12-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! முதன் முதலில் பக்தியை யார் ஆரம்பித்து வைத்தாரோ, அந்த ரதத்தில் தான் பாபா வருகின்றார். அவர் நம்பர் ஒன் பூஜைக்குரியவராக இருந்து, பிறகு பூஜாரி ஆனார். இந்த ரகசியத்தை அனைவருக்கும் தெளிவாகச் சொல்லுங்கள்.

கேள்வி:
பாபா தன்னுடைய வாரிசு குழந்தைகளுக்கு என்ன ஆஸ்தி கொடுக்க வந்திருக்கிறார்?

பதில்:
பாபா சுகம், சாந்தி, அன்புக்கடலாக இருக்கின்றார். இந்த அனைத்து பொக்கிஷங்களையும் அவர் உங்களுக்கு உயில் எழுதிக் கொடுக்கிறார். நீங்கள் 21 பிறவிகள் வரை இதை அனுபவி யுங்கள், இந்த பொக்கிஷம் குறையவே குறையாது என்று உயில் எழுதிக் கொடுக்கிறார். உங்களை சோழியிலிருந்து வைரமாக ஆக்கி விடுகிறார். நீங்கள் பாபாவின் அனைத்து பொக்கிஷங்களையும் யோக பலத்தின் மூலம் அடைகின்றீர்கள். யோகம் இல்லாமல் பொக்கிஷம் கிடைக்க முடியாது.

ஓம் சாந்தி.
சிவபகவானுடைய மகாவாக்கியம். இப்போது நிராகார் (சரீரமற்ற) சிவபகவானை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஒரே ஒரு நிராகார் சிவன், அவரை அனைவரும் பூஜை செய் கின்றனர். மற்றபடி தேகதாரிகள் அனைவரும் சாகார் (சரீர) ரூபதாரிகள். முதன் முதலில் நிராகார் ஆத்மாவாக இருந்தது, பிறகு சரீரம் எடுக்கிறது. சரீரத்தில் பிரவேசமாகும் போது, அந்த ஆத்மாவின் நடிப்பு (பாகம்) ஆரம்பமாகிறது. மூலவதனத் தில் (பரந்தாமத்தில்) எந்த நடிப்பும் கிடையாது. எப்படி நடிகர்கள் வீட்டில் இருக்கும்போது, நாடகத்தின் நடிப்பு இல்லையோ, அது போலத் தான் இதுவும் ஆகும். மேடையில் வரும்போது அவர்களுடைய பாகத்தை நடிக்கின்றனர். ஆத்மாக்கள் இங்கே வந்து சரீரத்தின் மூலமாக நடிப்பை நடிக்கின்றனர். பாகத்தை நடிப்பதில் தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. ஆத்மாவில் எந்த வேறுபாடும் கிடையாது. எப்படி குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாவோ, அதுபோல இவரும் ஆத்மாவாக இருக்கிறார்கள். பரம் ஆத்மா தந்தை என்ன செய்கிறார்? அவருடைய தொழில் என்ன? அதை தெரிந்துக் கொள்ள வேண்டும். யாராவது ஒரு நாட்டின் தலைவர் அல்லது ராஜாவாக உள்ளார் என்றால் அவையனைத்தும் ஆத்மாவின் தொழில் தான் அல்லவா! தூய்மையான தேவதைகள் என்பதால் இவர்களை பூஜை செய் கின்றனர். இந்தப் படிப்பைப் படித்து லக்ஷ்மி நாராயணன் உலகத்தின் எஜமானர் ஆனார்கள் என்று இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். யார் அப்படி ஆக்கியது? பரம் ஆத்மா. ஆத்மாக்களாகிய நீங்கள் கூட கற்பிக் கின்றீர்கள். தந்தை வந்து குழந்தைகளாகிய நமக்கு கற்பிக்கிறார் மற்றும் இராஜயோகம் கற்றுக் கொடுக்கிறார் என்பது தான் இதன் சிறப்பம்சம் ஆகும். எவ்வளவு சகஜமானது! இதை இராஜ யோகம் என்று சொல்லப்படுகிறது. பாபாவை நினைவு செய்வதன் மூலம் நாம் சதோபிரதானம் ஆகிவிடுகின்றோம். பாபாவோ சதோபிரதானமாகவே தான் இருக்கின்றார். அவருக்கு எவ்வளவு மகிமை பாடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு