10-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இலட்சியத்தை சதா
முன்னால் வைத்தீர்கள் என்றால் தெய்வீக குணங்கள் வந்து கொண்டே
இருக்கும். இப்பொழுது தங்கள் மீது கவனம் கொள்ள வேண்டும். அசுர
குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.
கேள்வி:
நீடூழி வாழ்க என்ற வரதானம்
கிடைத்துள்ள போதும் கூட நீண்ட ஆயுளுக்காக எந்த ஒரு முயற்சி
செய்ய வேண்டும்?
பதில்:
நீண்ட ஆயுளுக்காக தமோ
பிரதானத்தி-ருந்து சதோ பிரதானமாக ஆகும் முயற்சி செய்யுங் கள்.
எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்கின்றீர்களோ அந்த அளவு சதோ
பிரதானமாக ஆவீர்கள் மற்றும் ஆயுள் அதிகமாகி விடும். பிறகு மரண
பயம் நீங்கி விடும். நினைவினால் துக்கம் தூரமாகப் போய்விடும்.
நீங்கள் மலராக ஆகிவிடுவீர்கள். நினைவில் தான் மறைமுக
சம்பாத்தியம் உள்ளது. நினைவினால் பாவங்கள் அழிந்துவிடுகின்றன.
ஆத்மா இலேசாகிவிடு கிறது. ஆயுள் நீண்டுவிடுகிறது.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு பாபா புரிய
வைத்துக் கொண்டு இருக்கின்றார், படிப்பித்துக் கொண்டும்
இருக்கின்றார், என்ன புரிய வைத்துக் கொண்டிருக் கின்றார்?
இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு அதிகமான ஆயுள் தேவை. ஏனெனில்
உங்களுக்கு மிகவும் நீண்ட ஆயுள் இருந்தது. 150 வருடங்களின்
ஆயுள் இருந்தது, நீண்ட ஆயுள் எப்படிக் கிடைக்கின்றது?
தமோபிரதானத்தி-ருந்து சதோ பிரதானமாக ஆவதால் ஆயுள் அதிகமாக
ஆகின்றது. எப்போது தமோ பிரதானத்தி-ருந்து சதோபிரதானமாக
இருக்கிறீர்களோ உங்கள் ஆயுள் மிகவும் நீண்டதாக இருந்தது.
இப்பொழுது நீங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கின்றீர்கள். நாம் தமோ
பிரதானம் ஆகும்பொழுது நம் ஆயுள் குறைந்துவிட்டுள்ளது என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இல்லை,
முற்றிலுமே நோயாளி ஆகிவிட்டுள்ளோம். இந்த வாழ்க்கை பழையது,
புதியதுடன் ஒப்பிடப்படுகின்றது இப்பொழுது தந்தை நமக்கு நீண்ட
ஆயுள் அமைப் பதற்கான யுக்தி கூறுகின்றார். இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே! என்னை நினைவு செய்தீர்கள் என்றால் எப்படி
நீங்கள் சதோ பிரதானமாக, நீண்ட ஆயுள் உடையவர்களாக, ஆரோக் கியமாக
இருந்தீர்களோ அவ்வாறே மீண்டும் ஆகிவிடுவீர்கள். குறுகிய ஆயுளாக
இருக்கும்பொழுது மரணம் பற்றிய பயமிருக்கும். சத்யுகத்தில்
ஒருபொழுதும் இது போல திடீரென மரணம் ஏற்படாது என்ற உத்திரவாதம்
உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. தந்தையை நினைவு செய்துக்
கொண்டு இருந்தீர்கள் என்றால் ஆயுள் நீண்டுவிடும். மற்றும் எல்லா
வித துக்கங்களும் நீங்கிப் போய்விடும், எந்த விதமான துக்கமும்
இருக்காது. வேறு என்ன வேண்டும்? உங்களுக்கு உயர்ந்த பதவியும்
வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் இப்பேர்ப்பட்ட பதவி
கூட கிடைக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருந்தது.
இப்பொழுது தந்தை இவ்வாறு செய்யுங்கள் என்று யுக்தி கூறுகின்றார்.
