14-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையான குழந்தைகளே ! நம்முடைய பாபா தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார், என்பது நினைவிருக்கட்டும், இந்த நினைவு தான் மன்மனாபவ ஆகும்"

கேள்வி:
மாயையின் தூசி கண்களில் விழும்போது, முதலில் என்ன தவறு நடக்கிறது?

பதில்:
மாயை முதல் தவறு செய்ய வைக்கிறது, அவர்கள் படிப்பை விட்டுவிடுகிறார்கள். பகவான் படிப்பிக்கின்றார், என்பதை மறந்து விடுகிறார்கள். பாபாவின் குழந்தைகள் தான் படிப்பை விட்டு விடுகிறார்கள், இது கூட அதிசயமாக இருக்கிறது. இல்லையென்றால் இந்த ஞானம் உள்ளுக் குள்ளேயே (மனதினுள்) குஷியில் நடனம் ஆடும் அளவிற்கானதாகும், ஆனால் மாயையின் தாக்கம் ஒன்றும் குறைந்தது கிடையாது. அது படிப்பையே விட்டுவிட வைக்கிறது. படிப்பை விட்டுவிடுவது என்றால் வராமல் இருந்து விடுவதாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார். யார் குறைவாக புரிந்துள்ளார்களோ, அவர்களுக்கு புரிய வைக்கப்படுகிறது. சிலர் மிகுந்த புத்திசாலி களாக ஆகின்றனர். இந்த பாபா மிகவும் அதிசயமானவர் என்று குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கலாம், ஆனால் உள்ளுக்குள், இவர் நம்முடைய எல்லையற்ற தந்தை யாகவும் இருக்கின்றார், எல்லையற்ற டீச்சராகவும் இருக்கின்றார், என்பதைப் புரிந்துள்ளீர்கள். எல்லையற்ற படிப்பினைக் கொடுக்கின்றார். சிருஷ்டியின் முதல்-இடை- கடைசியின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். மாணவர்களின் புத்தியில் இது இருக்க வேண்டும் அல்லவா. பிறகு கண்டிப்பாக தன்னுடன் அழைத்துச் செல்வார். இது பழைய மோசமான உலகம், இதிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும், என்று பாபா தெரிந்துள்ளார். எங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? வீட்டிற்கு. கன்னிப் பெண்ணிற்கு திருமணம் நடக்கிறது என்றால் மாமனார் வீட்டைச் சேர்ந்தவர்கள் வந்து கன்னிப் பெண்ணிற்கு தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள் அல்லவா. இப்போது நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். பாபா புரிய வைக் கின்றார், குழந்தைகளுக்கு இவர் நம்முடையவர் எல்லையற்ற தந்தையாகவும் இருக்கின்றார், எல்லையற்ற படிப்பினையும் கொடுக்கின்றார், என்பது அவசியம் உள்ளுக்குள் தெரிந்திருக்கும். எவ்வளவு உயர்வான தந்தையோ, அந்தளவிற்கு படிப்பினையும் கூட மிகவும் எல்லையற்றதாக கொடுக்கின்றார். படைப்பின் முதல்-இடை-கடைசியின் இரகசியம் கூட குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. பாபா நம்மை இந்த மோசமான உலகத்திலிருந்து அழைத்துச் செல்வார், என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளனர். இதைக் கூட உள்ளுக்குள் நினைவு செய்வதின் மூலம் மன்மனாபவ என்பதாகும். நடக்கும் போதும் சுற்றும் போதும், எழும் போதும் புத்தியில் இந்த நினைவு இருக்கட்டும். அதிசயமான பொருளை நினைவு செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா. நல்ல விதத்தில் படிப்பதின் மூலம், நினைவு செய்வதின் மூலம் நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். கண்டிப்பாக இது புத்தியில் ஓட வேண்டும். முதலில் பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஆசிரியர் பிறகு கிடைக்கின்றார். நம்முடையவர் எல்லையற்ற ஆன்மீகத் தந்தை, என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளனர். சகஜமாக நினைவூட்டு வதற்காக பாபா யுக்திகள் கூறுகின்றார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அந்த நினைவின் மூலம் தான் அரைகல்பத்தின் விகர்மங்கள் வினாசம் ஆகும். தூய்மை யாகுவதற்காக நீங்கள் பிறவி-பிறவியாக பக்தி, ஜபம், தவம் போன்றவற்றை நிறைய செய்திருக்கின்றீர்கள். கோவிலுக்கு செல்கிறார்கள், பக்தி செய்கிறார்கள், நாம் பரம்பரையாக செய்து கொண்டு வருகின்றோம், என்று புரிந்து கொள்கிறார்கள். சாஸ்திரங்கள் எப்போதிலிருந்து கேட்கின்றீர்கள்? பரம்பரை பரம்பரையாக, என்று கூறுவார்கள். மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. சத்யுகத்தில் சாஸ்திரங்கள் இருப்பதே இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதிசயப்பட வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தைப் புரிய வைக்க முடியாது. இவர் தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக் கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார். இவருக்கு தாய்-தந்தை இல்லை. சிவபாபா யாருடைய குழந்தை என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த விஷயங்கள் அடிக்கடி நினைவிருக்கட்டும். இது தான் மன்மனாபவ ஆகும். டீச்சர் படிப்பிக்கின்றார், ஆனால் அவர் எங்கேயும் படித்தவர் இல்லை. இவருக்கு யாரும் படிப்பிக்கவில்லை. அவர் ஞானக்கடலாக இருக்கின்றார், மனித சிருஷ்டியின் விதைரூபமாக இருக்கின்றார், ஞானம் நிறைந்தவராக இருக்கின்றார். சைதன்யமாக இருக்கின்ற காரணத்தினால் அனைத்தையும் கூறுகின்றார். குழந்தைகளே, நான் யாருக்குள் பிரவேசம் ஆகியிருக்கின்றேனோ, இவர் மூலமாக நான் உங்களுக்கு முதலிலிருந்து இந்த சமயம் வரை அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கின்றேன், என்று கூறுகின்றார். கடைசியைப் பற்றி பின்னால் சொல்வேன். இப்போது கடைசி நேரம் வருகிறது, என்று அந்த சமயத்தில் நீங்களும் புரிந்து கொள்வீர்கள். வரிசைக்கிரமமாக கர்மாதீத் நிலையையும் அடைந்து விடுவீர்கள். நீங்கள் அறிகுறிகளைப் பார்ப்பீர்கள். பழைய உலகத்தின் வினாசம் நடக்கத்தான் வேண்டும். இதை அனேக முறை பார்த்திருக்கின்றீர்கள் மேலும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். கல்பத்திற்கு முன்னால் எப்படி படித்தீர்களோ, அப்படியே படிக்கின்றீர்கள். இராஜ்ஜியத்தை அடைந்தீர்கள் பிறகு இழந்தீர்கள், இப்போது மீண்டும் அடைந்து கொண்டிருக்கின்றீர்கள். பாபா மீண்டும் படிப்பித்துக் கொண்டி ருக்கின்றார். எவ்வளவு சகஜமாக இருக்கிறது! நாம் உண்மையில் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தோம், என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பிறகு பாபா வந்து நமக்கு அந்த ஞானத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாபா வழி சொல்கின்றார், இப்படி-இப்படி யெல்லாம் மனதினுள் ஓட வேண்டும்.

