14-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இப்போது நீங்கள்
சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், நீங்கள் பழைய உலகத்திலிருந்து
உறவை முறித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பழைய உலகம்
இப்போது முடியப்போகிறது!
கேள்வி:
சங்கமயுகத்தின் எந்தவொரு
விசேஷத்தன்மை முழு கல்பத்திலிருந்து தனிப்பட்டதாக இருக்கிறது?
பதில்:
சங்கம யுகத்தின் விசேஷத்தன்மை
என்னவென்றால் படிப்பது இங்கே, பலனை எதிர்காலத் தில்
அடைகிறீர்கள். அடுத்த பிறவியில் பலனை அடையக்கூடிய படிப்பு முழு
கல்பத்திலும் படிப்பிக்கப்படுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள்
இப்போது மரணலோகத்தில் அமரலோகத் திற்காகப் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். வேறு யாரும் அடுத்த பிறவிக்காக
படிப்பதில்லை.
பாடல்:
தூர தேசத்தில் வசிக்கக் கூடியவரே.................
ஓம் சாந்தி.
தூர தேசத்தில் வசிக்கக் கூடியவர் யார்? இதை யாருமே
தெரிந்திருக்கவில்லை. அவருக்கென்று தன்னுடைய தேசம் இல்லையா,
அவர் மாற்றானுடைய தேசத்தில் வருவதற்கு? அவர் தன்னுடைய தேசத்தில்
வருவதில்லை. இந்த இராவண இராஜ்யம் மாற்றானுடைய தேசம் அல்லவா?
சிவபாபா தன்னுடைய தேசத்தில் வருவதில்லையா? நல்லது, இராவணனுடைய
பரதேசம் (அயல்நாடு) என்ன? மற்றும் தேசம் எது? சிவபாபாவினுடைய
தேசம் எது, பரதேசம் எது? பிறகு பாபா மாற்றானுடைய தேசத்தில்
வருகிறார் என்றால், அவருடைய தேசம் எது? தன்னுடைய தேசத்தை
ஸ்தாபனை செய்ய வருகின்றார். தன்னுடைய தேசத்தில் தானாகவே
வருகின்றார். (ஒரு சிலர் விடை சொன்னார்கள்) நல்லது, இதைப்பற்றி
அனைவரும் சிந்தனை செய்ய வேண்டும். இது மிகவும் புரிந்து கொள்ள
வேண்டிய விசயமாகும். இராவணனுடைய பரதேசத்தை சொல்வது மிகவும்
சகஜமாகும். இராம இராஜ்யத்தில் ஒருபோதும் இராவணன் வருவதில்லை.
பாபா இராவணனுடைய தேசத்தில் வர வேண்டியுள்ளது ஏனென்றால் இராவண
இராஜ்யத்தை மாற்ற வேண்டியுள்ளது. இது சங்கமயுகமாகும். அவர்
சத்யுகத்திலும் வருவதில்லை, கலியுகத்திலும் வருவதில்லை.
சங்கமயுகத்தில் வருகின்றார். எனவே இது இராமருடைய தேசமாகவும்
இருக் கிறது, இராவணனுடையதாகவும் இருக்கிறது. இந்தப்பக்கம்
இராமனுடையது, அந்தப்பக்கம் இராவணனுடையதாகும். சங்கமம் அல்லவா!
இப்போது குழந்தை களாகிய நீங்கள் சங்கமயுகத்தில்
இருக்கின்றீர்கள். இந்தப்பக்கமும் இல்லை, அந்தப்பக்கமும் இல்லை.
தங்களை சங்கமயுகத்தில் இருப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு அந்தப்பக்கம் சம்மந்தம் இல்லை. புத்தியின் மூலம் பழைய
உலகத்திலிருந்து உறவை முறித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இங்கே
தான் இருக்கின்றோம். ஆனால் இந்த பழைய உலகமே அழியப்போகிறது
என்பதை புத்தியின் மூலம் தெரிந்திருக்கிறோம். இப்போது நான்
சங்கமயுகத்தில் இருக்கின்றேன் என்று ஆத்மா சொல்கிறது. பாபா
வந்திருக்கின்றார், அவரை படகோட்டி என்றும் சொல்கிறார்கள்.
