07-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களிடையே ஆன்மீக சகோதர-சகோதரர்கள், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரோடு மிகவும் அன்பு இருக்க வேண்டும், நீங்கள் அன்பு நிறைந்த கங்கைகளாக ஆகுங்கள், ஒருபோதும் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது

கேள்வி:
ஆன்மீகக் தந்தைக்கு எந்த குழந்தைகள் மிக-மிக அன்பானவர்களாக இருக் கிறார்கள்?

பதில்:
1. யார் ஸ்ரீமத்படி முழு உலகத்திற்கும் நன்மை செய்து கொண்டிருக்கிறார்களோ, 2. யார் மலர் களாக ஆகியிருக்கிறார்களோ, ஒருபோதும் யாரையும் முள்ளாகத் தைப்பதில்லையோ, தங்களுக்குள் மிக-மிக அன்பாக இருக்கிறார்களோ, ஒருபோதும் கோபித்துக் கொள்வதில்லையோ, அவர்கள் பாபாவிற்கு அன்பானவர்களாக இருக்கிறார்கள். யார் தேக-அபிமானத்தில் வந்து சண்டை யிட்டுக் கொள்கிறார்களோ, உப்பு நீராக இருக்கிறார்களோ, அவர்கள் பாபாவின் மரியாதையை இழக்கச் செய்கிறார்கள். அவர்கள் பாபாவின் நிந்தனை செய்விக்கக் கூடிய நிந்தனையாளர்கள்.