இலட்சியம் முன்னால் உள்ளது, நீங்கள் இதுபோன்ற பதவியை அடைய
முடியும். இங்கேயே தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.
எனக்குள் எந்த ஒரு அவ குணமும் இல்லையே என்று தங்களிடமே கேட்க
வேண்டும். அவ குணங்கள் கூட அநேக விதமாக உள்ளன. சிகரெட்
பிடிப்பது, சீ சீ பொருட்களை சாப்பிடுவது - இவையும் அவகுணம்
ஆகும். எல்லாவற்றை யும் விட பெரிய அவகுணம் விகாரத்தினுடையதாகும்.
அதைத்தான் கெட்ட நடத்தை என்று கூறுகின்றார்கள் நீங்கள் விகாரி
ஆகிவிட்டீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது நிர்விகாரி
ஆகுவதற்காக யுக்தி உங்களுக்குக் கூறுகின்றார். இதில் இந்த
விகாரங்களை அவ குணங்களை விட்டு விட வேண்டும். ஒருபொழுதும்
விகாரி ஆகக் கூடாது இந்த பிறவியில் யார் திருந்துகின்றார்களோ
அந்த சீர் திருத்தம் பின் 21 பிறவிகள் வரை வரும்.
எல்லாவற்றையும் விட அவசியமான விசயம் நிர்விகாரி ஆவது ஆகும். பல
பிறவிகளாக தலை மேல் ஏறி இருக்கும் சுமை, யோக பலத்தால்தான்
இறங்கும். பல பிறவிகளாக நாம் விகாரி ஆகியுள்ளோம் என்பதை
குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இப்பொழுது நாங்கள் மீண்டும்
ஒருபொழுதும் விகாரி ஆக மாட்டோம் என்று தந்தையிடம் வாக்குறுதி
அளிக்கின்றோம். பதீதமாக ஆகினீர்கள் என்றால் 100 மடங்கு
தண்டனையும் வாங்க வேண்டி வரும் மற்றும் பதவியும் மோசமானதாகி
விடும் என்று தந்தை கூறியுள்ளார் ஏனெனில் நிந்தை
செய்வித்தார்கள் அல்லவா! அதாவது அந்தப் பக்கம் (விகாரி
மனிதர்கள் பக்கம்) சென்றுவிட்டார்கள். அதுபோல நிறைய பேர் சென்று
விடுகின்றார்கள் அதாவது தோல்வியடைந்து விடுகின்றார்கள் இந்த
விகாரத்தின் வேலையை செய்யக் கூடாது என்பதை நீங்கள் இதற்கு முன்
அறிந்திருக்கவில்லை, ஒரு சில நல்ல குழந்தைகள் இருக்கின்றார் கள்
நாங்கள் பிரம்மசரியத்தில் இருப்போம் என்கின்றார்கள்.
சந்நியாசிகளைப் பார்த்து தூய்மை நல்லது என்று கருதுகின்றார்கள்.
தூய்மை மற்றும் தூய்மையின்மை, உலகத்தில் அபவித்திர மானவர்களே
அநேக பேர் உள்ளார்கள். மலம் கழிக்கச் செல்வது கூட தூய்மையின்மை
ஆகும். எனவே உடனே ஸ்நானம் செய்ய வேண்டும். தூய்மையின்மை அநேக
விதமாக உள்ளது. ஒருவருக்கு துக்கம் கொடுப்பது, சண்டை சச்சரவு
செய்வது கூட தூய்மையற்ற காரியம் ஆகும். பல பிறவிகளாக நீங்கள்
பாவம் செய்துள்ளீர்கள் என்று தந்தை கூறுகின்றார். அந்த எல்லா
பழக்கத்தையும் இப்பொழுது நீங்கள் நீக்க வேண்டும். இப்பொழுது
நீங்கள் உண்மையிலும் உண்மையான மகான் ஆத்மா ஆக வேண்டும்.
உண்மையிலும் உண்மையான மகான் ஆத்மா என்பது இந்த இலட்சுமி,
நாராயணன் தான் ஆவார்கள். வேறு யாருமே இங்கு ஆக முடியாது.
