08-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! புண்ணிய ஆத்மா
ஆவதற்காக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு நல்ல காரியங்கள்
செய்யுங்கள், அனைத்து வகையான சேவை (ஆல்ரவுண்டர்) செய்பவராக
ஆகுங்கள், தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள்.
கேள்வி:
எந்த முயற்சி செய்வதன் மூலம்
குழந்தைகளாகிய நீங்கள் பல மடங்கு செல்வந்தர்களாக ஆகின்றீர்கள்?
பதில்:
கெட்டப் (குற்ற) பார்வையை நல்ல
பார்வையாக ஆக்குவது தான் அனைத்தையும் விட மிகப் பெரிய முயற்சி
ஆகும். கண்கள் தான் அதிகம் ஏமாற்றுகிறது. கண்களை குற்றமற்றதாக
ஆக்குதவற்காக தந்தை யுக்தி கூறியிருக்கின்றார் - குழந்தைகளே!
ஆன்மீக பார்வையுடன் பாருங்கள். தேகத்தைப் பார்க்காதீர்கள். நான்
ஆத்மா என்ற பயிற்சியை உறுதி செய்யுங்கள். இந்த முயற்சியின்
மூலம் தான் நீங்கள் ஜென்ம ஜென்மங்களுக்கு செல்வந்தர்களாக
ஆகிவிடுவீர்கள்.
பாடல்:
மனிதர்களே, பொறுமையாக இருங்கள்
........
ஓம் சாந்தி.
இவ்வாறு கூறியது யார்? சிவபாபா சரீரத்தின் மூலம் (பிரம்மாவின்
சரீரம்) கூறுகின்றார். எந்த ஆத்மாவும் சரீரமின்றி பேச முடியாது.
தந்தையும் சரீரத்தில் பிரவேசம் செய்து ஆத்மாக் களுக்குப் புரிய
வைக்கின்றார் - குழந்தைகளே! இப்பொழுது உங்களுக்கு உலகாய தொடர்பு
கிடையாது. இது ஆன்மீக தொடர் பாகும். ஆத்மாவிற்கு பரம்பிதா
பரமாத்மாவிடமிருந்து ஞானம் கிடைக்கிறது. தேகதாரிகளாக இருக்கும்
அனைவரும் படித்துக் கொண்டிருக்கின்றனர். தந்தைக்கு தனக்கென்று
தேகம் கிடையாது. ஆக சிறிது காலத்திற்காக இவரது சரீரத்தை
ஆதாரமாக எடுத்திருக்கின்றார். தன்னை ஆத்மா என்ற நம்பிக்கையுடன்
அமருங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். எல்லையற்ற தந்தை
ஆத்மாக்களாகிய நமக்குப் புரிய வைக்கின்றார். அவரைத் தவிர வேறு
யாரும் இவ்வாறு புரிய வைக்க முடியாது. ஆத்மா ஆத்மாவிற்கு
எவ்வாறு புரிய வைக்க முடியும்? ஆத்மாக்களுக்குப் புரிய
வைப்பதற்கு பரமாத்மா தேவை. அவரை யாரும் அறியவில்லை.
திரிமூர்த்தியிலிருந்தும் கூட சிவனை நீக்கி விட்டனர்.
பிரம்மாவின் மூலம் யார் ஸ்தாபனை செய்வார்கள்? பிரம்மா புது உலகை
படைக்கக் கூடியவர் கிடையாது. அனைவரையும் படைக்கக் கூடிய
எல்லையற்ற படைப்பாளி ஒரே ஒரு சிவபாபா தான் ஆவார். பிரம்மாவும்
இப்பொழுது மட்டும் தான் உங்களது தந்தையாக இருக்கின்றார்,
சங்கமத்திற்குப் பிறகு இருக்க மாட்டார். அங்கு லௌகீகத் தந்தை
மட்டுமே இருப்பார். கலியுகத்தில் லௌகீகம் மற்றும் அலௌகீகத்
தந்தை இருக்கின்றனர். இப்பொழுது சங்கமத்தில் லௌகீகம், அலௌகீகம்
மற்றும் பரலௌகீகம் என்று மூன்று தந்தைகள் உள்ளனர். என்னை
சுகதாமத்தில் யாரும் நினைவு செய்வது கிடையாது என்று தந்தை
கூறுகின்றார். உலகிற்கு எஜமானர்களாக தந்தை ஆக்கி விடுகின்றார்,
பிறகு ஏன் கூச்சலிடுகிறார்கள்? அங்கு வேறு எந்த கண்டங்களும்
இருக்காது. சூரிய வம்சத்தினர் மட்டுமே இருப்பர். சந்திர
வம்சத்தினர்களும் பிறகு தான் வருவர். இப்பொழுது தந்தை
கூறுகின்றார் - குழந்தைகளே! பொறுமையாக இருங்கள், இன்னும் சிறிது
காலம் தான் இருக்கிறது. நன்றாக முயற்சி செய்யுங்கள். தெய்வீக
குணங்களை தாரணை செய்யவில்லை யெனில் பதவியும் குறைந்து விடும்.
