09-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! ஒவ்வொருவருடைய நாடியையும் பார்த்து முதலில் அவருக்கு அல்ஃப் - தந்தை மீது நிச்சயம் செய்வியுங்கள். அதன் பிறகு மேற்கொண்டு புரிய வையுங்கள். அல்ஃப் - தந்தை மீது நிச்சயம் ஏற்படாமல் ஞானம் அளிப்பது என்பது டைம் வேஸ்ட் - நேரத்தை வீணடிப்பது ஆகும்.

கேள்வி:
எந்த முக்கியமான ஒரு புருஷார்த்தம் (முயற்சி) ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான அதிகாரி ஆக்கி விடுகிறது?

பதில்:
உள்முகமாக இருக்கும் தன்மை. நீங்கள் மிகவுமே உள்முகமாக இருக்க வேண்டும். தந்தையோ கல்யாணகாரி (நன்மை செய்பவர்) ஆவார். நன்மைக்காகத் தான் ஆலோசனை தருகிறார். யார் (அந்தர் முகி) உள்முகமாக இருக்கும் யோகி குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு பொழுதும் தேக அபிமானத்தில் வந்து கோபித்து கொள்வதோ சண்டையிடுவதோ செய்ய மாட்டார்கள். அவர்களுடைய நடத்தை மிகவும் இராயலானதாகவும் (கம்பீரம்) சிறப்பான தாகவும் இருக்கும். மிகவும் குறைவாகப் பேசுவார்கள். யக்ஞ சேவையில் ஆர்வம் கொண்டிருப் பார்கள். அவர்கள் அதிகமாக ஞானத்தை (திக்-திக்) கூறிக் கொண்டே இருக்க மாட்டார்கள். நினைவில் இருந்து சேவை செய்வார்கள்.

ஓம் சாந்தி.
பெரும்பாலும் பார்க்கப்படுவது என்னவென்றால், கண்காட்சியின் சமாசாரங்கள் கூட வருகிறது - ஆக முக்கியமான விஷயமாகிய தந்தையின் அறிமுகம் பற்றி முழுமையாக நிச்சயம் ஏற்படுத்தாமல் மற்றதை என்னவெல்லாம் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவை ஒருவருடைய புத்தியில் பதிவது கடினமாக உள்ளது. நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்றாலும் கூட தந்தையின் அறிமுகம் இல்லை. முதலிலோ தந்தையின் அறிமுகம் வேண்டும். தந்தையின் மகா வாக்கியமாவது - என்னை நினைவு செய்யுங்கள். நான் தான் பதீத பாவனன். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் பதீத (தூய்மையற்ற) நிலை யிலிருந்து பாவனமாக ஆகி விடுவீர்கள். இது தான் முக்கிய விஷயம் ஆகும். பகவான் ஒருவரே ஆவார். அவரே பதீத பாவனர். ஞானக்கடல், சுகக்கடல் ஆவார். அவரே உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ! இது நிச்சயம் ஆகி விட்டது என்றால், பின் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள், வேதங்கள் அல்லது கீதை பாகவதம் அனைத்துமே குறையுள்ளதாக ஆகிவிடும். பகவானோ இதை நான் கூறவில்லை என்று அவரே கூறுகிறார். என்னுடைய ஞானம் சாஸ்திரங்களில் இல்லை. அவை பக்தி மார்க்கத் தின் ஞானம் ஆகும். நானோ ஞானத்தினால் சத்கதி அளித்து பின் சென்று விடுகிறேன். பிறகு இந்த ஞானம் பெரும்பாலும் மறைந்து போய் விடுகிறது. ஞானத்தின் பிராலப்தம் (பிராப்தி) முடிவடைந்த பிறகு பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது. தந்தை பற்றிய நிச்சயம் ஏற்பட்டால் தான் இவை