ஏனெனில் எல்லோருமே தமோ பிரதானம் ஆவார்கள். நிந்தனை கூட நிறைய
செய்கிறார்கள் அல்லவா! தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதே
அவர்களுக்குத் தெரிய வருவதில்லை. ஒன்று மறைமுகமான பாவங்கள்
ஆகிவிடுகின்றன, மற்றொன்று பிரத்யட்க்ஷ பாவங்கள் கூட ஆகின்றன.
இது தமோ பிரதானமான உலகமாகும். தந்தை நம்மை இப்பொழுது
அறிவாளியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகள்
அறிந்துள்ளீர்கள். எனவே அவரை அனைவரும் நினைவு செய்கிறார்கள்.
பாவனம் ஆக வேண்டும் என்ற எல்லாவற்றையும் விட நல்லறிவு
உங்களுக்கு கிடைத்திருக்கின்றது மேலும் பிற குணங்களும் வேண்டும்.
தேவதைகளுக்கு முன்னால் நீங்கள் என்ன மகிமை பாடிக் கொண்டு
வந்தீர்களோ இப்பொழுது நீங்கள் அது போல ஆக வேண்டும். இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் எவ்வளவு இனிமையிலும் இனிமையான
மென்மையான மலர்களாக இருந்தீர்கள்! பின் முள்ளாகி
விட்டுள்ளீர்கள். இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள்
அப்பொழுது நினைவினால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும், பாவங்களும்
சாம்பலாகும், தலை மீது இருக்கும் சுமை இலேசாகும். தங்கள் மீது
கவனம் கொள்ள வேண்டும் தங்களுக்குள் என்னென்ன அவகுணங்கள் உள்ளனவோ
அவற்றை நீக்க வேண்டும். எப்படி நாரதருடைய உதாரணம் உள்ளது.
நீங்கள் தகுதியுடையவரா என்று அவரிடமே கேட்டார்கள்? உண்மையில்
நான் தகுதி உடையவன் இல்லை என்று அவர் உணர்ந்தார். தந்தை உங்களை
உயர்ந்தவர்களாக ஆக்குகிறார். தந்தைக்கு நீங்கள் குழந்தைகள்
அல்லவா! எப்படி ஒருவரது தந்தை மஹாராஜாவாக இருந்தால் என் தந்தை
மஹாராஜா ஆவார் என்று கூறுவார்கள் அல்லவா! பாபா மிகவும்
சுகமளிப்பவர் ஆவார். நல்ல சுபாவம் உடைய மஹாராஜாவாக
இருப்பவர்களுக்கு ஒருபொழுதும் கோபம் வராது. இப்பொழுது மெது
மெதுவாக எல்லோருடைய கலைகளும் இறங்கிவிட்டன. எல்லா அவகுணங்களும்
பிரவேசம் ஆகிவிட்டன. கலைகள் குறைந்து கொண்டே போய்விட்டன. தமோ
ஆகிக் கொண்டே சென்றுள்ளார்கள். தமோ பிரதான மான நிலையும்
இப்பொழுது கடைசி முடிவை அடைந்துள்ளது. எவ்வளவு துக்கமுடையவராக
ஆகிவிட்டுள்ளார்கள்! நீங்கள் எவ்வளவு சகித்துக் கொள்ள வேண்டி
உள்ளது! இப்பொழுது அவினாசி சர்ஜன் மூலமாக உங்களுக்கு வைத்தியம்
செய்யப்படுகிறது. இந்த 5 விகாரங்களோ உங்களை அடிக்கடி
துன்புறுத்தும் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் தந்தையை நினைவு
செய்வதற்கான புருஷார்த்தம் எந்த அளவிற்கு செய்கின்றீர்களோ,
அந்தளவு மாயை உங்களை கீழே வீழ்த்துவதற் கான முயற்சி செய்கின்றது.
