14-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய முகம்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நம்மை பகவான் படிக்க
வைக்கிறார் என்ற குஷி முகத்தில் பிரகாசிக்க வேண்டும்.
கேள்வி:
இப்போது குழந்தைகளாகிய உங்களின்
முக்கியமான முயற்சி என்ன?
பதில்:
நீங்கள் தண்டனையிலிருந்து
தப்பிப்பதற்கான முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக
முக்கிய மானது நினைவு யாத்திரையாகும். இதன் மூலமாக விகர்மம்
வினாசம் ஆகும். நீங்கள் அன்போடு நினைத்தால் நிறைய வருமானம்
சேமிப்பாகும். அதிகாலையில் எழுந்து நினைவில் அமர்ந்தால் பழைய
உலகம் மறந்து போகும். ஞானத்தின் விஷயங்கள் புத்தியில் வந்து
கொண்டே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் வாய் மூலமாக
எந்த குப்பைக் கூழ விஷயங்களையும் பேசக் கூடாது.
பாடல்:
உன்னை அடைந்து நான்........
ஓம் சாந்தி.
பாடல் கேட்கும்போது ஒரு சிலருக்கு அதன் பொருள் புரிகிறது.
மேலும் அந்த குஷியும் அதிகரிக்கிறது. பகவான் நமக்கு
கற்பிக்கிறார். பகவான் நமக்கு உலகத்தின் இராஜ்ய பதவியை
அளிக்கின்றார். ஆனால் அவ்வளவு மகிழ்ச்சி ஒரு சிலருக்கே
இருக்கிறது. நிலையாக அந்த நினைவு இருப்பதில்லை. நாம் பாபா
வினுடையவர்களாக இருக்கிறோம், பாபா நமக்கு கற்பிக் கிறார்.
நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த போதை
ஏற்படுவதில்லை. அந்த சத்சங் கங்களில் கதைகளைக் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு கூட மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கேயோ பாபா எவ்வளவு
நல்ல விஷயங்களைக் கூறுகின்றார். பாபா கற்பிக்கின்றார். மேலும்
உலகத்திற்கு அதிபதி ஆக்குகின்றார் என்றால், மாணவர்களுக்கு
எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். அந்த உலகியல் கல்வியைக்
கற்கக் கூடியவர்களுக்குக் கூட எவ்வளவு குஷி இருக்கிறது. இங்கே
இருப்பவர்களுக்கு அவ்வளவு குஷி இல்லை. புத்தியில் பதிவதும்
இல்லை. இப்படிப்பட்ட பாடல்களை 4-5 முறைகள் கேளுங்கள் என பாபா
புரிய வைத்திருக்கிறார். பாபாவை மறப்பதால் இந்த பழைய உலகம்
மற்றும் பழைய உறவுகள் கூட நினைவிற்கு வருகின்றது. இப்படிப்பட்ட
நேரத்தில் பாடலைக் கேட்கும் போது தந்தையின் நினைவு ஏற்படும்.
அப்பா என்று கூறுவதால் சொத்து நினைவிற்கு வரும். படிப்பினால்
சொத்து கிடைக்கிறது. நீங்கள் சிவபாபா விடமிருந்து முழு
உலகத்திற்கும் அதிபதியாவதற்காகக் கற்கிறீர்கள். வேறு என்ன
வேண்டும்? இப்படிப்பட்ட மாணவர்களுக்கு உள்ளுக்குள் எவ்வளவு குஷி
இருக்க வேண்டும். இரவும் பகலும் தூக்கம் விலகிப் போக வேண்டும்
முக்கியமாக தூக்கத்தை நீக்கி இப்படிப்பட்ட தந்தை மற்றும்
ஆசிரியரை போதையில் இருப்பது போன்று நினைக்க வேண்டும். ஆஹா !
நமக்கு பாபாவிடமிருந்து உலகத்தின் இராஜ்ய பதவி கிடைக்கின்றது.
