16-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய அன்பு
ஒரு பாபாவிடம் உள்ளது. ஏனென்றால் உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தி
கிடைக்கின்றது. என்னுடைய பாபா என்று, நீங்கள் அன்போடு
சொல்கிறீர்கள்.
கேள்வி:
எந்த ஒரு தேகதாரி மனிதரின்
பேச்சையும் பாபாவுடன் ஒப்பிட முடியாது. ஏன்?
பதில்:
ஏனென்றால் பாபா சொல்லும் ஒவ்வொரு
சொல்லும் மகாவாக்கியமாகும். அந்த மகா வாக்கியங்களைக்
கேட்கிறவர்கள் மகான் அதாவது புருஷோத்தமர் ஆகி விடுகின்றனர்.
பாபாவின் மகாவாக்கியங்கள் இனிமையான மலர்களாக மாற்றி விடும்.
மனிதர்களின் சொற்கள் மகா வாக்கியங்கள் அல்ல. அவற்றினால் மேலும்
கீழே தான் இறங்கியே வந்துள்ளனர்.
பாடல்:
இந்த உலகம் மாறினாலும் நான்
நிலையாக இருப்பேன்.........
ஓம் சாந்தி.
பாடலின் முதல் வரியில் கொஞ்சம் அர்த்தம் உள்ளது. மற்ற முழுப்
பாடலும் எதற்கும் ஆகாது. எப்படி கீதையில் பகவான் வாக்கு,
மன்மனாபவ, மத்யாஜீபவ என்ற வார்த்தைகள் சரியாக உள்ளனவோ அது போல.
இது மாவில் சிறிதளவு உப்பு சேர்ப்பது போல எனச் சொல்லப்படு
கின்றது. இப்போது பகவான் எனச் சொல்லப்படுபவர் யார்? இதையோ
குழந்தைகள் நல்லபடியாக அறிந்து கொண்டனர். பகவான் என சிவபாபா
தான் அழைக்கப்படுகிறார். சிவபாபா வந்து சிவாலயத்தைப்
படைக்கிறார். எங்கே வருகிறார்? வேஷ்யாலயத்தில் (அசுத்த, விகாரி
உலகத்தில்). தாமே வந்து சொல்கிறார் - ஹே இனிமையிலும் இனிமையான
செல்லமான, தேடிக் கண்டெடுக்கப் பட்ட ஆன்மீகக் குழந்தைகளே,
கேட்பதோ ஆத்மா தான் அல்லவா? நாம் ஆத்மா அவிநாசி என்பதை
அறிவீர்கள். இந்த தேகம் விநாசி (அழியக்கூடியது). நாம் ஆத்மா
இப்போது நம்முடைய பரமபிதா பரமாத்மாவிடமிருந்து
மகாவாக்கியங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மகாவாக்கியங்கள்
ஒரு பரமபிதா பரமாத்மாவினுடையவை தான். அவை மகான் ஆத்மாக்களாக,
ஆத்மாக்களுக்குள் உத்தமமானவர்களாக ஆக்குகின்றன. மற்றப்படி
மகாத்மாக்கள், குரு முதலானவர்களினுடையது மகாவாக்கியம் ஒன்றும்
கிடையாது. சிவோஹம் (நானே சிவன்) என்று அவர்கள் சொல்வதும்
சரியான வாக்கியம் அல்ல. இப்போது நீங்கள் பாபாவிடமிருந்து
மகாவாக்கியங்கள் கேட்டு மணமிக்க மலர்களாக ஆகிறீர்கள். முள்
மற்றும் மலருக்கிடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது! இப்போது
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நமக்கு மனிதர்கள் யாரும் சொல்ல
வில்லை. இவருக்குள் (பிரம்மா) சிவபாபா அமர்ந்துள்ளார். அவரும்
ஆத்மாவே தான். ஆனால் அவர் பரம ஆத்மா எனச் சொல்லப்படுகிறார்.
இப்போது - ஹே பரம ஆத்மா வாருங்கள், வந்து எங்களைப்
பாவனமாக்குங்கள் என்று பதித ஆத்மாக்கள் சொல்கின்றனர். அவர் தான்
பரமபிதா, மிக மேலானவராக ஆக்குபவர். நீங்கள் புருஷோத்தம், அதாவது
அனைத்து ஆத்மாக்களுக்குள்ளும் உத்தம ஆத்மாவாக ஆகிறீர்கள்.
அவர்கள் தேவதைகள். பரமபிதா என்ற சொல் மிக இனிமை யானது.
சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர் என்றால் இனிமை வருவதில்லை.