பக்தி மார்க்கத்தின் சாஸ்திரமாகும் என்ற பகவானின் வாக்கை (பகவானுவாச) புரிந்து கொள்ள முடியும். ஞானம் மற்றும் பக்திப் பாதி பாதி நடக்கிறது. பகவான் வரும் பொழுது தனது அறிமுகத்தை அளிக்கிறார் - 5 ஆயிரம் வருடங்களின் கல்பம் ஆகும் என்று நான் கூறுகிறேன். நானோ பிரம்மாவின் வாய் மூலமாக புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன். எனவே பகவான் யார் என்ற முதல் முக்கியமான விஷயத்தை புத்தியில் பதிய வைக்க வேண்டும். இந்த விஷயம் புத்தியில் பதியாதவரை வேறு எதுவும் புரிய வைப்பதால் சிறிதும் தாக்கம் ஏற்படாது. முழு உழைப்பே இந்த விஷயத்தில் உள்ளது. தந்தை வருவதே கல்லறையிலிருந்து எழுப்புவதற்கு. சாஸ்திரங்கள் ஆகியவை படிப்பதாலோ விழித்து கொள்ள மாட்டார்கள். பரம ஆத்மா ஜோதி சொரூபம் ஆவார். எனவே அவருடைய குழந்தைகளும் ஜோதி சொரூபம் ஆவார்கள். ஆனால் குழந்தை களாகிய உங்களது ஆத்மா பதீதமாக (தூய்மையற்றதாக) ஆகி விட்டுள்ளது. அது காரணமாக ஜோதி அணைந்து விட்டுள்ளது. தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். முதன் முதலில் தந்தையின் அறிமுகம் அளிக்காமல் இருந்து விடும் பொழுது பிறகு என்னவெல்லாம் உழைப்பு செய்கிறார்களோ, அபிப்பிராயம் எழுதுமாறு செய்விக்கிறார்களோ அவை எதுவுமே பயன்படுவதில்லை. எனவே சேவை ஆவதில்லை. நிச்சயம் ஆகியது என்றால் உண்மையில் பிரம்மா மூலமாக ஞானம் அளித்து கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் பிரம்மாவைப் பார்த்து எவ்வளவு குழம்புகிறார்கள். ஏனெனில் தந்தையின் அறிமுகம் இல்லை. பக்தி மார்க்கம் இப்பொழுது கடந்து விட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்துள்ளீர்கள். கலியுகத்தில் இருப்பது பக்தி மார்க்கம். மேலும், இப்பொழுது சங்கமத்தில் இருப்பது ஞான மார்க்கம். நாம் சங்கம யுகத்தினர் ஆவோம். இராஜ யோகத்தைக் கற்றுக் கொண்டி ருக்கிறோம். புதிய உலகத்திற்காக தெய்வீக குணங்களை தாரணை செய்கிறோம். யார் சங்கம யுகத்தில் இல்லையோ அவர்கள் நாளுக்கு நாள் தமோபிரதானமாக ஆகிக் கொண்டே போகிறார்கள். அந்தப் பக்கம் தமோபிரதானத் தன்மை அதிகரித்து கொண்டே போகிறது. இவை புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும் அல்லவா? புரிய வைப்பவர்கள் கூட வரிசைக் கிரமமாக உள்ளார்கள். பாபா தினமும் புருஷார்த்தம் (முயற்சி) செய்விக்கிறார். "நிச்சய புத்தி விஜயந்தி" நிச்சய புத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள். குழந்தைகளிடம் (திக்-திக்) நிறைய பேசும் பழக்கம் அதிகமாக உள்ளது. தந்தையை நினைவு செய்வதே இல்லை. நினைவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தந்தையை நினைவு செய்வதை விட்டு விட்டு தங்களுடையதையே (வழ வழவென) அதிகமாகக் கூறிக் கொண்டே இருப்பார் கள். தந்தை மீது நிச்சயம் ஏற்படா திருக்கும் வரை மற்ற