11-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள்
சம்பூர்ணம் ஆக வேண்டும். ஏனெனில் வீடு திரும்பிச் செல்ல
வேண்டும் மற்றும் மீண்டும் பாவன (துய்மையான) உலகில் வர வேண்டும்.
கேள்வி:
சம்பூர்ண பாவனம் (முழுமையான
தூய்மை) ஆவதற்கான யுக்தி யாது?
பதில்:
சம்பூர்ண பாவனம் ஆக வேண்டும்
என்றால் முழுமையான ஏழை ஆகுங்கள். தேகத்துடன் அனைத்து பிற
சம்பந்தங்களையும் (உறவுகள்) மறந்து விடுங்கள் மற்றும் என்னை
நினைவு செய்யுங்கள் அப்பொழுது பாவனம் ஆவீர்கள். இப்பொழுது
நீங்கள் இந்த கண்களால் என்ன பார்க்கிறீர்களோ இவை அனைத்தும்
அழியப் போகின்றன. எனவே பணம், செல்வம், வைபவங்கள் ஆகிய
அனைத்தையுமே மறந்து ஏழை ஆகுங்கள், அப்பேர்ப்பட்ட ஏழைகளே இளவரசர்
ஆகிறார்கள். ஓம் சாந்தி
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தை
புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஆத்மாக்கள்
எல்லாருமே பவித்திரமாக இருப்பார்கள் என்பதை குழந்தைகள் நல்ல
முறையில் புரிந்துள்ளீர்கள். நாம் தான் பாவனமாக இருந்தோம்.
பதீதமான மற்றும் பாவனமான என்று ஆத்மாவிற்குத்தான் கூறப்படுகிறது.
ஆத்மா பாவனமாக இருக்கும் பொழுது சுகம் இருக்கும். நாம் பாவனம்
ஆனோம் என்றால் பாவன உலகின் எஜமானர் ஆவோம் என்பது புத்தியில்
வருகிறது. இதற்காகத் தான் புருஷார்த்தம் செய்கிறோம். ஜந்தாயிரம்
வருடங் களுக்கு முன்னால் பாவன உலகம் இருந்தது. அதில் அரை கல்பம்
நீங்கள் பாவனமாக இருந்தீர்கள். மீதி இருப்பது அரைகல்பம் இந்த
விஷயங்களை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. பதீதம் மற்றும்
பாவனம், சுகம் மற்றும் துக்கம் பகல் மற்றும் இரவு பாதி பாதி
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் நல்ல அறிவாளிகளோ யார்
நிறைய பக்தி செய்துள்ளார்களோ அவர்களே நல்ல முறையில் புரிந்து
கொள்வார்கள். இனிமையான குழந்தைகளே! நீங்கள் பாவனமாக
இருந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். புது உலகத்தில் நீங்கள்
மட்டும் இருந்தீர்கள். மற்ற இத்தனை பேரும் சாந்தி தாமத்தில்
இருந்தார்கள்; முதன் முதலில் நாம் பாவனமாக இருந்தோம்; மிகவும்
குறைவாக இருந்தோம். பிறகு நம்பர் பிரகாரம் மனித சிருஷ்டி
விருத்தி அடைகிறது. இப்பொழுது இனிமையான குழந்தைகளாகிய
உங்களுக்கு யார் புரிய வைத்து கொண்டிருக்கிறார். ஆத்மாக்களுக்கு
பரமாத்மா தந்தை புரிய வைக்கிறார். இது சங்கமம் என்று
கூறப்படுகிறது. மனிதர்கள் இந்த சங்கமயுகத்தை மறந்து
விட்டுள்ளார்கள். 4 யுகங்கள் உள்ளன; ஐந்தாவது இந்த சிறிய லீப்
சங்கமயுகம் ஆகும் என்று பாபா புரிய வைத்துள்ளார், இந்த சங்கம
யுகத்தின் ஆயுள் சிறியது. நான் இவரது வானபிரஸ்த நிலையில் அநேக
ஜன்மங்களின் கடைசி ஜன்மத்தின் கடைசியில் பிரவேசம் செய்கிறேன்
என்று தந்தை கூறுகிறார். குழந்தைகளுக்கு இது உபசாரம் அல்லவா?
தந்தை இவருக்குள் பிரவேசம் செய்துள்ளார். நான் ஆத்மாக்களிடம்
தான் பேசுகிறேன் என்று தந்தை கூறுகிறார். ஆத்மா மற்றும் சரீரம்
இரண்டினுடைய பாகமும் சேர்ந்தாற் போல நடக்கிறது. இது ஜீவ ஆத்மா
என்று கூறப்படுகிறது. பவித்திர ஜீவ ஆத்மா அபவித்திர ஜீவ ஆத்மா!