ஆனால் மாயை நினைக்க விடுவ தில்லை. உற்றார் உறவினர்களின் நினைவு
வந்துக் கொண்டே இருக்கிறது. அவர்களின் கவலை வந்துக் கொண்டே
இருக்கிறது. பழைய அழுகிய குப்பை நிறைய பேருக்கு நினைவிற்கு
வருகிறது. நீங்கள் உலகத் திற்கே அதிபதியாகிறீர்கள் என பாபா
தெரிவிக்கிறார். அந்த போதை நிறைய பேருக்கு ஏறுவ தில்லை. பள்ளிக்
கூடத்தில் படிப்பவர்களின் முகம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே
பகவான் கற்பிக்கின்றார். அந்த மகிழ்ச்சி ஒரு சிலருக்குத்தான்
இருக்கின்றது. இல்லையென்றால் மகிழ்ச்சியி ன் அளவு அளவற்றதாக
ஏறிக் கொண்டே இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை நம்மை படிக்க
வைக்கின்றார். இதை மறந்து போகிறார்கள். இந்த நினைவிருந்தால்
குஷி இருக்கும். ஆனால் கடந்த காலத்தின் கர்ம போகம் கூட தந்தையை
நினைக்க விடுவதில்லை. முகம் குப்பையின் பக்கம் செல்கிறது. பாபா
அனைவருக்காகவும் கூறவில்லை. வரிசைக் கிரமத்தில் இருக்கிறார்கள்.
மகான் சௌபாக்கியசாலி தந்தையின் நினைவில் இருப்பார்கள். பகவான்
பாபா நம்மை கற்க வைக்கின்றார். இந்த படிப்பில் இந்த ஆசிரியர்
நம்மை வக்கீலாக்குகிறார் என இருப்பது போல இங்கே நம்மை பகவான்
பகவான் பகவதியாக்குவதற்காக நம்மை கற்க வைக்கின்றார் என்றால்
எவ்வளவு போதை இருக்க வேண்டும். கேட்கும் போது ஒரு சிலருக்கு
போதை ஏறுகிறது. மற்றவர்கள் எதையும் புரிந்துக் கொள்வதில்லை.
குருவை வைத்துக் கொள்கின்றனர். பிறகு இவர்கள் நம்மை உடன்
அழைத்துச் செல்வார்கள், பகவானை சந்திக்க வைப்பார்கள் என நினைக்
கிறார்கள். அவர்களோ தானே பகவான் என்கிறார்கள். தங்களை மட்டும்
சந்திக்க வைக்கிறார்கள். உடன் அழைத்து போவார்களா? மனிதர்கள்
பகவானிடம் செல்ல வேண்டும் அல்லது சாந்திதாமம் அழைத்து
செல்வார்கள் என்பதற்காகவே குருவை அடைகிறார்கள். இந்த தந்தை
எதிரில் எவ்வளவு புரிய வைக்கிறார். நீங்கள் மாணவர்கள் கற்றுக்
கொடுக்கக் கூடிய டீச்சரை நினையுங்கள். முற்றிலும் நினைவு
வருவதில்லை. கேட்கவே கேட்காதீர்கள். நல்ல நல்ல குழந்தைகள் கூட
நினைப்பதில்லை. சிவ பாபா நம்மை படிக்க வைக்கிறார். அவர்
ஞானக்கடல் நமக்கு சொத்து அளிக்கிறார், இந்த நினைவிருந்தால்
மகிழ்ச்சி யின் அளவு அதிகரித்துக் கொண்டேயிருக்கும். பாபா
எதிரில் புரிய வைத்தாலும் அந்த போதை ஏறுவதில்லை. புத்தி வேறு
எங்காவது போய்க் கொண்டி ருக்கிறது. என்னை நினைத்தால் உங்களுடைய
விகர்மங்கள் அழியும் என பாபா கூறுகிறார். ஒரு பாபாவைத் தவிர
வேறு யாரையும் நினைக்காதீர்கள். நான் உத்திரவாதம் அளிக்கிறேன்
- அழியக் கூடிய பொருள்களை ஏன் நினைக்க வேண்டும். இங்கே யாராவது
இறந்தால் 2-4 வருடம் வரை கூட அவர்களை நினைத்துக் கொண்டே
இருக்கிறார்கள். அவர்களின் புகழ் பாடிக் கொண்டே இருக் கிறார்கள்.
