10-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே - இப்பொழுது சதோபிரதானமாகி வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆகவே தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை இடைவிடாது நினைப்பதற்கான பயிற்சி செய்யுங்கள். முன்னேற்றத்தை பற்றி சதா சிந்தியுங்கள்.

கேள்வி:
ஒவ்வொரு நாளும் படிப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறோமோ அல்லது (மற்றவர்களுக்கு) பின்னால் சென்றுக் கொண்டிருக்கிறோமா என்பதன் அடையாளம் என்ன?

பதில்:
படிப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்றால் இலேசான தன்மை அனுபவம் ஆகும். இது சீ,சீ சரீரம். இதை விட வேண்டும். இப்போது நாம் வீட்டிற்குப் போக வேண்டும் என்பது புத்தியில் இருக்கும். தெய்வீக குணங்களை கடைபிடித்துக் கொண்டே போவார்கள். ஒரு வேளை பின்னால் செல்கிறார்கள் (முன்னேற வில்லை) என்றால் நடத்தையில் அசுர குணங்கள் வெளிப்படும். போகும் போதும், வரும் போதும் பாபா நினைவு இருக்காது. அவர்கள் மலர்களாகி அனைவருக்கும் சுகம் கொடுக்க முடியாது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் போகப் போக காட்சிகள் கிடைக்கும். மிகவும் தண்டனைகள் அடைய வேண்டியிருக்கும்.

ஓம் சாந்தி.
நாம் சதோபிரதானமாக வந்தோம் என்பது புத்தியில் (நினைவில்) இருக்கும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இங்கே அனைவரும் அமர்ந் திருக்கிறார்கள். சிலர் தேக உணர்வில் இருக்கிறார்கள். சிலர் ஆத்ம உணர்வில் இருக்கிறார்கள். சிலர் ஒரு நொடியில் தேக உணர்விலும், ஒரு நொடியில் ஆத்ம உணர்விலும் இருக்கிறார்கள். நான் முழு நாளும் ஆத்ம உணர்வில் இருக்கிறேன் என யாரும் கூற முடியாது. அவ்வாறு யாரும் இல்லை. சில நேரங்களில் ஆத்ம உணர்விலும், சில நேரங்களில் தேக உணர்விலும் இருக்கிறார்கள் என புரிய வைக்கிறார். ஆத்மாக்களாகிய நாம் இந்த சரீரத்தை விட்டு தங்களுடைய வீட்டிற்குச் செல்வோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாகப் போக வேண்டும். நாம் சாந்தி தாமத்திற்குச் செல்வோம் என்ற சிந்தனையில் முழு நாளும் இருக்கின்றனர் ஏனென்றால் பாபா வழி காண்பித் திருக்கிறார். வேறு யாரும் இப்படிப்பட்ட சிந்தனையோடு இருக்க மாட்டார்கள். இந்த பாடம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. இந்த எண்ணங்களே வராது. நீங்கள் இது துக்க உலகம் என்பதை புரிந்துக் கொள்கிறீர்கள். இப்போது பாபா சுக தாமத்திற்குப் போவதற்கான வழியை தெரிவித்திருக்கிறார். எவ்வளவு பாபாவை நினைவு செய்வீர்களோ அவ்வளவு தூய்மையாகி தகுதி அடைந்து சாந்தி தாமத்திற்குப் போவீர் கள். அதற்கு தான் முக்தி என்று பெயர். முக்திக்காக தான் மனிதர்கள் குருவிடம் செல்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு முக்தி, ஜீவன் முக்தி என்றால் என்ன? என்பது தெரியாது. ஏனென்றால் இது முற்றிலும் புதிய விஷயம் ஆகும். நாம் வீட்டிற்குப் போக வேண்டும் என குழந்தை களாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். நினைவு யாத்திரையினால் தூய்மையாகுங்கள் என பாபா கூறுகிறார். முதன் முதலில் நீங்கள் வந்த போது சிரேஷ்டமான (சுகமான புதிய) உலகத்தில் சதோபிரதானமாக