12-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு இப்போது ஞான திருஷ்டி கிடைத்திருக்கிறது, ஆகையினால் நீங்கள் அலைவது நின்று விட்டது, நீங்கள் சாந்திதாமம் - சுகதாமத்தை நினைவு செய்கிறீர்கள்

கேள்வி:
தேவதைகளிடத்தில் எந்தவொரு சக்தி இருக்கிறது மேலும் அந்த சக்தி எந்த விசேஷத் தன்மையின் காரணத்தினால் இருக்கிறது?

பதில்:
தேவதைகளிடத்தில் முழு உலகத்தையும் இராஜ்யம் செய்வதற்கான சக்தி இருக்கிறது, அந்த சக்தி விசேஷமாக ஒரே வழியினுடைய (ஏக்மத்) விசேஷ தன்மையின் காரணத்தால் இருக்கிறது. அங்கே ஒரே வழி இருக்கின்ற காரணத்தினால் மந்திரி போன்றவர்களை வைப்பதற்கான அவசியம் இல்லை. தேவதைகள் சங்கம யுகத்தில் பாபாவிடமிருந்து அப்படிப்பட்ட ஸ்ரீமத்தை எடுத்திருக் கிறார்கள், அதன் மூலம் 21 பிறவிகள் இராஜ்யம் செய்கிறார்கள். அங்கே ஒரு இராஜாவினுடைய ஒரு தெய்வீக குடும்பமாக இருக்கிறது, மாறுபட்ட வழி இருப்ப தில்லை.

பாடல்:
கண்ணில்லாதவர்களுக்கு வழி காட்டுங்கள் பிரபு...............

ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு கண் கிடைத்திருக்கிறது, முதலில் கண்கள் இருக்கவில்லை, என்ன கண்? ஞானம் எனும் கண் இல்லாமல் இருந்தது. அஞ்ஞானத்தின் இந்த கண்கள் இருந்தன. ஒரு பாபா தான் ஞானக் கடல் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். இந்த ஞானத்தின் மூலம் சத்கதி அதாவது சாந்திதாமம் - சுகதாமத்திற்கு செல்வதற்கானது, இந்த ஆன்மீக ஞானம் வேறு யாரிடத்திலும் இல்லை. சுகதாமம் மாறி எப்படி மாயையின் இராஜ்யம் அல்லது துக்கதாமமாக ஆகிறது என்ற பார்வை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. கண்ணில்லா தவர்களுக்கு வழி காட்டுங்கள் என்று அழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பக்தி மார்க்கத்தின் யக்ஞம், தானம்- புண்ணியம் போன்றவற்றின் மூலம் சாந்திதாமம்-சுகதாமம் செல்வதற்கான வழி ஏதும் கிடைப்பதில்லை. ஒவ்வொருவரும் அவர்களுடைய நடிப்பை நடிக்கத்தான் வேண்டும். எனக்கும் நடிப்பு கிடைத்திருக்கிறது என்று பாபா கூறுகின்றார். முக்தி-ஜீவன்முக்திக்கான வழியைக் கூறுங்கள் என்று பக்தி மார்க்கத்தில் அழைக்கிறார்கள். அதற்காக எவ்வளவு யக்ஞம்-தவம், தானம்-புண்ணியம் போன்றவை களை செய்கிறார்கள், எவ்வளவு அலைகிறார்கள். சாந்திதாமம்-சுகதாமத்தில் அலைய வேண்டியதே இல்லை. இதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள், அவர்கள் வெறும் சாஸ்திரங்களினுடைய, உலகாய கல்வியைத் தான் தெரிந்துள்ளார்கள். இந்த ஆன்மீகத் தந்தையை முற்றிலும் தெரிந்திருக்கவே இல்லை. எப்போது அனைவருக்கும் சத்கதி ஏற்பட வேண்டுமோ, பழைய உலகம் மாற வேண்டுமோ, அப்போது ஆன்மீக தந்தை வந்து ஞானத்தைக் கொடுக்கின்றார். மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகின்றார்கள் பிறகு முழு உலகத்திலும் தேவதைகளுடைய ஒரு இராஜ்யமானது உருவாகிறது, அதைத் தான் சொர்க்கம் என்று சொல்லப் படுகிறது. ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் பாரதத்தில் தான் இருந்தது என்பதையும் பாரதவாசி கள் தான் தெரிந்துள்ளார்கள். அந்த சமயத்தில் வேறு எந்த தர்மமும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது சங்கமயுகமாகும். மற்றவர்கள் அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். மற்றவர்கள் கலியுகத்தில் இருக்கிறார் கள். இப்போது எந்த இராஜ்யமும் இல்லை. அநேக வழிகளின் மூலம் இராஜ்யம் நடக்கிறது, சத்யுகத்தில் ஒரு மகாராஜாவின் வழி தான் நடக்கிறது, மந்திரிகள் இருப்பதில்லை. அந்தளவிற்கு சக்தி இருக்கிறது. பிறகு தூய்மையற்றவர்களாக ஆகும்போது மந்திரிகள் போன்றவர்களை வைக்கிறார்கள் ஏனென்றால் அந்த சக்தி இருப்பதில்லை. இப்போது நடப்பதே பிரஜைகளின் இராஜ்யமாகும், சத்யுகத்தில் ஒன்றுபட்ட வழி இருக்கின்ற காரணத்தினால் சக்தி இருக்கிறது. நீங்கள் இப்போது அந்த சக்தியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், 21 பிறவிகள் சுதந்திரமாக இராஜ்யம் செய்கிறீர்கள். உங்களுடையது தான் தெய்வீக குடும்பமாகும். இது உங்களுடைய ஈஸ்வரிய குடும்பமாகும். உங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவின் நினைவில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாபா கூறுகின்றார். ஒருவேளை தேக- அபிமானத்தில் வந்து மறந்து விடுகிறீர்கள் என்றால் அசுர பரிவாரத்தைச் சேர்ந்தவர்களா வீர்கள். ஒரு வினாடியில் ஈஸ்வரிய சம்பிரதாயத்தவர்களாக இருந்து பிறகு ஒரு வினாடியில் அசுர சம்பிரதாயத்தவர்களாக ஆகி விடுகிறீர்கள். உங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்வது எவ்வளவு சகஜமாக இருக்கிறது! ஆனால் குழந்தைகளுக்கு கடினமாக இருக்கிறது

பாபா கூறுகின்றார், தங்களை ஆத்மா என்று புரிந்து கொண்டு பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும். தேகத்தின் மூலம் கர்மம் செய்யத் தான் வேண்டும். தேகம் இல்லாமல் நீங்கள் கர்மம் செய்ய முடியாது. காரியங்களைச் செய்து கொண்டே பாபாவை நினைவு செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இங்கே காரியங்கள் செய்யாமல் இருந்தாலும் கூட நினைவு செய்ய முடிவதில்லை. மறந்து விடுகிறீர்கள். இதில் தான் முயற்சி செய்ய வேண்டி யிருக்கிறது. முழு நாளும் பக்தி செய்யுங்கள் என்று பக்தியில் சொல்லப்படுவதில்லை. அதில் நேரம் இருக்கிறது. காலை, மாலை அல்லது இரவு பக்தி செய்ய வேண்டும். பிறகு மந்திரம் போன்றவைகள் என்ன கிடைக்கிறதோ அது புத்தியில் இருக்கிறது. அநேக விதமான சாஸ்திரங்கள் இருக்கின்றன. அதை பக்தி மார்க்கத்தில் படிக்கிறார்கள். இங்கே நீங்கள் புத்தகம் போன்றவைகளை