07-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் நடமாடும்
போதும் சுற்றி வரும் போதும் நினைவில் இருப்பதற்கான பயிற்சி
செய்ய வேண்டும். ஞானம் மற்றும் யோகம் மட்டுமே முக்கியமான இரண்டு
பொருட்கள் (விஷயங்கள்) ஆகும். யோகம் என்றால் நினைவில் மற்றும்
தொடர்பில் இருப்பது.
கேள்வி:
புத்திசாலிக் குழந்தைகள் எந்த
வார்த்தையை வாயினால் பேச மாட்டார்கள்?
பதில்:
எங்களுக்கு யோகத்தில் இருப்பதைக்
கற்றுக் கொடுங்கள் என்று புத்திசாலிக் குழந்தைகள் சொல்ல
மாட்டார்கள். தந்தையை நினைவு செய்வதற்குக் கற்றுக் கொள்ள
வேண்டுமா என்ன? இது கற்பதற்கும் கற்றுத் தருவதற்குமான
பாடசாலையாகும். நினைவு செய்வதற்காக என்றே அமர வேண்டும்
என்பதில்லை. நீங்கள் காரியங்களை செய்து கொண்டே தந்தையை நினைவு
செய்வதற் கான பயிற்சி செய்ய வேண்டும்.
ஓம் சாந்தி.
இப்போது ஆன்மிகத் தந்தை வந்து ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கிறார். குழந்தைகள் அறிவார்கள், ஆன்மிகத் தந்தை இந்த
ரதத்தின் மூலம் நமக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது குழந்தைகள் ஆகி விட்டோம் என்றால், எனக்கு பாபாவை நினைவு
செய்வதற்குக் கற்றுக் கொடுங்கள் என்று தந்தைக்கோ அல்லது யாராவது
சகோதரன் அல்லது சகோதரிக்கோ சொல்வதென்பது (கேட்பது) தவறாகும்.
நீங்கள் ஒன்றும் சின்னப் பெண்குழந்தைகள் கிடையாது இல்லையா?
இதையோ நீங்கள் அறிவீர்கள், அதாவது ஆத்மா என்பது முக்கியம்.
அதுவோ அழிவில்லாதது. சரீரம் அழியக்கூடியது. பெரியதோ ஆத்மா தான்
இல்லையா? அஞ்ஞான காலத்தில் நாம் ஆத்மா, இந்த சரீரத்தின் மூலம்
நாம் பேசுகிறோம் என்ற இந்த ஞானம் யாருக்கும் இருப்பதில்லை. நான்
இதைச் செய்கிறேன் என்று தேக அபிமானத்தில் வந்து தான்
பேசுகின்றனர். இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகியிருக்கிறீர்கள்.
நீங்கள் அறிவீர்கள், நான் இந்த சரீரத்தின் மூலம் பேசுகிறேன்,
கர்மம் செய்கிறேன் என்பதை ஆத்மா தான் சொல்கிறது. ஆத்மா என்பது
ஆணாகும். பாபா புரிய வைக்கிறார் - இந்த வார்த்தை அதிகமாகச்
சொல்லப் படுகின்றது, என்னை யோகத்தில் இருக்க வையுங்கள் எனச்
சொல்கின்றனர். முன்னால் ஒருவர் அமர்கிறார், இந்த சிந்தனையோடு,
அதாவது நாமும் பாபா நினைவில் அமர்வோம், இவரும் கூட அமரட்டும்.
இப்போது பாடசாலை ஒன்றும் இதற்காக இல்லை. பாடசாலையோ
படிப்பிற்காகவே உள்ளது. மற்றப்படி இங்கே அமர்ந்து கொண்டு
நீங்கள் நினைவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்ப தில்லை.
பாபாவோ புரிய வைத்துள்ளார், நடமாடும் போதும், சுற்றி வரும்
போதும், அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் தந்தையை நினைவு
செய்யுங்கள். இதற்கென்று விசேஷமாக அமர்ந்திருக்க வேண்டும்.
