இனிமையான குழந்தைகளே! பாபாவிற்கு சமமாக
அபகாரம் செய்பவர்கள் மீதும் கூட உபகாரம் செய்யக் கற்றுக்
கொள்ளுங்கள். நிந்தனை செய்பவர்களையும் தமது நண்பர்களாக்குங்கள்.
கேள்வி:
பாபாவின் எந்த பார்வை உறுதியானது?
குழந்தைகள் நீங்கள் எதனை உறுதி (பக்கா) செய்ய வேண்டும்?
பதில்:
எந்த ஆத்மாக்கள்
எப்படியிருந்தாலும் அனைவரும் என் குழந்தைகளே! எனவே குழந்தாய்,
குழந்தாய் எனக் கூறிக் கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில்
பாபாவின் பார்வையில் மிக உறுதியாக இருக்கிறார். நீங்கள்
ஒருபோதும் யாரையும் குழந்தாய், குழந்தாய் என கூற முடியாது.
நீங்கள் இந்த ஆத்மா நமது சகோதரர். சகோதரராகப் பாருங்கள்,
சகோதரரோடு பேசுங்கள். இந்த பார்வையை உறுதியாக்கும் பொழுது தான்
இதன் மூலமாக ஆன்மீக அன்பு ஏற்படும். குற்றமான, (தவறான)
எண்ணங்கள் விலகிப் போய்விடும். நிந்தனை செய்வோர் கூட
நண்பர்களாகிவிடுவர்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கின்றார். ஆன்மீகத் தந்தையின்
பெயர் என்ன? சிவன், என்று நிச்சயமாகக் கூறுவோம். அவர் அனைவரது
ஆன்மீகத் தந்தையாவார். அவரையே கடவுள் என அழைக்கிறோம்.
குழந்தைகள், நீங்களும் நம்பர் பிரகாரம் புரிந்து கொள்கிறீர்கள்.
ஆகாஷ் வாணி என்று கூறுகின்றனர். ஆனால் இந்த ஆகாஷ் வாணி
யாருடையது? சிவபாபா வினுடையது. இந்த வாய் ஆகாய தத்துவம்
என்கின்றார். ஆகாய தத்துவத்தி-ருந்து அனைத்து மனிதர்களுடைய
சப்தமானது வெளிப்படுகிறது. அனைத்து ஆத்மாக்களும் தமது தந்தையை
மறந்துவிட்டிருக்கின்றனர். அநேக விதமான மகிமை செய்கின்றனர்.
ஆனால் ஒன்றையும் அறிந்துக் கொள்வதில்லை சுகத்தில் யாரும்
தந்தையை நினைவு செய்வதில்லை. அனைத்து மனோ ஆசைகளும் அங்கு (சத்யுகத்தில்)
பூர்த்தி ஆகின்றன. இங்கோ அநேக ஆசைகள் உள்ளன. மழை பெய்வதற்காக
யாகம் செய்கின்றனர் எப்பொழுதும் வேள்வி செய்துக்
கொண்டிருந்தாலும் மழை பெய்யும் என்பதும் கிடையாது. எங்கேயாவது
வறட்சி ஏற்படத்தான் செய்யும் ஆனால் யக்ஞம் செய்வதால் எதுவும்
நடப்பதில்லை. இதுவோ நாடகம் ஆகும். என்னென்ன ஆபத்துக்கள்
வரவேண்டுமோ அவை வரத்தான் செய்யும். எவ்வளவு அதிகமான மனிதர்கள்
இறந்து போகின்றனர். எவ்வளவு மிருகங்களும் இறக்கின்றன..
மனிதர்கள் எவ்வளவு துக்கம் அடை கின்றனர். மழை நிறுத்துவதற்கும்
ஏதாவது வேள்வி இருக்கிறதா? தொடர்ந்து மழை கொட்டும் பொழுது
யக்ஞம் செய்வார்களா? இந்த அனைத்து விஷயங்களையும் குழந்தைகள்
நீங்கள் அறிவீர்கள் மற்றவர்களுக்கு என்ன தெரியும்!
பாபா வந்து புரிய வைக்கின்றார் மனிதர்கள் தந்தையை மகிமை
செய்கின்றனர். திட்டவும் செய்கின்றனர். ஆச்சரியம் அல்லவா!
