15.06.25    காலை முரளி            ஓம் சாந்தி  30.11.2005      பாப்தாதா,   மதுபன்


நேரத்தின் அருகாண்மைக்கேற்ப தனனை எல்லைக்குட்பட்ட பந்தனங்களிலிருந்து விடுவத்துக் கொண்டு முழுமையாகுக மற்றும் சமநிலை பெறுக.

இன்று நாலாப்புறமும் உள்ள முழுமையான சமமான குழந்தைகளை தந்தை பார்த்துக் கொண்டி ருக்கின்றார். சமமான குழந்தைகளே தந்தையின் உள்ளத்தில் உறைந்துள்ளார்கள். சமமான குழந்தைகளின் சிறப்பியல்பு அவர்கள் சதா தடையின்றி வீண் எண்ணம் இல்லாது, பணிவுடன் பரிசுத்த மனதுடன் விளங்குவார்கள். அத்தகைய ஆத்மாக்கள் எப்போதும் சுதந்திரமானவர்கள். எந்தவிதமான எல்லைக்குட்பட்ட பந்தனத்திலும் கட்டுண்டு இருக்க மாட்டார்கள். ஆகவே தன்னைத்தானே கேளுங்கள். அத்தகைய எல்லையில்லா பந்தனத்திலும் கட்டுண்டு இல்லை தானே. தன்னைத்தானே எல்லையில்லா சுதந்திர ஆத்மா ஆகி விட்டேனா என கேளுங்கள். தேக உணர்வை விட்டு விலகுவதே அனைத்திலும் முதன்மையான சுதந்திரமாகும். தேவைப்படும் பொழுது தேகத்தை எடுப்பதும், விடுப்பதும் ஆக வேண்டும். தேகத்தின் ஈர்ப்பில் வரக்கூடாது. மற்றொரு விசயம் சுதந்திர ஆத்மா எந்த விதமான பழைய சுபாவ சம்ஸ்காரங்களாலும் ஈர்க்க மாட்டார்கள். சம்மந்தம், தொடர்பில் வந்தாலும் விலகியும் அன்பாகவும் இருப்பார்கள் எனவே தன்னைத்தானே சோதனை செய்யுங்கள். எந்த ஒரு சிறிய கர்மேந்திரியமும் என்னை பந்தனத்தில் கட்டிப் போடவில்லையே? தனது சுய மரியாதையை நினைவு செய்யுங்கள். மாஸ்டர் சர்வ சக்திவான், திரிகாலதரிசி, திரிநேத்திரி சுயதரிசனசக்ரதாரி இந்த சுயமரியாதையின் ஆதாரத்தில் சர்வசக்திவானின் குழந்தைகளை எந்த கர்மேந்திரியமும் கவர்ந்திழுக்க முடியுமா? ஏனெனில் நேரத்தின் அருகான்மையை பாருங்கள். தன்னையும் பாருங்கள். ஒரு நொடியில் அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுபட்டிருக்கின்றேனா? அப்படி எந்த ஒரு பந்தனமும் இல்லை தானே? ஏனெனில் இறுதி சோதனைத்தாளில் நம்பர் ஒன் வருவதற்கான அறிகுறி ஒரு நொடியில் மனம், புத்தியை எங்கே இணைக்க விரும்புவேனோ அங்கே இணைய வேண்டும். பதட்டத்தில் வரக் கூடாது. இந்த உடலை விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்வது போனறு புத்தி மூலம் எந்த நிலையில் நிலை பெற வேண்டுமோ அந்த நிலையில் நிலைபெற முடிகிறதா? அறிவியல் மூலம் லைட் ஹவுஸ் மைட் ஹவுஸ் அமைத்துள்ளார்கள். அது ஸ்விட்ச் ஆன் செய்த மாத்திரமே ஒளியும், சக்தியும் நாலாபுறமும் பரப்புகின்றது. அவ்வாறே நீங்கள் நினைவு எனும் ஸ்விட்ச்சை ஆன் செய்த மாத்திரமே அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒளியும் சக்தியும் தர முடியுமா? ஒரு நொடியில் அசரீரி ஆகுங்கள் என்றவுடனேனே ஆவீர்களா, அல்லது யுத்தம் செய்வீர்களா? இந்த பயிற்சி நீண்ட காலம் இருந்தால் மட்டுமே இறுதியில் உதவிகரமாகும். நீண்ட கால பயிற்சி இல்லாது போனால் தக்க சமயத்தில் அசரீரி ஆவதற்கு கடும் உழைப்பு தேவைப்படும். எனவே தான் பாப்தாதா முழு நாளில் வேலைகள் பல செய்தாலும் இடையிடையே இந்த பயிற்சி செய்ய வலியுறுத்துகின்றார். இதற்காக மனதினை கட்டுப்படுத்தும் சக்தி தேவை. அவ்வாறு மனம் தன் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் எந்த ஒரு கர்மேந்திரியமும் நம்மை தன் வசம் செய்ய முடியாது.