என்ற அவசியம் கிடையாது. இப்படி சிலர் சொல்கின்றனர் - ராம-ராம்
என்று சொல்லுங்கள். ராம்-ராம் என்று சொல்லாமல் நினைவு செய்ய
முடியாதா என்ன? நடமாடும் போதும் கூட நினைவு செய்ய முடியும்.
நீங்களோ கர்மம் செய்யும் போதும் கூட நினைவு செய்ய வேண்டும்.
நாயகி-நாயகன் ஒன்றும் விசேஷமாக அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர்
நினைவு செய்ய மாட்டார்கள். வேலை-மற்றும், தொழில்கள் முதலிய
அனைத்தையும் செய்ய வேண்டும். அனைத்தையும் செய்தவாறே தன்னுடைய
நாயகனை நினைவு செய்து கொண்டே இருங்கள். அவரை நினைவு
செய்வதற்காக என்றே எங்காவது சென்று அமர்ந்து கொள்ள வேண்டும்
என்பதில்லை.
குழந்தைகள் நீங்கள் பாடல் அல்லது கவிதைகள் முதலியன
சொல்கிறீர்கள் என்றால் பாபா சொல்கிறார், இவை பக்தி
மார்க்கத்தினுடையவை. சாந்தி தேவா என அழைக்கவும் செய்கின்றனர்
என்றால் அதுவும் பரமாத்மாவையே நினைக்கின்றனர், கிருஷ்ணரை அல்ல.
டிராமாவின் அனுசாரம் ஆத்மா அசாந்தியாகியுள்ளது. அதனால் தந்தையை
அழைக்கின்றது. ஏனென்றால் சாந்தி, சுகம் மற்றும் ஞானத்தின்
கடலாக இருப்பவர் அவர். ஞானம் மற்றும் யோகம் என்பவை முக்கியமான
இரு வேறு விசயங்கள். யோகம் என்றால் நினைவு. அவர்களுடைய ஹடயோகம்
முற்றிலும் வேறாகும். உங்களுடையது ராஜயோகம். பாபாவை நினைவு
செய்ய வேண்டும், அவ்வளவு தான். தந்தை மூலம் நீங்கள் தந்தையை
அறிந்து கொள்வதால் சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து
கொண்டு விட்டீர்கள். உங்களுக்கு அனைத்தைக் காட்டிலும் அதிகமான
குஷியோ இது தான் - அதாவது நமக்கு பகவான் படிப்பிக்கிறார்.
முதல்-முதலில் பகவானுடைய முழுமையான அறிமுகமும் கூட இருக்க
வேண்டும். இதுபோலவோ முன்பு அதாவது எப்படி ஆத்மா நட்சத்திரமாக
உள்ளதோ, அதுபோல் பகவானும் நட்சத்திரமாக உள்ளார் என்பதை ஒரு
போதும் அறிந்திருக்கவில்லை. அவரும் கூட ஆத்மா தான். ஆனால் அவர்
பரம ஆத்மா, சுப்ரீம் ஆத்மா எனச் சொல்லப்படுகிறார். அவர்
ஒருபோதும் புனர்ஜென்மமோ எடுப்பதில்லை. அவர் பிறப்பு-இறப்பில்
வருகிறார் என்பதெல்லாம் கிடையாது. அவர் புனர்ஜென்மம்
எடுப்பதில்லை. நான் எப்படி வருகிறேன் என்று அவர் தாமே வந்து
புரிய வைக்கிறார். திரிமூர்த்தி பற்றிய மகிமையும் பாரதத்தில்
தான் பாடப்பட்டுள்ளது. திரிமூர்த்தி பிரம்மா-விஷ்ணு-சங்கரின்
சித்திரத்தையும் காட்டு கின்றனர். சிவ பரமாத்மாய நமஹ என்று
சொல்கின்றனர் இல்லையா? அந்த உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையை
மறந்து விட்டுள்ளனர். திரிமூர்த்திக்கு மட்டும் சித்திரத்தைக்
கொடுத்து விட்டனர். மேலே சிவபாபாவோ கண்டிப்பாக இருந்தாக
வேண்டும். இதன் மூலம் அவர்களுடைய படைப்பாளர் சிவபாபா எனப்
புரிந்து கொள்வார்கள். படைப்பினிடம் இருந்து ஒருபோதும் ஆஸ்தி
கிடைக்காது. நீங்கள் அறிவீர்கள், பிரம்மாவிடமிருந்து எந்த ஓர்
ஆஸ்தியும் கிடைப்பதில்லை. விஷ்ணுவுக்கோ வைரம்-வைடூரியங்களால்
ஆன கிரீடம் உள்ளது இல்லையா? சிவபாபா மூலம் ஒன்றுக்கும் உதவாத
நிலையில் இருந்து பெருமதிப்பிற்குரியவராக ஆகியிருக்கிறார்.