பழங்கள், பால் முதலியவற்றால் அவருக்கு அபிஷேகம் செய்கின்றனர், எதையும் புரிந்து கொள்வதில்லை. தேவதைகளைப் பூஜை செய் கின்றனர். சிவன் மீது பால், பூக்கள் போன்றவற்றை போடுகின்றனர், ஒன்றும் தெரிவதில்லை. தேவதைகள் இராஜ்யம் செய்கின்றனர். நல்லது, சிவன் மேல் ஏன் பூக்களை போடுகின்றார்கள்? அப்படி பூஜை செய்யும் படியாக அவர் என்ன காரியம் செய்தார்? தேவதைகளைப் பற்றி தெரிந்திருக் கிறார்கள், அவர்கள் சொர்க்கத்தின் எஜமானர்கள். அவர்களை அப்படி ஆக்கியது யார்? இது கூட தெரிவதில்லை. சிவனுடைய பூஜை கூட செய்கின்றனர், ஆனால் இவர் தான் பகவான் என்பது தெரிவதில்லை. பகவான் தான் தேவதைகளை அப்படி ஆக்கி இருக்கிறார். எவ்வளவு பக்தி செய் கின்றனர்! அனைவரும் அறியாமையில் இருக்கின்றனர். நீங்களும் சிவனுக்கு பூஜை செய்திருப் பீர்கள், இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முன்பு எதுவும் தெரியாமல் இருந்தீர்கள். சிவனுடைய தொழில் என்ன? அவர் என்ன சுகத்தைக் கொடுக்கிறார் என்று எதுவுமே தெரியாமல் இருந்தீர்கள். இந்த தேவதைகள் சுகம் கொடுக்கிறார்களா என்ன? ராஜா-ராணி பிரஜைகளுக்கு சுகத்தைக் கொடுக்கின்றனர். ஆனால் சிவபாபா தான் அவர்களை அப்படி ஆக்கினார் அல்லவா! அவருக்குத் தான் மகிமை. தேவதைகள் இராஜ்யம் மட்டும் தான் செய்கின்றனர், பிரஜைகளாகவும் ஆகி விடுகின்றனர். மற்றபடி யாருக்கும் நன்மை செய்வதில்லை. நன்மை செய்கிறார்கள் என்றாலும் கூட அற்பகாலத்திற்காகத் தான் செய்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா அமர்ந்து கற்பிக்கிறார். அவரை கல்யாணகாரி என்று சொல்லப்படுகிறது. பாபா தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கிறார், என்னுடைய (சிவ) லிங்கத்திற்கு நீங்கள் பூஜை செய்தீர்கள், அவரை பரம் ஆத்மா என்கின்றனர். பரம் ஆத்மாவிலிருந்து பரமாத்மா ஆகிவிட்டது. ஆனால் இவர் என்ன செய்கிறார் என்பது தெரிவதில்லை. ஆனால் வெறுமனே சொல்லி விடு கின்றனர் - அவர் சர்வவியாபி, பெயர் ரூபத்திலிருந்து தனிப்பட்டவர் என்று. பிறகு அவருக்கு பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது சரியாக இல்லை. ஆகாரத்தில் (சூட்சும உடல்) இருக் கின்றார் என்றால், அவர் மீது பூக்களைப் போடுகின்றனர் அல்லவா! அவரை நிராகார் என்று சொல்ல முடியாது என்று மனிதர்கள் நிறைய வாக்குவாதம் செய்கின்றனர். பாபாவுக்கு முன்பு வந்து கூட வாக்குவாதம் தான் செய்வார்கள். தவறாக சொல்லி வாக்குவாதம் செய்வார்கள். அதில் எந்த பலனும் இல்லை. இதை புரிய வைப்பது குழந்தைகளாகிய உங்கள் கடமை ஆகும். பாபா நம்மை எவ்வளவு உயர்ந்தவர் களாக ஆக்கி இருக்கின்றார் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இது படிப்பாகும். பாபா டீச்சராக இருந்து கற்பிக்கிறார். நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆக படித்துக் கொண்டிருக்கிறீர்கள். தேவி தேவதைகள் சத்யுகத்தில் இருப்பார்கள், கலியுகத்தில் இருப்பதில்லை. தூய்மையாக இருப்பதற்கு இது இராம இராஜ்யம் அல்ல. தேவி