பாபா நம்முடைய தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார். டீச்சரை எப்போதாவது மறப்பீர்களா என்ன! டீச்சரின் மூலமாக படிப்பை படித்துக் கொண்டே இருக்கின்றீர் கள். சில குழந்தைகளின் மூலமாக மாயை தவறுகள் செய்ய வைக்கிறது. ஒரேயடியாக கண் களில் அப்படி தூசியைப் போட்டு விடுகிறது. படிப்பையே விட்டு விடுகிறார்கள். பகவான் படிப்பிக்கின்றார், அப்படிப்பட்ட படிப்பை விட்டு விடுகிறார்கள்! படிப்புதான் முக்கியமானதாக இருக்கிறது. அப்படி இருந்தும் யார் விட்டு விடுவது? பாபாவின் குழந்தைகள். எனவே குழந்தை களுக்கு உள்ளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! பாபா ஒவ்வொரு விஷயத்திற்கும் ஞானம் கொடுக்கின்றார். அதை ஒவ்வொரு கல்பத்திற்கும் கொடுக்கின்றார். பாபா கூறுகின்றார், குறைந்தது இந்த விதத்திலாவது என்னை நினைவு செய்யுங்கள். கல்ப-கல்பமாக நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள் மேலும் தாரணை செய்கின்றீர்கள். இவருக்கு தந்தை யாரும் இல்லை, அவரே எல்லையற்ற தந்தையாவார். அதிசயமான தந்தையாக இருக்கின்றார் அல்லவா! என்னுடைய தந்தை யாராவது இருந்தால் சொல்லுங்கள்? சிவபாபா யாருடைய குழந்தை? இந்த படிப்பும் கூட அதிசயமானது, இதை இந்த சமயத்தைத் தவிர வேறு எப்போதும் படிக்க முடியாது, அதுவும் பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே படிக்கின்றீர்கள். பாபாவை நினைவு செய்து-செய்து நாம் தூய்மையாகி விடுவோம், என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இல்லையென்றால் பிறகு தண்டனை அனுபவிக்க வேண்டிவரும். கர்ப ஜெயிலில் நிறைய தண்டனை அனுபவிக்க வேண்டி யிருக்கிறது. அங்கே கூட நீதிமன்றம் அமர்த்தப்படுகிறது. அனைத்தும் காட்சியாக தெரிகிறது. காட்சிகள் காட்டாமல் யாருக்கும் தண்டனை கொடுக்க முடியாது. இந்த தண்டனை நமக்கு ஏன் கிடைக்கிறது? என்று குழம்பி விடுவார்கள். இவர் இந்த பாவத்தை செய்தார், இந்த தவறு செய்திருக்கிறார், என்று பாபாவிற்குத் தெரியும். அனைத்தையும் காட்சியாகக் காட்டுகின்றார். அந்த சமயத்தில் இவ்வளவு அனைத்து பிறவிகளினுடைய தண்டனையும் கிடைத்துக் கொண்டிருக் கிறது, என்று உணர்வு ஏற்படுகிறது. இது அனைத்து பிறவிகளினுடைய மரியாதையும் போனது போலாகும். எனவே பாபா கூறுகின்றார், இனிமையிலும்-இனிமையான குழந்தைகள் நல்ல விதத்தில் முயற்சி செய்ய வேண்டும். 16 கலைகள் நிரம்பியவர்களாக ஆவதற்காக நினைவு எனும் உழைப்பு செய்ய வேண்டும். யாருக்கும் நான் துக்கம் கொடுக்கவில்லை தானே? என்று பார்க்க வேண்டும். நாம் சுகத்தை வழங்கும் வள்ளலின் குழந்தைகள் அல்லவா? மிகுந்த நறுமணமுடைய மலர்களாக ஆக வேண்டும். இந்தப் படிப்பு தான் உங்களோடு வர வேண்டும். படிப்பின் மூலம் மனிதர்கள் வக்கீல் போன்றவர்களாக ஆகின்றார்கள். பாபாவின் இந்த படிப்பு தனிப்பட்டது மேலும் சத்தியமானதாகும். மேலும் இது பாண்டவ அரசாங்கம், மறைமுகமானதாகும். உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் படிப்பு அதிசயமானதாகும். ஆத்மா தான் கேட்கிறது. பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார் - படிப்பை ஒருபோதும் விட்டு விடக் கூடாது. மாயை விட வைக்கிறது. பாபா கூறுகின்றார், அப்படி செய்யாதீர்கள், படிப்பை விடாதீர்கள். பாபா விடம் தகவல் வருகிறது அல்லவா! குறிப்பேட்டின் மூலம் அனைத்தும் தெரிகிறது. இவர் எவ்வளவு நாள் வரவில்லை. படிப்பை விட்டு விடுகிறார்கள் என்றால் பாபாவையும் மறந்து விடுகிறார்கள். உண்மையில் இவர் மறக்கும் பொருளல்ல. இவர் அதிசயமான தந்தையாவார். இது ஒரு விளையாட்டைப் போன்றது, என்றும் புரிய வைக்கின்றார். விளையாட்டைப் பற்றிய விஷயத்தை யாருக்கு சொன்னாலும் உடனே நினைவில் நின்று விடுகிறது. ஒரு போதும் மறந்து போவதில்லை. இவர் தன்னுடைய அனுபவத்தையும் கூறுகின்றார். சிறுவயதிலேயே வைராக்கிய முடைய சிந்தனையாளராக இருந்தார். உலகத்தில் நிறைய துக்கம் இருக்கிறது, என்று சொன்னார். இப்போது நம்மிடம் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் இருந்தால் போதும் பிறகு 50 ரூபாய் வட்டி கிடைக்கும், அவ்வளவு போதும். சுதந்திரமாக இருக்கலாம். வீடு-வாசலை பராமரிப்பது கஷ்ட மாகும். நல்லது பிறகு சௌபாக்கிய சுந்தரி என்ற சினிமா ஒன்றைப் பார்த்தார், அவ்வளவு தான் வைராக்கியத்தின் அனைத்து விஷயங்களும் உடைந்து விட்டது. திருமணம் செய்து கொள்ளலாம், இதை செய்யலாம், என்று சிந்தனை செய்தார். ஒரு அறை (அடி) தான் கொடுத்தது மாயை, சம்பாதித்த வருமானத்தை எல்லாம் காலி செய்து விட்டது. எனவே பாபா இப்போது கூறுகின்றார் - குழந்தைகளே, இந்த உலகமே நரகம் மேலும் அதில் பிறகு இந்த சினிமா இருக்கிறதே, அதுவும் நரகமாகும். இதைப் பார்ப்பதின் மூலமே அனைவருடைய உள்ளுணர்வும் கெட்டு விடுகிறது. செய்தித் தாள்களில் படிக்கிறார்கள், அதில் நல்ல-நல்ல பெண்களின் சித்திரத்தைப் பார்க்கின்றார்கள் என்றால் உள்ளுணர்வு அந்தப்பக்கம் சென்று விடுகிறது. இவர் மிக நன்றாக அழகாக இருக்கிறார், புத்தியில் வருகிறது அல்லவா! உண்மையில் இந்த சிந்தனை கூட வரக்கூடாது. பாபா கூறுகின்றார் - இந்த உலகமே முடியப்போகிறது. ஆகையினால் நீங்கள் மற்ற அனைத்தையும் மறந்து என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், இப்படிப்பட்ட படங்கள் போன்றவற்றை ஏன் பார்க்கின்றீர்கள்? இந்த அனைத்து விஷயங்களும் உள்ளுணர்வை கீழே கொண்டுவருகின்றன. நீங்கள் எதையெல்லாம் பார்க்கின்றீர் களோ, இவை அழியப்போகின்றவைகளாகும். இந்தக் கண்களின் மூலம் எதையெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவற்றை நினைவு செய்யாதீர்கள், இவற்றி லிருந்து பற்றுதலை அழித்து விடுங்கள். இந்த அனைத்து சரீரங்களும் பழையது மோசமானவை களாகும். ஆத்மா தூய்மையாகிறது ஆனால் சரீரம் மோசமானது அல்லவா! இதன் மீது என்ன கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது?. ஒரு பாபாவைத் தான் பார்க்க வேண்டும்.