சத்யுகத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தேவி தேவதைகள்
இருப்பார்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது.
பின் சத்யுகத்தில் பாவனமாக இருந்த ஜீவாத்மா, 84 பிறவிகள்
எடுத்து பதீதமாக ஆகி உள்ளேன் என்று உங்களை கூறுவீர்கள். பதீதத்
திலிருந்து பாவனம் பாவனத்திலிருந்து பதீதம் என்ற சக்கரம்
சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. நினைவும் அந்த பதீத பாவன
தந்தையை செய்கிறார்கள். எனவே ஒவ்வொரு 5 ஆயிரம் வருடத்திற்குப்
பின்னர் பாபா ஒரே ஒரு முறை வருகிறார். வந்து சொர்க்கத்தின்
ஸ்தாபனை செய்கிறார். பகவான் ஒருவரே. அவசியம் அவர்தான் பழைய உலகை
புதியதாக ஆக்குவார். பின் புதியதை யார் பழையதாக ஆக்குகிறார்,
இராவணன்; ஏனெனில் இராவணன் தான் தேக அபிமானி யாக ஆக்குகிறான்.
எதிரி தான் எரிக்கப்படுவான். நண்பன் எரிக்கப்படுவதில்லை.
அனைவருக்கும் நண்பன் ஒரே ஒரு தந்தை ஆவார். அவர் அனைவருக்கும்
சக்கதி அளிக்கிறார். அவரை எல்லாரும் நினைவு செய்கிறார்கள்.
ஏனெனில் அவர் இருப்பதே அனைவருக்கும் சுகம் அளிப்பவராக; எனவே
அவசியம் துக்கம் கொடுப்பவரும் யாராவது இருக்கக்கூடும். அது தான்
5 விகாரங்கள் என்ற இராவணன். அரைகல்பம் இராம இராஜ்யம் அரைகல்பம்
இராவண இராஜ்யம். ஸ்வாஸ்திகா எழுதுகிறார்கள் அல்லவா? அதனுடைய
பொருளையும் தந்தை புரிய வைக்கிறார். இதில் முழுமையாக நான்கு
பாகங்கள் உள்ளன. சிறிதளவு கூட ஏற்றத் தாழ்வு இல்லை. இந்த நாடகம்
முற்றிலும் மிகச்சரியாக உள்ளது. ஒரு சிலர் நாம் இந்த
நாடகத்திலிருந்து வெளியேறி விடலாம் மிகுந்த துக்க
துக்கமடைந்துள்ளோம் என்று நினைக்கிறார்கள். இதை விட போய்
ஜோதியுடன் இரண்டற கலந்து விடலாம் அல்லது பிரம்மத்தில் கலந்து
விடலாம் என்கின்றனர். ஆனால் யாருமே செல்ல முடியாது. என்னென்ன
சிந்தனைகள் செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் முயற்சி கள்
கூட பல்வேறு விதமாக செய்கிறார்கள். சந்நியாசிகள் சரீரம் விடும்
பொழுது ஒரு பொழுதும் சொர்க்கம் அல்லது வைகுண்டம் போய்
சேர்ந்தார் என்று கூற மாட்டார்கள். இல்லற மார்க்கத்தினர்
இன்னார் சொர்க்கம் போய் சேர்ந்தார் என்பார்கள். ஆத்மாக்களுக்கு
சொர்க்கம் நினைவில் உள்ளது அல்லவா? உங்களுக்கு இருவருடையதும்
சரித்திரம் பூகோளம் பற்றித் தெரியும், வேறு யாருக்குமே தெரியாது.
உங்களுக்கும் தெரியாமல் இருந்தது. தந்தை வந்து குழந்தைகளுக்கு
எல்லா ரகசியங் களையும் புரிய வைக்கிறார்.
இது மனித சிருஷ்டி என்ற விருட்சம் ஆகும். விருட்சத்திற்கு
அவசியம் விதையும் இருக்க வேண்டும். தந்தை தான் புரிய வைக்கிறார்.
பாவன உலகம் எவ்வாறு பதீதமாகிறது பின் நான் பாவனம் ஆக்குகிறேன்.
பாவன உலகம் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. சொர்க்கம் கடந்து
சென்று விட்டது பின் அவசியம் மீண்டும் திரும்பி வர வேண்டும்.