இப்போது என்னை நினையுங்கள் என நேரடியாக குழந்தைகளுக்கு பாபா
கூறுகிறார். யார் எவ்வளவு அன்போடு நினைக் கிறார்களோ அவ்வளவு
பாவங்கள் விலகிப் போகும். நிறைய வருமானம் கிடைக்கும்.
அதிகாலையில் எழுந்து தந்தையை நினையுங்கள். பக்தி கூட அதிகாலை
யில் எழுந்து செய்கிறார்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள்.
நீங்கள் பழைய உலகத்தின் குப்பைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
ஆனால் பல குழந்தைகள் மாட்டிக் கொள்கிறார்கள். கேட்கவே வேண்டாம்
! குப்பையிலிருந்து வெளியே வருவதில்லை. நாள் முழுவதும்
குப்பையைத் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஞானத்தின்
விசயங்கள் புத்தியில் வருவதில்லை. முழு நாளும் சேவைக்காக ஓடிக்
கொண்டே இருக்கும் குழந்தைகளும் சிலர் இருக்கிறார்கள். யார்
பாபாவின் சேவையை செய்கிறார்களோ அவர்களுக்கு நினைவும் வரும்.
இச்சமயம் எல்லோ ரையும் விட அதிகமாக சேவையில் மனோகர் (மனோகர்
தாதீ ஜீ) இருக்கிறார். இன்று கர்நால் என்ற ஊருக்கு சென்றார்,
இன்று வேறு எங்கோ சென்றார். சேவைக்காக ஓடிக் கொண்டே இருக்கிறார்.
யார் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்
என்ன சேவை செய்வார்கள். பாபாவிற்கு யார் மிகவும் பிடிக்கும்.
நன்கு சேவை செய்யக் கூடியவர்கள், இரவும் பகலும் சேவை பற்றிய
சிந்தனையில் இருப்பவர்கள் தான் பாபாவின் இதயத்தில் இடம்
பிடிப்பார் கள். அடிக்கடி இது போன்ற பாடல்களை நீங்கள் கேட்டுக்
கொண்டிருந்தால் நினைவிருக்கும். சிறிது போதையும் இருக்கும்.
சில நேரம் யாருக்காவது சோர்வு ஏற்பட்டால் பாடல்களைக் கேட்கும்
போது மகிழ்ச்சி வரும் என பாபா கூறுகின்றார். ஆஹா ! நாம்
உலகத்திற்கே அதிபதி ஆகின்றோம். பாபா என்னை மட்டும் நினையுங்கள்
என கூறுகிறார். இது எவ்வளவு எளிதான படிப்பு! பாபா நல்ல நல்ல
10-12 ரிகார்டை தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். இவ்வாறு
ஒவ்வாருவரிடமும் இருக்க வேண்டும். இருப்பினும் மறந்து
போகிறார்கள். சிலரோ போகப் போக படிப்பையே விட்டு விடுகிறார்கள்.
மாயை சண்டையிடுகிறது. பாபா தமோபிரதான புத்தியை
சுத்தமாக்குவதற்காக எவ்வளவு எளிய வழிமுறைகளைத் தெரிவிக்கின்றார்.
இப்போது உங்களுக்கு சரி, தவறை சிந்திக்கக் கூடிய புத்தி
கிடைத்திருக்கிறது. ஓ, பதீத பாவனா வாருங்கள் என தந்தையைத் தான்
அழைக்கிறார்கள். இப்போது தந்தை வந்திருக்கிறார் என்றால்
தூய்மையாக வேண்டும் அல்லவா? உங்கள் தலையில் பல பிறவிகளின் சுமை
இருக்கிறது. அதற்காக எவ்வளவு நினைக்கிறீர்களோ,
தூய்மையாகிறீர்களோ, மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சேவை செய்துக்
கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய கணக்கையும் வைக்க
வேண்டும். நாம் தந்தையை எவ்வளவு நேரம் நினைக் கின்றாம்.
