இனிமையான குழந்தைகளே! நினைவின் மூலம்
தான் பேட்டரி சார்ஜ் ஆகும். சக்தி கிடைக்கும், ஆத்மா
சதோபிரதானமாகும். அதனால் நினைவு யாத்திரையின் மீது முக்கியமான
கவனம் செலுத்துங்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளின் அன்பு ஒரு
பாபாவிடம் இருக்குமோ, அவர்களின் அடையாளம் என்னவாக இருக்கும்?
பதில்:
1. ஒரு பாபாவிடம் அன்பு
இருக்குமானால் பாபாவின் பார்வை அவர்களை முழுத் திருப்தி யடையச்
செய்து விடும். 2. அவர்கள் முழுப் பற்றற்ற நிலையில்
இருப்பார்கள். 3. யாருக்கு எல்லையற்ற தந்தையின் அன்பு
பிடித்திருக்கிறதோ, அவர்கள் வேறு யாருடைய அன்பிலும் சிக்கிக்
கொள்ள முடியாது.
4. அவர்களின் புத்தி பொய்யான கண்டத்தின் பொய்யான மனிதர்களிடம்
இருந்து விடுபட்டிருக் கும். பாபா உங்களுக்கு அத்தகைய ஓர்
அன்பைத் தருகிறார், அது அழிவற்றதாகி விடுகின்றது.
சத்யுகத்திலும் கூட நீங்கள் உங்களுக்குள் மிகுந்த அன்போடு
இருப்பீர்கள்.
ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தையின் அன்பு இப்போது ஒரு தடவை மட்டுமே
குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கின்றது. அந்த அன்பை
பக்தியிலும் கூட மிகவும் நினைவு செய்கின்றனர். பாபா, உங்களுடைய
அன்பு கிடைத்தால் போதும். நீங்கள் தான் தாயும் தந்தையும்........
அனைத்தும் நீங்களே! ஒருவரிடமிருந்து தான் அரைக்கல்பத்திற்கு
அன்பு கிடைக்கின்றது. உங்களுடைய இந்த ஆன்மீக அன்பின் மகிமை
அளவற்றது. பாபா தான் குழந்தைகளாகிய உங்களை சாந்திதாமத்தின்
எஜமானர் ஆக்குகிறார். இப்போது நீங்கள் துக்கதாமத்தில் இருக்
கிறீர்கள். அசாந்தியிலும் துக்கத்திலும் அனைவரும்
கூக்குரலிடுகின்றனர். ஆதரவளிப்பவர் யாருக்கும் இல்லை. அதனால்
பக்தி மார்க்கத்தில் நினைவு செய்கின்றனர். ஆனால் விதி முறைப்படி
பக்திக்கும் அரைக்கல்ப சமயம் உள்ளது.
இதுவோ குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது - பாபா
உள்ளுக்குள் இருப்பதை யெல்லாம் அறிந்து கொள்பவர் என்பது
கிடையாது. பாபா அனைவரின் மனதின் விஷயங்களை அறிந்து கொள்ள
வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. அதற்காக மனதில் எழும் எண்ணங்
களை அறிபவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்தக் கலையைக்
கற்றுக் கொள்கின்றனர். இங்கே அந்த விஷயமே கிடையாது. தந்தை
வருகிறார். தந்தை மற்றும் குழந்தைகள் தான் இந்த பாகம்
முழுவதையும் நடிக்கின்றனர். பாபாவுக்குத் தெரியும், சிருஷ்டிச்
சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று. அதில் குழந்தைகள் எப்படி
பாகத்தை நடிக்கின்றனர்? அவர் ஒவ்வொருவருக் குள்ளும் என்ன
உள்ளதென அறிந்து கொள்கிறார் என்பதெல்லாம் கிடையாது. இது
இரவிலும் புரிய வைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒவ்வொருவருக்குள்ளும்
விகாரங்கள் தான் உள்ளன. மிக மோசமான மனிதர்கள். பாபா வந்து
மணமுள்ள மலர்களாக ஆக்குகிறார். இந்த பாபாவின் அன்பு
குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. பிறகு
அது அழிவற்ற தாகின்றது. அங்கே நீங்கள் ஒருவர் மற்றவர் மீது
மிகுந்த அன்பு செலுத்துகிறீர்கள். இப்போது நீங்கள் மோகத்தை
வென்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சத்யுக இராஜ்யம்
மோகஜீத் (பற்றுகளை விடுத்த) ராஜா, ராணி மற்றும் பிரஜைகளின்
இராஜ்யம் எனச் சொல்லப்படுகின்றது. அங்கே ஒருபோதும் யாரும் அழ
மாட்டார்கள். துக்கத்தின் பெயரே இருக்காது. குழந்தைகள் நீங்கள்
அறிவீர்கள், நிச்சயமாக பாரதத்தில் ஆரோக்கியம், செல்வம் மற்றும்
மகிழ்ச்சி இருந்தது. இப்போது இல்லை. ஏனென்றால் இப்போது இராவண
இராஜ்யம். இதில் அனைவரும் துக்கத்தை அனுபவிக்கின்றனர். பிறகு
பாபாவை நினைவு செய்கின்றனர் - வந்து சுகம், சாந்தி கொடுங்கள்,
இரக்கம் வையுங்கள். எல்லையற்ற தந்தை இரக்க மனம் உள்ளவர்.
