13-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! தந்தை யாராக இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ அவரை சரியான முறையில் அறிந்து நினைவு செய்வது - இதுவே முக்கிய விஷயம் ஆகும். மனிதர்களுக்கு இந்த விஷயத்தை மிகுந்த யுத்தியுடன் புரிய வைக்க வேண்டும்.

கேள்வி:
முழு உலகத்திற்கான (யுனிவர்ஸ்) எந்த ஒரு படிப்பை நீங்கள் இங்கு தான் படிக் கிறீர்கள்?

பதில்:
நீங்கள் அனைவரும் ஆத்மா ஆவீர்கள் என்பதே முழு உலகத்திற்கான படிப்பு ஆகும். ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனமாக ஆகி விடுவீர்கள். முழு (யுனிவர்ஸ்) உலகத்திற்கான தந்தை அனைவரையும் பாவனமாக (தூய்மையாக) ஆக்குவதற் காக ஒரே ஒரு முறை வருகிறார். அவரே படைப்பவர் மற்றும் படிப்பின் ஞானத்தை (நாலேஜ்) அளிக்கிறார். எனவே உண்மையில் இது ஒன்று தான் யுனிவர்சிட்டி (பல்கலைக் கழகம்) ஆகும். இந்த விஷயத்தை குழந்தைகள் தெளிவுபடுத்தி புரிய வைக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
பகவானின் மகா வாக்கியம். இப்பொழுது பகவான் யார் என்பதையோ ஆன்மீகக் குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். பாரதத்தில் யாருமே சரியான முறையில் அறியாமல் உள்ளார்கள். நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை சரியான முறையில் யாரும் அறியாமல் உள்ளார்கள் என்று கூறவும் செய்கிறார். உங்களிலும் வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். வரிசைக் கிரமமாக முயற்சிக்கேற்ப (புருஷார்த்தம்) அறிந்துள்ளீர்கள். இங்கு தான் இருக்கிறார்கள் என்றாலும் கூட சரியான (யதார்த்தமான) முறையில் அறியாம-ருக்கிறார்கள். சரியான முறையில் அறிந்து பின் தந்தையை நினைவு செய்வது - இது மிகவும் கடினமாக உள்ளது. மிகவும் எளிதானது என்று குழந்தைகள் கூறுகிறார்கள் என்றாலும் கூட நான் யாராக இருக்கிறேன் - நான் நிரந்தரமாக தந்தையை நினைவு செய்ய வேண்டும், புத்தியில் இந்த யுக்தி (வழிமுறை) இருக்கிறதா?. நான் ஆத்மா மிகவும் சிறியதாக உள்ளேன். நம்முடைய பாபா (தந்தை) கூட பிந்து (புள்ளி) சிறியதாக உள்ளார். அரைக் கல்பமாக பகவானின் பெயரையே எடுப்பதில்லை. துக்கத்தில் தான் ஹே பகவான் ! என்று நினைவு செய்கிறார்கள். இப்பொழுது பகவான் யார் என்பதையோ எந்த மனிதரும் புரியாமல் உள்ளார்கள். இப்பொழுது மனிதர்களுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும் என்பது பற்றி ஞான மனனம் (விசார் சாகர் மந்தன் - சிந்தனைக் கடலைக் கடைதல்) செய்ய வேண்டும். பெயர் கூட பிரஜாபிதா பிரம்மாகுமாரி ஈசுவரிய விஷ்வ வித்தியாலயம் என்று எழுதப் பட்டுள்ளது. இதன் மூலமாகக் கூட இது ஆன்மீக எல்லையில்லாத தந்தையின் ஈசுவரிய விஷ்வ வித்தியாலயம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது மனிதர்கள் சட்டென்று புரிந்து கொண்டு விடும் வகையில் என்ன பெயர் வைக்கலாம்? எப்படி இது யுனிவர்சிட்டி (பல்கலை கழகம்) என்பதை மனிதர்களுக்குப் புரிய வைக்கலாம்? யுனிவர்ஸ் (உலகம்) என்ற வார்த்தை யிலிருந்து யுனிவர்சிட்டி என்ற வார்த்தை வெளிப் பட்டுள்ளது. யுனிவர்ஸ் என்றால் முழு உலகம் .