12-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! தொழில் போன்றவைகளை செய்து கொண்டு இருந்தாலும் சதா தன்னுடைய இறை மாணவ வாழ்க்கை மற்றும் படிப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சுயம் பகவானே நம்மை படிக்க வைக்கின்றார் என்ற போதையில் இருங்கள்.

கேள்வி:
எந்த குழந்தைகள் ஞான அமிர்தத்தை ஜீரணம் செய்ய முடியும், அவர்களின் அடையாளம் என்ன ?

பதில்:
அவர்களுக்கு எப்பொழுதும் ஆன்மீகப் போதை ஏறிக்கொண்டேயிருக்கும். மேலும் அந்த போதையின் ஆதாரத்தில் நன்மை செய்து கொண்டேயிருப்பார்கள். நன்மை செய்வதைத் தவிர வேறு எந்த விஷயமும் அவர்களுக்கு நன்றாக இருக்காது. முட்களை மலராக மாற்றக்கூடிய சேவையில் சதா ஈடுபட்டிருப்பார்கள்.

ஓம் சாந்தி.
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் மற்றும் நாம் நடிகர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்திருக்கிறீர்கள். இது உங்களின் நினைவில் வரவேண்டும். தந்தை நம்மை மீண்டும் இராஜ்யத்தை அடைய வைப்பதற் காகவும், தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக மாற்றுவதற்காகவும் வந்திருக்கிறார் என அறிகிறீர்கள். இது உயர்ந்ததிலும் உயர்ந்த ஆன்மீக பள்ளிக்கூடம் என தெரியும். ஆன்மீகத் தந்தை படிக்க வைக்கிறார். குழந்தைகளுக்கு படிப்பு நினைவு வர வேண்டும். இவரும் (பிரம்மா பாபா) குழந்தையே, இவருக்கும் மற்ற அனைவருக்கும் கற்பிப்பவர் அந்த தந்தையே!. அனைத்து மனித ஆத்மாக்களுக்கும் தந்தை அவரே. அவர் இந்த உடலை கடனாகப் பெற்று உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார். இங்கே அமரும் பொழுது 84 பிறவிகளுக்காக என்பது புத்தியில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என தினந்தோறும் புரிய வைக்கின்றார். நாம் உலகத்திற்கே அதிபதியாக இருந்தோம், தேவி தேவதையாக இருந்தோம், பிறகு மறுபிறவி எடுத்து எடுத்து தரையில் நரகத்தில் வந்திருக்கிறோம். பாரதம் எவ்வளவு பணக்கார நாடாக இருந்தது. அனைத்து நினைவும் வருகிறது. பாரதத்தின் கதை, கூடவே தனது கதையும் ஆகும். தன்னை மறக்காதீர்கள். நாம் செர்க்கத்தில் இராஜ்யம் செய்தோம். பிறகு 84 பிறவிகளை எடுக்க வேண்டியதாயிற்று. இது முழு நாளும் நினைவில் கொண்டு வர வேண்டும். தொழில் போன்றவைகளை செய்தாலும் படிப்பு நினைவில் இருக்க வேண்டும் அல்லவா? நாம் எவ்வாறு உலகத்திற்கு அதிபதியாக இருந்தோம். பிறகு கீழே இறங்கி வந்தோம். புரிந்து கொள்ள இது மிகவும் எளிது. ஆனாலும் சிலருக்கு இந்த நினைவும் இல்லை. ஆத்மா தூய்மையாக இல்லாத காரணத்தினால் நினைவு நழுவி விடுகிறது. நம்மை பகவான் படிக்க வைக்கின்றார் என்ற நினைவு