தேவதைகள் தூய்மையாக இருந்தனர், பிறகு வாம மார்க்கத்தில் சென்று விட்டனர். மற்றபடி சித்திரங்களில் காட்டுவது போல எதுவும் கிடையாது. ஜெகன்நாத் கோயிலில் நீங்கள் கறுப்பான சித்திரங்களைப் பார்க்கின்றீர்கள். மாயையை வென்று உலகை வென்றவர் ஆகுங்கள் என்று பாபா சொல்கிறார். ஆகையால் தான் அவர்கள் பிறகு ஜெகத்-நாத் (உலகை வென்றவர்) என்று பெயர் வைத்து விட்டார்கள். கோயிலின் மேலே அசுத்தமான சித்திரங்களைக் காட்டி இருக்கிறார்கள், தேவதைகள் வாம (விகார) மார்க்கத்தில் சென்றதும் கருப்பாகி விட்டனர். அதையும் மனிதர்கள் பூஜை செய்து கொண்டே இருக்கின்றனர். நாம் எப்போது பூஜைக்குரியவராக இருந்தோம்? என்று மனிதர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. 84 பிறவிகளின் விசயம் யாருடைய புத்தியிலும் இல்லை. முதலில் பூஜைக்குரிய சதோபிரதானமாக இருந்தார்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து எடுத்து தமோபிரதானம் ஆகி விடுகின்றார்கள். ரகுநாத் கோயிலில் கருப்பான சித்திரத்தைக் காட்டு கின்றார்கள். அதன் அர்த்தம் எதுவும் புரிந்து கொள்வதில்லை. இப்போது பாபா வந்து குழந்தை களுக்குப் புரியவைக்கிறார். ஞானச்சிதையில் அமர்ந்து வெண்மை ஆகின்றீர்கள், காமச்சிதையில் அமர்ந்து கருப்பாகி விடுகின்றீர்கள். தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்று விகாரிகள் ஆன பிறகு அவர்களுடைய பெயரை தேவதைகள் என்று வைக்க முடியாது. வாம மார்க்கத்தில் சென்றதால் கருப்பாகி விட்டனர், இதன் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. கிருஷ்ணர் கருப்பாக, இராமரும் கருப்பாக, சிவனையும் கருப்பாக உருவாக்குகின்றனர். சிவபாபாவோ கருப்பாவதில்லை என்று உங்களுக்குத் தெரியும். அவரோ வைரமாக இருக்கின்றார், உங்களையும் வைரமாக ஆக்குகின்றார். அவர் ஒருபோதும் கருப்பாவதில்லை, பிறகு ஏன் அவரை கருப்பாக்கி விட்டனர். யாராவது கருப்பாக (தூய்மையற்று) இருந்திருப்பார், அவர் அமர்ந்து கருப்பாக உருவாக்கி இருப்பார். என்னை கருப்பாக ஆக்குமளவு நான் என்ன தவறு செய்தேன் என்று சிவபாபா சொல்கின்றார். நான் வருவதே அனைவரையும் வெண்மையாக்குவதற்காகத் தான், நான் எப்போதும் வெண்மை யாகத் (தூய்மையாக) தான் இருக்கின்றேன். எதையும் புரிந்து கொள்ளாதபடி மனிதர்களின் புத்தி ஆகிவிட்டது. சிவபாபாவோ அனைவரையும் வைரமாக ஆக்குபவர் ஆவார். நான் எப்போதும் வெண்மையான வழிப்போக்கன் ஆவேன். என்னை கருப்பாக ஆக்குமளவு நான் என்ன செய்தேன்? இப்போது உயர்ந்த பதவி அடைவதற்காக நீங்கள் கூட வெண்மை ஆக வேண்டும். உயர்ந்த பதவி எப்படி அடைய வேண்டும்? தந்தையை பின்பற்றுங்கள் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். இவர் (பிரம்மா பாபா) அனைத்தையும் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்து விட்டார். எப்படி இவர் அனைத்தையும் கொடுத்துள்ளார் என்று தந்தையைப் பார்த்து பின்பற்றுங்கள். சாதாரணமாக இருந்தார், மிகுந்த ஏழையாகவும் இல்லை, மிகுந்த