07-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானம் யோகத்தினால் நம்பிக்கை ஏற்படுகிறது. காட்சிகள் பார்ப்பதால் இல்லை. நாடகத்தில் காட்சிகள் பார்ப்பதும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அதனால் யாருக்கும் நன்மை இல்லை.

கேள்வி:
பாபா எந்த சக்தியைக் காண்பிப்பதில்லை, ஆனால் பாபாவிடம் மந்திரசக்தி உள்ளது?

பதில்:
பகவான் சக்திசாலியானவர், அவர் இறந்தவர்களைக் கூட பிழைக்க வைக்க முடியும் என மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த சக்தியை நான் காண்பிப்பதில்லை என பாபா கூறு கின்றார். மற்றபடி யாராவது தீவிரமான பக்தி செய்தால் அவர்களுக்கு காட்சியை அளிக்கிறேன். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. சாட்சாத்காரம் செய்விக்கக்கூடிய மந்திரசக்தி பாபாவிடம் இருக்கிறது. ஆகவே நிறைய குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தபடியே பிரம்மா அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சிகள் கிடைக்கிறது.

பாடல்:
யார் வந்தது மனம் என்னும் வாயிலில்.....

ஓம் சாந்தி.
இது குழந்தைகளின் அனுபவத்தின் பாடலாகும். நிறைய சத்சங்கங்கள் இருக்கிறது. முக்கியமாக பாரதத்தில் நிறைய சத்சங்கம் இருக்கிறது. பல வழிகள் இருக்கிறது. உண்மையில் அது சத்சங்கம் கிடையாது. சத்சங்கம் ஒன்று தான். அங்கே நீங்கள் யாராவது ஒரு வித்வான், ஆச்சாரியர், பண்டிதர்களின் முகத்தைப் பார்த்தீர்கள் என்றால் புத்தி அந்தப்பக்கம் செல்கிறது. இங்கேயோ விநோதமான விசயம் ஆகும். இந்த சத்கங்கம் இந்த சங்கமயுகத்தில் ஒரு முறை தான் நடக்கிறது. இது முற்றிலும் புதிய விசயம் ஆகும். அந்த எல்லையற்ற தந்தைக்கு சரீரம் எதுவும் இல்லை. நான் உங்களுடைய நிராகார சிவதந்தை எனக் கூறுகின்றார். நீங்கள் மற்ற சத்சங்கங்களில் செல்லும் போது சரீரங்களைத் தான் பார்க்கிறீர்கள். சாஸ்திரங்களை நினைவு செய்து கூறுகிறார்கள். பல்வேறு விதமான சாஸ்திரங்கள் இருக்கிறது. அதை நீங்கள் பல பிறவி களாக கேட்டுக் கொண்டு வந்துள்ளீர்கள். இப்போது இது புதிய விசயம் ஆகும். புத்தியின் மூலமாக ஆத்மா தெரிந்து கொள்கிறது. ஓ என்னுடைய செல்லமான குழந்தைகளே, ஓ என்னுடைய சாலிகிராமங்களே, 5000 வருடங்களுக்கு முன்பு இந்த சரீரத்தின் மூலமாக பாபா படிக்க வைத்தார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள் என பாபா கூறுகின்றார். உங்களுடைய புத்தி ஒரேயடி யாக வெகு தொலைவிற்குச் செல்கிறது. எனவே பாபா வந்திருக்கிறார். பாபா என்ற வார்த்தை எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அவர் தாயும் தந்தையுமாக இருக்கிறார். யாராவது கேட்டார் கள் என்றால் இவர்களின் தாய் தந்தை யார் எனத் தெரியவில்லை என்பார்கள். உண்மையில் அவர் காட்சியளிக்கிறார் என்றாலும் அதிலும் அவர்கள் குழம்புகிறார்கள். சில நேரங்களில் பிரம்மாவையும் சில நேரங்களில் கிருஷ்ணரையும் பார்க்கிறார்கள். பிறகு இவர்கள் யார் என சிந்தித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பல பேருக்கு வீட்டிலிருந்தபடியே பிரம்மாவின் காட்சிகள் கிடைத்திருக்கிறது. இப்போது யாரும் பிரம்மாவின் பூஜை செய்வதில்லை. கிருஷ்ணரின் பூஜை செய்கிறார்கள். பிரம்மாவை யாரும் அறியவே இல்லை. பிரஜா பிதா பிரம்மா இப்போது வந்திருக் கிறார். இவரே பிரஜாபிதா. முழு உலகமும் தூய்மையற்றதாக இருக்கிறது என்றால் நிச்சயம் இவரும் பல பிறவிகளின் கடைசியில் தூய்மை இழந்துவிடுவார்கள் என பாபா புரிய வைக்கிறார். ஒருவரும் தூய்மையானவராக இல்லை. ஆகவே தான் கும்பமேளா நடைபெறும் இடங்களுக்கு, ஹரித்வாரில் கங்கையும் கடலும் கலக்கும் மேளாவிற்கு செல்கிறார்கள். அங்கே சென்று நீராடுவதால் தூய்மையாகி விடுவோம் என நினைக்கிறார்கள். ஆனால் இந்த நதிகள் எதுவும் பதீத பாவனி ஆக முடியாது. கடலில் இருந்து நதிகள் தோன்றுகிறது. உண்மையில் நீங்கள் தான் ஞான கங்கைகள். பெருமைகள் உங்களையே சாரும். ஞான கங்கைகளாகிய நீங்கள் இங்கே அங்கே தோன்றுகிறீர்கள். அவர்களோ அம்பு பாய்ந்தது, அதிலிருந்து கங்கை தோன்றுகிறது எனக் காண்பிக் கிறார்கள். அம்பு எய்தும் விசயமே இல்லை. இந்த ஞான கங்கைகள் ஒவ்வொரு தேசத்திற்கும் செல்கிறது.

