14-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுக்கு
இப்பொழுது ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. எனவே
இப்பொழுது உங்கள் கண்கள் எதிலுமே மூழ்கி விடக் கூடாது.
கேள்வி:
யாருக்கு பழைய உலகத்தின் மீது
எல்லையில்லாத வைராக்கியம் இருக்குமோ அவர்களின் அடையாளம்
என்னவாக இருக்கும்?
பதில்:
அவர்கள் தங்களுடைய அனைத்தையும்
தந்தைக்கு அர்ப்பணம் செய்து விடுவார்கள். அவர் களுக்கு என்று
எதுவுமே கிடையாது. பாபா இந்த தேகம் கூட எங்களுடையது இல்லை.
இதுவோ பழைய தேகம் ஆகும். இதையும் விட வேண்டும். இவ்வாறு
அவர்களுடைய மோகம் எல்லா வற்றிலிருந்தும் அறுபட்டுக் கொண்டே
போகும். நஷ்டோமோகாவாக இருப்பார்கள். இங்கு இருக்கும் எதுவும்
பயன்படப் போவதில்லை. ஏனெனில் இவை எல்லாமே எல்லைக்குட்பட்டது
ஆகும்.
ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளுக்கு பிரம்மாண்டம் மற்றும் சிருஷ்டி
சக்கரத்தின் முதல் இடை கடையின் ஞானத்தைக் கூறிக் கொண்டு
இருக்கிறார். இதை வேறு யாருமே கூற முடியாது. ஒரே ஒரு கீதையில்
தான் இராஜ யோகத்தின் வர்ணனை உள்ளது. பகவான் வந்து நரனிலிருந்து
நாராயணராக ஆக்குகிறார். இது கீதையைத் தவிர வேறு எந்த
சாஸ்திரத்திலும் கிடையாது. இதுவும் தந்தை கூறியுள்ளார் - நான்
உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து இருந்தேன் என்று கூறுகிறார்.
இந்த ஞானம் ஒன்றும் பரம்பரையாக வருவதில்லை என்பதைப் புரிய
வைத்திருந்தார். தந்தை வந்து ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறார்.
மற்ற எல்லா தர்மங்களும் அழிந்து போகின்றன. எந்த ஒரு சாஸ்திரம்
போன்றவை கூட பரம்பரையாக வருவதில்லை. மேலும் தர்ம ஸ்தாபனை செய்ய
தர்ம ஸ்தாபகர்கள் வரும் பொழுது எல்லாமே அழிந்து போய்விடும்
வகையில் ஒன்றும் விநாசம் ஆவதில்லை. பக்தி மார்க்கத்தின்
சாஸ்திரங்கள் படித்துக் கொண்டே வருகிறார் கள். இதனுடைய (பிராமண
தர்மத்தின்) சாஸ்திரம் கீதை தான் என்றாலும் கூட அதையும் பக்தி
மார்க்கத்தில் தான் உருவாக்குகிறார்கள். ஏனெனில் சத்யுகத்திலோ
எந்த ஒரு சாஸ்திரமும் இருப்பதே இல்லை. மற்ற தர்மங்கள் இருக்கும்
பொழுது விநாசமோ ஆவதே இல்லை. புதிய உலகம் ஆகும் வகையில் பழைய
உலகம் முடிந்து போவதில்லை. அதுவே வந்து கொண்டு இருக்கும்.
இப்பொழுது இந்தப் பழைய உலகம் முடியப் போகிறது என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். நமக்கு தந்தை
படிப்பித்துக் கொண்டிருக்கிறார். பாடல் கூட ஒரு கீதையினுடையதே
ஆகும். கீதா ஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். வேதங்களின்
ஜெயந்தியோ இல்லை. பகவான் ஒருவர் ஆவார். எனவே ஒருவருக்குத் தான்
ஜெயந்தி கொண்டாட வேண்டும். மற்றவை படைப்பு ஆகும்.