இது மிகப் பெரிய லாட்டரி ஆகும். வக்கீல், சர்ஜன் போன்று ஆவதும்
லாட்டரி அல்லவா! அதிகம் சம்பாதிக்கின்றனர். பலர் மீது அதிகாரம்
செலுத்துகின்றனர். யார் நன்றாகப் படித்து, கற்பிக்கின்றார்களோ
அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். தந்தையை நினைவு செய்வதன்
மூலம் விகர்மம் விநாசம் ஆகும். தந்தையையும் அடிக்கடி மறந்து
விடுகிறீர்கள். மாயை நினைவை மறக்க வைத்து விடுகிறது. ஞானத்தை
மறக்க வைப்பது கிடையாது. சுய முன்னேற்றம் செய்ய வேண்டுமெனில்
சார்ட் வையுங்கள் என்று தந்தை கூறவும் செய்கின்றார் - முழு
நாளும் எந்த பாவ காரியமும் செய்யவில்லை தானே? இல்லையெனில் நூறு
மடங்கு பாவமாக ஆகிவிடும். யக்ஞத்தை பாதுகாப்பவர்
அமர்ந்திருக்கின்றார், அவரது கட்டளைப்படி செய்யுங்கள். எங்கு
அமரச் செய்தாலும், சாப்பிட என்ன கொடுத்தாலும் சரியே என்று
கூறுகிறீர்கள். ஆக மற்ற ஆசைகளையும் விட்டு விட வேண்டும்.
இல்லையெனில் பாவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆத்மா
தூய்மையானதாக எப்படி ஆகும்? யக்ஞத்தில் எந்த பாவ காரியமும்
செய்யக் கூடாது. இங்கு நீங்கள் புண்ணிய ஆத்மாவாக ஆகிறீர்கள்.
திருடுவது, ஏமாற்றுவது போன்றவைகள் பாவம் அல்லவா! மாயை பிரவேசம்
செய்கிறது. யோகாவிலும் இருக்க முடியாது, ஞான தாரணை யும் செய்ய
முடியாது. ஒருவேளை நான் கண்ணில்லாத குருடர் களுக்கு ஊன்றுகோலாக
ஆக வில்லையெனில் என்ன பெயர் கிடைக்கும்? என்று தனது உள்ளத்தைக்
கேளுங்கள். குருடன் என்று தான் கூறலாம் அல்லவா!
திருத்ராஷ்ட்ரரின் குழந்தை என்று இந்த நேரத்திற்கானது தான்
பாடப் பட்டிருக்கிறது. அது இராவண இராஜ்யமாகும். நீங்கள்
சங்கமத்தில் இருக்கிறீர்கள். இராம இராஜ்யத்தில் சுகம் அடையக்
கூடியவர்கள். பரம்பிதா பரமாத்மா எவ்வாறு சுகம் கொடுக்கின்றார்?
என்பது யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. எவ்வளவு தான்
நல்ல முறையில் புரிய வைத்தாலும் புத்தியில் அமருவது கிடையாது.
தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டால் தான் பரமாத்மாவின்
ஞானத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஆத்மாவும் எப்படி முயற்சி
செய்கிறதோ அவ்வாறு பலன் ஆகிறது. கடைசி நேரத்தில் யார் மனைவியை
நினைக்கிறார்களோ ....... என்றும் பாடப்பட்டிருக்கிறது. யார்
என்னை நினைவு செய்வார்களோ அவர்கள் என்னை அடைவார்கள் என்று தந்தை
கூறுகின்றார். இல்லையெனில் அதிக தண்டனை அடைந்து பிறகு
வருவீர்கள். சத்யுகத்திலும் அல்ல, திரேதாவிலும் கடைசியில்
வருவீர்கள். சத்யுகம், திரேதாவை பிரம்மாவின் பகல் என்று
கூறப்படுகிறது. ஒரே ஒரு பிரம்மா மட்டும் இருக்க முடியாது,
பிரம்மாவிற்கு பல குழந்தைகள் இருக்கின்றனர் அல்லவா!