பாபாவை இழிவு செய்வது எப்போது ஆரம்பமானது? எப்பொழுதி-ருந்து
இராவண இராஜ்யம் ஆரம்பமானதோ அப்போது ஈஸ்வரனை சர்வ வியாபி என்று
கூறியது முக்கிய இழிவு ஆகும். இதன் காரணமாகவே கீழறங்கி
வந்துள்ளனர். யார் நம்மை நிந்தனை செய்கிறார்களோ அவர்களே நமது
நண்பர்களும் கூட! என்று பாடப்படுகிறது. அனைவரையும் விட அதிகமாக
இழிவு செய்தது யார்? குழந்தைகளாகிய நீங்கள் தான்! பிறகு
நண்பர்களாகவும் நீங்கள் தான் ஆகிறீர்கள். பொதுவாக மொத்த உலகமுமே
இழிவுப் படுத்துகிறது. அதிலும் நம்பர் ஒன் நீங்கள் தான்!
நீங்களே நண்பர்களாகவும் ஆகின்றீர்கள். மிகவும் அருகில் உள்ள
நண்பர்கள் குழந்தைகள் என எல்லையற்ற தந்தை கூறுகிறார், என்னை
குழந்தைகள் நீங்களே நிந்தனை செய்தீர்கள். நீங்களே
அபகாரிகளாகவும் ஆகின்றீர்கள் நாடகம் எவ்வாறு அமைந்துள்ளது!
இவையெல்லாம் விசார் சாகர் மந்தன் (சிந்தனைக் கடலை கடைவது)
செய்ய வேண்டிய விஷயங்களாகும். விசார் சாகர் மந்தன் என்பதற்கு
எத்தனை அர்த்தங்கள் உள்ளன? யாரும் புரிந்து கொள்ள முடிவதில்லை
இப்போது குழந்தைகள் நீங்கள் படித்து, உபகாரம் செய்கிறீர்கள்
என்று பாபா கூறுகிறார். யதா.. யதாஹி.. என்று பாடப்படுவது
பாரதத்தின் விஷயமாகும். விளையாட்டைப் பாருங்கள், எப்படி
இருக்கின்றது? சிவஜெயந்தி அதாவது சிவராத்திரி கொண்டாடு
கிறார்கள் உண்மையில் அவதாரம் என்பது ஒன்று தான். அந்த அவதாரத்தை
கூட கல், முள்ளில் என்று கூறிவிட்டனர். பாபா இவ்வாறு புகார்
கூறு கின்றார். கீதா உபநியாசம் செய்பவர்கள் சுலோகன்களை வாசிக்
கின்றனர். ஆனால் அதன் பொருள் எங்களுக்கு தெரியாது என்கின்றனர்.
நீங்களே அன்பிலும் மிக அன்பான குழந்தைகள். யாரோடு பேசினாலும்,
குழந்தாய் என்றே கூறுவார். பாபாவிற்கு இந்த ஒரு பார்வை மிகவும்
உறுதியாகிவிட்டது. அனைத்து ஆத்மாக் களும் எனது குழந்தைகள்
வாயி-ருந்து குழந்தாய் என்னும் வார்த்தை வெளிவரக்கூடிய யாரும்
உங்களுடன் இருக்க முடியாது. யார் எந்த பதவி அல்லது
நோக்கமுடையவர் என்பதை அறிவார்கள். அனைவருமே ஆத்மாக்கள் இதுவும்
கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. எனவே எந்த விதமான மகிழ்ச்சியோ
அல்லது துக்கமோ ஏற்படுவதில்லை. அனைவருமே எமது குழந்தைகள் சிலரோ
துப்பரவு தொழில் செய்பவர்கள் சரீரத்தை ஏற்றுள்ளனர் வேறு சிலர்
வேறு சரீரத்தை எடுத்துள்ளனர் ஆனாலும் குழந்தாய் குழந்தாய் என்று
கூறும் பழக்கமாகி விட்டது. பாபாவுடைய பார்வையில் அனைவருமே
ஆத்மாக்கள் அவர்களிலும் கூட ஏழைகள் மிக நன்றாக இருக்கின்றனர்.
ஏனெனில் நாடகத்தின் பிரகாரம் அவர்கள் மிகவும் இழிவு
செய்துள்ளனர். தற்போது மீண்டும் என்னிடம் வந்துள்ளனர். இந்த
இலட்சுமி நாராயணன் மட்டுமே ஒருபொழுதும் இழிவு செய்யப்படவில்லை.
கிருஷ்ணரை கூட மிகவும் இழிவு படுத்தி கூறியுள்ளனர்.
