ஓம் சாந்தி.
முதலாவது பாடம் என்னவெனில், குழந்தைகளே! தன்னை ஆத்மா என்று
உணருங்கள் அதாவது மன்மனாபவ, இது சமஸ்கிருத வார்த்தையாகும்.
குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய் கின்ற பொழுது முதன் முதலில்
அவர்களுக்கு அல்லாவைப் பற்றி கூற வேண்டும். யார் வந்தாலும்
அவர்களை சிவபாபாவின் சித்திரத்திற்கு முன்பு அழைத்துச் செல்ல
வேண்டும், மற்ற சித்திரங் களின் முன்பு அல்ல. முதன் முதலில்
தந்தையின் சித்திரத்திற்கு முன்பு அழைத்துச் சென்று - தன்னை
ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்று
தந்தை கூறுவதாக அவர்களுக்குக் கூற வேண்டும்.. நான் உங்களுக்கு
சுப்ரீம் தந்தையாகவும் இருக் கின்றேன், சுப்ரீம் ஆசிரியராகவும்
இருக்கின்றேன், சுப்ரீம் குருவாகவும் இருக்கின்றேன்.
அனைவருக்கும் இந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும். அங்கிருந்து
தான் ஆரம்பிக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று உணருங்கள் மற்றும்
என்னை நினைவு செய்யுங்கள். ஏனெனில் பதீதமாக ஆகியிருக்கும்
நீங்கள் மீண்டும் பாவனமாக ஆக வேண்டும். இந்த பாடத்தில் அனைத்து
விசயங் களும் வந்து விடுகின்றன. அனைவரும் இவ்வாறு செய்வது
கிடையாது. பாபா கூறுகின்றார் - முதன் முதலில் சிவபாபாவின்
சித்திரத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். இவர்
எல்லையற்ற பாபா ஆவார். என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள்
என்று பாபா கூறுகின்றார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டால்
கவலைகள் நீங்கி விடும். நினைவு செய்து செய்து தூய்மையான
உலகிற்குச் சென்று விட வேண்டும். இந்த பாடத்தை குறைந்தது 3
நிமிடத்திற்காவது, அடிக்கடி உறுதி செய்ய வேண்டும். தந்தையை
நினைவு செய்தேனா? பாபா, தந்தையாகவும் இருக்கின்றார்,
படைப்புகளுக்கு படைப்பாளியாகவும் இருக்கின்றார். படைப்புகளின்
முதல், இடை, கடையை அறிந்தவராக இருக்கின்றார். ஏனெனில் மனித
சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்றார். முதன் முதலில் இந்த
நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தந்தையை நினைவு
செய்கின்றீர்களா? இந்த ஞானத்தை பாபா தான் கொடுக்கின்றார்.
நாமும் பாபாவிடமிருந்து தான் இந்த ஞானத்தை அடைகின்றோம், அதனை
உங்களுக்கும் கொடுக்கின்றோம். முதன் முதலில் இந்த மந்திரத்தை
பக்காவாக (உறுதி) ஆக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையை நினைவு செய்தால் செல்வந்தர்களாக ஆகி விடுவீர்கள்.
இதனைப் பற்றியே புரிய வைக்க வேண்டும். எது வரைக்கும் இதை
புரிந்து கொள்ளவில்லையோ அதுவரைக்கும் கால்கள் முன்னேறக் கூடாது.
இப்படிப்பட்ட தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கக் கூடிய
சித்திரங்கள் 2 அல்லது நான்கு இருக்க வேண்டும். ஆக இதனை நல்ல
முறையில் புரிய வைப்பதன் மூலம் - நான் தந்தையை நினைவு செய்ய
வேண்டும், அவர் சர்வசக்திவானாக இருக்கின்றார், அவரை நினைவு
செய்வதன் மூலம் பாவங்கள் அழிந்து விடும் என்பது அவர்களது
புத்தியில் வந்து விடும். தந்தையின் மகிமை தெளிவாக இருக்கின்றது.