பாபா கூறுகின்றார், இனிமையிலும்-இனிமையான குழந்தைகளே! குறிக்கோள் மிகவும் உயர்ந்த தாகும். உலகத்திற்கு எஜமானர்களாக ஆவதற்கு வேறு யாரும் முயற்சி கூட செய்ய முடியாது. யாருடைய புத்தியிலும் வர முடியாது. மாயையின் தாக்கம் ஒன்றும் குறைந்தது கிடையாது. அறிவியலார்களின் (விஞ்ஞானிகள்) புத்தி எவ்வளவு ஓடுகிறது. உங்களுடையது அமைதி யினுடையதாகும், நாம் முக்தி அடைய வேண்டும், என்று அனைவரும் விரும்புகிறார்கள். உங்களுடைய குறிக்கோள் ஜீவன்முக்திக் கானதாகும். இதைக் கூட பாபா புரிய வைத்திருக் கின்றார். குரு போன்றவர்கள் எல்லாம் இப்படிபட்ட ஞானம் கொடுக்க முடியாது. நீங்கள் குடும்பத்தில் இருந்து கொண்டு தூய்மையாக ஆக வேண்டும், இராஜ்யத்தை அடைய வேண்டும். பக்தியில் நிறைய நேரத்தை வீணடித்தீர்கள். நாம் எவ்வளவு தவறு செய்தோம் என்று இப்போது புரிந்து கொள்கிறீர்கள். தவறு செய்து-செய்து எதுவும் புரியாதவர்களாக, முற்றிலும் கல் புத்தியாக ஆகிவிட்டீர்கள். இது மிகவும் அதிசயமான ஞானமாக இருக்கிறது, இதன் மூலம் நாம் எதிலிருந்து என்னவாக ஆகிவிடுகிறோம், கல் புத்தியிலிருந்து தங்கபுத்தி யுடையவர்களாக ஆகி விடுகிறோம், என்று உள்ளுக்குள் தெரிய வருகிறது. எனவே குஷியின் அளவு கூட அதிகரிக்கிறது, நம்முடைய தந்தை எல்லையற்ற தந்தையாக இருக்கின்றார். அவருக்கு தந்தை யாரும் கிடையாது. அவர் டீச்சராக இருக்கின்றார், அவருக்கு யாரும் டீச்சர் கிடையாது. எங்கிருந்து கற்றார்! என்று கேட்பார்கள், அதிசயப்படுவார்கள் அல்லவா. இவர் ஏதோ குருவிடமிருந்து கற்றிருக்கின்றார், என்று மக்கள் புரிந்து கொள்கிறார்கள். அப்படியென்றால் குருவிற்கு மற்ற சிஷ்யர்களும் இருப்பார்கள் அல்லவா. ஒரு சிஷ்யர் மட்டும் இருந்தாரா என்ன? குருவிற்கு நிறைய சிஷ்யர்கள் இருக் கிறார்கள்! ஆகாங்காவிற்கு பாருங்கள் எவ்வளவு சிஷ்யர்கள் இருக்கிறார்கள். உள்ளுக்குள் குருமார்களைப் பற்றி (உயர்வாக) எவ்வளவு இருக்கிறது, அவர்களை வைரங்களோடு எடை போடு கிறார்கள். நீங்கள் அப்படிப்பட்ட சத்குருவை எதில் எடை போடுவீர்கள்? இவர் எல்லையற்ற சத்குரு ஆவார். இவருடைய எடை எவ்வளவு! ஒரு வைரம் கூட போட முடியாது.