நழுவிப் போகிறது. நாம் பாபாவின் மாணவர் கள். நினைவு யாத்திரையில் இருங்கள் என பாபா கூறிக் கொண்டேயிருக்கின்றார். முழு நாளும் இந்த நினைவு வந்து கொண்டேயிருக்க வேண்டும். பாபா தான் நினைவு படுத்துகின்றார். இதே பாரதம் தான் இருந்தது அல்லவா. நாமே தேவி தேவதைகளாக இருந்தோம். இப்பொழுது அசுரர் ஆகிவிட்டோம். முதலில் உங்களுடைய புத்தியும் அசுரத்தனமாக இருந்தது. இப்பொழுது பாபா ஈஸ்வரிய புத்தியைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் ஒரு சிலருடைய புத்தியில் பதிவதில்லை. மறந்து போகிறார்கள். பாபா எவ்வளவு போதை ஏற்றுகின்றார். நீங்கள் மீண்டும் தேவதையாக மாறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், அந்த போதை இருக்க வேண்டும் அல்லவா? நாம் நம்முடைய இராஜ்யத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம். நாம் நம்முடைய இராஜ்யத்தை ஆட்சி செய்வோம் என்ற போதை சிலருக்கு முற்றிலும் இல்லை. ஞான அமிர்தம் ஜீரணம் ஆவ தில்லை. யாருக்கு போதை ஏறுகிறதோ, அவர்களுக்கு பிறருக்கு நன்மை செய்வதைத் தவிர வேறு எந்த விஷயமும் நன்றாக இருக்காது. மலர்களாக மாற்றக்கூடிய சேவையில் ஈடுபட்டு இருப்பார் கள். நாம் முதலில் மலர்களாக இருந்தோம், பிறகு மாயை முள்ளாக மாற்றி விட்டது. இப்பொழுது மீண்டும் மலர்களாக மாறுகிறோம். இவ்வாறு தனக்குத் தானே பேசிக்கொள்ள வேண்டும். இந்த போதையில் இருந்து யாருக்குப் புரிய வைத்தாலும் உடனே அம்பு தைக்கும். பாரதம் அல்லாவின் தோட்டமாக இருந்தது. இப்பொழுது அழுக்காகி விட்டது. நாம் தான் முழு உலகத்திற்கு அதிபதி யாக இருந்தோம். எவ்வளவு பெரிய விஷயம், இப்பொழுது மீண்டும் நாம் எப்படி மாறி விட்டோம். எவ்வளவு விழுந்து (தாழ்ந்தவர்களாகி) விட்டோம். விழுதல் மற்றும் எழுந்திருத்தலின் (இறங்குவது, ஏறுவது) நாடகம் இது. பாபா இந்த கதையைச் கூறுகின்றார். அது பொய்யானது. இது உண்மையானது. அவர்கள் சத்திய நாராயணரின் கதையைக் கூறுகின்றார்கள். நாம் எப்படி ஏறினோம், எப்படி விழுந்தோம் என புரிந்து கொள்வது கிடையாது. இந்த தந்தை தான் உண்மை யான சத்திய நாராயணனின் கதையைக் கூறியிருக்கிறார். இராஜ்யத்தை எப்படி இழந்தீர்கள், இது அனைத்தும் நம்மைப் பற்றியதாகும். இப்பொழுது நாம் எப்படி இராஜ்யத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம் என்பது ஆத்மாவிற்குத் தெரிய வந்திருக்கிறது. இங்கே பாபா கேட்கும் பொழுது ஆம், போதை இருக்கிறது, பிறகு வெளியே சென்றதும் போதை குறைந்து விடுகிறது என கூறுகிறார்கள். கையை உயர்த்துகிறோம், ஆனால் நடத்தை போதை உடையதாக இல்லை என குழந்தைகளே புரிந்து கொள்கிறார்கள். ஃபீலிங் (உணர்வு) வருகிறதல்லவா.?

