09-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் முழு உலகத்திலும் சாந்தியின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யக் கூடிய பாபாவின் உதவியாளர்கள். இப்போது உங்கள் முன்பாக (கண்ணெதிரில்) சுகம்-சாந்தியின் உலகம் உள்ளது.

கேள்வி:
பாபா குழந்தைகளுக்கு எதற்காகக் கல்வி கற்பிக்கிறார்? கல்வியின் சாரம் என்ன?

பதில்:
பாபா தம்முடைய குழந்தைகளுக்கு சொர்க்கத்தின் இளவரசராக, உலகத்தின் எஜமானர் களாக ஆக்குவதற்கான கல்வி கற்றுத் தருகிறார். பாபா சொல்கிறார், கல்வியின் சாரமாவது, உலக சம்மந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தையம் விட்டு விடுங்கள். நம்மிடம் கோடி ரூபாய் உள்ளது இலட்சம் உள்ளது என நினைக்காதீர்கள். எதுவுமே கையில் வரப்போவதில்லை. நல்லபடியாகப் புருஷார்த்தம் செய்யுங்கள். படிப்பின் மீது கவனம் செலுத்துங்கள்.

பாடல்:
கடைசியில் அந்த நாளும் இன்று வந்தது........

ஓம் சாந்தி.
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள் - கடைசியில் உலகத்தில் சாந்திக்கான சமயம் வந்து விட்டது. அனைவரும் கேட்கின்றனர், சாந்தி எப்படி ஏற்படும் என்று. பிறகு யார் சரியான அறிவுரை தருகிறார்களோ, அவர்களுக்குப் பரிசு தருகின்றனர். நேருவும் கூட அறிவுரை தந்திருந் தார். சாந்தியோ ஏற்படவில்லை. அறிவுரை மட்டும் கொடுத்து விட்டுச் சென்றார். இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது - ஏதோ ஒரு சமயத்தில் உலகம் முழுவதிலும் சுகம், சாந்தி, செல்வம் முதலியவை இருந்தன. அது இப்போது இல்லை. மீண்டும் அது வரப்போகிறது.. சக்கரமோ சுற்றும் இல்லையா? இது சங்கமயுக பிராமணர்களாகிய உங்கள் புத்தியில் உள்ளது. உங்கள் புத்தியில் உள்ளது தங்கம். நீங்கள் அறிவீர்கள், பாரதம் மீண்டும் தங்கத்தால் ஆனதாக இருக்கும். பாரதம் தான் தங்கக் குருவி எனச் சொல்லப் படுகின்றது. மகிமையோ செய்கின்றனர் என்றாலும் பெயரளவுக்குத் தான். நீங்களோ இப்போது நடைமுறையில் முயற்சி செய்து கொண்டி ருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இன்னும் சில நாட்கள் தான். இந்த நரகத்தின் துக்கங்கள் அனைத்தும் மறந்து போகும். உங்களுடைய புத்தியில் இப்போது சுகத்தின் உலகம் கண் முன்னால் நின்று கொண்டுள்ளது. எப்படி முன்பு வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்றால் புரிந்து கொண்டி ருந்தனர், போய்ச் சேர்வதற்கு இன்னும் கொஞ்சம் நாள் உள்ளது என்று. ஏனென்றால் முன்பு வெளிநாட்டிலிருந்து வருவதற்கு அதிக சமயம் பிடித்தது. இப்போதோ ஏரோப்ளேனில் விரைவாக வந்து சேர்ந்து விடுகின்றனர். இப்போது குழந்தைகள் உங்களுடைய புத்தியில் உள்ளது, இப்போது நம்முடைய சுகத்தின் நாட்கள் வரப் போகின்றன. அதற்காகவே முயற்சி செய்து கொண்டிருக் கிறோம். பாபா புருஷார்த்தமும் மிக எளிமையாகச் சொல்லித்தருகிறார். டிராமாவின் அனுசாரம் கல்பத்திற்கு