13-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! இந்த எல்லையற்ற விளையாட்டில் ஆத்ம ரூப நடிகராகிய நீங்கள் நடிக்கக் கூடியவர்கள். உங்களுடைய இருப்பிடம் இனிமையான அமைதியான வீடு. இப்போது அங்கே போக வேண்டும்.

கேள்வி:
நாடகம் என்ற விளையாட்டை யார் யதார்த்தமாக புரிந்திருக்கிறார்களோ அவர்களின் வாயிலிருந்து என்ன வார்த்தை வராது?

பதில்:
இது இப்படி நடக்கவில்லையென்றால், இப்படி நடந்திருந்தால்...... இப்படி நடக்கக் கூடாது – இப்படிப்பட்ட வார்த்தைகளை நாடகத்தை அறிந்தவர்கள் கூற மாட்டார்கள். இந்த நாடகம் என்ற விளையாட்டு பேன் போன்று நகர்ந்துக் கொண்டே இருக்கிறது என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள், எது நடக்கிறதோ அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஓம் சாந்தி.
பாபா குழந்தைகளுக்கு தனது அறிமுகத்தைக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு அவர்களுடைய அறிமுகம் கிடைத்து விடுகிறது. அனைத்து குழந்தைகளும் நீண்ட காலம் தேக உணர்வில் இருக்கிறார்கள். ஆத்ம உணர்வு அடைந்தால் பாபாவின் உண்மையான அறிமுகம் கிடைக்கும். ஆனால் நாடகத்தில் அவ்வாறு இல்லை. பகவான் இறை தந்தை, படைப்பவர் எனக் கூறுகிறார்கள். ஆனால் அறியவில்லை. சிவலிங்கத் தின் சித்திரமும் இருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரியதாக அவர் இல்லை. உண்மையாக யதார்த்தமாக தெரிந்து கொள்ளாத காரணத் தால் பாபாவை மறந்து விட்டார்கள். தந்தை படைக்கக் கூடியவர் நிச்சயமாக புது உலகத்தைப் படைப்பார் என்றால் நிச்சயமாக குழந்தைகாளாகிய நமக்கு புது உலகத்தின் இராஜ்யத்தின் சொத்து கிடைக்க வேண்டும். சொர்க்கத்தின் பெயர் கூட பாரதத்தில் பிரசித்தமாக இருக்கிறது. ஆனால் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. யாராவது இறந்துவிட்டால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டனர் என கூறுகின்றனர். இப்போது அவ்வாறு நடக்கிறதா? இப்போது நாம் அனைவரும் தாழ்ந்த புத்தி உடையவராக இருந்தோம் என புரிந்து கொள்கிறீர்கள். வரிசைக்கிரமம் எனக் கூறு கிறார்கள் அல்லவா? பல பிறவிகள் எடுத்து கடைசி உடலில் இருக்கும் இவருக்குள் நான் வருகிறேன் என முக்கியமாகப் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது நாம் அவருடைய குழந்தைகள் பிராமணர்கள் ஆகி விட்டோம் எனக் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். பாபா எவ்வளவு காலமாகப் புரிய வைத்துக் கொண்டு இருக்கிறார். இல்லையென்றால் பாபாவைப் புரிந்து கொள்ள ஒரு நொடி போதும். என்னை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழியும் என பாபா கூறுகின்றார். நிச்சயம் ஏற்பட்டு விட்டால் எந்த விஷயத்திலும் கேள்வி எழாது. சாந்தி தாமத்தில் இருந்த பொழுது தூய்மையாக இருந்தீர்கள் என பாபா புரிய வைத்திருக்கிறார். இந்த விஷயங்களைக் கூட நீங்கள் தான் பாபாவிடம் கேட்கிறீர்கள். வேறு யாரும் கேட்க முடியாது. ஆத்மாக்களாகிய நாம் எங்கே வசிக்கக்கூடியவர்கள் என