குழந்தைகளே நான் உங்களுக்கு இராஜ்யத்தை அளித்தேன். பிறகு நீங்கள் இழந்துவிட்டீர்கள் என பாபா குழந்தைகளுக்கு நினைவு படுத்துகின்றார். நீங்கள் கீழே இறங்கி வந்து கொண்டே வந்துள்ளீர் கள். ஏனென்றால் இந்த நாடகமே ஏறுவதும் இறங்குவதும் ஆகும். இன்று இராஜாவாக இருக்கிறார் கள். நாளை அவரை இறக்கி விடுகிறார்கள். செய்தித்தாள்களில் நிறைய இவ்வாறான விசயங்கள் வருகின்றன. இதற்கு பதிலளித்தால் ஏதாவது புரிந்து கொள்ளலாம். இது நாடகம். இது நினைவிருந்தால் எப்பொழுதும் குஷி இருக்கும். இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு சிவபாபா வந்தார், வந்து இராஜ யோகத்தைக் கற்பித்தார் என்பது புத்தியில் இருக்கிற தல்லவா? போர் நடந்தது. இப்பொழுது சரியான விசயங்கள் அனைத்தையும் பாபா கூறுகின்றார். இது புருஷோத்தம யுகம் அல்லவா? கலியுகத்திற்குப் பிறகு இந்த புருஷோத்தம யுகம் வருகிறது. கலியுகத்திற்கு புருஷோத்தம யுகம் என்று கூறமாட்டார்கள். சத்யுகத்திற்கும் கூறமாட்டார்கள். அசுர சம்பிரதாயம் மற்றும் தெய்வீக சம்பிரதாயம் என்கிறார்கள். அதற்கு இடைப்பட்டது தான் இந்த சங்கமயுகம். அப்பொழுது தான் இந்த பழைய உலகம் புதிய உலகமாக மாறுகிறது. புதியதிலிருந்து பழையதாக மாறுவதில் இப்படியாக முழு சக்கரமும் சுற்றி விடுகிறது. இப்பொழுது சங்கமயுகம் ஆகும். சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்போது அது கிடையாது. மற்றபடி பல தர்மங்கள் வந்திருக்கிறது. இது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. பலர் 6-8 மாதங்கள், 12 மாதங்கள் படித்து பிறகு வந்து விடுகிறார்கள். தோல்வி அடைகிறார்கள். தூய்மையாக மாறுகிறார்கள். ஆனால் படிக்கவில்லை என்றால் மாட்டிக் கொள்கிறார்கள். தூய்மை மட்டும் பயன்படுவதில்லை. இப்படி பல சந்நியாசிகள் கூட இருக்கிறார்கள். அவர்கள் சந்நியாச தர்மத்தை விட்டு விட்டு குடும்பஸ்தர்களாக மாறி விடு கிறார்கள். திருமணம் செய்து கொள்கிறார் கள். இப்பொழுது நீங்கள் பள்ளிக் கூடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என பாபா புரியவைக்கிறார். நாம் நமது இராஜ்யத்தை எப்படி இழந்தோம், எத்தனை பிறவிகள் எடுத்தோம் என்பது நினைவில் இருக்க வேண்டும். உலகத்திற்கே அதிபதியாகுங்கள் என இப்போது மீண்டும் பாபா கூறுகின்றார். நிச்சய மாக தூய்மையாக வேண்டும். எவ்வளவு அதிகமாக நினைக்கின்றீர்களோ அவ்வளவு தூய்மை யாகிக் கொண்டே போவீர்கள். ஏனென்றால் தங்கத்தில் அழுக்கு படிந்திருக்கிறது. அது எப்படி போகும்? ஆத்மாவாகிய நாம் சதோபிரதானமாக இருந்தோம். 24 காரட்டாக இருந்தோம், பிறகு கீழே இறங்கி இறங்கி இப்படிப்பட்ட நிலையை அடைந்து விட்டோம் என குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. யாம் எப்படி மாறி விட்டோம். நாம் எப்படி இருந்தோம் என பாபா தன்னைப் பற்றி கூறுவது கிடையாது. மனிதர்களாகிய நீங்கள் தான் நாம் தேவதையாக இருந்தோம் என கூறுகிறீர்கள். பாரதத்திற்கு மகிமை இருக்கிறதல்லவா? பாரதத்தில் யார் வருகிறார்கள்? என்ன ஞானம் கொடுக்கிறார்கள்? இதை யாரும் அறியவில்லை. விடுவிப்பவர் எப்பொழுது