09-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! எந்த சிவனுக்கு அனைவரும் பூஜை செய்கின்றனரோ, அவர் இப்போது நம்முடைய தந்தை ஆகியிருக்கிறார் என்ற நஷா (போதை) உங்களுக்கு இருக்க வேண்டும், நாம் அவருக்கு முன்னிலையில் அமர்ந்துள்ளோம்.

கேள்வி:
மனிதர்கள் பகவானிடம் எதற்காக மன்னிப்பு வேண்டுகின்றனர்? அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கின்றதா என்ன?

பதில்:
மனிதர்கள் நினைக்கின்றனர், நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையை பகவான் தர்மராஜா மூலம் அடைய வைப்பார் என்று. அதனால் மன்னிப்பு வேண்டுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களின் கர்மங்களுக்கான தண்டனையை கர்மபோகத்தின் ரூபத்தில் அனுபவித்தே ஆக வேண்டும். பகவான் அவர்களுக்கு எந்த ஒரு மருந்தும் தருவதில்லை. கர்ப்ப ஜெயிலிலும் கூட தண்டனை அனுபவிக்க வேண்டியதிருக்கும் - அதாவது நீ இன்னின்ன பாவங்கள் செய்திருக் கிறாய்,. ஈஸ்வரிய கட்டளைப்படி நடக்கவில்லை, அதனால் இந்த தண்டனை என்ற காட்சி கிடைக்கும்.

பாடல்:
நீ இரவைத் தூங்கியே கழித்தாய்.........

ஓம் சாந்தி.
இதை யார் சொன்னார்? ஆன்மிகத் தந்தை சொன்னார். அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். மனிதர்கள் அனைவரைக் காட்டிலும், ஆத்மாக்கள் அனைவரைக் காட்டிலும் கூட உயர்ந்தவர். அனைவருக் குள்ளும் ஆத்மா இருக்கத் தான் செய்கிறது இல்லையா? சரீரமோ பார்ட்டை நடிப்பதற்காகக் கிடைத்துள்ளது. இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள், சந்நியாசிகள் முதலானவர்களின் சரீரத்திற்கும் கூட எவ்வளவு மதிப்பு உள்ளது! தங்களின் குரு முதலானவர் களுக்கு எவ்வளவு மகிமை செய்கின்றனர்! இந்த எல்லையற்ற தந்தையோ மறைமுக மாக உள்ளார். குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், சிவபாபா உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். அவரை விட உயர்ந்தவர் எவரும் இல்லை. தர்மராஜரும் அவருடன் இருக்கிறார். ஏனென்றால் பக்தி மார்க்கத்தில் மன்னிப்புக் கேட்கின்றனர் - ஹே பகவானே! மன்னியுங்கள். இப்போது பகவான் என்ன செய்வார்? இங்கே அரசாங்கத்தினரோ சிறையில் அடைப்பார்கள். அந்த தர்மராஜர் கர்ப்ப ஜெயிலில் தண்டனை தருகிறார். தண்டனை யும் அனுபவிக்க வேண்டி உள்ளது. அதற்கு கர்ம போகம் எனச் சொல்லப்படுகின்றது. இப்போது நீங்கள் அறிவீர்கள், கர்மபோகத்தை யார் அனுபவிக் கிறார்? என்ன நடைபெறுகின்றது? சொல்கின்றனர், ஹே பிரபு, மன்னியுங்கள். துக்கத்தைப் போக்குங் கள், சுகம் கொடுங்கள். இப்போது பகவான் ஏதாவது மருந்து தருகிறாரா என்ன? அவரோ எதுவும் செய்ய முடியாது. அப்படியானால் பகவானை ஏன் அழைக்கின்றனர்? ஏனென்றால் பகவானுடன் கூடவே பிறகு தர்மராஜரும் இருக்கிறார். தீய கர்மம் செய்வதால் அவசியம் அதன் பலனை அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்ப்ப சிறையில் தண்டனையும் கிடைக்கின்றது. சாட்சாத்காரங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சாட்சாத்காரம் இல்லாமல் தண்டனை கிடைப்பதில்லை. கர்ப்ப சிறையிலோ எந்த ஒரு மருந்து முதலிய எதுவும் கிடையாது. அங்கே தண்டனை அடைய வேண்டி யுள்ளது. எப்போது துக்கம் அடைகின்றனரோ, அப்போது பகவானே, இந்தச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வாருங்கள் எனச் சொல்கின்றனர்.

