல் நலம் சரியாகாது. உடல்
நலத்தைச் சரியாக வைத்திருப் பதற்காக நினைவு யாத்திரை வேண்டும்.
குஷி போன்ற டானிக் வேறு இல்லை எனச் சொல்லப்படுகின்றது. நீங்கள்
குஷியாக இருங்கள், நஷாவில் (போதையில்) இருங்கள். யக்ஞ
சேவைக்காக ததீச்சி முனிவரைப் போல் எலும்பு தேய சேவை செய்தால்
உடல் நலம் சரியாகி விடும்.
ஓம் சாந்தி.
பாபா செய்பவர்-செய்விப்பவர் எனப்படுகிறார். நீங்கள் ராஜ
குமாரர்கள். உங்களுக்கு இந்த சிருஷ்டியில் உயர்ந்ததிலும்
உயர்ந்த இடம் உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு நஷா இருக்க
வேண்டும் -- நாம் இறைவனின் குழந்தைகள். அந்த இறைவனின்
வழிமுறைப்படி இப்போது மீண்டும் நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதுவும் கூட யாருடைய
புத்தியிலும் நினைவிருப்பதில்லை. பாபா அனைத்து சென்டர்களின்
குழந்தை களுக்காகவும் சொல்கிறார். அநேக சென்டர்கள், அநேகக்
குழந்தைகள் வருகின்றனர். ஒவ்வொரு வருடைய புத்தியிலும் சதா
நினைவிருக்க வேண்டும், நாம் பாபாவின் ஸ்ரீமத் படி மீண்டும்
உலகத்தில் சாந்தி-சுகத்தினுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறோம். சுகம், சாந்தி இந்த இரண்டு சொற்களைத் தான்
நினைவு செய்ய வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு ஞானம்
கிடைக்கின்றது! உங்களுடைய புத்தி எவ்வளவு விசாலமாக வேண்டும்!
இதில் குறுகலான புத்தி செல்லாது. தன்னை ஈஸ்வரிய குழந்தை என
உணருங்கள். அப்போது பாவங்கள் முடிந்து போகும். அநேகருக்கு
பாபாவின் நினைவு நாள் முழுவதும் இருப்ப தில்லை. பாபா கேட்கிறார்,
உங்கள் புத்தி ஏன் மந்தமாகி விடுகின்றது? சென்டர்களுக்கு
இப்படிப்பட்ட குழந்தைகளும் வருகிறார்கள், அவர்களுடைய புத்தியில்,
நாம் ஸ்ரீமத் படி உலகத்தில் நம்முடைய தெய்வீக இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பது இல்லை. உள்ளுக்குள்
அந்த நஷா, (போதை) பெருமை இருக்க வேண்டும். முரளி கேட்கும் போது
மெய் சிலிர்க்க வேண்டும். இங்கோ பாபா பார்க்கின்றார்,
குழந்தைகளுக்கு இன்னும் மெய் சிலிர்ப்பதில்லை. அநேகக்
குழந்தைகளின் புத்தியில் இது நினைவிருப்பதில்லை --- நாம்
ஸ்ரீமத் படி பாபா நினை வினால் விகர்மங்களை வினாசம் செய்து
நம்முடைய இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்.
தினந்தோறும் பாபா சொல்லிப் புரிய வைக்கிறார் -- குழந்தைகளே,
நீங்கள் போர் வீரர்கள், இராவணனை வெற்றி கொள்பவர்கள். பாபா
உங்களைக் கோயிலுக்குத் தகுதி யானவர்களாக ஆக்குகிறார். ஆனால்
அவ்வளவு நஷா அல்லது குஷி குழந்தைகளுக்கு இருப்ப தில்லை. ஏதேனும்
ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால் கோபித்துக் கொள்வார்கள்.