வருகிறார் என தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? பாரதம் பழமை யானது என பாடப்பட்டு இருக்கிறது என்றால் பாரதத்தில் தான் அவதாரம் நிகழ்ந்து இருக்கும், மேலும் ஜெயந்தியும் பாரதத்தில் தான் கொண்டாடு கிறார்கள். நிச்சயமாக இங்கே தான் தந்தையும் வருகிறார். பாக்யரதம் பாகீரதன் என்றும் கூறுகிறார்கள். நிச்சயம் மனித உடலில் வந்திருப்பார் அல்லவா? பிறகு குதிரை வண்டியையும் காண்பித்துள்ளனர். எவ்வளவு வித்தியாசம் உள்ளது. கிருஷ்ணர் மற்றும் ரதத்தை காண்பித்துள்ளனர். என்னைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது பாபா இந்த (பிரம்மா பாபா) ரதத்தில் தான் வருகிறார். இவருக்கு தான் பாக்கியசாலி ரதம் என்று கூறப்படுகிறது என்று புரிந்து கொள்கிறீர்கள். பிரம்மாவில் இருந்து விஷ்ணு, சித்திரத்தில் எவ்வளவு தெளிவாக இருக்கிறது. திரிமூர்த்திக்கு மேலே சிவன், இந்த சிவனின் அறிமுகத்தை யார் கொடுத்தது. பாபா தான் உருவாக்கினார் அல்லவா? இப்பொழுது பாபா இந்த பிரம்மா என்ற இரதத்தில் வந்திருக்கிறார் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. 84 பிறவிகளுக்கு பிறகு விஷ்ணு விலிருந்து பிரம்மா ஆகிறார். அது எப்போது? பிரம்மாவிலிருந்து ஒரு நொடியில் விஷ்ணு ஆவது எப்போது? என்பதும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. புத்தியில் கடைபிடிக்க வேண்டிய அதிசயமான விஷயங்கள் அல்லவா! முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைப் புரிய வைக்க வேண்டி இருக்கிறது. பாரதம் நிச்சயம் சொர்க்கமாக இருந்தது. சொர்க்கத்தின் தந்தை சொôக்கத்தை உருவாக்கியிருப்பார். இந்த படங்கள் மிகவும் அற்புதமானது. புரிய வைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதல்லவா? பாபாவிற்கும் ஆர்வம் இருக்கிறது. நீங்கள் இவ்வாறு சென்டர்களிலும் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இங்கே நேரடியாக பாபா இருக்கிறார். பாபா ஆத்மாக் களுக்குப் புரிய வைக்கிறார். ஆத்மாக்கள் புரிய வைப்பதிலும் பாபா புரிய வைப்பதிலும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. ஆகவே நேரடியாக கேட்பதற்காக இங்கே வருகிறார்கள். பாபாதான் அடிக்கடி குழந்தைகளே! குழந்தைகளே! என கூறுகின்றார். சகோதர சகோதரர்களுக்குள் பாபாவுடன் இருக்கும் அளவிற்கு நெருங்கிய உறவு இருக்காது. இங்கே நீங்கள் பாபா முன்பு இருக்கிறீர்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவும் சந்திப்பதற்கு மேளா என்று கூறப்படுகிறது. பாபா நேரடியாக வந்து புரிய வைக்கின்றார் என்றால், நிறைய போதை ஏறுகிறது. எல்லையற்ற தந்தை கூறுகிறார் என்றால், அவர் கூறுவதை ஏற்காமல் இருப்பதா என நினைக்கிறார்கள். நான் உங்களை செர்க்கத் திற்கு அனுப்பினேன். பிறகு நீங்கள் 84 பிறவிகளை எடுத்து அழுக்காகி யிருக்கிறீர்கள். மீண்டும் நீங்கள் தூய்மையாக மாட்டீர்களா என ஆத்மாக்களுக்கு கூறுகின்றார். சிலர் பாபா உண்மையை கூறுகின்றார் என நினைக்கின்றார்கள். சிலரோ நாங்கள் ஏன் தூய்மையாக மாட்டோம் என உடனே கூறுகின்றார்கள்.