படங்களின் பக்கம் கூட்டிச் செல்லவே கூடாது. நிச்சயம் இல்லை என்றால் எதுவும் புரிந்து கொள்ள மாட்டார்கள். "அல்ஃப்" - அ தந்தை பற்றிய நிச்சயம் இல்லை என்றால் பின் "பே" "(ஆஸ்தி) என்று அடுத்த விஷயங்கள் பற்றி கூற முற்படுவது நேரத்தை வீணடிப்பது (டைம் வேஸ்ட்) ஆகும். எவருடைய நாடியை யும் அறியாமல் இருக்கிறார்கள். திறந்து வைப்பவர் களுக்குக் கூட முதலில் தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். இவர் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஞானக்கடல் ஆவார். அவரே இந்த ஞானத்தை இப்பொழுது தான் அளிக்கிறார். சத்யுகத்தில் இந்த ஞானத்தின் அவசியம் இருப்பதில்லை. பின்னால் பக்தி ஆரம்பமாகிறது. துர்க்கதி அதாவது நிந்தனை செய்து முடித்து விடும் நேரம் வரும் பொழுது நான் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். அரைக்கல்பம் அவர்கள் நிந்தனை செய்தே ஆக வேண்டி உள்ளது. யாருக் கெல்லாம் பூஜை செய்கிறார்களோ அவர்களுடைய தொழில், காரியம் பற்றி அறியாமலே உள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் வந்து புரிய வைக்கிறீர்கள். ஆனால் சுயம் தங்களுக்கே பாபாவிடம் யோகம் இல்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன புரிய வைக்க முடியும்? சிவபாபா என்று கூறுகிறார்கள் என்றாலும் கூட, யோகத்தில் முற்றிலுமாக இருப்பது இல்லை என்றால் விகர்மங் களும் விநாசம் ஆவதில்லை (பாவங்கள் அழிவதில்லை) தாரணை ஆவது இல்லை. ஒரு தந்தையை நினைவு செய்வது என்பதே முக்கியமான விஷயம் ஆகும். எந்தக் குழந்தைகள் ஞான முடைய ஆத்மாவாக இருப்பதுடன் கூடவே யோகி ஆவதில்லையோ அவர்களிடம் தேக அபிமானத்தின் தன்மை அவசியம் இருக்கும். யோகம் இல்லாமல் புரிய வைப்பது எதற்கும் பயனில்லை. பிறகு தேக அபிமானத்தில் வந்து பிறரைத் தொல்லைப்டுத்திக் கொண்டே இருப்பார் கள். குழந்தைகள் நன்றாக சொற்பொழிவு ஆற்றினார்கள் என்றால் தாங்கள் ஞானமுடைய ஆத்மாக்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஞானமுடைய ஆத்மாக்கள் தான் ஆனால் யோகம் குறைவாக உள்ளது என்று தந்தை கூறுகிறார். யோகத்தில் புருஷார்த்தம் (முயற்சி) மிகவும் குறைவாக உள்ளது. சார்ட் வையுங்கள் என்று தந்தை எவ்வளவு புரிய வைக்கிறார். யோகத்தின் விஷயம் தான் முக்கியமானது. குழந்தைகளிடம் ஞானத்தைப் புரிய வைப்பதற்கான ஆர்வம் இருக்கிறது. ஆனால் யோகம் இல்லை. எனவே யோகமின்றி விகர்மங்கள் விநாசம் ஆக வில்லை என்றால், பின்னர் என்ன பதவி அடைவீர்கள்? யோகத்திலோ நிறைய குழந்தைகள் "ஃபெயில்" - தோல்வி அடைகிறார்கள். நாங்கள் 100 சதவிகிதம் உள்ளோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் 2 சதவிகிதம் தான் என்று பாபா கூறுகிறார். சுயம் பாபா கூறுகிறார், உணவு உட்கொள்ளும் பொழுது நினைவில் இருக்கிறேன். பிறகு மறந்து விடுகிறேன். ஸ்நானம் செய்கிறேன், அப்பொழுது