குழந்தைகளாகிய நீங்கள் இப்படிபட்ட விஷயங்களை சிந்தனை செய்ய வேண்டும். இது ஆழமான விஷயமாகும். ஹே ஈஸ்வரா! என்று அனைவரும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர் தந்தை, டீச்சர், குருவாகவும் இருக்கின்றார் என்பதை கொஞ்சமாவது புரிந்திருக் கிறார்களா? இவர் சாதாரணமான விதத்தில் அமர்ந்து கொண்டிருக்கின்றார். இவர் கதியின் மேல் அமருவது கூட அனைவருடைய முகத்தையும் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான். குழந்தை களின் மீது அன்பு இருக்கிறது அல்லவா. இந்த உதவி செய்யக் கூடிய குழந்தைகள் இல்லாமல் ஸ்தாபனை செய்வாரா என்ன? அதிகம் உதவி செய்யக் கூடிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக அதிக அன்பு செலுத்துவார். அதிகம் சம்பாதிக்கக் கூடிய குழந்தை நல்ல குழந்தையாக இருந்தால் கண்டிப்பாக உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடையும். அந்த குழந்தையின் மீது அன்பும் ஏற்படுகிறது. குழந்தைகளைப் பார்த்து-பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். ஆத்மா மிகுந்த குஷி அடைகிறது. கல்பம்-கல்பமாக குழந்தைகளைப் பார்த்து குஷியடைகிறேன். கல்பம்-கல்பமாக குழந்தைகள் தான் உதவியாளர்களாக ஆகிறார்கள். மிகவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள். கல்ப-கல்பத்திற்கான அன்பு இணைந்து விடுகிறது. எங்கு வேண்டு மானாலும் அமர்ந்திருங்கள், புத்தியில் பாபாவின் நினைவு இருக்கட்டும். இவர் எல்லையற்ற தந்தையாக இருக்கின்றார், இவருக்கு எந்த தந்தையும் இல்லை, இவருக்கு எந்த டீச்சரும் இல்லை. அவரே அனைத்துமாக இருக்கின்றார், அவரைத் தான் அனைவரும் நினைவு செய்கிறார்கள். சத்யுகத்தில் யாரும் நினைவு செய்ய மாட்டார்கள், 21 பிறவிகளுக்கு படகு கரை கடந்து விட்டது என்றால் உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! அவ்வளவு தான், முழு நாளும் பாபாவின் சேவை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பாபாவிடமிருந்து இந்த ஆஸ்தி கிடைக்கிறது. பாபா நமக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார் மேலும் பிறகு அனைவரையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். முழு சக்கரமும் புத்தியில் இருக்கிறது. இப்படிப்பட்ட சக்கரத்தை யாரும் உருவாக்க முடியாது. யாருக்கும் அர்த்தம் தெரியவில்லை. நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள் - பாபா நம்முடைய எல்லையற்ற தந்தையாகவும் இருக்கின்றார், எல்லை யற்ற இராஜ்யமும் கொடுக்கின்றார் பிறகு தன்னுடனும் அழைத்துச் செல்வார். இப்படி-இப்படி யெல்லாம் நீங்கள் புரிய வைத்தீர்கள் என்றால் பிறகு யாரும் சர்வவியாபி, என்று சொல்ல முடியாது. அவர் தந்தையாக இருக்கின்றார், டீச்சராக இருக்கின்றார் என்றால் எப்படி சர்வ வியாபியாக இருக்க முடியும்?