என்னை நினைத்தால் உங்களுடைய பாவம் அழியும் என பாபா கூறுகின்றார். நீங்கள் உண்மை யான தங்கமாக மாறி விடுவீர்கள். நான் அனைவருக்கும் பதீத பாவனர் தந்தையாக இருக்கிறேன். பாபா புரிய வைப் பதற்கும் ஆத்மாக்கள் (குழந்தைகள்) புரிய வைப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. யாராவது புதியதாக வருகிறார்கள் என்றால் அவர்களிலும் யார் இவ்விடத்தின் மலர்களோ அவர்களுக்கு இவர்கள் சரி யாகக் கூறுகிறார்கள் என தோன்றும். இவ்விடத்தின் உடையவராக இல்லை என்றால் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆத்மாக்களாகிய நமக்கு தூய்மை யாக மாறுங்கள் என பாபா கூறுகிறார் என புரிய வையுங்கள். மனிதர்கள் தூய்மையாவதற்காக கங்கையில் நீராடுகிறார்கள், குருவிடம் செல்கிறார்கள். ஆனால் பாபா தான் பதீத பாவனர். பாபா ஆத்மாக்களிடம் நீங்கள் எவ்வளவு அழுக்காகி விட்டீர்கள். ஆகவே தான் பதீத பாவனா வாருங்கள்! என ஆத்மா நினைக்கிறது என கூறுகின்றார். நான் கல்ப கல்பமாக வருகிறேன் என பாபா கூறுகிறார். இது உங்களுடைய கடைசி பிறவி தூய்மையாகுங்கள், என குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றேன். இது இராவணனின் இராஜ்யம், அழியப் போகிறது. தூய்மையாவதே முக்கியமான விஷயம் ஆகும். சொர்க்கத்தில் விஷம் கிடையாது. யாராவது வந்தால் அவர்களுக்கு தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினைத்தால் அழுக்கு நீங்கிவிடும் என பாபா கூறுகின்றார் என புரிய வையுங்கள். மன்மனாபவ என்ற வார்த்தை நினைவிருக் கிறதல்லவா?. பாபா நிராகாரராக இருக்கிறார். ஆத்மாக்களாகிய நாமும் நிராகாரராக இருக்கிறோம். நாம் இந்த சரீரம் மூலமாக வந்து கேட்கிறோம். பாபாவும் இந்த உடலில் வந்து புரிய வைக்கிறார். இல்லை யென்றால் என்னை மட்டும் நினையுங்கள் என்று எப்படி கூறுவார். தேகத்தின் அனைத்து உறவுகளையும் விடுங்கள். நிச்சயமாக இங்கே வருகிறார், பிரம்மாவிற்குள் பிரவேசம் ஆகிறார். இப்பொழுது பிரஜா பிதா கண் கூடாக நடைமுறையில் இருக்கிறார். இவர் மூலமாக பாபா நமக்கு இவ்வாறு கூறுகின்றார். நாம் எல்லையற்ற தந்தையின் விஷயங்களை ஏற்கிறோம். அவர் தூய்மையாகுங்கள் என கூறுகின்றார். பதீத தன்மையை விடுங்கள், பழைய தேகத்தின் உணர்வை விடுங்கள். என்னை நினைத்தால் கடைசி நினைவிற்கு ஏற்ப நிலையை அடையலாம். நீங்கள் லட்சுமி நாராயணன் ஆகிவிடுவீர்கள்.

