08-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நினைவினால் தான் பாவகர்மங்கள் வினாசம் ஆகின்றது. டிரான்ஸினால் (Trance - தியானத்தில் சென்று காட்சி பார்ப்பது) கிடையாது, டிரான்ஸில் செல்வது ஒரு மதிப்பற்ற பைசாவிற்கான விளையாட்டாக இருக்கிறது. ஆகையால், டிரான்ஸில் செல்வதற்கான ஆசை வைக்க வேண்டாம்.

கேள்வி:
மாயாவினுடைய விதவிதமான ரூபங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அனைத்து குழந்தைகளுக்கு பாபா எந்த ஒரு எச்சரிக்கையை கொடுக்கிறார்?

பதில்:
இனிமையான குழந்தைகளே! தியானத்தில் போவதற்கான ஆசை வைக்காதீர்கள். ஞான, யோகத்திற்கு டிரான்ஸினுடைய எந்த தொடர்பும் கிடையாது. படிப்பு தான் முக்கியமானதாக இருக்கிறது. சிலர் டிரான்ஸில் சென்று விட்டு சொல்கிறார்கள் எங்களுக்குள் மம்மா வந்து விட்டார், பாபா வந்து விட்டார் என்று. இது எல்லாம் சூட்சும மாயாவினுடைய எண்ணமாக இருக்கிறது. இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயா பெரும்பாலான குழந்தை களிடம் பிரவேசமாகி தலைகீழான காரியத்தை செய்ய வைக்கிறது. ஆகையால், டிரான்ஸினுடைய ஆசை இருக்கக்கூடாது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இதைப் புரிந்து கொண்டிருக் கின்றனர். ஒரு பக்கம் பக்தியாக இருக்கின்றது; மற்றொரு பக்கம் ஞானமாக இருக்கின்றது. பக்தி அளவிட முடியாததாக இருக்கிறது மற்றும் கற்றுக் கொடுப்பவர்களும் அநேக பேர் இருக்கின்றனர். சாஸ்திரங்களும் கற்றுக் கொடுக் கின்றனர், மனிதர்களும் கற்றுக் கொடுக்கின்றனர். இங்கு எந்த சாஸ்திரமும் கிடையாது. எந்த மனிதரும் கிடையாது. இங்கே கற்றுக் கெடுக்கக்கூடியவர் ஒரே ஒரு ஆன்மீகத் தந்தை தான். அவர் தான் ஆத்மாக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். ஆத்மா தான் தாரணை செய்கிறது. பரம்பிதா பரமாத்மாவிற்குள் இந்த முழு ஞானமும் இருக்கிறது, 84 பிறவி சக்கரத்தினுடைய ஞானம் இவருக்குள் இருக்கிறது. ஆகையால், அவரை சுயதரிசன சக்கரதாரி என்று சொல்ல முடியும். குழந்தைகளாகிய நம்மை கூட அவர் சுயதரிசன சக்கரதாரி யாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்;. பாபா பிரம்மாவின் உடலில் இருக்கிறார். ஆகையால், அவரையும் பிராமணன் என்று சொல்ல முடியும். நாம் அவருடைய குழந்தைகள். பிராமணரி லிருந்து தேவதையாக ஆகின்றோம். இப்போது பாபா வந்து நினைவு யாத்திரையை கற்றுக் கொடுக்கின்றார். இதில் ஹடயோகத்திற்கான விசயம் எதுவும் இல்லை. உலகத்தில் இருப்பவர்கள் ஹடயோகத்தினால் தியானத்திலெல்லாம் செல்கின்றனர். இது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. டிரான்ஸை மிகைப்படுத்த வேண்டியதில்லை. நாங்கள் டிரான்ஸில் செல்கின்றோம் என்று நீங்கள் ஒருபோதும் யாருக்கும் சொல்லக்கூடாது. ஏனென்றால், இன்றைய காலத்தில் வெளி நாடுகளில் அங்கு இங்கு என்று நிறைய பேர் டிரான்ஸில் செல்கின்றனர். டிரான்ஸில் செல்வதினால் உங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது, அவர்களுக்கும் எந்த நன்மை கிடையாது. பாபா அறிவைக் கொடுக்கிறார். டிரான்ஸ் என்பது நினைவு யாத்திரையும் கிடையாது, ஞானமும் கிடையாது. தியானத்தில் அதாவது டிரான்ஸில் செல்லக்கூடியவர்கள் ஒரு போதும் எந்த ஞானமும் கேட்க மாட்டார்கள், பாவமும் அழியாது. டிரான்ஸிற்கு மகத்துவம் எதுவும் கிடையாது. குழந்தைகள் யோகத்தில் ஈடுபடுகின்றனர். அதை டிரான்ஸ் என்று சொல்ல முடியாது. நினைவினால் தான் பாவ கர்மங்கள் வினாசம் ஆகும். டிரான்ஸினால் பாவகர்மங்கள் அழியாது பாபா எச்சரிக்கை செய்கிறார், குழந்தைகளே! டிரான்ஸில் செல்வதற்கான ஆர்வம் வைக்காதீர்கள்.