எனவே தான் உலக சரித்திரம் மீண்டும் அவ்வாறே நிகழ்கிறது என்று
கூறப்படுகிறது. அதாவது உலகம் தான் பழையதிலிருந்து புதியதாக,
புதியதிலிருந்து பழையதாக ஆகிறது. திரும்பவும் (ரிபீட்) என்றாலே
டிராமா என்பது ஆகும். டிராமா என்ற வார்த்தை மிக நன்றாக உள்ளது.
சக்கரம் அவ்வாறே சுற்றிக் கொண்டே உள்ளது. நாடகத்திற்கு சற்றும்
வித்தியாசமின்றி அவ்வாறே சுற்றுகிறது என்று கூறப்படுவதில்லை.
யாராவது நோய் வாய்ப்பட்டு விட்டால் பின் விடுமுறை பெற்றுக்
கொண்டு விடுகிறார்கள். எனவே நாம் பூஜிக்கத்தக்க தேவதைகளாக
இருந்தோம். பின் பூஜாரி ஆனோம் என்பது குழந்தை களாகிய உங்கள்
புத்தியில் உள்ளது. தந்தை வந்து பதீத நிலையிலிருந்து பாவனம்
ஆவதற்கான யுக்தியை (வழி) 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கூறி
இருந்தது போலவே இப்பொழுதும் கூறுகிறார். குழந்தைகளே! என்னை
நினைவு செய்யுங்கள் என்று மட்டும் கூறுகிறார். தந்தை முதன்
முதலில் உங்களை ஆத்ம அபிமானியாக ஆக்குகிறார். முதன் முதலில்
குழந்தைகளே உங்களை ஆத்மா என்று உணருங்கள் தந்தையை நினைவு
செய்யுங்கள் என்ற இந்த பாடத்தை அளிக்கிறார். இவ்வளவு உங்களுக்கு
நினைவு செய்விக்கிறேன், நீங்கள் திரும்பவும் மறந்து
விடுகிறீர்கள். டிராமாவின் முடிவு வரும் வரையும் மறந்து கொண்டே
இருப்பீர்களா? கடைசியில் விநாசத்தின் நேரம் வரும் பொழுது
படிப்பு முடிவடைந்து விடும். பின் நீங்கள் சரீரத்தை விட்டு
விடுவீர்கள் எப்படி பாம்பு கூட ஒரு பழைய சட்டையை
விட்டுவிடுகிறது அல்லவா? எனவே தந்தையும் புரிய வைக்கிறார்.
நீங்கள் அமரும்பொழுதும் தேஹீ அபிமானி ஆகி இருங்கள், இதற்கு
முன்பு உங்களுக்கு தேக அபிமானம் இருந்தது. இப்பொழுது தந்தை
கூறுகிறார்: ஆத்ம அபிமானி ஆகுங்கள். தேக அபிமானத்தில் வருவதால்
உங்களை 5 விகாரங்கள் பிடித்துக் கொண்டு விடு கின்றன. ஆத்ம
அபிமானி ஆவதால் எந்த விகாரமும் பிடிக்காது. தேஹீ அபிமானி ஆகி
தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்ய வேண்டும்.
ஆத்மாக்களுக்கு பரமாத்மா தந்தையின் அன்பு இந்த சங்கமயுகத்தில்
கிடைக்கிறது. இது கல்யாணகாரி சங்கமம் என்று கூறப்படுகிறது.
இப்பொழுது தான் தந்தை மற்றும் குழந்தைகள் வந்து
சந்திக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் சரீரத்தில்
இருக்கிறீர்கள். தந்தையும் சரீரத்தில் வந்து உங்களுக்கு ஆத்மா
என்று நிச்சயம் செய்விக்கிறார். தந்தை ஒரே ஒரு முறை வருகிறார்.
அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டி இருக்கும் பொழுது
நான் உங்களை எவ்வாறு திரும்ப அழைத்து செல்வேன் என்பதையும்
புரிய வைக்கிறார். நாம் அனைவரும் பதீதமாக உள்ளோம் நீங்கள்
பாவனம் ஆனவர்கள் என்று (பக்தியில்) நீங்கள் கூறவும் செய்வீர்கள்.
நீங்கள் வந்து எங்களை பாவனம் ஆக்குங்கள். பாபா எப்படி பாவனமாக
ஆக்குவார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியாது. அவரே
கூறாதவரை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? ஆத்மா சிறிய
நட்சத்திரம் ஆகும் என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
தந்தையும் சிறு நட்சத்திரம் ஆவார். ஆனால் அவர் ஞானத்தின் கடல்
சாந்தியின் கடல் ஆவார். உங்களையும் தனக்குச் சமமாக ஆக்குகிறார்.
இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. அதை பிறகு
மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறீர்கள். பின் சத்யுகத்தில்
நீங்கள் இருக்கும் பொழுது இந்த ஞானம் கூறுவீர்களா என்ன? இல்லை.
ஞானக் கடலான தந்தையோ ஒரே ஒருவர் ஆவார். அவர் உங்களுக்கு
இப்பொழுது தான் கற்பிக்கிறார். அனைவருடைய வாழ்க்கை சரித்திரமும்
வேண்டும் அல்லவா? அதை தந்தை கூறிக் கொண்டே இருக்கிறார். ஆனால்
நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். உங்களுடையது மாயையுடன்
யுத்த மாகும் பாபாவை நாம் நினைவு செய்கிறோம், பின் மறந்து
விடுகிறோம் என்று நீங்கள் உணரு கிறீர்கள். உங்களை மறந்து
விடுமாறு செய்யும் அதாவது தந்தையிடமிருந்து முகத்தை திருப்பி
விடும் மாயை தான் உங்களது எதிரி என்று தந்தை கூறுகிறார்.
குழந்தைகளாகிய நீங்கள் ஒரே ஒரு முறை தந்தைக்கு முன்னால்
இருக்கிறீர்கள். தந்தை ஒரே ஒரு முறை ஆஸ்தி அளிக்கிறார்; பின்
தந்தைக்கு முன்னால் வருவதற்கான அவசியமே இல்லை. பாவ
ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக சொர்க்கத்தின் எஜமானராக
ஆக்கிவிட்டார். அவ்வளவுதான். பின் வந்து என்ன செய்வார். நீங்கள்
அழைத்தீர்கள் மற்றும் நான் முற்றுலும் சரியான நேரத்தில் வந்தேன்;
ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும் நான் எனது குறித்த
நேரத்தில் வருகிறேன். இது யாருக்குமே தெரியாது. சிவ ராத்திரி
ஏன் கொண்டாடுகிறார்கள். அவர் என்ன செய்தார்? யாருக்குமே
தெரியாது. எனவே சிவராத்திரிக்கு விடுமுறை ஆகியவை எதுவும்
விடுவதில்லை. மற்ற எல்லாருக்கும் விடுமுறை அளிக்கிறார்கள்.
ஆனால் சிவ பாபா வருகிறார் இவ்வாறு தனது பாகத்தை நடிக்கிறார்.
அவர் பற்றி யாருக்குமே தெரிய வருவதில்லை. பொருளே தெரியாமல்
உள்ளார்கள். பாரதத்தில் எவ்வளவு அறியாமை உள்ளது. சிவ பாபா தான்
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். எனவே அவசியம் மனிதர்களை
உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆக்குவார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். நான் இவருக்கும் ஞானம் அளித்தேன்;
யோகம் கற்பித்தேன் பின் அவர் நரனிலிருந்து நாராயணர் ஆனார் என்று
தந்தை கூறுகிறார். அவர் இந்த ஞானம் கேட்டிருக்கிறார். இந்த
ஞானம் பாரதத்திற்காகவே உள்ளது. மற்ற எவருக்கும் கற்று தருவது
இல்லை. நீங்கள் மீண்டும் ஆக வேண்டும்; வேறு யாரும் ஆவ தில்லை.