கூட பாபாவை நினைவு செய்கிறேன். அவருடைய குழந்தையாகத் தான் இருக்கிறேன். பிறகும் நினைவு மறந்து விடுகிறது. இவர் முதல் நம்பரில் செல்லக் கூடியவர், அவசியம் ஞானம் மற்றும் யோகம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். பிறகும் பாபா கூறுகிறார் - "யோகத்தில் நிறைய உழைப்பு தேவை உள்ளது" முயற்சி செய்து பாருங்கள். பிறகு அனுபவத்தைக் கூறுங்கள். உதாரணமாக தையற்காரர் துணி தைக்கிறார் என்றால், பாபாவின் நினைவில் இருக்கிறேனா என்று பார்க்க வேண்டும். மிகவும் இனிமையான பிரியதரிசன் ஆவார். அவரை எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அப்போது நமது விகர்மங்கள் விநாசம் ஆகி விடும். நாம் சதோபிரதானமாக ஆகி விடுவோம். நான் எவ்வளவு நேரம் நினைவில் இருக்கிறேன் என்று தன்னைப்பார்க்க வேண்டும். பாபாவிற்கு ரிஸல்ட் கூற வேண்டும். நினைவில் இருப்பதால் தான் நன்மை ஆகும். மற்றபடி அதிகமாகப் புரிய வைப்பதால் நன்மை ஆகாது. எதுவுமே புரியாமல் உள்ளார்கள். "அல்ஃப்" தந்தை இன்றி காரியம் எப்படி நடக்கும்?. ஒரு அல்ஃப் தந்தை பற்றித் தெரியாது. மற்றபடி புள்ளி, புள்ளி ஆகிவிடுகிறது (அதாவது ஒன்றின் பின்னால் பூஜ்யம் (0) வைத்தால் மதிப்பு). அல்ஃப்- தந்தையுடன் கூடவே (பிந்து) புள்ளி கொடுக்கும் பொழுது நன்மை ஆகிறது. யோகம் இல்லை என்றால் நாள் முழுவதும் நேரத்தை வீணடித்து கொண்டே இருப்பார்கள். தந்தைக்கோ இரக்கம் ஏற்படுகிறது. இவர்கள் என்ன பதவி அடைவார்கள்! அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் தந்தையும் என்ன செய்ய முடியும்! தந்தையோ அடிக்கடி புரிய வைக்கிறார் - தெய்வீக குணங்களை நன்றாக எடுத்து வாருங் கள். தந்தையின் நினைவில் இருங்கள். நினைவு மிகவும் அவசியம் ஆகும். நினைவின் மீது அன்பு இருந்தது என்றால் தான் ஸ்ரீமத் படி நடக்க முடியும். பிரஜை களோ ஏராளமாக உருவாக வேண்டி உள்ளது. நீங்கள் இங்கு வந்திருப்பதே - இந்த லட்சுமி நாராயணராக ஆவதற்கு. இதில் உழைப்பு உள்ளது. சொர்க்கத் திற்குச் செல்வார்கள் தான் என்றாலும் கூட தண்டனைகள் வாங்கி பிறகு கடைசியில் வந்து சிறிதளவு பதவி அடைவார்கள். பாபாவோ எல்லா குழந்தைகளையும் அறிந்துள்ளார் அல்லவா? எந்த குழந்தைகள் யோகத்தில் அரை குறையாக இருக்கிறார்களோ அவர்கள் தேக அபிமானத் தில் வந்து கோபித்து கொண்டும் சண்டையிட்டு கொண்டும் இருப்பார் கள். யார் பக்குவமான யோகியாக இருப்பார்களோ அவர்களுடைய நடத்தை மிகவும் ராயலான தாகவும் (கம்பீரம்) சிறப்பானதாகவும் இருக்கும். மிகவும் குறைவாகப் பேசுவார்கள். யக்ஞ சேவை யில் கூட ஆர்வம் இருக்கும். யக்ஞ சேவையில் எலும்புகள் கூட போனாலும் போகட்டும். இது போல ஒரு சிலர் இருக்கவும் இருக்கிறார்கள். ஆனால் நினைவில் அதிகமாக இருந்தீர்கள் என்றால் தந்தையிடம் அன்பு இருக்கும் மற்றும் குஷியாக இருப்பீர்கள் என்று பாபா கூறுகிறார்.