பாபாவிடம் இருந்து பாராமுகமாக இருப்பதற்கான முக்கிய அவகுணம் ஒருவர் மற்றவரைப் பற்றி பரசிந்தனை செய்தல் ஆகும். தீய விஷயங்களைக் கேட்டல் மற்றும் சொல்லுதல். நீங்கள் தீய விஷயங்களைக் கேட்கக்கூடாது என்பது பாபாவின் டைரக்ஷன் ஆகும். இவர்களின் விஷயத்தை அவர்களுக்கும் அவர்களின் விஷயத்தை இவர்களுக்கும் கூறுதல் கோள்மூட்டுதல் ஆகும். இது குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக்கூடாது. இச்சமயம் உலகத்தில் அனைவரும் விபரீத புத்தி உடைவராக இருக்கிறார்கள் அல்லவா? இராமரைத் தவிர வேறு யாரைப் பற்றியாவது பேசுதல் கூட கோள்மூட்டுதல் (புறம் பேசுதல்) ஆகும். இப்போது இந்த புறம்பேசுதலை விடுங்கள் என பாபா கூறுகின்றார். நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் சீதைகளே.! நீங்கள் ஒரு இராமரை மட்டும் நினையுங்கள் என தெரிவியுங்கள். நீங்கள் தூதுவர்கள். என்னை நினையுங்கள் போதும் என பாபா கூறியிருக்கிறார் என்ற செய்தியைக் கொடுங்கள். இதைத் தவிர மற்ற அனைத்தும் புறம் பேசுதல் ஆகும். பாபா அனைத்து குழந்தை களுக்கும் புறம் பேசுதலை விடுங்கள் என்று கூறுகின்றார். அனைத்து சீதைகளையும் ஒரு இராமருடன் தொடர்பு ஏற்படுத்துங்கள். உங்களின் தொழிலே இது வாகும். இந்த செய்தியைக் கொடுத்துக் கொண்டே யிருங்கள். அவ்வளவு தான்! தந்தை வந்திருக் கிறார். நீங்கள் சத்யுகத்திற்குப் போக வேண்டும் என கூறுகின்றார். இப்போது இந்த கலியுகத்தை விட வேண்டும். உங்களுக்கு வனவாசம் கிடைத்திருக்கிறது. காட்டில் அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா? காட்டிற்கு வனம் என்று பெயர். கன்யாவிற்கு திருமணம் நடக்கும் பொழுது வனத்தில் அமருகிறார். பிறகு மாளிகைக்குள் செல்கிறார். நீங்களும் காட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். இப்பொழுது மாமியார் வீட்டிற்குப் போக வேண்டும். இந்த பழைய தேகத்தை விட வேண்டும். ஒரு தந்தையை நினையுங்கள். யாருக்கு வினாச காலத்தில் அன்பு புத்தி இருக்கிறதோ அவர்கள் மாளிகைக்குள் போவார்கள். மற்றவர்கள் விபரீத புத்தி இருப்பதால் வனவாசம் செல்வார்கள். காட்டில் வசிக்கிறார்கள். பாபா குழந்தைகளுக்கு விதவிதமாகப் புரிய வைக்கிறார். எந்த தந்தை யிடமிருந்து எல்லையற்ற இராஜ்ய பதவியை அடைந்திருக்கிறீர்களோ அவரை மறந்துவிட்டீர்கள் என்றால், வனவாசத்திற்கு சென்றுவிட்டீர்கள். வனவாசம் மற்றும் மலர் தோட்ட வாசம். பாபாவின் பெயரே தோட்டக்காரன். ஆனால் யாருடைய புத்தியிலாவது தோன்ற வேண்டும். பாரதத்தில் தான் நம்முடைய இராஜ்யம் இருந்தது. இப்போது இல்லை. இப்போது வனவாசமாக இருக்கிறது. பிறகு மலர் தோட்டத்திற்குச் செல்கின்றோம். நீங்கள் இங்கே அமர்ந்து இருந்தாலும் புத்தியில் நாம் எல்லையற்ற தந்தையிடம் இருந்து நமது இராஜ்யத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம் என