நானும் டிராமாவின் பந்தனத்தில் கட்டுப்பட்டு இருக்கிறேன் என சிவபாபா கூறுகின்றார். அனை வரின் நடிப்பும் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சிலர் பகவான் மிகவும் சக்திசாலி. எனவே இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வார் என நினைக்கிறார்கள். இது அனைத்தும் பொய்யா னவைகளாகும். நான் படிக்க வைப் பதற்காக வருகிறேன். மற்றபடி எந்த சக்தியை காண்பிப்பது? காட்சி கொடுப்பதில் கூட மந்திர வித்தை இருக்கிறது. தீவிரமாக பக்தி செய்பவருக்கு நான் காட்சியளிக்கிறேன். காளியின் ரூபத்தைக் காண்பிக்கிறார்கள். அவர் மீது எண்ணையை ஊற்று கிறார்கள். இப்போது இது போன்ற காளி கிடையாது. ஆனால் தீவிரமாக நிறைய பேர் காளி தேவிக்கு பூஜை செய்கிறார்கள். உண்மையில் காளி என்பவர் ஜகதம்பா. காளியின் இந்த ரூபத்தைக் காண்பிப்பதில்லை. ஆனால் தீவிரமாக பக்தி செய்பவருக்கு பாபா பாவனையின் பலனைக் கொடுக்கிறார். காமச்சிதையில் அமர்ந்ததால் கருப்பாகி விட்டார்கள். இப்போது ஞானச் சிதையில் அமர்ந்து வெள்ளையாகிறீர்கள். எந்த காளி இப்போது ஜகதம்பா ஆகிவிட்டாரோ அவர் எப்படி காட்சி கொடுக்க முடியும்? அவர் இப்பொழுது பல பிறவிகள் எடுத்து கடைசியிலும் கடைசி பிறவியில் இருக்கிறார். இப்போது தேவதைகள் இல்லை. ஆகவே இப்போது அவர் என்ன காட்சியைக் காண்பிக்க முடியும்?. இந்த சாட்சாத்காரத்தின் சாவி என்னுடைய கையில் இருக்கிறது என பாபா கூறுகின்றார். அல்பகாலத்திற்காக பாவனைக்கான பலனைக் கொடுப்பதற்காக சாத்சாத் காரம் செய்விக்கிறேன். ஆனால் அவர்கள் யாரும் என்னை சந்திப்பதில்லை. ஒரு காளியின் எடுத்துக்காட்டு கொடுக்கப்படுகிறது. இவ்விதமாக அனுமான், கணேஷ் போன்ற பலர் இருக் கின்றனர். சீக்கியர்கள் கூட குருநானக்கின் தீவிர பக்தி செய்தார்கள் என்றால் அவர்களுக்கும் காட்சி கிடைக்கும். அவர்களோ கீழே செல்கிறார்கள். பாபா குழந்தைகளிடம் இதோ பாருங்கள், இவர்கள் குருநானக்கின் பக்தி செய்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நான் தான் அந்த காட்சியை அளிக்க வைக்கிறேன். அவர் எப்படி காட்சி செய்விக்க முடியும். அவரிடம் காட்சி செய்விக்க சாவி இல்லை. எனக்கு விநாசம் மற்றும் ஸ்தாபனையின் காட்சி கூட அந்த பாபா தான் செய்வித்தார் என இந்த பாபா கூறுகின்றார். ஆனால் சாட்சாத்காரத்தினால் யாருக்கும் நன்மை இல்லை. இவ்வாறு பலருக்கு காட்சி கிடைத்தது. அவர்கள் இன்று இல்லை. எங்களுக்கு இவ்வாறு காட்சிகள் கிடைத்தால் நிச்சயம் ஏற்படும் என பல குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால் காட்சிகள் கிடைப்பதால் நிச்சயம் ஏற்படாது. ஞானம் யோகத்தினால் தான் நிச்சயம் ஏற்படுகிறது. இந்தக் காட்சிகளை நான் தான் கொடுக்கிறேன் என 5000 வருடங்களுக்கு முன்பு கூட நான் கூறியிருந்தேன். மீராவிற்கு கூட காட்சி கிடைத்தது. அதற்காக ஆத்மா அங்கேயே சென்று விட்டது என்று கிடையாது. இல்லை. அமர்ந்தபடியே காட்சிகளைப் பார்க்கிறார்கள். ஆனால் என்னை அடைய முடியவில்லை.