இப்போது குழந்தைகள் நீங்கள் யாருக்கு முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள்? உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை, ஆனால் குப்தமாக (மறைமுகமாக) உள்ளார். மற்ற அனைவருக்குமோ சரீரத்தைப் பார்க்க முடிகின்றது. இங்கே சிவபாபாவுக்கோ, தமக்கென கை-கால்கள் எதுவும் கிடையாது. பூக்கள் முதலியவற்றையும் யார் பெற்றுக் கொள்வார்? இவருடைய (பிரம்மா) கையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், ஒருவேளை விரும்பினால் மட்டுமே ஆனால் யாரிடமும் பெற்றுக் கொள்வதில்லை. எப்படி இந்த சங்கராச்சாரியார் சொல்கிறார், என்னை யாரும் தொடக்கூடாது என்று! ஆக, பாபா சொல்கிறார், பதீதர்களாகிய உங்களுடையது எதையும் நான் எப்படிப் பெற்றுக் கொள்வேன்? எனக்குப் பூக்கள் முதலியவற்றின் தேவை கிடையாது. பக்தி மார்க்கத்தில் சோமநாத் முதலிய கோயில்களைக் கட்டுகின்றனர். பூக்களைப் போடுகின்றனர். ஆனால் எனக்கோ சரீரம் கிடையாது. ஆத்மாவை யாராவது எப்படித் தொடுவார்கள்? பதீதர்களிடமிருந்து நான் பூக்களை எப்படிப் பெற்றுக் கொள்வேன் எனக் கேட்கிறார். யாராலும் கை வைக்கவும் முடியாது. இன்று பாபா எனச் சொல்கின்றனர். நாளை பிறகு போய் நரகவாசி ஆகின்றனர். அப்படிப் பட்டவர் களையோ பார்க்கவும் கூடாது. பாபா சொல்கிறார்-நானோ உயர்ந்தவரிலும் உயர்ந்தவன். இந்த சந்நியாசிகள் அனைவரையும் கூட டிராமாவின் படி முன்னேற்றமடையச் செய்கிறேன். என்னை யாரும் அறிந்து கொள்ளவே இல்லை. சிவனுக்குப் பூஜை செய்கின்றனர். ஆனால் அவரைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை - இவர் தான் கீதையின் பகவான், இங்கே வந்து ஞானம் தருகிறார் என்று. கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டுள்ளனர். கிருஷ்ணர் ஞானம் கொடுத்தார் என்றால் மற்றப்படி சிவன் என்ன செய்திருப்பார்? ஆக, மனிதர்கள் நினைக்கின்றனர், அவர் வருவதே இல்லை என்று. அட, பதீத-பாவனர் கிருஷ்ணர் எனச்சொல்ல மாட்டார்கள். பதீத-பாவனர் என்று என்னைச் சொல்கின்றனர் இல்லையா? உங்களிலும் மிகச் சிலர் தான் இவ்வளவு மதிப்பு வைக்க முடியும். எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்! அவர் சொல்கிறார்-நான் இந்த சாதுக்கள் முதலான அனைவருக்கும் தந்தையாக இருக்கிறேன். சங்கராச்சாரியார் முதலான அனைவரின் ஆத்மாக்களுக்கும் நான் தந்தையாக உள்ளேன். சரீரங்களுக்கான தந்தையும் இருக்கத்தான் செய்கிறார், நானோ அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை. எனக்கு அனைவரும் பூஜை செய் கின்றனர். இப்போது அவர் இங்கே முன்னிலையில் அமர்ந்துள்ளார். ஆனால் நாம் யாருக்கு முன்னிலையில் அமர்ந்துள்ளோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவில்லை.