இந்த சந்நியாசிகளுக்கெல்லாம் ஞானம் எப்பொழுது கிடைக்கிறதோ அப்போது வினாசத்தினுடைய சமயம் ஏற்படுகிறது என்று நீங்கள் தெரிந்து இருக்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு அந்த மாதிரி அழைப்புக் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், இந்த ஞானம் அவர்களுடைய புத்தியில் சீக்கிரத்தில் வராது. எப்பொழுது வினாசத்தை எதிரில் பார்க்கின்றார்களோ அப்பொழுது வருவார்கள். இப்பொழுது மரணம் வந்து விட்டது என்பதை எப்போது அருகாமையில் பார்க் கின்றார்களோ அப்பொழுது ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுடைய பாகம் கடைசியில் தான் இருக்கிறது. இப்பொழுது வினாசம் வந்து விட்டது. மரணம் வந்து விட்டது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இவர்கள் பொய் சொல்கின்றனர் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

உங்களுடைய மரம் மெதுமெதுவாகப் பெரியதாகிறது. பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று சந்நியாசிகளுக்கு சொல்ல வேண்டும். இதை பாபா புரிய வைக்கிறார். உங்களுடைய கண்களை மூடக்கூடாது. கண்களை மூடிக் கொண்டீர்கள் என்றால் பாபாவை எப்படி பார்க்க முடியும்? நாம் ஆத்மாக்கள், பரம்பிதா பரமாத்மாவிற்கு எதிரில் அமர்ந்திருக்கின்றோம். அவரைப் பார்க்க முடியாது. ஆனால், இந்த ஞானம் புத்தியில் இருக்கிறது. பரம்பிதா பரமாத்மா நமக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் - இந்த உடலினுடைய ஆதாரத்தினால் என்று குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தியானத்தில் செல்வது போன்ற எந்த விசயமும் இல்லை. தியானத்தில் செல்வது பெரிய விசயம் ஒன்றும் இல்லை. இந்த போக் எல்லாம் கூட டிராமாவில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வேலைக்காரராகி போக் எல்லாம் எடுத்துக் கொண்டு வருவீர்கள். எப்படி வேலைக்காரர்கள் பெரிய மனிதர்களுக்கு உணவளிக்கின்றனர். நீங்கள் கூட வேலைக்காரர்களாக இருக்கின்றீர்கள், தேவதைகளுக்கு போக் எடுத்துச் சென்று கொண்டிருக் கின்றீர்கள். அவர்கள் பரிஸ்தாக்களாக இருக்கின்றனர். அங்கே மம்மா, பாபாவைப் பார்க்கின்றனர். அந்த சம்பூர்ண மூர்த்தி கூட லட்சியமும், குறிக்கோளாக இருக்கிறது. அவர்களை அந்த மாதிரி பரிஸ்தாவாக யார் உருவாக்கியது? மற்றபடி டிரான்ஸில் செல்வது பெரிய விசயம் கிடையாது. இங்கே சிவபாபா எப்படி படிப்பு சொல்லிக் கொடுக்கிறாரோ அப்படி அங்கே கூட சிவபாபா இவர் மூலமாக சிலவற்றைப் புரிய வைப்பார். சூட்சும வதனத்தில் என்ன நடக்கிறது, இதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி டிரான்ஸ் முதலானவற்றிற்கு எந்த விதமான மகத்துவமும் கொடுக்க வேண்டாம். யாருக்காவது டிரான்ஸ் காட்டுவது - இது கூட குழந்தைத்தனமாக இருக்கிறது. பாபா அனைவருக்கும் எச்சரிக்கை செய்கின்றார் - டிரான்ஸில் செல்லக்கூடாது, இதில் கூட பல முறை மாயா பிரவேசம் ஆகிவிடுகின்றது.