குழந்தை களின் நிலையைப் (அவஸ்தா) பார்த்து பாபாவுக்கு
ஆச்சரியமாக உள்ளது! மாயாவின் சங்கிலி களில் சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய மதிப்பு, உங்களுடைய
நடவடிக்கைகள், உங்களது குஷி அற்புதமானதாக இருக்க வேண்டும். யார்
உற்றார் உறவினரை மறப்பதில்லையோ அவர்கள் ஒருபோதும் பாபாவை நினைவு
செய்ய முடியாது. பிறகு என்ன பதவி அடைவார்கள்? வியப்பாக உள்ளது!
குழந்தைகளாகிய உங்களுக்கோ மிகுந்த நஷா (போதை) இருக்க வேண்டும்.
தன்னை ஈஸ்வரிய குழந்தை எனப் புரிந்து கொண்டிருப்பீர்களானால்
யாசிப்பதற்கான தேவை இருக்காது. பாபாவோ நமக்கு இவ்வளவு அளவற்ற
கஜானாவைத் தருகிறார், அதன் மூலம் 21 பிறவிகள் வரை எதையும்
யாசிக்கத் தேவையில்லை. அந்த அளவு நஷா இருக்க வேண்டும். ஆனால்
முற்றிலும் மந்தமான, குறுகிய புத்தி. குழந்தைகளாகிய உங்கள்
புத்தியோ அடி நீளம் இருக்க வேண்டும். மனிதர்களின் உயரம் அதிக
பட்சம் 6-7 அடி இருக்கும். பாபா குழந்தைகளை எவ்வளவு
உற்சாகத்தில் கொண்டு வருகின்றார்! - நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள்,
உலகின் மனிதர்களோ எதையுமே புரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்கு
நீங்கள் சொல்லிப் புரிய வைக்கிறீர்கள் -- நீங்கள் இதை மட்டும்
புரிந்து கொள்ளுங்கள். அதாவது நாம் தந்தையின் முன்னால்
அமர்ந்துள்ளோம், தந்தையை நினைவு செய்து கொண்டே இருப்போமானால்
விகர்மங்கள் வினாசமாகி விடும். பாபா சொல்லிப் புரிய வைக்கிறார்,
குழந்தைகளே, மாயா உங்களுடைய கடுமையான விரோதி, உங்களுக்கு
இருப்பது போன்ற இத்தகைய விரோதி மற்றவர்களுக்கு கிடையாது.
மனிதர்களோ இதை அறிந்து கொள்ளவே இல்லை, துச்ச புத்தியுடன்
உள்ளனர்.
பாபா தினந்தோறும் குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்லிக் கொண்டே
இருக்கிறார், நீங்கள் இறைவனின் குழந்தைகள், பாபாவை நினைவு
செய்யுங்கள், மற்றவர்களை உங்களைப் போல் ஆக்கிக் கொண்டே இருங்கள்.
நீங்கள் இதையும் அனைவருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியும்
-- பகவானோ உண்மையான சாகேப் (ராஜா) இல்லையா? ஆக, நாம் அவருடைய
குழந்தைகள் சாகேப்ஜாதே (பிரபுவின் குழந்தைகள்) ஆகின்றோம்.
குழந்தை களாகிய நீங்கள் போகும் போதும், வரும் போதும் புத்தியில்
இதையே நினைவு வைக்க வேண்டும். சேவையில் ததீச்சி முனிவரைப் போல்
எலும்புகளைத் தர வேண்டும். இங்கே எலும்புகளைத் தருவது என்றால்
என்ன? இன்னும் அளவற்ற சுக வைபவங்கள் (பொருட்கள்) அல்லவா
வேண்டும் என்கிறார்கள்! உடல் நலம் இந்தப் பொருள்களினால் சரியாகி
விடாது. உடல் நலத்திற்காக வேண்டியது நினைவு யாத்திரையாகும்.
அந்த குஷி இருக்க வேண்டும். அட, நாமோ கல்ப-கல்பமாக மாயாவிடம்
தோல்வியுற்றே வந்தோம். இப்போது மாயாவின் மீது வெற்றி
பெறுகின்றோம். பாபா வந்து வெற்றி பெற வைக் கின்றார். இப்போது
பாரதத்தில் எவ்வளவு துக்கம்! அளவற்ற துக்கத்தைத் தருபவன்
இராவணன். அந்த மனிதர்கள் நினைக்கிறார்கள், விமானம் உள்ளது,
கார்கள், மாளிகைகள் உள்ளன, இதுவே சொர்க்கம் என்று. இந்த உலகமே
அழிந்து விடப் போகின்றது என்பதை அவர்கள் உணரவில்லை.
இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். அணைகள்
முதலியவற்றைக் கட்டு கின்றனர். யுத்தத்திற்கான பொருள்களை
எவ்வளவு எடுத்துக் கொண்டுள்ளனர்! இவை ஒருவர் மற்றவரை அழிக்கக்
கூடியவை. அநாதைகள் இல்லையா? எவ்வளவு சண்டை சச்சரவுகள் செய்
கின்றனர், கேட்கவே வேண்டாம்! எவ்வளவு குப்பைகள் நிறைந்துள்ளன!
இது தான் நரகம் எனப்படுகின்றது. சொர்க்கத்திற்கோ மிகுந்த மகிமை
உள்ளது. பரோடாவின் மகாராணியிடம் கேளுங்கள், மகாராஜா எங்கே
போய்விட்டார் என்று. சொர்க்கவாசியாகி விட்டார் என்று சொல்வார்.
சொர்க்கம் எனச் சொல்லப்படுவது எது - இது யாருக்கும் தெரியாது.
எவ்வளவு பயங்கர இருள்! நீங்களும் பயங்கர இருளில் இருந்தீர்கள்.
இப்போது பாபா சொல்கிறார், உங்களுக்கு ஈஸ்வரிய புத்தி தருகிறேன்.
தன்னை ஈஸ்வரிய குழந்தை - இளவரசன் என உணருங்கள். ராஜா சாகேப்
கற்றுத் தருகிறார், இளவரசன் ஆக்குவதற்காக. பாபா பழமொழி
சொல்கிறார் இல்லையா, செம்மறியாட்டுக்கு என்ன தெரியும்? இப்போது
நீங்கள் புரிந்து கொண்டீர்கள், மனிதர்கள் அனைவருமே
செம்மறியாடு-வெள்ளாடு போலவே உள்ளனர். எதையுமே தெரிந்து கொள்ள
வில்லை. உட்கார்ந்து என்னென்னவெல்லாம் உவமானம் சொல்கிறார்கள்!
உங்களுடைய புத்தியில் முதல்-இடை-கடையினுடைய இரகசியம் உள்ளது.
நல்லபடியாக நினைவு செய்யுங்கள், நாம் உலகத்தில் சுகம்-சாந்தியை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். யார் உதவியாளர் ஆகிறார்களோ,
அவர்கள் தான் உயர்ந்த பதவி அடைவார்கள். அதையும் நீங்கள்
பார்க்கிறீர்கள், யார்-யார் உதவியாளர் ஆகிறார்கள் என்று. தனது
மனதை ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ளுங்கள் - நாம் என்ன செய்து
கொண்டிருக்கிறோம்? நாம் செம்மறியாடு-வெள்ளாடாக இல்லை தானே?
மனிதர்களிடம் அகங்காரம் பாருங்கள், எவ்வளவு இருக்கிறதென்று!
குர்-குர் என்று கோபத்தைக் காட்டத் தலைப்படுகின்றனர்.
உங்களுக்கோ பாபாவின் நினைவு இருக்க வேண்டும். சேவையில்
எலும்புகளைக் கொடுக்க வேண்டும். யாரையும் கோபப்பட வைக்கக்
கூடாது, யார் மீதும் கோபப் படவும் கூடாது. அகங்காரமும் வரக்
கூடாது. நாம் இதைச் செய்கிறோம், நாம் இவ்வளவு திறமைசாலி - இந்த
சிந்தனை வருவதும் கூட தேக அபிமானமாகும். அவர்களுடைய நடத்தையே
அதுபோல் ஆகிவிட்டது, அதனால் வெட்கம் வந்து விடும்.
