07-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே - இது அனாதி
துவக்கமும் முடிவும் இல்லாத, அழிவற்ற, ஏற்கனவே உருவாக்கப்பட்ட
நாடகம் ஆகும். இதில் எந்த காட்சி கடந்து விட்டதோ அது மீண்டும்
கல்பத்திற்கு பிறகு தான் திரும்ப நடைபெறும். எனவே எப்பொழுதும்
கவலையற்று இருங்கள்.
கேள்வி:
இந்த உலகம் தனது தமோபிரதான நிலையை
அடைந்து விட்டுள்ளது என்பதற்கான அடையாளங்கள் என்ன?
பதில்:
நாளுக்கு நாள் துன்பங்கள்
அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவு பயங்கரங்கள் போர்
சூழ்நிலை நடந்து கொண்டிருக்கின்றன. திருடர்கள் எப்படி
அடிதடியி-றங்கி கொள்ளை யடித்துச் செல்கிறார்கள். பருவம் தவறி
மழை பெய்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு
விடுகிறது. இவை எல்லாமே தமோபிரதான நிலையின் அடையாளமாகும்.
தமோபிர தான இயற்கை துக்கம் அளித்துக் கொண்டே இருக்கிறது.
குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் ரகசியத்தை அறிந்துள்ளீர்கள்.
எனவே (நத்திங் நியூ) எதுவும் புதிதல்ல என்று கூறுகிறீர்கள்.
ஓம் சாந்தி.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது ஞான மழை பெய்துக்
கொண்டிருக்கிறது. நீங்கள் சங்கம யுகத்தினர், பிற மனிதர்கள்
அனைவருமே கலியுகத்தினர் ஆவார்கள். இச்சமயத்தில் உலகத்தில் அநேக
வழிகள், கொள்கைகள் உள்ளன. குழந்தைகளாகிய உங்களுடையதோ ஒரே ஒரு
வழி ஆகும். அந்த ஒரே ஒரு வழி பகவானிடமிருந்து தான் கிடைக்கிறது.
அவர்கள் பக்தி மார்க்கத் தில் செய்யும் ஜபம், தவம், தீர்த்தம்
ஆகிய அனைத்தையும் பகவானை அடைவதற்கான வழிகள் என்று
நினைக்கிறார்கள். பக்திக்குப் பின்னால் தான் பகவான் கிடைப்பார்
என்று கூறுகிறார்கள். ஆனால் பக்தி எப்பொழுது ஆரம்பமாகிறது
மற்றும் எதுவரை நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவே
தெரியாது. பக்தியினால் பகவான் கிடைப்பார் என்று மட்டும் கூறி
விடுகிறார்கள். எனவே அநேக விதமான பக்தி செய்து கொண்டே
வருகிறார்கள். பரம்பரையாக நாங்கள் பக்தி செய்து கொண்டே
வந்துள்ளோம் என்பதையும் சுயம் புரிந்துள்ளார்கள். ஒரு நாள்
பகவான் அவசியம் கிடைப்பார். ஏதாவதொரு ரூபத்தில் பகவான்
கிடைப்பார். என்ன செய்வார்? அவசியம் சத்கதி செய்வார். ஏனெனில்
அவர் இருப்பதே அனை வருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலாக பகவான்
யார், எப்பொழுது வருவார். இதுவும் அறியாமல் உள்ளார்கள். மகிமை
மட்டும் விதவித மாகப் பாடுகிறார்கள். பகவான் பதித பாவனர் ஆவார்,
ஞானக்கடல் ஆவார் என்று கூறுகிறார்கள். ஞானத்தினால் தான் சத்கதி
ஏற்படுகிறது. பகவான் நிராகாரமானவர் (சரீரமற்றவர்) என்பதையும்
அறிந்துள்ளார்கள். எப்படி ஆத்மாக்கள் நாம் கூட நிராகாரமானவர்கள்,
பின்னால் சரீரம் எடுக் கிறோம். ஆத்மாக்களாகிய நாம் கூட
தந்தையுடன் கூட பரந்தாமத்தில் வசிப்பவர்கள். நாம் இந்த உலகில்
வசிப்பவர்கள் அல்ல. எங்கு வசிப்பவர்கள் ஆவோம் (எந்த இடத்தின்
நிவாசி) என்பதைக் கூட சரியான முறையில் கூறுவதில்லை. ஒரு சிலரோ
நாங்கள் சொர்க்கத்திற்குச் சென்று விடுவோம் என்று
நினைக்கிறார்கள். இப்பொழுது நேராக சொர்க்கத்திற்கோ யாருமே
செல்வது இல்லை. ஒரு சிலர் ஜோதி ஜோதியுடன் கலந்து விடுவோம் என்று
கூறுகிறார்கள். இதுவும் தவறாகும். ஆத்மாவை அழியக் கூடியதாக
ஆக்கி விடுகிறார்கள். மோட்சம் கூட ஏற்பட முடியாது. ஏற்கனவே
நிர்ணயமான .... நிர்ணயிக்கப்பட்ட..... என்று கூறுகிறார்கள்
இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சரித்திரம், பூகோளம்
திரும்ப நடைபெறுகிறது. ஆனால் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது
என்பதை அறியாமல் உள்ளார்கள். சக்கரத்தையும் அறியாமல் உள்ளார்கள்.