படிக்கத் தேவையில்லை, அல்லது உருவாக்கத் தேவையில்லை. இந்த முரளி அச்சடிக்கிறார்கள் என்றால் கூட புத்துணர்வு பெறுவதற்காக ஆகும். மற்றபடி புத்தகம் போன்ற எதுவும் இருக்காது. இவை அனைத்தும் அழிந்து போய்விடும். ஞானம் ஒரு தந்தையிடத்தில் தான் இருக்கிறது. பாருங்கள் ஞான-விஞ்ஞான பவன் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள், என்னவோ அங்கே யோகம் மற்றும் ஞானத்தை கற்றுக் கொடுப்பதை போல்! அர்த்தமில்லாமல் இப்படியெல்லாம் பெயர் வைத்து விடுகிறார்கள். ஞானம் என்றால் என்ன விஞ்ஞானம் என்றால் என்ன என்று எதுவுமே தெரியவில்லை. நீங்கள் இப்போது ஞானம் என்றால் என்ன விஞ்ஞானம் என்றால் என்ன என்பதை தெரிந்துள்ளீர்கள். யோகத்தின் மூலம் ஆரோக்கியம் உண்டாகிறது, அதை விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது மற்றும் இது ஞானமாகும், இதில் உலகத்தின் வரலாறு-புவியியல் புரியவைக்கப்படுகிறது. உலகத்தின் வரலாறு-புவியியல் எவ்வாறு திரும்பவும் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அந்தப் படிப்பு எல்லைக்குட்பட்டதாகும், இங்கே உங்களுடைய புத்தியில் எல்லையற்ற வரலாறு - புவியியல் இருக்கிறது. நாம் எவ்வாறு இராஜ்யத்தை அடைகிறோம், எவ்வளவு காலம் மற்றும் எப்போது இராஜ்யம் செய்தோம், எப்படி இராஜ்யம் கிடைத்தது என்பன போன்ற விசயங்கள் வேறு யாருடைய புத்தியிலும் வருவதில்லை. பாபா தான் ஞானக்கடலாவார். இந்த உலக நாடகச்சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை பாபா தான் புரிய வைக்கின்றார். இது உருவாக்கப்பட்டிருகின்ற நாடகம் என்பதைத் தெரியாத காரணத்தினால் மனிதர்கள், இன்னார் நிர்வாணத்திற்கு சென்று விட்டார், ஜோதி-ஜோதியோடு ஐக்கியமாகி விட்டது என்று சொல்லி விடுகிறார்கள்.

மனிதர்கள் அனைவரும் இந்த சிருஷ்டி சக்கரத்தில் வருகிறார்கள், இதிலிருந்து யாரும் விடுபட முடியாது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மனிதர்களுடைய ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு- விட்டு மற்றொன்றை எடுக்கிறது, எவ்வளவு பெரிய நாடகமாக இருக்கிறது என்பதை பாபா புரிய வைக்கின்றார். அனைவரிடத்திலும் ஆத்மா இருக்கிறது, அந்த ஆத்மாவில் அழிவற்ற நடிப்பு நிரம்பியுள்ளது. இதைத் தான் உருவாக்கப்பட்டிருகின்ற நாடகம்..... நாடகம் என்று சொல்லும்போது அதனுடைய காலமும் வேண்டும். இந்த நாடகம் 5 ஆயிரம் ஆண்டுகளினுடையது என்று பாபா புரிய வைக்கின்றார். பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களில் நாடகம் லட்சக் கணக்கான ஆண்டுகளினுடையது என்று எழுதி விட்டார்கள். இந்த சமயத்தில் அதாவது பாபா எப்போது வந்து இராஜயோகம் கற்றுக் கொடுத்தாரோ, இந்த சமயத்தைப் பற்றி தான் கௌரவர்கள் காரிருளில் இருந்தார்கள் மற்றும் பாண்டவர்கள் வெளிச்சத்தில் இருந்தார்கள் என்று