எந்த ஒரு விசயத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் பிராமணியிடம் கேளுங்கள் என பாபா கூறுகின்றார். குழந்தைகள் வரிசைக்கிரமத்தில் இருக்கின்றனார் என அறிகின்றீர்கள். நதிகளும் வரிசைக் கிரமத்தில் இருக்கிறது. சில குளங்கள் இருக்கிறது, மிகவும் அழுக்காக இருக்கிறது. தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. அங்கேயும் மனிதர்கள் சிரத்தையுடன் பாவனையுடன் செல்கிறார்கள். அது பக்தியின் குருட்டு நம்பிக்கையாகும், ஒருபோதும் யாரையும் பக்தியை விட்டுவிட செய்யக் கூடாது. ஞானத்தில் வரும் போது தானாகவே பக்தியை விட்டு விடுவார்கள். பாபா கூட நாராயணரின் பக்தர். இலட்சுமி பணியாளாக நாராயணரின் கால்களை பிடித்து விடும் படத்தைப் பார்த்தார். இது முற்றிலும் நன்றாக இல்லை எனத் தோன்றியது. சத்யுகத்தில் இவ்வாறு இருக்க மாட்டார்கள். எனவே நான் ஒரு கலைஞரிடம் இலட்சுமியை இந்த பணியாளர் நிலையில் இருந்து விடுதைலை கொடுக்கும் படி கூறினேன். பாபா பக்தராக இருந்தார். ஆனால் ஞானம் கிடையாது. அனைவரும் பக்தர் கிடையாது. நாம் பாபாவின் குழந்தைகள், அதிபதிகளாக இருக்கின்றோம். பிரம்மாண்டத்திற்கு அதிபதியாக குழந்தைகளை மாற்றினார். உங்களுக்கு இராஜ்ய பாக்கியத்தை அளிக்கிறேன் எனக் கூறுகின்றார். இப்படிப்பட்ட தந்தையை எப்போதாவது பார்த்தீர்களா. அந்த தந்தையை முழுமையாக நினைக்க வேண்டும். அவரை நீங்கள் இந்தக் கண்களினால் பார்க்க முடியாது. அவரை நினைக்க வேண்டும். நினைவும் ஞானமும் கூட முற்றிலும் எளிதாகும். மரம் மற்றும் விதையைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அந்த நிராகார மரத்திலிருந்து சாகார மரத்திற்கு வந்துள்ளீர்கள். பாபா சாட்சாத்காரத்தின் இரகசியத்தைக் கூட புரிய வைத்துள்ளார். மரத்தின் இரகசியத்தையும் புரிய வைத்துள்ளார். கர்மம், அகர்மம், விகர்மத்தின் விளைவுகளையும் பாபா புரிய வைத்துள்ளார். அப்பா, டீச்சர், குரு மூவரிடமிருந்தும் போதனைகள் கிடைக்கிறது. இப்போது நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சுகமுடையவர்களாக மாறும் அளவிற்கு நான் உங்களுக்கு பாடங்களை கற்றுத் தருகிறேன், கர்மங்களை கற்றுத் தருகிறேன் என பாபா கூறுகின்றார். டீச்சர் சொல்லிக் கொடுப்பார் அல்லவா! குருக்கள் கூட தூய்மையின் பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்கள். மேலும், கதைகளை கூறுகிறார்கள். ஆனால் முற்றிலும் தாரணை இல்லை. கடைசி நினைவிற்கு ஏற்ப நிலை கிடைக்கும் என்று இங்கேயும் பாபா கூறுகின்றார். மனிதர்கள் இறக்கும் பொழுது இராம் இராம் என கூறச் செய்கின்றார்கள். அப்போது புத்தி அந்தப் பக்கம் சென்று விடுகிறது. இப்போது உங்களுடைய தொடர்பு சாகாரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது என பாபா கூறுகின்றார். இப்பொழுது நான் உங்களுக்கு மிகவும் நல்ல கர்மங்களைக் கற்பிக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ணரின் சித்திரத்தைப் பாருங்கள், பழைய உலகத்தை எட்டி உதைக்கின்றார். மேலும் புது உலகத்தில் வருகிறார். நீங்களும் பழைய உலகத்தை எட்டி உதைத்து புதிய உலகத்திற்குப் போகிறீர்கள். எனவே உங்களின் கால் நரகத்தின் பக்கமும் முகம் சொர்க்கத்தின் பக்கமும் இருக்கிறது. சுடுகாட்டிலும் உள்ளே நுழையும் போது பிணத்தின் முகத்தை அந்த பக்கமாக மாற்று கிறார்கள். காலை பின் புறமாக மாற்றுகிறார்கள் இவ்வாறே இந்தப் படமும் உருவாக்கப்பட்டது.