இறைவனையும் அறியாமல் உள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு
அலைகிறார்கள். பகவான் யார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
பகவானை (ஃபாதர்) தந்தை என்றும் கூறுகிறார்கள். எனவே புத்தியில்
வர வேண்டும் அல்லவா? லௌகீக தந்தையோ இருக்கிறார். பிறகும் நாம்
அவரை நினைவு செய்கிறோம் என்றால் இரண்டு தந்தை ஆகிறார்கள் லௌகீக
தந்தை மற்றும் பரலௌகீக தந்தை. அந்த பரலௌகீக தந்தையைச்
சந்திப்பதற்காக இவ்வளவு பக்தி செய்கிறார்கள். அவர் பரலோகத்தில்
இருக்கிறார். நிராகார உலகம் கூட அவசியம் உள்ளது.
மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அவை எல்லாம் பக்தி
மார்க்கம் ஆகும் என்பதை நீங்கள் நல்ல முறையில் அறிந்துள்ளீர்கள்.
இராவண இராஜ்யத்தில் பக்தியே பக்தி நடந்துக் கொண்டே வந்துள்ளது.
ஞானம் இருக்க முடியாது. பக்தியினால் ஒரு பொழுதும் சத்கதி ஏற்பட
முடியாது. சத்கதி அளிக்கும் தந்தையை நினைவு செய்கிறார்கள். எனவே
அவசியம் அவர் எப்பொழுதாவது வந்து சத்கதி அளிப்பார். இது
முற்றிலுமே தமோபிரதான உலகமாகும் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். சதோபிரதானமாக இருந்தது. இப்பொழுது தமோ
பிரதானமாக உள்ளது. எவ்வளவு கலகம், குழப்பங்கள் ஏற்பட்டுக்
கொண்டிருக்கின்றன. மிகவும் பயங்கரங்கள் நடந்துக்
கொண்டிருக்கின்றன. திருடர்களும் கொள்ளையடித்து
கொண்டிருக்கிறார்கள். எப்படி எப்படி அடிதடி செய்து திருடர்கள்
பணத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். எப்படி எப்படியான
மருந்துகளை சுவாசிக்கச் செய்து மூர்ச்சையடையச் செய்து
விடுகிறார்கள். இது இராவண இராஜ்யம் ஆகும். இது மிகப் பெரிய
எல்லையில்லாத விளையாட்டாகும். இது சுற்றுவதற்கு ஐந்தாயிரம்
வருடங்கள் ஆகின்றது. விளையாட்டு கூட டிராமா போல உள்ளது. நாடகம்
என்று கூற மாட்டார்கள். நாடகத்திலோ ஒரு வேளை யாராவது ஒரு நடிகர்
நோய்வாய்ப்பட்டு விட்டார் என்றால், அவருக்குப் பதிலாக இன்னொரு
நடிகர் நடிக்க முடியும். ஆனால் இதிலோ இந்த விஷயம் ஏற்பட
முடியாது. இதுவோ அனாதி நாடகம் ஆகும் அல்லவா? உதாரணமாக யாராவது
நோய்வாய்ப்பட்டு விட்டார் என்றால் இது போல நோய்வாய்ப் படுவதும்
நாடகத்தில் பாகமாக உள்ளது என்று கூறுவீர்கள். மழை ஆகியவை
பெய்கிறது என்றால் கல்பத்திற்கு பின்னரும் இவ்வாறே பெய்யும்.