அவற்றிலிருந்து எதுவும் கிடைக்க முடியாது. ஆஸ்தி தந்தையிட
மிருந்து தான் கிடைக்கிறது. சிற்றப்பா, பெரியப்பா
ஆகியோரிடமிருந்து எந்த ஒரு ஆஸ்தியும் கிடைப்பதில்லை. இப்பொழுது
இவர் உங்களது எல்லை யில்லாத தந்தை எல்லையில்லாத ஞானம் அளிப்பவர்
ஆவார். இவர் ஒன்றும் சாஸ்திரத்தைக் கூறுவது இல்லை. இவை எல்லாமே
பக்தி மார்க்கத்தினுடையவை என்று கூறுகிறார். இவை அனைத்தினுடைய
சாரத்தை நான் உங்களுக்குக் கூறுகிறேன். சாஸ்திரம் ஒன்றும்
படிப்பு அல்ல. படிப்பின் மூலமாகவோ பதவி கிடைக்கிறது. இந்த
படிப்பை தந்தை குழந்தைகளுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
பகவான் குழந்தைகளுக்காக கூறுகிறார். மீண்டும் 5 ஆயிரம்
வருடங்களுக்குப் பிறகும் இவ்வாறே நடக்கும். நாம்
தந்தையிடமிருந்து படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை,
கடையை அறிந்து விட்டுள் ளோம் என்பதைக் குழந்தைகள்
அறிந்துள்ளார்கள். இதை தந்தையைத் தவிர வேறு யாருமே புரிய வைக்க
முடியாது. இந்தக் கமலத்திருவாய் மூலமாகக் கூறுகிறார். இது
பகவான் மூலமாகக் கடனாக எடுக்கப்பட்ட வாய் ஆகும் அல்லவா? இதற்கு
கவுமுக் - பசு வாய் என்றும் கூறுகிறார்கள். பெரிய தாய் ஆவார்
அல்லவா? இவருடைய வாயிலிருந்து ஞான வாக்குகள் வெளிப்படுகின்றன
வேயன்றி ஜலம் அல்ல. பக்தி மார்க்கத்தில் பின் பசு வாயிலிருந்து
ஜலம் வருவதாகக் காண்பித்துள்ளனர். பக்தி மார்க்கத்தில்
என்னென்ன செய்கிறார்கள் என்பதை இப்பொழுது குழந்தை களாகிய
நீங்கள் புரிந்துள்ளீர்கள். எவ்வளவு தூர தூரமாக கவுமுக் (பசு
வாய்) இடங்களுக்கு தண்ணீர் குடிப்பதற்காகச் செல்கிறார்கள்.
இப்பொழுது நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக
ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். தந்தை கல்ப கல்பமாக வந்து மனிதனை
தேவதையாக ஆக்கு வதற்காகக் கற்பிக்கிறார் என்பதை
அறிந்துள்ளீர்கள். எப்படி கற்பிக்கிறார் என்பதைப்
பார்க்கிறீர்கள். பகவான் நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்
என்று நீங்கள் எல்லோருக்கும் கூறுகிறீர்கள். என் ஒருவனை நினைவு
செய்தீர்கள் என்றால், உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகி விடும்
என்று கூறுகிறார். சத்யுகத்தில் குறைவான மனிதர்கள் இருப்பார்கள்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். கலியுகத்தில் எவ்வளவு
ஏராளமான மனிதர்கள் இருப்பார்கள்? தந்தை வந்து ஆதி சநாதன தேவி
தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நாம்
மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டு இருக்கிறோம்.