இராவணன் இரக்க மற்றவன், துக்கத்திற்கான வழி சொல்பவன். மனிதர்கள்
அனைவரும் துக்கத்தின் வழியில் செல்கின்றனர். அனைத்திலும்
பெரியதிலும் பெரிய துக்கம் தருவது காம விகாரம். அதனால் பாபா
சொல்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, காம விகாரத்தை
வெற்றி கொள்ளுங்கள். அப்போது உலகத்தை வென்றவராக ஆவீர்கள். இந்த
லட்சுமி-நாராயணரை உலகை வென்றவர்கள் எனச் சொல்வார்கள் இல்லையா?
உங்களுக்கென்று நோக்கம் குறிக் கோள் உள்ளது. கோவில்களுக்குச்
செல்கின்றனர், ஆனால் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி எதுவும்
தெரியாது. எப்படி பொம்மைகளின் பூஜை நடைபெறுகின்றதோ, அதுபோல.
தேவிகளுக்கும் பூஜை செய்கின்றனர். படைத்து நன்கு அலங்கரித்து
போக் முதலியன வைக் கின்றனர். ஆனால் அந்த தேவிகளோ எதையும்
சாப்பிடுவதில்லை. பிராமணர்கள் சாப்பிட்டு விடுகின்றனர். படைத்து,
பிறகு பராமரிப்பு செய்து, விநாசம் செய்து விடுகின்றனர். இது
குருட்டு நம்பிக்கை எனப்படும். சத்யுகத்தில் இவ்விˆயங்கள்
இருப்பதில்லை. இந்த வழக்கங்கள் எல்லாம் கலியுகத்தில் தான்
வெளிப்படுகின்றன. நீங்கள் முதல்-முதலில் ஒரு சிவபாபாவுக்குப்
பூஜை செய்கிறீர்கள். அது அவ்விபச்சாரி (ஒருவரை மட்டும் வழிபடும்),
சரியான பூஜை எனச் சொல்லப்படும். பிறகு நடைபெறுகிறது, விபச்சாரி
(பலரை வழிபடும்) பூஜை. பாபா என்ற சொல்லைச் சொல்லும் போதே
பரிவாரத்தின் நறுமணம் வருகின்றது. நீங்களும் சொல்கிறீர்கள்
இல்லையா, நீங்கள் தான் தாயும் தந்தையும்....... உங்களுடைய இந்த
ஞானம் தரும் கிருபை மூலம் எங்களுக்கு அளவற்ற சுகம்
கிடைக்கின்றது. புத்தியில் நினைவு உள்ளது, நாம் முதல்-முதலில்
மூலவதனத்தில் இருந்தோம். அங்கிருந்து இங்கே நம் பாத்திரத்தை
ஏற்று நடிப்பதற் காக வருகிறோம். முதல்-முதலில் நாம் தெய்வீக
ஆடையை (சரீரம்) எடுத்துக் கொள்கிறோம். அதாவது தேவதா எனச்
சொல்லிக் கொள்கிறோம். பிறகு சத்திரிய, வைசிய, சூத்திர
வர்ணத்தில் வந்து வெவ்வேறு பாத்திரங்களை நடிக்கின்றனர்.