நினைவின் சார்ட் யாரும் வைக்க முடியாது. வாணி கருத்துக்களை
எழுதுகிறார்கள். ஆனால் நினைவு மறந்து போகின்றது. நீங்கள்
நினைவிலிருந்து சொற்பொழிவாற்றினால் நிறைய பலம் கிடைக்கும் என
பாபா கூறுகிறார். இல்லையென்றால், நானே சென்று நிறைய பேருக்கு
உதவி செய்கிறேன் என பாபா கூறுகிறார். சிலருக்குள் பிரவேசம் ஆகி,
நானே சேவை செய்கிறேன். சேவை செய்ய வேண்டும் அல்லவா? யாருடைய
பாக்கியத்தைத் ஏற்படுத்த வேண்டும் என பார்க்கிறேன். புரிய
வைப்பவர்களுக்குள் இவ்வளவு புத்தி இல்லையென்றால் நானே பிரவேசம்
ஆகி சேவை செய்து விடுகிறேன். பிறகு ஒரு சிலர் பாபா தான் இந்த
சேவையை செய்தார் எனவும் எழுதுகிறார்கள். எங்களுக்குள் இவ்வளவு
சக்தி இல்லை. பாபா தான் முரளியை நடத்தினார். நாங்கள் இவ்வளவு
நன்றாகப் புரிய வைத்தோம். ஒரு சிலருக்கு அவர்களது அகங்காரம்
வந்து விடுகிறது. நான் நன்மை செய்வதற்காக பிரவேசம் ஆகிறேன்.
பிறகு அவர்கள் பிராமணியை விட வேகமாகச் செல்கின்றனர் என பாபா
கூறுகின்றார். யாராவது முட்டாளை அனுப்பி விட்டால் இவர் களை விட
நாமே நன்றாகப் புரிய வைப்போம் என அவர்கள் நினைக்கிறார்கள்.
குணமும் இல்லை, இவர்களை விட நம்முடைய நிலையே நன்றாக
இருக்கின்றது. ஒரு சிலர் தலைமையில் இருந்தால் மிகவும் போதை
ஏற்படுகிறது. மிகவும் பகட்டோடு இருக்கிறார்கள். பெரிய மனிதர்
களைக் கூட நீ நீ என்று பேசுகிறார்கள். அவர்களை தேவி தேவி என
கூறினால் அதிலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வாறு பலர்
இருக்கிறார்கள். ஆசிரியரை விட மாணவர்கள் புத்திசாலி ஆகி
விடுகிறார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்றனர், என்றால் ஒரு பாபா
தான், அவரே ஞானக்கடல். அவர் மூலமாக நீங்கள் படித்து, பிறரைப்
படிக்க வைக்கிறீர்கள். சிலர் நன்கு தாரணை செய்கிறார்கள். சிலர்
மறந்து போகிறார்கள். மிகப் பெரிய முக்கியமான விசயம் நினைவு
யாத்திரையாகும். நம்முடைய விகர்மம் எப்படி வினாசம் ஆகும். சில
குழந்தைகளின் நடத்தை இவ்வாறு இருக்கிறது. அது இந்த பாபாவிற்குத்
தான் தெரியும் மேலும் அந்த பாபாவும் அறியட்டும்.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தண்டனைகளிலிருந்து
தப்பிப்பதற்காக முக்கியமாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கு
முக்கியம் நினைவு யாத்திரையாகும். அதன் மூலமாகத் தான் விகர்மம்
வினாசம் ஆகின்றது. ஒரு சிலர் பணத்தால் உதவி செய்கிறார்கள். நாம்
பணக்காரர் ஆகலாம் என நினைக்கிறார்கள். ஆனால் தண்டனை களிலிருந்து
தப்பிப்பதற்காக முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால்
தந்தைக்கு முன்பு தண்டனை அடைய வேண்டியிருக்கும். நீதிபதியின்
குழந்தை இது போன்ற வேலைகளை செய்தால் நீதிபதிக்கு இழுக்காக
இருக்கும் அல்லவா?. நான் யாரை பாலனை செய்கிறேனோ அவர்களுக்கு
தண்டனையும் கொடுப்பேன் என பாபாவும் கூறுகிறார். அச்சமயம் பாபா
இவ்வளவு புரிய வைத்தார், படிப்பித்தார், நாம் கவனம்
கொடுக்கவில்லையே என தலை குனிந்து ஐயோ ! ஐயோ ! என்பார்கள்.