சிவனுடைய சித்திரம் இல்லாததால் அனைத்துமே குறையுள்ளதாக ஆகி
விடுகின்றது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மா, இது
அவருடைய படைப்பாகும். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத்
தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்காக சொர்க்கத்தின் ஆஸ்தி
கிடைக்கின்றது, . அங்கே அவர்கள் பிறகும் கூட லௌகிக்
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.
இது உங்களுக்கு இப்போது தான் தெரிந்துள்ளது. அதாவது எல்லையற்ற
தந்தையிடமிருந்து உயர்ந்த பலனை அடைந்துள்ளோம். இது உங்களுக்கு
இப்போது தான் தெரியும். இப்போதைய வருமானம் அங்கே 21
பிறவிகளுக்கு நடைபெறும். அங்கே இது பற்றித் தெரியாது, இந்த
ஞானத்தை முற்றிலும் அறிந்தே இருக்க மாட்டார்கள். இந்த ஞானம்
தேவதைகளிடமும் கிடையாது, சூத்திரர்களிடமும் கிடையாது. இந்த
ஞானம் இருப்பது பிராமணர்களாகிய உங்களிடம் தான். இது ஆன்மிக
ஞானம். ஸ்பிரிச்சுவல் என்பதன் அர்த்தத்தைக் கூட அவர்கள்
அறிந்திருக்க வில்லை. டாக்டர் ஆஃப் ஃபிலாசஃபி எனச் சொல்கின்றனர்.
டாக்டர் ஆஃப் ஸ்பிரிச்சுவல் நாலெட்ஜ் ஒரு தந்தை மட்டுமே! பாபா
சர்ஜன் என்றும் சொல்லப்படுகிறார் இல்லையா? சாது சந்நியாசி
முதலானவர்கள் ஒன்றும் சர்ஜன் கிடையாது. வேத-சாஸ்திரங்கள்
முதலியவற்றைப் படிப்பவர் களை டாக்டர் எனச் சொல்ல மாட்டார்கள்.
டைட்டிலும் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் ஆன்மிக
சர்ஜன் ஒரு தந்தை தான். அவர் ஆத்மாவுக்கு இஞ்செக்ஷன் போடுகிறார்.
அது பக்தி. அவர்களை டாக்டர் ஆஃப் பக்தி எனச் சொல்ல வேண்டும்.