இப்போது அனைத்து ஆத்மாக்களுக்கும் உங்கள் மூலமாக சக்தியெனும் வரதானம் தேவைப் படுகிறது. மாஸ்டர் சர்வசக்திவான் ஆத்மாக்களான உங்களிடமிருந்து உழைப்பின்றி வரதானம் மூலமாக பார்வை மூலமாகக வைப்ரேஷன் மூலமாக ஆத்மாக்கள் நாங்கள் முக்தி பெற வேண்டுமென சுப ஆசைதான் வைக்கின்றார்கள். அனை வரும் உழைத்து உழைத்து இப்போது களைத்துவிட்டனர். நீங்கள் அனைவரும் உழைப்பிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் தானே. அல்லது இன்னும் உழைக்க வேண்டியுள்ளதா? உழைப்பிலிருந்து விடுபட சுலபமான வழி என்னவென்று கேட்டீர்கள் தானே - உளமாற தந்தைக்கு மிக அன்பானவராகுங்கள். பிராமண ஆத்மாக்களான உங்களது பிறவியின் உறுதிமொழி என்ன, நினைவுள்ளதா உறுதிமொழி தந்தையே தன் குழந்தை யாக்கனார், பிராமண வாழ்வு தந்தார் எனும்போது பிராமண வாழ்வில் உங்கள் அனைவருக்குமான உறுதிமொழி என்ன? ஒரு தந்தையின்றி வேறு யாருமில்லை. நினைவுள்ளதா உறுதிமொழி நினைவிருந்தால் தலையசையுங்கள். நல்லது கை அசைக்கின்றீர்கள் நினைவு உறுதியாக உள்ளதா அல்லது அவ்வப்போது மறந்து விடுகின்றதா? பாருங்கள் 63 பிறவியாக மறந்தவரானீர்கள். இப்போது இந்த ஒரு பிறவியில் நினைவின் சொரூபமாகியுள்ளீர்கள் ஆக தந்தை குழந்தைகளிடம் கேட்கின்றார், குழந்தை பருவத்தில் கொடுத்த வாக்கு நினைவு உள்ளதா? எவ்வளவு சுலபமாக்கினார். ஒரு தந்தையே உலகம் என்றார். சர்வ சம்மந்தமும் ஒரு தந்தையிடமே ஒரு தந்தையிடமிருந்தே அனைத்து பிராப்திகளும், கல்வி கற்பிப்பவரும் அவரே, பராமரிப்பு செய்பவரும் அவரே, ஒருவரே அனைத்துமானார். குடும்பமே யானாலும் அவரே- ஈஸ்வரிய குடும்பம் ஆனாலும் ஒரு பாபாவின் குடும்பம். தனித்தனி தந்தையின் குடும்பம் அல்லவே. ஒரே குடும்பம் குடும்பத் திலும் ஒருவருக்கொருவர் ஆன்மீக அன்பு அன்பு அல்ல ஆன்மீக அன்பு. பாப்தாதா பிறவியின் வாக்குறுதியை நினைவு படுத்துகின்றார். என்ன வாக்கு கொடுத்தீர்கள்? அனைவரும் மிகுந்த ஊக்கம் உற்சாகத்துடன் மனதார சொன்னீர்கள். அனைத்தும் உங்களுக்கே உடல், மனம், பொருள் யாவும் உமக்கே கொடுத்துவிட்ட பொருளை தந்தையின் அடமானப் பொருளாக தந்தையின் காரியத்திற்காக கொடுத்துள்ளார். நீங்கள் தந்தைக்கு கொடுத்துவிட்டீர்கள் கொடுத்துவிட்டீர்கள் தானே? அல்லது திரும்ப சிறிது சிறிதாக எடுத்துக் கொள்கின்றீர் களா? திரும்ப எடுத்துக் கொண்டால் அடமானப் பொருளில் கை வைத்ததாகும். சில குழந்தைகள் சொல்கின்றார்கள், ஆன்மீக உரையாடல் செய்கிறீர்கள் தானே. என் மனம் சரியில்லை, என் மனம் எங்கிருந்த வந்தது? எனதை உனதென ஆக்கிய பிறகு அர்ப்பணம் செய்த பிறகு எனது மனம் எங்கிருந்து வந்தது. நீங்கள் அனைவரும் ஒரு பைசா செலவின்றி ராஜா ஆகி விட்டீர்கள். இப்போது உங்களது ஏதுமில்லை ஒரு பைசா செலவில்லை ஆனால் ராஜா ஆகி விட்டீர்கள். ஏன்? தந்தையின் பொக்கிஷம் அது உங்களது பொக்கிஷம் என்றாகிவிட்டது. ராஜா ஆகி விட்டீர்கள் தானே. பரமாத்மாவின் பொக்கிஷம் அது குழந்தைகளின் பொக்கிஷம். பாப்தாதா வாக்கை நினைவூட்டு கிறார், உனதை எனதாக்காதீர்கள். பாபா சொல்கிறார் தந்தை உங்கள் அனைவரையும் பரமாத்மா பொக்கிஷங்களால் செல்வச்சீமான ஆக்கிய பொழுது பொறுப்பெல்லாம் தந்தை ஏற்றுக் கொண்டார், எந்த வார்த்தைகளால்? நீங்கள் என்னை நினைவு செய்தால் அனைத்து பிராப்திகளுக்கும் அதிகாரி நீங்களே. நினைத்தாலே போதும் மேலும் நீங்களும் சொன்னீர்கள், நாங்கள் உங்களுக்கே, நீங்கள் எங்களுக்கே, இதுதானே செய்த உறுதிமொழி எனவே பாபா சொல்கின்றார், பொக்கிஷங்களை எப்போதும் தனக்காகவும் அனைத்து ஆத்மாக்களுக்காகவும் செயலில் பயன்படுத்துங்கள். எந்தளவிற்கு செயலில் பயன்படுத்துவீர்களோ அந்தளவிற்கு பொக்கிஷம் பெருகிக் கொண்டே யிருக்கும். அனைத்து சக்திகள் எனும் பொக்கிஷங்களை சக்திகளான அனைவரும் செயலில் பயன்படுத்துங்கள். புத்தியில் மட்டும் ஞானத்தை வைக்காதீர்கள். நான் சர்வசக்திவான் அல்ல அனைத்து சக்திகளையும் சமயத்திற்கேற்ப செயலில் சேவையில் ஈடுபடுத்துங்கள்.