நான் பாரத கண்டத்தில் தான் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். பாரதத்தைத் தான் நான் வந்து உயர்ந்ததாக ஆக்குகிறேன். சத்யுகத்தில் நீங்கள் உலகத்தின் அதிபதியாக இருந்தீர்கள். சத்கதி யில் இருந்தீர்கள், பிறகு துர்க்கதி செய்தது யார்? (இராவணன்). எப்பொழுது ஆரம்பமாகியது (துவாபர முதல்) அரைக்கல்பத்திற்கான சத்கதி ஒரு நொடியில் அடைகிறீர்கள். 21 பிறவிகளுக்கு ஆஸ்தி பெற்று கொண்டு விடுகிறீர்கள். எனவே எப்பொழுதுமே யாராவது ஒரு நல்ல மனிதர் வந்தார் என்றால் முதன் முதலில் அவருக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை கூறுகிறார் - குழந்தைகளே! இந்த ஞானத்தினால் தான் உங்களுக்கு சத்கதி ஆகும். இந்த நாடகம் விநாடிக்கு விநாடி நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது புத்தியில் நினைவு இருந்தது என்றாலும் கூட நீங்கள் நல்ல முறையில் ஸ்திரமாக இருப்பீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் பொழுது கூட இந்த சிருஷ்டி சக்கரம் பேன் போல எப்படி ஊர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது புத்தியில் இருக்கட்டும். விநாடிக்கு விநாடி டிக், டிக் என்று ஆகிக் கொண்டே இருக்கிறது. நாடகப்படி தான் முழு பார்ட் நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு விநாடி கடந்து விட்டது என்றால் முடிந்தது (ரோல்) சுற்றிக் கொண்டே இருக்கிறது. மிகவுமே மெது மெதுவாக சுற்றுகிறது. இது எல்லை யில்லாத நாடகமாகும். முதியவர்களாக இருப்பவர்களின் புத்தியில் இந்த விஷயங்கள் பதிய முடியாது. ஞானம் கூட பதிய முடியாது. யோகமும் இல்லை. பிறகும் குழந்தை களாகவே இருக்கிறார்கள். ஆம்! சேவை செய்பவர்களுடைய பதவி உயர்ந்த தாக இருக்கும். மற்றவர்களுடைய பதவி குறைவாக இருக்கும். இதனை உறுதியாக நினைவில் கொள்ளுங்கள். இது எல்லையில்லாத நாடகம் ஆகும். சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. எப்படி ரிகார்டு சுற்றிக் கொண்டே இருக்கிறது அல்லவா? நம்முடைய ஆத்மாவில் கூட இது போல ரிகார்டு நிரம்பி உள்ளது. சிறிய ஆத்மாவிற்குள் இவ்வளவு முழு பாகம் நிரம்பி உள்ளது. இதற்குத் தான் இயற்கை என்று கூறப்படுகிறது. பார்ப்பதற்கு எதுவுமே தென்படுவது இல்லை. இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். மழுங்கிய புத்தி உடையவர்கள் புரிந்து கொள்ள முடியாது. இதில் நாம் என்ன பேசிக் கொண்டே போகிறோமோ, நேரம் கடந்து கொண்டே போகிறது. பிறகு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு (ரிபீட் ஆகும்) திரும்ப நடை பெறும். இப்பேர்ப்பட்ட அறிவு பேறு யாரிடமும் கிடையாது. யார் மகாரதிகளாக இருப்பார்களோ அவர்கள் அடிக்கடி இந்த விஷயங்கள் மீது கவனம் கொடுத்து புரிய வைத்து கொண்டே இருப்பார் கள். எனவே பாபா கூறுகிறார் - முதன் முதலில் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்ற முடிச்சு போட்டு கொள்ளுங்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆத்மா இப்பொழுது வீடு செல்ல வேண்டி உள்ளது. தேகத்தின் எல்லா சம்பந்தங்களையும் விட்டு விட வேண்டும். கூடுமான வரை தந்தையை நினைவு செய்து கொண்டே இருங்கள். இந்த புருஷார்த்தம் (முயற்சி) மறைமுக மானதாகும். பாபா ஆலோசனை தருகிறார். அறிமுகம் கூட தந்தையினுடையதே கொடுங்கள். நினைவு குறைவாக செய்கிறார்கள். எனவே அறிமுகம் கூட குறைவாகவே கொடுக்கிறார்கள். முதலிலோ தந்தையின் அறிமுகம் புத்தியில் பதிய வேண்டும். உண்மையில் அவர் நமது தந்தை ஆவார் என்பதை இப்பொழுது எழுதுங்கள் என்று கூறுங்கள். தேகத்துடன் சேர்த்து அனைத்தையும் விட்டு விட்டு ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். நினைவினால் தான் நீங்கள் தமோபிரதான