இது படிப்பு, கல்ப கல்பமாக பாபா வந்து உங்களுக்குப் படிப்பிக்கிறார். இப்போது சங்கமயுகம், நீங்கள் டிரான்ஸ்ஃபர் ஆக வேண்டும். டிராமா பிளான் படி நீங்கள் நடிப்பு நடித்துக் கொண்டுள்ளீர்கள். நடிப்பிற்கு மகிமை உள்ளது. பாபா வந்து படிப்பிக்கிறார் டிராமா படி. நீங்கள் பாபா மூலமாக ஒரு முறை படித்து விட்டு மனிதனிலிருந்து தேவதையாக அவசியம் மாற வேண்டும். இதில் குழந்தைகளுக்கு சந்தோஷம் உள்ளது. நாம் பாபாவையும் மற்றும் படைப்பின் ஆதி, மத்திய, அந்திமத்தையும் (கடைசி) தெரிந்து கொண்டோம். பாபாவின் படிப்பை அடைந்து மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள்; புதிய உலகத்திற்காகப் படிக்கிறீர்கள். அங்கு தேவதை களுடைய இராஜ்ஜியத்திற்காக அவசியம் புருஷோத்தம சங்கமயுகத்தில் படிக்க வேண்டும். நீங்கள் இந்த துக்கத்திலிருந்து விடுபட்டு சுகத்திற்குச் செல்கிறீர்கள். இங்கு தமோபிரதானமாக இருப்பதன் காரணமாக நோய் உங்களுக்கு வருகிறது. இந்த நோய்கள் எல்லாம் அகல வேண்டும். முக்கிய மானதாக படிப்பு இருக்கிறது, இதில் டிரான்ஸ் போன்றவற்றிற்கு தொடர்பு இல்லை. இது பெரிய விசயம் அல்ல. பல இடங்களில் டிரான்ஸில் செல்கிறார்கள், பிறகு சொல்கிறார்கள்-மம்மா வந்தார்கள், பாபா வந்தார்கள் என்று. பாபா சொல்கிறார்;, இது ஒன்றும் இல்லை. பாபா ஒரு விசயத்தைப் புரியவைக்கிறார். நீங்கள் அரை கல்பமாக தேக அபிமானியாக ஆகிவிட்டீர்கள், இப்பொழுது ஆத்மா அபிமானியாகி பாபாவை நினைவு செய்தால் விகர்மம் வினாசம் ஆகும், இதற்கு நினைவு யாத்திரை என்று சொல்லப்படுகின்றது. யோகா என்று சொல்லுவதன் மூலம், யாத்திரை என்று நிரூபணம் ஆகாது. ஆத்மாக்கள் நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும். தமோபிர தான நிலையில் இருந்து சதோபிரதானம் ஆக வேண்டும். நீங்கள் இப்பொழுது யாத்திரை செய்து கொண்டுள்ளீர்கள். மற்றவர்களுடைய யோகத்தில் யாத்திரையின் விஷயம் இல்லை. ஹடயோகம் அதிகமாக உள்ளது. அது ஹடயோகம். இது பாபாவை நினைவு செய்வதாகும். பாபா கூறுகின்றார் இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! தன்னை ஆத்மா என்று உணருங்கள். இவ்வாறு வேறு யாரும் ஒருபொழுதும் புரிய வைக்க மாட்டார்கள். இங்கே உள்ளதோ படிப்பு, பாபாவின் குழந்தையாக மாறினோம் பிறகு பாபா மூலம் படிக்கவும் வேண்டும் மற்றும் படிப்பிக்கவும் வேண்டும். பாபா