இப்போது நாம் சென்று கொண்டிருக்கிறோம். எப்படி? யோகத்தின் (நினைவு)
மூலமாக. யோகத்திற்காகவும் ஞானம் இருக்கிறது. ஞானத்திற்காகவும்
ஞானம் இருக்கிறது. யோகத்தைப் பற்றி, தன்னை ஆத்மா என்று புரிந்து
கொள்ளுங்கள் பிறகு தந்தையை நினைவு செய்யுங்கள் என்று புரிய
வைக்கப்படுகிறது. இது கூட ஞானம் தான் அல்லவா! ஞானம் என்றால்
புரிதல் ஆகும். பாபா வழி சொல்ல வந்துள்ளார். தங்களை ஆத்மா என்று
புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். ஆத்மா தான் 84
பிறவிகளை எடுக்கிறது. பாபா வந்து தான் குழந்தைகளுக்குத்
விஸ்தாரமாகப் புரிய வைக்கின்றார். இப்போது இந்த இராவண இராஜ்யம்
அழிய வேண்டும். இங்கே கர்ம-பந்தனம் இருக்கிறது, அங்கே
கர்ம-சம்மந்தமாகும். பந்தனம் என்பது துக்கத்தின் பெயராகும்.
சம்மந்தம் சுகத்தின் பெயராகும். இப்போது கர்ம-பந்தனத்தைத்
துறக்க வேண்டும். நாம் இந்த சமயத்தில் பிராமண சம்மந்தத்தில்
இருக் கிறோம் பிறகு தெய்வீக சம்மந்தத்தில் செல்வோம் என்பது
புத்தியில் இருக்கிறது. இந்த ஒரு பிறவி தான் பிராமண
சம்மந்தமாகும். பிறகு 8 மற்றும் 12 பிறவிகள் தெய்வீக
சம்மந்தத்தில் இருப்போம். இந்த ஞானம் புத்தியில் இருக்கிறது.
ஆகையினால் கலியுக மோசமான கர்ம பந்தனத்தை நிந்தனை செய்வது போல்
இருக்கிறது. இந்த உலகத்தின் கர்ம பந்தனத்தில் இப்போது இருக்கக்
கூடாது. இவை அனைத்தும் அசுர கர்மபந்தனம் என்றபுத்தி
கிடைத்திருக்கிறது. நாமும் கூட ஒரு மறைமுக யாத்திரையில்
இருக்கிறோம். இந்த பாபா யாத்திரை கற்றுக் கொடுத்துள்ளார். பிறகு
இந்த கர்ம-பந்தனத்திலிருந்து விடுபட்டு நாம் கர்மாதீத் ஆகி
செல்வோம். இந்த கர்ம-பந்தனத்தை இப்போது துறக்கத் தான் வேண்டும்.
தூய்மையாக ஆகி சக்கரத்தைப் புரிந்து கொண்டு சக்கரவர்த்தி
இராஜாவாக ஆக வேண்டு என்று நாம் பாபாவை நினைவு செய்கின்றோம்.
படித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு அதனுடைய குறிக்கோள், பலனும்
வேண்டும் அல்லவா? நமக்கு கற்பிக்கக் கூடியவர் எல்லையற்ற தந்தை
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எல்லையற்ற தந்தை நமக்கு 5
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்பித்திருந்தார். இது நாடகம்
அல்லவா. யாருக்கு கல்பத்திற்கு முன்னால் படிப்பித்திருந்தாரோ
அவர்களுக்குத் தான் படிப்பிப்பார். வந்து கொண்டே இருப்பார்கள்,
வளர்ந்து கொண்டே இருக்கும். அனைவரும் சத்யுகத்தில் வர
மாட்டார்கள். மற்றவர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பிச்
செல்வார்கள். இந்த பக்கம் நரகம், அந்தப்பக்கம் சொர்க்கமாகும்.
அந்த படிப்பில் நாம் இங்கே படிக்கின்றோம், பிறகு பலனையும் இங்கே
அடைவோம் என்று புரிந்து கொள்கிறார்கள். இங்கே நாம்
சங்கமயுகத்தில் படிக்கிறோம், இதனுடைய பலன் நமக்கு புதிய
உலகத்தில் கிடைக்கும். இது புதிய விசயமாகும். உங்களுக்கு
இதனுடைய பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று உலகத்தில்
யாரும் சொல்ல மாட்டார்கள். இந்த பிறவியின் பலனை அடுத்த
பிறவிகளில் அடைவது என்பது சங்கமயுகத்தில் தான் நடக்கிறது.