முதன் முதலில் இதனைக் கண்டிப்பாக புரிய வைக்க வேண்டும் - தன்னை
ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். தேகத்தின்
அனைத்து சம்பந்தங்களையும் மறந்து விடுங்கள். நான் சீக்கியனாக
இருக்கின்றேன், நான் இன்னாராக இருக்கிறேன்....... இவைகளை விட்டு
விட்டு ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். முதலில் இந்த
முக்கிய விசயத்தை புத்தியில் உட்கார வையுங்கள். அந்த தந்தை தான்
தூய்மை, சுகம், சாந்திக்கான ஆஸ்தி கொடுக்கக் கூடியவர். பாபா
தான் நடத்தைகளை மாற்றக் கூடியவர். ஆக மிக அவசியமான இந்த முதல்
பாடத்தை நல்ல முறையில் பக்காவாக ஆக்குவதில்லை என்ற எண்ணம்
பாபாவிற்கு வருகின்றது. எந்த அளவிற்கு இதனை புரிய வைக்
கின்றீர்களோ அந்த அளவிற்கு புத்தியில் நினைவு இருக்கும்.
தந்தையின் அறிமுகம் கொடுப்பதில் 5 நிமிடங்கள் ஆனாலும் சரி,
கடந்து விடக் கூடாது. மிகவும் ருசியுடன் (ஆர்வத்துடன்)
தந்தையின் அறிமுகத்தைக் கேட்பார்கள். தந்தையின் இந்த சித்திரம்
முக்கியமானதாகும். முழு வரிசையும் இந்த சித்திரத்தின் முன்பு
தான் இருக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும்
கொடுக்க வேண்டும். பிறகு இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகின்றது
என்பது படைப்புகளின் ஞானமாகும். மசாலா போட்டு கிண்டி கிண்டி
ஒரேயடியாக நேர்த்தியானதாக ஆக்குகின்றோம் அல்லவா! நீங்கள்
ஈஸ்வரிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள். ஆகவே ஒவ்வொரு விசயத்தையும்
மிகவும் நல்ல முறையில் புத்தியில் உட்கார வைக்க வேண்டும்.
ஏனெனில் தந்தையை அறிந்து கொள்ளாத காரணத்தினால் அனைவரும் செல்வ
மற்றவர்களாகி விட்டனர். பாபா, சுப்ரீம் தந்தையாக இருக்கின்றார்,
சுப்ரீம் ஆசிரியராக இருக்கின்றார், சுப்ரீம் குருவாக
இருக்கின்றார் என்ற அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். மூன்றையும்
கூறுவதன் மூலம் சர்வ வியாபி என்ற விசயம் புத்தியிலிருந்து
நீங்கி விடும். இதனை முதலில் புத்தியில் அமரச் செய்யுங்கள்.
தந்தையை நினைவு செய்யும் பொழுது தான் நீங்கள் பதீதத்திலிருந்து
பாவனமாக (தூய்மையற்ற நிலையி-ருந்து தூய்மையாக) முடியும்.
தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். சதோ பிரதானமாக
வேண்டும். நீங்கள் அவர்களுக்கு தந்தையின் நினைவை
ஏற்படுத்துவீர்கள். அதில் குழந்தைகளாகிய உங்களுக்கும் நன்மை
இருக்கின்றது. நீங்களும் மன்மனாபவ ஆக இருப்பீர்கள்.
நீங்கள் தூதுவர்கள் எனில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க
வேண்டும். பாபா எனக்கு தந்தையாகவும், ஆசிரியராகவும்,
குருவாகவும் இருக்கின்றார் என்று அறிந்தவர் ஒருவரும் கிடையாது.
தந்தையின் அறிமுகத்தைக் கேட்பதன் மூலம் அவர்கள் மிகவும்
மகிழ்ச்சியடைவர். பகவானின் மகாவாக்கியம் - என் ஒருவனை நினைவு
செய்தால் பாவங்கள் அழிந்து விடும். இதனையும் நீங்கள்
அறிந்திருக்கின்றீர்கள். கீதையின் கூடவே மகாபாரத யுத்தத்தையும்
காண்பித்திருக்கின்றனர். இப்பொழுது வேறு எந்த யுத்தத்திற்கான
விசயமும் கிடையாது. தந்தையை நினைவு செய்வதில் தான் உங்களது
யுத்தம் இருக்கின்றது. படிப்பு தனிப்பட்டதாகும். மற்றபடி
நினைவில் தான் யுத்தம் இருக்கின்றது. ஏனெனில் அனைவரும்
தேகாபிமானத்தில் இருக் கின்றனர். நீங்கள் இப்பொழுது ஆத்ம
அபிமானிகளாக ஆகின்றீர்கள். தந்தையை நினைவு செய்யக் கூடியவர்கள்.