மனிதனிலிருந்து தேவதையாக ஆகக் கூடிய குழந்தைகளிடம் தெய்வீக
குணங்கள் தென்படும். அவர்களிடம் கோபத்தின் அணு அளவு கூட
இருக்காது. ஒரு வேளை எப்பொழுதாவது கோபம் வந்து விட்டது என்றால்
சட்டென்று தந்தைக்கு எழுதுவார்கள். பாபா இன்று என் மூலமாக
இந்தத் தவறு ஆகி விட்டது. நான் கோபப் பட்டு விட்டேன். விகர்மம்
(பாவம்) செய்து விட்டேன். தந்தையுடன் உங்களுக்கு எவ்வளவு (கனெக்ஷன்)
தொடர்பு உள்ளது! பாபா மன்னித்து விடுங்கள். மன்னிப்பு ஆகியவை
ஆவது இல்லை என்று தந்தை கூறுவார். மற்றபடி மேற்கொண்டு இது
போன்ற தவறுகள் செய்யாதீர்கள். ஆசிரியர் ஒன்றும் மன்னிக்க
மாட்டார். பதிவேட்டில் (ரெஜிஸ்தரில்) காண்பிப்பார் - உங்களுடைய
(மேனர்ஸ்) நடத்தை நன்றாக இல்லை என்று. எல்லையில்லாத தந்தை கூட
கூறுகிறார் - நீங்கள் உங்களது மேனர்ஸை பார்த்துக் கொண்டு
இருக்கிறீர்களா? தினமும் உங்களது கணக்கைப் பாருங்கள்.
எவருக்கும் துக்கம் ஒன்றும் கொடுக்கவில்லையே? எவரையும் தொல்லைப்
படுத்தவில்லையே? தெய்வீக குணங்களை தாரணை செய்வதில் நேரம்
பிடிக்கிறது அல்லவா? தேக அபிமானம் அறுபட்டு விடுவது மிகவுமே
கடினமாக உள்ளது. தன்னை ஆத்மா என்று உணரும் பொழுது தான் தந்தை
மீதும் அன்பு போகும். இல்லை என்றால் தேகத்தின் கர்ம பந்தனத்தில்
தான் புத்தி தொங்கிக் கொண்டு இருக்கும். தந்தை கூறுகிறார்,
நீங்கள் சரீர நிர்வாகத்திற்காக கர்மம் கூட செய்ய வேண்டும்.
அதிலிருந்து நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். பக்திக்காகவும்
கூட நேரம் ஒதுக்குகிறார்கள் அல்லவா? மீரா கிருஷ்ணரின் நினைவில்
தான் இருந்தார் அல்லவா? மறுபிறவியோ இங்கேயே தான் எடுத்துச்
சென்றார்.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தப் பழைய உலகின் மீது
வைராக்கியம் வருகிறது. இந்தப் பழைய உலகத்தில் மீண்டும்
புனர்ஜென்மம் எடுக்கவே வேண்டாம் என்பதை அறிந்துள்ளீர் கள்.
உலகமே முடிந்து போய் விடுகிறது. இந்த எல்லா விஷயங்களும்
உங்களுடைய புத்தியில் உள்ளன. எப்படி பாபாவிடம் ஞானம் உள்ளதோ அதே
போல குழந்தைகளிடமும் உள்ளது. இந்த சிருஷ்டி சக்கரம் வேறு
யாருடைய புத்தி யிலும் இல்லை. உங்களிலும் கூட உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் பதீத பாவன தந்தை ஆவார், அவரே நமக்குக் கற்பிக்கிறார்
என்ற விஷயம் புத்தியில் வரிசைப்படியாக தான் உள்ளது. இதையும்
நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். உங்களுடைய புத்தியில் முழு
84ன் சக்கரம் உள்ளது. இப்பொழுது இந்த நரகத்தில் இது கடைசி பிறவி
ஆகும் என்பது நினைவில் உள்ளது. இதற்கு பயங்கரமான நரகம் என்று
கூறப்படுகிறது. மிகவுமே அசுத்தம் உள்ளது. எனவே சந்நியாசிகள்
வீடு வாசலை விட்டு விட்டுச் செல்கிறார்கள். அது சரீர சம்பந்தப்
பட்ட விஷயம் ஆகும். நீங்கள் புத்தி மூலமாக சந்நியாசம்
செய்கிறீர்கள். நாம் இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லாவற்றையும் மறக்க வேண்டி
உள்ளது. இந்த பழைய சீ-சீ உலகம் முடிந்து விட்டுள்ளது. வீடு
பழையதாக ஆகி விடும் பொழுது, புதியது கட்டப்பட்டு தயாராகி விடும்
பொழுது இந்த வீடு இடிந்து போய்விடத் தான் போகிறது என்பது மனதில்
தோன்றுகிறது அல்லவா? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் படித்துக்
கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? புது உலகத்தின் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது என்பதை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது சிறிது
தாமதம் உள்ளது. நிறைய குழந்தைகள் வந்து கற்பார்கள். புதிய வீடு
இப்பொழுது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பழையது இடிந்து
கொண்டே போய் கொண்டிருக்கிறது. இனி மீதம் ஒரு சில நாட்களே உள்ளன.