ஆத்மாக்கள் ஜென்ம-ஜென்மாந்தரமாக தேக அபிமானத்தில் தான் ஆத்மா என்பதை மறந்து விட்ட காரணத்தால் தந்தையை நினைவு செய்ய முடிவதில்லை. தேகத்தைத் தான் பார்க்கின்றனர். ஆத்ம அபிமானியாக இருந்தால் அந்தத் தந்தையை நினைவு செய்ய வேண்டும், தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். பாபா சொல்கிறார், என்னை அறிந்து கொள்வதற்காக அனைவருமே முயற்சி செய்கின்றனர். கடைசியில் முழு ஆத்ம அபிமானி ஆகிறவர்கள் தான் பாஸ் ஆவார்கள். மற்ற அனைவரிடமும் கொஞ்சம்-கொஞ்சம் தேக அபிமானம் இருக்கும். பாபாவோ குப்தமாக உள்ளார். அவருக்கு எதையும் கொடுக்க முடியாது. பெண் குழந்தைகள் சிவனுடைய ஆலயத்திற்கும் போய்ப் புரிய வைக்க முடியும். குமாரிகள் தான் சிவபாபாவின் அறிமுகம் கொடுத்துள்ளனர். அதுவும் குமார்-குமாரிகள் இருவருமே நிச்சயமாக உள்ளனர். குமார்களும் கூட அறிமுகம் கொடுத்திருப் பார்கள். மாதாக்களைக் குறிப்பாக உயர்த்துகிறார். ஏனென்றால் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் அதிக சேவை செய்துள்ளனர். ஆக, குழந்தைகளுக்கு சேவை செய்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். எப்படி அந்தப் படிப்பிலும் ஆர்வம் உள்ளது இல்லையா? அது சரீர சம்மந்தமானது, இது ஆன்மிக சம்மந்தமானது. சரீர தொடர்பான படிப்பினைப் படிப்பார்கள், டிரில் முதலியவற்றைக் கற்றுக் கொள்வார்கள். அதனால் எதுவும் கிடைக்கப்போவதில்லை. இப்போது யாருக்காவது குழந்தை பிறக்கிறதென வைத்துக் கொள்ளுங்கள். அதனுடைய பிறந்த ஆறாம் நாள் சடங்கு முதலியவற்றை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் அதனால் என்ன அடை கிறார்கள்? எதையும் அடைவதற்கான சமயமும் இல்லை. இங்கிருந்து சென்றும் பிறவி எடுக் கின்றனர். ஆனால் அவர்களும் எதையும் புரிந்து கொள்ளப் போவதில்லை. இங்கிருந்து பிரிந்து சென்றிருப்பார்களானால் யார் கற்றுக் கொண்டு சென்றிருப்பார்களோ, அதன்படி சிறு வயதிலேயே சிவபாபாவை நினைவு செய்து கொண்டிருப்பார்கள். இதுவோ மந்திரம் இல்லையா? சிறு குழந்தை களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். அவர்களேபிந்து முதலிய எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். சிவபாபா-சிவபாபா என்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். சிவபாபாவை நினைவு செய்வீர்களானால் சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவீர்கள். இதுபோல் அவர் களுக்குப் புரிய வைப்பீர் களானால் அவர்களும் சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள். ஆனால் உயர்ந்த பதவி பெற முடியாது. இதுபோல் அநேகக் குழந்தைகள் வருகின்றனர். சிவபாபா-சிவபாபா எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பிறகு அந்த் மதி ஸோ கதி (கடைசியில் என்ன நினைவோ, அந்த நிலை ஆகிவிடும்) ஆகி விடும்.இது இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது மனிதர்கள் சிவனுக்குப் பூஜை செய்கின்றனர்.ஆனால் எதையும் அறிந்திருக்கவில்லை-எப்படி சிறு குழந்தை சிவ-சிவ என்று சொல்லிக் கொண்டு எதையும் புரிந்து கொள்வதில்லையோ அதுபோல். இங்கேயும் பூஜை செய்கின்றனர். ஆனால் அறிமுகம் எதுவும் கிடையாது. ஆக, அவர்களுக்குச் சொல்ல வேண்டும்-நீங்கள் யாருக்குப் பூஜை செய்கிறீர்களோ, அவர் ஞானக்கடல், கீதையின் பகவான் என்பதாக. அவர் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். சிவபாபா நமக்கு இராஜயோகம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார் என்று இவ்வுலகில் வேறு எந்த ஒரு மனிதரும் சொல்ல முடியாது. இதை நீங்கள் மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். அதையும் மறந்து விடுகிறீர்கள். பகவான் சொல்கிறார், நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தருகிறேன். பகவான் வாக்கு, காமம் மகா சத்ரு என்று யார் சொன்னார்? இதன் மீது வெற்றி கொள்ளுங்கள். பழைய உலகத்தை சந்நியாசம் செய்யுங்கள். நீங்கள் ஹடயோகி, எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள். அவர் சங்கராச் சாரியார், இவர் சிவாச்சாரியார். இவர் நமக்குக் கற்றுத் தருகிறார். கிருஷ்ண ஆச்சாரியார் எனச் சொல்ல முடியாது. அவரோ சிறு குழந்தை. சத்யுகத்தில் ஞானத்தின் அவசியம் கிடையாது.