அவர் தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கின்றார் என்பதை முதலில்
பக்காவாக ஆக்குங்கள். இப்பொழுது நாம் அவர்கள் கூறுவதைக் கேட்பதா?
அல்லது நீங்கள் கூறுவதையா? குழந்தைகளே! இப்பொழுது நீங்கள்
சிரேஷ்டமாவதற்காக முழுமையிலும் முழுமையாக ஸ்ரீமத்படி நடக்க
வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். நாம் இந்த சேவையை
செய்கின்றோம். ஈஸ்வரிய வழிப்படி நடந்தால் உங்களது விகர்மங்கள்
விநாசம் ஆகும். தந்தையின் ஸ்ரீமத் என்னவெனில் என் ஒருவனை
மட்டுமே நினைவு செய்யுங்கள். சிருஷ்டிச் சக்கரத்தைப் பற்றி
எதைப் புரிய வைக்கின்றோமோ அதுவும் அவரது வழி தான். நீங்களும்
தூய்மையாக ஆகி, அவரை நினைவு செய்தால் நான் உங்களை கூடவே
அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். பாபா எல்லையற்ற
ஆன்மீக வழிகாட்டியாகவும் இருக்கின்றார். ஹே, பதீத பாவனரே!
எங்களை பாவனமாக ஆக்கி, இந்த பதீத உலகிலிருந்து அழைத்துச்
செல்லுங்கள் என்று அவரை அழைக் கின்றனர். அவர்கள் உலகீய
வழிகாட்டிகள், இவர் ஆன்மீக வழிகாட்டியாக இருக்கின்றார். சிவபாபா
நமக்கு கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கும் தந்தை
கூறுகின்றார் - நடந்தாலும், சுற்றினாலும், எழுந்தாலும் தந்தையை
நினைவு செய்து கொண்டே இருங்கள். இதில் தன்னை களைப்படையச் செய்ய
வேண்டுமென்ற அவசியமில்லை. சில நேரங்களில் குழந்தைகள்
அதிகாலையில் வந்து அமர்கின்ற பொழுது கண்டிப்பாக களைப்படைந்து
விடுவதை பாபா பார்க்கின்றார். இது எளிய மார்க்கமாகும். ஹடமாக
அமர்ந்து விடக் கூடாது. சுற்றுங்கள், காரியங்கள் செய்யுங்கள்,
மிகவும் ருசியுடன் தந்தையை நினைவு செய்யுங்கள். உள்ளுக்குள்
பாபா, பாபா என்ற மகிழ்ச்சி பொங்கி எழ வேண்டும். நிரந்தரமாக
பாபாவை நினைவு செய்பவர்களுக்கு பொங்கி எழும். புத்தி வேறு சில
விசயங்களை நினைக்கின்றதெனில், அவற்றை நீங்கி விட வேண்டும்.
தந்தையின் மீது மிகுந்த அன்பு இருக்க வேண்டும். அவர்கள்
அதீந்திரிய சுகத்தை அடைந்து கொண்டே இருப்பர். எப்பொழுது நீங்கள்
தந்தையின் நினைவில் மூழ்கி விடு கின்றீர்களோ அப்பொழுது தான் தமோ
பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். பிறகு
உங்களது குஷிக்கு எல்லையே இருக்காது. இவை அனைத்து விசயங்களின்
வர்ணனை இங்கு தான் ஏற்படுகின்றது. அதனால் தான் அதீந்திரிய
சுகத்தைப் பற்றி கோப கோபியர்களிடம் அதாவது யாருக்கு பகவான்
கற்பிக்கின்றாரோ அவர்களிடம் கேளுங்கள் என்று பாடப்பட்டிருக்
கின்றது.