இதே கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். ஞானத்தின் மழையோ அனைவர் மீதும்
பொழிய முடியாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
ஆனால் ஞானக்கடலான பகவான் வந்து விட்டுள்ளார் என்ற இந்த குரல்
அவசியம் அனைவருடைய காதுகளுக்கும் போய்ச் சேர்ந்து விடும்.
உங்களுடையது முக்கியமானது யோகம் ஆகும். ஞானம் கூட நீங்கள்
கேட்கிறீர்கள். மற்றபடி மழையோ முழு உலகத்தின் மீது பெய்கிறது.
உங்களுடைய யோகத்தில் நிலையான அமைதி ஏற்பட்டு விடுகிறது.
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்கு பகவான் வந்து விட்டுள்ளார்
என்று நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள். ஆனால் தங்களையே
பகவான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட நிறைய பேர்
இருக்கிறார்கள். எனவே பிறகு உங்களை யார் ஏற்றுக் கொள்வார்கள்?
ஆகவே கோடியில் ஒருவர் தான் வெளிப்படுவார் என்று தந்தை புரிய
வைக்கிறார். பகவான் தந்தை வந்து விட்டுள்ளார் என்பதை உங்களிலும்
கூட வரிசைக்கிரமமாக அறிந்துள்ளீர் கள். தந்தையிடமிருந்தோ ஆஸ்தி
பெற வேண்டும் அல்லவா? எப்படி தந்தையை நினைவு செய்ய வேண்டும்
என்பதையும் புரிய வைத்துள்ளார். தன்னை ஆத்மா என்று உணருங்கள்.
மனிதர்களோ (தேக அபிமானி) தேக உணர்வுடையவர்களாக ஆகி
விட்டுள்ளார்கள். அனைத்து மனித ஆத்மாக் களும் பதீதமான (தூய்மை
யற்றவர்களாக) ஆகி விடும் பொழுது தான் நான் வருகிறேன் என்று
தந்தை கூறுகிறார். நீங்கள் எவ்வளவு தமோ பிரதானமாக ஆகி
விட்டுள்ளீர்கள். இப்பொழுது நான் உங்களை சதோபிரதானமாக ஆக்க
வந்துள்ளேன். முந்தைய கல்பத்தில் கூட நான் உங்களுக்கு இவ்வாறு
புரிய வைத்திருந்தேன். நீங்கள் தமோ பிரதான நிலையிலிருந்து
சதோபிரதானமாக எப்படி ஆவீர்கள்? என்னை நினைவு மட்டும்
செய்யுங்கள். நான் உங்களுக்கு என்னுடைய மற்றும் படைப்பினுடைய
அறிமுகத்தை அளிக்க வந்துள்ளேன். அந்த தந்தையை எல்லோரும் இராவண
இராஜ்யத்தில் நினைவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆத்மா
தனது தந்தையை நினைவு செய்கிறது. தந்தை இருப்பதே அசரீரியாக (சரீரமற்றவர்)
பிந்து (புள்ளி) ஆவார் அல்லவா? அவருக்கு பிறகு பெயர்
வைக்கப்பட்டுள்ளது. உங்களை சாலிகிராமங்கள் என்று கூறுகிறார்கள்.
மேலும் தந்தையை சிவன் என்றும் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய
உங்களுக்கு சரீரத்தின் மீது பெயர் ஏற்படுகிறது. தந்தை இருப்பதே
பரம ஆத்மாவாக. அவருக்கு சரீரமோ எடுக்க வேண்டியது இல்லை. அவர்
இவருக்குள் பிரவேசம் செய்துள்ளார். இது பிரம்மாவின் உடல் ஆகும்.
இவரை சிவன் என்று கூற மாட்டார்கள். ஆத்மா என்ற பெயரோ உங்களுக்கு
இருக்கவே இருக்கிறது.பிறகு நீங்கள் சரீரத்தில் வருகிறீர்கள்.
