06-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! பழைய உலகத்தின்
முட்களை புது உலகத்தின் மலராக ஆக்குவது - இது திறமைசாலி
தோட்டக்காரர்களாகிய உங்களுடைய வேலை ஆகும்.
கேள்வி:
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய
நீங்கள் எந்த ஒரு (சிரேஷ்டமான) மிக சிறந்த அதிர்ஷ்டத்தை
ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள்?
பதில்:
முள்ளிலிருந்து நறுமணமுள்ள மலராக
ஆவது - இது எல்லாவற்றையும் விட மிக உயர்வான அதிர்ஷ்டம் ஆகும்.
ஒரு வேளை எதாவது ஒரு விகாரம் உள்ளது என்றாலும் அது முள் ஆகும்.
முள்ளிலிருந்து மலர் ஆனீர்கள் என்றால், அப்பொழுது தான்
சதோபிரதானமான தேவி தேவதை ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள்
இப்பொழுது 21 தலைமுறைகளுக்கு தங்களுடைய சூரிய வம்ச அதிர்ஷ்டத்தை
அமைக்க வந்துள்ளீர்கள்.
பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்....
ஓம் சாந்தி.
பாடலை குழந்தைகள் கேட்டீர்கள். இதுவோ சாதாரண பாடல் ஆகும்.
ஏனெனில் நீங்கள் தோட்டக்காரர்கள்! தந்தை தோட்டத்தின் எஜமானர்
ஆவார். இப்பொழுது தோட்டக்காரர்கள் முட்களிலிருந்து மலர்களாக்கி
(அலங்கரிக்க) வேண்டும். இந்த வார்த்தை மிகவும் தெளிவாக உள்ளது.
பக்தர்கள் பகவானிடம் வந்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும்
பக்தர்கள் ஆவார்கள் அல்லவா? இப்பொழுது ஞானத்தின் படிப்பை
படிக்க தந்தையிடம் வந்துள்ளீர்கள். இந்த இராஜயோகத்தின்
படிப்பினால் தான் புது உலகத்தின் அதிபதி ஆகிறீர்கள். எனவே
பக்தைகள் கூறுகிறார்கள் - நாங்கள் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி
வந்துள்ளோம். புது உலகத்தை இதயத்தில் அலங்கரித்து வந்துள்ளோம்.
பாபா கூட தினமும் (ஸ்வீட் ஹோம்) இனிமையான இல்லத்தையும் (ஸ்வீட்)
இனிமையான இராஜ்யத்தையும் நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார்.
ஆத்மா நினைவு செய்ய வேண்டும். ஒவ்வொரு சென்டரிலும்
முட்களிலிருந்து மலராக ஆகிக் கொண்டு இருக் கிறார்கள். மலர்களில்
கூட வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா? சிவன் மீது மலர்களை
அர்ப்பிக்கிறார்கள். ஒருவர் ஏதோ ஒரு விதமான மலரை
அர்ப்பிக்கிறார். மற்றொருவர் இன்னொரு விதமான மலரை
அர்ப்பிக்கிறார். ரோஜா மலர் மற்றும் எருக்கம் பூவிற்கிடையே இரவு
பகலுக்கான வித்தியாசம் உள்ளது. இதுவும் தோட்டம் ஆகும். ஒரு
சிலர் மல்லிகைப்பூ. ஒரு சிலர் செண்பகப்பூ. ஒரு சிலர் ரத்தின
ஜோதி. ஒரு சிலர் எருக்கம் பூவாக உள்ளார்கள். இச்சமயத்தில்
எல்லோரும் முட்களாக இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள்
அறிவார்கள். இந்த உலகமே முட்களின் காடு ஆகும். இதை புதிய
உலகத்தின் மலராக உருவாக்க வேண்டும். இந்த பழைய உலகத்தில்
இருப்பவர்கள் முட்கள். எனவே பாடலில் கூட நாங்கள் பழைய உலகத்தின்
முள்ளிலிருந்து புது உலகத்தின் மலராக ஆவதற்காக தந்தையிடம்
வந்துள்ளோம் என்று கூறுகிறார்கள். அந்த தந்தை புது உலகத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். முள்ளிலிருந்து மலராக அதாவது
தேவி தேவதை ஆக வேண்டும். பாடலின் பொருள் எவ்வளவு எளிதானது. நாம்
புது உலகத்திற்கான அதிர்ஷ்டத்தை எழுப்புவதற்காக வந்துள்ளோம்.