அதாவது சாஸ்திரங்களின் ஞானத்தைத் தருகிறார்கள். அதில் எந்த ஒரு
பயனும் கிடையாது. கீழே இறங்கிக் கொண்டே செல்கிறார்கள். ஆக,
அவர்களை டாக்டர் என்று எப்படிச் சொல்வார்கள்? டாக்டரோ நன்மை
ஏற்படச் செய்கிறார் இல்லையா? இந்தத் தந்தையோ அழிவில்லாத ஞான
சர்ஜனாக இருப்பவர். யோக பலத்தினால் நீங்கள் சதா
ஆரோக்கியமானவர்களாக ஆகிறீர்கள். இதையோ குழந்தைகள் நீங்கள் தாம்
அறிவீர்கள். வெளியிலுள்ளவர்கள் என்ன அறிவார்கள்? அவர் அழிவற்ற
சர்ஜன் எனச் சொல்லப்படுகிறார். ஆத்மாக்களில் படிந்துள்ள
விகாரங்களின் கறையை நீக்குவது, தூய்மை இல்லாதவர்களை
தூய்மைபடுத்தி சத்கதியளிப்பது - இதற்கான சக்தி பாபாவிடம் உள்ளது.
ஆல்மைட்டி பதீத பாவனர் ஒரு தந்தை மட்டுமே. ஆல்மைட்டி (சர்வ
வல்லமையுள்ளவர்) என்று எந்த ஒரு மனிதரையும் சொல்ல முடியாது. ஆக,
பாபா எந்த ஒரு சக்தியைக் காட்டுகிறார்? அனைவருக்கும் தமது
சக்தியினால் சத்கதி அளித்து விடுகிறார். அவர் டாக்டர் ஆஃப்
ஸ்பிரிச்சுவல் நாலெட்ஜ். டாக்டர் ஆஃப் ஃபிலாசஃபி - என்று
ஏராளமான மனிதர்கள் உள்ளனர். ஸ்பிரிச்சுவல் டாக்டர் ஒருவர் தான்.
ஆக, இப்போது பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தை
யாகிய என்னை நினைவு செய்யுங்கள், தூய்மையாகுங்கள். நான்
வந்திருப்பதே தூய்மையான உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக. பிறகு
நீங்கள் ஏன் தூய்மை இழக்கிறீர்கள்? தூய்மையான வராகுங்கள்.
தூய்மை இல்லாதவர்களாக ஆகாதீர்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும்
பாபாவின் கட்டளை - இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை
மலருக்குச் சமமாகப் தூய்மை யாக இருங்கள். பால பிரம்மச்சாரி
ஆகுங்கள், அப்போது தூய்மையான உலகத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள்.
இத்தனை ஜென்மங்களாக எவ்வளவு பாவங்கள் செய்திருக்கிறீர்களோ,
இப்போது என்னை நினைவு செய்வதன் மூலம் பாவங்கள் பஸ்பமாகி விடும்.
மூலவதனத்தில் தூய்மையான ஆத்மாக்கள் தான் வசிக்கின்றனர். தூய்மை
இல்லாதவர்கள் யாரும் அங்கே செல்ல முடியாது. புத்தியில் இதையோ
நினைவு வைக்கத் தான் வேண்டும் - பாபா நமக்குப் படிப்பு சொல்லித்
தருகிறார் என்று. எங்களுக்கு ஆசிரியரை நினைப்பதற்குச் சொல்லித்
தாருங்கள் என்று மாணவர்கள் கேட்பார்களா என்ன? நினைவு செய்வதை
கற்றுத் தருவதற்கான தேவை என்ன இருக்கிறது? இங்கே ஆசனத்தில்
யாரும் அமர்ந்திருக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தன்னுடைய
தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் நாள் முழுவதும்
வேலை-தொழில் முதலியவற்றில் இருக்கிறீர்கள் என்றால் மறந்து
போகிறீர்கள். அதனால் இந்த 10-15 நிமிடங் களாவது நினைவு
செய்யட்டுமே என்று இங்கே அமர்த்தி வைக்கப்படுகிறீர்கள்..
குழந்தைகள் நீங்களோ வேலைகளைச் செய்து கொண்டே நினைவில்
இருப்பதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரைக்
கல்பத்திற்குப் பிறகு நாயகன் கிடைத்திருக்கிறார். இப்போது
சொல்கிறார், ஆத்மா உங்களுக்குள் இருக்கும் கறை நீங்கி விடும்,
நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். அப்படியானால் ஏன்
நினைவு செய்யக் கூடாது? (பதி) கணவர்தான் உனக்கு குரு, ஈஸ்வர்
எல்லாமே என்று பெண்ணுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் போது
சொல்கின்றனர். ஆனால் அவளோ பிறகு உற்றார், உறவினர், குரு முதலான
அநேகரை நினைவு செய்கிறாள். அதுவோ தேகதாரியின் நினைவாகின்றது.