பாப்தாதா பெரும்பாலான குழந்தைகளின் கணக்கை பார்க்கின்ற பொழுது இரண்டு சக்திகளை சதா நினைவில் வைத்து தக்க சமயத்தில் செயலில் பயன்படுத்தினால் எப்போதும் தடைகளன்றி இருக்கலாம். உங்களை எதிர்கொள்ளும் சக்தி தடைகளுக்கு இராது. இது தந்தையின் உத்திரவாதம். பொதுவாக அனைத்து சக்திகளுமே தேவைப்படுகின்றது. இருப்பினம் பெரும்பாலும் பொறுமை சக்தி, உணரும் சக்தி தேவை. உணரவும் செய்கின்றீர்கள் ஆனால் அதனை செயல் முறையில் கொணரும்போது கவனக் குறைவு ஏற்படுகிறது. எனவே தன்னை உணரும் வேளை யில் முகமும், நடத்தையும் மாறுகின்றது. மிக நன்றாக ஊக்கம் உற்சாகம் கொள்கின்றீர்கள் உணர்ந்தேன் என்று, பிறகு என்னவாகி விடுகின்றது? அனைவரும் அனுபவிகள் தானே. பிறகு என்னவாகின்றது. அதனை ஒவ்வொரு நேரமும் சொரூபத்தில் (நடைமுறை) கொண்டு வர வேண்டும், இதில் குறைவு ஏற்படுகின்றது. ஏனெனில் இங்கு நடைமுறையாக வேண்டும். புத்தியால் மட்டும் புரிந்து கொள்வது வேறு. அதனை நடை முறையில் கொண்டுவருவதே அவசியம். சில சமயங்களில் பாப்தாதாவிற்கு சில குழந்தைகள் மீது இரக்கம் வருகின்றது குழந்தை செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றதே. குழந்தைக்கு பதிலாக தந்தையே செய்து விடலாம் என்று தோன்றுகின்றது. ஆனால் நாடகத்தின் இரகசியம் யார் செய்வாரோ அவரே பலனை அடைவார் எனவே பாப்தாதா அவசியம் ஒத்துழைப்பு தருவார் ஆனால் குழந்தை தான் செய்தாக வேண்டும்.