பாபாவும் சங்கமயுகத்தில் தான் வருகின்றார். நீங்கள்
புருஷோத்தமர்களாக ஆவதற்குப் படிக்கின்றீர்கள். பகவான் ஞானக்கடல்
ஒரு முறை தான் வந்து புதிய உலகம் அமரபுரிக்காக கற்பிக்கின்றார்.
இது கலியுகம், மரணலோகமாகும். நாம் சத்யுகத்திற்காகப் படிக்
கின்றோம். நரகவாசியிலிருந்து சொர்க்கவாசிகளாக ஆவதற்காகப்
படிக்கின்றோம். இது மாற்றா னுடைய தேசமாகும், அது நம்முடைய
தேசமாகும். அந்த நம்முடைய தேசத்தில் பாபா வருவதற் கான அவசியம்
இல்லை. அந்த தேசம் குழந்தைகளுக்காகவே ஆகும், அங்கே சத்யுகத்தில்
இராவணன் வருவது இல்லை, இராவணன் மறைந்து விடுகின்றான். பிறகு
துவாபர யுகத்தில் வருவான். எனவே பாபாவும் மறைந்து விடுகின்றார்.
சத்யுகத்தில் யாருமே அவரைத் தெரிந்திருக்க வில்லை. எனவே ஏன்,
எப்படி நினைவு செய்வார்கள். சுகத்தினுடைய பலன் முடிவடைகிறது
என்றால், பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது, இதனை மாற்றானுடைய
தேசம் என்று சொல்லப்படுகிறது.
நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம், நமக்கு வழி காட்டக் கூடிய
பாபா கிடைத்திருக்கிறார் என்பதை இப்போது நீங்கள்
புரிந்துள்ளீர்கள். மற்றபடி அனைவரும் ஏமாற்றம் அடைந்து கொண்டே
இருக் கிறார்கள். யார் மிகவும் களைப்படைந்தவர்களாக
இருக்கிறார்களோ, யார் கல்பத்திற்கு முன் இந்த வழியை அறிந்து
கொண்டிருப் பார்களோ, அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
வழிகாட்டி களாகிய நீங்கள் அனைவருக்கும் வழி சொல்கிறீர்கள், இது
ஆன்மீக யாத்திரைக்கான வழியாகும். நேராக சுகதாமத்திற்குச் சென்று
விடுவார்கள். நீங்கள் வழிகாட்டிகள் பாண்டவ சம்பிரதாயத்த
வர்களாவீர்கள். பாண்டவர்கள் இராஜ்யம் என்று சொல்ல மாட்டார்கள்.
பாண்டவர்களின் இராஜ்யமும் இல்லை, கௌரவர்களின் இராஜ்யமும் இல்லை.
இருவருக்கும் கிரீடம் இல்லை. பக்தி மார்க்கத்தில் இருவருக்கும்
கிரீடம் கொடுத்து விட்டார்கள். ஒருவேளை கொடுத்தாலும் கூட
கௌரவர்களுக்கு ஒளி கிரீடம் கொடுக்க மாட்டார்கள்.
பாண்டவர்களுக்கும் கூட ஒளி கிரீடத்தைக் கொடுக்க முடியாது.
ஏனென்றால் முயற்சி யாளர்களாக இருக்கிறார்கள். போகப்போக
தமோபிரதானமாகி விடுகிறார்கள். அப்போது யாருக்குக் கொடுக்க
முடியும்? ஆகையினால் இந்த அனைத்து அடையாளங்களையும் விஷ்ணுவிற்கு
கொடுத்திருக்கிறார்கள் ஏனென்றால் அவர் தூய்மையாக இருக்கின்றார்.