ஆச்சரியமல்லவா! கிருஷ்ணரே பெரியவர் ஆகும்போது அவரை இழிவாக பேச
வில்லை இந்த ஞானம் எவ்வளவு ஆழமானது இம்மாதிரி ஆழமான விஷயங்களை
எவராவது புரிந்து கொள்ள முடியுமா என்ன? அதற்கு தங்கம் போன்ற
பாத்திரம் (புத்தி) வேண்டும். அது நினைவு யாத்திரை மூலமாகவே
நடைபெறும் இங்கே அமர்ந்திருக்கும்போதும் கூட யதார்த்த மான
நினைவு செய்கிறார்களா என்ன, நாம் சிறிய புள்ளியான ஆத்மாக்கள்
என்பதையும் அறிவ தில்லை. நினைவை கூட புத்தி மூலம் செய்ய
வேண்டும். இது புத்தியில் வருவதே இல்லை. சிறிய ஆத்மா அவர் நமது
தந்தையாகவும் டீச்சராகவும் இருக்கிறார் இது கூட புத்தியில்
வருவ தில்லை. பாபா பாபா என்று கூறுகின்றனர். துக்கத்தின் போது
அனைவருமே நினைக்கின்றனர். பகவானுடைய வாக்கியம் அல்லவா -
துக்கத்தில் அனைவருமே நினைக்கின்றனர் சுகத்தின் போது யாருமே
நினைப்பதில்லை! நினைவு செய்வதற்கு அவசியமே இல்லை. இங்கு
துக்கத்தை தரும் ஆபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. கடவுளே
இரக்கம் கொள்வீர், கிருபை செய்வீர் என்று கூறி நினைவு
செய்கின்றனர். இப்போது கூட குழந்தைகள் ஆகின்றனர் பிறகு
எழுதுகின்றனர் - கிருபை செய்யுங்கள், சக்தி தாருங்கள், இரக்கம்
காட்டுங்கள்! ஆனால் பாபா கூறுகின்றார் சக்தியை யோக பலத்தின்
மூலம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே
இரக்கம் காட்டுங்கள் உங்களுக்கு நீங்களே ராஜ்ய திலகம் இட்டு
கொள்ளுங்கள். எப்படி உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ள
முடியும் என்பதற்கான வழியைக் கூறுகின்றேன். டீச்சர்
படிப்பதற்கான வழியைத் தான் கூறுவார் மாணவர்களுடைய வேலை படிப்பது,
அறிவுரைப்படி நடப்பது! டீச்சர் என்பவர் குருவாக ஆக முடியுமா?
கிருபை, ஆசீர்வாதம் தருவதற்கு! யார் நல்ல குழந்தைகளோ அவர்கள் (முயற்சியில்)
ஓடுவார்கள் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் உண்டு எவ்வளவு
முடியுமோ அவ்வளவு ஓடலாம். நினைவு பயணமே ஓடுதலாகும்.
ஒவ்வொரு ஆத்மாவும் தனித்தனியானது சகோதர சகோதரி என்ற உறவும்
விடுபட்டுள்ளது. சகோதர சகோதரன் என்று பார்த்தால் கூட தவறான
பார்வை விடுபடுவதில்லை. அது தன்னுடைய வேலையை செய்து
கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் மனிதர்களுடைய அங்கங்களும் (உடல்
உறுப்புகள்) அனைத்தும் குற்றமுள்ளவையே! யாரையாவது எட்டி
உதைத்தால், கோபப்ட்டால், குற்றமுள்ள அங்கமாகிவிடுகிறதல்லவா?
இவ்வாறு ஒவ்வொரு உடல் உறுப்புமே தவறானதாகிவிடுகிறது. ஆனால்
சத்யுகத்திலோ எந்தப் உறுப்பும் தவறு செய்யாது. இங்கோ, ஒவ்வொரு
உறுப்பினாலும் தவறான செயல்களைச் செய்து கொண்டே இருக்கின்றனர்.
அனைத்திலும் அதிகமாக தவறுகள் செய்யும் உறுப்பு எது! கண்கள்!
விகாரத்தின் ஆசை முழுமை அடையவில்லை யென்றால், கையை நீட்ட (அடிக்க)
ஆரம்பித்து விடுகின்றனர். கைகள் நீள ஆரம்பித்துவிடுகின்றன.
முதன் முத-ல் கண்கள் தான்! எனவே தான் சூர்தாஸினுடைய கதை கூட
உள்ளது. சிவ பாபாவோ எவ்வித சாஸ்திரத்தையும் படிக்க வில்லை.