இருந்தீர்கள். ஆத்மா சதோபிரதானமாக இருந்தது. பின்பு தான் மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. கர்ப்பத்தில் செல்லும் போது தான் சம்மந்தத்தில் வருகிறார்கள். இது உங்களுடைய கடைசி பிறவி என அறிகிறீர்கள். நாம் வீட்டிற்குத் திரும்பிப் போக வேண்டும். தூய்மையாகாமல் நாம் போக முடியாது. இவ்வாறு தனக்குள் பேசிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உட்காரும் போதும், எழும் போதும், போகும் போதும், சுற்றும் பொழுதும் நான் சதோபிரதானமாக வந்தோம். இப்போது சதோபிரதானமாகி வீட்டிற்குப் போக வேண்டும் என சிந்திக்க வேண்டும் என பாபா கட்டளை இடுகிறார். பாபாவின் நினைவினால் தான் சதோபிரதானமாக மாற முடியும். ஏனென்றால் பாபா தான் பதீத பாவனன். நீங்கள் இவ்வாறு தூய்மையாகலாம் என குழந்தைகளாகிய நமக்கு வழிமுறைகளைத் தெரிவிக்கிறார். முழு உலகத்தின் முதல், இடை, கடையை பாபா தான் அறிந்துள்ளார். வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை. தந்தை தான் மனித சிருஷ்டியின் விதை வடிவமாக இருக்கிறார். பக்தி எது வரை நடக்கிறது என்பதையும் பாபா தான் புரிய வைக்கிறார். இவ்வளவு காலம் ஞான மார்க்கம், இவ்வளவு காலம் பக்தி. இந்த ஞானம் முழுவதும் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். பாபாவின் ஆத்மாவில் ஞானம் இருப்பது போல உங்களுடைய ஆத்மா விலும் ஞானம் இருக்கிறது. சரீரத்தின் மூலமாக கேட்கிறீர்கள். சொல்கிறீர்கள். சரீரம் இல்லாமல் ஆத்மா பேச முடியாது. இதில் தூண்டுதலோ ஆகாஷ் வாணியின் விஷயமோ இல்லை. பகவான் பேசுவதற்கு நிச்சயமாக வாய் வேண்டும், ரதம் வேண்டும். கழுதை, குதிரையின் ரதம் தேவை இல்லை. கலியுகம் இன்னும் 40,000 வருடங்கள் இருக்கும் என முதலில் நீங்கள் நினைத்தீர்கள். அறியாமை என்ற தூக்கத்தில் இருந்தீர்கள். இப்போது தந்தை எழுப்பி இருக்கிறார். நீங்களும் அஞ்ஞானத்தில் இருந்தீர்கள். இப்போது ஞானம் கிடைத் திருக்கிறது. பக்திக்கு அஞ்ஞானம் என்று பெயர்.

இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நாம் எப்படி முன்னேறுவது, எப்படி உயர்ந்த பதவி அடைவது என்று சிந்திக்க வேண்டும். நம்முடைய வீட்டிற்குச் சென்று பிறகு புதிய உலகில் உயர்ந்த பதவி அடைய வேண்டும். அதற்குத் தான் நினைவு யாத்திரை. தன்னை ஆத்மா என்று நிச்சயம் புரிந்துக் கொள்ள வேண்டும். நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை பரமாத்மா. இது மிகவும் எளிதாகும். ஆனால் மனிதர்கள் இவ்வளவு கூட புரிந்துக் கொள்ள வில்லை. இது இராவண இராஜ்யம். ஆகையால் உங்களுடைய புத்தி கீழானதாகி விட்டது என நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். விகாரத்தில் ஈடுபடாதவர்கள் தான் தூய்மையானவர்கள் என மனிதர்கள் புரிந்துக் கொள்கிறார்கள். சன்னியாசி போன்றவர்கள். அவர்கள் அல்ப காலத்திற்கு தூய்மையாகிறார்கள் என பாபா கூறுகிறார். இருப்பினும் உலகம் தூய்மை இன்றி இருக்கிறது அல்லவா. சத்யுகம் தான் பரிசுத்தமான உலகம். தூய்மை இல்லாத உலகத்தில் சத்யுகம் போன்று தூய்மையானவர் யாரும் இருக்க முடியாது. அங்கே இராவண இராஜ்யம் இல்லை. விகாரத்தின் விஷயம் இல்லை. எனவே எங்கு