பகவானின் மகாவாக்கியம் - என்னை நினைவு செய்யுங்கள். பாபாவின்
மகிமையைத் தான் கூற வேண்டும். சத்கதிக்கான ஆஸ்தி ஒரு
பாபாவிடமிருந்து தான் கிடைக்கின்றது. அனைவருக்கும் கண்டிப்பாக
சத்கதி கிடைக்கின்றது. முதலில் அனைவரும் சாந்திதாமத்திற்குச்
செல்வீர்கள். பாபா நமக்கு சத்கதி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்
என்பது முதலில் புத்தியில் இருக்க வேண்டும். சாந்திதாமம்,
சுகதாமம் என்று எதைக் கூறுகின்றோம் என்பதையும்
புரியவைத்திருக்கின்றார். சாந்திதாமத்தில் அனைத்து ஆத்மாக்களும்
இருக்கின்றன. அது இனிமையான, அமைதியான வீடாகும். அமைதியின்
ஸ்தம்பமாகும். அதனை இந்த கண்களினால் யாரும் பார்க்க முடியாது.
புரிந்து கொள்ள முடியும். ஆத்மாவையே பார்க்க முடியாது எனில்,
பிறகு தந்தையை எப்படிப் பார்க்க முடியும்? இது புரிந்து கொள்ள
வேண்டிய விசயமாகும். இந்த கண்களினால் பார்க்க முடியாது.
பகவானின் மகாவாக்கியம் - என்னை நினைவு செய்தால் பாவங்கள்
அழிந்து விடும். இவ்வாறு கூறியது யார்? முழுமையாக புரிந்து
கொள்ளவில்லையெனில் கிருஷ்ணர் என்று கூறி விடுகின்றனர்.
கிருஷ்ணரை அதிகமாக நினைவு செய்கின்றனர். நாளுக்கு நாள் கலப்படம்
ஆகிக் கொண்டே செல்கின்றது. பக்தியிலும் முதலில் ஒரு சிவனை
மட்டுமே பக்தி செய்தனர். அது கலப்படம் இல்லாத பக்தியாகும்,
பிறகு லெட்சுமி நாராயணனின் பக்தி ...... உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் பகவான். விஷ்ணு ஆவதற்கான ஆஸ்தியை அவர் தான்
கொடுக்கின்றார். நீங்கள் சிவ வம்சத்தினர்களாக ஆகி, பிறகு விஷ்ணு
புரிக்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். முதல் பாடத்தை நன்றாக
படிக்கின்ற பொழுது தான் மாலை உருவாகின்றது. தந்தையை நினைவு
செய்வது என்பது சித்தி வீட்டிற்கு போவது போன்று கிடையாது. மனம்,
புத்தியை நாலாபுறங்களிலிருந்தும் நீக்கி ஒரே இடத்தில் செலுத்த
வேண்டும். இந்த கண்களினால் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ அவை
களிலிருந்து புத்தியை நீக்கி விடுங்கள்.
என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று பாபா
கூறுகின்றார். இதில் குழப்பமடையக் கூடாது. பாபா இந்த ரதத்தில்
அமர்ந்திருக்கின்றார், அவர் நிராகாரமானவர் என்று அவரது மகிமை
செய்கின்றோம். நீங்கள் மன்மனாபவ ஆக இருங்கள் என்று இவர் மூலமாக
அடிக்கடி நினைவு படுத்துகின்றார். அதாவது நீங்கள் அனைவருக்கும்
எச்சரிக்கின்றீர்கள் (கவனம் கொடுக்கின்றீர்கள்). உணவு சமைக்கக்
கூடியவர்களுக்கும் நீங்கள் கூறுகின்றீர்கள் - சிவபாபாவை நினைவு
செய்து உணவு சமைத்தால் சாப்பிடுபவர்களின் புத்தி தூய்மையாகி
விடும். ஒருவருக்கொருவர் நினைவை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நேரத்தில் நினைவு செய்கின்றனர். சிலர்
அரை மணி நேரம் அமர்கின்றனர், சிலர் 10 நிமிடம் அமர்கின்றனர்.