கூறுகிறார் நீங்கள் அருங்காட்சியகம் (மியூசியம்) தொடங்குங்கள். தானாகவே உங்களிடம் வருவார்கள். அழைப்பதற்கு கஷ்டம் இருக்காது. இந்த ஞானம் மிகவும் நன்றாக உள்ளது, ஒருபொழுதும் கேட்டதில்லை என்று கூறுவார்கள், இதில் கேரக்டர் (குணம்) மாறுகிறது. முக்கியமானது தூய்மை, இதில் தான் தொல்லைகள் எல்லாம் ஏற்படுகிறது. அதிக பேர் தோல்வியும் அடைகிறார்கள். உங்களுடைய நிலை இவ்வாறு இருக்க வேண்டும், இந்த உலகத்தை பார்த்தாலும் பார்க்காதவாறு, சாப்பிட்டாலும், குடித்தாலும் உங்களுடைய புத்தி அந்தப் பக்கமாக இருக்க வேண்டும். எவ்வாறு தந்தை புதிய வீடு கட்டினார் என்றால் அனைவருடைய புத்தியும் புதிய வீட்டின் மேல் செல்லும் இல்லையா! இப்பொழுது புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக் கின்றது. எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கின்றார். உங்களுக்கு தெரியும், நாம் சொர்க்க வாசியாக மாறுவதற்காக முயற்சி செய்து கொண்டு வருகின்றோம். இப்பொழுது சக்கரம் முழுமையடைகிறது. இப்பொழுது நாம் வீடு மற்றும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும், அதற்காக அவசியம் தூய்மையாக மாறவேண்டும். நினைவு யாத்திரையின் மூலம் தூய்மையாக முடியும். நினைவில் தான் தடை ஏற்படுகிறது. இதில் தான் உங்களுடைய யுத்தம் உள்ளது. படிப்பில் எந்த ஒரு சண்டைக்கான விசயமும் இல்லை. படிப்பு முற்றிலும் எளிமை யானது. 84 பிறவி சக்கரத்தின் ஞானம் மிகவும் சகஜமானது, மற்றபடி தன்னை ஆத்மா என்று உணர்ந்து பாபாவை நினைவு செய்வது, இதில் உழைப்பு உள்ளது. பாபா கூறுகின்றார் நினைவு யாத்திரையை மறக்காதீர்கள். குறைந்த பட்சம் 8 மணி நேரம் அவசியம் நினைவு செய்யுங்கள். சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்ய வேண்டும், தூக்கமும் அவசியம் தான். சகஜமார்க்கமாக உள்ளது இல்லையா! தூக்கம் கூடாது என்று கூறினால் ஹடயோகம் ஆகிவிடும். ஹடயோகிகள் அதிக பேர் உள்ளனர். பாபா சொல்கிறார் அந்தப் பக்கமாக எதையும் பார்க்காதீர்கள் அதன் மூலம் எந்த பலனும் இல்லை. எத்தனை விதமாக ஹடயோகத்தை சொல்லித்தருகிறார்கள், இவை யனைத்தும் மனித வழி. நீங்கள் ஆத்மாக்கள், ஆத்மா தான் சரீரத்தை எடுத்து நடிப்பு நடிக்கிறது, டாக்டராக மாறுகிறது. ஆனால், மனிதர்கள் தேக அபிமானியாக உள்ளார்கள் - நான் இன்னாராக இருக்கிறேன்.