பணக்காரராகவும் இல்லை. நீங்கள் சாப்பிடுவது, பருகும் பானங்கள் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட பாபா சொல்கின்றார். மிக உயர்ந்ததாகவும் இருக்கக்கூடாது, மிக தாழ்ந்ததாகவும் இருக்கக்கூடாது. பாபா தான் அனைத்து படிப்பினையும் கொடுக்கின்றார். இவர் கூட பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் இருக்கிறார். பகவான் எங்கே, காட்டுங்கள் என்று மனிதர்கள் சொல்கின்றனர். ஆத்மாவோ புள்ளியாக இருக்கிறது, அதை பார்க்க முடியுமா என்ன! இந்த கண்களால் ஆத்மாவைப் பார்க்க முடியாது என்று தெரிந்திருக்கிறீர்கள். பகவான் படிப்பிக்கிறார் என்றால் ஏதாவது சரீரமுடையவராகத் தான் இருப்பார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். நிராகார் (சரீரமற்றவர்) எப்படி கற்பிப்பார்! மனிதர் களுக்கு எதுவுமே தெரிவதில்லை. எப்படி ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்திலிருந்து நடிப்பை நடிக்கின்றீர்கள், அது போலத் தான் பாபாவும் கற்பிக்கின்றார். ஆத்மா தான் நடிப்பை நடிக்கிறது, ஆத்மா தான் சரீரத்தின் மூலமாக பேசுகிறது. ஆக இது ஆத்மாவுடைய வாக்கியம். ஆனால் ஆத்மாவுடைய மகாவாக்கியம் என்பது அழகாக இல்லை. ஆத்மா வானபிரஸ்த நிலையில், பேச்சைக் கடந்து இருக்கிறது, சரீரத்தின் மூலமாகத் தான் பேசுகிறது. பேச்சைக் கடந்த நிலையில் (பரந்தாமத்தில்) ஆத்மாவால் தான் இருக்க முடிகிறது. பேச வேண்டுமானால் சரீரம் வேண்டும். பாபா கூட ஞானக் கடல் ஆவார், ஆக கண்டிப்பாக யாருடைய சரீரத்தையாவது ஆதாரம் எடுப்பார் அல்லவா! அதை ரதம் என்று சொல்லப்படுகிறது, இல்லையானால் அவர் எப்படி பேச முடியும். பாபா தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆக்குவதற்காக படிப்பு கொடுக்கின்றார். இது பிரேரணைக்கான (மனதின் மூலமாக தூண்டுதல்) விசயம் கிடையாது. இது ஞானத்திற்கான விசயம் ஆகும். அவர் எப்படி வருகின்றார்? யாருடைய சரீரத்தில் வருகின்றார்? வருகிறார் என்றால் கண்டிப்பாக மனித சரீரத்தில் தான் வருவார். எந்த மனிதருக்குள் வருகின்றார் என்று உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. நான் எப்படி மற்றும் எந்த ரதத்தில் வருகின்றேன் என்று படைப்பவர் அவரே அமர்ந்து தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றார். பாபாவுடைய ரதம் எது என்று குழந்தைகள் தெரிந்திருக்கிறார்கள். நிறைய மனிதர்கள் குழம்பிப் போய் விடுகின்றார்கள். வித விதமான ரதங்களை உருவாக்கி விடுகின்றார்கள். விலங்குகள் போன்றவற்றில் பாபா வர முடியாது. நான் எந்த மனிதருக்குள் வருவேன் என்று புரிந்து கொள்ள முடிவதில்லை. நான் வருவது கூட பாரதத்தில் தான். பாரதவாசிகளில் கூட யாருடைய சரீரத்தில் வருவேன்? ஒரு நாட்டின் தலைவர் அல்லது சாது மகாத்மாவின் சரீரத்தில் வருவாரா என்ன? தூய்மையான ரதத்தில் (சரீரத்தில்) தான் வருவார் என்பதும் கிடையாது. இந்த உலகமே இராவண இராஜ்யம் ஆகும். தூர தேசத்தில் வசிக்கக்கூடியவரே என்று பாடல் கூட இருக்கிறது.