இவரோ பதிகளுக்கெல்லாம் மேலான பதி. இவரை நினைவு செய்ய வேண்டும்.
எங்களை நிஷ்டையில் (யோகத்தில்) அமர்த்துங்கள் என்று சிலர் சொல்
கின்றனர். ஆனால் இதனால் என்ன ஆகும்? 10 நிமிடங்கள் இங்கே
அமர்கின்றனர் என்றால் அவர்கள் ஏக்ரஸ் நிலையில் அமர்ந்துள்ளனர்
என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். பக்தி மார்க்கத் தில்
யாருக்காவது பூஜை செய்வதற்காக அமர்கின்றனர் என்றால் புத்தி
அதிகமாக அலைந்து கொண்டே இருக்கின்றது. தீவிர பக்தி
செய்பவர்களுக்கு நாம் சாட்சாத்காரம் பார்க்க வேண்டும் என்ற அதே
ஈடுபாடு இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆசையோடு அமர்ந்து
கொண்டே இருக்கின்றனர். ஒரே ஓர் ஈடுபாட்டில் மூழ்கி விடுகின்றனர்.
அப்போது சாட்சாத்காரம் கிடைக் கின்றது. அவர்கள் (நௌதா) தீவிர
அல்லது கண் மூடித்தனமான பக்தர்கள் எனச் சொல்லப் படு கின்றனர்.
எப்படி நாயகி-நாயகன் உள்ளனரோ, அதுபோல் அவர்களின் பக்தி உள்ளது.
உண்ணும் போதும் அருந்தும் போதும் நினைவு இருந்து கொண்டே
இருக்கிறது. அவர்களிடம் விகாரத்தின் விசயம் இருப்பதில்லை.
சரீரத்தின் மீது பிரியம் ஏற்பட்டு விடுகிறது. ஒருவர்-மற்றவரைப்
பார்க்காமல் இருக்க முடிவதில்லை.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய வைத்துள்ளார் -
என்னை நினைவு செய்வதன் மூலம் உங்கள் விகர்மங்கள் விநாசமாகி
விடும். எப்படி நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள்.
விதையை நினைவு செய்வதன் மூலம் மரம் முழுவதும் நினைவு வந்து
விடும். இது பலவித தர்மங்களின் மரம் இல்லையா? இது உங்களுடைய
புத்தியில் மட்டுமே உள்ளது - அதாவது பாரதம் பொன் யுகத்தில் (கோல்டன்
ஏஜ்) இருந்தது, இப்போது இரும்பு யுகத்தில் (அயர்ன் ஏஜ்) உள்ளது.
இந்த ஆங்கிலச் சொற்கள் நன்றாக உள்ளன. அவற்றின் அர்த்தம் நன்கு
வெளிப்படுகின்றது. ஆத்மா உண்மையான தங்கமாக உள்ளது, பிறகு அதில்
கறை படிகின்றது. இப்போது முற்றிலும் பொய்யாக ஆகி விட்டுள்ளது.
இது அயர்ன் ஏஜ்டு எனச் சொல்லப்படுகின்றது. ஆத்மாக்கள் இரும்பு
யுகத் தினராக ஆவதால் சரீரமும் அவ்வாறே ஆகி விட்டுள்ளது. இப்போது
பாபா சொல்கிறார், நான் பதித பாவன், என்னை மட்டுமே நினைவு
செய்யுங்கள். நீங்கள் என்னை அழைப்பதே, பதித பாவனா வாருங்கள்
என்று தான். நான் கல்ப-கல்பமாக வந்து இந்த யுக்தி சொல்கிறேன்.