நான் ஆத்மா என்பது இப்பொழுது உங்களின் புத்தியில் உள்ளது, பாபாவும் ஆத்மா தான். இந்த நேரத்தில் ஆத்மாக்களுக்கு பரமபிதா பரமாத்மா படிப்பிக்கிறார். ஆகையால், மகிமை உள்ளது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் அதிக காலமாக தனியாக இருந்தது... கல்ப கல்பமாக சந்திக்கிறது. மற்றபடி இந்த முழு உலகமும் தேக அபிமானத்தில் வந்து, தேகம் என்று புரிந்து கொண்டு படிக்கிறார்கள், படிப்பிக்கிறார்கள். பாபா சொல்கிறார், நான் ஆத்மாக்களுக்கு படிப்பிக்கிறேன். நீதிபதி, வக்கீல் இது போன்று ஆத்மா தான் மாறுகிறது. ஆத்மாக்கள் நீங்கள் சதோபிரதானமான தூய்மையாக இருந்தீர்கள். பிறகு நீங்கள் பாகத்தை நடித்து நடித்து பதீதமான போது (!தூய்மையை இழந்த போது) தான் பாபாவை அழைக்கிறீர்கள், பாபா வந்து எங்களை தூய்மையான ஆத்மாவாக மாற்றுங்கள். பாபா தான் தூய்மையாக இருக்கிறார். இந்த விசயத்தை எப்பொழுது கேட்கிறீர்களோ அப்போது தான் நடைமுறைப்படுத்துவீர்கள். குழந்தைகள் தாரணை செய்கிறீர்கள், தேவதையாக மாறுகிறீர்கள். இது வேறு யாருடைய புத்தியிலும் இருப்பதில்லை. ஏனென்றால், இது புதிய விஷயமாக இருக்கிறது. இது ஞானமாக உள்ளது, அது பக்தியாக உள்ளது. நீங்கள் கூட பக்தி செய்து செய்து தேக அபிமானியாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது பாபா சொல்கிறார், குழந்தைகளே ஆத்ம அபிமானியாகுங்கள். ஆத்மாக்களுக்கு பாபா இந்த சரீரம் மூலமாகப் படிப்பிக்கிறார். அடிக்கடி நினைவில் வையுங்கள், இந்த ஒரு சமயத்தில் தான் ஆத்மாக்களுக்கு தந்தை பரமபிதா படிப்பிக்கிறார். மற்றபடி முழு டிராமாவிலும் ஒரு பொழுதும் பார்ட் இல்லை. இந்த சங்கம யுகத்தைத் தவிர. ஆகையால், பாபா மீண்டும் கூறுகிறார், இனிமையிலும் இனிமையான குழந்தை களே தன்னை ஆத்மா என்று நிச்சயப்படுத்துங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். இது பெரிய உயர்வான யாத்திரையாகும். ஏறினால் வைகுண்டத்தின் போதையை அனுபவம் செய்யலாம். விகாரத்தில் விழுவதன் மூலம் ஒரே அடியாக தூள் தூளாகிவிடுகிறார்கள். இருந்தாலும் சொர்க்கத்தில் வருகிறார்கள். ஆனால், பதவி மிகவும் குறைவாகி விடும். இந்த இராஜ்யம் ஸ்தாபனையாகிக் கொண்டுள்ளது. இதில் குறைந்த பதவி உடையவர்களும் வேண்டும். அனைவராலும் ஞானத்தில் நடக்க முடியாது. இருந்தாலும் பாபாவை அதிகமான குழந்தைகள் சந்திக்கவும் வேண்டும். சந்திப்பதும் கூட கொஞ்ச நேரத்திற்காக. தாய்மார்களுக்கு மிகவும் புகழ் உள்ளது. வந்தே மாதரம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஜெகதாம்பாவிற்கு எவ்வளவு பெரிய மேளா