உங்களுடைய புத்தியில் இந்த எல்லையில்லாத விஷயங்கள் உள்ளன.
இப்பொழுது நமக்கு இந்தப் பழைய உலகத்தின் மீது மனம் ஈடுபடுவது
இல்லை. இவை எதுவுமே கடைசியில் உதவப் போவது இல்லை. நாம்
இங்கிருந்து போக விரும்புகிறோம். பழைய உலகத்தின் மீது மனதை
ஈடுபடுத்தக் கூடாது என்று தந்தையும் கூறுகிறார். தந்தையாகிய
என்னையும் வீட்டையும் நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள்
விநாசம் ஆகும். இல்லை என்றால் நிறைய தண்டனை வாங்குவீர்கள்.
பதவியும் மோசமானதாக ஆகி விடும். நாம் 84 பிறவிகள் அனுபவித்தோம்.
இப்பொழுது தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது
விகர்மங்கள் விநாசம் ஆகும் என்ற கவலை ஆத்மாவிற்கு ஏற்பட்டுள்ளது.
தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும். அப்பொழுது தான் சிறந்த
வாழ்க்கை அமையும். தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார்.
இதுவும் நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். தந்தை நல்ல முறையில்
நினைவூட்டுகிறார். அவர் எல்லையில்லாத தந்தை தான் ஞானக் கடல்
ஆவார். அவரே வந்து கற்பிக்கிறார். இந்தப் படிப்பையும்
படியுங்கள். சரீர நிர்வாகத்திற்காக எல்லாமே செய்யுங்கள். ஆனால்
டிரஸ்டி ஆகி இருங்கள் என்று தந்தை கூறுகிறார்.
எந்தக் குழந்தைகளுக்கு பழைய உலகத்தின் மீது எல்லையில்லாத
வைராக்கியம் இருக்குமோ அவர்கள் தங்களுடைய அனைத்தையும் தந்தைக்கு
சமர்ப்பணம் செய்து விடுவார்கள். நம்முடையது என்று எதுவும் இல்லை.
பாபா இந்த தேகம் கூட எங்களுடையது இல்லை. இதுவோ பழைய உடல் ஆகும்.
இதையும் விட வேண்டும். எல்லாவற்றிலிருந்தும் மோகம் அறுபட்டுப்
கொண்டே போகிறது. நஷ்டோ மோகா (மோகத்தை நீக்கியவராக) ஆக வேண்டும்.
இது எல்லை யில்லாத வைராக்கியம் ஆகும். அது எல்லைக்குட்பட்ட
வைராக்கியம் ஆகும். நாம் சொர்க்கம் சென்று நமது அரண்மனையை
கட்டுவோம் என்பது புத்தியில் உள்ளது. இங்கு இருக்கும் எதுவும்
உதவப்போவதில்லை. ஏனெனில் இவை எல்லாமே எல்லைக்குட்பட்டதாகும்.
நீங்கள் இப்பொழுது எல்லையிலிருந்து வெளியேறி எல்லைக்கப்பால்
செல்கிறீர்கள். உங்களுடைய புத்தியில் இந்த எல்லையில்லாத ஞானம்
தான் இருக்க வேண்டும். இப்பொழுது வேறு எதிலுமே கண்கள் மூழ்குவது
இல்லை. இப்பொழுதோ நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். கல்ப
கல்பமாக தந்தை வந்து நமக்குக் கற்பித்து கூடவே அழைத்துச்
செல்கிறார். உங்களைப் பொருத்தவரை இது ஒன்றும் புதிய படிப்பு
கிடையாது. கல்ப கல்பமாக நாம் படிக்கிறோம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். உங்களிலும் கூட வரிசைப்படியாக உள்ளீர்கள்.