அதற்கு யுனிவர்சிட்டி என்று பெயர் வைத்துள்ளார்கள். இங்கு எல்லா மனிதர்களும் படிக்க முடியும். (யுனிவர்ஸ்) உலகத்தில் படிப்பதற்கான யுனிவர்சிட்டி ஆகும். இப்பொழுது உண்மையில் (யுனிவர்ஸ்) உலகத்திற்காக ஒரே ஒரு தந்தை வருகிறார். இது அவருடைய ஒரே ஒரு யுனிவர் சிட்டி ஆகும். ஏம் ஆப்ஜெக்ட் - இலட்சியம் நோக்கம் கூட ஒன்று தான். தந்தை தான் வந்து முழு (யுனிவர்ஸ்) உலகத்தை பாவனமாக (தூய்மையாக) ஆக்குகிறார். யோகம் கற்பிக்கிறார். இதுவோ அனைத்து தர்மத்தினருக்காகவும் உள்ளது. தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று கூறுகிறார். முழு (யுனிவர்ஸ்) உலகத்திற்கான தந்தை ""இன்கார்போரியல் காட்ஃபாதர்" (நிராகார இறை தந்தை) ஆவார். ஆக நாம் ஏன் இதன் பெயரை ஸ்பிரிச்சுவல் யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்பிரிச்சுவல் இன்கார் போரியல் காட் ஃபாதர் என்று வைக்கக் கூடாது? எண்ணம் எழுகிறது இல்லையா? மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்? முழு உலகத்தில் ஒருவர் கூட தந்தையை அறிவதில்லை. அறியாமல் உள்ளார்கள். படைப்பவரை அறிந்தால் தானே பின் படைப்பையும் அறிந்து கொள்வார்கள். படைப்பவர் மூலமாகத் தான் படைப்பு அறிய முடியும். தந்தை குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து விடுவார். வேறு யாருமே அறியாமல் உள்ளார்கள். ரிஷி முனிவர்கள் கூட தெரிய வில்லை, தெரியவில்லை என்றபடியே சென்று விட்டார்கள். எனவே முன்பெல்லாம் உங்களுக்கு இந்த படைப்பவர் மற்றும் படைப்பின் நாலேஜ் (ஞானம்) இருக்கவில்லை என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது படைப்பவர் புரிய வைத்துள்ளார். என்னை எல்லோரும் வந்து எங்களுக்கு சுகம் சாந்தி கொடுங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள் என்று தந்தை கூறுகிறார். ஏனெனில் இப்பொழுது துக்கம் அசாந்தி உள்ளது. அவருடைய பெயரே துக்கஹர்த்தா, சுககர்த்தா என்பதாகும். அவர் யார்? பகவான். அவர் எப்படி துக்கத்தை நீக்கி சுகம் அளிக்கிறார் என்பதை அறியாம-ருக்கிறார்கள். எனவே நிராகாரமான காட்ஃபாதர் (இறை தந்தை) தான் இந்த (நாலேஜ்) ஞானத்தை அளிக்கிறார் என்று மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இது போல தெளிவாக எழுத வேண்டும். இது போல ஞான மனனம் (விசார் சாகர் மத்தன் - சிந்தனைக் கடலை கடைதல்) செய்ய வேண்டும். மனிதர்கள் அனைவரும் கல் போன்ற புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது உங்களை தங்கம் போன்ற புத்தி உடையவராக ஆக்கிக் கொண்டிருக் கிறார். உண்மையில் யார் குறைந்தது 50க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுகிறார் களோ அவர் களுக்குத் தான் தங்க புத்தி என்று கூறுவார்கள். தோல்வி அடைபவர்கள் தங்க புத்தி உடையவர்கள் அல்ல. இராமர் கூட குறைந்த மதிப்பெண்கள் பெற்றார். அதனால் தான் க்ஷத்திரியர் என்று