நிலை யிலிருந்து சதோபிரதானமாக ஆவீர்கள். முக்தி தாமம் மற்றும் ஜீவன் முக்தி தாமத்திலோ துக்கம் வேதனை இருப்பதே இல்லை. நாளுக்கு நாள் நல்ல விஷயங்கள் அதிகமாகப் புரிய வைக்கப்படுகிறது. தங்களுக்குள் கூட இதே விஷயங்களை உரையாடுங்கள். தகுதி உடைய வராகவும் ஆக வேண்டும் அல்லவா? பிராமணராக ஆகி பின் தந்தையின் ஆன்மீக சேவை செய்ய வில்லை என்றால் என்ன பயன்? படிப்பையோ நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும் அல்லவா? நிறைய பேருக்கு ஒரு எழுத்து கூட தாரணை ஆவதில்லை என்பதை பாபா அறிந்துள்ளார். சரியான முறையில் தந்தையை நினைவு செய்வது இல்லை. இராஜா இராணியின் பதவியை அடைவதில் உழைப்பு உள்ளது. யார் உழைக்கிறார்களோ, அவர்களே உயர்ந்த பதவியை அடைவார்கள். உழைத்தால் தானே அரசாட்சியில் வர முடியும். முதல் நம்பரில் வருபவர்களுக்குத் தான் ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. இந்த இலட்சுமி நாராயணர் ஸ்காலர்ஷிப் பெற்று விட்டவர்கள் ஆவார்கள். பிறகு வரிசைக்கிரமமாக உள்ளார்கள். மிகப் பெரிய தேர்வு ஆகும் அல்லவா? ஸ்காலர்ஷிப் பெறுபவர்களினுடையது தான் மாலை அமைக்கப்பட்டுள்ளது. 8 இரத்தினங்கள் இருக்கிறார்கள் அல்லவா? 8 பேர் உள்ளார்கள். பிறகு இருப்பது 100 பேர். பிறகு இருப்பவர்கள் 16000 பேர். எனவே மாலையில் கோர்க்கப்பட வேண்டும் என்றால் எவ்வளவு புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். உள்முகமாக இருப்பதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்வதன் மூலம் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு உரிமை உடையவர்களாக ஆகி விடுவீர்கள். நீங்கள் மிகவுமே உள்முகமாக இருக்க வேண்டும். தந்தையோ (கல்யாணகாரி) நன்மை செய்பவர் ஆவார். எனவே நன்மைக்கான ஆலோசனை தான் தருகிறார். நன்மையோ முழு உலகிற்கு ஆக வேண்டி உள்ளது. ஆனால் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். நீங்கள் இங்கு தந்தையிடம் படிப்பதற்காக வந்துள்ளீர்கள். உங்களிலும் கூட யார் படிப்பின் மீது கவனம் கொடுக்கிறார்களோ. அந்த மாணவர்கள் நல்லவர்கள் ஆவார்கள். ஒரு சிலரோ முற்றிலும் கவனம் அளிப்பதில்லை. எது பாக்கியத்தில் இருக்குமோ என்று கூட நிறைய பேர் நினைக்கிறார்கள். படிப்பிற்கான இலட்சியமே இல்லை. எனவே குழந்தைகள் நினைவிற்கான சார்ட் வைக்க வேண்டும். நாம் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஞானத்தையோ இங்கேயே விட்டு விட்டுச் செல்வோம். ஞானத்தின் பார்ட் முடிவடைகிறது. இவ்வளவு சிறிய ஆத்மாவிற்குள் எவ்வளவு பார்ட் உள்ளது. அதிசயம் ஆகும் அல்லவா? இது முழுமையாக அவினாஷி நாடகம் ஆகும். இவ்வாறாக நீங்கள் உள்முகமாக ஆகி உங்களிடமே உரையாடிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகவுமே குஷியாக இருக்கும் - ஆத்மா ஒரு பொழுதும் அழிந்து போவதில்லை என்ற இப்பேர்ப்பட்ட விஷயங்களை தந்தை கூறுகிறார் என்று. நாடகத்தில் ஒவ்வொரு மனிதனினுடையதும் ஒவ்வொரு பொருளி னுடையதும் பார்ட் பொருந்தி உள்ளது. இதை முடிவில்லாதது என்று கூட கூற மாட்டார்கள். முடிவை அடைகிறது. ஆனால் இருப்பதோ அநாதியாக. எவ்வளவு பொருட்கள் உள்ளன? இவற்றை இயற்கை என்று கூறலாமா! இறைவனினுடைய இயற்கை என்று கூட கூற முடியாது. எனக்கு கூட இதில் பார்ட் உள்ளது என்று அவர் கூறுகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யோகத்தில் நிறைய உழைப்பு உள்ளது. கர்மம் செய்யும் பொழுது எவ்வளவு நேரம் தந்தையின் நினைவு இருக்கிறது என்று (டிரயல்) முயற்சி செய்து பார்க்க வேண்டும். நினைவில் இருப்பதில் தான் நன்மை உள்ளது. இனிமையான பிரியதரிசனரை மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும். நினைவின் சார்ட் வைக்க வேண்டும்.