முழு உலகத்தில் எவ்வளவு ஏராளமான மனிதர்கள் உள்ளார்கள்! ஆனால்
உங்களுக்குத் தெரியுமா என்ன? மெல்ல மெல்ல இந்த பிராமணர்களின்
விருட்சம் வளர்ந்து கொண்டே போகிறது, நாடகத் திட்டப்படி ஸ்தாபனை
ஆகவே வேண்டி உள்ளது. நம்முடையது ஆன்மீக அரசாங்கம் ஆகும்
என்பதைக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். நாம் திவ்ய திருஷ்டி
மூலமாக புதிய உலகத்தைப பார்க்கிறோம். அங்கு தான் செல்ல வேண்டும்.
பகவான் கூட ஒருவர் ஆவார். அவரே கற்பிப்பவர் ஆவார். இராஜயோகம்
தந்தை தான் கற்பித்திருந்தார். அச்சமயம் உண்மையில் போர் கூட
மூண்டு இருந்தது. அநேக தர்மங்களின் விநாசம் மற்றும் ஒரு
தர்மத்தின் ஸ்தாபனை ஆகி இருந்தது. நீங்களும் அதே ஆத்மாக்கள்
ஆவீர்கள்.கல்ப கல்பமாக நீங்கள் தான் படித்துக் கொண்டே
வந்துள்ளீர்கள். ஆஸ்தி பெற்று கொண்டே வந்துள்ளீர்கள்.
புருஷார்த்தம் (முயற்சி) ஒவ்வொருவரும் அவரவருடையதை செய்ய
வேண்டும். இது எல்லை யில்லாத படிப்பு ஆகும். இந்தக் கல்வியை
வேறு எந்த மனிதரும் கொடுக்க முடியாது.
தந்தை ஷியாம் மற்றும் சுந்தர் என்பது பற்றிய இரகசியத்தைக் கூட
புரிய வைத்துள்ளார். இப்பொழுது நீங்கள் (சுந்தர்) அழகாக -
தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களும்
புரிந்துள்ளீர்கள். முதலில் ஷியாம் கருமையாக (தூய்மையற்று)
இருந்தீர்கள். கிருஷ்ணர் மட்டும் ஒருவர் தனியாக இருந்தாரா என்ன?
முழு இராஜதானி இருந்தது அல்லவா? நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள்
புரிந்துள்ளீர்கள். இப்பொழுது உங்களுக்கு இந்த நரகத்தின் மீது
வெறுப்பு வருகிறது. நீங்கள் இப்பொழுது புருஷோத்தம
சங்கமயுகத்தில் வந்து விட்டுள்ளீர்கள். இவ்வளவு ஏராளமானோர்
வருகிறார்கள். இவர்களில் யார் முந்தைய கல்பத்தில்
வெளிப்பட்டிருந்தார்களோ, அவர்களே தான் மீண்டும் வெளி வருவார்கள்.
சங்கம யுகத்தைக் கூட நல்ல முறையில் நினைவு செய்ய வேண்டும். நாம்
புருஷோத்தமர் அதாவது மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக்
கொண்டிருக்கிறோம். மனிதர்களோ நரகம் என்பது என்ன மற்றும்
சொர்க்கம் என்பது என்ன என்பதைக் கூட புரியாமல் உள்ளார்கள்.