இல்லையென்றால் உங்களுடையதைப் போன்ற சுகம் வேறு யாருக்கும்
இருக்க முடியாது. இது புத்தியில் நினைவிருந்தால் நீங்கள்
ஜொலித்துக் கொண்டே இருப்பீர்கள். சென்டரில் சிலரோ நல்ல
மகாரதிகளாக உள்ளனர், சிலர் குதிரைப்படை, சிலர் காலாட்படையாகவும்
உள்ளனர். இதில் மிகவும் விசால புத்தி வேண்டும். எப்படியெல்லாம்
பிராமணிகள் உள்ளனர், சிலரோ மிகவும் உதவியாளராக உள்ளனர்,
சேவையில் எவ்வளவு குஷி உள்ளது! உங்களுக்கு நஷா ஏற வேண்டும்.
சேவை இல்லாமல் என்ன பதவி பெறுவீர்கள்? அம்மா-அப்பாவுக்கோ
குழந்தைகள் மீது மதிப்பு இருக்கும். ஆனால் அவர்கள் தங்களுடைய
மதிப்பை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் பாபா என்ன சொல்வார்?
குழந்தைகளாகிய நீங்கள் ஒரு சில சொற்களிலேயே அனைவருக்கும்
பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். சொல்லுங்கள், பாபா
சொல்கிறார் -- மன்மனாபவ. கீதையில் கொஞ்சம் சொற்கள் ஆட்டா (மாவு)
வில் உப்புப் போல் உள்ளன. இந்த அகண்ட உலகம் எவ்வளவு பெரியது!
புத்தியில் வரவேண்டும். எவ்வளவு பெரிய உலகம், எவ்வளவு மனிதர்கள்!
இவற்றில் எதுவும் பிறகு மிச்சமிருக்காது. எந்த ஒரு கண்டத்தின்
பெயர், அடையாளமும் இருக்காது. நாம் சொர்க்கத்தின் எஜமான்
ஆகிறோம் - இரவும் பகலும் இந்தக் குஷி இருக்க வேண்டும். ஞானமோ
மிகவும் சுலபமானது. சொல்லிப் புரிய வைப்பவர்கள் மிகவும்
திறமைசாலிகளாக இருக்க வேண்டும். அநேக விதமான யுக்திகள் உள்ளன.
பாபா சொல்கிறார், நான் உங்களை மிகவும் இராஜதந்திர முள்ளவர்களாக
ஆக்குகின்றேன். அவர்கள் தேசத்தின் தூதரை (டிப்ளமேட்)
என்கிறார்கள். ஆக, குழந்தைகளின் புத்தியில் நினைவு இருக்க
வேண்டும். ஓஹோ! எல்லையற்ற தந்தை நமக்குக் கட்டளையிடுகின்றார்,
நீங்கள் தாரணை செய்து மற்றவர்களுக்கும் பாபாவின் அறிமுகத்தைக்
கொடுக்கிறீர்கள். உங்களைத் தவிர பாக்கி உலகம் முழுவதுமே
நாஸ்திர்கள். உங்களிலும் கூட நம்பர்வார் இருக்கிறீர்கள். சிலரோ
நாஸ்திகராகவும் இருக்கிறார்கள் இல்லையா? பாபாவை நினைவு செய்வதே
இல்லை. அவர்களே சொல்கிறார்கள், பாபா, எங்களுக்கு நினைவு மறந்து
போகிறது என்று. ஆக, நாஸ்திகர் ஆகிறார்கள் இல்லையா? உங்களை
சாகேப்ஜாதாவாக (இளவரசராக) ஆக்குகின்ற அப்படிப் பட்ட தந்தையின்
நினைவு வருவதில்லையா? இதைப் புரிந்து கொள்வற்கும் கூடப் பெரிய
விசால புத்தி வேண்டும். பாபா சொல்கிறார், நான் ஒவ்வொரு 5000
ஆண்டுகளுக்குப் பிறகும் வருகின்றேன். உங்கள் மூலமாகத் தான்
காரியங்களைச் செய்விக்கிறேன். நீங்கள் எவ்வளவு நல்ல
போர்வீரர்களாக இருக்கிறீர்கள்! வந்தே மாதரம் என நீங்கள்
பாடப்படுகிறீர்கள். நீங்கள் தான் பூஜைக்குரியவர்களாக
இருந்தீர்கள். பிறகு பூஜாரியாக ஆகிவிட்டிருக்கிறீர்கள். இப்போது
ஸ்ரீமத் படி மீண்டும் பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்
கிறீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் அமைதியாக சேவை
செய்ய வேண்டும். உங்களுக்கு அமைதியின்மை இருக்கக் கூடாது.