2. நுண்ணிய புத்தி மூலமாக இந்த நாடகத்தின் இரகசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது மிக மிக (கல்யாணகாரி) மங்களகரமான நாடகம் ஆகும். நாம் என்ன பேசுகிறோமோ அல்லது செய்கிறோமோ அது மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும். இதை சரியாக புரிந்து குஷியாக இருக்க வேண்டும்.

வரதானம்:
தனது சிரேஷ்ட வாழ்க்கை மூலம் பரமாத்ம ஞானத்தின் பிரத்தியட்ச நிரூபணம் கொடுக்கக் கூடிய மாயா ப்ரூஃப் ஆகுக.

தன்னை பரமாத்ம ஞானத்தின் பிரத்தியட்ச பிரமாணம் அல்லது நிரூபணம் எனப் புரிந்து கொள்வதால் மாயா ப்ரூஃப் ஆகி விடுவீர்கள். பிரத்தியட்ச நிரூபணம் -- உங்கள் சிரேஷ்ட பவித்திர வாழ்க்கை ஆகும். அனைத்திலும் பெரிய, நடக்க முடியாதது என்ற நிலையிலிருந்து நடக்கக் கூடிய தாக ஆகும் விஷயம் - இல்லறத்தில் இருந்து கொண்டே இதைக் கடந்த உள்ளுணர்வில் இருப்ப தாகும். தேகம் மற்றும் தேகத்தின் உலகத்திலிருந்து அப்பாற்பட்டு விலகி இருப்பதாகும். பழைய சரீரத்தின் கண்களால் பழைய உலகத்தின் பொருள்களைப் பார்த்தாலும் பார்க்காதிருக்க வேண்டும். அதாவது, சம்பூர்ண பவித்திர வாழ்க்கையை வாழ்வது - இது தான் பரமாத்மாவைப் பிரத்தியட்சம் செய்வதற்கான அல்லது மாயா ப்ரூஃப் ஆவதற்கான சகஜ சாதனமாகும்.

சுலோகன்:
கவனம் என்ற காவலாளி சரியாக இருந்தால் அதிந்திரிய சுகத்தின் கஜானா தொலைந்து போகாது.

அவ்யக்த இஷாரா : இணைந்த ரூபத்தின் ஸ்மிருதி மூலம் சதா வெற்றியாளர் ஆகுங்கள்

தந்தையைக் கம்பேனியனாகவோ ஆக்கியிருக்கிறீர்கள். இப்போது அவரை இணைந்த ரூபத்தில் அனுபவம் செய்யுங்கள். இந்த அனுபவத்தை ஸ்மிருதியில் கொண்டு வந்து, ஸ்மிருதி சொரூபம் ஆகி விடுங்கள். அடிக்கடி சோதித்துப் பாருங்கள் - இணைந்த ரூபத்தில் இருக்கிறேனா, விலகி விடாமல் இருக்கிறேனா? எவ்வளவு இணைந்த ரூபத்தின் அனுபவத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்களோ, அந்த அளவு பிராமண வாழ்க்கை மிகவும் அன்பான தாக, மனதை மகிழ்விப்பதாக அனுபவமாகும்.