பாப்தாதா பார்க்கின்றார், குழந்தைகள் மிக நல்ல சங்கல்பம் வைக்கின்றார். அமிர்த வேளையில் பாப்தாதாவிடம் மிக நல்ல நல்ல எண்ணங்கள் பெரிய மாலையாக வருகின்றது. இதை செய்வோம், இதை செய்வோம் இதை செய்வோம்..... பாப்தாதாவும் மகிழ்கின்றார். ஆஹா குழந்தை களே ஆஹா பிறகு செய்வதில் ஏன் பலவீனம்? இதற்காக காரணம் பார்த்தால் பிராமண குடும்பத் தில் குழுவின் வாயுமண்டலம் ஆங்காங்கே வாயு மண்டலம் பலவீனமாக உள்ளது. அதன் தாக்கம் விரைவில் ஏற்படுகின்றது. பிறகு அவர்கள் வார்த்தை என்னவாகிறது? மிக இனிய வார்த்தை சொல்கிறார்கள், இதெல்லாம் நடப்பது தானே. இதெல்லாம் நடக்கும். அந்த நேரத்தில் என்ன நினைக்க வேண்டும். இது நடக்கம் இது நடப்பதுதான்... இது கவனக் குறைவை கொண்டு வரு கின்றது. ஆனால் அந்த சமயத்தில் இந்த வார்த்தையை மாற்றுங்கள், தந்தையின் அன்பு கட்டளை என்ன? நினைத்துப் பாருங்கள். தந்தைக்கு விருப்பமானது என்ன? பாபா எதனை விரும்புகின்றார்? பாபா இவ்வாறு சொன்னாரா? செய்தாரா? தந்தை நினைவு வந்தால் கவனக் குறைவு நிங்கிவிடும். ஊக்கம் உற்சாகம் வந்து விடும். கவனக்குறைவு பலவிதம் உள்ளது. நீங்கள் உங்களுக்குமான வகுப்பு நடத்துங்கள், பட்டியல் போடுங்கள். ஒன்று சாதாரண கவனக்குறைவு ஒன்று ராயலான கவனக்குறைவு கவனக்குறைவு எண்ணத்தில் உறுதி நிலை உறுதியை கொண்டு வர விடுவதில்லை உறுதியே வெற்றிக்கான வழி, எனவே எண்ணத்தோடு நின்று விடுகிறது ஆனால் நடைமுறையில் வருவதில்லை.