எல்லையற்ற தந்தை தான் ஞானம் நிறைந்தவராவார். முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியை தெரிந்திருக்கின்றார். பாபா குழந்தைகளுக்கு புரிய வைக்கின்றார் - படிப்பை மறந்து விடாதீர்கள். இது மிகப்பெரிய படிப்பாகும். பாபா பரமபிதாவாக இருக்கின்றார், பரம டீச்சராக இருக்கின்றார், பரம சத்குருவாகவும் இருக்கின்றார். இந்த அனைத்து குருமார்களையும் அழைத்து செல்வார். இப்படி-இப்படியெல்லாம் அதிசயமான விஷயங்களை சொல்ல வேண்டும். இது எல்லை யற்ற விளையாட்டு, என்று சொல்லுங்கள். ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருடைய நடிப்பு கிடைத்திருக்கிறது. எல்லையற்ற தந்தையிடமிருந்து நாம் தான் இராஜ்ஜியத்தை அடைகிறோம். நாம் தான் எஜமானர்களாக இருந்தோம். வைகுண்டம் இருந்து சென்றிருக்கிறது, பிறகு மீண்டும் கண்டிப்பாக வரும். கிருஷ்ணர் புதிய உலகத்தின் எஜமானராக இருந்தார். இப்போது பழைய உலகமாக இருக்கிறது பிறகு கண்டிப்பாக புதிய உலக்த்தின் எஜமானராக ஆவார். படத்தில் கூட தெளிவாக இருக்கிறது. நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் - இப்போது நம்முடைய கால்கள் நரகத்தின் பக்கமும், முகம் சொர்க்கத்தின் பக்கமும் இருக்கிறது, அது தான் நினைவிருக்கிறது. இப்படி நினைவு செய்து-செய்து கடைசி நேரத்தில் புத்தியில் என்ன இருக்கிறதோ, அப்படிப்பட்ட நிலை ஆகி விடும். எவ்வளவு நல்ல-நல்ல விஷயங்களாக இருக்கிறது, இதை சிந்தனை செய்ய வேண்டும். நல்லது!