ஓம் சாந்தி.
எப்படி ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை அன்பானவராக இருக்கிறாரோ, அதேபோல் ஆன்மீகத் தந்தைக்கு ஆன்மீகக் குழந்தைகளும் அன்பானவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் ஸ்ரீமத்படி முழு உலகத்திற்கும் நன்மை செய்து கொண்டிருக்கிறார்கள், நன்மை செய்யக் கூடியவர்கள் அனைவரும் அன்பானவர்களாக இருக்கிறார்கள். நீங்களும் கூட தங்களுக் குள் சகோதர-சகோதரர்களாவீர்கள், எனவே நீங்களும் கூட ஒருவர்-மற்றவருக்கு அன்பானவர் களாக இருப்பீர்கள். எந்தளவிற்கு பாபாவிற்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்குமோ அந்தளவிற்கு வெளியில் இருப்பவர்களிடத்தில் அன்பு இருக்காது. உங்களுக்கும் தங்களுக்குள் மிக-மிக அன்பு இருக்க வேண்டும். ஒரு வேளை சகோதர-சகோதரர்கள் இங்கேயே சண்டையிட்டுக் கொள்கிறார்கள், அன்பு செலுத்தவில்லை என்றால் அவர்கள் சகோதரர்கள் இல்லை. நீங்கள் உங்களுக்குள் அன்புடன் இருக்க வேண்டும். பாபாவிற்கும் கூட ஆத்மாக்களிடத்தில் அன்பு இருக்கிறது அல்லவா! எனவே ஆத்மாக்களும் கூட தங்களுக்குள் மிகவும் அன்புடன் இருக்க வேண்டும். சத்யுகத்தில் அனைத்து ஆத்மாக்களும் ஒருவர்- மற்றவருக்கு அன்பானவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் சரீரத்தின் அபிமானம் உடைந்து விடுகிறது. சகோதர- சகோதரர் களாகிய நீங்கள் ஒரு பாபாவின் நினைவின் மூலம் முழு உலகத்திற்கும் நன்மை செய்கின்றீர்கள், தங்களுக்கும் நன்மை செய்கிறீர்கள் எனும்போது சகோதர்களுக்கும் கூட நன்மை செய்ய வேண்டும். ஆகையினால் தான் பாபா தேக-அபிமானமுடையவர்களிலிருந்து ஆத்ம அபிமான முடையவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். அந்த லௌகீக சகோதர-சகோதரர்கள் செல்வத் திற்காக, கணக்கு கேட்டு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இங்கே சண்டையிட்டுக் கொள்வதற்கான விஷயம் இல்லை, ஒவ்வொருவரும் நேரடியாக தொடர்பு வைக்க வேண்டி யுள்ளது. எந்தளவிற்கு தனியாக பாபாவை நினைவு செய்வீர்களோ, அந்தளவிற்கு ஆஸ்தி கிடைக்கும். பாபா பார்ப்பார் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், நீங்கள் என்ன அனாதை களா? என்று பாபா கேட்பார். ஆன்மீக சகோதர- சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒருவேளை சகோதர-சகோதரர்களாக ஆகிவிட்டு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, அன்பாக இல்லை என்றால், இராவணனுடையவர்களாக ஆகி விட்டது போலாகும். அவர்கள் அனைவரும் அசுரக் குழந்தைகளாவர். பிறகு தெய்வீகக் குழந்தைகளுக்கும், அசுரச் குழந்தைகளுக்கும் வித்தியாசமே இல்லை, ஏனென்றால் தேக-அபிமானமுடையவர்களாக ஆகி சண்டையிட்டுக் கொள் கிறார்கள் அல்லவா? ஆத்மா, ஆத்மாவோடு சண்டை யிட்டுக் கொள்வதில்லை, ஆகையினால் பாபா கூறுகின்றார் இனிமையிலும்-இனிமையான குழந்தைகளே, தங்களுக் குள் உப்பு நீராக இருக்கக் கூடாது. ஆகும் போது தான் புரிந்து கொள்ளப்படுகிறது. பிறகு பாபா கூறுவார், இவர் தேக-அபிமானமுடைய குழந்தை, இராவணனுடைய குழந்தை, என்னுடைய குழந்தை இல்லை, ஏனென்றால் தங்களுக்குள் உப்பு நீராக ஆகி இருக்கிறார்கள். நீங்கள் 21 பிறவிகள் இனிமை யானவர்களாக ஆகி இருக்கின்றீர்கள். இந்த சமயத்தில் ஆத்ம-அபிமானிகளாக ஆகி இருக்க வேண்டும். ஒருவேளை தங்களுக்குள் அப்படி இல்லை என்றால் அந்த சமயத்தில் இராவண சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள், என்று புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்குள் உப்புநீராக இருப்பதின் மூலம் பாபாவின் மரியாதையை இழக்கச் செய்கிறீர்கள். ஈஸ்வரிய குழந்தைகள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் அசுர குணம் இருந்தது என்றால், தேக-அபிமான முடையவர்களாவீர்கள். ஆத்ம-அபிமானிகளிடம் ஈஸ்வரிய குணம் இருக்கிறது. இங்கே நீங்கள் ஈஸ்வரிய குணத்தை தாரணை செய்தால் தான் பாபா தன்னுடன் அழைத்துச் செல்வார், பிறகு அதே சம்ஸ்காரம் தான் உடன் வரும். குழந்தைகள் தேக-அபிமானத்தில் வந்து உப்பு நீராக ஆகி இருக்கிறார்கள், என்று பாபாவிற்குத் தெரிகிறது. அவர்கள் ஈஸ்வரியக் குழந்தைகள் என்று சொல்ல முடியாது. எவ்வளவு தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மாயையின் வசமாகி விடுகிறார்கள். தங்களுக்குள் கருத்து வேறுபாட்டில் வந்து விடுகிறார்கள். சொல்லப்போனால் முழு உலகமும் உப்பு நீராகத் தான் இருக்கிறது, ஆனால் ஈஸ்வரிய குழந்தைகளாகிய நீங்களும் உப்புநீராக இருந்தீர்கள் என்றால் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவர்கள் பாபாவிற்கு நிந்தனை செய்விக்கிறார்கள். பாபாவிற்கு நிந்தனை செய்விப்பவர்கள், உப்புநீராகக் கூடியவர்கள் உயர்ந்த இடத்தை அடைய முடியாது. அவர்களை நாஸ்திகர்கள் என்றும் சொல்லலாம். ஆஸ்திகர்களாகக் கூடிய குழந்தைகள் ஒருபோதும் சண்டையிட்டுக் கொள்ள முடியாது. நீங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. அன்போடு இருக்க இங்கே தான் கற்றுக் கொள்ள வேண்டும், அது பிறகு 21 பிறவிகள் தங்களுக்குள் அன்பு இருக்கும். பாபாவின் குழந்தைகள் என்று சொல்லிக் கொண்டு சகோதர-சகோதரர்களாக ஆகவில்லை என்றால் அவர்கள் அசுர குழந்தைகளே ஆவர். பாபா குழந்தைகளுக்குப் புரிய வைப்பதற்காக முரளி நடத்துகின்றார். ஆனால் தேக-அபிமானத்தின் காரணத்தினால், பாபா நமக்காகத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார், என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. மாயை மிகவும் சக்திவாய்ந்தது. எலி எப்படி கடிக்கிறது, என்பது தெரிவதே இல்லை. மாயையும் மிக இனிமையாக ஊதிவிட்டு பிறகு கடித்து விடுகிறது. தெரிவது கூட கிடையாது. தங்களுக்குள் கோபித்துக் கொள்வது போன்றவை களெல்லாம் அசுர சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களின் காரியமாகும். நிறைய கிளை நிலையங்களில் உப்புநீராக மாறி இருக்கின்றார்கள். இப்போது யாரும் சம்பூரணம் ஆகவில்லை, மாயை சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. மாயை அப்படி தலையைத் (புத்தியை) திருப்பி விடுகிறது, அது தெரிவதில்லை. நமக்குள் அன்பு இருக்கிறதா? இல்லையா? என்று தங்களுடைய மனதைக் கேட்க வேண்டும். அன்பு கடலின் குழந்தை என்றால் அன்பினால் நிறைந்த கங்கையாக ஆக வேண்டும். சண்டையிட்டுக் கொள்வது, தலைகீழாகப் பேசுவதை விட பேசாமல் இருப்பதே நல்லது. தீயதை கேட்காதே............. ஒருவேளை யாரிடமாவது கோபத்தின் அம்சம் இருக்கிறது என்றால், அன்பு இருப்பதில்லை. ஆகையினால் பாபா கூறுகின்றார், அசுர நடத்தை மாறவில்லை என்றால் பிறகு முடிவு என்ன வருகிறது? என்ன பதவி அடைவீர்கள்? என்று தினமும் கணக்கு பாருங்கள். பாபா புரிய வைக்கின்றார், எந்த சேவையும் செய்யவில்லை என்றால் பிறகு என்ன நிலை ஏற்படும்? பதவி குறைந்து விடும். அனைவருக்கும் காட்சி ஏற்படத்தான் வேண்டும், உங்களுக்கும் கூட தங்களுடைய படிப்பின் காட்சி ஏற்படுகிறது. காட்சி ஏற்பட்ட பிறகு தான் நீங்கள் மாறுகின்றீர்கள், மாறி நீங்கள் புதிய உலகத்திற்கு வந்து விடுவீர்கள். கடைசியில் அனைத்து காட்சி ஏற்படும், யார்-யார் எந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்? பிறகு கை கால்களை உதைத்துக் கொண்டு அழுவார்கள், தண்டனையும் அனுபவிப்பார்கள், பச்சாதாபப்படுவார்கள் - பாபா சொன்னதைக் கேட்கவில்லையே! எந்த அசுர குணமும் இருக்கக் கூடாது என்று, பாபா அடிக்கடி புரிய வைத்தார். யாரிடம் தெய்வீக குணம் இருக்கிறதோ அவர்கள் அப்படி தங்களுக்குச் சமமாக பிறரை மாற்ற வேண்டும். பாபாவை நினைவு செய்வது மிகவும் எளிதாகும் - அல்ஃப் மற்றும் பே (அல்லா மற்றும் ஆஸ்தி). அல்ஃப் என்றால் பாபா, பே என்றால் இராஜ்ஜியம். எனவே குழந்தைகளுக்கு போதை இருக்க வேண்டும். ஒருவேளை தங்களுக்குள் உப்பு நீராக (கசப்புணர்வுடன்) இருந்தால் பிறகு ஈஸ்வரிய குழந்தை என்று எப்படி புரிந்து கொள்ள முடியும்? பாபா இவர் அசுர குழந்தை என்று புரிந்து கொள்வார், மாயை இவரது மூக்கைப் பிடித்து கொண்டுள்ளது. அவருக்கு தெரிவது கிடையாது, நிலை மேல்-கீழாகிறது, பதவி குறைந்து விடுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்கு அன்போடு கற்றுக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும், அன்பான பார்வை இருக்க வேண்டும். பாபா அன்புக் கடல் எனும்போது குழந்தைகளைக் கூட கவர்கின்றார் அல்லவா? எனவே நீங்களும் கூட அன்புக் கடலாக ஆக வேண்டும்.