கூறுகிறார்கள், எல்லாமே இங்கேயே தான் இருக்கிறது -யார் சுகமாக
இருக்கிறார் களோ அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள், யார்
துக்கத்தில் இருக்கிறார்களோ அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள்
- அநேக வழிகள் உள்ளன அல்லவா? ஒரே வீட்டில் கூட அநேக வழிகள் ஆகி
விடுகின்றன. குழந்தைகள் ஆகியோர் மீது இருக்கும் மோகத்தின்
கயிறுகள் அறுபடுவதே இல்லை. நாம் எப்படி இருக்கிறோம் என்பதை
மோகத்தின் வசப்பட்டிருக்கும் காரணத்தால் ஏதாவது
புரிந்திருக்கிறார்களா என்ன? மகனுக்குத் திருமணம் செய்விக்கலாமா
என்று கேட்கிறார் கள். ஆனால் இதுவும் சட்டம் (நியமம்) புரிய
வைக்கப்படுகிறது - நீங்கள் ஒரு பக்கம் சொர்க்கவாசி ஆவதற்காக
ஞானம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். மறுபக்கம் அவர்களை
நரகத்தில் வீழ்த்தட்டுமா (திருமணம் செய்விக்க) என்று
கேட்கிறீர்கள். கேட்கிறீர்கள் என்றால் போய் செய்யுங்கள் என்று
பாபா கூறி விடுவார். பாபாவிடம் கேட்கிறார்கள் என்றால், இவருக்கு
மோகம் உள்ளது என்று பாபா புரிய வைக்கிறார். இப்பொழுது வேண்டாம்
என்று கூறினாலும் கூட கட்டளையை மீறி விடுவார்கள். மகளுக்கோ
செய்வித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சகவாச தோஷத்தில்
கெட்டுப் போய் விடுவார். மகன்களுக்கு செய்விக்கத் தேவையில்லை.
ஆனால் தைரியம் வேண்டும் அல்லவா? பாபா இவர் மூலமாக (ஏக்ட்)
காரியம் செய்வித்தார் அல்லவா? இவரைப் பார்த்து பிறகு மற்றவர்கள்
செய்ய முற்பட்டார்கள். வீட்டில் கூட நிறைய சண்டைகள் ஏற்பட்டு
விடுகின்றன. இது இருப்பதே சண்டைகளின் உலகமாக. முட்களின் காடு
ஆகும் அல்லவா? ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
சொர்க்கத்திற்கு கார்டன் (தோட்டம்) என்று கூறப்படுகிறது. இது
காடு ஆகும். தந்தை வந்து முட்களிலிருந்து மலராக ஆக்குகிறார்.
யாரோ ஒருவர் வெளிப்படுகிறார். கண்காட்சியில் ஆம் ஆம் என்று
கூறுவார் கள் தான். ஆனால் ஒன்றும் புரிந்து கொள்வதில்லை. ஒரு
காதால் கேட்கிறார்கள் மற்றும் மறு காதால் நீக்கி விடுகிறார்கள்.
இராஜதானி ஸ்தாபனை செய்வதில் நேரமோ பிடிக்கிறது அல்லவா!
மனிதர்கள் தங்களை முட்கள் என்று புரிந்திருக்கிறார்களா என்ன?
இச்சமயம் முகத் தோற்றம் மனிதனைப் போல இருந்தால் கூட சரி, ஆனால்
(ஸீரத்)குணங்கள் குரங்கை விடவும் கேவலமாக உள்ளன. ஆனால் தங்களை
அவ்வாறு உணர்ந்து இருப்பதில்லை. எனவே தங்களது படைப் பிற்குப்
புரிய வைக்க வேண்டும் என்று தந்தை கூறுகிறார். புரிந்து
கொள்வதில்லை என்றால் பின் விரட்டி விட வேண்டும். ஆனால் அந்த
வலிமை வேண்டும் அல்லவா? மோகத்தின் புழுக்கள் எவ்வாறு
பிடித்திருக்கும் என்றால் அது வெளியேறிப் போவதே இல்லை. இங்கோ
நஷ்டோ மோகா (மோகத்தை நீக்கியவர்) ஆக வேண்டும். என்னுடையவர் ஒரே
ஒருவர் வேறு யாருமில்லை. இப்பொழுது தந்தை அழைத்துச் செல்ல
வந்துள்ளார். பாவனமாக ஆக வேண்டும். இல்லை என்றால் மிகவுமே
தண்டனை வாங்குவார்கள். பதவி கூட மோசமாகிப் போய் விடும்.