போனாலும், வந்தாலும், சுற்றினாலும் இந்த சிந்தனை இருக்க வேண்டும். பாபாவிற்குள் இந்த ஞானம் இருக்கிறது அல்லவா. ஞானக் கடல் என்றால் ஞானம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்களும் ஞானக் கடலில் இருந்து தோன்றிய நதிகள். அவர் எப்போதும் கடலாக இருக்கிறார். நீங்கள் எப்போதும் கடலாக இருப்பதில்லை. நாம் அனைவரும் சகோதரர்கள் என நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் படிக்கிறீர்கள். உண்மையில் நதிகளின் விஷயம் இல்லை. நதி என்று கூறினால் கங்கை, யமுனை போன்ற வைகளை கூறுகிறார்கள். இப்போது நீங்கள் எல்லையற்றதில் இருக்கிறீர்கள். நாம் அனைத்து ஆத்மாக்களும் ஒரு தந்தையின் குழந்தைகள், சகோதரர்கள். இப்போது நாம் வீட்டிற்குத் திரும்ப போக வேண்டும். அங்கிருந்து வந்து சரீரம் என்ற சிம்மாசனத்தில் அமர வேண்டும். ஆத்மா மிகவும் சிறியது. காட்சிகள் கிடைப்பதால் புரிந்துக் கொள்ள முடியாது. ஆத்மா சென்று விட்டால் நெற்றியில் இருந்து சென்று விட்டது, கண்களிலிருந்து, வாயிலிருந்து சென்றது....... வாய் திறந்து கொள்கிறது என கூறுகிறார்கள். ஆத்மா சரீரத்தை விட்டு விட்டு சென்று விட்டால் சரீரம் ஜடமாகிறது. இது ஞானம் ஆகும். மாணவர்களின் புத்தியில் முழு நாளும் படிப்பு இருக்கிறது. உங்களுடைய புத்தியிலும் படிப்பை பற்றிய எண்ணங்கள் வந்துக் கொண்டே இருக்க வேண்டும். நல்ல மாணவர்களின் கையில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இது உங்களுடைய கடைசி பிறவியாகும் என பாபா கூறுகின்றார் சக்கரம் முழுவதும் சுற்றி விட்டு கடைசியில் வந்துள்ளீர்கள். புத்தியில் இந்த நினைவு இருக்க வேண்டும். கடைபிடித்து மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். சிலருக்கு தாரணை ஆவதில்லை. பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் வரிசைக் கிரமத்தில் இருக்கிறார்கள். பல பாடங்கள் இருக்கிறது. இங்கேயோ ஒரே ஒரு பாடம் தான். தேவதையாக வேண்டும். இந்த படிப்பை பற்றிய சிந்தனை இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். படிப்பை மறந்து விட்டு மற்றவைகளை சிந்தித்துக் கொண்டு இருக்கக் கூடாது. தொழில் செய்பவர்கள் தன்னுடைய தொழிலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். மாணவர்கள் தங்களுடைய படிப்பிலேயே மூழ்கி இருப்பார்கள். குழந்தை களாகிய நீங்களும் உங்கள் படிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

நேற்று உலகளாவிய யோகத்தின் மாநாட்டிற்கான அழைப்பிதழ் ஒன்று வந்தது. இது உங்களுடைய ஹடயோகம் என்று அவர்களுக்கு எழுதலாம். இதனுடைய குறிக்கோள் என்ன? இதனால் நன்மை என்ன? நாங்கள் ராஜயோகத்தை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஞானக் கடல் படைக்கக் கூடியவர் பரம பிதா பரமாத்மா நமக்கு அவரைப் பற்றியும் படைப்பை பற்றிய ஞானத்தையும் கூறுகிறார். இப்போது நாம் வீட்டிற்குப் போக வேண்டும். மன்மனாபவ என்பதே நம்முடைய மந்திரம். நாங்கள் பாபாவையும் பாபா மூலமாக கிடைத்த சொத்தையும் நினைக் கின்றோம். நீங்கள் இந்த ஹடயோகத்தை செய்து வந்துள்ளீர்கள். இதனுடைய குறிக்கோள் என்ன? நாங்கள் இதை கற்றுக் கெண்டிருக்கிறோம் என்று எங்களுடையதைப் பற்றி சொல்லி