புது உலகம் சத்யுகம் ஆகும். ஒருவருடையது சதோபிரதானமான
அதிர்ஷ்டம் ஆகும். அடுத்தவருடையது ரஜோ, தமோ ஆக உள்ளது.
இன்னொருவர் சூரிய வம்சத்தின் ராஜா ஆகிறார். வேறொருவர் பிரஜை
ஆகிறார். இன்னும் சிலரோ பிரஜைக்குக் கூட வேலைக்காரர், ஊழியர்
ஆகிறார். இது புது உலகத்தின் இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. பள்ளிக் கூடத்தில் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்
கொள்வதற்காக செல் கிறார்கள் அல்லவா? இங்கு இருப்பதோ புது
உலகத்தின் விஷயம் ஆகும். இந்த பழைய உலகத்தில் என்ன அதிர்ஷ்டத்தை
அமைப்பீர்கள்? நீங்கள் வருங்கால புது உலகத்தில் தேவதை ஆவதற்கான
அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த தேவதைகளை
எல்லோரும் வணங்கிய படியே வந்துள்ளார்கள். நாமேதான் அதே
தேவதைகளாக, பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தோம். பிறகு நாமே தான்
பூசாரி ஆகியுள்ளோம். 21 பிறவிகளுக்கு ஆஸ்தி தந்தையிடமிருந்து
கிடைக்கிறது. அதற்கு 21 தலைமுறை என்று கூறப்படுகிறது. தலைமுறை
என்பது முதுமை பருவ நிலைவரைக்குமானதை கூறப்படுவதாகும். தந்தை
21 தலைமுறைக்கான ஆஸ்தி அளிக்கிறார். ஏனெனில் வாலிப பருவத்திலோ
அல்லது குழந்தை பருவத்திலோ இடையில் ஒரு பொழுதும் அகால மரணம்
ஏற்படுவது இல்லை. எனவே அதற்கு அமரலோகம் என்று கூறப்படுகிறது.
இது மரண உலகம். இராவண இராஜ்யம் ஆகும். இங்கு
ஒவ்வொருவருக்குள்ளும் விகாரங்களின் பிரவேசம் ஆகி உள்ளது.
ஒருவருக்குள் ஏதாவது ஒரு விகாரம் இருந்தாலும் கூட முள் ஆனார்கள்
அல்லவா? ஒரு வேளை தோட்டக்காரனுக்கு ராயல் நறுமணமுள்ள மலராக
ஆக்கத் தெரிய வில்லை என்று தந்தை நினைப்பார். தோட்டக்காரன்
திறமையாக இருந்தார் என்றால் நல்ல நல்ல மலர்களைத் தயாரிப்பார்.
வெற்றி மாலையில் கோர்க்கப்படும் தகுதி உடைய மலர்கள்வேண்டும்.
தேவதைகளிடம் நல்ல நல்ல மலர்களை எடுத்துச் செல்கிறார்கள் அல்லவா?
உதாரணமாக எலிசபெத் ராணி வருகிறார் என்று வைத்து கொள்வோம்.
அப்பொழுது முற்றிலுமே முதல்தரமான மலர்களின் மாலை தயாரித்து
எடுத்து செல்வார்கள். இங்கு இருக்கும் மனிதர்களோ தமோபிர தானமாக
உள்ளார்கள். சிவனின் கோவிலுக்குக் கூட செல்கிறார்கள். இவர்
பகவான் என்று நினைக்கிறார்கள். பிரம்மா விஷ்ணு சங்கரனுக்கோ
தேவதை என்று கூறுகிறார்கள். சிவனை பகவான் என்று கூறுவார்கள்.
எனவே அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆகிறார்? இப்பொழுது
சிவனுக்கு ஊமத்தை (போதை தரும் வஸ்து) சாப்பிட்டுக்
கொண்டிருந்தார், பங்கி என்னும் போதை பொருளைக் குடித்து
கொண்டிருந்தார் என்று கூறுகிறார்கள். எவ்வளவு நிந்தனை
செய்கிறார்கள். பூ கூட எருக்கம் பூவை எடுத்து வருகிறார்கள்.