முன் போலவே இது நிச்சயம் நடக்கும். நீங்கள் தேவதையாக இருந்தீர்கள். தேவதை களுக்கு எவ்வளவு ஏராளமான கோவில்கள் கட்டிக் கொண்டுள்ளனர்! குழந்தைகள் அறிவார்கள், இந்தக் கோவில்கள் முதலியவற்றைக் கட்டி என்ன செய்வார்கள்? இன்னும் எவ்வளவு நாள் மீதி உள்ளது? குழந்தைகள் நீங்கள் ஞானத்தின் அத்தாரிட்டி. பரமபிதா பரமாத்மா சர்வசக்திவான், ஆல்மைட்டி அத்தாரிட்டி என்றும் சொல்லப்படுகின்றது. நீங்கள் ஞானத்தின் அத்தாரிட்டி. அவர்கள் பக்தியின் அத்தாரிட்டி. பாபா ஆல்மைட்டி அத்தாரிட்டி எனச் சொல்லப் படுகிறார். குழந்தைகள் நீங்கள் நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் அதுபோல் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் உள்ளது. பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். யார் பக்தியின் அத்தாரிட்டியாக இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் பக்தியைத் தான் சொல் கின்றனர். நீங்கள் ஞானத்தின் அத்தாரிட்டி என்றால் ஞானத்தையே சொல்கிறீர்கள். சத்யுகத்தில் பக்தி இருப்பதில்லை. பூஜாரி ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். அனைவரும் அங்கே பூஜைக் குரியவர் களாகவே இருப்பார்கள். அரைக்கல்பம் பூஜைக்குரியவர்கள், அரைக்கல்பம் பூஜாரிகள். பூஜைக்குரியவர்கள் என்றால் பாரதவாசிகளுக்காகவே தான் - எனவே அது சொர்க்கம் . இப்போது பாரதம் பூஜாரி, நரகமாக உள்ளது. குழந்தைகள் நீங்கள் இப்போது நடைமுறையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள், அபிவிருத்தியை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். டிராமா வில் முதலிலேயே விதிக்கப் பட்டுள்ளது. டிராமா உங்களைப் புருஷாôத்தம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், டிராமாவில் நமக்கு அவிநாசி பாகம் உள்ளது. உலகம் இந்த விசயங்களைப் பற்றி என்ன அறியும்? நமக்குத் தான் டிராமாவில் பாகம் உள்ளது. யார் இதை சொல்வார்களோ, அவர்கள் தான் புரிந்து கொள்வார் கள், எப்படி நமக்கு இந்த டிராமாவில் பாகம் உள்ளது என்று? இந்த சிருஷ்டிச் சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது. இந்த உலகத்தின் சரித்திர-பூகோளம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் யார் என்பது உலகத்தில் யாருக்குமே தெரியாது. ரிஷி-முனி போன்றவர்களும் சொல்லி வந்தனர்-எங்களுக்குத் தெரியாது என்று. நேத்தி-நேத்தி (தெரியாது-தெரியாது) என்று சொல்லி வந்தனர் இல்லையா? இப்போது குழந்தைகளாகிய நீங்களோ அறிந்து கொண்டிருக்கிறீர்கள், அவர் படைப்பவராகிய தந்தை, அவர் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். இதையும் பாபா அடிக்கடி சொல்லிப் புரிய வைத்துள்ளார்-இங்கே அனைவரும் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் ஆத்ம அபிமானியாகி அமர்ந்திருங்கள். ஒரு தந்தை