இன்று என்ன கேட்டீர்கள்? உறுதிமொழியை நினைவு செய்தீர்களா எத்தனை நல்ல நல்ல உறுதிமொழி செய்கின்றீர்கள். பாப்தாதா உறுதிமொழி கேட்டு மகிழ்கின்றார். ஆனால் எத்தனை உறுதி செய்கின்றீர்களோ அத்தனை பயன்பெறுவதில்லை. பாப்தாதாவின் விருப்பம் இதுதான். கேட்கிறீர்கள் தானே, பாபா என்னிடம் எதனை விரும்பு கின்றார்? பாப்தாதாவின் விருப்பம் இதுவே சமயத்திற்கு முன்பாகவே அனைவரும் தயாராகிவிடுங்கள். சமயம் உங்களுக்கு ஆசிரியர் ஆகக் கூடாது. சமயத்திற்கு டீச்சர் நீங்கள் எனவே பாப்தாதாவின் விருப்பம் இதுவே. சமயத்திற்கு முன்பே முழுமை பெற்று உலக மேடையில் தந்தையுடன் சேர்ந்தே குழந்தைகளும் வெளிப்பட வேண்டும் நல்லது.

சந்திப்பிற்காக புதியதாக வந்தள்ள குழந்தைகள் கை உயர்த்துங்கள். உயரமாக கை உயர்த்துங்கள், உயரமாக நல்லது புதுப்புது குழந்தைகளைப் பார்த்து பாபா மகிழ்கின்றார். பாக்யவான் குழந்தைகள் தனது பாக்யத்தை பெற வந்துள்ளீர்கள் எனவே வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் இப்போது புதியதாக வந்துள்ள குழந்தைகளில் யார் விந்தை செய்து காண்பிக்கின்றீர்கள் என்று பார்க்கலாமா? பின்னால் வந்திருக்கலாம் ஆயினும் முன்னால் வந்து காண்பியுங்கள். பாப்தாதாவிடம் அனைத்து ரிசல்ட்டும் வந்து சேருகின்றது. நல்லது.

இரட்டை வெளி நாட்டவர் நல்லது இரட்டை வெளி நாட்டவர் தன்னிலும் சேவையிலும் நன்கு கவனம் தருகின்றனர். ஆனால் இதில் ஒரு புள்ளி மட்டும் வைக்க வேண்டும். அடிக்கோடிட வேண்டும். மாற்றத்திற்காக என்ன எண்ணம் வைப்பீர்களோ நன்கு ஊக்கம், உற்சாகம் தைரியம் வைக்கின்றீர்கள். இதனை மட்டும் அடிக் கோடிட்டுக் கொண்டே செல்லுங்கள், செய்தே ஆக வேண்டும். மாறியே ஆக வேண்டும் மாறி உலகை மாற்ற வேண்டும். இந்த உறுதியை மீண்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் கொண்டே செல்லுங்கள். மற்றபடி பாப்தாதா மகிழ் கின்றார். வளர்ந்து கொண்டும் வருகின்றீர்கள். தன்னிலும் சேவையிலும் கவனமும் வைக்கின்றீர்கள். ஆனால் பதட்டம் முற்றிலும் நீங்கவில்லை. கவனமும் உள்ளது. இடையிடையே சிறிதளவு பதட்டமும் உள்ளது. அதனை முடித்தாக வேண்டும். மற்றபடி தைரியம் நன்றாக உள்ளது. தைரியத்திற்கு வாழ்த்துக்கள். பாபாவுடன் யாரெல்லாம் இங்க அமர்ந்துள்ளீர்களோ உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கை தட்டுங்கள். நல்லது. நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள். ஆனால் பாப்தாதாவிற்கு தொலைவில் அமர்ந்தபடியே அதிக குழந்தைகளின் அன்பு நினைவுகள் கிடைக்கின்றது. பாப்தாதா வும் ஒவ்வொரு குழந்தைகளையும் கண்ணுக்குள் வைத்து மிக மிக உளமார்ந்த வாழ்த்துக்களை ஆசிகளைத் தருகின்றார். பாரதத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் அனேக குழந்தைகளின் நினைவுகள் வருகின்றது. கடிதம், இமெயில் வருகின்றது அனைத்தும் பாபாவிடம் வந்தடைந்தது நல்லது