இவ்விˆயங்களை நீங்கள் முதலில் அறிந்திருக்கவில்லை. இப்போது பாபா
வந்து முதல்-இடை-கடையின் ஞானத்தைக் குழந்தை களாகிய உங்களுக்குத்
தந்துள்ளார். தம்மைப் பற்றிய ஞானத்தையும் தந்துள்ளார் - நான்
இந்த உடலில் பிரவேசமாகிறேன். இவர் தம்முடைய 84 பிறவிகளைப் பற்றி
அறிந்திருக்கவில்லை. நீங்களும் கூட அறிந்திருக்கவில்லை.
ஷ்யாம்-சுந்தர் பற்றிய ரகசியமோ புரிய வைக்கப் பட்டுள்ளது. இந்த
ஸ்ரீகிருஷ்ணர் புது உலகத்தின் முதல் இளவரசர் மற்றும் ராதை
இரண்டாம் நம்பரில் உள்ளார். சில வருடங்களின் வித்தியாசம்.
சிருஷ்டியின் ஆரம்பத்தில் இவர் முதல் நம்பரில் சொல்லப்படுகிறார்.
அதனால் தான் கிருஷ்ணர் மீது அனைவரும் அன்பு செலுத்து கின்றனர்.
இவர் தான் ஷ்யாம் என்றும் சுந்தர் என்றும் சொல்லப்படுகிறார்.
சொர்க்கத்திலோ அனைவரும் சுந்தராகவே இருந்தனர். இப்போது
சொர்க்கம் எங்கே உள்ளது? சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது.
சமுத்திரத்தின் கீழே சென்று விட்டது என்பதெல்லாம் கிடையாது.
எப்படி இலங்கை, துவாரகை கீழே சென்று விட்டதாகச் சொல்கின்றனர்.
அப்படியில்லை. இந்தச் சக்கரம் சுற்றுகின்றது. இந்தச் சக்கரத்தை
அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி
மகாராஜா-மகாராணியாக, உலகத்தின் எஜமானர்களாக ஆகிறீர்கள்.
பிரஜையும் கூட தன்னை எஜமானன் எனப் புரிந்து கொண்டுள்ளார்
இல்லையா? நம்முடைய இராஜ்யம் எனச் சொல்வார்கள். பாரதவாசிகள் நமது
இராஜ்யம் எனச் சொல்வார்கள். பாரதம் என்ற பெயர் உள்ளது.
ஹிந்துஸ்தான் என்ற பெயர் தவறாகும். வாஸ்தவத்தில் ஆதி சநாதன
தேவி-தேவதா தர்மம் தான். ஆனால் தர்ம பிரஷ்டம், கர்ம பிரஷ்டம் (தரக்
குறைவு) ஆனதால் தங்களை தேவதா எனச் சொல்லிக் கொள்ள முடியாது.
இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டதாகும். இல்லையென்றால் பாபா
எப்படி வந்து மீண்டும் தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வது?
முன்பு உங்களுக்கும் கூட இந்த அனைத்து விˆயங்கள் பற்றியும்
தெரியாமல் தான் இருந்தது. இப்போது பாபா புரிய வைத்துள்ளார்.
அத்தகைய இனிமையான பாபா, அவரையும் நீங்கள் மறந்து
விடுகிறீர்கள். அனைவரைக் காட்டிலும் இனிமையான பாபா இல்லையா?
மற்றப்படி இராவண இராஜ்யத்தில் உங்களுக்கு அனைவரும் துக்கமே
தருகின்றனர் இல்லையா? அதனால் எல்லையற்ற தந்தையை அனைவருமே நினைவு
செய்கின்றனர். அவருடைய நினைவில் அன்பின் கண்ணீர் விடு கின்றனர்
- ஹே மணவாளனே! எப்போது வந்து மணமகள்கள் அனைவரையும்
சந்திப்பீர்கள்? ஏனென்றால் நீங்கள் அனைவருமே பக்தைகள்.