யாருடைய ஒவ்வொரு நாடி-நரம்பிலும் பூதங்கள் நிறைந்துள்ளனவோ
அவர்கள் என்ன பதவி பெறுவார்கள்? பேராசையும் கூடப் பெரிய
பூதமாகும். பாபா அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்,
ஒவ்வொருவருடைய நடத்தையும் எப்படி இருக்கிறது? பாபா எவ்வளவு
நஷாவை ஏற்றுகிறார்! யாராவது சேவை செய்யாமல் வெறுமனே உண்பதும்;
அருந்துவதுமாக இருக்கிறார்கள் என்றால் பிறகு 21 பிறவிகள் சேவை
செய்ய வேண்டியிருக்கும். தாச-தாசிகளாகத்தான் ஆவார்கள் இல்லையா?
கடைசியில் அனைவருக்கும் சாட்சாத்காரம் ஏற்படும். பாபாவின்
மனதிலோ சேவாதாரிகள் தாம் இடம் பிடிப்பார்கள். உங்களுடைய சேவையே
இது தான் -- யாரையாவது அமரலோக வாசியாக ஆக்க வேண்டும். பாபா
தைரியமோ அதிகமாகவே தருகின்றார், தாரணை செய்யுங்கள். தேக
அபிமானிகளுக்கு தாரணை ஆகாது. நீங்கள் அறிவீர்கள், பாபாவை நினைவு
செய்து நாம் வைஷ்யாலயத்திலிருந்து சிவாலயத்திற்குச்
செல்கின்றோம். ஆகவே அதுபோல் ஆகியும் காட்ட வேண்டும்.
பாபா கடிதங்களில் எழுதுகிறார் -- செல்லமான ஆன்மீக ஈஸ்வரிய
குழந்தைகளே, இப்போது ஸ்ரீமத் படி நடந்து, மகாரதியாக
ஆவீர்களானால் அரசகுமாரர்களாக நிச்சயமாக ஆவீர்கள். உங்களது
நோக்கம்-குறிக்கோளே இது தான். ஒரே ஒரு உண்மையான பாபா உங்களுக்கு
அனைத்து விஷயங்களையும் நல்லபடியாகப் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார். சேவை செய்து மற்றவர் களுக்கு நன்மையும்
செய்து கொண்டே இருங்கள். யோகபலம் இல்லையென்றால் பிறகு ஆசைகள்
இருக்கும், இது வேண்டும், அது வேண்டும் என்று. அந்தக் குஷி
இருக்காது. குஷி போன்ற டானிக் வேறு இல்லை என்று
சொல்லப்படுகின்றது. பிரபுவின் குழந்தை களுக்கோ மிகுந்த குஷி
இருக்க வேண்டும். அது இல்லையென்றால் அநேக விதமான விஷயங்கள்
வருகின்றன. அட, பாபா உலகத்தின் இராஜ பதவியைக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார், வேறு என்ன வேண்டும்? ஒவ்வொருவரும் தங்கள்
மனதைக் கேட்டுக் கொள்ள வேண்டும் -- நாம் இவ்வளவு இனிய
பாபாவுக்கு என்ன சேவை செய்கிறோம்? பாபா சொல்கிறார்,
அனைவருக்கும் செய்தி கொடுத்துக் கொண்டே செல்லுங்கள் -- பிரபு
வந்திருக்கிறார். உண்மையிலே நீங்கள் அனைவரும் சகோதரர்கள். நாம்
அனைவரும் சகோதரர்கள் -- சகோதரர் களுக்கு உதவி செய்ய வேண்டும்
என்று சொல்லவும் செய்கிறார்கள். இந்தச் சிந்தனையில் சகோதரர்
என்று சொல்லி விடுகிறார்கள். இங்கோ பாபா சொல்கிறார் -- நீங்கள்
ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதர-சகோதரர்கள். பாபா சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்கிறவர். குழந்தைகள் மூலமாக சொர்க்கத்தைப்