நடக்கிறது! ஏனென்றால், அதிகமாக சேவை செய்துள்ளார்கள். யார் அதிகமாக சேவை செய்கிறார் களோ, அவர்கள் பெரிய இராஜா ஆவார்கள். தில்வாடா கோவிலில் உங்களின் நினைவுச் சின்னம் உள்ளது. குழந்தைகள் அதிகமாக நேரத்தை ஒதுக்க வேண்டும். நீங்கள் உணவு சமைக்கும் போது கூட மிகவும் தூய்மையான உணவை நினைவிலிருந்து செய்ய வேண்டும். அதை யார் சாப்பிடு கிறார்களோ அவர்களுடைய இருதயம் தூய்மை நிலையை அடைகிறது. அந்த மாதிரி மிகவும் குறைவானவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு அந்த மாதிரி உணவு கிடைக்கிறது. தனக்குத் தானே கேட்டுக் கொள்ளுங்கள் நான் சிவபாபாவின் நினைவிலிருந்து போஜனம் செய்கிறேனா? அதை சாப்பிடுபவர்களுடைய இதயம் உருக வேண்டும். அடிக்கடி நினைவு மறந்துவிடுகிறது. பாபா சொல்கிறார், மறப்பது கூட டிராமாவில் பதிவாகியுள்ளது. ஏனென்றால், நீங்கள் 16 கலைகள் நிரம்பியவர்களாக இப்பொழுது இல்லை. சம்பூரண நிலையை அடைவது அவசியம். பௌர்ணமி நிலவில் (முழு நிலா) எவ்வளவு பொலிவு உள்ளது! பிறகு குறைந்து குறைந்து கடைசியில் கோடாகி விடுகிறது, காரிருளாக மாறுகிறது, பிறகு முழு வெளிச்சம். இந்த விகாரங்களை விட்டு விட்டு பாபாவை நினைவு செய்து கொண்டேயிருந்தால் உங்களுடைய ஆத்மா சம்பூர்ண நிலையை அடைந்து விடும். நீங்கள் மகாராஜா ஆகுவதற்கு விரும்புகிறீர்கள் ஆனால், அனைவரும் ஆகமுடியாது. முயற்சி அனைவரும் செய்ய வேண்டும். சிலர் எந்த முயற்சியும் செய்வதில்லை. ஆகையால், மகாரதிகள், குதிரைப்படையினர், காலாட்படையினர் என்று சொல்லப்படுகிறது. மகாரதிகள் குறைவாகவே உள்ளனர், பிரஜைகள் மற்றும் படை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு கமாண்டர்ஸ் மற்றும் மேஜர்ஸ் இருப்பதில்லை. உங்களிலும் கூட கமாண்டர்ஸ், மேஜர்ஸ், கேப்டன் இருக்கிறார்கள்; காலாட்படையினரும் உள்ளனர். உங்களுடையதும் ஆன்மீகப் படை அல்லவா! முழு உழைப்பும் நினைவு யாத்திரையில் இருக்கிறது. அதன் மூலம் தான் பலம் கிடைக் கிறது. நீங்கள் மறைமுகமான போர்வீரர்கள். பாபாவின் நினைவு மூலம் விகர்மங்களின் என்னென்ன குப்பைகள் உள்ளதோ அது பஸ்பமாகிவிடும். பாபா சொல்கிறார், காரியங்கள் செய்யுங்கள் பாபாவையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் பல பிறவிகளுக்கான பிரியதரிசினிகளாக உள்ளீர்கள் ஒரு பிரியதரிசனுக்கு. இப்போது அந்த பிரியதரிசன் கிடைத்துள்ளார், அவரை நினைவு செய்ய வேண்டும். முதலில் நினைவு செய்திருந்தோம் விகர்மம் வினாசம் ஆகவில்லை அல்லவா! பாபா கூறியிருக்கிறார், நீங்கள் இந்த தமோபிரதான நிலையில் இருந்து சதோபிரதானமாக வேண்டும். ஆத்மா