பாடப்பட்டுள்ளது. அவர்கள் கலியுகம் இன்னும் 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கின்றது என்று புரிந்து கொள்கிறார்கள். பகவான் வந்திருக்கின்றார், இந்தப் பழைய உலகத்தின் மரணம் முன்னால் நிற்கிறது என்பது அவர் களுக்குத் தெரியவில்லை. அனைவரும் அஞ்ஞான இருளில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சண்டையை பார்க்கும்போது இது மகாபாரதப் போரின் அடையாளம் என்று கூறுகிறார்கள். ஒத்திகை நடந்து கொண்டே இருக்கும். பிறகு போகப்போக நின்று விடும். இப்போது நம்முடைய ஸ்தாபனை முடிந்து விடவில்லை என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். கீதையில் பாபா சகஜ இராஜ யோகத்தைக் கற்றுக் கொடுத்து இங்கேயே தான் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார் என்று இருக்கிறதா என்ன? கீதையில் பிரளயத்தை காட்டி விட்டார்கள். 5 பாண்டவர்கள் தான் மீதம் இருந்தார்கள் மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள் என்று காட்டுகிறார்கள். அவர்களும் கூட மலையின் மீது சென்று கரைந்து விட்டார்கள் என்று காட்டுகிறார்கள். இராஜயோகத்தின் மூலம் என்ன நடந்தது என்பது எதுவும் தெரியவில்லை. பாபா ஒவ்வொரு விசயத்தையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். அவை எல்லைக்குட்பட்ட விசயமாகும், எல்லைக்குட்பட்ட படைப்பை எல்லைக்குட்பட்ட பிரம்மா(லௌகீக தந்தை) படைக்கின்றார், வளர்க்கவும் செய்கின்றார் மற்றபடி பிரளயம் செய்வதில்லை. கணவன் தனது மனைவியை தத்தெடுக்கிறார். பாபாவும் கூட வந்து தத்தெடுக் கின்றார். நான் இவருக்குள் பிரவேசித்து குழந்தைகளுக்கு ஞானத்தைக் கூறுகின்றேன் என்று சொல்கின்றார், இவரின் மூலம் குழந்தைகளைப் படைக்கின்றேன். தந்தையும் இருக்கின்றார், குடும்பமும் இருக்கிறது, இது மிகவும் ஆழமான விசயங்களாகும். மிகவும் கம்பீரமான விசயங்களாகும். கஷ்டப்பட்டு யாருடைய புத்தியிலாவது நிற்கிறது. இப்போது பாபா கூறுகின்றார், முதல்-முதலில் உங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு வேறொன்றை எடுக்கிறது. சரீரத்திற்குத் தான் வெவ்வேறு பெயர்கள் வைக்கப்படுகிறது. பெயர், ரூபம், முக அமைப்பு அனைத்தும் வெவ்வேறாக இருக்கிறது. ஒருவருடைய முகம் மற்றவருடைய முகத்தோடு ஒத்துப் போகாது. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஒவ்வொரு பிறவி யிலும் வெவ்வேறு முகம் இருக்கிறது. அதனதனுடைய நடிப்பு நாடகத்தில் பதிவாகியுள்ளது ஆகையினால் இதனை உருவாக்கப் பட்டிருக்கின்ற நாடகம் என்று சொல்லப்படுகிறது, இப்போது எல்லையற்ற தந்தை கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழியும். எனவே நாம் ஏன் பாபாவை நினைவு செய்யக் கூடாது. இது தான் உழைப்பிற்கான விசயமாகும்.

குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் அமரும்போது மாயையின் புயல் வருகிறது, யுத்தம் நடக்கிறது, அதைப்பார்த்து பயப்படக்கூடாது. மாயை அடிக்கடி நினைவை துண்டிக்கிறது. எண்ணங்கள்-கெட்ட எண்ணங்கள் புத்தியை ஒரேயடியாகக் கெடுத்து விடும்படி வரும். நீங்கள் முயற்சி (உழையுங்கள்) செய்யுங்கள். இந்த இலஷ்மி-நாராயணனுடைய கர்மேந்திரியங்கள் எப்படி கட்டுப்பாட்டில் வந்தது என்று பாபா புரிய வைக்கின்றார். இவர்கள் முழுமையாக விகாரமற்றவர் களாக இருந்தார்கள். இந்தப் படிப்பு இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு இந்த இலஷ்மி - நாராயணனைப்போல் ஆவதற்கான படிப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களிடத்தில் எந்த விகாரமும் இருப்பதில்லை. அங்கே இராவண இராஜ்யமே இல்லை. இராவண இராஜ்யம் பின்னால் வருகிறது. இராவணன் என்ன பொருள் என்பதை கூட யாரும் தெரிந்திருக்க வில்லை. நாடகத்தின்படி இதுவும் பதிவாகியுள்ளது. நாடகத்தின் முதல்-இடை-கடைசியை யாரும் தெரிந்திருக்க வில்லை, ஆகையினால் எங்களுக்குத் தெரியாது-தெரியாது என்று சொல்லி வந்துள்ளார்கள். இப்போது நீங்கள் சொர்க்கவாசியாவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த இலஷ்மி-நாராயணன் சொர்க்கத்திற்கு எஜமானர்கள் அல்லவா! கீழான நிலையிலுள்ள ஆத்மாக்கள் இவர்களுக்கு முன்னால் தலை வணங்குகிறார்கள். பாபா கூறுகின்றார் முதல்-முதலில் ஒரு விசயத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் - உங்களை ஆத்மா என்று புரிந்து கொண்டு பாபாவை நினைவு செய்யுங்கள். இதில் தான் உழைப்பு இருக்கிறது. எப்படி 8 மணி நேரம் அரசாங்க வேலை இருக்கிறது அல்லவா. இப்போது நீங்கள் எல்லையற்ற அரசாங்கத்தின் உதவியாளர்களாவீர்கள். நீங்கள் குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் முயற்சி செய்து நினைவில் இருக்க வேண்டும். இதன் மூலம் வேறு யாருடைய நினைவும் வராத அளவிற்கு உங்களுடைய நிலையானது உறுதியாகி விடும். பாபா வினுடைய நினைவில் தான் சரீரத்தை விடுவீர்கள். பிறகு அவர்கள் தான் வெற்றி மாலையின் மணியாக ஆவார்கள். ஒரு இராஜாவிற்கு எவ்வளவு அதிகமான பிரஜைகள் இருக்கிறார்கள். இங்கேயும் கூட பிரஜைகள் உருவாக வேண்டும். நீங்கள் வெற்றி மாலையின் மணியாக பூஜிப்பதற்கு தகுதியானவர்களாக ஆவீர்கள். 16108 மணிகளின் மாலை கூட இருக்கிறது. ஒரு பெரிய பெட்டியில் வைக்கப்பட்டிருக் கிறது. 8 மணி மாலை இருக்கிறது, 108 மணி மாலை கூட இருக்கிறது. கடைசியில் 16108 மணி மாலையும் உருவாகிறது. குழந்தைகளாகிய நீங்கள் தான் பாபாவிடமிருந்து இராஜயோகத்தைக் கற்று முழு உலகத்தையும் சொர்க்கமாக்கினீர்கள் ஆகையினால் நீங்கள் பூஜிக்கப்படுகிறீர்கள். நீங்கள் தான் பூஜிக்கத்தக்கவர்களாக இருந்தீர்கள் பிறகு பூஜாரிகளாகி விட்டீர்கள். நான் மாலை உருட்டியுள்ளேன், என்று இந்த தாதா(பிரம்மா) இவரே கூறுகின்றார், சொல்லப்போனால் இலஷ்மி - நாராயணனுடைய கோயிலில் ருத்ர மாலை இருக்க வேண்டும். முதலில் நீங்கள் ருத்ர மாலையாகவும் பிறகு மனித மாலையாகவும் ஆகின்றீர்கள். முதலில் ருத்ர மாலையாகவும் அதில் சிவனும் இருக்கின்றார், மனித மாலையில் சிவன் எங்கிருந்து வந்தார். அது விஷ்ணுவின் மாலையாகும். இந்த