அவர் பரம ஆத்மா அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். எனவே
அனைவருக்கும் இரண்டு தந்தை ஆகி விட்டார்கள். ஒருவர்
நிராகாரமானவர் மற்றொரு வர் சாகாரமானவர். (சரீரமுள்ளவர்)
இவருக்கு பிரம்மா மற்றும் அலௌகீக (உலகிற்கு அப்பாற் பட்ட)
அதிசயமான தந்தை என்று கூறப்படுகிறது. எவ்வளவு ஏராளமான
குழந்தைகள் உள்ளார்கள். மனிதர்களுக்கு இது புரிய வருவதில்லை.
பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் இவ்வளவு ஏராள மானோர்
உள்ளார்கள். இது என்ன, இது எந்தவிதமான தர்மம் ஆகும் என்பது
புரிய முடியாமல் உள்ளார்கள். இந்த "குமார், குமாரி" என்பது
இல்லற மார்க்கத்தின் வார்த்தைகள் ஆகும் அல்லவா என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தாய் தந்தை, குமாரி மற்றும் குமார். பக்தி
மார்க்கத்தில் நீங்கள் தந்தையும் நீயே தாயும் நீயே என்று நினைவு
செய்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு தாய் தந்தை
கிடைத்துள்ளார்கள். உங்களை தத்து எடுத்துள்ளார். சத்யுகத்தில்
தத்து எடுக்கப்படுவதில்லை. அங்கு தத்தெடுத்தல் என்ற பெயரே
இருக்காது. இங்கு அந்த பெயர் உள்ளது. அவர் எல்லைக்குட் பட்ட
தந்தை. இவர் எல்லையில்லாத தந்தை! எல்லையில்லாத தத்து எடுத்தல்
ஆகும். இந்த இரகசியம் மிகவும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய
விஷயம் ஆகும். நீங்கள் கூட எவரொருவருக்கும் முழுமையான வகையில்
புரிய வைக்காமல் இருக்கிறீர்கள். முதன் முதலில் உள்ளே யாராவது
வருகிறார்கள், குருவை தரிசனம் செய்ய வந்துள்ளோம் என்று கூறினால்,
"இது ஒன்றும் கோவில் அல்ல" என்று கூறுங்கள். "போர்டில்" என்ன
எழுதப்பட்டுள்ளது என்று பாருங்கள். பிரம்மா குமார் குமாரிகள்
ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பிரஜாபிதாவின்
குழந்தைகள் ஆகி விட்டார்கள். பிரஜைகளோ நீங்களும் ஆவீர்கள்.
பகவான் படைப்பை படைக்கிறார். பிரம்மா கமல திருவாய் மூலமாக
எங்களைப் படைத்துள்ளார். நாம் இருப்பதே புதிய படைப்பினராக.
நீங்கள் பழைய படைப்பினர் ஆவீர்கள். சங்கமயுகத்தில் புதிய படைப்
பினராக ஆக வேண்டி உள்ளது. இது புருஷோத்தமர் ஆவதற்கான யுகம்
ஆகும். நீங்கள் சங்கம யுகத்தில் உள்ளீர்கள்.அவர்கள்
கலியுகத்தில் உள்ளார்கள். பிரிவு ஏற்பட்டுள்ளது போல உள்ளது.
தற்காலத்திலோ பார்த்தீர்கள் என்றால் எவ்வளவு பிரிவினைகள் உள்ளன.
ஒவ்வொரு தர்மத் தினரும் நாங்கள் எங்கள் பிரஜைகளை பராமரிப்போம்
என்று நினைக்கிறார்கள். எங்கள் தர்மத்தை எங்கள் இனத்தவரை
சுகமாக வைப்போம். எனவே "எங்கள் மாநிலத்திலிருந்து இந்த பொருள்
வெளியே போகக் கூடாது" என்று ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.
முன்பெல்லாம் முழு பிரஜைகள் மீது ராஜாவின் ஆணை இருக்கும்.
ராஜாவிற்கு தாய் தந்தை அன்ன தாதா (உணவளிக் கும் வள்ளல்) என்று
கூறுவார்கள். இப்பொழுதோ ராஜா ராணி யாரும் இல்லை. தனித் தனி
துண்டுகளாக ஆகி விட்டுள்ளது. எவ்வளவு கலகம், குழப்பங்கள் ஆகிக்
கொண்டிருக்கின்றன. திடீரென்று வெள்ளம் வந்து விடுகிறது.
பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாமே
துக்கத்தின் மரண சமயம் ஆகும்.
நாம் அனைவரும் நமக்குள் சகோதர சகோதரிகள் ஆவோம் என்பதை இப்பொழுது
பிராமணர் களாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். எனவே நாம் நமக்குள்
மிக மிக அன்புடன் பால் பாயாசம் போல (இனிப்பாக) ஆகி இருக்க
வேண்டும். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள். எனவே நமக்குள்
மிகுந்த அன்பு இருக்க வேண்டும். இராம இராஜ்யத்தில் சிங்கம் ஆடு
ஒன்றுக்கொன்று எதிரியாக இருந்தாலும் ஆனாலும் அவைகள் கூட ஒன்றாக
சேர்ந்து தண்ணீர் குடிக்கும். இங்கோ பாருங்கள் வீட்டிற்கு வீடு
எவ்வளவு சண்டை உள்ளது. தேசத்திற்கு தேசம் சண்டை,
தங்களுக்குள்ளேயே பிளவுகள் ஏற்படுகின்றன. அநேக கொள்கைகள் (வழிமுறை)
உள்ளன. நாம் அனைவரும் அநேக முறை தந்தையிடமிருந்து ஆஸ்தி
பெற்றிருந்தோம். மேலும் இழந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அதாவது இராவணன் மீது வெற்றி அடைகிறோம்.
பின்னர் தோற்று போகிறோம். ஒரு தந்தையின் ஸ்ரீமத் படி நாம்
உலகத்திற்கு அதிபதி ஆகி விடுகிறோம். எனவே அவருக்கு
உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் என்று கூறப்படுகிறது. அனைவரின்
துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் (துக்க ஹர்த்தா, சுக கர்த்தா)
என்று கூறப்படுகிறது. இப்பொழுது உங்களுக்கு சுகத்தின் வழி
கூறிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள்
பால் பாயசம் போல இருக்க வேண்டும். உலகத்தில் எல்லோருமே
தங்களுக்குள் உப்புத் தண்ணீர் போல உள்ளார்கள். ஒருவரையொருவர்
கொல்வதற்குக் கூட தாமதிப்பதில்லை. ஈசுவரிய குழந்தை களாகிய
நீங்களோ பால் பாயசம் போல இருக்க வேண்டும். ஈசுவரிய
குழந்தைகளாகிய நீங்கள் தேவதைகளை விடவும் உயர்ந்தவர்கள்
ஆகிறீர்கள். நீங்கள் தந்தைக்கு எவ்வளவு உதவி செய்பவர் களாக
ஆகிறீர்கள். புருஷோத்தமராக ஆக்குவதற்காக உதவி செய்பவர்கள்
ஆகிறீர்கள். எனவே நாம் புருஷோத்தமர் ஆவோம் என்றால் நமக்குள்
அந்த தெய்வீக குணங்கள் உள்ளதா என்று மனதில் தோன்ற வேண்டும்.
அசுர குணங்கள் உள்ளது என்றால், அவர்கள் பிறகு தந்தையின்
குழந்தைகள் என்று கூறிக் கொள்ள முடியாது. எனவே சத்குருவை
நிந்திப்பவர் பதவி அடைய முடியாது என்று கூறப்படுகிறது. அந்த
கலியுக குருக்கள் பிறகு தங்களுக்காக இதை கூறிக் கொண்டு
மனிதர்களை பயமுறுத்தி விடுகிறார்கள். எனவே யார் தந்தையின் பெயரை
பிரபல மடையச் செய்கிறார்களோ, பால் பாயசம் போல ஆகி
இருக்கிறார்களோ அவர்கள் நல்ல குழந்தை கள் ஆவார்கள். பால்பாயசம்
போல ஆகுங்கள் என்று எப்பொழுதும் தந்தை கூறுகிறார். உப்புத்
தண்ணீர் போல ஆகி தங்களுக்குள் சண்டை சச்சரவு செய்யாதீர்கள்.