மாயையின் புயல் உங்களை அசைத்து விட முடியாத அளவிற்கு உங்களது
நிலை அவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும். இராவணன் என்ற வேறு
எந்த பொருளோ அல்லது மனிதனோ இல்லை 5 விகாரங்கள் என்ற இராவணனைத்
தான் மாயை என்று கூறப்படுகின்றது. கடைசியில் இவர்கள் எல்லோரும்
யார்? இந்த பிரம்மாகுமாரர்கள் என்ன புரியவைக்கின்றார்கள்? என்று
அசுர இராவண சம்பிரதாயத்தினர் உங்களை அடையாளம் கண்டுக் கொள்வதே
இல்லை. உண்மையான விசயம் யாருக்கும் தெரியாது. இவர்கள்
பிரம்மாகுமார், குமாரிகள் என்று ஏன் அழைக்கப்படுகின்றார்கள்?
பிரம்மா யாருடைய குழந்தை? நாம் இப்பொழுது வீடு திரும்பிச்
செல்ல வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இந்த தந்தை அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கல்வி
புகட்டுகின்றார். ஆயுஸ்மான் பவ, தனவான் பவ...... உங்களது எல்லா
மன விருப்பங்களும் பூர்த்தி செய்து வரதானம் அளிக்கின்றார்,
ஆனால் வரதானங்களால் மட்டுமே எந்த வேலையும் ஆவதில்லை உழைப்பும்
செய்ய வேண்டும். ஒவ்வொரு விசயமும் புரிந்துக் கொள்ள வேண்டியதாக
உள்ளது. தங்களை இராஜ திலகம் பெறுவதற்கு அதிகாரியாக ஆக்கிக்
கொள்ள வேண்டும். தந்தை அதிகாரியாக ஆக்குகின்றார். இப்படி இப்படி
செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு அறிவுரை
அளிக்கின்றார். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்ற முதல்
நம்பர் அறிவுரையை அளிக்கின்றார். மனிதர்கள் நினைவு செய்வதில்லை,
ஏனென்றால் அவர்களுக்குத் தெரியவே தெரியாது (யாரை நினைவு செய்வது
என்று). எனவே நினைவு கூட தவறாக உள்ளது. இறைவன் சர்வ வியாபி
என்று கூறு கின்றார்கள். பின் சிவ பாபாவை எப்படி நினைவு
செய்வார்கள்? சிவன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்கிறார்கள்
அவரது தொழில் என்ன என்று கூறுங்கள் என்று கேட்டுப் பாருங்கள்.
பகவான் சர்வ வியாபி ஆவார் என்று கூறுவார்கள். பூஜை
செய்கிறார்கள் அவரிடம் கருணை வேண்டுகிறார்கள், வேண்டிக்
கொண்டிருக்கையிலும் பரமாத்மா எங்கே என்று யாராவது கேட்டால்
பகவான் சர்வ வியாபி ஆவார் என்று கூறுவார்கள். சித்திரத்திற்கு
(சிலை) முன்னால் என்ன செய்கின்றார்கள் மற்றும் பின் சித்திரம்
முன்னால் இல்லை என்றால் அழகான உடலே ஒன்றும் இல்லாமல்
போய்விடுகிறது. பக்தியில் எவ்வளவு தவறுகள் செய்கின்றார்கள்!
பிறகும் பக்தி மீது எவ்வளவு அன்பு உள்ளது! கிருஷ்ணருக்காக
எவ்வளவு நிர்ஜல விரதம் (தண்ணீர் கூட குடிக்காமல்) ஆகியவை
செய்கின்றார்கள். இங்கு நீங்கள் படித்துக்
கொண்டிருக்கின்றீர்கள் மற்றும் இந்த பக்தர்கள் என்னென்ன
செய்கின்றார்கள். உங்களுக்கு இப்பொழுது சிரிப்பு வருகிறது.
நாடகப்படி பக்தி செய்து செய்து கீழே கீழே இறங்கிக் கொண்டே
வந்துள்ளார்கள். மேலேயோ யாரும் ஏற முடியாது.