எங்கெங்கே சிவனுடைய ஆலயங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் குழந்தைகள் நீங்கள் நல்ல சேவை செய்ய முடியும். சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். மாதாக்கள் செல்வது நல்லது. கன்யாக் கள் சென்றால் அதைவிட நல்லது. இப்போதோ நாம் பாபாவிடமிருந்து இராஜ்ய பாக்கியத்தை அடைய வேண்டும். பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். பிறகு நாம் இராஜா-இராணி ஆவோம். உயர்ந்தவரிலும் உயர்ந்வராக பாபா தான் உள்ளார். இப்படிப்பட்ட கல்வியை எந்த ஒரு மனிதரும் கற்றுத்தர இயலாது. இது கலியுகம். சத்யுகத்தில் இவர்களுடைய (லட்சுமி-நாராயணர்) இராஜ்யம் இருந்தது. இவர்கள் இராஜா-இராணியாக எப்படி ஆனார்கள்? யார் இராஜயோகம் கற்பித் தார்கள்? அதனால் சத்யுகத்தின் மாலிக் (எஜமானர்) ஆனார்கள்? யாருக்கு நீங்கள் பூஜை செய் கிறீர்களோ, அவர் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து சத்யுகத்தின் மாலிக் (அதிபதி) ஆக்குகிறார். பிரம்மா மூலம் ஸ்தாபனை, விஷ்ணு மூலம் பாலனை........ பதீத் இல்லற மார்க்கத்தினர் தான் பாவன இல்லற மார்க்கத்தில் செல்கின்றனர். சொல்லவும் செய்கின்றனர், பாபா, பதீதர்களாகிய எங்களைப் பாவனமாக்குங்கள். பாவனமாக்கி இந்த தேவதையாக ஆக்குங்கள். அது இல்லற மார்க்கம். துறவற மார்க்கத்தினருக்கு குரு ஆவதில்லை. யார் பவித்திரமாக ஆகின்றனரோ, அவர் களுக்கு குரு ஆக முடியும். இதுபோல் அநேகம் பேர் துணை உள்ளனர். விகாரத்திற்காகத் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆக, குழந்தைகள் நீங்கள் இப்படி-இப்படி சேவை செய்ய முடியும். உள்ளுக்குள் ஆர்வம் இருக்க வேண்டும். நாம் பாபாவின் நல்ல குழந்தையாகி ஏன் போய் சேவை செய்யக் கூடாது? இந்த பழைய உலகத்தின் விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது.. இப்போது சிவபாபா சொல்கிறார், கிருஷ்ணரோ இருக்க முடியாது. அவரோ ஒரு முறை மட்டுமே சத்யுகத்தில் இருப்பார். 84 பிறவிகளில் 84 தோற்ற அமைப்புகள். கிருஷ்ணர் இந்த ஞானத்தை யாருக்கும் கற்றுத்தர இயலாது. அந்தக் கிருஷ்ணர் எப்படி இங்கே வருவார்? இப்போது நீங்கள் இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அரைக்கல்பத்துக்கு சிறப்பான (மேன்மையான) பிறவிகள் ஏற்படுகிறது. பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பமாகின்றது. மனிதர்கள் மிருகங்கள் போல் ஆகி விடுகின்றனர். ஒருவர் மற்றவரோடு சண்டை சச்சரவு செய்து கொண்டே உள்ளனர். அப்போது இராவணனின் ஜென்மம் ஆகிறது இல்லையா? மற்றப்படி 84 இலட்சம் பிறவிகளோ கிடையாது. இவ்வளவு விதவிதமாக உள்ளனர். அவ்வளவு ஜென்மங்கள் எடுப்பதில்லை. ஆக, இதை பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். அவர் கற்பிக்கிறார். அடுத்ததாகப் பிறகு இவரும் (பிரம்மா) கூட இருக்கிறார் இல்லையா? படிக்கவில்லை என்றால் யாரிடமாவது போய் தாச-தாசி (வேலைக்காரன், வேலைகாரி) ஆவார்கள். சிவபாபாவிடம் தாச-தாசிகளாக ஆவார்களா என்ன? பாபாவோ புரிய வைக்கிறார், படிக்கவில்லை