இங்கு நீங்கள் பால் பாயாசம் போல ஆக வேண்டும். தங்களுக்குள்
மிகுந்த அன்பு வேண்டும். ஏனெனில் நீங்கள் ஈசுவரிய குழந்தைகள்
அல்லவா? இறைவன் மோஸ்ட் லவ்லி மிகவும் அன்பானவர் ஆவார். அதனால்
தானே அவரை எல்லோரும் நினைவு செய்கிறார்கள். எனவே உங்களுக்கிடையே
மிகுந்த அன்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் தந்தையின்
மதிப்பு குறையுமாறு செய்கிறீர்கள். இறைவனின் குழந்தைகள்
தங்களுக்குள் எப்படி உப்புத் தண்ணீர் போல இருக்க முடியும்.
பிறகு பதவி எப்படி அடைய முடியும்? தங்களுக்குள் பால் பாயசம்
போல ஆகி இருங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். உப்பு தண்ணீர்
போல ஆனீர்கள் என்றால் எதுவுமே தாரணை ஆகாது. தந்தையின்
டைரக்ஷன்படி (உத்தரவு) நடக்கவில்லை என்றால் எப்படி உயர்ந்த
பதவியை அடைய முடியும். தேக அபிமானத்தில் வருவதால் தான் பிறகு
தங்களுக்குள் சண்டையிடுகிறார்கள். தேஹீ அபிமானியாக (ஆத்ம
உணர்வுடையவர்களாக) இருந்தால் எதுவுமே பூசல்கள் ஏற்படாது.
இறைவனான தந்தை கிடைத்துள்ளார். எனவே தெய்வீக குணங்களும் தாரணை
செய்ய வேண்டும். ஆத்மா, தந்தையைப் போல ஆக வேண்டும். எப்படி
தந்தையிடம் தூய்மை, சுகம் மற்றும் அன்பு ஆகிய எல்லாமே உள்ளதோ
அதே போல நீங்களும் ஆக வேண்டும். இல்லையென்றால் உயர்ந்த பதவியை
அடைய முடியாது. படித்து தந்தையிடமிருந்து உயர்ந்த ஆஸ்தியைப்
பெற வேண்டும். நிறைய பேருக்கு நன்மை செய்பவர்களே ராஜா ராணி ஆக
முடியும். மற்றவர்கள் போய் தாசர் தாசிகளாக ஆகி விடுவார்கள்.
யார் யார் என்னவாக ஆகி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவோ
முடியும் அல்லவா? படிப்பவர்கள் சுயம் தங்களைக் கூட புரிந்து
கொள்ள முடியும் - இந்த கணக்குப்படி நாம் பாபாவிற்கு என்ன பெயர்
வாங்கித் தருவோம். இறைவனின் குழந்தை களோ யாருமே பார்த்து
மகிழ்ச்சி அடைந்து விடும் வகையில் மிகவும் அன்பானவர்களாக
இருக்க வேண்டும். பாபாவிற்கும் அவர்கள் இனிமையானவர்களாக
இருப்பார்கள். முதலில் வீட்டை சீர்திருத்துங்கள். முதலில்
வீட்டை பிறகு மற்றவர்களைத் திருத்த வேண்டும். இல்லற விவகாரங்
களில் தாமரை மலர் போல தூய்மையாகவும் பால் பாயாசம் போலும்
இருங்கள். யார் பார்த்தாலும் ஓகோ! இங்கேயே சொர்க்கம் வந்து
விட்டதே! என்று கூற வேண்டும். அஞ்ஞான காலத்தில் கூட சுயம் பாபா
இப்பேர்ப்பட்ட வீடுகளை பார்த்துள்ளார். 6-7 குழந்தைகள் திருமணம்
செய்தவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்திருப்பார்கள். அனைவரும்
அதிகாலை எழுந்து பக்தி செய்கிறார்கள். வீட்டில் முற்றிலுமாக
அமைதி நிலவி இருக்கும். இதுவோ உங்களுடைய ஈசுவரிய குடும்பம்
ஆகும். அன்னமும் கொக்கும் ஒன்றாக இருக்க முடியாது. நீங்களோ
அன்னமாக ஆக வேண்டும். உப்பு தண்ணீர் போல இருந்தால் பாபா
திருப்தி அடைய (ஏற்க) மாட்டார். நீங்கள் எவ்வளவு பெயருக்கு
அவப்பெயர் விளைவிக்கிறீர்கள் என்று தந்தை கூறுவார். பால் பாயசம்
போல ஆகி இருக்கவில்லை என்றால் சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை
அடைய முடியாமல் போய் விடுவீர்கள். நிறைய தண்டனை வாங்குவீர்கள்.