பாரதம் அழிவற்ற கண்டம் என்பது கூட குழந்தைகளுக்குத் தெரியும். இதற்கு அழிவு ஒருபோதும் ஏற்படுவதில்லை. அழிவற்ற தந்தை அழிவற்ற பாரத கண்டத்தில் தான் வருகின்றார். எந்த சரீரத்தில் வருகின்றார், அதை அவரே சொல்கின்றார். இதை வேறு யாரும் தெரிந்திருக்க முடியாது. எந்த சாது, மகாத்மாவிலும் பாபா வர முடியாது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். அவர்கள் ஹடயோகிகள், துறவற மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மீதமிருப்பவர்கள் பாரதவாசி பக்தர்கள் ஆவர். இப்போது பக்தர்களிலும் எந்த பக்தருக்குள் வருவேன்? அவரும் கூட நிறைய பக்தி செய்த பழைய பக்தராக இருக்க வேண்டும். பக்தியின் பலனைக் கொடுக்க பகவான் வர வேண்டியதாக இருக்கிறது. பாரதத்தில் நிறைய பக்தர்கள் இருக்கின்றனர். இவர் முதிர்ந்த (பெரிய) பக்தர், இவருக்குள் பகவான் வர வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி நிறைய பக்தர்கள் இருக்கிறார்கள். நாளைக்கே ஒருவருக்குள் வைராக்கியம் வந்தாலும் பக்தர் ஆகிவிடுவார் அல்லவா. அவர் இந்த பிறவிக்கான பக்தர் ஆகிவிடுகிறார். அவருக்குள் வரமாட்டார். யார் முதன் முதலில் பக்தியை ஆரம்பம் செய்தாரோ, அவருக்குள் நான் வருகின்றேன். துவாபர யுகத்திலிருந்து பக்தி ஆரம்பமானது. இந்தக் கணக்கை யாரும் புரிந்து கொள்ள முடியாது. எவ்வளவு மறைமுக மான விசயங்களாக இருக்கிறது! யார் முதன் முதலில் பக்தியை ஆரம்பம் செய்து வைத்தாரோ, அவருக்குள் நான் வருகின்றேன். யார் நம்பர் ஒன் பூஜைக்குரியவராக இருப்பாரோ, அவர் தான் பிறகு நம்பர் ஒன் பூஜாரியாகவும் ஆவார். இந்த ரதம் தான் முதல் நம்பரில் செல்கிறது என்று அவரே சொல்கிறார். பிறகு 84 பிறவிகளும் இவர் தான் எடுக்கின்றார். நான் இவருடைய பல பிறவிகளின் கடைசியிலும் கடைசியில் பிரவேசம் செய்கின்றேன். இவர் தான் பிறகு நம்பர் ஒன் ராஜா ஆக வேண்டும் இவர் தான் மிகுந்த பக்தி செய்திருந்தார். பக்தியின் பலன் கூட இவருக்கு கிடைக்க வேண்டும். இவர் எனக்கு எப்படி வாரிசு ஆனார் என்பதையும் பாபா குழந்தைகளுக்குக் காட்டுகின்றார். அனைத்தையும் ஈஸ்வரனுக்கு கொடுத்து விட்டார். இவ்வளவு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு பணம் கூட வேண்டும். ஈஸ்வரனுடைய யக்ஞம் படைக்கப்பட்டிருக்கிறது. பகவான் இவருக்குள் அமர்ந்து ருத்ர ஞான யக்ஞத்தைப் படைக்கிறார், இதைப் படிப்பு என்று சொல்லப்படுகிறது. ஞானக்கடலாகிய ருத்ரன் சிவபாபா ஞானத்தைக் கொடுப்பதற்காக இந்த யக்ஞத்தைப் படைக்கின்றார். முற்றிலும் சரியான