இப்பொழுது இப்பேர்ப்பட்ட பரமபிதா பரமாத்மா அவரிடம் என்ன
எடுத்துச் செல்கிறார்கள்! தமோ பிரதானமான முட்களிடமோ முதல்
தரமான (ஃபர்ஸ்ட் கிளாஸ்) மலரை எடுத்துச் செல்கிறார்கள். மேலும்
சிவனின் கோவிலுக்கு என்ன எடுத்துச் செல்கிறார்கள்! பாலைக் கூட
எப்படி அபிஷேகம் செய்கிறார்கள்? 5 சதவிகிதம் பால் மீதி 95
சதவிதம் தண்ணீர். பகவானிடம் பால் எவ்வாறு அர்ப்பிக்க வேண்டும்
- எதுவுமே தெரியாமல் உள்ளார்கள். இப்பொழுது நீங்கள் நல்ல
முறையில் அறிந்துள்ளீர்கள். உங்களிலும் கூட வரிசைக் கிரமமாக
இருக்கிறீர்கள். யார் நன்றாக அறிந்துள்ளார்களோ அவர்களை
சென்டருக்குத் தலைவராக நியமிக்கிறார்கள். எல்லோரும் ஒன்று போல
இருப்பதில்லை. படிப்பு ஒன்றே ஒன்று தான். மனிதனிலிருந்து தேவதை
ஆவதற்கான இலட்சியம், நோக்கம் தான் உள்ளது என்றாலும் கூட
ஆசிரியர்களோ வரிசைக்கிரமமாக உள்ளார்கள் அல்லவா? வெற்றி மாலையில்
வருவதற்கான முக்கிய ஆதாரம் படிப்பு ஆகும். படிப்போ ஒன்றே ஒன்று
தான்! அதில் தேர்ச்சி பெறுபவர்களோ வரிசைக்கிரமமாக இருப்பார்கள்
அல்லவா? எல்லாமே படிப்பை சார்ந்தது ஆகும். ஒரு சிலரோ வெற்றி
மாலையின் 8 மணிகளில் வருகிறார்கள். ஒரு சிலர் 108ல். ஒரு சிலர்
16108ல். வம்சாவளி அமைக்கிறார்கள் அல்லவா? எப்படி விருட்சத்தின்
கூட வம்சாவளி வெளிப்படுகிறது. முதன் முதலில் ஒரு இலை. 2 இலை
பின் வளர்ந்து கொண்டே போகிறது. இதுவும் விருட்சம் ஆகும். இனம்
இருக்கிறது. எப்படி கிருபளானி இனம் உள்ளதே அது போல. அவை எல்லாமே
எல்லைக் குட்பட்ட இனங்கள். இது எல்லையில்லாத இனம் ஆகும். இதில்
முதன் முதலில் இருப்பவர் யார்? பிரஜாபிதா பிரம்மா. அவருக்கு
கிரேட் கிரேட் கிராண்ட் ஃபாதர் (பாட்டனார்) என்பார்கள். ஆனால்
இது யாருக்குமே தெரியாது. படைப்பின் (சிருஷ்டி) படைப்புகர்த்தா
யார் என்பதை சிறிதளவும் மனிதர்கள் ஒருவரும் அறியாமல் உள்ளார்கள்.
முற்றிலுமே அகலிகை போன்று கல்புத்தியினராக இருக்கிறார்கள். இது
போல ஆகி விடும் பொழுது தான் தந்தை வருகிறார்.
நீங்கள் இங்கு அகலிகை புத்தியிலிருந்து தங்கம் போன்ற புத்தி
உடையவராக ஆவதற்கு வந்துள்ளீர்கள். எனவே ஞானம் (நாலேஜ்) கூட
தாரணை செய்ய வேண்டும் அல்லவா? தந்தையை அடையாளம் கண்டு கொள்ள
வேண்டும். மேலும் படிப்பின் மீது கவனம் கொள்ள வேண்டும்.
உதாரணமாக இன்று வந்துள்ளார்கள். நாளைக்கு திடீரென்று சரீரம்
விடுபட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். பின்னர் என்ன
பதவியை அடைய முடியும்? (நாலேஜ்) ஞானம் எதுவும் எடுக்கவில்லை.
எதுவும் கற்றுக் கொள்ளவுமில்லை என்றால், பின் என்ன பதவி
அடைவார்கள்? நாளுக்கு நாள் யார் தாமதமாக சரீரம் விடுகிறார்களோ
அவர்களுக்கு நேரமோ குறைவாகக் கிடைக்கிறது. ஏனெனில் நேரமோ
குறைந்து கொண்டே போகிறது. அதில் ஜன்மம் எடுத்து என்ன செய்ய
முடியும். ஆம் - உங்களில் யாராவது சென்றார்கள் என்றால் ஏதாவது
ஒரு நல்ல வீட்டில் ஜன்மம் எடுப்பார்கள். சம்ஸ்காரத்தை எடுத்துச்
செல்கிறார்கள். எனவே அந்த ஆத்மா சட்டென்று விழித்துக் (புரிந்து)
கொண்டு விடுவார். சிவபாபாவை நினைவு செய்ய முற்பட்டு விடுவார்.