இப்பொழுது இது புருஷோத்தம சங்கம யுகம் ஆகும். இது பற்றி
யாருக்குமே தெரியாது. இப்பொழுது நீங்கள் புருஷோர்த்தமன்
ஆவதற்காக புருஷார்த்தம் செய்கின்றீர்கள். ஆசிரியர் மாணவனின்
சேவகன் ஆகிறார் அல்லவா! மாணவர்களுக்கு சேவை செய்கின்ற அரசாங்க
ஊழியர் ஆவார்கள். தந்தையும் கூறுகிறார், நானும் சேவை
செய்கின்றேன், உங்களுக்கு படிப்பிக்கவும் செய்கின்றேன். அனைத்து
ஆத்மாக்களின் தந்தையும் ஆவார். ஆசிரியரும் ஆகின்றார்
சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானத்தையும் கூறுகின்றார்.
இந்த ஞானம் வேறு எந்த மனிதர்களுக் குள்ளும் இருக்க முடியாது.
யாருமே கற்பிக்க முடியாது. நாம் இதுபோல ஆக வேண்டுமென்று நீங்கள்
புருஷார்த்தம் செய்கின்றீர்கள். உலகத்தில் மனிதர்கள் எவ்வளவு
தமோ பிரதானமான புத்தியினராக உள்ளார்கள்! மிகவும் பயங்கரமான
உலகமாகும். மனிதர்கள் எது செய்யக் கூடாதோ அதை செய்கின்றார்கள்.
எவ்வளவு கொலை, கொள்ளை ஆகியவை செய்கின்றார்கள். என்னதான்
செய்வதில்லை. 100 சதவிகிதம் தமோ பிரதானமாக உள்ளார்கள்.
இப்பொழுது நீங்கள் 100 சதவிகிதம் சதோ பிரதானமாக ஆகிக்
கொண்டிருக்கின்றீர்கள். அதற்கான யுக்தி கூறியுள்ளார். நினைவின்
யாத்திரை, நினைவினால் தான் விகர்மங்கள் வினாசம் ஆகும்.
தந்தையிடம் வந்து சேர்வீர்கள். பகவான் தந்தை எப்படி வருகிறார்
என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். இந்த
இரதத்தில் வந்துள்ளார். பிரம்மா மூலமாக கூறுகிறார் அதை பின்
நீங்கள் தாரணை செய்து மற்றவர்களுக்கும் கூறும்பொழுது நேரடியாக
கேட்போம் என்று மனம் விரும்புகின்றது. தந்தையின் பரிவாரத்தில்
செல்வோம் இங்கு தந்தையும் இருக்கின்றார், தாயும் இருக்கின்றார்,
குழந்தைகளும் இருக்கின்றார்கள். பரிவாரத்தில் வந்து
விடுகின்றார்கள் அந்த உலகமோ அசுர உலகம் எனவே அசுர பரிவாரத்தால்
துன்பப்படுகின்றீர்கள். எனவே தொழில் ஆகியவைகளை விட்டு விட்டு
பாபாவிடம் புத்துணர்வு பெற வந்திருக் கின்றீர்கள். இங்கு
இருப்பவரும் பிராமணர் கள் ஆவார்கள் எனவே இந்த பரிவாரத்தில்
வந்து அமருகின்றீர்கள், வீட்டிற்கு சென்றீர்கள் என்றால் பின்
இது போன்ற பரிவாரம் இருக்காது. அங்கோ தேகதாரி ஆகி விடுகிறீர்கள்
அந்த சிக்கலான வேலைகளி-ருந்து விடுபட்டு நீங்கள் இங்கே
வருகிறீர்கள். தேகத்தின் எல்லா சம்பந்தங்களையும் விடுங்கள்
என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். நறுமணமுள்ள மலர்களாக
வேண்டும். மலரில் நறுமணம் இருக்கிறது எல்லோரும் நறுமணம்
பெறுகின்றார்கள். எருக்கம் பூவை எடுக்க மாட்டார்கள் எனவே மலர்
ஆவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். எனவே பாபா கூட இதுபோல
ஆக வேண்டும் என்பதற்காக மலர்கள் எடுத்துக் கொண்டு வருகிறார்.