இனிமையிலும்-இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த கண்களின் மூலம் என்னவெல்லாம் தெரிகிறதோ, அவற்றிலிருந்து பற்றை நீக்க வேண்டு ஒரு பாபாவை மட்டுமே பார்க்க வேண்டும். உள்ளுணர்வை சுத்தமாக்குவதற்காக இந்த மோசமான சரீரத்தின் பக்கம் கொஞ்சம் கூட கவனம் செல்லக் கூடாது.

2. பாபா சொல்லக்கூடிய தனிப்பட்ட மற்றும் சத்தியமான ஞானத்தை நல்ல விதத்தில் படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும். படிப்பை ஒருபோதும் தவற விடக் கூடாது.

வரதானம்:
அமைதி சக்தியை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு காரியத்தில் எளிதாக வெற்றியை பலனாக அடையக் கூடிய பிரயோகி ஆத்மா ஆகுக.

இப்பொழுது நேர மாற்றத்தின் படி அமைதி சக்தி என்ற சாதனத்தை பயன்பாட்டில் கொண்டு வரும் பிரயோகி ஆத்மா ஆகுங்கள். வார்த்தைகளின் மூலம் ஆத்மாக்களுக்குள் அன்பு என்ற சகயோக பாவணையை உருவாக்குவது போன்று சுப பாவணை, அன்பான பாவணைக்கான ஸ்திதியில் நிலைத்திருந்து அவர்களுக்குள் சிரேஷ்ட பாவணைகளை உருவாக்குங்கள். தீபம் தீபத்தை ஏற்றுவது போன்று உங்களது சக்திசா-யான சுப பாவணை மற்றவர்களுக்குள் மிக உயர்ந்த சிரேஷ்ட பாவணையை உருவாக்கி விடும். இந்த சக்தியின் மூலம் ஸ்தூல காரியத்தில் மிக எளிதாக வெற்றி அடைந்து விடுவீர்கள். பிரயோகப்படுத்தி பாருங்கள், போதும்.

சுலோகன்:
அனைவருக்கும் பிரியமானவர்களாக ஆக வேண்டுமென்றால் மலர்ந்திருக்கும் ஆன்மீக ரோஜா மலராக ஆகுங்கள், வாடிய மலராக அல்ல.