காண்பித்துள்ளார்கள். இராமரிடம் ஏன் அம்பை காண்பித்துள்ளார்கள் என்பது கூட புரியாமல் உள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி அவர் எல்லோரையும் கொன்றார் என்று சுயதரிசன சக்கரத்தை காண்பித்துள்ளார்கள். மேலும் இராமருக்கு அம்பு காண்பித்துள்ளார்கள். ஒரு விசேஷ மான பத்திரிகை வெளியிடப்படுகிறது. அதில் கிருஷ்ணர் எப்படி சுயதரிசன சக்கரத்தின் மூலம் அகாசுரர்கள், பகாசுரர்கள் ஆகியோரை கொல்கிறார் என்று காண்பித்துள்ளார்கள். இருவரையும் இம்சை செய்பவர்களாக சித்தரித்துள்ளார்கள். மேலும் பிறகு (டபுள் ஹிம்சக்) இருவிதமான இம்சை செய்பவர்களாக ஆக்கியுள்ளார்கள். அவர்களுக்கும் கூட குழந்தைகள் பிறந்தார்கள் அல்லவா? என்று கூறுகிறார்கள். அட, அவர்கள் இருப்பதே நிர்விகாரி தேவிதேவதையாக. அங்கு இராவண இராஜ்யம் இருப்பதே இல்லை. இச்சமயத்தில் தான் இராவண சம்பிரதாயம் என்று கூறப்படுகிறது.

நாம் யோக பலத்தினாலே உலக அரசாட்சியையே பெற்று விடும் பொழுது, யோக பலத்தினால் குழந்தைகள் பிறக்க முடியாதா என்ன! என்று இப்பொழுது நீங்கள் புரிய வைக்கிறீர்கள். அது இருப்பதே நிர்விகாரி உலகமாக. இப்பொழுது நீங்கள் சூத்திரரிலிருந்து பிராமணர் ஆகி உள்ளீர்கள். இது போல இவர்களிடம் முழு ஞானம் உள்ளது என்று மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நல்ல விதமாகப் புரிய வைக்க வேண்டும். சிறிதளவு கூட இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டார் கள் என்றால் இவர் பிராமண குலத்தினர் ஆவார் என்று புரிந்து விடும். ஒரு சிலருக்கோ இவர் பிராமண குலத்தவர் அல்ல என்று உடனே புரிந்து கொண்டு விடுவோம். பலவித மானோர் வருகிறார்கள் அல்லவா? எனவே நீங்கள் ஸ்பிரிச்சுவல் யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்பிரிச்சுவல் இன்கார் போரியல் காட்ஃபாதர் என்று எழுதிப் பாருங்கள், என்ன ஆகிறது என்று! ஞான மனனம் (சிந்தனைக் கடலை கடைந்து) செய்து வார்த்தைகளை ஒன்று படுத்த வேண்டி உள்ளது. இங்கு இந்த நாலேஜ் (ஞானம்) காட்ஃபாதர் (இறை தந்தை) புரிய வைக்கிறார் அல்லது இராஜயோகம் கற்பிக்கிறார் என்று மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இதில் எழுதுவதற்கான மிகுந்த யுக்தி (வழிமுறை) வேண்டும். இந்த வார்த்தை கூட சாதாரணமானது. - ஒரு நொடியில் ஜீவன் முக்தி தேவதா சாம்ராஜ்யம். மனிதர்களின் புத்தியில் பதியும் வகையில் இது போன்ற வார்த்தைகள் இருக்க வேண்டும். பிரம்மா மூலமாக விஷ்ணுபுரியின் ஸ்தாபனை ஆகிறது. மன்மனாபவ என்பதன் பொருளே தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். நீங்கள் பிரம்மா முக வம்சாவளி பிராமண குல பூஷணர்கள், சுய தரிசன சக்கரதாரி ஆவீர்கள். இப்பொழுது அவர்களோ விஷ்ணு விற்கு சுயதரிசன சக்கரத்தைக் காண்பிக்கிறார்கள். கிருஷ்ணருக்குக் கூட 4 புஜங்களைக் காண்பிக் கிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு 4 புஜங்கள் எவ்வாறு இருக்க