விட்டோம். உங்களுடைய இந்த ஹடயோகத்தினால் என்ன கிடைக்கிறது. இவ்வாறு சுருக்கமாக பதில் அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட அழைப்பிதழ்கள் பல உங்களிடம் வருகின்றது. அகில இந்திய தர்மத்தின் மாநாடுகளுக்கான அழைப்பிதழும் உங்களுக்கு வந்தது. உங்களுடைய குறிக்கோள் என்ன என அவர்கள் கேட்டார்கள். நாங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என கூறுங்கள். நம்முடையதைப் பற்றி நிச்சயமாகச் சொல்ல வேண்டும். ஏன்? இந்த இராஜயோகத்தை நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் இதை படித்துக் கொண்டிருக்கிறோம் என கூறுங்கள். எங்களைப் படிக்க வைப்பவர் பகவான். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் எங்களை ஆத்மா என உணர்கிறோம். தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை மட்டும் நினைத்தால் உங்களுடைய பாவங்கள் விலகும் என எல்லையற்ற தந்தை கூறுகின்றார். இப்படிப்பட்ட வாசகங்களை நன்கு அச்சடித்து வைத்துக் கொள்ளுங்கள். எங்கே மாநாடுகள் நடக்கிறதோ அங்கே அனுப்பி விடுங்கள். இவர்கள் மிகவும் நல்ல சரியான விஷயங்களைக் கற்கிறார்கள் என கூறுவார்கள். இந்த இராஜயோகத்தால் ராஜாவிற்கு ராஜாவாக உலகத்திற்கு அதிபதியாக மாறுகிறார்கள். 5000 வருடங்களுக்குப் பிறகு நாம் தேவதையாக மாறுகின்றோம். பிறகு மனிதராகிறோம். இவ்வாறெல்லாம் சிந்தித்து முதல் தரமான கருத்துகளை எழுத வேண்டும். உங்களிடம் குறிக்கோள் பற்றி கேட்கலாம். இது எங்களுடைய குறிக்கோள் என அச்சடித்து வைத்திருங்கள். இவ்வாறு எழுதுவதால் ஆர்வம் அதிகரிக்கும். இதில் ஹடயோகம் அல்லது சாஸ்திரங்கள் பற்றிய விஷயங்கள் கிடையாது. அவர்கள் சாஸ்திரங்களின் பொருளை கூறுவதற்கே எவ்வளவு அகங்காரம் இருக்கிறது. அவர்கள் தங்களை சாஸ்திரங்களின் அத்தாரிட்டி என நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் பூஜாரிகள். பூஜைக்குரியவர்களை தான் அத்தாரிட்டி என்பார்கள். பூஜாரியை என்ன கூறுவார்கள். நாம் என்ன கற்றுக் கொண்டிருக்கிறோம். இதை தெளிவுப்படுத்தி எழுத வேண்டும். பி.கே.க் களின் பெயர் பிரசித்தமாகி விட்டது.

இரண்டு விதமான யோகா இருக்கிறது. ஒன்று ஹடயோகா இன்னொன்று சகஜயோகா ஆகும். அதை எந்த மனிதர்களும் கற்றுத் தர முடியாது. ராஜ யோகத்தை ஒரு பரமாத்மா தான் கற்பிக்கின்றார். மற்ற படி பல்வேறு விதமாக மனிதர்கள் கற்றுத் தரும் யோகங்கள் இருக்கின்றது. அங்கே தேவதைகளுக்கு யாருடைய வழியும் அவசியம் இல்லை ஏனென்றால் சொத்து அடைந்து விட்டார்கள். அவர்கள் தேவதைகள். அதாவது தெய்வீக குணங்களை உடையவர்கள். அசுரன் என்று கூறும் அளவிற்கு எந்த குணமும் இருக்காது. தெய்வீகமான தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பிறகு எங்கே போனது. 