12-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் தனவானின் பாபாவின் குழந்தையான (இறைவனின் குழந்தை) பிறகு இராஜகுமாரன் (இளவரசன்) ஆக வேண்டும். அதனால் நினைவு யாத்திரை மூலம் தன்னுடைய விகர்மங்களை சாம்பலாக்குங்கள்

கேள்வி:
எந்த ஒரு விதியின் மூலம் உங்கள் துக்கமெல்லாம் விலகிப் போய் விடுகின்றன?

பதில்:
எப்போது நீங்கள் உங்கள் பார்வையை பாபாவின் பார்வையுடன் சந்திக்க வைக் கிறீர்களோ, பார்வைகள் ஒன்று சேர்வதின் மூலம் உங்களுடைய அனைத்து துக்கங்களும் விலகிப் போகும். ஏனென்றால் தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்வதன் மூலம் அனைத்துப் பாவங்களும் நீங்கி விடுகின்றன. இது தான் உங்களுடைய நினைவு யாத்திரை. நீங்கள் தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு பாபாவை நினைவு செய் கிறீர்கள். இதன் மூலம் ஆத்மா சதோபிரதானமாக ஆகிவிடுகிறது. நீங்கள் சுகதாமத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள்.

ஓம் சாந்தி.
சிவபகவான் வாக்கு, தன்னை ஆத்மா என உணர்ந்து அமர்ந்திருங்கள். பாபா கட்டளையிடுகிறார்: சிவபகவான் வாக்கு என்றாலே சிவபாபா புரிய வைக்கிறார் – குழந்தை களே, தங்களை ஆத்மா என உணர்ந்து அமர்ந்திருங்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதரர்கள். ஒரே தந்தையின் குழந்தைகள் நீங்கள். ஒரே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும்-எப்படி 5000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்தி பெற்றீர்களோ, அதுபோல. ஆதி சநாதன தேவி-தேவதாக்களின் இராஜதானியில் இருந்தீர்கள். பாபா வந்து புரிய வைக்கிறார், நீங்கள் சூரிய வம்சியாக அதாவது உலகத்தின் எஜமானர்களாக எப்படி ஆக முடியும் என்று. உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதர-சகோதரர்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்தவராகிய பகவான் ஒருவர் தான். அந்த உண்மையான தனவானின் (பாபாவின்) குழந்தைகள் இராஜ குமாரர்கள். இதை பாபா வந்து புரிய வைக்கிறார். அவருடைய ஸ்ரீமத் படி புத்தியின் தொடர்பை ஈடுபடுத்து வீர்களானால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். அனைத்து துக்கங்களும் விலகி விடும். பாபாவுடன் எப்போது நம்முடைய பார்வை சந்திக்கின்றதோ, அப்போது அனைத்து துக்கங்களும் விலகி விடும். கண்கள் சந்திப்பதன் அர்த்தத்தையும் புரிய வைக்கிறார். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள்-இது நினைவு யாத்திரையாகும். இது யோக அக்னி என்றும் சொல்லப் படுகின்றது. இந்த யோக அக்னி மூலம் உங்களுடைய ஜென்ம-ஜென்மத்தின் பாவங்கள் சாம்பலாகி விடும். இது துக்க உலகம். அனைவரும் நரகவாசிகள். நீங்கள் அதிகப் பாவங்கள் செய்திருக்கிறீர்கள். இது இராவண இராஜ்யம் எனச் சொல்லப்படுகின்றது. சத்யுகம் இராம ராஜ்யம் எனச் சொல்லப்படுகின்றது. நீங்கள் இதுபோல் புரிய வைக்க முடியும். எவ்வளவு தான் பெரிய சபையில் அமர்ந்திருந்தாலும் சரி, சொற்பொழிவு செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. நீங்களோ பகவான் வாக்கு என சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். சிவபகவான் சொல்கிறார் - நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள், சகோதரர்கள். மற்றப்படி ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏதோ குழந்தைகள் இருந்தனர் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். இத்தனை இராணிகளும் இருந்ததில்லை. கிருஷ்ணருக்கோ எப்போது சுயம் வரம் நடைபெறு கின்றதோ, அப்போது பெயரே மாறி விடுகின்றது. ஆம், இதுபோல் சொல்வார்கள், இலட்சுமி- நாராயணருக்குக் குழந்தைகள் இருந்தார்கள். இராதை-கிருஷ்ணர் தான் சுயம்வரத்திற்குப் பிறகு இலட்சுமி- நாராயணராக ஆகின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. பிறகு அவர்களின் இராஜ்யம் நடைபெறுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது என்னை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு விடுங்கள். பாபாவை நினைவு செய்வீர்களானால் உங்களுடைய அனைத்துப் பாவங்களும் நீங்கி விடும். சதோபிரதானமாகி சொர்க்கத்திற்குச் சென்று விடுவீர்கள். சொர்க்கத்தில் எந்த ஒரு துக்கமும் இருப்பதில்லை. நரகத்தில் அளவற்ற துக்கம். சுகத்தின் பெயர் அடையாளமே இங்கே கிடையாது. இதுபோல் யுக்தியோடு புரிய வைக்க வேண்டும். சிவபகவான் சொல்கிறார் - ஹே குழந்தைகளே, இச்சமயம் ஆத்மாக்கள் நீங்கள் தூய்மையின்றி இருக்கிறீர்கள். இப்போது பாவனமாக எப்படி ஆவது? ஹே பதீத பாவனா வாருங்கள் என்று தான் என்னை அழைத்தீர்கள். பாவனமானவர்கள் இருப்பது சத்யுகத்தில். தூய்மையின்றி இருப்பது கலியுகத்தில். கலியுகத்திற்குப் பிறகு நிச்சயமாக சத்யுகம் உருவாக வேண்டும். புது உலக ஸ்தாபனை, பழைய உலகத்தின் விநாசம் நடைபெறுகின்றது. பாடலும் உள்ளது, பிரம்மா மூலம் ஸ்தாபனை என்பதாக. நாம் பிரம்மாகுமார்-குமாரிகள் தத்தெடுக்கப் பட்ட குழந்தைகள். நாம் பிராமணர்கள் மிக உயர்ந்தவர்கள். விராட ரூபமும் உள்ளது இல்லையா? முதலில் பிராமணராக அவசியம் ஆக வேண்டும். பிரம்மாவும் பிராமணர் தான். தேவதைகள் இருப்பது சத்யுகத்தில். சத்யுகத்தில் சதா சுகம் இருக்கும். துக்கத்தின் பெயர் இருக்காது. கலியுகத்தில் அளவற்ற துக்கம். அனைவரும் துக்கத்தில் உள்ளனர். துக்கம் இல்லாதவர் என்று யாருமே இருக்க முடியாது. இது இராவண இராஜ்யம். இந்த இராவணன் பாரதத்தின் நம்பர் ஒன் விரோதி ஆவான். ஒவ்வொரு வருக்குள்ளும் 5 விகாரங்கள் உள்ளன. சத்யுகத்தில் எந்த ஒரு விகாரமும் இருக்காது. அது பவித்திர இல்லற தர்மமாகும். இப்போது துக்கம் மலைகள் நம்மீது உள்ளன. இன்னும் கூட விழப் போகின்றன. இவ்வளவு வெடிகுண்டுகள் முதலியவற்றைத் தயாரித்து கொண்டே இருக்கின்றனர் என்றால் சும்மா வைத்திருப்பதற்காக அல்ல. அவற்றை மிகவும் சக்தி வாய்ந் தவையாக ஆக்கிக் கொண்டுள்ளனர். பிறகு ஒத்திகை நடைபெறும். பிறகு இறுதி முடிவு வந்து விடும். .இப்போது சமயம் மிகவும் குறைவாக உள்ளது. டிராமாவோ தனது நேரத்தில் முடிவடைந்து விடும் இல்லையா?