வார்த்தை ஆகும். ராஜஸ்வ, சுயராஜ்யத்தை அடைவதற்கான யக்ஞம் ஆகும். இதை யக்ஞம் என்று ஏன் சொல்கிறோம்? யக்ஞத்திலோ மனிதர்கள் (ஆகுதியாக) பலியிட நிறைய பொருட்களை போடுகின்றார்கள். நீங்களோ படிக்கின்றீர் கள். ஆகுதியாக என்ன போடுகின்றீர்கள்? நாம் படித்து புத்திசாலி ஆகிவிடுவோம் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். பிறகு முழு உலகமும் இதில் சுவாகா (அர்ப்பணம்) ஆகிவிடும். யக்ஞத்தின் கடைசி நேரத்தில் என்னவெல்லாம் உள்ளதோ, அனைத்தையும் போட்டு விடுகின்றனர்.

நமக்கு பாபா கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். பாபா மிகவும் சாதாரணமாக இருக்கின்றார். மனிதர்களுக்கு என்ன தெரியும்! பெரிய பெரிய மனிதர்களுக்கு மிகுந்த மகிமை ஏற்படுகிறது. பாபாவோ மிக சாதாரணமாக எளிமையாக அமர்ந்திருக்கிறார். ஆக மனிதர்களுக்கு எப்படித் தெரிய வரும்! இந்த தாதா வைர வியாபாரி ஆவார். அவருக்குள் சக்தி இருப்பதை பார்க்க முடிவதில்லை. இவருக்குள் கொஞ்சம் சக்தி இருக்கிறது என்று மட்டும் சொல்லி விடுகிறார்கள். அவ்வளவு தான். இவருக்குள் சர்வசக்திவான் தந்தை இருக்கிறார் என்று புரிந்து கொள்வதில்லை. இவருக்குள் சக்தி இருக்கிறது, அந்த சக்தி எங்கிருந்து வந்தது? பாபா பிரவேசம் செய்தார் அல்லவா! அவருடைய பொக்கிஷத்தை அப்படியே கொடுத்து விடுவாரா என்ன! நீங்கள் யோகபலத்தின் மூலமாக பொக்கிஷத்தை அடைகின்றீர்கள். அவரோ சர்வசக்திவானாக இருக்கிறார். அவருடைய சக்தி எங்கும் போய் விடுவதில்லை. பரமாத்மாவை சர்வசக்திவான் என்று ஏன் சொல்லப் படுகிறது, இதைக் கூட யாரும் தெரிந்து கொள்ளவில்லை. பாபா வந்து அனைத்து விசயங்களையும் புரிய வைக்கிறார். நான் யாருக்குள் பிரவேசம் ஆகின்றேனோ, அவருக்குள் முழுமையாக துரு படிந்திருந்தது - பழைய தேசம், பழைய உடல், அவருடைய பல பிறவிகளின் கடைசியில் வருகின்றேன் என்று பாபா சொல்கின்றார். படிந்திருக்கும் துருவை யாராலும் அகற்ற முடியாது. துருவை நீக்கக்கூடியவர் ஒரே ஒரு சத்குரு தான். அவர் எப்போதும் தூய்மையானவராக இருக்கிறார். இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இவையனைத்தும் புத்தியில் அமர்வதற்கு கூட நேரம் வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா அனைத்தையும் உயில் எழுதிக் கொடுக்கிறார். பாபா ஞானக்கடல், அமைதிக்கடலாக இருக்கிறார். அனைத்தையும் குழந்தைகளுக்கு உயில் எழுதி கொடுத்து விடுகிறார். அவர் வருவதே பழைய உலகத்தில் தான் ஆகும். யார் வைரம் போல இருந்து