தந்தையினுடையவராக ஆகி பிறகு உப்பு தண்ணீர் போல இருக்கிறீர்கள்
என்றால் நூறு மடங்கு தண்டனை பெறுவீர்கள். பிறகு நாம் என்ன பதவி
அடைவோம் என்ற சாட்சாத்காரம் கூட உங்களுக்கு ஆகிக் கொண்டே
இருக்கும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் இறைவனின் குழந்தைகள் ஆவோம். நாம் ஒருவருக்கொருவர்
மிகவுமே அன்பானவர் களாக ஆகி இருக்க வேண்டும். தங்களுக்குள் ஒரு
பொழுதும் உப்பு தண்ணீர் போல கசந்து இருக்கக் கூடாது. முதலில்
தங்களைத் திருத்தி கொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களைத்
திருத்துவதற்கான அறிவுரை அளிக்க வேண்டும்.
2. எப்படி தந்தையிடம் தூய்மை, சுகம், அன்பு ஆகிய அனைத்து
குணங்களும் உள்ளதோ அதே போல தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும்.
சத்குருவிற்கு அவப்பெயர் நிந்திப்பவராக ஆகும் வகையில் எந்த
செயலையும் செய்யக் கூடாது. தனது நடத்தையினால் தந்தையின் பெயரைப்
புகழடையச் செய்ய வேண்டும்.
வரதானம்:
தந்தை மற்றும் பிராப்தியின் நினைவின் மூலம் சதா
ஆர்வம்-உற்சாகத்துடன் இருக்கக் கூடிய ஏக்ரஸ், உறுதியானவர் ஆகுக.
பிறப்பு எடுத்தவுடனேயே தந்தையின் மூலம் என்ன பிராப்திகள்
கிடைத்திருக்கிறதோ அதன் பட்டியல் சதா முன் வையுங்கள்.
பிராப்திகள் உறுதியானது, நிலையானது எனும் போது தைரியம் மற்றும்
ஆர்வமும் உறுதியானதாக இருக்க வேண்டும். உறுதியானதிற்குப்
பதிலாக மனம் சில நேரம் சஞ்சலம் ஆகிவிடுகிறது எனில் அல்லது
ஸ்திதி சஞ்சலத்தில் வந்து விடுகிறது எனில் அதற்குக் காரணம்
தந்தை மற்றும் பிராப்தியை சதா முன்னால் வைக்கவில்லை. அனைத்து
பிராப்திகளின் அனுபவம் சதா முன் அல்லது நினைவில் இருந்தால்
அனைத்து தடைகளும் அழிந்து விடும். சதா புது உற்சாகம், புது
ஆர்வத்துடன் இருப்பீர்கள். ஸ்திதி ஏக்ரஸ் ஆக இருக்கும்.
சுலோகன்:
எந்த வித சேவையிலும் சதா திருப்தியாக இருப்பது தான் நல்ல
மதிப்பெண் பெறுவதாகும்.
அவ்யக்த இஷாரே - சத்தியம் மற்றும் பண்பாடு என்ற நாகரீகத்தை
தாரணை செய்யுங்கள்
பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மிக மிக ராயல் ஆனவர்கள்.
உங்களது முகம் மற்றும் நடத்தை இரண்டும் சத்தியத்தின் பண்பாடு
அனுபவம் செய்விக்க வேண்டும். இராயல் ஆத்மாக் களை பண்பாட்டின்
தேவி என்று கூறுவர். அவர்களது பேச்சுக்கள், பார்வை,
சாப்பிடுவது-குடிப்பது, எழுந்திருப்பது-அமர்வது, ஒவ்வொரு
காரியத்திலும் பண்பாடு, சத்தியம் தானாகவே தென்படும். நான்
சத்தியத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் பண்பாடு
கிடையாது என்று இருக்கக் கூடாது. இது சரியல்ல.