பாபா குழந்தைகளுக்கு மிகவும் அன்போடு புரிய வைக்கின்றார், நல்ல வழியைக் காட்டுகின்றார். ஈஸ்வரிய வழி கிடைப்பதின் மூலம் நீங்கள் மலர்களாகிறீர்கள். அனைத்து குணங்களையும் உங்களுக்கு கொடுக்கின்றார். தேவதைகளிடத்தில் அன்பு இருக்கிறது அல்லவா? எனவே அந்த நிலையை நீங்கள் இங்கே உருவாக்க வேண்டும். இந்த சமயத்தில் உங்களுக்கு ஞானம் இருக்கிறது, பிறகு நீங்கள் தேவதைகளாக ஆகி விட்டால் ஞானம் இருக்காது. அங்கே தெய்வீக அன்பு தான் இருக்கிறது. எனவே குழந்தைகள் தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். இப்போது நீங்கள் பூஜைக்குரியவர்களாக ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். இப்போது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். பாபா பாரதத்தில் வருகின்றார், சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் யார். எப்படி, எப்போது வருகின்றார், என்ன செய்கின்றார்? என்பதைத் தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்களும் கூட இப்போது வரிசைக்கிரமான முயற்சியின் படி தெரிந்திருக்கின்றீர்கள், யார் தெரிந்திருக்கவில்லையோ, அவர்கள் யாருக்கும் புரிய வைக்கவும் முடியாது, பிறகு பதவியும் குறைந்து விடும். பள்ளியில் படிப்பவர்களில் சிலருடைய நடத்தை மோசமானதாக இருக்கிறது என்றால் சிலருடைய நடத்தை நல்லதாக இருக்கிறது. சிலர் வந்திருப்பார்கள், சிலர் வராமல் இருப்பார்கள். இங்கே வந்திருப்பவர்கள் எப்போதும் பாபாவை நினைவு செய்கிறார்கள், சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். பாபா கூறுகின்றார், போகும்போதும், வரும்போதும் நீங்கள் தங்களை சுய தரிசன சக்கரதாரி, என்று புரிந்து கொள்ளுங்கள். மறந்து விடுகிறீர்கள் என்றால் வராமல் இருந்து விடுகிறீர்கள், எப்போதும் வந்து கொண்டிருந்தால் தான் உயர்ந்த பதவி அடைவீர்கள், மறந்து விட்டால் குறைந்த பதவி அடைவீர்கள். இன்னும் நேரம் இருக்கிறது என்று பாபாவிற்குத் தெரியும். உயர்ந்த பதவி அடையக்கூடியவர்களின் புத்தியில் இந்த சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கும். சிவபாபாவின் நினைவு இருக்க வேண்டும், வாயில் ஞான அமிர்தம் இருக்க வேண்டும் அப்போது உயிர் பிரிய வேண்டும், என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை எந்த பொருளின் மீதாவது அன்பு இருக்குமானால் கடைசி காலத்தில் அது நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும். சாப்பிடும் ஆசை இருந்தால் இறக்கும் நேரத்தில், இந்த பொருளை சாப்பிட வேண்டும், என்று அந்த பொருள் தான் நினைவிற்கு வந்து கொண்டிருக்கும். பிறகு பதவி குறைந்து விடும். சுயதரிசன சக்கரதாரி யாகி இறந்து போங்கள், வேறு எதுவும் நினைவில் வரக்கூடாது, என்று பாபா கூறுகின்றார். எப்படி எந்த சம்பந்தமும் இல்லாமல் ஆத்மா வந்ததோ, அப்படி செல்ல வேண்டும். பேராசையும் ஒன்றும் குறைந்தது கிடையாது. பொருட்களின் மீது பற்று இருக்கிறது என்றால் கடைசி நேரத்தில் அது தான் நினைவிற்கு வந்து கொண்டிருக்கும், கிடைக்கவில்லை என்றால், அந்த ஆசையிலேயே இறந்து விடுவார்கள். ஆகையினால் குழந்தைகளாகிய உங்களுக்கு பொருட்களின் மீது பற்று போன்றவை கூட இருக்கக் கூடாது. பாபா நிறைய புரிய வைக்கின்றார், ஆனால் புரிந்து கொள்பவர்கள் சிலர் புரிந்து கொள்கிறார்கள். பாபாவின் நினைவை ஒரேயடியாக இதயத்தில் நிறைத்துக் கொள்ளுங்கள்-- பாபா, ஆஹா பாபா! பாபா-பாபா என்று வாயினால் சொல்லக் கூட வேண்டியதில்லை. இடைவிடாத நினைவு இருந்து கொண்டே இருக்க வேண்டும். பாபாவின் நினைவில், கர்மாதீத் நிலையில் இந்த சரீரத்தை விட வேண்டும் அப்போது தான் உயந்த பதவியை அடைய முடியும். நல்லது!

"இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்-தந்தையுமான பாப்-தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்"

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அன்பினால் நிறைந்த கங்கையாக ஆக வேண்டும். அனைவர் மீதும் அன்பான பார்வை வைக்க வேண்டும். ஒருபோதும் வாயினால் தலைகீழான (தவறான) வார்த்தைகள் பேசக்கூடாது.

2. எந்தப் பொருள் மீதும் பற்று வைக்கக் கூடாது. சுயதரிசன சக்கரதாரியாக ஆகி இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் எந்தப் பொருளும் நினைவில் வராமல் இருக்க பயிற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
பழைய தேகம் மற்றும் உலகின் அனைத்து கவர்ச்சிகளிலிருந்து எளிதாக மற்றும் சதா தூர விலகியிருக்கக் கூடிய இராஜரிஷி ஆகுக.

இராஜரிஷி என்றால் ஒருபுறம் அனைத்து பிராப்திக்கான அதிகாரத்தின் போதை, மறுபுறம் எல்லையற்ற வைராக்கிய அலௌகீக போதை. நிகழ்காலத்தில் இந்த இரு பயிற்சிகளையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். வைராக்கியம் என்றால் விலகியிருப்பது அல்ல, அனைத்து பிராப்திகள் இருந்தாலும் கூட எல்லைக்குட்பட்ட கவர்ச்சியானது மனம், புத்தியை கவர்ச்சியில் கொண்டு வராமல் இருப்பதாகும். சங்கல்பத்திலும் அடிமைத்தனம் இருக்கக் கூடாது. இதைத் தான் இராஜரிஷி அதாவது எல்லையற்ற வைராக்கியம் என்று கூறப்படுகிறது. இந்த பழைய தேகம் மற்றும் தேகத்தின் பழைய உலகம், ஸ்தூல உணர்வு, பொருட்கள் போன்ற அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் சதா மற்றும் எளிதாக தூர விலகியிருப்பதாகும்.

சுலோகன்:
விஞ்ஞான சாதனங்களை பயன்படுத்துங்கள், ஆனால் தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