இந்த ரதம் (பிரம்மா பாபா) நிறைய படித்துள்ளார். சிவபாபாவோ
ஞானத்தின் கடல் என்று கூறப்படுகிறார். சிவ பாபா எவ்வித
புத்தகத்தையும் படிப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நானோ
ஞானம் நிறைந்தவன். விதை ரூபமானவன். இந்த சிருஷ்டி (படைப்பு)
என்னும் மரத்தின் விதையானவர் தந்தை, என்னுடைய வசிக்கும் இடம்
மூல வதனமாகும் என்பதை பாபா புரிய வைக்கிறார். தற்போது இந்த
சரீரத்தில் வீற்றிருக்கிறார். நான் பரம தந்தை பரமாத்மா என்று
வேறு எவரும் கூறமுடியாது. நல்ல புத்திசா-யாரேனும் ஈஸ்வர் சர்வ
வியாபி என்று கூறினால், அப்படியென்றால், நீங்களும் கடவுளா என்று
உடனே கேட்பார். நீங்கள் அல்லாஹ் - இறைவனா? இருக்கவே முடியாது.
ஆனால் இந்த சமயத்தில் யாரும் புத்திசா-கள் இல்லை. அல்லாவையும்
தெரியாது. அல்லாவாக இருக்கிறேன் என்று தம்மையே கூறுவர். அதையே
ஆங்கிலத்தில் - எங்கும் நிறைந்தவர் என்கின்றனர். அதன் பொருளை
அறிந்திருந்தால் ஒருபோதும் கூறமாட்டார்கள். சிவபாபாவின்
ஜெயந்தியி-ருந்து புது உலகின் ஜெயந்தி. அதில்
தூய்மை-சுகம்-சாந்தி அனைத்தும் வந்துவிடுகிறது. சிவ
ஜெயந்தியி-ருந்து கிருஷ்ண ஜெயந்தி, அதி-ருந்து தசரா ஜெயந்தி.
சிவஜெயந்தியி-ருந்து தீபமாலையின் ஜெயந்தி. சிவ ஜெயந்தியி-ருந்து
சொர்க்கத்தின் ஜெயந்தி. அனைத்து ஜெயந்திகளும் வந்துவிடுகின்றன.
இந்த புதிய விஷயங்கள் அனைத்தையும் பாபா வந்து புரிய வைக்கிறார்.
சிவஜெயந்தியி-ருந்து சிவாலய ஜெயந்தி. வைஸ்யாலயம் மறைந்து போனது.
அனைத்து புதிய விஷயங்களையும் பாபா புரிய வைக்கிறார்.
சிவஜெயந்தியி-ருந்து புதிய உலகின் ஜெயந்தி. உலகில் அமைதி
வேண்டும் என விரும்புகின்றனர் இல்லையா? நீங்கள் எவ்வளவு நல்ல
முறையில் புரிய வைத்தாலும் விழித்துக் கொள்வதே இல்லை. அஞ்ஞான
இருளில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பக்தி செய்து செய்து,
ஏணிப்படியில் கீழே இறங்கி கொண்டே இருக்கின்றனர். பாபா
கூறுகிறார்: நான் வந்து அனைவருக்கும் சத்கதியை அளிக்கிறேன்.
சொர்க்கம் மற்றும் நரகத்தின் ரகசியத்தை குழந்தைகளாகிய
உங்களுக்கு பாபா புரிய வைக்கிறார். செய்திதாள்களில் நீங்கள்
உங்களை நிந்தனை செய்தவர்களும் எமது நண்பர்களே! என்று
அவர்களுக்கு எழுதுங்கள். உங்களையும் சத்கதியை அடையச் செய்வோம்.
எவ்வளவு நிந்திக்க வேண்டுமோ அவ்வளவு நிந்தியுங்கள். கடவுளையே
நிந்திக்கின்றனர் என்றால், எம்மை நிந்திப்பதால் என்னவாகும்?
உங்களுக்கு கட்டாயம் சத்கதியை வழங்குவோம். விரும்பாவிட்டாலும்
கூட மூக்கைப் பிடித்து அழைத்துச் செல்வோம். பயப்பட வேண்டிய
அவசியமே இல்லை. எதைச் செய்தாலும் கல்பத்திற்கு முன்னால்
செய்துள்ளீர்கள். பி.கு.களாகிய நாங்கள் அனைவருக்கும் சத்கதியை
அடையச் செய்வோம். நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். அபலைகள்
மீது அராஜகம் கல்பத்திற்கு முன்னால் கூட நடந்தது, இதனை
குழந்தைகள் மறந்து போகின்றனர். கணக்கற்ற குழந்தைகள் அனைவரும்
நம்மை நிந்திக்கின்றனர். அனைவருக்கும் அன்பான நண்பர்களாக
குழந்தைகளே உள்ளனர். குழந்தைகளோ மலர்களைப் போன்றவர்கள்.