பிராமணர்களின் பகல், பிறகு பிராமணர்களின் இரவு ஏற்படும்.
இப்பொழுது இரவை பகல் ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார்.
பிராமணர்கள் தான் பகலுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை
செய்கின்றனர். தந்தை எவ்வளவு புரிய வைக்கின்றார்! தெய்வீக
தர்மத்தின் ஸ்தாபனை ஏற்பட்டே ஆக வேண்டும். கலியுக விநாசமும்
அவசியம் ஏற்படும். யாருக்காவது உள்ளுக்குள் சிறிது சந்தேகம்
இருந்தாலும் அவர்கள் வெளியேறி விடுவர். முதலில் நம்பிக்கை பிறகு
சந்தேகம் வந்து விடுகிறது. இங்கு இறந்து பிறகு மீண்டும் பழைய
உலகில் சென்று பிறப்பு எடுத்து விடுகின்றனர். அழிந்து
விடுகின்றனர். தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா!
குழந்தைகளுக்கு நல்ல நல்ல கருத்துக்களை கொடுத்துக் கொண்டே
இருக்கின்றார்.
நீங்கள் ஆத்மா, தேகம் அல்ல என்பதை முதன் முதலில் புரிய
வையுங்கள். இல்லையெனில் முழு லாட்டரியும் தொலைந்து (காணாமல்
போய்) விடும். அங்கு இராஜா மற்றும் பிரஜைகள் அனைவரும் சுகமாகத்
தான் இருப்பார்கள், இருப்பினும் உயர்ந்த பதவி அடைவதற்கான
முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! சுகதாமத்திற்குச் செல்வோம்
அல்லவா! என்று இருந்து விடக் கூடாது. உயர்ந்த பதவி அடைய
வேண்டும், இராஜா ஆவதற்காக வந்திருக்கிறீர்கள். இவ்வாறு
புத்திசாலிகளும் தேவை. தந்தையின் சேவை செய்ய வேண்டும். ஆன்மீக
சேவை இல்லையெனில் ஸ்தூல சேவையும் இருக்கிறது. சில இடங்களில்
சகோதரர்களும் வகுப்பு நடத்துகின்றனர். ஒரு சகோதரி இடையிடையில்
சென்று வகுப்பு நடத்துகின்றார். மரம் சிறிது சிறிதாக
வளர்ச்சியடை கிறது அல்லவா! சென்டர்களில் எவ்வளவு பேர்
வருகின்றனர்! பிறகு நாளடைவில் மறைந்து விடுகின்றனர்.
விகாரத்தில் விழுந்து விடும் பொழுது சென்டருக்கு வருவதற்கு
வெட்கம் ஏற்படு கிறது. தயக்கம் ஏற்படுகிறது. இந்த வியாதி
ஏற்பட்டு விடுகிறது என்று கூறுவர். அனைத்து விசயங் களையும்
தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். தனது கணக்குகளை
தினந்தோறும் வையுங்கள். எந்த தவறும் சேமிப்பு ஆகவில்லை தானே?
இலாபம் மற்றும் நஷ்டம். ஆத்மா தூய்மையாக ஆகிவிடுகிறது என்றால்
21 பிறவிகளுக்கு சேமிப்பு ஆகிவிடுகிறது. தந்தையின் நினைவின்
மூலம் தான் சேமிப்பு ஏற்படும். பாவங்கள் அழிந்து விடும். ஹே
பதீத பாவனான பாபா, வந்து எங்களை தூய்மையாக ஆக்குங்கள் என்று
கூறவும் செய்கிறீர்கள். வந்து உலகிற்கு எஜமானர்களாக ஆக்குங்கள்
என்று ஒருபொழுதும் கூறுவது கிடையாது. முக்தி மற்றும் ஜீவன்
முக்தி இரண்டு இடமும் தூய்மையான உலகம் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நாம் முக்தி, ஜீவன்முக்திக்கான
ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். யார்
முழுமையான முறையில் படிக்கவில்லையோ அவர்கள் கடைசியில்
வருவார்கள். சொர்க்கத்திற்கு அனைவரும் அவரவர்களுக்கான நேரத்தில்
வருவார்கள். அனைத்து விசயங்களும் புரிய வைக்கப்படுகிறது. உடனேயே
யாரும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் தந்தையை நினைப்பதற்கு
இங்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறது! முதலில் தன்னை ஆத்மா என்று
புரிந்துக் கொள்ளுங்கள் என்று யார் வந்தாலும் கூறுங்கள். இந்த
ஞானம் தந்தை தான் கொடுக்கின்றார். அவர் தான் அனைத்து
ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும்.