சம்ஸ்காரம் சீராக அமையவில்லை என்றால் எதுவுமே ஆகாது. இதை
மிகவும் நுண்ணிய தன்மையுடன் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
தோட்டக்காரன் நல்ல நல்ல மலர்களை எடுத்து வருகிறார் என்றால்
அவருக்கு மகிமையும் பாடப்படுகிறது. மலர் தயாரிப்பதோ
தோட்டக்காரனின் வேலை ஆகும் அல்லவா? தந்தையை நினைவு செய்யவே
தெரியாத அப்பேர்ப்பட்ட குழந்தைகளும் இருக்கிறார்கள்.
அதிர்ஷ்டத்தைப் பொருத்து உள்ளது அல்லவா? அதிர்ஷ்டத்தில் இல்லை
என்றால் எதுவும் புரிந்து கொள்வது இல்லை. அதிர்ஷ்டசாலி
குழந்தைகளோ தந்தையை சரியான முறையில் அடையாளம் கண்டு கொண்டு அவரை
முழுமையான முறையில் நினைவு செய்வார்கள். தந்தையுடன் கூடவே புது
உலகத்தையும் நினைவு செய்து கொண்டே இருப்பார்கள். பாடலில் கூட
நாங்கள் புது உலகத்திற்காக புதிய அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்
கொள்ள வந்துள்ளோம் என்று கூறுகிறார்கள் அல்லவா? 21 பிறவிகளுக்கு
தந்தையிடமிருந்து இராஜ்ய பாக்கியத்தைப் பெற வேண்டும். இந்த போதை
மற்றும் குஷியில் இருந்தீர்கள் என்றால் இது போன்ற பாடல்களின்
பொருளை சமிக்ஞையினாலேயே புரிந்து கொண்டு விடுவீர்கள். பள்ளிக்
கூடத்தில் கூட ஒருவருடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் தோல்வி
(ஃபெயில்) அடைந்து விடுகிறார்கள். இதுவோ மிகவும் பெரிய பரீட்சை
ஆகும். சுயம் பகவான் வந்து கற்பிக்கிறார். இந்த நாலேஜ் (ஞானம்)
எல்லா மதத்தினருக்காகவும் உள்ளது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார்.
எந்த ஒரு தேகதாரி மனிதனையும் பகவான் என்று கூற முடியாது என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரம்மா விஷ்ணு சங்கரரைக் கூட பகவான்
என்று கூற மாட்டார் கள். அவர்கள் கூட சூட்சும வதனவாசி தேவதைகள்
ஆவார்கள். இங்கு இருப்பவர்கள் மனிதர்கள். இங்கு தேவதைகள் இல்லை.
இது மனித உலகம் ஆகும். இந்த லட்சுமி நாராயணர் ஆகியோர் தெய்வீக
குணங்கள் உடைய மனிதர்கள் ஆவார்கள். இதை ""டெய்ட்டிஸம்" தேவதா
தர்மம் என்று கூறப்படுகிறது. சத்யுகத்தில் எல்லோரும் தேவி
தேவதைகள் ஆவர்கள். சூட்சுமவதனத்தில் இருப்பவர்களோ பிரம்மா
விஷ்ணு சங்கரன் ஆவார்கள். பிரம்மா தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய
நம.. என்றும் பாடுகிறார்கள். பிறகு சிவ பரமாத்மாய நமஹ!
என்பார்கள். சிவனை தேவதை என்று கூற மாட்டார்கள். மேலும்
மனிதர்களை பகவான் என்று கூற முடியாது. மூன்று அடுக்கு மாடி
உள்ளது அல்லவா? நாம் மூன்றாவது மாடியில் உள்ளோம். சத்யுகத்தில்
இருந்த தெய்வீக குணம் உடைய மனிதர்களே பிறகு அசுர குணம்
உடையவர்களாக ஆகி விடுகிறார்கள். மாயையின் கிரகணம் பிடித்து
விடும் பொழுது கருப்பாக ஆகி விடுகிறார்கள். எப்படி
சந்திரனுக்குக் கூட கிரகணம் பிடிக்கிறது அல்லவா? அது
எல்லைக்குட்பட்ட விஷயங்கள் ஆகும். இது எல்லையில்லாத விஷயங்கள்
ஆகும். எல்லை யில்லாத பகல் மற்றும் எல்லையில்லாத இரவு ஆகும்.