படைக்கிறார். சேவைக்கான யுக்திகளோ அநேகம் சொல்லிப் புரிய
வைக்கிறார். உற்றார் உறவினருக்கும் சொல்லிப் புரிய வைக்க
வேண்டும். பாருங்கள்! வெளிநாட்டிலுள்ள குழந்தைகளும் கூட சேவை
செய்து கொண்டி ருக்கிறார்கள். நாளுக்கு நாள் மக்கள் ஆபத்துகளைப்
(விநாசம்) பார்த்துப் புரிந்து கொள்வார்கள் -- இதற்கு முன்பாக
ஆஸ்தியை அடைந்து கொள்வோம் என்று. குழந்தைகள் தங்களுடைய
உற்றார்-உறவினர்களையும் கூட விழிப்படையச் செய்து
கொண்டிருக்கிறார்கள். பவித்திரமாகவும் இருக்கிறார்கள். மற்றபடி
நிரந்தரமாக சகோதர-சகோதரர் என்ற மனோநிலை இருப்பது என்பது கஷ்டம்.
பாபாவோ குழந்தைகளுக்கு பிரபுவின் குழந்தைகள் என்ற எவ்வளவு
நல்லதோர் அடை மொழியைக் கொடுத்திருக்கிறார்! தன்னைத் தான்
பார்க்க வேண்டும். சேவை செய்யவில்லை என்றால் நாம் என்னவாக ஆவோம்?
யாராவது சேமித்திருக்கிறார்கள் என்றால் அதைச்
சாப்பிட்டு-சாப்பிட்டுக் கணக்கு முடிந்து போனது, மேலும்
அவர்களுடைய கணக்கில் ஏறுகின்றது. சேவை செய்பவர்களுக்கு
ஒருபோதும் இந்த நினைவு வரக்கூடாது--நாம் இவ்வளவு கொடுத்தோம்,
அதன் மூலம் அனைவருக்கும் பாலனை நடைபெறுகின்றது என்று. அதனால்
உதவி செய்கிறவர்களுக்கு உபசாரமும் செய்யப்படுகின்றது. அவர்
உணவளிப்பவர் என்பதைப் புரிய வைக்க வேண்டும். ஆன்மீகக்
குழந்தைகள் உங்களுக்கு உணவளிக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு
சேவை செய் கிறீர்கள், இது பெரிய கணக்காகும். மனதால், சொல்லால்,
செயலால் அவர்களுக்கு சேவையே செய்யவில்லை என்றால் அந்தக் குஷி
எப்படி இருக்கும்? சிவபாபாவை நினைவு செய்து உணவு சமைக்கின்றனர்
என்றால் அதனுடைய சக்தி கிடைக்கும். மனதைக் கேட்டுக் கொள்ள
வேண்டும், நாம் அனைவரையும் திருப்திப் படுத்துகிறோமா? மகாரதிக்
குழந்தைகள் எவ்வளவு சேவை செய் கிறார்கள்! பாபா ரெக்ஸினில்
சித்திரங்களை உருவாக்கச் செய்கின்றார். அது ஒருபோதும் கிழியவோ,
உடையவோ செய்யாது. பாபாவின் குழந்தைகள் அமர்ந்துள்ளனர்,
அவர்களாகவே அனுப்பி விடுவார்கள். பாபா பிறகு பைசா எங்கிருந்து
கொண்டு வருவார்? இந்த சென்டர்கள் அனைத்தும் எப்படி
நடைபெறுகின்றன? குழந்தைகள் தான் நடத்துகின்றனர் இல்லையா?
சிவபாபா சொல்கிறார், என்னிடமோ ஒரு சோழி கூட இல்லை. இன்னும்
போகப்போக தாங்களாகவே வந்து சொல்வார்கள், எங்களுடைய கட்டிடத்தை
நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று. நீங்கள் சொல்வீர்கள்,
இப்போது டூ லேட் ( மிகவும் தாமதமாகிவிட்டது) என்று. பாபா
ஏழைப்பங்காளராக இருக்கிறார். ஏழைகளிடம் எங்கிருந்து வரும்?