முதல்-முதலில் சிவபாபாவைப் பற்றிய ஞானம் வேண்டும். ஏதேனும் சொற்பொழிவு முதலியவற்றை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் எப்போதுமே முதல்-முதலில் சிவாய நமஹ எனச் சொல்கின்றனர். ஏனென்றால் சிவபாபாவுக்கு என்ன மகிமை உள்ளதோ, அது வேறு யாருக்குமே கிடையாது. சிவஜெயந்தி தான் வைரம் போன்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு சரித்திரம் முதலிய எதுவும் கிடையாது. சத்யுகத்திலோ சிறு குழந்தைகள் முதலானவர்களும் கூட சதோபிர தானமாக இருப்பார்கள். குழந்தைகளிடம் எந்த ஒரு சஞ்சலம் முதலிய எதுவும் இருக்காது. கிருஷ்ணரைப் பற்றி காட்டுகின்றனர் - வெண்ணெய் தின்றார், இதைச் செய்தார், அதைச் செய்தார் என்பதாக. இதுவோ மகிமைக்கு பதிலாக மேலும் நிந்தனை செய்வதாகும். எவ்வளவு குஷியோடு வந்து சொல்கின்றனர், ஈஸ்வரன் சர்வவியாபி என்று! உனக்குள்ளும் இருக்கிறார், எனக்குள்ளும் இருக்கிறார் - இது மிகப் பெரிய நிந்தனையாகும். ஆனால் தமோபிரதானமாக உள்ள மனிதர்கள் இவ்விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆக, முதல்-முதலில் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும் - அவர் நிராகார் தந்தை, அவருடைய பெயரே கல்யாண்காரி சிவா. அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். அந்த நிராகார் தந்தை சுகத்தின் கடல், சாந்தியின் கடலாக இருக்கிறார். இப்போது இவ்வளவு துக்கம் ஏன் வந்தது? ஏனென்றால் இது இராவண இராஜ்யம். இராவணன் அனைவருக்கும் விரோதி. அவனைக் கொல்லவும் செய்கின்றனர். ஆனால் அவன் சாவதில்லை. இங்கே ஏதோ ஒரு துக்கம் என்றில்லை. அளவற்ற துக்கங்கள்! சத்யுகத்தில் உள்ளது அளவற்ற சுகம். 5000 ஆண்டுகளுக்கு முன் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாக ஆகியிருந்தீர்கள். மேலும் இந்த ஆஸ்தியை பாபாவிடமிருந்து பெற்றிருந்தீர்கள். சிவபாபா நிச்சயமாக வருகிறார். வந்து ஏதோ செய்கிறார் இல்லையா? மிகச்சரியாகவே செய்கிறார். அதனால் தான் மகிமை பாடப்படுகின்றது. சிவராத்திரி என்றும் சொல்கின்றனர். பிறகு கிருஷ்ணரின் இராத்திரி. இப்போது சிவராத்திரி மற்றும் கிருஷ்ணரின் இராத்திரி பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். சிவனோ வருகிறார், எல்லையற்ற இராத்திரி யில். கிருஷ்ணரின் பிறப்பு அமிர்தவேளையில் நடைபெறுகின்றது, இராத்திரியில் அல்ல. சிவனுடைய இராத்திரியைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அவருக்கு எந்த ஒரு தேதியோ, கிழமையோ கிடையாது. கிருஷ்ணர் அமிர்தவேளையில் ஜென்மம் எடுக்கிறார். அமிர்தவேளை அனைத்திலும் சுபமுகூர்த்தம் என ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அந்த மனிதர்கள் கிருஷ்ணரின் ஜென்மத்தை 12 மணிக்குக் கொண்டாடுகின்றனர். ஆனால் அது அதிகாலை வேளை ஆகாது. அதிகாலை என்பது 2-3 மணிக்கு சொல்லப்படுகின்றது. அப்போது தான் நினைவும் செய்ய முடியும். அப்படி யாரும் 12 மணிக்கு விகாரத்திலிருந்து எழுந்து பகவான் பெயரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அமிர்தவேளை என்று 12 மணியை சொல்வதில்லை. அச்சமயமோ மனிதர்கள் தூய்மையின்றி, அழுக்காக உள்ளனர். வாயுமண்டலம் முழுவதுமே அசுத்தமாகி விடுகின்றது. இரண்டரை மணிக்கு யாரும் எழுந்திருக்க மாட்டார்கள். 3-4 மணியின் சமயம் அமிர்தவேளையாகும். அந்த நேரத்தில் எழுந்து மனிதர்கள் பக்தி செய்கின்றனர். அந்த நேரத்தையோ மனிதர்கள் தான் உருவாக்கியுள்ளனர். ஆனால் அது ஒன்றும் நல்ல சமயமல்ல. ஆக, நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் வேளையை வெளிப்படுத்த முடியும். சிவனுடைய வேளையை யாரும் வெளிப்படுத்த முடியாது. இதையோ தாமே வந்து புரிய வைக்கிறார். ஆக, முதல்-முதலில் சிவபாபாவின் மகிமையைச் சொல்ல வேண்டும். பாடலை கடைசியில் அல்ல, முதலில் இசைக்க வேண்டும். சிவபாபா அனைவரிலும் இனிமையான பாபா. அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது. இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் இந்த ஸ்ரீ கிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசராக இருந்தார். அங்கே அளவற்ற சுகம் இருந்தது. இப்போதும் கூட சொர்க்கத்தின் மகிமை செய்து கொண்டே இருக்கின்றனர். யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டதாகச் சொல்வார்கள். அட, இப்போதோ நரகம். சொர்க்கமாக இருந்தால் சொர்க்கத்தில் புனர்ஜென்மம் எடுக்க முடியும்.