பிரம்மாவின் பகல் மற்றும் இரவு என்றும் பாடுகிறார்கள். நீங்கள்
இப்பொழுது ஒரு தந்தையிடம் மட்டுமே படிக்க வேண்டும். மற்ற
அனைத்தையும் மறந்து விட வேண்டும். தந்தை மூலமாக படிப்பதால்
நீங்கள் புது உலகத்தின் அதிபதி ஆகிறீர்கள். இது உண்மையிலும்
உண்மையான கீதா பாடசாலை ஆகும். பாடசாலையில் எப்பொழுதும் அமர்ந்து
இருக்க மாட்டார்கள். பக்தி மார்க்கம் பகவானை சந்திப்பதற்கான
மார்க்கம் ஆகும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். எந்த அளவு
நிறைய பக்தி செய்வோமோ அதன் மூலம் பகவான் திருப்தி அடைவார்,
மேலும் வந்து அதற்கான பலனை அளிப்பார் என்று நினைக்கிறார்கள்.
இந்த எல்லா விஷயங்களையும் நீங்கள் தான் இப்பொழுது
புரிந்துள்ளீர்கள். பகவான் ஒருவர் ஆவார். அவர் இப்பொழுது தான்
பலனை அளித்துக் கொண்டிருக்கிறார். யார் முதன் முதலில் சூரிய
வம்சத்தில் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தார்களோ அவர்கள் தான்
எல்லோரையும் விட அதிகமான பக்தி செய்துள்ளார்கள். அவர்களே தான்
இங்கு வருவார்கள். நீங்கள் தான் முதன் முதலில் சிவபாபாவின்
முன்பு அவரை மட்டுமே பக்தி செய்துள்ளீர்கள். எனவே அவசியம்
நீங்கள் தான் முதன் முதலான பக்தர்கள் ஆனீர்கள். பிறகு கீழே
விழுந்து விழுந்து தமோபிரதானமாக ஆகி விடுகிறீர்கள். அரைக்கல்பம்
நீங்கள் பக்தி செய்தீர்கள். எனவே உங்களுக்குத் தான் முதலில்
ஞானம் அளிக்கிறார். உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக உள்ளீர்கள்.
நாங்கள் தூரத்தில் இருக்கிறோம். எனவே தினமும் எங்களால் படிக்க
முடியாது என்ற சாக்குப் போக்கு உங்களுடைய இந்த படிப்பில்
நடக்காது. ஒரு சிலர் நாங்கள் 10 மைல் தூரத்தில் இருக்கிறோம்
என்பார்கள். அட ! பாபாவின் நினைவில் நீங்கள் 10 மைல் கூட கால்
நடையாகச் செல்கிறீர்கள் என்றாலும் கூட ஒரு பொழுதும் களைப்பு
ஏற்படாது. எவ்வளவு பெரிய கஜானா எடுப்பதற்காகச் செல்கிறீர்கள்.
தீர்த்தங்களில் மனிதர்கள் தரிசனம் செய்வதற்காக கால் நடையாக
செல்கிறார்கள். எவ்வளவு அடி வாங்குகிறார்கள். இதுவோ ஒரே
நகரத்தின் விஷயமாகும். நான் இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறேன்
என்று தந்தை கூறுகிறார். நீங்கள் வீடு 5 மைல் தூரத்தில் உள்ளது
என்று கூறுகிறீர்கள்.. ஆகா! கஜானாவைப் பெறுவதற்காக ஓடி வந்தாக
வேண்டும். அமர்நாத்தில் தரிசனம் செய்வதற்காக மட்டுமே
எங்கெங்கிருந்தோ வருகிறார்கள். இங்கோ அமரநாத் பாபா சுயம்
கற்பிக்க வந்துள்ளார். உங்களை உலகத்தின் அதிபதியாக ஆக்க
வந்துள்ளேன். நீங்கள் சாக்கு போக்கு கூறிக் கொண்டிருக்கிறீர்கள்!