சத்யுகத்தில் அனைவரும் தூய்மையாகவும் சம்பூரண நிர்விகாரி
களாகவும் இருக்கிறார்கள். தூய்மையின் ஒளி கிரீடமாகும். இந்த
சமயத்தில் யாரும் தூய்மையாக இல்லை. நாங்கள் தூய்மையாக
இருக்கிறோம் என்று சன்னியாசிகள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால்
உலகம் தூய்மையாக இல்லை அல்லவா! இருந்தாலும் பிறவி என்னவோ விகார
உலகத்தில் தான் எடுக்கிறார்கள். இது இராவணனுடைய தூய்மையற்ற
உலகமாகும். சத்யுக புதிய உலகத்தைத் தான் தூய்மையான இராஜ்யம்
என்று சொல்லப்படுகிறது. இப்போது குழந்தை களாகிய உங்களை தந்தை,
தோட்டக்காரர் முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகின்றார். அவர்
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவராகவும் இருக்கின்றார்,
படகோட்டியாகவும் இருக்கின்றார், தோட்டக் காரராகவும்
இருக்கின்றார். தோட்டக்காரர் முட்கள் நிறைந்த காட்டில்
வந்துள்ளார், உங்களுடைய தளபதி ஒருவரே ஆவார். யாதவர்களின்
தலைமைத் தளபதி என்று சங்கரை சொல்லலாமா? சொல்லப்போனால் அவர்
ஒன்றும் வினாசத்தைத் செய்விப்பது கிடையாது. நேரம் வரும்போது
சண்டை நடக்கிறது. சங்கருடைய தூண்டு தலின் மூலம் ஏவுகணைகள்
போன்றவை உருவாகிறது என்று சொல்கிறார்கள். இந்த கதைகள் அனைத்தை
யும் அமர்ந்து உருவாக்கியுள்ளார்கள். பழைய உலகம் கண்டிப்பாக
அழிய வேண்டும். கட்டிடம் பழைய தாக ஆகிறது என்றால் விழுந்து
விடுகிறது. மனிதர்கள் இறந்து விடுகிறார்கள். இது கூட பழைய உலகம்
அழிய வேண்டும். இவையனைத்தும் புதைந்து இறந்து விடுவார்கள்,
சிலர் மூழ்கி இறப்பார் கள். சிலர் அதிர்ச்சியில் இறந்து
விடுவார்கள். அணுகுண்டுகள் போன்ற விஷவாயுக்கள் கூட அழித்து
விடும். குழந்தைகளுடைய புத்தியில் இப்போது வினாசம் ஆகத்தான்
வேண்டும் என்பது இருக்கிறது. நாம் அந்தக் கரைக்குச் சென்று
கொண்டிருக்கிறோம். கலியுகம் முடிந்து சத்யுகத்தின் ஸ்தாபனை
கண்டிப்பாக நடக்க வேண்டும். பிறகு அரைக்கல்பத்திற்கு சண்டை
நடப்பதே இல்லை.
இப்போது முயற்சி செய்ய வைக்க பாபா வந்துள்ளார், இது கடைசி
வாய்ப்பாகும். காலம் கடத்தினீர்கள் என்றால் திடீரென்று இறந்து
விடுவீர்கள். மரணம் முன்னால் நிற்கிறது. அமர்ந் திருக்கும்போதே
மனிதர்கள் திடீரென்று இறந்து விடுகிறார்கள். இறப்பதற்கு
முன்னால் நினைவு யாத்திரை செய்யுங்கள். இப்போது குழந்தை களாகிய
நீங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆகையினால் பாபா
கூறுகின்றார் - குழந்தைகளே, வீட்டை நினைவு செய்யுங்கள், இதன்
மூலம் கடைசி நேரத்தில் புத்தியில் என்ன இருக்கிறதோ அப்படி நிலை
உருவாகி விடும், வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். ஆனால் வீட்டை
மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் அழியாது. பாபாவை
நினைவு செய்தீர்கள் என்றால் பாவம் வினாசம் ஆகும். மேலும்
நீங்கள் தங்களுடைய வீட்டிற்குச் சென்று விடுவீர்கள், ஆகையினால்
பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். முழு நாளும் நான் என்ன
செய்தேன்? என்று தங்களுடைய சார்ட்டை வைத்தீர்கள் என்றால்
தெரியும். 5-6 வயதிலிருந்து தங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன
செய்தீர்கள்............. என்பது கூட நினைவிருக்கிறது. எல்லா
நேரங்களிலும் எழுத வேண்டியிருக்கிறது என்பதும் இல்லை. இடையில்
அமர்ந்து பாபாவை நினைவு செய்தேன், கடையில் வாடிக்கையாளர்கள்
யாரும் இல்லாத போது நான் நினைவில் அமர்ந்திருந்தேன், என்பது
கவனத்தில் இருக்கிறது. உள்ளுக்குள் குறிப்பு இருக்கும். ஒருவேளை
எழுத விரும்புகிறீர்கள் என்றால் பிறகு டைரி வைக்க வேண்டி
யிருக்கும். முக்கியமான விஷயமே இது தான் ஆகும். நாம் எவ்வாறு
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆவது! தூய்மையான
உலகத்திற்கு எஜமானனாக எப்படி ஆவது! தூய்மையற்ற நிலையிலிருந்து
எப்படி தூய்மையாக ஆவது! பாபா வந்து இந்த ஞானத்தைக்
கொடுக்கின்றார். பாபா தான் ஞானக்கடலாக இருக்கின்றார். பாபா
நாங்கள் உங்களுடையவர்கள் என்று இப்போது நீங்கள் கூறுகின்றீர்கள்.