நீங்கள் அறிகிறீர்கள். நாடகத்தில் நடிக்கக் கூடியவர்கள் நாங்கள் இந்த இடத்தில் வசிக்கக்கூடியவர்கள் எனக் கூறுவார்கள். ஆடையை மாற்றிக் கொண்டு மேடையில் வருவார்கள். இப்பொழுது நாம் இங்கே வசிக்கக்கூடியவர்கள் இல்லை எனப் புரிந்து கொள்கிறீர்கள். இது ஒரு நாடக சாலையாகும். நாம் மூலவதனத்தில் வசிக்கக்கூடியவர்கள் என்பது இப்போது புத்தியில் புரிகிறது. அதற்கு இனிமையான அமைதியான இல்லம் என்று பெயர். இதைத்தான் அனை வரும் விரும்புகிறார்கள். ஏனென்றால் ஆத்மா துக்கத் தில் இருக்கிறது அல்லவா? எனவே நாம் எப்படி வீடு திரும்புவது என கேட்கிறார்கள். வீட்டைப் பற்றித் தெரியாததால் அலைகிறார்கள். இப்பொழுது நீங்கள் அலை வதிலிருந்து விடுபடுகிறீர்கள். இப்பொழுது வீட்டிற்கு உண்மையில் செல்ல வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்ளுக்கு தெரிந்து விட்டது. நான் ஆத்மா எவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கின்றேன். இதுவும் அதிசயமே! இதற்கு இயற்கை என்று பெயர். இவ்வளவு சிறிய புள்ளியில் எவ்வளவு பாகம் நிறைந்திருக்கிறது. பரம்பிதா பரமாத்மா எவ்வாறு நடிக்கிறார் என்பதனை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். எல்லோ ரையும் விட முக்கியமான நடிகர் அவரே. செய்விக்கக்கூடியவர் அல்லவா? ஆத்மாக்களாகிய நாம் சாந்திதாமத்தில் இருந்து வருகின்றோம் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிகிறது. ஆத்மாக்கள் எதுவும் புதியதாக வந்து சரீரத்தில் நுழைவது கிடையாது. இல்லை, ஆத்மாக்கள் அனைத்தும் இனிமையான வீட்டில் வசிக்கின்றது. அங்கிருந்து நடிப்பதற்காக வருகின்றது. அனைவரும் நடிக்க வேண்டும். இது விளையாட்டு ஆகும். இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவை என்ன? இவை அனைத்தும் விளக்குகளாகும். இதன் காரணமாக இரவு பகல் என்ற விளையாட்டு நடக்கிறது. பலர் சூரிய தேவதாய நமஹ, சந்திர தேவதாய நமஹ..... என்று கூறுகிறார்கள். உண்மையில் இவை எதுவும் தேவதைகள் கிடையாது. இந்த விளையாட்டைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. சூரியன் சந்திரனைக் கூட தேவதைகள் என்கிறார்கள். உண்மையில் இந்த உலக நாடகத்திற்கு இவை அனைத்தும் விளக்குகளாகும். நாம் இனிமையான அமைதியான வீட்டில் வசிக்கக்கூடியவர்கள் ஆவர். இங்கே நாம் நடித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த சக்கரம் பேன் போன்று நகர்ந்து கொண்டு இருக்கிறது. என்னென்ன நடக்க வேண்டுமோ அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி நடக்கவில்லை என்றால் இப்படி நடந்திருக்கும் என்றெல்லாம் கூறக்கூடாது. இது நாடகம் அல்லவா? எடுத்துக்காட்டிற்கு உங்களுடைய தாய் (மம்மா) இருந்தார், போய் விடுவோம் என்று எண்ணத்தில் கூட இல்லை. ஆம், சரீரத்தை விட்டு விட்டார். இது நாடகம். இப்போது தன்னுடைய புதிய பாகத்தை நடித்துக் கொண்டு இருக்கிறார். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இங்கே அனைத்து குழந்தைகளின் புத்தியிலும் நாம் நடிகர்கள், இது வெற்றி தோல்வியின் விளையாட்டு என்பது புத்தியில் இருக்கிறது. அந்த வெற்றி தோல்வியின் விளையாட்டு மாயாவின் ஆதாரத்தில் இருக்கிறது. மாயாவிடம் தோல்வி அடைந்தால் தோல்வி, மாயாவிடம் வெற்றி அடைந்தால் வெற்றி. இதை அனைவரும் பாடு கிறார்கள் ஆனால் புத்தியில் சிறிது கூட ஞானம் இல்லை. மாயா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும், இது இராவணன் ஆகும். இதற்கு தான் மாயை என்று கூறப்படுகிறது. பணத்திற்கு செல்வம் என்று பொருள். பணத்தை மாயை என்று கூற முடியாது. இவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது என மனிதர்கள் நினைக்கிறார்கள். எனவே மாயாவின் போதை எனக் கூறிவிடுகிறார்கள். ஆனால் மாயாவின் போதை என்றால் என்ன! நாம் மாயாவை வெற்றி அடைய முயற்சி செய்கிறோம். இப்பொழுது பகவான் வாக்கு யாருக்கு முன்பாக? ஆத்மாக்களுக்கு முன்பாக. ஆத்மாக்களுக்கு முன்பாக பேச நிச்சயமாக பகவான் சிவனே வேண்டும். கிருஷ்ணரோ தேகத்தை உடையவர் ஆவார். அவர் ஆத்மாக்களுக்கு முன்பாக எப்படிப் பேசுவார்?. உங்களுக்கு தேகத்தை உடைய எவரும் ஞானத்தைக் கொடுக்க முடியாது. பாபாவிற்கு தேகம் கிடையாது. மற்ற அனைவருக்கும் தேகம் இருக்கிறது. அவர்களுக்கு பூஜையும் செய்கிறார்கள். அவர்களை நினைப்பது எளிதாக இருக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கும் தேவதை என்பார்கள். சிவனை பகவான் என்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், அவருக்கு தேகம் இல்லை. மூல வதனத்தில் ஆத்மாக்கள் இருந்தபோது உங்களுக்கு தேகம் இருந்ததா? இல்லை. நீங்கள் ஆத்மாக்கள் மட்டுமே இருந்தீர்கள் என புரிந்து கொள்கிறீர்கள். இந்த பாபாவும் ஆத்மாவாக இருக்கிறார். அவர் மட்டுமே மேலானவர், இவருடைய நடிப்பும் பாடப்பட்டுள்ளது. நடித்து விட்டு சென்றிருக்கிறார். அப்போது தான் பூஜை நடக்கிறது. ஆனால், ஒரு மனிதருக்கு கூட 5000 வருடத் திற்கு முன்பு கூட பரம்பிதா பரமாத்மா படைக்கக்கூடியவர் வந்தார், அவரே சொர்க்கத்தின் தந்தை என்பது தெரியவில்லை. ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும், கல்பத்தின் சங்கமத்தில் அவர் வருகின்றார். ஆனால் கல்பத்தின் ஆயுள் மிக நீண்டதாகக் கூறியமையால் அனைத்தையும் மறந்து விட்டார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா வந்து புரிய வைக்கிறார். பாபா நாங்கள் கல்ப கல்பமாக சந்திக் கிறோம், தங்களிடமிருந்து சொத்தும் அடைகிறோம். பிறகு எப்படி இழக்கிறோம் என்பதும் புத்தியில் இருக்கிறது என நீங்களே கூறுகிறீர்கள். ஞானம் பல்வேறு விதமாக இருக்கிறது. ஆனால் ஞானக்கடல் என்று பகவானுக்குத் தான் கூறப்படுகிறது. வினாசம் நிச்சயமாக நடக்கும் என்பதைக் கூட அனைவரும் இப்பொழுது புரிந்து கொள் கிறார்கள். முன்பு கூட அழிவு ஏற்பட்டது. எப்படி நடந்தது? இது யாருக்கும் தெரியவில்லை. சாஸ்திரங்களில் வினாசத்தைப் பற்றி என்னென்ன எழுதிவிட்டார்கள்? பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே யுத்தம் எப்படி நடக்கும்?

இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். பிராமணர்களுக்கு எந்த சண்டையும் இல்லை. என்னுடைய குழந்தைகளாகிய நீங்கள் நான்வைலன்ஸ் (அகிம்சை), டபுள் அகிம்சையாளர்களாக இருக்கிறீர்கள் என பாபா கூறுகின்றார். இப்பொழுது நீங்கள் நிர்விகாரி ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தான் பாபாவிடமிருந்து ஒவ்வொரு கல்பமும் சொத்தை அடைகிறீர்கள். இதில் சிறிது கூட துன்பம் கிடையாது. ஞானம் மிகவும் எளிதாகும், 84 பிறவிகளில் சக்கரம் உங்களுடைய புத்தியில் இருக்கிறது. இப்பொழுது நாடகம் முடியப் போகின்றது. இன்னும் சிறிது காலம் தான் பாக்கி (மிச்சம்) உள்ளது. அப்போது பணக்காரர்களுக்குக் கூட உணவு தானியங் கள் கிடைக்காது, தண்ணீரும் கிடைக்காது. இதற்கு தான் துக்கத்தின் மலை, இரத்த ஆறு ஓடும் விளையாட்டு எனக்கூறப்படுகிறது! இது அனைத்தும் அழிந்து போகும். யாராவது தவறு செய்தார்கள் என்றால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஒரே ஒரு தவறு (பெரிய) மட்டும் செய்துள்ளனர். அதாவது பாபாவை மறந்து விட்டனர். நீங்கள் பாபாவிடமிருந்து இராஜ்யத்தை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். மற்ற மனிதர்கள் யாவரும் இறந்து விட்டனர் என நினைக் கிறார்கள். மஹாபாரதப் போர் சிறிது ஆரம்பித்ததுமே இறந்து போவார்கள். நீங்கள் வெற்றி அடை கிறீர்கள் அல்லவா? நீங்கள் டிரான்ஸ்பர் ஆகி இந்தப் படிப்பின் சக்தி யினால் அமர லோகத்திற்குச் செல்கிறீர்கள். படிப்பை வருமானத்திற்கான மூலதனம் என்று கூறப்படுகிறது. சாஸ்திரங்களின் படிப்பு கூட இருக்கிறது. அதனால் கூட வருமானம் கிடைக்கிறது. ஆனால் அது பக்தியின் படிப்பாகும். இப்போது பாபா உங்களை இந்த இலட்சுமி நாராயணன் போன்று மாற்றுகின்றேன் என்று கூறுகின்றார். இப்போது நீங்கள் தூய்மையான புத்தி உடையவர் ஆகின்றீர்கள். நாம் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்களாக மாறுகிறோம் என அறிகிறீர்கள், பிறகே மறுபிறவி எடுத்து எடுத்து கீழே இறங்குகிறீர்கள். புதியதிலிருந்து பழையதாகிறது. நிச்சயமாக படி இறங்க வேண்டும் அல்லவா? இப்பொழுது சிருஷ்டியும் இறங்கும் கலையில் இருக்கிறது. ஏறும் கலை இருந்த போது இந்த தேவி தேவதைகளின் இராஜ்ஜியம் இருந்தது. சொர்க்கம் இருந்தது. இப்போது நரகமாக இருக்கிறது. இப்போது நீங்கள் சொர்க்கவாசி ஆவதற்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். பாபா பாபா என்று கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓ கடவுளே என அழைக்கிறார்கள். ஆனால் அவர் ஆத்மாக்களின் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை, நாம் அவருடைய குழந்தை, பிறகு ஏன் துக்கப்பட வேண்டும் என்பதை யெல்லாம் புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது நாம் துக்க மடையத்தான் வேண்டும் எனப் புரிந்து கொள்கிறீர்கள்.