குழந்தைகளாகிய நீங்கள் மம்மா மற்றும் பாபாவைப் பின்பற்ற வேண்டும். அப்போது தான் அவர்களுடைய சிம்மாசனத்தில் அமர முடியும். இராஜாவின் குழந்தைகளை இளவரசன் இளவரசி என்று கூறுகிறார்கள் அல்லவா? நாம் எதிர்காலத்தில் இளவரசன் இளவரசி ஆக முடியும் என்பதை அறிகிறீர்கள். உங்களுக்கு இப்படிப்பட்ட கர்மத்தைக் கற்பிக்கும் தந்தை, ஆசிரியர் மற்றும் குரு யாராவது இருப்பார்களா? நீங்கள் சதா காலத்திற்கு சுகமுடையவர்களாகிறீர்கள். இது சிவபாபாவின் வரம் ஆகும். அவர் ஆசிர்வாதம் செய்கிறார். நம் மீது அவர் கருணை காண்பிக்கிறார் என்பது கிடையாது. சொல்வதால் மட்டும் எதுவும் நடக்காது. நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆசீர்வாதத்தினால் மட்டும் நீங்கள் மாற முடியாது. அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். ஞானம் மற்றும் யோகத்தினை தாரணை செய்ய வேண்டும். வாயில் இராம் இராம் என்று கூறுவது கூட ஒலியை எழுப்புகிறது என பாபா கூறுகிறார். நீங்கள் சத்தத்திலிருந்து விடுபட்டு போக வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். மிகவும் நல்ல நல்ல விளையாட்டுகள் கூட இருக் கிறது. படிக்காதவர்களுக்கு முட்டாள் என கூறப்படுகிறது. இப்போது அனைத்தையும் மறந்து நீங்கள் முற்றிலும் முட்டாள் ஆகிவிடுங்கள் என பாபா கூறுகின்றார். நான் உங்களுக்கு என்ன வழி கூறுகின்றேனோ அதன் படி நடந்து செல்லுங்கள். பரந்தாமத்தில் நீங்கள் அனைத்து ஆத்மாக் களும் உடல் இல்லாமல் இருக்கிறீர்கள். பிறகு இங்கே வந்து சரீரத்தை எடுக்கிறீர்கள். அப்போது ஜீவாத்மா எனக் கூறப்படுகிறது. நான் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுக்கிறேன் என ஆத்மா கூறுகிறது. நான் உங்களுக்கு முதல் தரமான கர்மத்தைக் கற்பிக்கிறேன் என பாபா கூறுகின்றார். டீச்சர் படிக்க வைக்கிறார் என்றால் இதில் சக்தியின் விசயம் என்ன? காட்சிகள் கொடுக்க வைக்கிறார். இதற்கு மந்திர வித்தை என்று கூறப்படுகிறது. மனிதனிலிருந்து தேவதையாக்கக்கூடிய மேஜிக்கை யாரும் செய்ய முடியாது. பாபா வியாபாரியாகவும் இருக்கிறார். பழையதை எடுத்துக் கொண்டு புதியதை கொடுக்கிறார். இவைகளுக்கு பழைய இரும்பு பாத்திரம் என்று கூறப்படுகிறது. இவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. இன்று பாருங்கள் செம்பு பைசா கூட இல்லை. அங்கேயோ தங்க நாணயங்கள் இருக்கும். அதிசயம் அல்லவா! எப்படி இருந்து எப்படி ஆகிவிட்டது.!