ஆத்மா தான் ஞானம் அடைகிறது, பரமாத்ம தந்தையை நினைவு செய்வதன்
மூலம் தான் விகர்மங்கள் அழிந்து போகும், பிறகு சிருஷ்டியின்
முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்கின்றார். படைப்பவரை நினைவு
செய்தால் தான் பாவங்கள் அழிந்து போகும். பிறகு படைப்பின் முதல்,
இடை, கடையின் ஞானத்தை புரிந்து கொள்வதன் மூலம் சக்கரவர்த்தி
இராஜா ஆகிவிடுவீர்கள். அவ்வளவு தான், இதை மற்றவர்களுக்கும் கூற
வேண்டும். சித்திரங்களும் உங்களிடம் இருக்கிறது. இதை முழு
நாளும் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள்
மாணவர்களாகவும் இருக்கிறீர்கள் அல்லவா! இல்லறவாசிகள் பலரும்
மாணவர்களாக இருக் கின்றனர். நீங்களும் இல்லறத்தில் இருந்து
கொண்டே தாமரை மலர் போன்று ஆக வேண்டும். சகோதரன், சகோதரி
களிடத்தில் ஒருபொழுதும் கெட்ட பார்வை ஏற்பட முடியாது. இவர்கள்
பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்கள் அல்லவா! கெட்ட பார்வையை
நல்லதாக ஆக்குவதற்கு அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.
அரைக் கல்பத்தின் பழக்கம் இருக்கிறது. அதை நீக்குவதற்கு அதிக
முயற்சி தேவை. கெட்டப் பார்வை இருக்கக் கூடாது என்று பாபா
கூறும் கருத்து மிகவும் கடினமானது என்று அனைவரும் எழுதுகின்றனர்.
அடிக்கடி புத்தி சென்று விடுகிறது. அதிக சங்கல்பங்கள் வருகிறது.
இப்பொழுது கண்களுக்கு என்ன செய்வது? சூர்தாஸின் உதாரணம்
கொடுக்கின்றனர். அவர்கள் ஒரு கதையாக ஆக்கி விட்டனர். கண்கள்
ஏமாற்றுகிறது என்றவுடன் கண்களை நீக்கி விட்டார். இப்பொழுது
அந்த விசயமே கிடையாது. இந்த கண்கள் அனைவருக்கும் இருக்கிறது.
ஆனால் கெட்டதாக இருக்கிறது, இதை நல்லதாக ஆக்க வேண்டும்.
வீட்டில் இருந்து கொண்டே இவ்வாறெல்லாம் இருக்க முடியாது என்று
மனிதர்கள் நினைக் கின்றனர், இருக்க முடியும் என்று தந்தை
கூறுகின்றார். ஏனெனில் அதிகமான பலன் கிடைக்கிறது அல்லவா!
நீங்கள் பல பிறவிகளுக்கு பல மடங்கு செல்வந்தர்களாக ஆகிறீர்கள்.
அங்கு கணக்கிடுவதே கிடையாது. இன்றைய நாட்களில் பாபா பதம்பதி,
பத்மாவதி என்ற பெயர்களை வைக்கின்றார். நீங்கள் எண்ணிலடங்காத
செல்வந்தர்களாக ஆகிறீர்கள். அங்கு கணக்கிடவே மாட்டார்கள்.