இல்லறத்தில் இருந்தபடியே ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
இந்த தேக சம்பந்தங்கள் அனைத்தும் விடுபடப் போகின்றன என்பதை
நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இங்கு மறைமுகமான சம்பாத்தியம்
செய்து கொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் சரீரம் விட
வேண்டியதுள்ளது. சம்பாத்தியம் செய்தும் மற்றும் மிகுந்த
குஷியுடன் மலர்ந்த முகம் உடையவராகி சரீரத்தை விட வேண்டும்.
உலாவும் பொழுதும், சுற்றும் பொழுதும் கூட தந்தையின் நினைவில்
இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒருபொழுதும் களைப்பு ஏற்படாது.
தந்தையின் நினைவில் அசரீரி ஆகி எவ்வளவு வேண்டு மானாலும் சுற்றி
வாருங்கள், இங்கிருந்து கீழே அபு ரோடு வரை வேண்டுமானாலும்
செல்லுங்கள் அப்பொழுதும் கூட உங்களுக்குக் களைப்பு ஏற்படாது.
பாவங்கள் அழிந்து விடும், இலேசானவர்கள் ஆகிவிடுவீர்கள்.
குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு நன்மை ஆகின்றது மற்ற எவரும்
தெரிந்துக் கொள்ள முடியாது. முழு உலகத்தின் மனிதர்கள் பதீத
பாவனரே வந்து பாவன மாக்குங்கள் என்று முறையிடுகின்றார்கள். பின்
அவர்களை மகாத்மா என்று எவ்வாறு கூற முடியும்? பதீதர்களுக்கு
யாரும் தலை வணங்குவதில்லை? தூய்மையாக இருப்பவர்கள் முன்னால் தலை
வணங்கப்பட வேண்டும். கன்னி பெண்களின் உதாரணம் - விகாரி
ஆகும்பொழுது (திருமணம் ஆகும்போது) எல்லோருக்கும் முன் தலை
வணங்குகிறார்கள் மற்றும் பிறகு ஏ, பதீத பாவனரே வாருங்கள்! என்று
முறையிடு கின்றார்கள். அடே! முறையிடும் வகையில் எதற்காக பதீதம்
ஆக வேண்டும்? அனைவருடைய சரீரங்களோ விகாரத்தில் பிறந்தவை அல்லவா!
ஏனென்றால் இராவணனின் இராஜ்யம் ஆகும். இப்பொழுது நீங்கள்
இராவணனிட மிருந்து வெளியேறி வந்துள்ளீர்கள் இது புருஷோர்த்தம
சங்கம யுகம் என்று கூறப்படுகின்றது இப்பொழுது நீங்கள் இராம
இராஜ்யத்திற்கு செல்வதற்கான புருஷார்த்தம் செய்து
கொண்டிருக்கின்றீர்கள். சத்யுகம் என்பது இராம இராஜ்யம்.
திரேதாவில் மட்டும் இராம ராஜ்யம் என்று கூறினால் பின் சூரிய
வம்ச இலட்சுமி நாராயணனின் இராஜ்யம் எங்கே போயிற்று? எனவே இந்த
எல்லா ஞானமும் இப்பொழுதுதான் குழந்தைகளாகிய உங்களுக்கு
கிடைத்துக் கொண்டிருக்கின்றது. புதுப் புது குழந்தைகளும்
வருகின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் ஞானம் அளிக்கின்றீர்கள்.
தகுதி யுடையவர்களாக ஆக்குகிறீர்கள் ஒரு சிலருக்கு எப்பேர்பட்ட
சகவாசம் கிடைத்து வருகிறது என்றால் தகுதியுடையவர்களாக
இருந்தவர்கள் பின் தகுதியற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள். தந்தை
பாவனம் ஆக்குகின்றார். எனவே இப்பொழுது பதீதமாக ஆகவே கூடாது.