இது சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டல்லவா? வெற்றியில் சுகம் இருக்கிறது, தோல்வியில் துக்கம் ஏற்படுகிறது. பாபா இராஜ்யத்தைக் கொடுத்தார். இராவணன் பறித்துக் கொண்டான். பாபா விடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டு இருக்கிறது என்பது குழந்தை களாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. தந்தை வந்திருக்கிறார், இப்பொழுது பாபாவை மட்டும் நினைவு செய்தால் பாவங்கள் விலகிப் போகும். பல பிறவிகளின் சுமை தலையில் இருக்கிறதல்லவா?. நீங்கள் நிறைய துக்கத்தை அடைவது கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியும். சிறிது சுகமும் இருக்கிறது மாவில் உப்பு போடுவது போல! அதற்கு காக்கை யின் எச்சிலுக்கு சமமான சுகம் எனக்கூறப்படுகிறது. அனைவருக்கும் சத்கதியளிக்கும் வள்ளல் ஒரு தந்தை தான் என அறிகிறீர்கள். ஜகத்திற்கே குரு கூட ஒருவர் தான். வயோதிகப் பருவத்தில் குருவை அடைகின்றனர். இப்போதோ சிறியவர்களுக்குக் கூட அதாவது ஒரு வேளை இறந்து விட்டால் சத்கதி அடையட்டும் என்பதற்காக குரு வைக்கிறார்கள். உண்மையில் யாரையும் குரு என்று சொல்ல முடியாது என பாபா கூறுகின்றார். சத்கதி அளிப்பவரே குரு. சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் தான். மற்றபடி கிறிஸ்து, புத்தர் போன்ற யாரும் குரு கிடையாது. அவர்கள் வந்ததும் அனைவருக்கும் சத்கதி கிடைக்கிறதா என்ன? கிறிஸ்து வந்தார். அவருக்கு பின்னால் அந்த மதத்தைச் சார்ந்த அனைவரும் வர ஆரம்பித்தனர். அனைவரையும் அழைத்து வருவதற்கு நிமித்தமாக இருப்பவரை எப்படி குரு என்று கூறலாம்? பதீத பாவனர் என்று ஒரு தந்தைக்குத் தான் கூறுகின்றார்கள். அவர் அனைவரையும் வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்கிறார். ஸ்தாபனையும் செய்கிறார். அனைவரையும் அழைத்துச் சென்று விட்டால் பிரளயம் நடந்து விடும். பிரளயம் நடப்பது இல்லை. அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக ஸ்ரீமத் பகவத் கீதை விளங்கு கிறது என பாடப்பட்டுள்ளது. எப்பொழுது தர்மம்...... என்றும் பாடப்பட்டுள்ளது. பாரதத்தில் தான் பாபா வருகின்றார். சொர்க்கத்தின் இராஜ்யப் பதவியைக் கொடுப்பவர் பாபா. அவரை சர்வ வியாபி என்று கூறிவிட்டார்கள். புதிய உலகத்தில் முழு உலகத்திலும் நம்முடைய இராஜ்யம் மட்டுமே இருக்கும் என்ற குஷி குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே இருக்கின்றது. அந்த இராஜ்யத்தை யாரும் பறிக்க முடியாது. இங்கேயோ ஒவ்வொரு துண்டிற்காகவும் தங்களுக்குள் எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கிறார்கள்! உங்களுக்கு ஆனந்தமாக இருக்கிறது. குஷியில் துள்ள வேண்டும். கல்ப கல்பமாக நாம் யாரிடமிருந்து சொத்தை அடைகிறோம் என்றால் எவ்வளவு குஷி யிருக்க வேண்டும்! என்னை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். பிறகு மறந்து போகிறார்கள். பாபா யோகா துண்டிக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றார்கள். யோகா என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள் என பாபா கூறுகின்றார். அது சாஸ்திரங் களின் வார்த்தையாகும். என்னை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். யோகா என்பது பக்திமார்க்கத்தின் வார்த்தையாகும். பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்ய பதவி கிடைக்கிறது. அவரை நினைக்கவில்லை என்றால் விகர்மம் எப்படி வினாசம் ஆகும்? இராஜ்யம் எப்படி கிடைக்கும்? நினைக்கவில்லை என்றால் பதவி குறைந்து போகும். தண்டனைகளும் கிடைக்கும். இது