நான் உங்களுக்கு முதல் தரமான கர்மங்களைக் கற்பிக்கிறேன் என பாபா கூறுகின்றார். மன்மனாபவ ஆகுங்கள். பிறகு படிப்பு, இதன் மூலம் சொர்க்கத்தின் இளவரசர் ஆவீர்கள். இப்போது தேவதா தர்மம் மறைந்து விட்டது. அது மீண்டும் உருவாகிறது. மனிதர்கள் உங்களின் புது விசயங் களைக் கேட்டு அதிசயப் படுகிறார்கள். கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருந்து எப்படி தூய்மையாக இருக்க முடியும் என கேட்கின்றார்கள். பாபாவோ ஒன்றாக இருங்கள், இல்லை யென்றால் எப்படித் தெரியும் எனக் கூறுகின்றார். இடையில் ஞான வாள் வைக்க வேண்டும். இந்த சக்தியைக் காண்பிக்க வேண்டும். பரீட்சை நடைபெறுகிறது. மனிதர்கள் இந்த விசயங்களைக் கேட்டு அதிசயப்படுகிறார்கள். ஏனென்றால் சாஸ்திரங்களில் இந்த விசயங்கள் இல்லை. ஆனால் இங்கேயோ உழைக்க (முயற்சி செய்ய) வேண்டி இருக்கிறது. கந்தர்வ விவாகத்தின் விசயம் கூட இங்கே தான். இப்போது நீங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்களின் துணிச்சலைக் காண்பியுங்கள் என பாபா கூறுகின்றார். சன்னியாசிகளுக்கு முன்பு நிரூபியுங்கள். சக்திசாலி பாபா தான் முழு உலகத்தையும் தூய்மையாக்குகிறார். ஒன்றாக இருங்கள் ஆனால் விகாரி ஆகாதீர்கள் என பாபா கூறுகிறார். இது அனைத்தும் யுக்திகளாகும் மிகப் பெரிய பிராப்தி இந்த ஒரு பிறவி மட்டும் பாபாவின் அறிவுரைப்படி தூய்மையாக வேண்டும். யோகா மற்றும் ஞானத்தினால் 21 பிறவிகளுக்கு சதா ஆரோக்கியமாகிறீர்கள். இதில் கடின உழைப்பு இருக்கிறது அல்லவா! நீங்கள் சக்தி சேனைகள். மாயாவை வெற்றி அடைந்து உலகத்தையே வெல்கின்றீர்கள். அனைவரும் மாற முடியாது. எந்த குழந்தைகள் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் உயர்ந்த பதவி அடைகிறார்கள். நீங்கள் பாரதத்தை தான் தூய்மையாக்கி பாரதத்தில் தான் இராஜ்யம் செய்கிறீர்கள் போரினால் ஒரு போதும் சிருஷ்டியின் சக்கரவர்த்தி பதவி கிடைக்காது. இது அதிசயம் அல்லவா! இச்சமயம் அனைவரும் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து போகிறார்கள். பாரதத்திற்கு வெண்ணை கிடைக்கிறது. கொடுக்க வைப்பவர்கள் பெண்கள் (வந்தே மாதரம்) பெரும்பாலானவர்கள் தாய்மார்கள். பிறவி பிறவியாக நீங்கள் குருக்களிடம் சென்றீர்கள். சாஸ்திரங்களைப் படித்து வந்தீர்கள் என பாபா கூறுகின்றார். இப்போது சரி என்பது என்ன என நீங்களே தீர்மானியுங்கள் என நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன். சத்யுகம் என்பது உண்மை யான உலகம். மாயை தான் தவறானதாக மாற்றுகிறது. இப்போது பாரத வாசிகள் தார்மீகம் அற்றவர்களாக மாறியிருக்கின்றனர். தர்மமே இல்லை. ஆகவே சக்தியும் இல்லை. தார்மீகம் அற்றவராகவும், சரியான முறையற்றவர் களாகவும், சட்டத்திற்கு எதிரானவர்களாகவும், ஏழை களாகவும் மாறியிருக்கிறார்கள். எல்லையற்ற தந்தையாக இருப்பதால் எல்லையற்ற விசயங் களைப் புரிய வைக்கிறார். உங்களை மதம் தான் மிகவும் சக்திசாலியாக மாற்று கிறது என கூறுகின்றார். சொர்க்கத்தை உருவாக்குவது சக்திசாலியானவருடைய வேலையாகும். ஆனால் குப்தமாக இருக்கிறார். குப்தமான போர் வீரர்கள் இருக்கிறார்கள். பாபாவிற்கு குழந்தைகளிடம் நிறைய அன்பு இருக்கிறது. வழி காண்பிக்கின்றார். தந்தையின் வழி, ஆசிரியரின் வழி, குருவின் வழி, பொற்கொல்லரின் வழி வண்ணாரின் வழி, இதில் அனைத்து வழிகளும் வருகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த ஒரு கடைசிப் பிறவியில் பாபாவின் டைரக்ஷன் படி நடந்து இல்லறத்தில் இருந்து கொண்டே தூய்மையாக இருக்க வேண்டும். இதில் துணிவைக் காண்பிக்க வேண்டும்.