அதிகாலை அமிருதவேளை யார் வேண்டுமானாலும் வர முடியும். அந்த
நேரத்தில் எந்த பயமும் இல்லை. யாரும் உங்களை கொள்ளை அடிக்கவும்
மாட்டார்கள். ஒரு வேளை ஏதாவது பொருள், நகைகள் ஆகியவை இருந்தால்
பறிப்பார்கள். திருடர்களுக்குத் தேவையே பணம் மற்றும் பொருட்கள்
தான். ஆனால் ஒருவருடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால், பின்
நிறைய சாக்கு போக்குகளைக் கூறுவார்கள். படிப்பது இல்லை என்றால்
பிறகு தங்கள் பதவியை இழக்கிறார்கள். தந்தை வருவதும் பாரதத்தில்
தான் ! பாரதத்தைத் தான் சொர்க்கமாக ஆக்குகிறார். ஒரு நொடியில்
ஜீவன் முக்திக்கான வழியைக் கூறுகிறார். ஆனால் ஒருவர்
முயற்சியும் (புருஷார்த்தம்) செய்தால் தானே. அடியே எடுத்து
வைக்கவில்லை என்றால் எப்படி போய்ச் சேர முடியும்.
இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர் கள். தந்தையிடம்
சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வந்துள்ளீர்கள். புதிய உலகத்தின்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதே மகாபாரத போர் அல்லவா?
நல்லது !
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை அளிக்கும் ஞான பொக்கிஷங்களைப் பெறுவற்காக ஓடிடோடி வர
வேண்டும். இதில் எந்த ஒரு விதமான சாக்கு போக்கும் கூறக் கூடாது.
தந்தையின் நினைவில் 10 மைல் கால் நடையாக நடந்தாலும் கூட களைப்பு
ஏற்படாது.
2. வெற்றி மாலையில் வருவதற்கான ஆதாரம் படிப்பு ஆகும். படிப்பின்
மீது முழு கவனம் செலுத்த வேண்டும். முட்களை மலராக மாற்றக்
கூடிய சேவை செய்ய வேண்டும் மற்றும் இனிய இராஜ்யத்தை நினைவு
செய்ய வேண்டும்.
வரதானம்:
சங்கமயுகத்தின் மகிமையை தெரிந்துக் கொண்டு ஒன்றுக்கு பன்மடங்கு
கைமாறாக பெற்று சர்வ பிராப்தி சம்பன்னமாகுக
சங்கமயுகத்தில் பாப்தாதாவின் வாக்கு: ஒன்றைக்கொடு, இலட்சம் எடு.
எப்படி அனைத்திலும் உயர்ந்த நேரம், பிறவி, பட்டம் யாவும் இந்த
நேரத்திற்குரியதோ அவ்வாற சர்வ பிராப்திகளின் அனுபவமும், இப்போதே
ஏற்படுகின்றது. இப்போது ஒன்றுக்கு இலட்சம் மடங்கு மட்டுமல்ல
எப்போது வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு தருவதற்கு தந்தை
சேவகனாக கட்டுப் பட்டுள்ளார். ஒன்றுக்கு பன்மடங்கு கைமாறாக
கிடைக்கின்றது. ஏனெனில், இப்போது வரம் தரும் வள்ளலே
உங்களுடையவராகி உள்ளார். விதையே உங்கள் கையில் உள்ளபோது விதை
மூலமாக வேண்டியதை ஒரு நொடியில் பெற்று அனைத்து பிராப்திகளிலும்
முழுமை பெற முடியும்.
சுலோகன்:
இன்னல் எதுவாயினும் இன்னல் போகலாம் ஆனால் குஷி போகக் கூடாது.
அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்த பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும்
ஒருமுகமாகுங்கள்
ஒற்றுமை மற்றும் ஒருமுகம் வெற்றகிரமான செயலுக்கு இவை இரண்டும்
உயர்வான புஜங்கள். ஏகாகிரதா அதாவது வீண் எண்ணம் இல்லாது தீய
எண்ணம் இல்லாத நிலை. எங்கே ஏக்தா, ஏகாக்கிரதா இருக்குமோ அங்கு
வெற்றி கழுத்தின் மாலையாகும். வரதாதா பாபாவிற்கு பிரியமான ஒரு
வார்த்தை ஏக்விரதா ஏக் பல், ஏக் பரோசா (ஒரே பலம், ஒரே நம்பிக்கை)
அத்துடன் ஏக்மத் (ஒரே வழி) பிறர் வழி, பலர் வழி அல்ல ஒரே ரசனை,
வேறு ந்த மனதிர் மற்றும் வைபங்களில் ரசனையற்ற நிலை. அவ்வாறே
ஒற்றுமை, ஏகாந்த பரியர்.