முடியும்? தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கிறார்!. குழந்தைகள் மிகவுமே விசாலமான (பரந்த) புத்தி உடையவர்களாக, பாரஸ் புத்தியினராக ஆக வேண்டும். சத்யுகத்தில் எப்படி இராஜா இராணியோ பிரஜைகள் எல்லோருமே! பாரஸ் புத்தி என்று தானே கூற வேண்டும்! அது பாரஸ் உலகம் ஆகும். இது கற்களின் உலகம் ! உங்களுக்கு இந்த நாலேஜ் (ஞானம்) மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காகக் கிடைத்துள்ளது. நீங்கள் உங்களது இராஜ்யத்தை ஸ்ரீமத்படி மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இராஜா மகாராஜா எப்படி ஆக முடியும் என்று பாபா நமக்கு யுக்தி (வழிமுறை) கூறுகிறார். மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்காக உங்களுடைய புத்தியில் இந்த ஞானம் நிரம்பி விடுகிறது. காலச் சக்கரம் பற்றி புரிய வைப்பது கூட மிகவும் சுலபம் ஆகும். இச்சமயத்தில் ஜனத்தொகை பாருங்கள் எவ்வளவு உள்ளது! சத்யுகத்தில் எவ்வளவு குறை வானோர் இருப்பார்கள். சங்கமமோ உள்ளது அல்லவா? பிராமணர்களோ குறைவாக இருப்பார்கள் அல்லவா? பிராமணர்களின் யுகமே சிறியது. பிராமணர்களுக்குப் பிறகு தேவதைகள், விருத்தியை அடைகிறார்கள். குட்டிக்கரணம் ஆகிறது அல்லவா? எனவே ஏணிப்படியின் படத்துடன் கூடவே விராட ரூபமும் இருந்தது என்றால் புரிய வைப்பது தெளிவாக இருக்கும். யார் உங்கள் குலத்தினராக இருப்பார்களோ அவர்களுடைய புத்தியில் படைப்பவர் மற்றும் படைப்பின் நாலேஜ் (ஞானம்) சுலபமாகவே பதிந்து விடும். இவர் நமது குலத்தினவரா இல்லையா என்பது அவர் களுடைய முகத்தின் மூலமாகக் கூட தெரிய வந்து விடும். நமது குலத்தினராக இல்லை என்றால் தோசைக்கல் போல (உணர்ச்சியற்று) கேட்பார். யார் அறிவாளியாக இருப்பாரோ அவர் கவனத்துடன் கேட்பார். ஒரு முறை யாருக்காவது முழுமையாக அம்பு போல பதிந்தது என்றால் பின் வந்து கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் கேள்வி கேட்பார்கள். மேலும் யாராவது நல்ல மலராக இருந்தால் தானாகவே தினமும் வந்து முழுமையாகப் புரிந்து கொண்டு போய் விடுவார். படங்கள் மூலமாக யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். இதுவோ உண்மையில் தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனையை தந்தை செய்து கொண்டிருக்கிறார். ஒரு சிலர் கேட்காமலேயே தாங்களாகவே புரிந்து கொள்வார்கள். ஒரு சிலரோ நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒன்றும் புரியாமல் இருப்பார்கள். பிறகும் புரிய வைக்க வேண்டி உள்ளது. குழப்பமோ செய்யக் கூடாது. பிறகு கூறுவார்கள் - இறைவன் உங்களைக் காப்பாற்றுவது கூட இல்லை. இப்பொழுது அவர் என்ன பாதுகாப்பு அளிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கர்மங்களின் கணக்கு வழக்கோ ஒவ்வொருவரும் தங்களுடையதை தீர்க்க வேண்டியே உள்ளது. இப்படியும் நிறைய பேர் இருக்கிறார்கள் - உடல் நிலை கெட்டுவிட்டது என்றால் காப்பற்றுங்கள் என்பார்கள். நானோ பதீதர்களை (தூய்மையற்றவர்களை) தூய்மைப்படுத்த வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இந்தத் தொழிலை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். தந்தை 5 விகாரங்கள் மீது வெற்றி அடையுமாறு செய்கிறார். எனவே அவை மேலும் பலத்துடன் எதிர்க்கும். விகாரத்தின் புயல் மிகவுமே பலமாக வருகிறது. தந்தையினுடையவர் ஆகும் பொழுது இந்த எல்லா வியாதிகளும் கொந்தளித்து மேலே வரும் என்று தந்தை கூறுகிறார். புயல்கள் பலமாக வரும். முழுமையான குத்து சண்டை உள்ளது. நல்ல நல்ல பயில்வான்களைக் கூட தோற்கடித்து விடுகிறது. கூறுகிறார்கள் - விரும்பாவிடினும் கூட தீய பார்வை ஏற்பட்டு விடுகிறது என்று. ரெஜிஸ்தர் கெட்டுப் போய் விடும். தீய பார்வை உடையவர்களிடம் பேசக் கூடாது. பாபா எல்லா சென்டர்களின் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - தீய பார்வை உடையவர்கள் மிகவும் ஏராளமாக உள்ளார்கள். பெயரைக் கூறி விட்டால் இன்னுமே துரோகி ஆகி விடுவார்கள். தங்களை (சர்வநாசம்) அழித்துக் கொள்பவர்கள் தவறான காரியம் செய்ய முற்படுகிறார்கள். காம விகாரம் மூக்கைப் பிடித்து விடுகிறது. மாயை விடுவது இல்லை. தீய செயல், தீய பார்வை, தீய வார்த்தை கள் வெளிப்படுகின்றன. தீய நடத்தை ஆகி விடுகிறது. எனவே மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சி ஆகியவற்றை நடத்தும் பொழுது யாருமே சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் அப்பேர்ப்பட்ட ஏதாவது யுக்தியை (வழி முறை) கையாளுங்கள். இந்த கீதா ஞானத்தை சுயம் தந்தை கற்ப்பித்துக் கொண்டிருக்கிறார். இதில் எந்த ஒரு சாஸ்திரம் ஆகியவற்றின் விஷயம் கிடையாது. இதுவோ படிப்பு ஆகும். கீதையின் புத்தகமோ இங்கு இல்லை. தந்தை கற்ப்பிக்கிறார். கையில் புத்தகத்தை எடுக்கிறாரா என்ன? பிறகு இந்த கீதை என்ற பெயர் எங்கிருந்து வந்தது? பிற எல்லா தர்ம சாஸ்திரங்களும் பின்னால் தான் வருகின்றன. எத்தனை அநேக மடங்கள், வழிகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் அதனதன் சாஸ்திரங்கள் உள்ளன. கிளைகள், கொடிகள் என்னவெல்லாம் உள்ளனவோ - சிறிய சிறிய மடங்கள், கொள்கைகள் அவற்றிற்கும் அதனதன் சாஸ்திரங்கள் உள்ளன. எனவே அவை எல்லாமே குழந்தை குட்டிகளா கின்றன. ஆனால். அவற்றினால் முக்தி கிடைக்காது. சர்வ சாஸ்திரங்களின் தாய் - சிரோமணி கீதை பாடப்பட்டுள்ளது. கீதையின் ஞானம் கூட கூறுபவர்கள் இருப்பார்கள் அல்லவா? எனவே இந்த ஞானத்தை தந்தை தான் வந்து தருகிறார். கையில் ஏதாவது சாஸ்திரங்கள் ஆகியவை இருக்கிறதா என்ன? நான் கூட சாஸ்திரம் படித்தது இல்லை. உங்களுக்கும் கற்பிப்பது இல்லை. அவர்கள் கற்கிறார்கள், கற்பிக்கிறார்கள். இங்கு சாஸ்திரங்களின் விஷயம் இல்லை. தந்தை இருப்பதே (நாலேஜ் ஃபுல்) ஞானம் நிறைந்தவராக. நான் உங்களுக்கு எல்லா வேதங்கள் சாஸ்திரங்களின் சாரத்தைக் கூறுகிறேன். முக்கியமானவையே நான்கு தர்மங்களின் நான்கு தர்ம சாஸ்திரங்கள். பிராமண தர்மத்திற்கென்று ஏதாவது புத்தகம் உள்ளதா என்ன? எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ! இவை