எப்போதுமே தங்களுடையவர்கள் தான், மறந்து விட்டு
தேக-அபிமானிகளாக ஆகி விட்டோம். இப்போது நீங்கள் கூறியுள்ளீர்கள்
எனும்போது நாங்கள் மீண்டும் ஆத்ம-அபிமானிகளாக ஆகின்றோம்.
சத்யுகத்தில் நாங்கள் ஆத்ம-அபிமானிகளாக இருந்தோம். குஷியோடு ஒரு
சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுத்தீர்கள் எனும்போது
குழந்தை களாகிய நீங்கள் இவையனைத்தையும் தாரணை செய்து பிறகு
புரியவைப்பதற்குத் தகுதியான வர்களாக ஆக வேண்டும், அப்போது
நிறைய பேருக்கு நன்மை ஏற்படும். நாடகத்தின்படி வரிசைக் கிரமமான
முயற்சியின்படி சேவாதாரிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை
பாபா தெரிந்துள்ளார். நல்லது, யாருக்காவது மரம் (கல்ப
விருக்ஷ்ம்) போன்றவற்றை புரிய வைக்க முடியாது என்றால் யாருக்கு
வேண்டுமானாலும் நீங்கள் தங்களை ஆத்மா என்று புரிந்து கொண்டு
தந்தையை நினைவு செய்யுங்கள் என்று சொல்வது சுலபமானது தானே,. இது
முற்றிலும் சகஜ மானதாகும். இந்த பாபா தான் சொல்கின்றார், என்னை
நினைவு செய்தீர்கள் என்றால், விகர்மங்கள் வினாசம் ஆகும். இதை
பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எந்த மனிதனும் சொல்ல
முடியாது. வேறு யாரும் ஆத்மாவையோ, பரமாத்மா தந்தையையோ
தெரிந்திருக்கவில்லை. அப்படியே சொல்லி விட்டீர்கள் என்றாலும்
கூட யாருக்கும் அம்பு தைக்காது. பகவானுடைய ரூபத்தைத் தெரிந்து
கொள்ள வேண்டும். இவர்கள் அனைவரும் நாடகத்தின் நடிகர்களாவர்.
ஒவ்வொரு ஆத்மாவும் சரீரத்தோடு நடிப்பை நடிக்கிறது. ஒரு சரீரத்தை
விட்டு விட்டு மற்றொன்றை எடுத்து நடிப்பை நடிக்கிறது. அந்த
நடிகர்கள் (மேடை நாடக நடிகர்கள்) ஆடையை மாற்றி வித-விதமான
நடிப்பை நடிக்கிறார்கள். நீங்கள் சரீரத்தை மாற்றுகிறீர்கள்.
அவர்கள் ஆண் அல்லது பெண் உடையை அல்பகாலத் திற்கு அணிவார்கள்.
இங்கே ஆண் உடையை எடுத்து விட்டால் முழு ஆயுளும் ஆணாகவே
இருப்பார்கள். அது எல்லைக்குட்பட்ட நாடகம், இது எல்லை
யற்றதாகும். முதன்மையான முக்கியமான விசயம் என்று பாபா
கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். யோகம் என்ற
வார்த்தையைக் கூட பயன்பாட்டில் கொண்டு வராதீர்கள், ஏனென்றால்
அனேக விதமான யோகங்களை (யோகாசனம் போன்றவற்றை) கற்றுக்
கொள்கிறார்கள். அவை யனைத்தும் பக்திமார்க்கத்தினுடையதாகும்.