நல்லது, 5 நிமிடமாவது அன்பாக தந்தையை நினைவு செய்தாலும்
ராஜ்ஜியத்திற்கு வந்து விடுவீர்கள். இராஜா-ராணி அனைவருக்கும்
அன்பு செலுத்துவர். நீங்களும் அன்புக் கடலாக ஆகின்றீர்கள்.
அதனால் தான் அனைவரின் மீதும் அன்பு இருக்கின்றது. அன்பு மயமாக
இருக்கின்றது. தந்தை அன்புக் கடலாக இருக்கின்றார் எனில்,
குழந்தைகளும் அவ்வாறே அன்பு நிறைந்தவர்களாக இருப்பர், அப்பொழுது
தான் அங்கும் இவ்வாறு அன்புடன் இருக்க முடியும். இராஜா ராணியின்
மீதும் மிகுந்த அன்பு இருக்கும். குழந்தைகளின் மீதும் அதிக
அன்பு இருக்கும். அன்பும் எல்லையற்றதாக இருக்கும். இங்கு
அன்பின் பெயரே கிடையாது, சண்டை தான் இருக்கின்றது. அங்கு இந்த
காம விகாரத்திற்கான இம்சையும் இருக்காது. அதனால் தான்
பாரதத்தின் மகிமை அளவற்றதாக பாடப்பட்டிருக்கின்றது. பாரதத்தைப்
போன்ற பவித்திரமான தேசம் வேறு எதுவும் கிடையாது. இது
அனைத்தையும் விட மிகப் பெரிய தீர்த்த ஸ்தானமாகும். பாபா இங்கு
(பாரதத்திற்கு) வந்து அனைவருக்கும் சேவை செய்கின்றார்.
அனைவருக்கும் கற்பிக்கின்றார். படிப்பு முக்கியமான தாகும்.
பாரதத்திற்கு நீங்கள் என்ன சேவை செய்கின்றீர்கள்? என்று சிலர்
உங்களிடம் கேட்கின்றனர். பாரதம் பாவனமாக ஆக வேண்டும் என்று
நீங்கள் விரும்புகின்றீர்கள், இப்பொழுது பதீதமாக
இருக்கின்றதல்லவா! ஆக நாம் ஸ்ரீமத் மூலமாக பாரதத்தை பாவனமாக
ஆக்குகின்றோம் என்று கூறுங்கள். தந்தையை நினைவு செய்தால்
பதீதத்திலிருந்து பாவனமாக ஆகி விடுவீர்கள் என்று அனைவருக்கும்
கூறுகின்றோம். இந்த ஆன்மீக சேவையை நாம் செய்து கொண்டிருக்
கின்றோம். கிரீடதாரியாகவும், அமைதி, சுகம் நிறைந்த பாரதமாக
இருந்தது, அதனை மீண்டும் ஸ்ரீமத் மூலமாக, முந்தைய கல்பத்தைப்
போன்று, நாடகப்படி உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த
வார்த்தையை முழுமையாக நினைவு செய்யுங்கள். உலகில் அமைதி ஏற்பட
வேண்டும் என்று மனிதர்கள் விரும்புகின்றனர். அதனை நாம் செய்து
கொண்டிருக்கின்றோம். பகவானின் மகாவாக்கியம் - தந்தையாகிய என்னை
நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய நமக்கு பாபா புரிய
வைத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் பாபாவை அந்த அளவிற்கு
நினைவு செய்வதில்லை என்பதையும் தந்தை அறிந்திருக்கின்றார்.
இதில் தான் முயற்சி இருக்கின்றது. நினைவின் மூலமாகத் தான்
உங்களுக்கு கர்மாதீத் நிலை ஏற்படும். நீங்கள் சுயதரிசன
சக்கரதாரி களாக ஆக வேண்டும். இதன் பொருள் யாருடைய புத்தியிலும்
கிடையாது. சாஸ்திரங்களில் அதிக விசயங்களை எழுதி வைத்து விட்டனர்.