புரிய வைக்க வேண்டும், எங்களிடமோ இத்தனை வருட அனுபவம் உள்ளது, அதை வெறும் 15 நிமிடங்களிலோ சொல்லிப் புரியவைக்க முடியாது. இதற்கோ நேரம் வேண்டும். முதல்-முதலிலோ ஒரு விநாடியின் விஷயத்தைச் சொல்கிறோம். எல்லையற்ற தந்தை, சுகத்தின் கடலாக இருப்பவர், அவருடைய அறிமுகம் தருகிறோம். அவர் ஆத்மாக்களாகிய நம் அனை வருடைய தந்தை ஆவார். பி.கே. நாங்கள் அனைவரும் சிவபாபாவின் ஸ்ரீமத்படி நடக்கின்றோம். பாபா சொல்கிறார், நீங்கள் அனைவரும் சகோதர-சகோதரர்கள். நான் உங்களுடைய தந்தை. நான் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தேன். அதனால் தான் சிவஜெயந்தி கொண்டாடு கிறீர்கள். சொர்க்கத்தில் எதுவும் கொண்டாடப் படுவதில்லை. சிவஜெயந்தி நடைபெறுகின்றது, அதற்குப் பிறகு பக்தி மார்க்கத்தில் ஞாபகார்த்தமாகக் கொண்டாடப்படுகின்றது. கீதையின் எப்பிஸோட் (அத்தியாயம்) நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. புது உலகத்தின் ஸ்தாபனை பிரம்மாவின் மூலம்,, பழைய உலகத்தின் விநாசம் சங்கர் மூலம். இப்போது இந்தப் பழைய உலகத்தின் வாயுமண்டலத்தையோ நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் தூய்மை யற்ற உலகத்தின் விநாசம் நிச்சயமாக நடைபெறப் போகின்றது. அதனால் பாவன உலகத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்கின்றனர். அளவற்ற துக்கம் - சண்டை, மரணம், விதவை நிலை, தற்கொலை செய்து கொள்வது.......... சத்யுகத்திலோ அளவற்ற சுகங்களின் இராஜ்யம் இருந்தது. இந்த நோக்கம் குறிக்கோளின் சித்திரத்தையோ அவசியம் அங்கே எடுத்துச் செல்ல வேண்டும். இந்த இலட்சுமி-நாராயணர் உலகத்தின் எஜமானர்களாக இருந்தனர். 5000 ஆண்டுகளின் விஷயத்தைச் சொல்கிறோம் - இவர்கள் எப்படி இந்த ஜென்மத்தை அடைந்தனர்? எந்த மாதிரி கர்மம் செய்தனர், அதன் மூலம் இதுபோல் ஆயினர்? கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் விளைவைப் பற்றி பாபா தான் சொல்லிப் புரிய வைக்கிறார். சத்யுகத்தில் கர்மம் அகர்மம் (விளைவற்றதாக) ஆகின்றது. இங்கோ இராவண இராஜ்யம் இருக்கிற காரணத்தால் கர்மங்கள் விகர்மங்களாக (எதிர்விளைவு) ஆகி விடுகின்றன. அதனால் இது பாவாத்மாக்களின் உலகம் எனச் சொல்லப்படுகின்றது. கொடுக்கல்-வாங்கலும் கூட பாவாத்மாக்களோடு தான். வயிற்றுக் குள் குழந்தை இருக்கும் போது திருமண நிச்சயதார்த்தம் செய்து விடுகின்றனர். எவ்வளவு குற்றமான பார்வை! இங்கே இருப்பதே குற்றப் பார்வை உள்ள கண்கள். சத்யுகம் குற்றமற்ற பார்வையுள்ளவர்களின் உலகம் எனப் படும். இங்கே கண்கள் அதிக பாவம் செய்கின்றன. அங்கே எந்த ஒரு பாவமும் செய்வதில்லை. சத்யுகத்தில் தொடங்கி கலியுகக் கடைசி வரை சரித்திர-பூகோளம் திரும்பவும் அதேபோல் நடைபெறுகின்றது. இதையோ அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா? துக்கதாமம், சுகதாமம் என்று ஏன் சொல்லப் படுகின்றது? அனைத்துமே தூய்மையற்ற மற்றும் தூய்மையாவதின் ஆதாரத்தில் தான் உள்ளது. அதனால் பாபா சொல்கிறார், காமம் என்பது மிகப்பெரிய விரோதி. இதை