அனைத்தையுமே தந்தை வந்து விளக்கமாகப் புரிய வைக்கிறார். மனிதர்கள் எல்லோருமே கல்புத்தியினராக உள்ளார்கள். அதனால் தான் இவ்வளவு ஏழை ஆகி உள்ளார்கள். தேவதைகள் கோல்டன் ஏஜில் (சத்யுகம்) இருந்தார்கள். அங்கு தங்க மாளிகைகள் கட்டப்பட்டிருக்கும். தங்க சுரங்கங்கள் இருந்தன. இப்பொழுதோ உண்மையான தங்கம் இல்லை. முழு கதையும் பாரதத்தைப் பொருத்து தான் உள்ளது. நீங்கள் தேவி தேவதைகள் தங்க புத்தியினராக இருந்தீர்கள். உலகத்தின் மீது ஆட்சி புரிந்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நினைவிற்கு வந்துள்ளது. நாம் செர்க்கத்தின் அதிபதியாக இருந்தோம். பிறகு நரகத்தின் அதிபதி ஆனோம். இப்பொழுது மீண்டும் தங்க புத்தி ஆகிறோம். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. இதை நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நாடகப்படி பாகமானது நடந்து கொண்டே இருக்கிறது. என்ன நேரம், காலம் கடந்து போகிறதோ அது மிகச் சரியாகவே (அக்யூரேட்) நடக்கிறது. பிறகும் புருஷார்த்தத்தை (முயற்சி) செய்விப்பார் தான் இல்லையா !

சுயம் பகவான் நம்மை (ஹெவென்) சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்விக்கிறார் என்ற போதை எந்தக் குழந்தைகளுக்கு இருக்கிறதோ அவர்களுடைய முகம் மிகவும் (ஃபர்ஸ்ட் கிளாஸ்) முதல்தரமானதாக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை வருவது கூட குழந்தைகளைப் புருஷார்த்தம் (முயற்சி) செய்விக்கத்தான். பிராலப்தம் (பிராப்தி) பெறச் செய்வதற்காக. இதுவும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உலகத்தில் யாராவது ஏதாவது அறிந்துள்ளார்களா என்ன? (ஹெவென்) சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குவதற்காக பகவான் புருஷர்த்தம் (முயற்சி) செய்விக்கிறார். எனவே குஷி இருக்க வேண்டும். முகம் மிகவுமே முதல் தரமாக குஷி நிறைந்ததாக இருக்க வேண்டும். தந்தையின் நினைவு இருந்தால் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தந்தையை மறப்பதாலேயே மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதால் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக ஆகி விடுகிறீர்கள். ஒவ்வொருவருடைய சேவையின் மூலமாக புரியப்படுகிறது .தந்தைக்கு குழந்தைகளின் நறுமணமோ வருகிறது அல்லவா? நல்ல குழந்தைகளிடமிருந்து நறுமணம் வருகிறது. மோசமான குழந்தைகளிடமிருந்து துர்நாற்றம் வருகிறது. தோட்டத்தில் நறுமணமுள்ள மலர்களை தான் எடுப்பதற்காக மனம் விரும்பும். எருக்கம் பூவை யார் எடுப்பார்கள்! தந்தையை சரியான முறையில் நினைவு செய்வதால் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும் (பாவங்கள் அழிந்து விடும்). நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மாயையின் குத்து சண்டையில் தோற்று விடக் கூடாது. ஒரு பொழுதும் வாயிலிருந்து தீய வார்த்தை வெளிப்படக் கூடாது. தீய பார்வை, தீய நடத்தை, தீய செயல்கள் ஆகக் கூடாது என்ற கவனம் இருக்கட்டும்.