கூடத்தெரியவில்லை. அவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள். நான் கல்ப கல்பமாக என்னை நினையுங்கள் என உங்களுக்குக் கூறுகின்றேன். உயிரோடு வாழ்ந்து கொண்டே இந்த உலகிலிருந்து இறந்து விடுங்கள். பாபாவின் நினைவினால் தான் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும். மற்றும் நீங்கள் வெற்றி மாலையில் மணியாவீர்கள். எவ்வளவு எளிதாக இருக்கிறது! உயர்ந்ததிலும் உயர்ந்த சிவபாபா மற்றும் பிரம்மா இருவருமே உயர்ந்தவர்களே!. அவர் பரலோகத்தைச் சார்ந்தவர். இவர் அலௌகீக மானவர். முற்றிலும் சாதாரண டீச்சர். அந்த டீச்சர்களோ தண்டனை கொடுக்கிறார்கள். இவரோ செல்லமாக கொஞ்சிக் கொண்டு இருக்கிறார். இனிமையான குழந்தைகளே பாபாவை நினையுங்கள், சதோபிரதான மாகுங்கள் எனக் கூறுகின்றார். பதீத பாவனர் ஒரே ஒரு தந்தை தான். குருவும் அவரே. வேறு யாரும் குரு ஆக முடியாது. புத்தர் அனைத்தையும் கடந்து நிர்வாணத்தை அடைந்தார் எனக் கூறுகின்றார்கள். இது அனைத்தும் கட்டுக்கதையாகும். ஒருவர் கூட திரும்பிப் போக முடியாது. அனைவருக்கும் நாடகத்தில் நடிக்கும் பாகம் உள்ளது. எவ்வளவு பரந்த புத்தியும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும்! மேலிருந்து அனைத்து ஞானமும் புத்தியில் இருக்கிறது. பிராமணர்கள் தான் ஞானத்தை எடுக்கிறார்கள். சூத்திரர்களுக்குள்ளும் தேவதை களுக்குள்ளும் இந்த ஞானம் கிடையாது. இப்பொழுது புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். புரிந்து கொள்ளாதவர்களுக்கு மரணம் தான். பதவியும் குறைந்து போகும். பள்ளிக் கூடத்தில் படிக்க வில்லை என்றால் பதவி குறைந்து போகும். அ - அப்பா, ஆ - ஆஸ்தி. நாம் மீண்டும் நம்முடைய இராஜ்யத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம். இந்தப் பழைய உலகம் அழியப்போகின்றது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபா நமக்கு யாரும் பறிக்க முடியாத அளவிற்கு அந்த உலகின் இராஜ்ய பதவியைக் கொடுக்கிறார். இந்த குஷியில் துள்ள வேண்டும்.

2. வெற்றி மாலையில் மணியாக வேண்டும் என்றால் உயிரோடு இந்தப் பழைய உலகில் இருந்து இறக்க வேண்டும். பாபாவின் நினைவினால் விகர்மங்களை அழிக்க வேண்டும்.

வரதானம்:
தனது சக்திசாலியான ஸ்திதியின் மூலம் அனைவரின் சுப விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய மகாதானி ஆகுக.

கடைசியில் வரக் கூடிய ஆத்மாக்கள் சிறிதளவு அடைந்தாலே திருப்தி அடைவார்கள். ஏனெனில் அவர்களது பாகமே துளியளவு அடைவதாகும். ஆக அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு அவர்களது பாவனைக் கான பலன் கிடைத்து விட வேண்டும், ஒருவரும் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது. இதற்கு இப்பொழுதி-ருந்தே தனக்குள் சர்வசக்திகளை சேமியுங்கள். எப்போது நீங்கள் தனது சம்பூர்ண சக்திசாலி, மகாதானி நிலையில் நிலைத்திருப்பீர்களோ, அப்போது தனது உதவியின் மூலம், மகாதானத்தின் கடமையின் மூலம், சுபபாவனை என்ற சுவிட்ச் ஆன் செய்ததும் பார்வை யினாலேயே ப-யாகி விடுவார்கள்.

சுலோகன்:
சதா ஈஸ்வரிய நியமங்கள் படி நடந்து கொண்டே இருந்தீர்கள் எனில் மரியாதா புருஷேத்தமர்களாக ஆகி விடுவீர்கள்.

அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

சேவை களத்தில் செல்கின்ற பொழுது இந்த ஆத்மா பல காலம் உள்நோக்கு முகமுடையவர், ஆன்மிகம் என்ற குகையி-ருந்து வெளியேறி சேவைக்கு வந்திருக்கிறார் என்ற அனுபவம் ஏற்பட வேண்டும். தபஸ்வி ரூபம் தென்பட வேண்டும். எல்லையற்ற வைராக்கிய ரேகைகள் முகத்தில் தென்பட வேண்டும். எந்த அளவிற்கு அதிகமாக ஆன்மிக நிலையோ அந்த அளவிற்கு கருணை. இப்படிப்பட்ட சேவைக்கான நேரம் இது.