2. ஸ்ரீமத் படி உயர்ந்த கர்மங்களைச் செய்ய வேண்டும். சப்தத்திலிருந்து விடுபட வேண்டும். என்ன படித்தீர்களோ, கேட்டீர்களோ அதை மறந்து பாபாவை நினைக்க வேண்டும்.

வரதானம்:
பரிஸ்திதிகளை நல்வாய்ப்பு எனப் புரிந்து, தனது நிச்சயத்தின் அஸ்திவாரத்தை வலிமையுள்ளதாக ஆக்கக் கூடிய, ஆடாத அசையாதவர் ஆகுக.

எந்த ஒரு பரிஸ்திதி வந்தாலும் நீங்கள் ஹை ஜம்ப் செய்து விடுங்கள். ஏனென்றால் பரிஸ்திதி வருவதும் கூட அதிர்ஷ்டம் தான். இது நிச்சயத்தின் அஸ்திவாரத்தை வலிமையுள்ளதாக ஆக்கு வதற்கான சாதனமாகும். எப்போது நீங்கள் ஒரு தடவை அங்கதனுக்கு சமமாக வலிமையுள்ள வராக ஆகி விடுகிறீர்களோ, அப்போது இந்தப் பேப்பர்களும் நமஸ்காரம் செய்யும். முதலில் பயங்கர ரூபத்தில் வரும். பிறகு தாசி ஆகி விடும். சவால் விடுங்கள் - நாங்கள் மகாவீர். எப்படி தண்ணீர் மீது கோடு போட்டால் நிற்காதோ, அது போல் மாஸ்டர் கடலாக இருப்பவரோடு பரிஸ்திதி போரிட முடியாது. சுய ஸ்திதியில் இருப்பதன் மூலம் ஆடாதவர், அசையாதவராக ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதோடு கூடவே கடுமைத் தன்மைக்கும் விடை கொடுத்து விடுங்கள்.

அவ்யக்த இசரா - ஆன்மிக ராயல்டி மற்றும் தூய்மையின் பர்சனாலிட்டியை தாரணை செய்யுங்கள்

வரதாதா மற்றும் வரதானி இருவரின் சம்பந்தம், சமீபம் மற்றும் சிநேகத்தின் ஆதாரத்தில் நிரந்தர மாக இருக்க வேண்டும் மற்றும் சதா இணைந்த ரூபத்தில் இருப்பீர்களானால் பவித்திரதாவின் குடைநிழல் தானாகவே இருக்கும். எங்கே சர்வசக்திவான் பாபா இருக்கிறாரோ, அங்கே அபவித்திரதா என்பது கனவிலும் கூட வர முடியாது. எப்போது தனிமையில் இருக்கிறீர்களோ, அப்போது பவித்திரதாவின் சுமங்கலித் தன்மை போய்விடும்