இருக்க வேண்டும். என்னுடன் அன்பு வையுங்கள். இருந்தாலும் மறந்துபோகிறீர்கள் என பாபா கூறுகின்றார். தந்தையாகிய என்னை எதுவரை மறப்பீர்கள் என பாபா புகார் செய்கிறார்? பிறகு பொற்காலத்திற்கு எப்படி செல்வீர்கள். நாம் எவ்வளவு நேரம் நினைத்தோம் என தன்னையே கேளுங்கள். நாம் நினைவு அக்னியில் இருந்தால் தான் விகர்மங்கள் அழியும். ஒரு தந்தையிடம் அன்பான புத்தியிருக்க வேண்டும். எல்லோரையும் விட அற்புதமான மணவாளன் உங்களையும் அற்புதமாக மாற்றுகின்றார். மூன்றாம் வகுப்பில் ஆட்டு மந்தைகளைப் போல பயணம் செய்தல் எங்கே? ஏசியில் பயணம் செய்தல் எங்கே? எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இது அனைத்தையும் சிந்திக்கும் பொழுது உங்களுக்கு ஆனந்தம் பொங்கும். நானும் பாபாவை நினைப்பதற்காக தலையை உடைத்துக் கொள்கிறேன் என இந்த பாபாவும் கூறுகின்றார். முழு நாளும் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்களும் இந்த முயற்சி செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யாருக்கும் ஒரு இராமரின் (தந்தையின்) விஷயங்களைத் தவிர வேறு எந்த விஷயமும் கூற வேண்டாம். ஒருவரைப் பற்றிய விஷயத்தை இன்னொருவரிடம் கூறுதல் மற்றவரைப் பற்றி சிந்தித்தல் கூட புறம்பேசுதல் ஆகும். இதை விட்டுவிட வேண்டும்.

2. ஒரு பாபாவுடன் அன்பு வைக்க வேண்டும். பழைய தேக உணர்வை விட்டு விட்டு ஒரு தந்தையின் நினைவில் இருந்து தன்னை தூய்மையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
உள்ளடக்கும் சக்தி மூலமாக தவறையும் சரியென மாற்றியமைத்து உலகை மாற்றுபவராகுக

பிறரின் தவறைப் பார்த்து தானும் தவறு செய்யாதீர்கள். பிறர் தவறே செய்தாலும், நாம் நேர் வழியில் செல்வோம். அவரது தொடர்பால் மாறிவிடக் கூடாது. அவ்வாறு மாறினால் அலட்சியம் செய்வதாகும். ஒவ்வொருவரும் நான் நேர்வழியில் மட்டுமே செல்வேன் என பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். ஒருவேளை பிறர் தவறே செய்தாலும் அந்த நேரத்தில் உள்ளடக்கும் சக்தியை பயன்படுத்துங்கள். பிறரது தவறை கவனிப்பதை விடுத்து அவருக்கு உதவி செய்வதில் கவனம் கொடுங்கள். அதாவது ஒத்துழைப்பால் நிரப்பி விடுங்கள். அப்போது உலக மாற்றத்திற்கான செயல் சுலபமாக நிறைவேறும்.

சுலோகன்:
நிரந்தர யோகி ஆக வேண்டுமெனில் எல்லைக்குட்பட்ட நான் எனது என்பதை எல்லைக்காப்பாற்பட்டதாக மாற்றி விடுங்கள்

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும் ஆளுமையையும் கையாளுங்கள்

நிகழ்காலத்திற்கேற்ப பரிஸ்தாவின் முழுமை நிலை மற்றும் பாப்சமான் நிலைக்கு அருகே வரு கின்றீர்கள். அவ்வாறே தூய்மையின் பிரிணாமும் அதி நுட்பமாகிக் கொண்டேசெல்கிறது. பிரம்மச் சரியம் மேற்கொள்வது மட்டும் தூய்மையல்ல. பிரம்மச்சரியத்துடன் பிரம்மா பாபாவின் ஒவ்வொரு செய-லும் அடிமீது அடி வைத்து பிரம்மாச்சாரி ஆகுங்கள்.