இப்போது பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள் மற்றும்
வீட்டை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் வீட்டிற்குச் சென்று
விடுவீர் கள். சிவபாபா இவருக்குள் வந்து படிப்பினை
கொடுக்கின்றார். பாபாவை நினைவு செய்து-செய்து நீங்கள்
தூய்மையாக ஆகி விடுவீர்கள் பிறகு தூய்மையான ஆத்மா பறக்கும்.
எந்தளவிற்கு நினைவு செய்திருப்பார்களோ, சேவை செய்திருப்பார்களோ
அந்தளவிற்கு அவர்கள் உயர்ந்த பதவியை அடைவார்கள். நினைவில் தான்
நிறைய தடைகள் ஏற்படுகிறது. தூய்மையாக ஆக வில்லையென்றால் பிறகு
தர்மராஜ்புரியில் தண்டனைகளும் அனுபவிக்க வேண்டிவரும்.
மரியாதையும் போகும், பதவியும் கீழானதாகி விடும். கடைசியில்
அனைத்தும் காட்சியாகத் தெரியும். ஆனால் எதுவும் செய்ய முடியாது.
உங்களுக்கு இவ்வளவு புரிய வைத்தும் நினைவு செய்யவில்லை, பாவம்
அப்படியே இருந்து விட்டது, இப்போது தண்டனை அனுபவியுங்கள் என்று
காட்சி தெரியும். அந்த சமயத்தில் படிப்பதற்கு நேரம்
இருப்பதில்லை. நான் என்ன செய்து விட்டேன் என்று
வருத்தப்படுவீர்கள். நேரத்தை ஏன் வீணடித்தேன். ஆனால் தண்டனை
அனுபவித்துத் தான் ஆக வேண்டும். ஏதாவது நடக்குமா என்ன? தேர்ச்சி
பெறாமல் போய் விட்டீர்கள். மீண்டும் படிப்பதற்கான விசயம் இல்லை.
அந்த படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும்
படிக்கிறார்கள், இந்த படிப்பே முடிந்து விடும். கடைசி நேரத்தில்
பச்சாதாபப் படாமல் இருப்பதற்காக பாபா வழி சொல்கின்றார் -
குழந்தைகளே, நல்ல விதத்தில் படித்துக் கொள்ளுங்கள்.
புறங்கூறுவதில் தங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லையெனில்
அதிகம் பச்சாதாபப்பட வேண்டி வரும். மாயை அதிகம் தலைகீழான
காரியங்களைச் செய்ய வைத்து விடுகிறது. ஒருபோதும் திருடியிருக்க
மாட்டீர்கள், அதையும் செய்ய வைத்து விடும். மாயை ஏமாற்றி
விட்டது என்று கடைசியில் நினைவிற்கு வரும். இந்த பொருளை
எடுத்துக் கொள்ளலாமா என்று முதலில் மனதில் எண்ணம் வருகிறது, இது
சரி அல்லது தவறு என்ற புத்தி இப்போது கிடைத்திருக்கிறது. இந்த
பொருளை எடுத்தேன் என்றால் தவறாகும், எடுக்கவில்லை யென்றால் சரி.
இப்போது என்ன செய்ய வேண்டும்? தூய்மையாக இருப்பது நல்லது அல்லவா?
சேர்க்கையில் (சங்கத்தில்) வந்து தளர்ந்து விடக்கூடாது. நாம்
சகோதர-சகோதரிகள் என்கின்ற பொழுது, ஏன் பெயர்-ரூபத்தில் சிக்கிக்
கொள்ள வேண்டும்? தேக- அபிமானத்தில் வரக்கூடாது. ஆனால் மாயை
மிகவும் பலசாலியாகும். மாயை தவறான செயலை செய்ய வைப்பதற்கான
எண்ணத்தை கொண்டு வருகிறது. தவறானக் காரியங்களை செய்யக் கூடாது
என்று தந்தை கூறுகிறார். சண்டை நடக்கிறது தோற்று விட்டால் (சரியான)
நல்ல புத்தியே வராது. நாம் சரியான காரியத்தை தான் செய்ய
வேண்டும். கண்ணில்லாதவர்களுக்கு ஊன்றுகோலாக ஆக வேண்டும். இது
நல்லதிலும் நல்ல காரியமாகும். சரீர நிர்வாகத்திற்காக நேரம்
இருக்கவே இருக்கிறது. இரவு உறங்கவும் வேண்டும். ஆத்மா
களைப்படைந்து விடுகிறது என்றால் பிறகு உறங்கி விடுகிறது.