பாப்தாதா ஒரு நொடியில் அசரீரி பவ எனும் டிரில் பார்க்க விரும்புகின்றார். இறுதியில் பாஸ் ஆக வேண்டு மென்றால் இந்த டிரில் மிக அவசியம் எனவே இவ்வளவு பெரிய கட்டிடத்தில் அமர்ந்தாலும் ஒரு நொடியில் தேக உணர்விலிருந்து விடுபட்ட நிலையில் நிலை பெறுங்கள் எந்த ஈர்ப்பும் ஈர்க்காத நிலையில் நிலைபெறுங்கள் (டிரில்) நல்லது.

நாலாபுறமும் உள்ள தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கு சதா சுயமாற்றம் மற்றும் உலக மாற்றத்திற்கான சேவையில் இணைந்துள்ள விசேஷ ஆத்மாக்களுக்கு சதா பிரம்மா பாப்சமான் கர்மயோகி, செயல்கள், கர்மேந்திரியங்கள் ஈர்ப்பிலிருந்து விடுபட்ட ஆத்மாக்களுக்கு சதா உறுதியை ஒவ்வொரு எண்ணத்திலும் சொல்லிலும், செயலிலும் நடைமுறைபடுத்தி தந்தைக்கு அருகே சமநிலையில் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதாவின் உளப்பூர்வமான ஆசிர்வாதங்கள் மற்றும் உளமார்ந்த அன்பு நினைவுகள் பெற்றுக் கொள்ளுங்கள். நமஸ்தே !

தாதி அவர்களுடன் : நலமடைந்தீர்கள், இப்போது நோய் அகன்றது. வியாதிகள் மகாரதிகளிட மிருந்து விடைபெற வருகின்றது. உள்ளுரவே கர்மாதீத நிலைக்கான ஒத்திகை செய்கின்றது. (ஜானகி தாதி சொல்கிறார்கள் தாதி கவலையற்ற மகாராஜா) நீங்கள் கலைப்படுகின்றீர்களா? நீங்களும் கவலையற்றவர் இருவரும் நன்கு செயல்படுகின்றீர்கள். அனைத்திலும் பெரிய பொறுப் பெனும் கிரீடம் அணிந்து நிமித்தமாக உள்ளீர்கள். இவர்கள் அனைவரும் துணை செய்கிறார்கள். உங்களைப் பார்த்து ஊக்கம் உற்சாகம் வருகின்றது. (இப்போது புதியது என்ன செய்வீர்கள்? பாபாவோ ஏதேனும் பிரேரணை தரட்டுமா) பாப்தாதா சொல்லியிருக்கின்றார் ஒவ்வொரு துறை யிலும் மைக்கும், மைட்டும் (சக்தி) சேர்ந்து பூச்செண்டு அமையுங்கள். மைக்காக மட்டுமோ தொடர்பில் உள்ளவராகவோ அல்ல. சம்மந்தத்திலும் நெருக்கமாக உள்ளவர்களை சேர்த்து பூச்செண்டு செய்யுங்கள். பிறகு அந்த குழுவே சேவைக்கு நிமித்தமாவார்கள். அவர்கள் மைக் ஆவார்கள் நீங்கள் மைட் ஆவீர்கள் அவர்கள் உள்ளத்திலிருந்து பாபா என்று வர வேண்டும். அப்போதே தாக்கம் ஏற்படும். அவர்களை நெருங்கிய சம்மந்தத்தில் கொண்டு வாருங்கள். அவ்வப்போது ஏற்படுகின்றது போதை சிறிது குறைந்து விடுகிறது. சம்மந்தம் தொடர்பில் எங்கே வந்தாலும் அங்கே தொடர்பு இருந்தால் சரியாகி விடும். நல்லது.