தான் ஆக வேண்டும். ஆத்மா தான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. ஜென்ம ஜென்மத்தினுடைய அழுக்கை நீக்க வேண்டும். இது மரண உலகத்தின் கடைசி ஜென்மம், அமர உலகத்திற்குப் பிறகு செல்ல வேண்டும். ஆத்மா தூய்மையாகாமல் செல்ல முடியாது. கணக்கு வழக்கு அனைத்தையும் முடித்து செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாமல் தண்டனை அடைந்து சென்றால் பதவி குறைந்து விடும். யார் தண்டனை அடையவில்லையோ அவர்கள் 8 மணி மாலைக்குரியவர்கள் என்று சொல்லப்படுகிறது.9 இரத்தினங்களால் ஆன மோதிரம் போன்றவைகள் உருவாக்குகிறார்கள், அதைப்போல் ஆக வேண்டும் என்றால் பாபாவை நினைவு செய்வதில் மிகவும் உழைக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சங்கமயுகத்தில் தன்னை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும், படிப்பு மற்றும் தூய்மையின் தாரணை மூலம் தன்னுடைய கேரக்டரை (குணங்களை) மாற்ற வேண்டும். டிரான்ஸில் செல்வதற்கான விருப்பம் வைக்க வேண்டாம்.

2. சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்ய வேண்டும். தூக்கமும் வேண்டும். இது ஹடயோகம் இல்லை. ஆனால் நினைவு யாத்திரையை ஒருபோதும் மறக்கக் கூடாது. யோக யுக்த நிலையில் இருந்து அப்படி சுத்தமான உணவை சமையுங்கள் மற்றும் பரிமாறுங்கள், அதை சாப்பிடுபவர்களுடைய இருதயம் சுத்தமாகி விடவேண்டும்.

வரதானம்:
தன்னுடைய சூட்சும சக்திகள் மீது வெற்றி அடைந்து இராஜரிஷி, சுயராஜ்ய அதிகாரி ஆத்மா ஆகுக.

கர்மேந்திரியத்தை வெல்பவராக ஆகுவது என்பது சுலபம் ஆகும், ஆனால், மனம், புத்தி, சமஸ்காரம் ஆகிய இந்த சூட்சுமமான சக்திகள் மீது வெற்றியாளர் ஆகவேண்டும் - இது சூட்சும மான பயிற்சி ஆகும். எந்த நேரம் எந்த சங்கல்பம் எந்த சமஸ்காரத்தை எமர்ஜ் செய்ய விரும்பு கின்றீர்களோ, அந்த நேரம் அதே சங்கல்பம், அதே சமஸ்காரத்தை சுலபமாக தன்னுடையதாக ஆக்க வேண்டும் - இதை சூட்சும சக்திகள் மீது வெற்றியடைந்த ஸ்திதி அதாவது இராஜரிஷி ஸ்திதி என்று சொல்கிறோம். இப்பொழுதே ஒருமுகப்படுங்கள் என்று ஒருவேளை சங்கல்ப சக்திக்கு கட்டளை பிறப்பித்தீர்கள் என்றால், இராஜாவின் கட்டளையை அந்த நொடியே, அவ்விதமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே இராஜ்ய அதிகாரத்தின் அடையாளம் ஆகும். இந்தப் பயிற்சியினால் இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெறுவீர்கள்.

சுலோகன்:
சேவைகளினால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றனவோ, இவை தான் அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய பரிசு ஆகும்.