தான் இராஜயோகம் கற்பிக்கிறார். மேலும் உலகத்தின் சரித்திர-பூகோளத்தைப் புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார், நான் ஒன்றும் தாட் ரீடர் (மனித மனத்திலுள்ள எண்ணங்களை அறிந்து கொள்வது) கிடையாது. இவ்வளவு பெரிய உலகம்! இதில் உட்கார்ந்து எதை ரீட் பண்ணுவது? பாபாவோ தானே சொல்கிறார், உங்களைப் பாவனமாக்குவதற்காக டிராமாவில் விதிக்கப்பட்டவாறு வருகிறேன், டிராமாவில் என்ன பாகம் உள்ளதோ, அதை நடிப்பதற்காக வந்துள்ளேன். மற்றப்படி நான் ஒன்றும் தாட் ரீடர் அல்ல. என்னுடைய பாகம் என்ன, நீங்கள் என்ன பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் சொல்கிறேன். நீங்கள் இந்த ஞானத்தைக் கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய பாகமே பதீதர்களைப் பாவனமாக்குவதாகும். இதையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாள்-கிழமை அனைத்தும் உங்களுக்குத் தெரியும். உலகத்தில் யாருக்கும் இது தெரியாது. உங்களுக்கு பாபா கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். பிறகு எப்போது இந்தச் சக்கரத்தைச் சுற்றி முடிக்கிறீர்களோ, அப்போது மீண்டும் பாபா வருவார். அந்த சமயம் எந்தக் காட்சி நடைபெற்றதோ, அது மீண்டும் கல்பத்திற்குப் பிறகு நடைபெறும். ஒரு விநாடி இன்னொன்றைப் போல் இருக்காது. இந்த நாடகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற நாடகத்தைப் பற்றித் தெரியும். பிறகும் நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். பாபா சொல்கிறார், நீங்கள் நினைவு மட்டும் செய்யுங்கள், நம்முடைய பாபா, தந்தையாக இருக்கிறார், அவரே ஆசிரியராகவும் இருக் கிறார், குருவாகவும் இருக்கிறார். உங்கள் புத்தி எல்லைக்கப்பால் சென்றுவிட வேண்டும். தந்தை யின் மகிமை கேட்டு ஆத்மா குஷியாகி விடுகிறது. அனைவரும் சொல்கின்றனர், நம்முடைய தந்தை தந்தையாக, ஆசிரியராக, அவர் உண்மை யிலும் உண்மையானவராக உள்ளார். அவர் சொல்லித் தரும் படிப்பும் உண்மையானது, முழுமையானது. அந்த மனிதர்களின் படிப்பு அரை குறையானது. ஆக, குழந்தைகள் உங்கள் புத்தியில் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! பெரிய பரீட்சை பாஸ் செய்கிறவர்களின் புத்தியில் அதிகக் குஷி இருக்கும். நீங்கள் எவ்வளவு உயர்ந்த படிப்பு படிக்கிறீர்கள் என்றால் எவ்வளவு அளவற்ற குஷி இருக்க வேண்டும்! பகவான் பாபா, எல்லை யற்ற தந்தை நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு மெய்சி-ர்க்க வேண்டும். அதே எப்பிஸோட் (தொடர்கதை) ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது. உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. கல்பத்தின் ஆயுளையே அதிகமாக ஆக்கி விட்டுள்ளனர். உங்களுடைய புத்தியில் இப்போது 5000 வருடங்களின் முழுக் கதையும் சக்கரமாகச் சுற்றிக் கொண்டுள்ளது. இது தான் சுயதரிசனச் சக்கரம் எனச் சொல்லப் படுகின்றது.

குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, புயல்கள் அதிகம் வருகின்றன. நாங்கள் மறந்து போகிறோம். பாபா சொல்கிறார், நீங்கள் யாரை மறந்து போகிறீர்கள்? உங்களை இரட்டைக் கிரீடமணிந்த உலகின் எஜமானராக ஆக்குகிற பாபாவை நீங்கள் எப்படி மறக்கிறீர்கள்? வேறு யாரையும் நீங்கள் மறப்ப தில்லை. மனைவி, குழந்தை-குட்டிகள், சித்தப்பா-பெரியப்பா, மாமா, உற்றார் உறவினர் எல்லாம் நினைவுள்ளது. மற்றபடி இந்த விசயத்தை நீங்கள் ஏன் மறந்து விடுகிறீர்கள்? உங்களுடைய யுத்தம் இந்த நினைவில் இருக்கிறது. எவ்வளவு முடியுமோ நினைவு செய்ய வேண்டும். குழந்தைகள் தங்களின் முன்னேற்றத்திற்காக அதிகாலையில் எழுந்து பாபாவின் நினைவில் சுற்றிவர வேண்டும். நீங்கள் திறந்த மேல் மாடிக்கோ அல்லது வெளியில் இதமான குளிர்ந்த காற்றிலோ சென்று விடுங்கள். இங்கேயே வந்து அமர்ந்து கொள்ளத் தேவையில்லை. வெளியிலும் செல்லலாம். காலை நேரத்தில் பயப்படுவதற்கான விசயம் எதுவும் இருக்காது. வெளியில் போய் நடந்து செல்லுங்கள். தங்களுக்குள் இதே விசயங்களைப் பேசிக் கொள்ளுங்கள் - பாபாவை யார் அதிகம் நினைவு செய்கிறார்கள் என்று பார்க்கலாம், பிறகு சொல்ல வேண்டும், எவ்வளவு நேரம் நான் நினைவு செய்தேன் என்று. மற்ற சமயங்களில் நமது புத்தி எங்கெங்கே சென்றது? இது போன்ற உரையாடல் தான் ஒருவர் மற்றவருக்குள் முன்னேற்றத்தை அடைவது எனப்படும். எவ்வளவு நேரம் பாபாவை நினைவு செய்தோம் என்று குறித்து வையுங்கள். பாபாவுக்கு என்ன நடைமுறை பயிற்சி இருந்ததோ, அதைச் சொல்கிறார். நினைவில் நீங்கள் ஒரு மணி நேரம் நடந்து செல்வீர்களானால் கூட கால்கள் களைத்துப் போகாது. நினைவினால் உங்களுடைய எவ்வளவு பாவங்கள் நீங்கும்! சக்கரத்தையோ நீங்கள் அறிவீர்கள். நாம் இப்போது வீட்டுக்குச் செல்கிறோம். இரவும் பகலும் உங்களுக்கு இது தான் புத்தியில் உள்ளது-முயற்சி செய்கிறீர்கள், கலியுக மனிதர் களுக்கு எதுவுமே தெரியாது-முக்திக்காக எவ்வளவு பக்தி செய்து கொண்டே இருக்கின்றனர்! அநேக வழிமுறைகள் உள்ளன. பிராமணர்களாகிய உங்களுக்கு ஒரே ஒரு வழிமுறை. பிராமண ராக ஆகின்ற அனைவருக்கும் ஸ்ரீமத் உள்ளது. நீங்கள் பாபாவின் ஸ்ரீமத் மூலம் தேவதை ஆகிறீர் கள். தேவதைகளுக்கு ஸ்ரீமத் எதுவும் கிடையாது. ஸ்ரீமத் இப்போது தான் பிராமணர்களாகிய உங்களுக்குக் கிடைக்கின்றது. பகவான் நிராகாராக உள்ளார். அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார், அதன் மூலம் நீங்கள் உங்களுடைய இராஜ்ய- பாக்கியத்தைப் பெற்று எவ்வளவு உயர்ந்த, உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள்! பக்தி மார்க்கத்தின் வேத-சாஸ்திரங்கள் எவ்வளவு ஏராளமாக உள்ளன! ஆனால் ஒரு கீதை மட்டும் பயனுள்ளதாக இருக்கிறது. பகவான் வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். அதுவே கீதை எனச் சொல்லப்படுகின்றது.