மன்மனாபவ, மத்யாஜீபவ, அதாவது சொர்க்கத்தின் எஜமானர் ஆகுங்கள்.,
எங்களுக்கு யோகத்தில் மிகுந்த மஜா வருகிறது, ஞானத்தில் அந்த
அளவு இல்லை என்று சிலர் சொல்கின்றனர். அவ்வளவு தான், யோகா
செய்து விட்டு இவர்கள் ஓடிப் போவார்கள். யோகா தான் நன்றாக
உள்ளது, எங்களுக்கோ சாந்தி வேண்டும் எனச் சொல்கின்றனர். நல்லது,
பாபாவையோ எங்கே வேண்டு மானாலும் அமர்ந்து நினைவு செய்யுங்கள்.
நினைவு செய்து-செய்தே நீங்கள் சாந்திதாமத்திற்குச் சென்று
விடுவீர்கள். இதில் யோகா கற்றுத் தருவதற்கான விசயமே கிடையாது.
தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுபோல் அநேகர் உள்ளனர் -
சென்டர்களில் சென்று அரை அல்லது முக்கால் மணி நேரம் அமர்ந்து
கொள்கின்றனர். எங்களை நிஷ்டையில் (தியானத்தில்) அமர்த்துங்கள்
என்றோ, பாபா எங்களுக்கு நிஷ்டையின் புரோகிராம் தந்துள்ளார்
என்றோ சொல்வார்கள். இங்கே பாபா சொல்கிறார், நடமாடும் போதும்
சுற்றி வரும் போதும் நினைவிலேயே இருங்கள். அப்படி இல்லை யெனில்
அமர்வது நல்லது. பாபா தடை சொல்வதில்லை. இரவு முழுவதும் வேண்டு
மானாலும் அமருங்கள். ஆனால் இரவு மட்டும் தான் நினைவு செய்ய
வேண்டும் என்று இருந்துவிடக் கூடாது. வேலைகளைச் செய்து கொண்டும்
கூட நினைவில் இருப்பதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். இதில் மிகுந்த முயற்சி உள்ளது. புத்தி அடிக்கடி வேறு
பக்கம் ஓடி விடுகின்றது. பக்தி மார்க்கத்திலும் கூட புத்தி
வெளியில் ஓடி விடுகின்றது. பிறகு தனக்குத் தானே குட்டு வைத்துக்
கொள்கின்றனர். உண்மையான பக்தர்கள் பற்றி இவ்வாறு பேசப்படுகிறது.
ஆக, இங்கேயும் கூட தனக்குத் தானே இதுபோல் பேசிக் கொள்ள வேண்டும்.
பாபாவை ஏன் நினைவு செய்யவில்லை? நினைவு செய்யவில்லை என்றால்
உலகத்தின் எஜமானராக எப்படி ஆவீர்கள்? நாயகி-நாயகனோ
பெயர்-வடிவத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். இங்கோ நீங்கள்
தங்களை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்கிறீர்கள். நாம்
ஆத்மா இந்த சரீரத்திலிருந்து வேறாக உள்ளோம். சரீரத்தில்
வருவதால் கர்மம் செய்ய வேண்டியுள்ளது. அநேகர் இதுபோலவும்
உள்ளனர், எங்களுக்குக் காட்சி கிடைக்க வேண்டும் எனச்
சொல்கின்றனர். இப்போது என்ன காட்சி பார்ப்பார்கள்? அவரோ
புள்ளியாக உள்ளார் இல்லையா? நல்லது, கிருஷ்ணரைக் காட்சியாகப்
பார்க்க வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர்,. கிருஷ்ணரின்
சித்திரமும் கூட உள்ளது இல்லையா? ஜடமாக உள்ளதைப் பிறகு
சைதன்யமாகப் பார்ப்பீர்கள் இதனால் என்ன நன்மை ஏற்பட்டது?