சிலரோ கோடீஸ்வரராகவும் பல மடங்கு கோடிகளுக்கு அதிபதிகளாகவும்
உள்ளனர். அவர்களுக்கு இங்கேயே சொர்க்கம் உள்ளது. இது மாயாவின்
பகட்டாகும். அதனுடைய வீழ்ச்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
பாபா சொல்கிறார், நீங்கள் முதலில் பிரபுவின் குழந்தைகளாக
ஆகியிருக்கிறீர்கள். பிறகு போய் அரசகுமாரர்களாக ஆவீர்கள். ஆனால்
அந்த அளவுக்கு சேவையும் செய்து காட்டுங்களேன். மிகுந்த குஷியில்
இருக்க வேண்டும். நாம் பிரபுவின் குழந்தைகள். பிறகு ராஜ
குமாரர்களாக ஆகப்போகிறவர்கள். எப்போது அநேகருக்கு சேவை
செய்கிறீர்களோ அப்போது ராஜ குமாரர்களாக ஆவீர்கள். குஷி எவ்வளவு
அதிகரிக்க வேண்டும்! நல்லது.
இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல்
கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யாரையும் ஒருபோதும் கோபப் படுத்தவும் கூடாது,
தானும் கோபப் படக் கூடாது. தன்னுடைய திறமையின் அல்லது சேவை
செய்வதன் அகங்காரத்தைக் காட்டக் கூடாது. எப்படி பாபா
குழந்தைகளுக்கு மதிப்புத் தருகிறாரோ அதுபோல் தன்னுடைய மதிப்பைத்
தானே வைத்திருக்க (காத்துக் கொள்ள) வேண்டும்.
2. யோகபலத்தின் மூலம் தன்னுடைய அனைத்து ஆசைகளையும் முடித்து
விடவேண்டும். சதா இதே குஷி, நஷாவிலேயே இருக்க வேண்டும், நாம்
இப்போது பிரபுவின் குழந்தைகள், நாம் தான் பிறகு ராஜ
குமாரர்களாக ஆகப் போகிறவர்கள். சதா சாந்தியில் இருந்து சேவை
செய்ய வேண்டும். ஒவ்வொரு நாடி நரம்பிலும் நிறைந்துள்ள பூதங்களை
வெளியேற்றி விடவேண்டும்.
வரதானம்:
பிராமண வாழ்க்கையில் பாபாவிடமிருந்து ஒளிக்கிரீடம் பெறக்கூடிய
மகான் பாக்கியவான் ஆத்மா ஆகுக.
சங்கமயுக பிராமண வாழ்க்கையின் விசேஷத் தன்மை பவித்திரதா ஆகும்.
பவித்திரதாவின் அடையாளம் -- ஒளிக்கிரீடம். அது ஒவ்வொரு பிராமண
ஆத்மாவுக்கும் பாபாவிடமிருந்து கிடைக்கிறது. பவித்திரதாவின்
இந்த ஒளிக்கிரீடம் அந்த ரத்தினங்கள் பதித்த கிரீடத்தை விடவும்
அதி சிரேஷ்டமானதாகும். மகான் ஆத்மா, பரமாத்ம பாக்கியவான் ஆத்மா,
உயர்ந்தவரிலும் உயர்ந்த ஆத்மாவுக்கு இந்தக் கிரீடம்
அடையாளமாகும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் பிறவி எடுத்ததில்
இருந்தே பவித்திர பவ என்ற வரதானம் தருகிறார். அதன் அடையாளம்
ஒளிக்கிரீடம் ஆகும்.
சுலோகன்:
உங்களது எல்லையற்ற வைராக்கிய உள்ளுணர்வு மூலம் இச்சைகளின்
வசமாகிக் கவலையுற்ற ஆத்மாக்களின் கவலையைப் போக்குங்கள்.
|
|
|