பாபாவுடன் தர்மராஜ் கூட இருக்கிறார் அல்லவா? அவருக்கு ஜாதகமே
தெரியும். இப்போது நீங்கள் நடை முறையில் பார்க்கிறீர்கள். 10
வருடங்கள் தூய்மையாக வாழ்ந்தனர். திடீரென்று மாயை குத்து
விட்டது. வருமானம் அழிந்து விட்டது. பதீதமாகி விட்டனர். இவ்வாறு
நிறைய எடுத்துக் காட்டுகள் உள்ளன. பல பேர் விழுகின்றார்கள்.
மாயாவின் புயலில் முழு நாளும் வீழ்ச்சி அடைகின்றனர். பின்
பாபாவையும் மறக்கின்றனர். பாபாவிடமிருந்து நமக்கு எல்லையற்ற
ராஜ்ஜிய பதவி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சி இருப்ப தில்லை.
காமத்திற்கு பின்னால் மோகமும் இருக்கிறது. இதில்
பற்றற்றவர்களாக மாற வேண்டும். பதீதர்களை ஏன் நினைக்க வேண்டும்?
இவர்களுக்கும் கூட நாம் பாபாவின் அறிமுகத்தைக் கொடுத்து எழுப்ப
வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இவர்களை எப்படியாவது சிவாலயத்
திற்குத் தகுதி உடையவராக மாற்ற வேண்டும். இவ்வாறு உள்ளுக்குள்
வழிமுறைகளைக் கண்டு பிடியுங்கள். மோகத்தின் விசயம் இல்லை.
எவ்வளவு அன்பான உறவினராக இருந்தாலும் அவர்களுக்குப் புரிய
வைத்துக் கொண்டே இருங்கள். யாரிடமும் நெருங்கிய அன்பின் பற்று
இருக்கக் கூடாது. இல்லையென்றால் மாற மாட்டார்கள். இரக்க
மனமுடையவராக வேண்டும். தன் மீதும் இரக்கம் காட்டிக் கொள்ள
வேண்டும். பிறர் மீதும் இரக்கம் காட்ட வேண்டும், பாபா விற்கும்
இரக்கம் ஏற்படுகிறது. நாம் எத்தனை பேரை தனக்குச் சமமாக
மாற்றியிருக்கின்றோம் என பார்க்க வேண்டும். பாபாவிற்கு நிரூபணம்
கொடுக்க வேண்டும். நாம் எத்தனை பேருக்கு அறிமுகம்
கொடுத்திருக்கிறோம். பாபா எங்களுக்கு இவர்கள் மூலமாக நன்கு
அறிமுகம் கிடைத்தது என அவர்கள் கூட எழுதுவார்கள். பாபாவிடம்
நிரூபணம் வரும் போது தான் இவர்கள் சேவை செய்கிறார்கள் என பாபா
புரிந்து கொள்வார். பாபா இந்த பிராமணி மிகவும் புத்திசாலி,
மிகவும் நன்கு சேவை செய்கிறார், எங்களை நன்கு படிக்க வைக்கிறார்
என பாபாவிற்கு எழுது வார்கள். யோகத்தில் பிறகு குழந்தைகள்
தோல்வியும் அடைகிறார்கள். நினைப்பதற்கு புத்தி இல்லை.
சாப்பிடும் போது கூட சிவபாபாவை நினைத்துக் கொண்டே சாப்பிடுங்கள்
என பாபா புரிய வைக்கிறார். எங்காவது சுற்றிப் பார்க்கச்
சென்றாலும் சிவபாபாவை நினையுங்கள். வீண் பேச்சு பேசாதீர்.
ஏதாவது எண்ணங்கள் வந்தாலும் பாபாவை நினைத்தால் வேலையைப்
பற்றியும் எண்ணினீர்கள், பாபாவையும் நினைத்தீர்கள் என்று பொருள்.