என்றால் சத்யுகத்தில் போய் தாச-தாசிகளாக ஆவார்கள் என்று. யார் எந்த ஒரு சேவையும் செய்வ தில்லையோ, உண்பதும் அருந்துவதும் உறங்குவதுமாக இருந்தால் அவர்கள் என்னவாக ஆவார் கள்? நாமோ மகாராஜா ஆவோம். நமக்கு முன்பாகக் கூட வர மாட்டார்கள். தாங்களே புரிந்து கொண்டுள்ளனர்-இதுபோல் நாம் ஆவோம் என்று. ஆனால் பிறகும் கூட வெட்கம் உள்ளதா? நாம் நமது முன்னேற்றத்தை அமைத்துக் கொண்டு ஏதாவது பதவி பெற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதே இல்லை. அதனால் பாபா சொல்கிறார், இந்த பிரம்மா சொல்கிறார் எனப் புரிந்து கொள்ள வேண்டாம், எப்போதுமே சிவபாபா தான் சொல்கிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள். சிவபாபாவுக்கோ மதிப்பு வைக்க வேண்டும் இல்லையா? அவரோடு கூடவே பிறகு தர்மராஜரும் இருக்கிறார். இல்லையென்றால் தர்மராஜரின் தண்டனைகளையும் அதிகமாக அடைவீர்கள். குமாரி களோ மிகவும் சாமர்த்தியசாலிகளாக இருக்க வேண்டும். இங்கே கேட்டோம், வெளியில் சென்றால் எல்லாம் முடிந்தது என இருக்கக் கூடாது. பக்தி மார்க்கத்தில் எவ்வளவு சாதனங்கள் உள்ளன! இப்போது பாபா சொல்கிறார், விஷத்தை விட்டு விடுங்கள். சொர்க்கவாசி ஆகுங்கள். இப்படி-இப்படி சுலோகன்களை உருவாக்குங்கள். தைரியமுள்ள பெண் சிங்கங்களாக ஆகுங்கள். எல்லையற்ற தந்தை கிடைத்துவிட்டார். பிறகு என்ன கவலை? அரசாங்கத்தினர் தர்மத்தையே ஏற்றுக் கொள்வ தில்லை எனும்போது அவர்கள் பிறகு மனிதரில் இருந்து தேவதை ஆவதற்காக எப்படி வருவார் கள்? அவர்கள் சொல்கின்றனர், நாங்கள் எந்த ஒரு தர்மத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அனை வரையும் நாங்கள் ஒன்றாகவே நினைக்கிறோம். பிறகு சண்டை-சச்சரவு செய்வது ஏன்? பொய் என்றால் பொய் தான், உண்மை என்பது ஒரு சிறிதும் கிடையாது. முதல்-முதலில் ஈஸ்வரன் சர்வ வியாபி என்பதில் இருந்து தான் பொய் ஆரம்பமாகின்றது. இந்து தர்மம் என்பது எதுவும் கிடையாது. கிறிஸ்தவர்களுக்கு அவர்களது தர்மம் இருந்து வந்துள்ளது. அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதில்லை. இந்த ஒரு தர்மத்தினர் தான் தங்களின் தர்மத்தை மாற்றி இந்து எனச் சொல்லிக் கொள்கின்றனர். பிறகு பெயர்கள் எப்படி-எப்படியோ வைக்கின்றனர், ஸ்ரீஸ்ரீ இன்னார்.......... என்று. இப்போது ஸ்ரீ என்றால் சிரேஷ்டமானவராக எங்கே இருக்கிறார்கள்? ஸ்ரீமத் கூட யாரிடமும் கிடையாது. அவர்களுடையது இரும்பு யுகத்தின் (மத்) வழி. அதை ஸ்ரீமத் என்று எப்படிச் சொல்ல முடியும்? இப்போது குமாரிகள் நீங்கள் துணிந்து நில்லுங்கள். அப்போது யாருக்கு வேண்டு மானாலும் புரிய வைக்க முடியும். ஆனால் அதற்கு யோகயுக்த், நல்ல சாமர்த்திய சாலிகளான பெண் குழந்தைகள் வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தனது முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பாபாவின் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். வெறுமனே உண்பதும், அருந்துவதும், உறங்குவதுமாக இருந்தால் பதவியை இழப்பதாக ஆகும்.