இப்பொழுது தங்களை சதோபிர தானமாக ஆக்க வேண்டும் என்ற கவலை தான்
ஏற்பட்டுள்ளது. சிவனுடைய கோவிலுக்குப் போய் நீங்கள் புரிய
வைக்கலாம் - பகவான் பாரதத்தை சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கி
இருந்தார். இப்பொழுது அவர் மீண்டும் ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே கூறுகிறார்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்தப் பழைய உலகத்தின் மீது எல்லையில்லாத வைராக்கியம்
உடையவர் ஆகி, தனது அனைத்தையும் அர்ப்பணம் செய்து விட வேண்டும்.
நம்முடையது என்று எதுவுமே இல்லை. இந்த தேகம் கூட நம்முடையது
இல்லை. இவற்றிலிருந்து மோகத்தை துண்டித்து நஷ்டோ மோகா (மோகத்தை
நீக்கியவர்) ஆக வேண்டும்.
2. ஒரு பொழுதும் ரெஜிஸ்தரில் கறை ஏற்பட்டு விடும் வகையில்
அப்பேர்ப்பட்ட எந்த ஒரு தவறும் செய்யக் கூடாது. அனைத்து
தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். உள்ளுக்குள்
கோபத்தின் சிறிதளவு கூட இல்லாதிருக்கட்டும்.
வரதானம்:
சொல், சிந்தனை மற்றும் செயல் - இந்த மூன்றையும் சமமானதாக
ஆக்கக்கூடிய ஞான சொரூப ஆத்மா ஆகுக.
இப்பொழுது வானப்பிரஸ்த நிலையில் செல்வதற்கான சமயம் சமீபத்தில்
வந்து கொண்டிருக் கின்றது, எனவே, பலவீனங்களாகிய எனது மற்றும்
வீணானவற்றின் விளையாட்டை முடிவடையச் செய்து, சொல், சிந்தனை
மற்றும் செயலை சமமாக ஆக்குங்கள், அப்பொழுதே ஞான சொரூப மானவர்கள்
என்று கூறமுடியும். யார் அப்பேற்பட்ட ஞான சொரூபமான ஞானம்
நிறைந்த ஆத்மாக்களாக இருக்கின்றார்களோ, அவர்களுடைய ஒவ்வொரு
கர்மம், சம்ஸ்காரம், குணம் மற்றும் கடமையும் சக்திசாலியானதாக
தந்தைக்கு சமமாக இருக்கும். அவர்கள் ஒருபொழுதும் வீணானவற்றின்
விசித்திரமான விளையாட்டை விளையாட முடியாது. சதா பரமாத்மாவை
சந்திக்கும் விளையாட்டில் பிஸியாக இருப்பார்கள். ஒரு
தந்தையுடனான சந்திப்பைக் கொண்டாடுவார்கள் மற்றும் பிறரையும்
தந்தைக்கு சமமாக ஆக்குவார்கள்.
சுலோகன்:
சேவைகளினுடைய ஊக்கம் சின்னச் சின்ன வியாதிகளை
அமிழ்த்திவிடுகின்றது.
அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான
அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்
வாய் மற்றும் மனதை மௌனமாக வைத்திருப்பவர்களே உள்நோக்கு
முகமுடையவர்கள் ஆவார்கள். வாயினுடைய மௌனத்தையோ உலகத்தினரும்
கூட மேற்கொள்கின்றனர், ஆனால், இங்கே வீணான சங்கல்பம் செய்யாமல்
மனதை மௌனம் ஆக்க வேண்டும். எவ்வாறு டிராஃபிக் கண்ட்ரோல்
செய்யும்பொழுது வீணானவற்றின் டிராஃபிக்கை (போக்குவரத்தை)
கட்டுப்படுத்து கின்றீர்களோ. அவ்வாறு இடை இடையில் ஒரு நாள்
மனதின் வீணானவற்றின் டிராஃபிக்கை கண்ட்ரோல் செய்யுங்கள்.