எப்பொழுது ரூபாய், பைசா போன்றவைகளை உருவாக்குகிறார்களோ
அப்பொழுது தான் கணக்கிடுகின்றனர். அங்கு தங்கம், வெள்ளி போன்ற
நாணயங்கள் உங்களுக்கு காரியங் களுக்குப் பயன்படும். முன்பு
இராமர், சீதையின் இராஜ்ய நாணயங்கள் கண்டெடுத்திருக்கின்றனர்.
ஆனால் சூரியவம்சத்தினுடையதை ஒருபொழுதும் பார்த்திருக்க முடியாது.
சந்திர வம்சத் தினுடையதை பார்த்துக் கொண்டு தான் வருகிறீர்கள்.
முதலில் அனைத்தும் தங்கக் கட்டிகளாகவே இருந்தன, பிறகு
வெள்ளியாக மாறியது. பிறகு பின்நாட்களில் தாமிரம் போன்றவைகளினால்
உருவாக்கப்பட்டது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும்
தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகிறீர்கள். சத்யுகத்தில் என்ன
வழக்கங்கள் நடைபெறுமோ அது நடைபெறவே செய்யும். நீங்கள் சுய
முயற்சி செய்யுங்கள். சொர்க்கத்தில் மிகக் குறைவானவர்கள்
இருப்பர். ஆயுளும் நீண்டதாக இருக்கும். அகால மரணம் இருக்காது.
நாம் காலன் மீது வெற்றியடைகிறோம் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். மரணம் என்ற பெயரே இருக்காது. அது தான்
அமரலோகம் என்று கூறப்படுகிறது. இது மரணலோகம் ஆகும்.
அமரலோகத்தில் ஐயோ ஐயோ என்பது இருக்காது. யாராவது வயோதிகராகி
இறக்கின்ற பொழுது அதிக குஷி ஏற்படும், சென்று சிறிய குழந்தையாக
ஆவேன். இங்கு இறக்கின்ற பொழுது அழ ஆரம்பித்து விடுகின்றனர்.
உங்களுக்கு எவ்வளவு நல்ல ஞானம் கிடைக்கிறது! எவ்வளவு தாரணை
செய்ய வேண்டும்! மற்றவர்களுக்கும் புரிய வைக்க
வேண்டியிருக்கிறது. நான் ஆன்மீக சேவை செய்ய விரும்புகிறேன்
என்று யாராவது பாபாவிடம் கூறினால், நல்லது செய்யுங்கள் என்று
பாபா உடனேயே கூறிவிடுவார். பாபா யாரையும் வேண்டாம் என்று
கூறுவது கிடையாது. ஞானம் இல்லையெனில் அஞ்ஞானம் தான் இருக்கிறது
என்று பொருள். அஞ்ஞானத்தினால் அதிக தீங்கு (டிஸ்சர்விஸ்) செய்து
விடுகின்றனர். சேவை நன்றாக செய்ய வேண்டும் அல்லவா! அப்பொழுது
தான் லாட்டரி கிடைக்கும். மிக உயர்ந்த லாட்டரி ஆகும். இது
ஈஸ்வரிய லாட்டரி ஆகும். நீங்கள் இராஜா, ராணி ஆகின்ற பொழுது
உங்களது பேரன், பேத்திகள் அனைவரும் அதை அனுபவித்து வருவார்கள்.
இங்கு ஒவ்வொரு வரும் அவரவர் களது கர்மத்தின் படி பலன்
அடைகின்றனர். யாராவது அதிக செல்வத்தை தானம் செய்கின்றனர் எனில்
இராஜாவாக ஆவார்கள், ஆக தந்தை குழந்தைகளுக்கு அனைத்தையும் புரிய
வைக்கின்றார். நல்ல முறையில் புரிந்து கொண்டு பிறகு தாரணை
செய்ய வேண்டும். சேவையும் செய்ய வேண்டும். நூற்றுக்கணக்கான
சேவைகள் உள்ளன, சில இடங்களில் பக்தி உணர்வுடைய வர்கள் மிக
நன்றாக இருப்பர். அதிக பக்தி செய்திருந்தால் தான் ஞானத்தையும்
ஏற்றுக் கொள்வர். முகத்தின் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.