பக்தைகளின் பதி பகவான் ஆவார். பகவான் வந்து பக்தியின் பலன்
தருகிறார். வழி சொல்கிறார், மேலும் புரிய வைக்கிறார் - இது
5000 வருடங்களின் விளையாட்டு. படைப்பவர் மற்றும் படைப்பினுடைய
முதல்-இடை-கடை பற்றி எந்த ஒரு மனிதருக்கும் தெரியாது. ஆன்மீகத்
தந்தை மற்றும் ஆன்மீகக் குழந்தைகள் தான் அறிவார்கள். எந்த ஒரு
மனிதரும் அறிந்திருக்கவில்லை. தேவதைகளுக்கும் தெரியாது. இந்த
ஆன்மீகத் தந்தை தான் அறிந்திருக்கிறார். அவர் தம்முடைய
குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார். வேறு எந்த ஒரு
தேகதாரியிடமும் இந்த படைப்பவர் மற்றும் படைப்பினுடைய
முதல்-இடை-கடை பற்றிய ஞானம் இருக்க முடியாது. இந்த ஞானம்
இருப்பது ஆன்மீகத் தந்தையிடம். அவர் தான் ஞான-ஞானேஸ்வர் எனச்
சொல்லப் படுகிறார். ஞான-ஞானேஸ்வர் உங்களுக்கு ஞானம் தருகிறார்,
ராஜ- ராஜேஸ்வர் ஆக்குவதற்காக. அதனால் இது ராஜயோகம் எனச்
சொல்லப்படுகின்றது. மற்றப்படி அதெல்லாம் ஹடயோகமாகும்.
ஹடயோகிகளின் சித்திரங்களும் கூட அதிகம் உள்ளன. சந்நியாசிகள்
எப்போது வருகின்றனரோ, அவர்கள் வந்து பின்னால் ஹடயோகம் கற்றுக்
கொடுக்கின்றனர். அதிக விருத்தியானதும் ஹடயோகம் கற்பிக் கின்றனர்.
பாபா புரிய வைத்துள்ளார், நான் வருவதே சங்கமயுகத்தில் தான்.
வந்து ராஜதானியை ஸ்தாபனை செய்கிறேன். ஸ்தாபனை இங்கேயே
செய்கிறேன். சத்யுகத்தில் அல்ல. சத்யுக ஆரம்பத்திலோ இராஜ்யம்
இருக்கும் என்றால் நிச்சயமாக சங்கமயுகத்தில் ஸ்தாபனை ஆகின்றது.
இங்கே கலியுகத்தில் அனைவரும் பூஜாரிகள். சத்யுகத்தில்
இருப்பவர்கள் அனை வரும் பூஜைக்குரியவர்கள். ஆக, பாபா
பூஜைக்குரியவர்களாக ஆக்குவதற்காக வருகிறார்.. பூஜாரி ஆக்குபவன்
இராவணன். இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா? இது
உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பு. இந்த ஆசிரியரைப் பற்றி யாரும்
அறிந்து கொள்ளவில்லை. அவர் சுப்ரீம் தந்தையாகவும் உள்ளார்,
ஆசிரியராகவும் உள்ளார், சத்குரு வாகவும் உள்ளார். இதை யாரும்
அறிந்திருக்கவில்லை. பாபா தான் வந்து தம்மைப் பற்றிய முழு
அறிமுகத்தையும் தருகிறார். குழந்தைகளுக்குத் தாமே கற்பித்துப்
பிறகு உடன் அழைத்துச் செல்கிறார். எல்லையற்ற தந்தையின் அன்பு
கிடைக்கின்றது என்றால் பிறகு வேறு எந்த அன்பும் பிடிக்காது.
இச்சமயம் இருப்பது பொய்யான கண்டம். பொய்யான மாயா, பொய்யான உடல்.........
பாரதம் இப்போது பொய்யான கண்டம். பிறகு சத்யுகத்தில் உண்மை யான
கண்டமாக இருக்கும். பாரதம் ஒருபோதும் விநாசமடையாது. இது
அனைத்திலும் பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தலமாகும். இங்கே
எல்லையற்ற தந்தை அமர்ந்து குழந்தை களுக்கு சிருஷ்டியின்
முதல்-இடை-கடையின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். மேலும்
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். இது மிகப்பெரிய தீர்த்த
ஸ்தலமாகும். பாரதத்தின் மகிமை அளவற்றது. ஆனால் இதையும் நீங்கள்
புரிய வைக்க முடியும் - பாரதம் என்பது உலகத்தின் அதிசயம். அவை
மாயாவின் 7 அதிசயங்கள். ஈஸ்வரனின் அதிசயம் ஒன்று தான். பாபா
ஒருவர், அவருடைய அற்புதமான சொர்க்கமும் ஒன்று. அதைத் தான் ஹெவன்,
பாரடைஸ் எனச் சொல்கின்றனர். உண்மையிலும் உண்மையான பெயர்
சொர்க்கம் என்ற ஒன்று தான். இது நரகமாகும். சக்கரம் முழுவதையும்
பிராமணர்களாகிய நீங்கள் தான் சுற்றி வருகிறீர்கள். நாம் தான்
பிராமணராக இருக்கிறோம், பிறகு நாம் தான் தேவதைகளாக..........