தந்தை பாவனமாக ஆக்க வந்திருக்கும்பொழுது மாயை எவ்வளவு வ-மையுடையது
(சக்தி நிறைந்த) என்றால் மீண்டும் பதீதமாக ஆக்கிவிடுகிறது,
தோல்வி யடையச் செய்து விடுகிறது. பாபா காப்பாற்றுங்கள் என்று
கூறினார்கள். ஆஹா! போர்க்களத்தில் ஏராளமானோர் இறக்கின்றனர் பின்
காப்பாற்றப்படுவார்களா என்ன? இந்த மாயையின் அடி துப்பாக்கியின்
குண்டடியை விடக் கடுமையானது. காமத்தின் அடிப்பட்டது என்றால்
மே-ருந்து விழுந்துவிடுவார்கள். சத்யுகத்தில் எல்லோரும்
பவித்திர இல்லற தர்மத்தினராக இருப்பார்கள், அவர்கள் தேவதை என்று
அழைக்கப்படு கின்றார்கள். தந்தை எப்படி வந்துள்ளார், எங்கு
இருக்கின்றார் எப்படி வந்து இராஜ யோகம் கற்பிக்கின்றார் என்பதை
நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். அர்ஜுனனின் இரதத்தில்
அமர்ந்து ஞானம் அளிக்கப்படுகின்றது என்று காண்பிக்கின்றார்கள்.
பின் அவரை சர்வ வியாபி என்று ஏன் கூறுகின்றார்கள். சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்யும் தந்தையையே மறந்து விடுகின்றார்கள். இப்பொழுது
அவரே தனது அறிமுகத்தை அளிக்கின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மகான் ஆத்மா ஆகுவதற்காக அபவித்திரத்தாவுடன்
கூடிய (தூய்மையற்ற) அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.
துக்கம் கொடுப்பது, சண்டை சச்சரவு செய்வது......... இவை
அனைத்தும் அபவித்திரமான காரியங்கள் ஆகும் அவற்றை நீங்கள்
செய்யக் கூடாது. தங்களுக்குத் தாங்களே இராஜ திலகம்
அளிப்பதற்கான அதிகாரி ஆக வேண்டும்.
2. புத்தியை எந்த விதமான சிக்கல்களுடன் கூடிய வேலைகள்,
தேகதாரிகள் ஆகியோர் களிடமிருந்து விலக்கி நறுமணமுள்ள மலர் ஆக
வேண்டும். மறைமுக சம்பாத்தியம் சேமிப்பு ஆகுவதற்காக நடந்தாலும்,
சென்றாலும் அசரீரி ஆக இருக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
உங்களுடைய நல்ல எண்ணங்களின் சக்தியால் ஆத்மாக்களின் கவலையை
முக்தி அடைய வைக்கக்கூடிய நல்ல எண்ணங்களின் (சுப சிந்தக்) மணி
ஆகுக
இன்றைய உலகத்தில் அனைத்து ஆத்மாக்களும் கவலையோடு இருக்கிறார்கள்.
அவர்களின் கவலையின் மணிகளை உங்களுடைய சுப சிந்தனையின் (நல்ல
எண்ணங்கள்) என்ற மணிகள், நல்ல எண்ணத்தின் சக்தி மூலமாக மாற்ற
முடியும். சூரியனின் கிரணங்கள் மிக தூரத்தில் சென்று இருட்டை
எப்படி அகற்றுகின்றதோ அதே போல் நல்ல எண்ணத்தின் மணிகளாகிய
நீங்கள் உங்களுடைய நல்ல எண்ணங்கள் என்ற பிரகாசம் அல்லது
கிரணங்களை முழு உலகத்தின் நாலா பக்கமும் பரப்பக்கூடியவர்கள்,
ஏதோ சிலர் ஆன்மிக மான சக்தியை மறைமுகமான ரூபத்தில் செய்துக்
கொண்டிருக்கிறார்கள் என்று புரிநதுக் கொள்கிறார்கள். இந்த
உணர்வு அல்லது நிலை ஆரம்பமாகி உள்ளது. மெது மெதுவாக தேடி தேடி
இடத்தை வந்து சேர்நது விடும்.
சுலோகன்:
மனம் புத்தியின் லைன் தெளிவாக இருந்தால் பாப்தாதாவின் கட்ளையை
தெளிவாக கண்டுபிடிக்க முடியும்.
|
|
|