வேலையும் செய்யுங்கள், தூங்குங்கள், கூடவே இதையும் செய்யுங்கள்
என பாபா கூறுகின்றார். குறைந்த பட்சம் 8 மணி நேரம் நினைக்க
வேண்டும். இது கடைசியில் நடக்கும். மெல்ல மெல்ல உங்களின்
சார்ட்டை அதிகரியுங்கள். 2 மணி நேரம் நினைத்தேன். பிறகு
போகப்போக சார்ட் குறைந்து கொண்டே போகிறது என சிலர்
எழுதுகிறார்கள். அதையும் மாயை மறைத்து விடுகிறது. மாயை மிகவும்
பலசாலியாக இருக்கிறது. யார் இந்த சேவையில் முழுநாளும் பிசியாக
இருக்கிறார்களோ அவர்களே நினைக்க முடியும். அடிக்கடி பாபாவின்
அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டேயிருங்கள். பாபா நினைக்க
வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். நாம் நினைக்கவில்லை
என்பது நமக்கே தெரியும். நினைவில் தான் மாயை தடைகளை
ஏற்படுத்துகிறது. படிப்பு மிகவும் எளிதாகும். பாபாவிடம் நாம்
படிக்கின்றோம். எவ்வளவு செல்வத்தை எடுக்கிறோமோ அவ்வளவு
பணக்காரராக மாறுவோம். பாபா அனைவரை யும் படிக்க வைக்கிறார்
அல்லவா? முரளி அனைவரிடமும் செல்கிறது. நீங்கள் மட்டும் அல்ல,
அனைவரும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். முரளி கிடைக்கவில்லை
என்றால் கதறு கிறார்கள். ஒரு சிலரோ கேட்பதே கிடையாது.
அப்படியும் இருக்கிறார்கள். அப்படியே நடந்து கொண்டு
இருக்கிறார்கள். முரளி கேட்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்க
வேண்டும். பாட்டு எவ்வளவு நன்றாக இருக்கிறது. பாபா நாங்கள்
உங்களிடம் சொத்தை அடைய வந்திருக்கின்றோம். பாபா இப்படி, அப்படி,
எப்படி இருந்தாலும், ஒற்றைக் கண்ணுடன் அவலமாய் இருந்தாலும்
தங்களுடையவனாக இருகிறேன் என கூறுகிறார்கள் அல்லவா? அது சரி
ஆனால், சீ சீ மோச மானவர்களிலிருந்து நல்லவர்களாக மாற வேண்டும்.
அனைத்திற்கும் ஆதாரம் யோகம் மற்றும் படிப்பு ஆகும்.
பாபா குழந்தையாக மாறிய பிறகு, நாம் பாபாவினுடையவராகி விட்டோம்.
நிச்சயம் சொர்க்கத்திற்குச் செல்வோம். ஆனால் நாம் சொர்க்கத்தில்
எவ்வாறு மாற வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். நன்கு
படியுங்கள், தெய்வீக குணங்களைக் கடைப்பிடியுங்கள். குரங்காகவே
இருந்தால் என்ன பதவி அடைவீர்கள். அங்கே கூட பிரஜைகள்,
வேலைக்காரர்கள் வேண்டும் அல்லவா? படித்தவர்களுக்கு முன்பு
படிக்காதவர்கள் சுமை தூக்குவார்கள். எவ்வளவு முயற்சி
செய்வீர்களோ அவ்வளவு நல்ல சுகம் பெறலாம். நன்கு செல்வந்தர்
ஆனால் நிறைய மரியாதை கிடைக்கும். படிப்பவர்களுக்கு நன்கு
மரியாதை கிடைக்கிறது. பாபா ஆலோசனை வழங்கிக் கொண்டேயிருக்கிறார்.
பாபாவின் நினைவில் அமைதியில் இருங்கள். ஆனால் எதிரில் இருப்பவர்
களை விட தொலைவில் இருப்பவர்கள் நிறைய நினைக்கிறார்கள் மற்றும்
நல்ல பதவியும் பெறுகிறார்கள் என பாபாவிற்குத் தெரியும்.
பக்திமார்க்கத்தில் கூட இவ்வாறு நடக்கிறது. சில பக்தர்கள் நன்கு
இருப்பார்கள். குருவை விட அதிகமாக நினைவில் இருப்பார்கள். யார்
மிகவும் நன்கு பக்தி செய்கிறார்களோ அவர்களே இங்கே வருகிறார்கள்.
அனைவரும் பக்தர்கள் அல்லவா? சந்நியாசி போன்றோர் வரமாட்டார்கள்.
அனைத்து பக்தர்களும் பக்தி செய்து செய்து வந்து விடுவார்கள்.