கேட்கும் பொழுதே குஷியடைவர். யார் புரிந்து கொள்ளவில்லையோ
அவர்கள் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் அல்லது
கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விடுவார்கள். பாபா அனைத்தையும்
பார்க்கின்றார். யாருக்காவது கற்றுக் கொடுக்கவில்லையெனில்
எதையும் புரிந்து கொள்ளவில்லை. ஒரு காதில் கேட்டு மற்றொன்றில்
விட்டு விடுவர். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி
என்று பொருள். அடையக் கூடிய நேரம் இதுவாகும். எந்த அளவு
அடைகிறீர்களோ அந்த அளவிற்கு ஜென்ம ஜென்மங்களுக்கு, கல்ப
கல்பத்திற்கும் கிடைக்கும். இல்லையெனில் கடைசி யில் வருத்தப்பட
வேண்டியிருக்கும். பிறகு அனைவருக்கும் சாட்சாத்காரம் ஏற்படும்.
நான் முழுமையாக படிக்கவில்லை, ஆகையால் பதவியும் அடைய முடியாது.
பிறகு சென்று என்ன நிலை அடைவார்கள்? வேலைக்காரனாக, சாதாரண
பிரஜைகளாக ஆவீர்கள். இங்கு இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிக்கொண்டிருக்கிறது. எப்படியெல்லாம் செய்கிறீர்களோ அதன்படி
பலன் கிடைக்கும். புது உலகிற்காக நீங்கள் மட்டுமே முயற்சி
செய்கிறீர்கள். மனிதர்கள் தானம், புண்ணியம் செய்கின்றனர்,
அதுவும் இந்த உலகிற்காகத் தான். இது பொதுவான விசயமாகும். நாம்
நல்ல காரியம் செய்கிறோம் என்பது அவர்கள் எண்ணம். அடுத்த
பிறவியில் அதற்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களுடையது 21
பிறவிகளுக்கான விசயமாகும். எவ்வளவு முடியுமோ நல்ல காரியங்கள்
செய்யுங்கள். ஆல்ரவுண்டர் ஆகுங்கள். நம்பர் ஒன் ஞானி ஆத்மா
மற்றம் யோகி ஆத்மாவாக ஆக வேண்டும். ஞானியாகவும் இருக்க வேண்டும்,
சொற்பொழிவிற்காக மகாரதிகளை அழைக்கிறீர்கள் அல்லவா! யார் அனைத்து
வகையான சேவைகளையும் செய்கிறார்களோ புண்ணிய ஆத்மாவாக இருக்கவே
செய்கின்றனர்.. பாடங்கள் இருக்கின்றன அல்லவா! யோகா விலிருந்து
எந்த காரியம் செய்தாலும் நல்ல மதிப்பெண்கள் அடைய முடியும். நான்
சேவை செய்கிறேனா? அல்லது சாப்பிட்டு தூங்குகின்றேனா? என்று தனது
உள்ளத்தைக் கேளுங்கள். இங்கு இந்த படிப்பு மட்டும் தான்
இருக்கிறதே தவிர வேறு எந்த விசயமும் கிடையாது. நீங்கள்
மனிதனிலிருந்து தேவதை, நரனிலிருந்து நாராயணனாக ஆகிறீர்கள்.
அமரக்கதை, மூன்றாவது கண் கொடுக்கும் கதை இது ஒன்று தான்.
மனிதர்கள் அனைவரும் சென்று பொய்யான கதையைக் கேட்கின்றனர்.
மூன்றாவது கண்ணை தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது.
இப்பொழுது உங்களுக் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது, இதன்
மூலம் நீங்கள் சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிகிறீர்கள்.
இந்த படிப்பில் குமார், குமாரிகள் மிகவும் தீவிர வேகத்தில்
செல்ல வேண்டும். சித்திரமும் இருக்கிறது, கீதையின் பகவான் யார்?
என்று மற்றவர்களிடம் கேளுங்கள். முக்கியமான விசயமே இது தான்.
பகவான் ஒரே ஒருவராகத் தான் இருக்க முடியும், அவர் மூலமாக
ஜீவன்முக்திக்கான ஆஸ்தி கிடைக்கிறது. நாம் அங்கு வசிக்கக்
கூடியவர்கள், இங்கு நடிப்பதற்காக வந்திருக்கிறோம். இப்பொழுது
பாவனமாக ஆவது எப்படி? பதீத பாவன் ஒரே ஒரு தந்தை ஆவார்.
நாளடைவில் குழந்தைகளாகிய உங்களது மன நிலை மிக நன்றாக ஆகிவிடும்.
தந்தை ஒவ்வொரு விதத்திலும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார்.