84 பிறவிகளை எப்படி எடுத்தார்கள். ஏணிப்படியில் புரிய வைக்க வேண்டும். ஏணிப்படி மிகவும் நன்றாக இருக்கின்றது. உங்கள் மனதில் என்ன இருக்கின்றதோ அது ஏணியில் இருக்கின்றது. அனைத்திற்கும் ஆதாரம் படிப்பாகும். படிப்பு தான் வருமானத்திற்கு மூலதனமாகும். இதுவே எல்லாவற்றையும் விட உயர்ந்த படிப்பு. மிகவும் உயர்ந்தது. மிகவும் உயர்ந்த படிப்பு என்ன என்பது உலகத்தில் இருப்பவர்களில் யாருக்கும் தெரியவில்லை இந்த படிப்பினால் மனிதனிலிருந்து டபுள் கிரீடம் உடைய தேவதையாக ஆகிறீர்கள். இப்போது நீங்கள் டபுள் கிரீடம் உடையவராக மாறுவதறக்கு முயற்சி செய்கிறீர்கள். படிப்பு ஒன்று தான். ஒரு சிலர் எப்படி மாறுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் வேறு எப்படியோ மாறுகிறார்கள். ஒரே படிப்பினால் இராஜ்யம் உருவாகிக் கொண்டி ருக்கிறது. ராஜாவும் உருவாகிறார்கள். ஏழையும் உருவாகிறார்கள். அதிசயமாக இருக்கிறது. மற்றபடி அங்கே துக்கம் இருக்காது. பதவிகள் இருக்கிறது அல்லவா. இங்கே வறட்சி, நோய்கள், தானியங்களின் பற்றாக் குறை, வெள்ளம் போன்ற பல்வேறு விதமாக துக்கம் இருக்கின்றது. இலட்சாதிபதியாக இருந்தாலும், கோடீஸ்வரனாக இருந்தாலும் விகாரத்தினால் தான் பிறக் கிறார்கள் அல்லவா. அடிபடுவது, கொசு கடித்தல் இது கூட துக்கம் தானே. பெயரே பயங்கரமான நரகம் ஆகும். இன்னார் சொர்க்கலோக பதவி அடைந்தனர் என கூறுகிறார்கள். அடே, சொர்க்கம் வரப்போகிறது. (இப்போது தான் உருவாகிறது) பிறகு எப்படி சொர்க்கம் போனார்கள். யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைப்பது எளிதாகும். இப்போது பாபா கட்டுரை கொடுத்துள்ளார். எழுத வேண்டியது குழந்தைகளின் கடமையாகும். தாரணை செய்யவில்லை என்றால் எழுத மாட்டார் கள். தன்னை ஆத்மா என்று உணருங்கள் இப்போது வீட்டிற்குப் போக வேண்டும். என குழந்தை களுக்கு முக்கியமான விஷயத்தை பாபா புரிய வைக்கிறார். நாம் சதோபிரதானமாக இருந்த போது எந்த ஒரு எல்லையும் இல்லை. இப்போது தமோபிரதானமாகி இருக்கிறார்கள். எவ்வளவு எளிமையானது. நிறைய கருத்துகளை பாபா சொல்லிக் கொண்டே இருக்கிறார். நன்கு புரிய வைக்க வேண்டும் புரிந்துக் கொள்ள வில்லை என்றால் இவர் நம்முடைய குலத்தைச் சார்ந்தவர் இல்லை என புரிந்துக் கொள்ளப் படுகிறது. படிப்பில் ஒவ்வொரு நாளும் முன்னேற வேண்டும். பின்னடையக் கூடாது. தெய்வீக குணங்களுக்குப் பதிலாக அசுர குணங்களை கடை பிடித்தால் பின்னால் செல்வதாகும். விகாரங்களை விட்டுச் செல்லுங்கள் என பாபா கூறுகிறார். தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். மிகவும் இலேசாக இருக்க வேண்டும். இந்த சரீரம் சீ,சீ-யாக (மிக மோசமாக) இருக்கிறது. இதை விட வேண்டும். இப்போது நாம் வீட்டிற்குப் போக வேண்டும். பாபாவை நினைக்க வில்லை என்றால் ரோஜா மலராக முடியாது. நிறைய தண்டனை அடைய வேண்டியிருக்கும். இன்னும் செல்ல செல்ல உங்களுக்கு காட்சிகள் கிடைக்கும். நீங்கள் என்ன சேவை செய்தீர்கள் என கேட்பார்கள். நீங்கள் நீதி மன்றத்திற்குச் சென்றிருக்க மாட்டீர்கள். பாபா அனைத்தையும் பார்த்திருக்கிறார். இவர்கள் திருடர்களை எப்படி பிடிக்கிறார்கள், எப்படி கேஸ் நடக்கிறது, அவ்வாறே அங்கும் உங்களுக்கு காட்சிகள் கொடுப்பார். தண்டனைகள் அடைந்து பிறகு நயா பைசா பதவி தான் பெறுவார்கள். டீச்சருக்கு இவர்கள் பெயில் ஆகிவிடு வார்கள் என இரக்கம் வருகிறது. இந்த தந்தையை நினைவு செய்யக் கூடிய சப்ஜெக்ட் எல்லாவற்றையும் விட நல்லது. இதன் மூலம் பாவம் விலகுகிறது. பாபா நம்மை படிக்க வைக்கிறார். இதை நினைவு செய்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள். ஆசிரியரையும் நினைக்கிறார்கள். புத்தியில் படிப்பும் இருக்கிறது. ஆசிரியரிடம் நிச்சயம் தொடர்பு இருக்கும் அல்லவா. சகோதரர்களாகிய நம் அனைவருக்கும் டீச்சர் ஒருவரே. அவரே சுப்ரீம் டீச்சர் என்பது புத்தியில் இருக்க வேண்டும். ஆஹா, பிரபுவே உங்களுடைய லீலை........ இன்னும் போகப் போக பலருக்கு தெரிய வரும். மகிமை செய்து இறப்பார்கள். ஆனால் எதையும் அடைய முடியாது. தேக உணர்வில் வருவதால் தான் தவறான வேலை செய்கிறார்கள். ஆத்ம அபிமானி ஆகிவிட்டால் நன்றாக வேலை செய்வார்கள். இது உங்களுடைய வானபிரஸ்த நிலை. திரும்ப போகத்தான் வேண்டும். கணக்கு வழக்கை முடித்து விட்டு அனைவரும் செல்ல வேண்டும். விரும்பினாலும், விரும்பவில்லை என்றாலும் நிச்சயம் போக வேண்டும். ஒரு நாள் உலகமே காலியாகின்ற நாளும் வரும். பாரதம் மட்டும் இருக்கும். அரைக் கல்பம் பாரதம் மட்டும் தான் இருக்கும் என்றால் உலகம் எவ்வளவு காலியாக இருக்கும். இந்த எண்ணம் உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் வராது. பிறகு உங்களுக்கு வேறு யாரும் எதிரியும் கிடையாது. எதிரிகள் ஏன் வருகிறார்கள், பணத்திற்காக. பாரதத்தில் இவ்வளவு முஸ்லீம்கள், ஆங்கிலேயர்கள் ஏன் வந்தனர் பணத்தை பார்த்தனர். நிறைய பணம் இருந்தது. இப்போது இல்லை. எனவே வேறு யாரும் இல்லை. பணத்தை எடுத்துக் கொண்டு காலி செய்து விட்டு சென்று விட்டனர். மனிதர்களுக்கு இது தெரியாது. நாடகத்தின் படி நீங்களே பணத்தை அழித்து விட்டீர்கள் என பாபா கூறுகிறார். நாம் எல்லை யற்ற தந்தையிடம் வந்து விட்டோம் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறது. ஒரு போதும் இது ஈஸ்வரிய குடும்பம் என்பது யாருடைய நினைவிலும் கூட இருக்காது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. போகும் போதும், வரும் போதும் புத்தியில் படிப்பை பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். எந்த செயல் செய்தாலும் புத்தியில் சதா ஞானம் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். இது மிகவும் சிறந்த படிப்பு, இதை படித்து இரட்டை கிரீடம் உடையவர் ஆகுங்கள்.

2. ஆத்மாக்களாகிய நாம் சகோதரர்கள் என்பதை பயிற்சி செய்ய வேண்டும். தேக அபிமானத்தில் வந்தால் தவறான வேலைகள் நடக்கும். ஆகவே எவ்வளவு முடியுமோ ஆத்ம உணர்வில் இருங்கள்.

வரதானம்:
சத்தியத்தாவின் சக்தி மூலமாக எப்போதும் மகிழ்ச்சியில் நடனமாடக்கூடிய சக்திசா- மகான் ஆத்மா ஆகுக

உண்மையில் அமர்ந்து சத்தியத்தின் சக்தியுடைவர்கள் எப்போதும் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள், ஒருபோதும் வாடிப்போக மாட்டார்கள், சிக்கிக் கொள்ள மாட்டார்கள், பயப்பட மாட்டார்கள், பலவீனமடைய மாட்டார்கள். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள். சக்திசா-யாகவும் இருப்பார்கள். எதிர் கொள்ளும் சக்தி அவர்களிடம் இருக்கும், சத்தியம் ஆடாது, உறுதியாக இருக்கும். சத்தியத்தின் படகு ஆடும், அசையும் ஆனால் மூழ்காது. எனவே சத்தியத்தின் சக்தியை தாரணை செய்யக்கூடிய ஆத்மா மட்டும் தான் மகானாக இருப்பர்.

சுலோகன்:
பரப்பரப்பான (பிஸியான) மனம் புத்தியை ஒரு நொடியில் நிறுத்துவது தான் அனைத்திலும் மிக உயர்ந்த பயிற்சியாகும்.