பாபா எவ்வளவு தெளிவுபடுத்தி புரிய வைக்கின்றார். நீங்கள் ஞானம்
பெற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள் என்றால், நிறைய பக்தி
செய்துள்ளீர்கள் என புலப்படுகிறது. நிறைய பக்தி செய்தவர்கள்
தான் நிறைய படிப்பார்கள். குறைவான பக்தி செய்தவர்கள். குறைவாகப்
படிப்பார்கள். முக்கியமான முயற்சி நினைவு செய்வதாகும்.
நினைவினால் தான் விகர்மங்கள் அழியும். மேலும் மிகவும் இனிமையாக
மாறவேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட சேவை
செய்யக்கூடிய, உண்மையான, கட்டளைக்குக் கீழ்படிந்த செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எவ்வளவு தான் அன்பான உறவினராக இருந்தாலும் அவர்கள் மீது
பற்று இருக்க கூடாது. பற்றற்றவராக வேண்டும். யுக்தியோடு புரிய
வைக்க வேண்டும். தன் மீதும் பிறர் மீதும் இரக்கம் காண்பிக்க
வேண்டும்.
2. தந்தை மற்றும் ஆசிரியரை மிகவும் அன்போடு நினைக்க வேண்டும்.
பகவான் நம்மை படிக்க வைக்கின்றார், உலகத்தின் இராஜ்ஜிய பதவியைக்
கொடுக்கின்றார் என்ற போதை இருக்க வேண்டும். இங்கங்கு எங்கு போய்
வந்தாலும் நினைவிலிருக்க வேண்டும் வீண் பேச்சு பேசக் கூடாது.
வரதானம்:
அழிவற்ற ஆன்மிக நிறத்தின் உண்மையான ஹோலி மூலம் பாப்சமான்
ஸ்திதியின் அனுபவி ஆகுக.
நீங்கள் பரமாத்மாவின் நிறத்தில் வந்து நிறமாக மாறிய ஹோலி
ஆத்மாக்கள். சங்கமயுகம் ஹோலி வாழ்க்கைக்கான யுகம். அழிவற்ற
ஆன்மிக நிறம் ஏற்பட்டும் போது சதா காலத்திற்கும் பாப்சமான்
ஆகிவிடுகிறீர்கள். ஆக உங்களுடைய ஹோலி என்பது தந்தையின் தொடர்பு
என்ற நிறத்தின் மூலம் தந்தைக்குச் சமம் ஆவதாகும். அந்த அளவிற்கு
உறுதியான நிறம் இருக்க வேண்டும் மற்றவர் களையும் சன்ம் ஆக்கி
விட வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் அழிவற்ற ஞானத்தின்
நிறம், நினைவு என்ற நிறம், அநேக சக்திகள் என்ற நிறம், குணங்கள்
என்ற நிறம், சிரேஷ்ட விருக்தி என்ற நிறம், சுப பாவனை, சுப
விருப்பம் என்ற ஆன்மிக நிறம் ஏற்படுத்த வேண்டும்.
சுலோகன்:
திருஷ்டியை அலௌகீகமாக, மனதை குளிர்ச்சியாக, புத்தியை
கருணையுடையதாக மற்றும் வாயை இனிமையானதாக ஆக்குங்கள்.
அவ்யக்த இஷாரே - சத்தியம் மற்றும் பண்பாடு என்ற நாகரீகத்தை
தாரணை செய்யுங்கள்
சத்தியத்தின் சக்தி சொரூபமாகி, போதையுடன் பேசுங்கள், போதையுடன்
பாருங்கள். நான் சர்வ சக்திவான் அரசாங்கத்தின் சேவகர்கள் என்ற
நினைவிலிருந்து யதார்த்தமற்றவர்களை யதார்த்தத் தில் கொண்டு
வாருங்கள். சத்தியத்தை வெளிப்படுத்த வேண்டுமே தவிர மறைக்கக்
கூடாது, ஆனால் பண்பாட்டுடன் வெளிப்படுத்த வேண்டும். நான்
சிவனின் சக்தி என்ற போதை இருக்க வேண்டும். தைரியமான
சக்திகளுக்கு சர்வ சக்திவானின் உதவி கிடைக்கும்.