மாதேஸ்வரியின் இனிய மகாவாக்கியம்

இந்த சங்கமயுகத்தில் நடைமுறையில் மகாபாரதம் திரும்பவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருஷேத்திரத்தில் யுத்தம் நடைபெற்றதாக மனிதர்கள் கூறுகின்றனர். மேலும் பாண்டவர்களுக்குத் துணையாக, வழிகாட்டியாக ஸ்ரீகிருஷ்ணர் இருந்த தாகவும் கூறுகின்றனர். ஆக எங்கு இயற்கையின் நாயகன் இருக்கிறாரோ அங்கு அவசியம் வெற்றி கிடைக்கும். அனைத்து விசயங்களையும் கலப்படம் செய்து விட்டனர். இயற்கையின் நாயகன் கிருஷ்ணர் கிடையாது என்ற விசயத்தை முத-ல் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை யின் நாயகன் பரம் ஆத்மா ஆவார், கிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் தேவதை ஆவார், அவரை பகவான் என்று கூற முடியாது. ஆக பாண்டவர்களுக்கு சாரதியாக பரமாத்மா இருந்தாரே தவிர ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. இப்போது பரமாத்மா குழந்தைகளாகிய நமக்கு ஒருபோதும் இம்சைக்கான யுத்தம் கற்றுக் கொடுக்க முடியாது, பாண்டவர்களும் இம்சைக்கான யுத்தம் செய்து சுய இராஜ்யத்தை அடைந்தனர். இந்த உலகம் கர்மஷேத்திரமாகும், இதில் மனிதர்கள் எப்படிப்பட்ட காரியங்களை செய்து விதை விதைக்கிறார்களோ அதற்கான நல்ல, கெட்ட பலன்களை அடை கின்றனர். இந்த கர்மஷேத்திரத்தில் பாண்டவர்கள் அதாவது பாரதத் தாய் சக்தியின் அவதாரங்களும் இருக்கின்றனர். பரமாத்மா வருவதும் பாரத கண்டத்தில் தான், அதனால் தான் பாரத கண்டம் அழிவற்றது என்று கூறப்படுகிறது. பரமாத்மாவின் அவதாரம் குறிப்பாக பாரத கண்டத்தில் ஏற்பட்டிருக்கிறது, ஏனெனில் அதர்மம் அதிகரித்ததும் பாரத கண்டத்திலிருந்து தான். இங்கேயே பரமாத்மா யோக பலத்தின் மூலம் கௌரவ இராஜ்யத்தை அழித்து பாண்டவர்களின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார். ஆக பரமாத்மா வந்து தர்மத்தை ஸ்தாபனை செய்திருக் கின்றார், ஆனால் பாரதவாசிகள் தங்களது உயர்ந்த தூய தர்மம் மற்றும் உயர்ந்த காரியத்தை மறந்து தங்களை இந்து என்று கூறிக் கொள்கின்றனர். பாவம்! தங்களது தர்மத்தை அறியாமல் மற்ற தர்மங்களில் இணைந்து கொண்டனர். ஆக எந்த எல்லையற்ற ஞானத்தை எல்லையற்ற எஜமான் சுயம் கூறுகின்றார். இவர்கள் தங்களது சுய தர்மத்தை மறந்து எல்லைக்குட்பட்டதில் மாட்டிக் கொண்டனர், இதையே தர்ம நிந்தனை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவையனைத்தும் இயற்கையின் தர்மங்களாகும், ஆனால் முதலில் தேவைப்படுவது சுயதர்மம். அதாவது ஒவ்வொருவரின் சுயதர்மம் - நான் ஆத்மா, அமைதி சொரூபமானவன், பிறகு தங்களது இயற்கை யின் தர்மம் தேவதா தர்மமாகும், 33 கோடி பாரதவாசி தேவதைகள் ஆவர். அதனால் தான் பரமாத்மா கூறுகின்றார் - தங்களது அநேக தேக தர்மங்களை தியாகம் செய்யுங்கள், இந்த எல்லைக்குட்பட்ட தர்மங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே இப்போது இந்த எல்லைக்குப்பட்ட தர்மங்களிலிருந்து விடுபட்டு எல்லையற்றதில் செல்ல வேண்டும். அந்த எல்லையற்ற தந்தையாகிய சர்வசக்திவான் பரமாத்மாவிடம் யோகா வைத்துக் கொள்ளுங்கள். ஆகையால் சர்வசக்திவான் இயற்கையின் நாயகன் பரமாத்மாவேயன்றி கிருஷ்ணர் அல்ல. ஆக கல்பத்திற்கு முன்பு போன்று சாட்சாத் இயற்கையின் நாயகன் பரமாத்மாவிற்கு வெற்றி என்பது பாடப்பட்டிருக்கிறது. நல்லது.