உயரும் கலை, இறங்கும் கலை. உங்களுக்கு உயரும் கலை என்றால்
அனைவருக்கும் இதனால் நன்மை ஏற்படுகின்றது. உலகத்தில் சாந்தியும்
வேண்டும், சுகமும் வேண்டும். துக்கத்தின் பெயர் இருக்கக் கூடாது
என்று. பாரதவாசிகள் தான் விரும்புகின்றனர், அது ஈஸ்வரிய
இராஜ்யம் எனச் சொல்லப்படுகின்றது. சத்யுகத்தில் சூரியவம்சி.
பிறகு இரண்டாவது கிரேடில் சந்திரவம்சி. நீங்கள் ஆஸ்திகர்கள்,
அவர்கள் நாஸ்திகர்கள். நீங்கள் செல்வந்தருடையவர்களாக ஆகி பாபா
விடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் செய்கிறீர்கள்.
உங்களுக்கு மாயாவுடன் கூட குப்தமான யுத்தம் நடைபெறுகின்றது.
பாபா வருவது ராத்திரியில். சிவராத்திரி இருக்கிறது இல்லையா?
ஆனால் சிவனுடைய ராத்திரி என்பதன் அர்த்தத்தைக் கூட அவர்கள்
புரிந்து கொள்ளவில்லை. பிரம்மாவின் இரவு முடிவடைகின்றது. பகல்
ஆரம்பமாகின்றது. அவர்கள் சொல்கின்றனர், ஸ்ரீ கிருஷ்ண பகவான்
வாக்கு என்பதாக. இதுவோ சிவபகவான் வாக்கு. இப்போது யார் சரி?
ஸ்ரீ கிருஷ்ணரோ முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார். பாபா
சொல்கிறார், நான் வருகிறேன், சாதாரண வயோதிகரின் உடலில். இவரும்
கூட தம்முடைய பிறவிகள் பற்றி அறிந்திருக்கவில்லை. அநேகப்
பிறவிகளின் கடைசியில் தூய்மை இழந்துவிட்ட போது தூய்மையற்ற
சிருஷ்டியில், தூய்மையற்ற இராஜ்யத்தில் வருகிறேன். தூய்மை
இல்லாத உலகத்தில் அநேக இராஜ்யங்கள். தூய்மையான உலகத்தில்
இருப்பது ஒரு இராஜ்யம். கணக்கு உள்ளது இல்லையா? பக்தி
மார்க்கத்தில் தீவிர பக்தி செய்யும் போது தலையை வெட்டத்
தலைப்படும்போது அவர்களின் மனதின் ஆசை நிறைவேறுகின்றது.