2. "ஃபர்ஸ்ட் கிளாஸ்" - முதல் தரமான நறுமணமுள்ள மலர் ஆக வேண்டும். சுயம் பகவான் நமக்கு கற்ப்பிக்கிறார் என்ற போதை இருக்கட்டும். தந்தையின் நினைவில் இருந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு பொழுதும் வாடிப் போகக் கூடாது.

வரதானம்:
உறுதிமொழி மற்றும் நடைமுறையின் சமமநிலையின் மூலம் தன்னை பாவங்களிலிருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடிய விஷ்வ சேவாதாரி (உலக சேவகன்) ஆகுக!

குழந்தைகள் நீங்கள் என்ன உறுதிமொழி செய்கின்றீர்களோ அது நடைமுறை வாழ்வில் சமமான தாக இருக்கவேண்டும், இல்லை எனில் புண்ணிய ஆத்மாவிற்கு பதிலாக சுமைகொண்ட ஆத்மா வாக ஆகிவிடுவீர்கள். இந்த பாவம் மற்றும் புண்ணியத்தின் நிலையை அறிந்து தன்னை பாதுகாப் பாக வையுங்கள், ஏனெனில் எண்ணத்திலும் விகாரத்தின் பலவீனம், வீணான பாவனை, வெறுப்பு மற்றும் பொறாமைக்கான பாவனை பாவத்தின் கணக்கை அதிகரிக்கின்றது எனவே புண்ணிய ஆத்மா ஆகுக என்ற வரதானத்தின் மூலம் தன்னை பாதுகாப்பாக வைத்து உலக சேவகன் ஆகுங்கள். குழுவின் ரூபத்தில் ஒரு வழி, ஏக்ரஸ் ஸ்திதியின் அனுபவம் செய்வியுங்கள் .

சுலோகன்:
தூய்மையின் ஜோதி நாலாபுரமும் சுடர்விட ஆரம்பித்தால் பாபாவை சகஜமாக பார்க்கமுடியும்.

அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்த பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஒருமுகத் தன்மையை தனதாக்குங்கள்

தந்தையை உலகிற்கு வெளிப்படுத்தும் கொடியினை பறக்க வைப்பதற்கு முன்பாக இரண்டு வார்த்தையை ஒவ்வொரு செயலிலும் கொண்டு வாருங்கள். ஒன்று உறவுகள், தொடர்பில் யாவிலும் ஒற்றுமை. விதவிதமான சம்ஸ்காரமாயினும் வேற்றுமையில் ஒற்றுமை. உறுதித்ன்மை இதுவே வெற்றிக்கான சாதனம். அவ்வப்போது ஒற்றுமை ஆட்டம் கொள்கிறது, இவர் செய்தால் நான் செய்வேன் என்பதில்லை. உங்களது சுலோகன் சுய மாற்றமே உலக மாறறம். உலக மாற்றமே சுய மாற்றம் அல்ல.