2) பாபாவுக்கும் படிப்புக்கும் மதிப்பு வைக்க வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும். பாபாவின் போதனைகளை தாரணை செய்து நல்ல குழந்தையாக ஆக வேண்டும்.

வரதானம்:
சேவை செய்துக் கொண்டே உயர்ந்த ஸ்திதியில் இருக்கக்கூடிய யோகயுக்த், யுக்தி யுக்த் சேவாதாரி ஆகுக

யார் யோக யுக்த், யுக்தி யுக்த்தான சேவாதாரிகளோ அவர்கள் சேவை செய்தாலும் எப்போதும் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். சேவை அதிகமாக இருந்ததால் அசரீரி நிலையில் இருக்க முடியவில்லை என்று கூறமாட்டார்கள். இது என்னுடைய சேவை அல்ல, ஆனால் பாபா தந்தார் என்ற நினைவில் நிர்பந்தன் நிலையில் இருப்பார்கள், டிரஸ்டியாக இருப்பார்கள், பந்தன் முக்தாக இருப்பதற்கு பயிற்சி செய்யவும். ஆரம்ப காலத்திலும் கடைசி நேர நிலையில் இருக்கவும், கர்மாதீத் நிலையில் இருப்பதற்காக இவ்வாறு பயிற்சி செய்யவும். எவ்வாறு நடுநடுவே டிராபிக் கண்ட்ரோல் செய்கின்றீர்களோ அதேபோல் ஆரம்ப காலத்தில் கடைசி நேர நிலையினை அனுபவம் செய்யவும் அப்போது கடைசி நேரத்தில் மதிப்புடன் வெற்றி அடைந்து விடுவீர்கள்.

சுலோகன்:
சுப பாவனை காரணத்தை நிவாரணமாக மாற்றம் செய்து விடுகிறது.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக ராயல்டி (தெய்வீகத்தன்மை) மற்றும் ப்யூரிட்டி (தூய்மை) என்ற பர்சனாலிடியை (ஆளுமையை) தாரணை செய்யுங்கள்

தூய்மை என்பது பிராமண வாழ்க்கையின் விசேஷ பிறவியின் விசேஷம் ஆகும். தூய்மையான சங்கல்பம் தான் பிராமணர்களின் புத்திக்கு உணவாகும். தூய்மையான பார்வை தான் பிராமணர்களின் கண்ணின் ஒளியாகும். தூய்மையான செயல்கள் தான் பிராமண வாழ்க்கையின் விசேஷமான தொழிலாகும் ஆகும். தூய்மையான சம்மந்தம், தூய்மையான தொடர்பு தான் பிராமண வாழ்க்கையின் மரியாதை ஆகும். இந்தமாதிரியான மகான் குணத்தை (பொருள்) அடைவதற்கு தீவிரமாக முயற்சி செய்ய வேண்டாம், பிடிவாதமாக தன்னுடையதாக ஆக்காதீர்கள்.. இந்த தூய்மை உங்களுடைய வாழ்க்கையின் வரதானமாகும்.