விசயங்களை யாராவது புரிந்து கொள்கிறார்களா என்ன. நாங்கள் சென்று சிவபாபாவின் கழுத்து மாலையாக ஆகின்றோம் என்று நீங்கள் இப்போது கூறுகின்றீர்கள். பிராமணர்களின் மாலை உருவாக முடியாது. பிராமணர்களின் மாலை இருப்பதில்லை. நீங்கள் எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ, அந்தளவிற்கு அங்கேயும் கூட அருகாமையில் இராஜ்யம் செய்வீர்கள். இந்தப் படிப்பு வேறு எங்கேயும் கிடைக்காது. இப்போது நாம் இந்தப் பழைய சரீரத்தை விட்டு விட்டு சொர்க்கவாசியாக ஆவோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முழு பாரதமும் சொர்க்கவாசிகளாக ஆவார்கள். குறிப்பாக பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. 5 ஆயிரம் ஆண்டு களின் விசயமாகும், இலட்சக்கணக் கான ஆண்டுகளின் விசயமாக இருக்க முடியாது. தேவதைகள் இருந்துவிட்டு சென்று 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது, மனிதர்கள் சொர்க்கத்தை மறந்து விட்டார் கள். எனவே அப்படியே சொல்லி விட்டார்கள். மற்றபடி அப்படி எதுவும் இல்லை. இவ்வளவு பழைய காலம் இருந்ததில்லை. சூரியவம்சத்தவர்கள்-சந்திரவம்சத்தவர்கள் பிறகு மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள். பழைய பொருட்கள் வேலைக்கு உதவுமா என்ன. எவ்வளவு வாங்குகிறார்கள், பழைய பொருட்களுக்கு அதிக மதிப்பளிக்கிறார்கள். அனைத்திலும் மதிப்புமிக்கவர் சிவபாபா ஆவார், எவ்வளவு சிவலிங்கங்களை உருவாக்குகிறார்கள்:. ஆத்மா அவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறது, இது யாருக்கும் புரிவதில்லை. மிகவும் சூட்சுமமான ரூபமாகும். இவ்வளவு சிறிய புள்ளியில் இவ்வளவு நடிப்பு பதிவாகியுள்ளது, இந்த நாடகம் திரும்பத் திரும்ப நடக்கிறது, இந்த ஞானம் அங்கே (சொர்க்கத்தில்) இருக்காது என்று பாபா தான் புரிய வைக்கின்றார். இது மறைந்து விடுகிறது. பிறகு வேறு யாராவது எப்படி இராஜயோகத்தை கற்றுக் கொடுக்க முடியும்? இந்த சாஸ்திரங்கள் அனைத்தையும் பக்தி மார்க்கத்திற்காக உருவாக்கி யுள்ளார்கள். எதிர்கால புதிய உலகத்திற்காக பிராமண, தேவதா மற்றும் சத்திரிய தர்மம் என்ற மூன்றும் பாபாவின் மூலம் ஸ்தாபனை ஆகின்றன என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். அந்த உலகாயக் கல்வி என்ன நீங்கள் படிக்கிறீர்களோ, அது இந்தப் பிறவிக்காக ஆகும். இந்த படிப்பினுடைய பலன் உங்களுக்கு புதிய உலகத்தில் கிடைக்கும். இந்தப் படிப்பு சங்கமயுகத்தில் நடக்கிறது. இது புருஷோத்தம சங்கமயுகமாகும். மனிதனிலிருந்து தேவதைகளாக கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் ஆகியிருப்பார்கள். பாபா குழந்தைகளுக்கு இரகசியங்கள் அனைத்தையும் புரிய வைக்கின்றார். நீங்கள் முழு நாளும் இந்த நினைவில் இருக்க முடியாது என்பதை பாபா தெரிந்துள்ளார், ஆகையினால் சார்ட் வையுங்கள், நாம் எந்தளவிற்கு நினைவில் இருக்க முடிகிறது என்று பாருங்கள். தேகத்தின் அபிமானம் இருந்தது என்றால் நினைவில் எப்படி இருக்க முடியும்! பாவங்களின் சுமை தலையில் நிறைய இருக்கிறது ஆகையினால் தான் பாபா கூறுகின்றார் நினைவில் இருங்கள். திரிமூர்த்தி படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். அல்ஃப்-ஐ (அல்லாவை) நினைவு