சரீரமும் உறங்கி விடுகிறது. எனவே சரீர நிர்வாகத்திற்காக,
ஓய்வெடுப்பதற்கு நேரம் இருக்கிறது. மீதி நேரம் என்னுடைய
சேவையில் ஈடுபடுங்கள். நினைவினுடைய சார்ட் வையுங்கள். எழுதவும்
செய்கிறார்கள், பிறகு போகப்போக தோற்று விடுகிறார்கள். பாபாவை
நினைவு செய்வதில்லை, சேவை செய்யவில்லை என்றால் தவறான காரியம்
நடந்து கொண்டிருக்கிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) புறங்கூறுவதில் தங்களுடைய நேரத்தை வீணாக்கக் கூடாது. மாயை
எந்தவிதமான தலை கீழான காரியத்தையும் செய்ய வைத்துவிடக் கூடாது
என்பதில் கவனம் வைக்க வேண்டும். சங்கதோஷத்தில் வந்து ஒருபோதும்
தளர்ந்து விடக்கூடாது. தேக-அபிமானத்தில் வந்து யாருடைய
பெயர்-ரூபத்திலும் சிக்கிக் கொள்ளக் கூடாது.
2) வீட்டின் நினைவின் கூடவே பாபாவையும் நினைவு செய்ய வேண்டும்.
நினைவினுடைய சார்ட்டின் டைரியை உருவாக்க வேண்டும். நான் முழு
நாளிலும் என்னென்ன செய்தேன்? எவ்வளவு நேரம் பாபாவின் நினைவில்
இருந்தேன்? என்பதை குறிக்க வேண்டும்.
வரதானம்:
பணிவு என்ற கவசத்தின் மூலம் வீணானவற்றின் இராவணனை எரிக்கக்
கூடிய உண்மையான சிநேகி சகயோகி ஆகுக.
ஒருவர் எவ்வளவு தான் உங்கள் குழுவில் குறையைத் தேடுவதற்கு
முயற்சி செய்தாலும், ஒரு சிறிதும் சம்ஸ்கார-சுபாவத்தின் மோதல்
தென்படக் கூடாது. யாராவது குறை சொன்னாலும் அவமரியாதை செய்தாலும்
நீங்கள் புனிதர் (செயின்ட்) ஆகி விடுங்கள். யாராவது தவறே
செய்தாலும் நீங்கள் சரியாக இருங்கள். யாராவது மோதலை
உருவாக்கினாலும் நீங்கள் அவருக்கு சிநேகத்தின் நீரைக் கொடுங்கள்.
இது ஏன், இப்படி ஏன்? என்பது போன்ற சங்கல்பம் செய்து எரியும்
நெருப்பில் எண்ணெயை ஊற்றாதீர்கள். பணிவு என்ற கவசத்தை அணிந்து
கொண்டு இருங்கள். எங்கே பணிவு இருக்குமோ. அங்கே சிநேகமும்
சகயோகமும் அவசியம் இருக்கும்.
சுலோகன்:
எனது என்பதன் அநேக எல்லைக்குட்பட்ட பாவனைகளை ஒரு மேரா பாபா
வுக்குள் நிறைத்து விடுங்கள்.
அவ்யக்த இஷாரா - ஆன்மிக ராயல்டி மற்றும் தூய்மையின்
பர்சனாலிட்டியை தாரணை செய்யுங்கள்
ஆன்மிக ராயல்டியின் அஸ்திவாரம் சம்பூர்ண பவித்திரதா ஆகும். எனவே
தன்னைத் தான் கேளுங்கள் - ஆன்மிக ராயல்டியின் ஜொலிப்பு மற்றும்
பொலிவு, உங்கள் ரூபம் மற்றும் சரித்திரத் தின் மூலம்
ஒவ்வொருவருக்கும் அனுபவம் ஆகிறதா? ஞானத்தின் கண்ணாடியில்
தன்னைப் பாருங்கள் - எனது முகத்தில், நடத்தையில் அந்த ஆன்மிக
ராயல்டி தென்படுகிறதா, அல்லது சாதாரண நடத்தை மற்றும் முகம்
தென்படுகிறதா?