ஆசீர்வாதம்:
சதா உயர்வான மற்றும் புதுவிதமான சேவை மூலம் வளர்ச்சி செய்யும் சகஜ சேவாதாரி ஆகுக!

எண்ணங்கள் வாயிலாக ஈஸ்வரிய சேவை செய்வது இதுவும் புது விதமான உயர் சேவையாகும். எப்படி ஒரு நகை வியாபாரி தினமும் காலையில் தனது ரத்தினங்களை சுத்தமாக உள்ளதா, பளபளப்பு சரியாக உள்ளதா, சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்கின்றார். அவ்வாறே தினமும் அமிர்தவேளையில் தனது தொடர்பில் வரும் ஆத்மாக்களை எண்ணங்களால் பார்வையிடுங்கள். எந்தளவு நீங்கள் அவர்களை எண்ணத் தால் நினைப்பீர்களோ அந்தளவு அந்த எண்ணம் அவர்களை சென்றடையும், இவ்வகையிலான புதிய முறையில் சேவை செய்து வளர்ச்சி யடைந்து கொண்டே செல்லுங்கள். உங்களது சகஜயோகமெனும் சூட்சும சக்தி ஆத்மாக்களை உங்கள் பக்கம் தானாகவே ஈர்த்து வரும்.

சுலோகன்:
சாக்கு போக்கை களைந்து எல்லையில்லா வைராக்கிய உள்ளுணர்வை வெளிப்படுத்துங்கள்.


அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

ஞான சிந்தனையுடன் சுபபாவனை, நல் விருப்பம் எனும் எண்ணம் சக்தி தரும் பயிற்சி, மனதை மௌனமாக்கி டிராபிக் கண்ரோல் போன்றவைகளில் முழு நாளில் இடையிடையே பயிற்சி செய்யுங்கள் எந்தளவு உள்முகமெனும் அறையில் அமர்ந்து பரிசோதனை ஆராய்ச்சி செய்வீர் களோ அந்தளவு நல்ல நல்ல டச்சிங் (அறிகுறி) தென்படும். அந்த டச்சிங் மூலம் அநேக ஆத்மாக் களுக்கு லாபம் கிடைக்கும்.

குறிப்பு : இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அகில உலக தியான தினம், மாலை 6.30 மணிமுதல் 7.30 மணி வரை சகோதர, சகோதரிகள் குழுவாக ஒருமித்த சங்கல்பத்துடன் அமர்ந்து யோக பயிற்சி அனுபவம் செய்யுங்கள். நான் புருவ மத்தி எனும் ஆசனத்தில் அமர்ந்துள்ள பரமாத்ம சக்திகளால் நிரம்பிய சர்வ சிரேஸ்ட ராஜயோகி ஆத்மா. கர்மேந்திரியங்களை வென்றவன், விகர்மங்களை வென்றவன். முழு கல்பத்திலும் ஹீரோ நடிப்பு நடிக்கும் சர்வ சிரேஸ்ட மகான் ஆத்மா நான்.