வெல்வதன் மூலம் நீங்கள் உலகத்தை வென்றவராக ஆவீர்கள். அரைக்கல்பம் பவித்திர உலகமாக இருந்தது. அதில் சிரேஷ்ட தேவதைகள் இருந்தனர். இப்போது பிரஷ்டாச்சாரிகள் (மிகவும் தாழ்ந்தவர்கள்). ஒரு பக்கம் சொல்லவும் செய்கின்றனர், இது பிரஷ்டாச்சாரி உலகம் என்று. பிறகு அனைவரையும் ஸ்ரீ ஸ்ரீ என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். என்ன தோன்றுகிறதோ, அதைப் பேசி விடு கின்றனர். இவை அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதோ மரணம் எதிரிலேயே நின்று கொண்டுள்ளது. பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் பாவங்கள் நீங்கி விடும். நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். சுகதாமத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். இப்போதோ துக்கம் உள்ளது. எவ்வளவு தான் அந்த மனிதர்கள் மகாநாடு நடத்தினாலும், கூட்டம் போட்டாலும் இவற்றால் எதுவும் நடக்கப் போவதில்லை. ஏணிப்படியில் கீழே இறங்கிக் கொண்டே செல்கின்றனர். பாபா தம்முடைய காரியத்தை தம்முடைய குழந்தை கள் மூலமாகச் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அழைத்தீர்கள், பதீத பாவனா வாருங்கள் என்று. ஆகவே நான் என்னுடைய சமயத்தின்படி வந்துள்ளேன். யதா யதாஹி தர்மஸ்ய......... இதன் அர்த்தமும் அறிந்து கொள்ளவில்லை. அழைக்கின்றனர் என்றால் நிச்சய மாகத் தாங்களே தூய்மை இழந்து உள்ளனர். பாபா சொல்கிறார், இராவணன் உங்களைப் தூய்மை யற்றவராக ஆக்கியிருக்கிறான். இப்போது நான் பாவனமாக்குவதற்காக வந்துள்ளேன். அது பாவன உலகமாக இருந்தது. இப்போதிருப்பது தூய்மையற்ற உலகம். 5 விகாரங்கள் அனை வருக்குள்ளும் உள்ளன. அளவற்ற துக்கம்! அனைத்து தரப்பிலும் அசாந்திக்கு மேல் அசாந்தி தான். எப்போது நீங்கள் முற்றிலும் தமோபிரதானமாக, பாவாத்மாக்களாக ஆகி விடுகிறீர்களோ, அப்போது நான் வருகிறேன். யார் என்னை சர்வவியாபி எனச் சொல்லி எனக்கு அபகாரம் செய்கின்றனரோ, அப்படிப் பட்டவர் களுக்கும் கூட நான் உபகாரம் செய்வதற்காக வருகிறேன். எனக்கு நீங்கள் அழைப்பு கொடுக்கிறீர்கள், இந்த தூய்மையற்ற இராவண இராஜ்யத்தில், தூய்மையற்ற சரீரத்தில் வாருங்கள் என்று. எனக்கும் கூட இரதமோ வேண்டும் இல்லையா? பாவன இரதமோ வேண்டியதில்லை. இராவண இராஜ்யத்தில் தூய்மையற்றவராகவே இருக் கின்றனர். பாவனமானவர்கள் யாருமே கிடையாது. அனைவரும் விகாரத்திலிருந்து தான் பிறக் கின்றனர். இது விகாரி உலகம். அது விகாரமற்ற உலகம். இப்போது நீங்கள் தமோபிர தானத்திலிருந்து சதோபிரதானமாக எப்படி ஆவீர்கள்? பதீத பாவனோ நான் தான். என்னிடம் யோகம் (நினைவு) வையுங்கள். பாரதத்தின் புராதன இராஜயோகம் இது. நிச்சயமாக இல்லற மார்க்கத்தில் தான் வருவார். எப்படி அற்புதமான ரீதியில் வருகிறார்! இவர் தந்தையாகவும் உள்ளார் என்றால் தாயாகவும் உள்ளார். ஏனென்றால் கௌமுக் (பசுவின் வாய்) வேண்டும். அதிலிருந்து அமிர்தம் வெளிப்படும். ஆக, இவர் தாய்-தந்தையாக உள்ளார். பிறகு மாதாக்களைப் பராமரிப்பதற்காக சரஸ்வதியைத் தலைவியாக வைத்திருக்கிறார். அவர் ஜெகதம்பா