பிறகு சோழி போல ஆனாரோ, அவருக்குள் பிரவேசம் ஆகின்றார். இந்த நேரம் கோடீஸ்வரனாக இருந்தாலும் கூட அல்பகாலத் திற்காகத் தான். அனைத்தும் அழிந்து போய்விடும். நீங்கள் மதிப்பு மிக்கவர்களாக ஆகின்றீர்கள். இப்போது நீங்கள் கூட மாணவராக இருக்கின்றீர்கள். இவர் (பிரம்மா) கூட மாணவராக இருக்கிறார், இவர் கூட பல பிறவிகளின் கடைசியில் இருக்கிறார். துரு படிந்திருக்கிறது. யார் நன்றாக படிக்கிறார்களோ, அவர்கள் மீது கூட துரு படிந்திருக்கிறது. அவர் தான் அனைவரையும் விட தூய்மையற்றவர் ஆகின்றார். அவர் தான் பிறகு தூய்மை ஆக வேண்டும். இந்த நாடகம் உருவாகப்பட்டிருக்கிறது. பாபா உண்மையான விசயங்களைச் சொல்கிறார். பாபா சத்தியமானவர், அவர் ஒருபோதும் தலைகீழான விசயங்களை சொல்வதில்லை. இந்த அனைத்து விசயங் களையும் மனிதர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் சொல்லாமல் மனிதர்களுக்கு இவை எப்படி தெரியும்! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயர்ந்த பதவி அடைய முழுமையாக தந்தையை பின்பற்ற வேண்டும். அனைத்தையும் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்து விட்டு டிரஸ்டி ஆகி பராமரிக்க வேண்டும், முழுமையான வாரிசு ஆக வேண்டும். சாப்பிடுவது-பானங்கள் பருகுவது, வசிப்பது அனைத்தும் சாதாரண மாக (எளிமையாக) இருக்க வேண்டும். மிகவும் மேலானதாகவோ, மிகவும் தாழ்ந்ததாகவோ இருக்கக்கூடாது.

2. பாபா உயில் எழுதிக் கொடுத்திருக்கின்ற சுகம்-சாந்தி, ஞானத்தின் பொக்கிஷங்களை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும், நன்மை செய்பவர்(கல்யாணகாரி) ஆக வேண்டும்.

வரதானம்:
பவித்திரதாவின் ஆழத்தை அறிந்து கொண்டு சுகம்-சாந்தி நிறம்பியவராக்ககூடிய மகான் ஆத்மா ஆகுக.

பவித்திரதாவின் சக்தியினுடைய மகான் தன்மையை அறிந்து கொண்டு பவித்திரமான, அதாவது பூஜைக்குரிய தேவ ஆத்மாக்களாக இப்போதிருந்தே ஆகுங்கள். கடைசியில் ஆகி விடுவோம் என்று அந்த மாதிரி இருக்கக் கூடாது. நீண்ட காலமாக சேமித்துள்ள இந்த சக்தி கடைசியில் பயன்படும். பவித்திரமாக ஆவது என்பது சாதாரண விசயம் இல்லை. பிரம்மச்சாரியாக இருக்கின்றனர். பவித்திரமாகி இருக்கின்றனர். ஆனால் பவித்திரதா தாய் ஆகும். சங்கல்பத்தால், அல்லது உள்ளுணர்வால், வாயுமண்டலத்தால், சொல்லால், தொடர்பால் சுகம்-சாந்தியின் தாய் ஆவது -- இதை மகாத்மா என்பார்கள்.

சுலோகன்:
உயர்ந்த ஸ்திதியில் நிலைத்திருந்து சர்வ ஆத்மாக்களுக்கும் இரக்கத்தின் திருஷ்டி கொடுங்கள், வைப்ரேஷன்களைப் பரப்புங்கள்.