இப்போது நீங்கள் பாபாவிடம் படிக்கிறீர்கள். இதன் மூலம் சொர்க்கத்தின் இராஜ்யத்தை அடை கிறீர்கள். யார் படித்தார்களோ, அவர்கள் அடைந்தார்கள். டிராமாவில் பார்ட் உள்ளது இல்லையா? ஞானம் சொல்பவர் ஞானக்கடல் ஒரே ஒரு பாபா மட்டுமே. அவர் டிராமா பிளான் படி கலியுகக் கடைசி மற்றும் சத்யுக ஆரம்பத்தின் சங்கமத்தில் தான் வருகிறார். எந்த ஒரு விசயத்திலும் குழம்பிப் போகாதீர்கள். பாபா இந்த பிரம்மாவின் சரீரத்தில் வந்து படிப்பு சொல்லித் தருகிறார். வேறு யாரும் சொல்லித் தர முடியாது. இவரும் (பிரம்மா) கூட முன்பு யாரிடமாவது படித்திருக் கிறார் என்றால் அவரைக் காட்டிலும் அதிகமாகப் படித்தவராக இருந்தார். பாபாவோ சொல்கிறார், இந்த குருமார் முதலான அனைவரையும் உயர்த்துவதற்காக நான் வருகிறேன். இப்போது குழந்தை களாகிய உங்களுடைய நோக்கம்-குறிக்கோள் உங்கள் முன் நின்று கொண்டுள்ளது. நாம் இதுபோல் ஆகிறோம். இதுவே நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான சத்தியமான கதை. இதற்குப் பிறகு பக்தி மார்க்கத்தில் மகிமை நடைபெறுகின்றது. பக்தி மார்க்கத்தின் வழக்கம் நடைபெற்றே வந்துள்ளது. இப்போது இந்த இராவண இராஜ்யம் முடிவடையப் போகின்றது. நீங்கள் இப்போது தசரா முதலியவற்றிற்குச் செல்வதில்லை. நீங்களோ இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று புரிய வைப்பீர்கள். இதுவோ சிறு குழந்தைகளின் காரியம். பெரிய-பெரிய மனிதர்கள் பார்க்க வருகின்றனர். இராவணனை எப்படி எரிக்கின்றனர், இந்த இராவணன் யார் என்று யாராலும் சொல்ல முடியாது. இராவண இராஜ்யம் இல்லையா? தசரா முதலியவற்றில் எவ்வளவு மகிழ்ச்சியைக் கொண்டாடு கின்றனர்! அதில் இராவணனை எரித்தே வந்துள்ளனர். துக்கமும் இருந்தே வந்துள்ளது. எதையும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக் கிறீர்கள், நாம் எவ்வளவு புத்தியற்றவர்களாக இருந்தோம் என்று. இராவணன் புத்தியற்றவர்களாக ஆக்கி விட்டான். இப்போது நீங்கள் சொல்கிறீர்கள், பாபா, நாங்கள் இலட்சுமி-நாராயணராக அவசியம் ஆவோம். நாங்கள் ஒன்றும் குறைவான புருஷார்த்தம் செய்ய மாட்டோம். இது ஒரே பாடசாலை, படிப்பு மிகவும் சுலபமானது. வயது முதிர்ந்த மாதாக்கள் வேறு எதையும் நினைவு செய்ய இயலவில்லை என்றாலும் பாபாவை மட்டும் நினைவு செய்ய வேண்டும். வாயினால் இராம் என்று சொல்லவோ செய்கின்றனர் இல்லையா? பாபா இதை மிகவும் சகஜமாக்கி சொல்கிறார், நீங்கள் ஆத்மா, பரமாத்மா வாகிய தந்தையை நினைவு செய்வீர்களானால் உங்கள் துன்பங்கள் நீங்கி விடும். எங்கே சென்று விடுவீர்கள்? சாந்திதாமம்-சுகதாமத்திற்கு. மற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். என்னென்ன கேட்டிருப்பீர்களோ, படித்திருப் பீர்களோ, அவை யனைத்தையும் மறந்து தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்வீர்களானால் பாபாவிடமிருந்து நிச்சயமாக ஆஸ்தி கிடைக்கும். பாபாவின் நினைவின் மூலம் தான் பாவங்கள் நீங்கும். எவ்வளவு சுலபம்! சொல்லவும் செய்கின்றனர், புருவ மத்தியில் நட்சத்திரம் ஜொலிக் கின்றது என்று. ஆக, நிச்சயமாக அவ்வளவு சிறிய ஆத்மாவாக இருக்கும் அல்லவா? ஆத்மாவைப் பார்ப்பதற்கு டாக்டர்கள் அதிக முயற்சி செய்கின்றனர். ஆனால் அது மிகவும் சூட்சுமமானது. அறிவியல் சோதனை முதலியவற்றினால் யாராலும் பார்க்க இயலாது. பாபாவும் இதுபோலவே ஒரு புள்ளியாக உள்ளார். பாபா சொல்கிறார்-எப்படி நீங்கள் சாதாரணமாக இருக்கிறீர்களோ, அது போல் நானும் கூட சாதாரணமாகி உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறேன். இவர்களுக்கு பகவான் படிப்பு சொல்லித் தருகிறார் என்று யாருக்கு என்ன தெரியும்? கிருஷ்ணர் படிப்பு சொல்லித் தருவாரானால் அமெரிக்கா, ஜப்பான் முதலிய அனைத்துத் தரப்பிலிருந்தும் வந்து விடுவார்கள். அவரிடம் அவ்வளவு கவர்ச்சி உள்ளது. அனைவருக்குமே கிருஷ்ணரிடம் அன்பு உள்ளது, இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் தான் அதுபோல் ஆகிக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணர் இளவரசர், கிருஷ்ணரை மடியில் எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர் என்றால் புருஷார்த்தம் செய்ய வேண்டும். பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. பாபா தம்முடைய குழந்தைகளை சொர்க்கத்தின் இளவரசராக, உலகத்தின் எஜமானர்களாக ஆக்குவதற்காகப் படிப்பு சொல்லித் தருகிறார்.