இது நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான கதை ஆகும். யாரெல்லாம்
மற்ற மதங்களை ஸ்தாபனை செய்தார்களோ அவர்கள் எல்லாரும் புனர்
ஜென்மம் எடுத்து எடுத்து தமோ பிரதானம் ஆகி உள்ளார்கள். பின்
அவர்கள் எல்லாரும் சதோ பிரதானம் ஆக வேண்டும். அந்த பதவிக்கேற்ப
மீண்டும் திரும்பவும் (தமது பாகத்தை) செய்ய வேண்டும். உயர்ந்த
பார்ட்தாரி ஆவதற்காக நீங்கள் எவ்வளவு புருஷார்த்தம் செய்து
கொண்டு இருக்கிறீர்கள். யார் புருஷார்த்தம் செய்வித்துக் கொண்டு
இருக்கிறார்? நீங்கள் உயர்ந்தவர் ஆகிவிடுகிறீர்கள்; பின்
ஒருபொழுதும் நினைவு கூட செய்வ தில்லை. சொர்க்கத்தில் நினைவு
செய்வீர்களா என்ன? உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார். பின்
உயர்ந்தவராக நம்மை ஆக்குவதும் கூட அவரே! நாராயணர் முன்னதாக ஸ்ரீ
கிருஷ்ணராக ஆவார். பின் நீங்கள் ஏன் நரனிலிருந்து நாராயணர்
ஆனார் என்று அவ்வாறு ஏன் கூறுகிறீர்கள்! ஏன் நரனிலிருந்து
கிருஷ்ணர் ஆனார் என்று கூறுவதில்லை? முதலில் நாராயணர் ஆவாரா
என்ன? முதலிலோ இளவரசன் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார் அல்லவா! குழந்தையோ
மலராக இருப்பார். அவர்களோ பிறகும் தம்பதி ஆகி விடுகிறார்கள்
மகிமை பிரம்மசாரிக்கு தான் உண்டு. சிறிய குழந்தை சதோ பிரதானம்
என்று கூறப்படுகிறது. நாம் முதன் முதலில் அவசியம் இளவரசர் ஆவோம்
என்ற சிந்தனை குழந்தைகளாகிய உங்களுக்கு வர வேண்டும்.
ஆண்டியிலிருந்து அரசன் என்று பாடவும் படுகிறது. ஆண்டி என்பது
யாருக்கு கூறப்படுகிறது? ஆத்மாவிற்கு தான், சரீரத்துடன் கூட ஏழை
அல்லது செல்வந்தர் என்று கூறுகிறார்கள். இச்சமயம் எல்லாருமே
ஏழைகள் ஆகிவிடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
எல்லாம் அழிந்து விடுகிறது. நீங்கள் இச்சமயத்தில் தான்
சரீரத்துடன் சேர்ந்து ஏழை ஆக வேண்டும். பைசா, பணம் என்ன
வெல்லாம் உள்ளதோ எல்லாம் அழிந்து விடும். ஆத்மா ஏழை ஆக வேண்டி
உள்ளது. எல்லாமே விட்டு விட வேண்டும். பின் இளவரசர் ஆக வேண்டும்.
பணம் செல்வம் ஆகிய அனைத்தையும் விட்டு விட்டு ஏழை ஆகி நாம் வீடு
செல்வோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பின் புது உலகத்தில்
இளவரசர் ஆக வருவோம். என்னவெல்லாம் உள்ளதோ அனைத்தையும் விட்டு
விட வேண்டும் இந்த பழைய பொருட்கள் எதற்கும் பிரயோஜனமில்லை.
ஆத்மா பவித்திரமாக ஆகிவிடும் மற்றும் முந்தைய கல்பத்தைப் போல
தனது பாகத்தை நடிக்க இங்கு வரும். எந்த அளவிற்கு நீங்கள் தாரணை
செய்வீர்களோ அந்த அளவு உயர்ந்த பதவி கிடைக்கும். இச்சமயம்
ஒருவரிடம் 5 கோடி இருக்கிறது என்றாலும் கூட எல்லாமே அழிந்து
போய்விடும். நாம் மீண்டும் நமது புது உலகிற்குச் செல்கிறோம்.
இங்கு நீங்கள் வந்திருப்பதே புது உலகிற்கு செல்வதற்காக. வேறு
எந்த சத்சங்கத்திலும் நாங்கள் புது உலகிற்காக படித்துக்
கொண்டிருக்கிறோம் என்று நினைக்க மாட்டார்கள். குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் பாபா நம்மை முதலில் ஏழையாக ஆக்கி பின்
இளவரசர் ஆக்குகிறார் என்பது உள்ளது. தேகத்தின் எல்லா
சம்பந்தங்களையும் விட்டுவிட்டீர்கள் என்றால் ஏழை ஆகிறீர்கள்
அல்லவா? எதுவுமே இல்லை. இப்பொழுது பாரதத்தில் எதுவும் இல்லை.
இப்பொழுது பாரதம் ஏழையாக திவால் ஆகி விட்டுள்ளது. பின் செல்வம்
நிறைந்ததாக, ஆகும் யார் ஆகிறார்கள்? ஆத்மா சரீரம் மூலமாக ஆகிறது.
இப்பொழுது ராஜா ராணி கூட இல்லை அவர்களும் திவால் ஆகி உள்ளார்கள்.
ராஜா ராணியின் கிரீடம் கூட இல்லை. அந்த கிரீடமும் இல்லை.