சாட்சாத்காரத்தினால் நன்மை எதுவும் கிடையாது. நீங்கள் பாபாவை
நினைவு செய்வீர்களானால் ஆத்மா தூய்மையாகும். நாராயணரின்
சாட்சாத்காரம் பார்ப்பதால் நாராயணராக ஆகிவிட மாட்டார்கள்.
நீங்கள் அறிவீர்கள், நம்முடைய நோக்கம்-குறிக்கோளே
லட்சுமி-நாராயண் ஆவது தான். ஆனால் படிக்காமல் அதுபோல் ஆக
முடியாது. படித்து திறமைசாலி ஆகுங்கள். பிரஜைகளையும்
உருவாக்குங்கள். அப்போது லட்சுமி- நாராயண் ஆவீர்கள். முயற்சி
வேண்டும். பாஸ் வித் ஆனர் ஆக வேண்டும். அப்போது தர்மராஜரின்
தண்டனை இருக்காது. இந்த இனிய குழந்தையும் (பிரம்மா) துணையாக
உள்ளார். நீங்கள் வேகமாகச் செல்ல முடியும் என்று இவரும்
சொல்கிறார், (பிரம்மா) பாபாவின் மீதோ எவ்வளவு சுமைகள்! நாள்
முழுவதும் எவ்வளவு சிந்தனை செய்ய வேண்டியுள்ளது! நாம் இவ்வளவு
நினைவு செய்ய முடிவதில்லை. உணவு உண்ணும் போது கொஞ்சம் நினைவு
உள்ளது, பிறகு மறந்து போகிறது. பாபாவும் நானும் சுற்றி
வருகிறோம் என உணர்கிறேன். சுற்றி வந்து-வந்து பாபாவை மறந்து
போகிறேன். நினைவு நழுவும் பொருள் இல்லையா? அடிக்கடி நினைவு
நழுவிச் சென்று விடுகின்றது இதில் மிகுந்த முயற்சி உள்ளது.
நினைவின் மூலம் தான் ஆத்மா தூய்மையாகின்றது. அநேகருக்குக்
கற்றுத் தருவீர்களானால் உயர்ந்த பதவி பெறுவீர்கள். யார்
நன்றாகப் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் நல்ல பதவி
பெறுவார்கள். கண்காட்சியில் எவ்வளவு பிரஜைகள் உருவாகிறார்கள்!
நீங்கள் ஒவ்வொருவரும் இலட்சக்கணக்கானவர்களுக்கு சேவை
செய்வீர்கள். பிறகு தங்களின் நிலைப்பாடும் அதுபோல் இருக்க
வேண்டும். கர்மாதீத் நிலை ஆகி விடும். பிறகு சரீரமே இருக்காது.
இன்னும் போனால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள், இப்போது யுத்தம்
தீவிரமாகச் செல்லும். பிறகு ஏராளமானவர்கள் உங்களிடம் வந்து
கொண்டே இருப்பார்கள். மகிமை அதிகரித்துக் கொண்டே போகும்.
கடைசியில் சந்நியாசிகளும் வருவார்கள், பாபாவை நினைவு செய்யத்
தொடங்கு வார்கள். அவர்களுடைய பார்ட்டே முக்திதாமம்
செல்வதற்கானது. ஞானத்தையோ பெற்றுக் கொள்ள மாட்டார்கள்.
உங்களுடைய செய்தி அனைத்து ஆத்மாக்களிடத்தும் சென்று சேர
வேண்டும். செய்தித் தாள்கள் மூலம் அநேகர் கேட்பார்கள். எவ்வளவு
கிராமங்கள் உள்ளன! அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும்.
இறைவனின் தூதுவர்கள் நீங்கள் தான். தூய்மை இல்லாதவர்களை தூய்மை
யாக்குபவர் தந்தையைத் தவிர வேறு யாரும் கிடையாது. தர்ம
ஸ்தாபகர்கள் யாரையாவது தூய்மையாக்குகிறார்கள் என்பதெல்லாம்
கிடையாது. அவர்களின் தர்மமோ வளர்ச்சி பெறும். அவர்கள்
திரும்பிச் செல்வதற்கான வழியை எப்படிச் சொல்வார்கள்?
அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒருவர் தான். குழந்தைகள் நீங்கள்
இப்போது அவசியம் தூய்மையாக வேண்டும். அநேகர் தூய்மையாக
இருப்பதில்லை. காமம் மகாசத்ரு இல்லையா? நல்ல-நல்ல குழந்தைகள்
கீழே விழுந்து விடுகின்றனர். தீய பார்வையும் கூட காமத்தின்
அம்சம் தான். இது பெரிய சைத்தான் ஆகும். பாபா சொல்கிறார், இதன்
மீது வெற்றி கொள்வீர்களானால் உலகத்தை வென்றவராக ஆவீர்கள்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) வேலை-தொழில் முதலியவற்றைச் செய்தவாறே நினைவில் இருப்பதற்கான
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாபாவுடன் கூடவே
செல்வதற்கு மற்றும் தூய்மையான உலகின் எஜமானர் ஆவதற்காக அவசியம்
தூய்மையாக ஆக வேண்டும்.
2) உயர்ந்த பதவி பெறுவதற்காக அநேகருக்கு சேவை செய்ய வேண்டும்.
அநேகரை முன்னேற்ற வேண்டும். தூதுவராகி இந்தச் செய்தியை
அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
வரதானம்:
அன்பு என்ற மடியில் ஆத்மார்த்த சுகம் மற்றும் சர்வசக்திகளின்
அனுபவம் செய்யக் கூடிய யதார்த்த முயற்சியாளர் ஆகுக.
யார் யதார்த்த முயற்சியாளர்களோ அவர்கள் ஒருபோதும் கடின உழைப்பு
அல்லது களைப்பின் அனுபவம் செய்யமாட்டார்கள். சதா அன்பில்
மூழ்கியிருப்பார்கள். அவர்கள் சங்கல்பத்திலும் சமர்ப்பனம் ஆன
காரணத்தினால் என்னை பாப்தாதா நடத்திக் கொண்டிருக்கின்றார்,
கடின உழைப்பு என்ற பாதங்களினால் அல்ல, அன்பு என்ற அனுபவம்
செய்வார்கள். அன்பு என்ற மடியில் நடந்து கொண்டிருக்கிறேன்,
அன்பு என்ற மடியில் அனைத்து பிராப்திகளின் அனுபவம் ஏற்படுகின்ற
காரணத்தினால் அவர்கள் நடக்கமாட்டார்கள், ஆனால் சதா குஷியில்,
ஆத்மார்த்த சுகத்தில், சர்வசக்திகளின் அனுபவத்தில் பறந்து
கொண்டே இருப்பார்கள்.
சுலோகன்:
நம்பிக்கை என்ற அஸ்திவாரம் உறுதியாக இருந்தால் சிரேஷ்ட
வாழ்க்கையின் அனுபவம் தானாகவே ஏற்படும்.
அவ்யக்த இஷாரே - ஏகாந்தவாசி ஆகுங்கள், ஏக்தா (ஒற்றுமை) மற்றும்
ஏகாக்ரதா (ஒருநிலைப்படுத்தல்) கொண்டு வாருங்கள்
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நடைமுறையில் அநேக தேசங்கள், அநேக
மொழிகள், அநேக உருவங்கள் இருந்தாலும் அனைவரின் உள்ளத்திலும்
ஒற்றுமை இருக்கிறது அல்லவா! ஏனெனில் உள்ளத்தில் ஒரு தந்தை
இருக்கின்றார். ஒரு ஸ்ரீமத் படி நடக்கக் கூடியவர்கள். அநேக
மொழிகள் இருந்தாலும் கூட மனதின் பாடல், மனதின் மொழி ஒன்று தான்.