பாபா சொல்கிறார்- குழந்தைகளே, படிப்பின் சாராம்சம் - உலகத்தின் அனைத்து விஷயங்களையும் விட்டு விடுங்கள். நம்மிடம் கோடி உள்ளது, லட்சம் உள்ளது என்றெல்லாம் ஒருபோதும் நினைக்கா தீர்கள். எதுவும் கையில் வரப்போவதில்லை. அதனால் நல்லபடியாகப் புருஷார்த்தம் செய்யுங்கள். பாபாவிடம் வருகின்றனர் என்றால் பாபா புகார் செய்கிறார், 8 மாதமாக வகுப்பிற்கு வருகிறீர்கள். யாரிடமிருந்து இராஜ்ய பதவி கிடைக்கிறதோ, அவருடன் இதுவரையிலும் சந்தித்ததே இல்லை. சொல்கின்றனர், பாபா, இன்ன வேலை இருந்தது. அட, நீங்கள் இறந்து விட்டால் பிறகு இங்கே எப்படி வருவீர்கள்? இந்த சாக்குப்போக்கு செல்லுபடியாகாது. பாபா இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் கற்றுக் கொள்வதில்லை. யார் அதிக பக்தி செய்துள்ளனரோ, அவர்களுக்கு 7 நாள் என்ன, ஒரு விநாடியில் கூட அம்பு தைக்க முடியும். ஒரு விநாடியில் உலகத்தின் எஜமானர் ஆக முடியும். இவர் தானே அனுபவசாலியாக(பிரம்மா) அமர்ந்துள்ளார். விநாசக் காட்சியைப் பார்த்தார். சதுர்புஜ ரூபத்தைப் பார்த்தார். அவ்வளவு தான், புரிந்து கொண்டார்- ஓஹோ! நாம் உலகத்தின் எஜமானர் ஆகப்போகிறோம்! சாட்சாத்காரம் கிடைத்தது, ஊக்கம் வந்தது. உடனே அனைத்தையும் விட்டு விட்டார். இங்கே குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும், பாபா வந்துள்ளார், உலக இராஜ்ய பதவி தருவதற்காக. பாபா கேட்கிறார், நிச்சயம் எப்போது ஏற்பட்டது என்று. அப்போது சொல்கின்றனர், 8 மாதம் ஆகிறது என்று. பாபா புரிய வைத்துள்ளார், முக்கியமான விஷயம் நினைவு மற்றும் ஞானம். மற்றபடி காட்சி பார்ப்பது ஒன்றுக்கும் ஆகாது. தந்தையை அறிந்து கொண்டு விட்டால் பிறகு படிக்கத் தொடங்குங்கள். அப்போது நீங்களும் இது போல் (தேவதை) ஆகி விடுவீர்கள். பாயின்ட்டுகள் கிடைக்கின்றன. அவற்றை யாருக்கு வேண்டு மானாலும் நீங்கள் புரிய வைக்க முடியும். மிக இனிமையாகப் புரிய வையுங்கள். பதீத பாவனராகிய சிவபாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் பாவனமாகி பாவன உலகத்தின் மாலிக் (எஜமானன்) ஆகி விடுவீர்கள். யுக்தியோடு புரிய வைக்க வேண்டும். நீங்கள் விரும்புகிறீர்கள் இல்லையா, கடவுளாகிய தந்தை நம்மை இந்தத் துன்பத்திலிருந்து விடுவித்து இனிமையான வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று? நல்லது, இப்போது உங்கள் மீது கறை படிந்துள்ளது. அதற்காக பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தை களுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) அதிகாலையில் எழுந்து நடந்து கொண்டே பாபாவை நினைவு செய்யுங்கள். உங்களுக்குள் ஒருவருக்கொருவர் இது போன்ற இனிமையான ஆன்மிக உரையாடல் செய்யுங்கள் - யார் எவ்வளவு நேரம் பாபாவை நினைவு செய்கிறார்கள் எனப் பார்க்கலாம், பிறகு தங்களின் அனுபவம் சொல்லுங்கள்.