முக்கிய மானது தந்தையை நினைவு செய்யும் பொழுது ஜென்ம
ஜென்மங்களின் பாவங்கள் அழிந்து விடும். நான் எவ்வளவு நேரம்
நினைவு செய்கிறேன்? என்று தனது உள்ளத்தைக் கேளுங்கள். சார்ட்
வைப்பது நல்லது, சுய முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டும். தன்
மீது கருணை காண்பித்து தனது நடத்தைகளை பார்த்துக் கொண்டே (கவனமாக)
இருங்கள். ஒருவேளை நாம் தவறுகள் செய்து கொண்டே இருந்தால்
ரிஜிஸ்டர் கெட்டு விடும், இங்கு நடத்தைகள் தெய்வீகமானதாக
இருக்க வேண்டும். சாப்பிட என்ன கொடுத்தாலும் சரி, எங்கு அமர
வைத்தாலும் சரி, என்ன கட்டளையிடு கிறீர்களோ அப்படியே செய்கிறோம்
என்றும் பாடப்பட்டிருக்கிறது அல்லவா! கட்டளைகளை அவசியம்
சரீரத்தின் மூலம் தான் கொடுப்பார் அல்லவா! சொர்க்கவாசல் என்ற
வார்த்தை நன்றாக இருக்கிறது. இது சொர்கம் செல்வதற்கான வாசல்
ஆகும்.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) புண்ணிய ஆத்மா ஆவதற்காக மற்ற அனைத்து ஆசைகளையும் விட்டு
விட்டு பாபா சாப்பிட என்ன கொடுத்தாலும், எங்கு அமரச் சொன்னாலும்
சரியே, எந்த பாவ காரியமும் செய்யக்கூடாது. இதை உறுதி செய்துக்
கொள்ள வேண்டும்.
2) ஈஸ்வரிய லாட்டரி அடைவதற்காக ஆன்மீக சேவையில் ஈடுபட வேண்டும்.
ஞான தாரணை செய்து மற்றவர்களுக்கும் செய்விக்க வேண்டும். நல்ல
மதிப்பெண்கள் பெறு வதற்காக எந்த காரியம் செய்தாலும் நினைவில்
இருந்து செய்ய வேண்டும்.
வரதானம்:
மாயா மற்றும் இயற்கையை சேவகனாக மாற்றும் சதா சினேகி ஆகுக !
சதா சினேகியாக இருக்கும் குழந்தைகள் அன்பில் மூழ்கியிருப்பதால்
உழைப்பு கடினத்திலிருந்து சதா தப்பிந்திருப்பார்கள் அவர்களுக்கு
முன்பாக மாயை இயற்கை இரண்டும் இப்போதிலிருந்தே சேவகனாகின்றது.
அதாவது சதா சினேகி ஆத்மா எஜமானாகின்றார். மாயையும், இயற்கையும்
சதா சினேகியானவரின் நேரத்தையும் எண்ணத்தையும் தன் வசம்
ஈர்க்கும் தைரியம் இழந்து விடு கின்றது. அவர்களுடைய ஒவ்வொரு
நேரமும் எண்ணமும் பாபாவின் நினைவு மற்றும் சேவை யின் பொருட்டே
அமையும். சினேகி ஆத்மாக்களின் மனோ நிலைகள் மகிமையே ஒரு தந்தை
யன்றி வேறுயாருமில்லை, தந்தையே உலகம் என்று பாடப்படுகின்றது
அவர்கள் எண்ணத்தாலும் அடிமை ஆவதில்லை.
சுலோகன்:
ஞானம் நிறைந்தவரானால் இன்னல்களும் பொழுதுபோக்கு விளையாட்டென
அனுபவம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
இப்பழைய கலியுகமெனும் பட்டுப்போன மரத்தை எரித்து சாம்பலாக்க
கூட்டு தியானத்தால் யோக அக்னியை கொழுந்து விட்டு எரியச்
செய்யுங்கள். ஆனால் நினைவெனும் இணைப்பு சதா இணைந் திருந்தாலே
ஜூவாலா ரூபமாகும். மாறாக இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டால்
அதனை இணைப்பதிலேயே நேரமும் விரயமாகும். உழைப்பும் அதிகமாகும்
சக்திசாலிக்கு பதிலாக பலவீனமடைந்து விடும்.