குழந்தைகளுக்கு தாய்-தந்தையர் முத்தமிடுகின்றனர், தலைமீது
வைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு பணிவிடை செய் கின்றனர்.
பாபாவும் குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்கிறார்.
தற்போது உங்களுக்கு இந்த ஞானம் கிடைத்துள்ளது, அதனை நீங்கள்
கூடவே எடுத்துச் செல்கிறீர்கள். யார் எடுத்துக் கொள்வதில்லையோ
அவர்களுக்கும் நாடகத்தில் பாகம் உள்ளது. அதே பாகத்தை
நடிப்பார்கள். கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு வீட்டிற்குச்
சென்று விடு கின்றனர். அவர்கள் சொர்க்கத்தைப் பார்க்க முடியாது.
அனைவரும் சொர்க்கத்தைப் பார்ப்பார் களா என்ன? இந்த நாடகம்
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. பாவங்கள் அதிகமாக செய் கின்றனர்.
எனவே அவர்களும் தாமதமாகவே வருவர். தமோபிரதானமானவர்கள் காலம்
கடந்தே வருவர். இந்த ரகசியம் கூட மிகவும் நல்ல முறையில்
புரிந்து கொள்ள வேண்டியது. நல்ல நல்ல மகாரதிகளுக்கும்
கிரஹச்சாரம் பிடித்துக் கொண்டால், உடன் கோபம் வந்து விடுகிறது.
பிறகு கடிதம் கூட எழுதுவதில்லை. அவர்களுக்கு முரளி அனுப்புவதை
நிறுத்தி விடு என்று பாபாவும் கூறிவிடுவார். இப்படிப்
பட்டவர்களுக்கு பாபாவின் கஜானாவை வழங்கு வதில் என்ன லாபம்?
யாருக்காவது பிறகு கண் திறந்தால், தவறு ஏற்பட்டு விட்டது பாபா!
என்கின்றனர். வேறு சிலரோ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
இவ்வளவு தவறினை செய்யக்கூடாது. பாபாவை நினைவு செய்யாதவர்களும்
அனேகர் உள்ளனர். மேலும் தன்னைப் போன்று பிறரையும் ஆக்குவதில்லை.
இல்லையெனில், பாபா, நாங்கள் ஒவ்வொரு கணத்திலும் உங்களை
நினைக்கின்றோம் என எழுத வேண்டும். அனேகர் இப்படியும் இருக்
கின்றனர், அனைவரின் பெயரையும் எழுதி விடுகின்றனர், இன்னாருக்கு
நினைவைத் தாருங்கள் என்று எழுதுகின்றனர். இது உண்மையான
நினைவாகுமா? பொய் எடுபடாது. உள்ளே உள்ளம் உறுத்திக் கொண்டே
இருக்கும். குழந்தைகளுக்கு, நல்ல நல்ல கருத்துக்களை புரிய
வைத்துக் கொண்டிருக்கிறார். நாளுக்கு நாள் ஆழமான விஷயங்களை பாபா
புரிய வைக்கிறார். துக்கத்தின் மலை விழ இருக்கிறது.
சத்தியுகத்தில் துக்கத்தின் பெயரே இல்லை. தற்போது இராவண
இராஜ்யம். மைசூர் இராஜா கூட இராவணனை பெரிதாகச் செய்து தசரா
கொண்டாடு கிறார். இராமரை பகவான் என்கின்றனர். இராமரின் சீதையை
கடத்தி விட்டதாக கூறு கின்றனர். சர்வ சக்திமான் இருக்கும் போது
அவருடைய வரை எப்படி கடத்த முடியும். இது அனைத்தும் குருட்டு
நம்பிக்கை. இச்சமயத்தில் 5 விகாரங்களின் அழுக்கு உள்ளது. பிறகு
பகவானை சர்வ வியாபி எனக் கூறுவது மிகப் பெரிய பொய்யாகும். எனவே
தான் பாபா கூறுகிறார் யதா யதாஹி...... நான் வந்து உண்மையான
கண்டம் மற்றும் உண்மையான தர்மத்தை ஸ்தாபிக்கிறேன். உண்மையான
கண்டம் என்று சத்யுகமும் பொய்யான கண்டம் என க-யுகமும்
கூறப்படுகிறது. தற்போது பாபா பொய்யான கண்டத்தை சத்திய கண்டமாக
மாற்றுகிறார். நல்லது
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!