2) தந்தையை அறிந்து கொண்டு விட்டீர்களானால் பிறகு எந்த ஒரு சாக்குப் போக்கும் சொல்லக் கூடாது. படிப்பில் ஈடுபட்டுவிட வேண்டும். முரளியை ஒருபோதும் தவறவிடக் கூடாது..

வரதானம்:
அனைவரிடமும் குணங்களைப் பார்த்தாலும் தந்தையின் குணங்களைதன்னுள் தாரணை செய்பவராக குணமூர்த்தி ஆகுக !

சங்கமயுகத்தில் எந்த குழந்தைகள் குணமெனும் மாலையை கையாளுவாரோ அவரே வெற்றி மாலையின் வருகின்றார். எனவே தூய அன்னப் பறவையாகி அனைவரிடமும் குணத்தையே பாருங்கள். ஒரு தந்தையின் குணங்களையே தன்னுள் கொண்டு வாருங்கள். இந்த குணமாலை அனைவர் கழுத்திலும் உள்ளது. ஒருவர் தந்தையின் குணங்களை எந்தளவிற்கு கொண்டு வருவாரோ அந்தளவு மாலை பெரியதாகும். குணங்களை சிந்தனை செய்வதால் தானும் குண மூர்த்தி ஆவீர்கள். இதன் நினைவாகவே தேவதைகள் மற்றும் சக்திகளின் கழுத்தில் மாலையை காண்பிக்கின்றனர்.

சுலோகன்:
சாட்சியெனும் (பார்வையாளர்) மனோ நிலையே சரியாக நிர்ணயம் செய்வதற்கான ஆசனம் ஆகும்.

அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்.

உள்நோக்கு முகமாகி செயல் புரிந்தால் தடைகளிலிருந்து வீண் எண்ணங்களிலிருந்து தப்பித்து விடுவீர்கள். நேரமும் மீதமாகும். உள்நோக்கு முகமாகி இருப்பதால் நினைவுகள் சக்திசாலி ஆகின்றது மேலும் ஆத்மா எனும் கண் சக்திசாலியாகிவிடும். இதனால் வர இருக்கின்ற தடைகளும் தானாகவே இன்று சோதனை வருமென்று தெரியவரும். எந்தளவு முன்னதாகவே தென்படுமோ புத்திசாலி ஆவதால் வெற்றி அடைவீர்கள்.