மற்றப்படி அதில் எதுவும் கிடையாது. அது தீவிர (நௌதா) பக்தி
என்று சொல்லப்படும். எப்போதிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பமானதோ,
அப்போதிருந்து பக்தியின் கர்மகாண்டங்களின் விˆயங்களை மனிதர் கள்
படித்துப் படித்தே கீழிறங்கி வந்து விடுகின்றனர். வியாச பகவான்
சாஸ்திரத்தை உருவாக்கினார் எனச் சொல்கின்றனர். அவர்
என்னென்னவெல்லாம் அமர்ந்து எழுதியுள்ளார்! பக்தி மற்றும் ஞானம்
பற்றிய ரகசியத்தை இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து
கொண்டிருக் கிறீர்கள். ஏணிப்படி மற்றும் கல்ப விருட்சத்தின்
சித்திரத்தில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. அதில் 84
பிறவிகளும் காட்டப் பட்டுள்ளன. அனைவருமோ 84 பிறவிகள் எடுப்ப
தில்லை. யார் ஆரம்பத்தில் வந்திருப்பார்களோ, அவர்கள் தான்
முழுமையாக 84 பிறவிகளை எடுப்பார்கள். இந்த ஞானம் உங்களுக்கு
இப்போது தான் கிடைக்கின்றது. பிறகு வருமானத்துக்கு ஆதாரம் ஆகி
விடுகின்றது. 21 பிறவிகளுக்குக் கிடைக்காத பொருள் என்று எதுவுமே
இருக்காது. அதனால் அதன் பிராப்திக்காக முயற்சி எதுவும் செய்ய
வேண்டியிருக்காது. அது பாபாவின் ஒரே ஒரு சொர்க்கம், உலகத்தின்
அதிசயம் எனச் சொல்லப்படும். பெயரே சொர்க்கம் (பேரடைஸ்!) அதற்கு
அதிபதியாக பாபா உங்களை ஆக்குகின்றார். அவர்களோ, சும்மா அதிசயங்
களைக் காட்டுகின்றனர். ஆனால் உங்களையோ பாபா அதனுடைய அதிபதியாக
ஆக்குகிறார். அதனால் இப்போது பாபா சொல்கிறார், நிரந்தரமாக என்னை
நினைவு செய்யுங்கள். நினைத்து-நினைத்து சுகம் பெறுங்கள், உடலின்
கலக-கிலேசங்கள் (பிரச்சனை) முடிந்து போகும், ஜீவன் முக்தி பதவி
அடையுங்கள். தூய்மையாவதற்காக நினைவு யாத்திரையும் மிகவும்
அவசிய மாகும். மன்மனாபவ நிலையில் இருந்தால் அந்த்மதி ஸோ கதி (கடைசியில்
எந்த நிலையில் சரீரத்தை விடுகிறோமோ அதுவே மறுபிறவியின்
தொடக்கமாகும்.) ஆகி விடும். கதி எனச் சொல்லப்படுவது சாந்திதாம்.
சத்கதி ஏற்படுவது இங்கே. சத்கதிக்கு நேர் எதிரானது
துர்கதியாகும்.
இப்போது நீங்கள் தந்தையையும் படைப்பினுடைய
முதல்-இடை-கடையையும் அறிந்து கொண்டு விட்டீர்கள். உங்களுக்கு
பாபாவின் அன்பு கிடைக்கின்றது. பாபா பார்வையிலேயே முழு திருப்தி
அடைந்தவர்களாகச் செய்து விடுகிறார். எல்லோருடைய முன்பாக வந்து
தான் ஞானத்தைச் சொல்வார் இல்லையா? இதில் பிரேரணையின் விஷயமோ
எதுவும் கிடையாது. பாபா கட்டளை தருகிறார், இதுபோல் நினைவு
செய்வதன் மூலம் சக்தி கிடைக்கும். எப்படி பேட்டரி சார்ஜ் ஆகிறது
இல்லையா? இப்போது சர்வசக்திவான் பாபாவிடம் புத்தியோகத்தை
ஈடுபடுத்துவதன் மூலம் பிறகு நீங்கள் தமோபிரதானத்தில் இருந்து
சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். பேட்டரி சார்ஜ் ஆகி விடும். பாபா
தான் வந்து அனைவரின் பேட்டரியையும் சார்ஜ் செய்கிறார். சர்வ
சக்திவான் பாபா மட்டுமே. இந்த இனிமையிலும் இனிமையான விஷயங் களை
பாபா தான் அமர்ந்து புரிய வைக்கிறார். அந்த பக்தியின்
சாஸ்திரங்களையோ ஜென்ம- ஜெனமாந்தரமாகப் படித்தே
வந்திருக்கிறீர்கள். இப்போது பாபா அனைத்து தர்மங்களைச்
சேர்ந்தவர் களுக்காகவும் ஒரே ஒரு விஷயம் சொல்கிறார். அவர்
சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு
செய்வீர்களானால் உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும். இப்போது
நினைவு செய்ய வேண்டியது குழந்தைகளாகிய உங்கள் வேலை. இதில்
குழப்பமடைவதற்கான விஷயமோ கிடையாது. பதீதபாவனர் ஒரு தந்தை
மட்டுமே! பிறகு தூய்மை அடைந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று
விடுவார்கள். அனைவருக்காகவும் இந்த ஞானம் உள்ளது. இது சகஜ
ராஜயோகம் மற்றும் சகஜ ஞானம். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!