என அழைக்கப்படுகிறார். காளி மாதா எனச் சொல்கின்றனர். அதுபோல் கருப்பாக சரீரம் இருக்குமா என்ன? கிருஷ்ணரைக் கருப்பாக ஆக்கி விட்டுள்ளனர். ஏனென்றால் காம சிதையில் அமர்ந்து கருப்பாகி விட்டுள்ளார். கிருஷ்ணர் தான் கருப்பாகவும் பிறகு வெள்ளை யாகவும் ஆகின்றார். இந்த அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்வதற்கும் கூட நேரம் வேண்டும். கோடியில் சிலர், அதிலும் தேர்ந்தெடுத்த சிலருடைய புத்தியில் தான் பதிந்திருக்கும். ஏனென்றால் அனைவருக் குள்ளும் 5 விகாரங்கள் பிரவேசமாகியுள்ளன. நீங்கள் இந்த விஷயங்களை சபையிலும் கூடப் புரிய வைக்க முடியும். ஏனென்றால் அனைவருக்கும் பேசுவதற்கான உரிமை உள்ளது. அதுபோல் வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாரப் பூர்வ சபையில் யாரும் இடையில் கேள்விகள் முதலியவற்றைக் கேட்பதில்லை. (நாங்கள் சொல்வதை நீங்கள்) கேட்கவில்லை என்றால் அமைதியாக வெளியேறி விடுங்கள். சப்தம் செய்யாதீர்கள். இதுபோல் எல்லாம் அமர்ந்து புரிய வையுங்கள். இப்போதோ அளவற்ற துக்கம்! துக்கத்தின் மலைகள் விழப் போகின்றன. நாங்கள் தந்தையை, அவருடைய படைப்பைப் பற்றி அறிந்துள்ளோம். நீங்களோ, மற்றவருடைய தொழில் பற்றியும் தெரியாதிருக்கிறீர்கள். தந்தை வந்து பாரதத்தை சொர்க்கமாக எப்போது எப்படி ஆக்கியிருந்தார்? இதை நீங்கள் அறிந்திருக்க வில்லை. வந்தால் புரிய வைப்போம். 84 பிறவிகளை எப்படி எடுக்கிறோம்? 7 நாள் கோர்ஸ் எடுத்துக் கொள்வீர்களானால் உங்களை 21 பிறவிகளுக்குப் பாவாத்மாவிலிருந்து புண்ணியாத் மாக்களாக ஆக்கி விடுவோம். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) கர்ம-அகர்ம-விகர்மத்தின் ஆழமான நிலையை பாபா புரிய வைத்துள்ளார். அதை புத்தியில் வைத்து பாவாத்மாக்களோடு இப்போது கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது.

2) ஸ்ரீமத் படி தனது புத்தியோகத்தை ஒரு பாபாவிடம் ஈடுபடுத்த வேண்டும். சதோபிர தானமாக ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். துக்கமான உலகத்தை சுகமான உலகமாக மாற்றுவதற்காக தூய்மையற்ற நிலையில் இருந்து தூய்மை ஆவதற்காக முயற்சி செய்ய வேண்டும். குற்றமான பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
ஞானம் நிறைந்தவராகி அனைத்துவிதமான வீண் கேள்விகளை யக்ஞத்தில் அர்ப்பணித்துதடைகளற்றவர் ஆகுக.

தடைகள் வருகின்ற போது ஏன்-எதற்கு என்ற அநேக கேள்விகளில் சென்று விடுகிறீர்கள். கேள்வியாளர்களாக ஆகிறீர்கள் என்றால் குழப்பமடைகிறீர்கள். ஞானம் நிறைந்தவர்களாகி யக்ஞத்தில் அனைத்து வீண் கேள்விகளையும் அர்ப்பணித்து விட்டீர்கள் எனில் உங்களது நேரமும் மிச்சமாகும், மற்றவர்களது நேரமும் மிச்சமாகும். இதன் மூலம் எளிதாக தடை களற்றவர்களாக ஆவீர்கள். நிச்சயம் மற்றும் வெற்றிக்கான பிறப்புரிமை - இந்த பெருமையில் இருந்தீர்கள் எனில் ஒருபோதும் குழப்படைய மாட்டீர்கள்.

சுலோகன்:
சதா ஆர்வத்துடன் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் - இது தான் உங்களது தொழிலாகும்.