இப்பொழுது தந்தை கூறுகின்றார் - எதையெல்லாம் படித்தீர்களோ
அவைகளை மறந்து விடுங்கள், தன்னை ஆத்மா என்று உணருங்கள். அது
மட்டுமே கூடவே செல்லும், வேறு எதுவும் கூட செல்லாது. இது
பாபாவின் படிப்பாகும், இதுவும் கூடவே வரும், அதற்காக முயற்சி
செய்து கொண்டிருக்கின்றோம்.
சிறு சிறு குழந்தைகளையும் குறைவாக நினைத்து விடாதீர்கள்.
எந்த அளவிற்கு சிறியவர்களாக உள்ளனரோ அந்த அளவிற்கு பெயரை
அதிகமாக வெளிப்படுத்த முடியும். சிறு சிறு குழந்தைகள் அமர்ந்து
பெரிய பெரிய வயதானவர்களுக்குப் புரிய வைக்கின்ற பொழுது அதிசயம்
செய்து காண்பிப்பர். அவர்களையும் தனக்குச் சமமாக ஆக்க வேண்டும்.
யாராவது கேள்வி கேட்டால் பதில் கூறும் அளவிற்கு தயார் படுத்த
வேண்டும். பிறகு எங்கெல்லாம் சென்டர் அல்லது மியூசியம்
இருக்கின்றதோ அங்கு அனுப்பி விடுங்கள். இப்படிப்பட்ட குரூப்
தயார் செய்யுங்கள். இது தான் நேரம். இப்படிப்பட்ட சேவை
செய்யுங்கள். பெரிய வயதானவர்களுக்கு சிறிய குமாரிகள் அமர்ந்து
புரிய வைப்பது அதிசயமாகும். நீங்கள் யாருடைய குழந்தைகள்? என்று
யாராவது கேட்டால் நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்று
கூறுங்கள். அவர் நிராகாரமாக இருக்கின்றார். பிரம்மாவின் உடலில்
வந்து எங்களுக்கு கற்பிக்கின்றார். இந்த படிப்பின் மூலமாகத்
தான் நாங்கள் இந்த லெட்சுமி நாராயணனாக ஆக வேண்டும்.
சத்யுகத்தின் ஆரம்பத்தில் இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம்
இருந்தது. இவர்களை இவ்வாறு ஆக்கியது யார்? கண்டிப்பாக
அப்படிப்பட்ட நற்காரியங்கள் செய்திருப்பார்கள் அல்லவா! பாபா
வந்து கர்மம், அகர்மம், விகர்மத் தின் ரகசியங்களைக்
கூறுகின்றார். சிவபாபா நமக்கு கற்பிக்கின்றார். அவரே தந்தை,
ஆசிரியர், குருவாக இருக்கின்றார். ஆக முக்கியமாக ஒரே ஒரு
விசயத்தில் மட்டும் நிறுத்தி புரிய வைக்க வேண்டும் என்று தந்தை
கூறுகின்றார். முதன் முதலில் அல்லா, அல்லாவைப் புரிந்து
கொண்டால் பிறகு இவ்வளவு கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள்.
அல்லாவை புரிய வைக்காமல் மற்ற சித்திரங்களைப் புரிய வைத்தால்
புத்தியை கெடுத்து விடுவார்கள். முதல் விசயம் அல்லா. நாம்
ஸ்ரீமத்படி நடக்கின்றோம். அல்லாவைப் புரிந்து கொண்டோம், பிறகு
மற்ற சித்திரங்களை ஏன் பார்க்க வேண்டும் என்று நினைக்கக்
கூடியவர்களும் வெளிப்படுவர். நாம் அல்லாவைப் புரிந்து கொண்டதன்
மூலம் அனைத்தையும் புரிந்து கொண்டோம். தானம் (பிட்சை) கிடைத்தது,
சென்று விட்டனர். நீங்கள் முதல் தரமான தானம் செய்கின்றீர்கள்.
பாபாவின் அறிமுகம் கொடுப்பதன் மூலம், தந்தையை எந்த அளவிற்கு
நினைவு செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு தமோ பிரதானத்திலிருந்து
சதோ பிரதானமாக ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!