ரத்தினங்கள் பதித்த கிரீடமும் இல்லை. இருள் நிறைந்த நகரம் ஆகும்.
சர்வ வியாபி என்று கூறிவிடுகிறார்கள். அதாவது எல்லா வற்றிலும்
பகவான் இருக்கிறார். எல்லாம் சமம், நாய், பூனை எல்லாவற்றிலும்
உள்ளார். இதற்குத் தான் இருள் நிறைந்த நகரம் என்று
கூறப்படுகிறது. பிராமணர்களாகிய உங்களது இரவாக இருந்தது
இப்பொழுது ஞான பகல் வந்து கொண்டிருக்கிறது என்று
புரிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் எல்லாருமே ஏற்றப்பட்ட ஜோதி
ஆவார்கள். இப்பொழுது தீபம் முற்றிலும் மங்கலாக ஆகி விட்டுள்ளது.
பாரதத்தில் தான் தீபம் ஏற்றுவதற்கான வழக்கம் உள்ளது. வேறு
யாரும் தீபம் ஏற்றுகிறார்களா என்ன? உங்களது ஜோதி அணைந்துள்ளது.
சதோபிரதானமாக உலகின் எஜமானராக இருந்தீர்கள். அந்த சக்தி
குறைந்து குறைந்து இப்பொழுது கொஞ்சம் கூட சக்தியே இல்லை.
மீண்டும் தந்தை உங்களுக்கு சக்தி அளிக்க வந்துள்ளார். பேட்டரி
நிரம்புகிறது. ஆத்மா பரமாத்மா தந்தையின் நினைவில் இருக்கும்
பொழுது தான் பேட்டரி நிரம்புகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகு காலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் கால வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இப்பொழுது நாடகம் முடிவடைந்து கொண்டிருக்கிறது.
நாம் திரும்ப வீடு செல்ல வேண்டும். எனவே ஆத்மாவை தந்தையின்
நினைவினால் சதோபிரதானமாக பாவனமாக அவசியம் ஆக்க வேண்டும்.
தந்தைக்குச் சமமாக ஞான கடல், சாந்தி கடலாக இப்பொழுதே ஆக
வேண்டும்.
2. இந்த தேகத்திலிருந்து ஏழை ஆவதற்காக இந்த கண்களால்
பார்ப்பது அனைத்தும் அழியப் போகிறது என்பது புத்தியில் இருக்க
வேண்டும் நாம் ஆண்டியிலிருந்து அரசன் ஆக வேண்டும் நமது படிப்பே
புது உலகிற்காக.
வரதானம்:
சமத்கார் - வியப்பூட்டக் கூடிய செயலை காண்பிப்பதற்கு பதிலாக
அழியாத பாக்கியத்தின் சமக்தா - பிரகாசிக்கக் கூடிய
நட்சத்திரமாகி விடக் கூடிய சித்தி சொரூபம் ஆவீர்களாக.
தற்காலத்தில் அல்பகால சித்தி உடையவர்கள் கடைசியில் மேலிருந்து
வந்திருக்கும் காரணத்தால் சதோபிரதான நிலைக் கேற்ப தூய்மையின்
பலனின் சொரூபமாக அல்பகால அற்புதங்களை (சமத்கார்)
காண்பிக்கிறார்கள். ஆனால் அந்த சித்தி எக்காலத்திற்குமாக
இருப்பதில்லை. ஏனெனில் சிறிது காலத்திற்குள்ளேயே சதோ, ரஜோ, தமோ
ஆகிய மூன்று நிலைகளை கடந்து விடுகிறார்கள். பவித்திர
ஆத்மாக்களாகிய நீங்கள் எப்பொழுதுமே சித்தி சொரூபம் ஆவீர்கள்.
சமத்கார் - அற்புதம் காண்பிப்பதற்கு பதிலாக சமக்தி -
பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜோதி சொரூபமாக ஆகக் கூடியவர்
ஆவீர்கள். அழியாத பாக்கியத்தின் சமக்தா - பிரகாசிக்கக் கூடிய
நட்சத்திரமாக ஆக்கக் கூடியவர்கள் ஆவீர்கள். எனவே எல்லாருமே
உங்களிடம் உயிர்ப் பிச்சை பெற வருவார்கள்.
சுலோகன்:
எல்லையில்லாத வைராக்கிய உள்ளுணர்வின் வாயுமண்டலம் இருந்தது
என்றால் சகயோகி (ஒத்துழைப்பு அளிப்பவர்கள்) சகஜயோகி ஆகி
விடுவீர்கள்.