செய்வதின் மூலம் பே ஆஸ்தி (இராஜ்யம்) போன்ற அனைத்தும் நினைவு வந்து விடுகிறது. எப்போதும் பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். புத்தகமும் இருக்க வேண்டும், யாராவது நல்ல மனிதர்களாக இருந்தால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நல்ல மனிதர்கள் ஒருபோதும் இலவசமாக பெற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனுடைய விலை என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்பார்கள். இது ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது மற்றபடி யார் எவ்வளவு கொடுக்கிறார்களோ அவ்வளவு கொடுக்கலாம் என்று சொல்லுங்கள். இராயல் தன்மை (ஒரு அரசனுக்குரிய) இருக்க வேண்டும். உங்களுடைய பழக்க-வழக்கம் உலகத்திலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக இருக்க வேண்டும். இராயலான (பெருந்தன்மையான) மனிதர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு தொகையைக் கொடுத்துவிடுவார்கள். இதை நாம் அனைவருடைய நன்மைக்காக கொடுக்கின்றோம். யாராவது படித்துவிட்டு கூட உங்களுக்கு பணத்தை அனுப்பி விடுவார்கள். செலவை நீங்கள் செய்கிறீர்கள் அல்லவா! நாங்கள் எங்களுடைய உடல்-மனம்-பொருளை பாரதத்தின் சேவைக்காக செலவு செய்கிறோம் என்று சொல்லுங்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இந்த எல்லையற்ற அரசாங்கத்திற்கு உதவி செய்வதற்காக குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். நினைவில் மாயை தடையைஏற்படுத்துவதைப் பார்த்து பயப்படக் கூடாது.

2) இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் ஈஸ்வரிய சம்பிரதாயத்தவர்களாக ஆகி, ஈஸ்வரனுடைய வழிப்படி நடக்க வேண்டும். கர்மம் செய்து கொண்டே கூட ஒரு பாபாவின் நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
உள்நோக்குமுகத்தின் (அந்தர்முகி) குகையில் இருக்கக்கூடிய தேகத்திலிருந்து விடுபட்ட தேகி ஆகுக.

பாண்டவர்களின் குகைகள் காட்டுகின்றார்கள் - அது இந்த அந்தர்முகி குகைகளாகும், எவ்வளவு தேகத் திலிருந்து விடுபட்டு ஆத்மா ரூபத்தில் நிலைத்திருக்கும் குகையில் இருக்கின்றீர்களோ அவ்வளவு உலக சூழ்நிலையிலிருந்தும் விடுபட்டு விடுகின்றீர்கள், சூழ்நிலையின் பிரபாவத்தில் வரமாட்டீர்கள். எப்படி குகைக்குள்ளே வெளிச் சூழ்நிலையிலிருந்து தனிப்பட்டு இருக்குமோ, அப்படி இந்த அந்தர்முகியின் குகையும் அனைத்தைக் காட்டிலும் தனிப்பட்ட மற்றும் பாபாவுக்கு அன்பாக ஆக்கிவிடுகின்றது. மேலும் பாபாவிற்கு பிடித்தமானவர்கள் தானாக உலகத்திற்கு பிடித்த மானவர்களாக ஆகிவிடுவார்கள்.

சுலோகன்:
சாதனை விதை மற்றும் சாதனம் அதற்கான விஸ்தாரமாகும். வெளிமுகத்தில் சாதனையை மறைத்துவிட வேண்டாம்

அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

அந்தர்முகியின் அடையாளமே சதா கடலின் அலையில் மூழ்கிய கம்பீரத்தன்மையாகும். முகத்தின் மூலம் ஆத்மிக ஸ்திதியின் சின்னம் தென்படும். ஒரு பக்கம் மனன சிந்தனை செய்யவர் கள் மற்றோர்பக்கம் இனிமை - மலர்ந்த முகம், இரண்டுமே முகத்திலிருந்து வெளிப்படும். உள்நோக்குமுகமுடையவர்களிடம் சதா புன்முறுவல் பூக்கும் முகம் தென்படும் ஏனெனில் மாயாயை எதிர்ப்பது முடிந்துவிடும்.