உங்களிலும் கூட மிகச்சிலர் தான் மிகுந்த அன்போடு உள்ளுக்குள்
நினைவு செய்கின்றனர். அங்கே மனைவி கணவனை ஸ்தூலமாக நினைவு
செய்கின்றனர். இது ஆத்மாக்கள் பரமாத்மாவை மிக அன்போடு நினைவு
செய்வதாகும். பக்தி மார்க்கத்தில் இவ்வளவு அன்போடு பூஜை செய்ய
முடியாது. அந்த அன்பு இருப்பதில்லை. தந்தையை அறிந்து கொள்ளவே
இல்லை எனும் போது எப்படி அன்பு இருக்கும். இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த அன்பு உள்ளது. ஆத்மா
சொல்கிறது - மேரா பாபா (என்னுடைய பாபா)! ஆத்மாக்கள்
சகோதர-சகோதரர்கள் இல்லையா? ஒவ்வொரு சகோதரரும் சொல்கிறார், பாபா
எனக்குத் தனது அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அது
அன்பு எனச் சொல்லப்படுவதில்லை. யாரிடமிருந்து ஏதேனும்
கிடைக்கிறதோ, அவரிடம் அன்பு உள்ளது. தந்தையிடம் குழந்தைகளுக்கு
அன்பு உள்ளது. ஏனென்றால், தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது.
எவ்வளவு அதிகமான ஆஸ்தியோ, அவ்வளவு குழந்தையின் அன்பு இருக்கும்.
தந்தையிடம் எந்த ஓர் ஆஸ்தியும் இல்லை, தாத்தாவிடம் உள்ளது
என்றால் பிறகு தந்தை மீது அவ்வளவு அன்பு இருக்காது. பிறகு
தாத்தாவிடம் அன்பு ஏற்பட்டு விடும். இவரிடம் சொத்து கிடைக்கும்
எனப் புரிந்து கொள்வார்கள். இப்போதோ எல்லையற்ற தந்தை
இருக்கிறார். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நமக்கு பாபா கல்வி
கற்றுத் தருகிறார். இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயமாகும்.
பகவான் நம்முடைய தந்தையாக இருக்கிறார். அந்தப் படைப்பவராகிய
தந்தையை யாருமே அறிந்திருக்கவில்லை. அறிந்திராத காரணத்தால்
பிறகு தன்னையே தந்தை எனச் சொல்லிக் கொள்கின்றனர். எப்படி
குழந்தைகளிடம் கேளுங்கள், உங்களுடைய தந்தை யார் என்று,
கடைசியில் நான் தான் என்று சொல்லி விடுவார்கள். இப்போது
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இந்த தந்தைகள் அனைவருக்கும்
தந்தை ஒருவர் நிச்சயமாக இருக்கிறார். நமக்கு இப்போது அந்த
எல்லையற்ற தந்தை கிடைத்துள்ளார். அவருக்குத் தந்தை யாரும்
கிடையாது. இவர் உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை. ஆக,
குழந்தைகளுக்கு உள்ளுக்குள் குஷி இருக்க வேண்டும். அந்த
யாத்திரைகளில் செல்கின்றனர் என்றால் அங்கே இவ்வளவு குஷி
இருக்காது. ஏனென்றால், பிராப்தி எதுவும் கிடையாது. வெறுமனே
தரிசனம் செய்வதற்காகச் செல்கின்றனர். வீணாக எவ்வளவு
கஷ்டப்படுகின்றனர்! ஒன்று, இந்தக் கால்களும் தேய்ந்தது.
இன்னொன்று பணமும் செலவழிகின்றது. பைசா அதிகம் செலவழிக்கின்றனர்.
பிராப்தி எதுவும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் வருமானம்
கிடைக்கின்றது என்றால் பாரதவாசிகள் பெரும் பணக்காரர்களாக ஆகி
விட்டிருப்பார்கள். இந்தக் கோவில்கள் முதலியவற்றைக் கட்டுவதில்
கோடிக்கணக்கில் பணம் செலவழிக் கின்றனர். உங்களுடைய சோமநாத்
ஆலயம் ஒன்று மட்டும் இல்லை. எல்லா ராஜாக் களிடமும் கோவில்கள்
இருந்தன. தந்தை உங்களுக்கு எவ்வளவு பணம் தந்திருந்தார்! 5000
ஆண்டு களுக்கு முன் உங்களை உலகின் எஜமானராக ஆக்கியிருந்தார்.
ஒரு தந்தை தான் இதுபோல் சொல்கிறார். 5000 ஆண்டுகளுக்கு முன்
உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுத்து உங்களை இதுபோல் (தேவதைகளாக)
ஆக்கியிருந்தார். இப்போது நீங்கள் என்னவாக ஆகி
விட்டிருக்கிறீர்கள்! புத்தியில் வர வேண்டும் இல்லையா? நாம்
எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தோம்! புனர்ஜென்மம்
எடுத்து-எடுத்தே முற்றிலும் தரையில் வந்து விழுந்திருக்கிறோம்.
சோழி போல் ஆகி விட்டுள்ளோம். மீண்டும் இப்போது நாம் பாபாவிடம்
செல்கிறோம். அந்த பாபா நம்மை உலகின் எஜமானர் ஆக்குகிறார். இந்த
ஒரு யாத்திரையில் தான் ஆத்மாக்களுக்குத் தந்தை கிடைக்கிறார்.
ஆகவே உள்ளுக்குள் இந்த அன்பு இருக்க வேண்டும். குழந்தைகள்
நீங்கள் இங்கே வருகிறீர்கள் என்றால், நாம் அந்தத் தந்தையிடம்
செல்கிறோம் என்று புத்தியில் இருக்க வேணடும். அவரிட மிருந்து
நமக்கு மீண்டும் உலகத்தின் இராஜபதவி கிடைக்கின்றது. அந்தத்
தந்தை நமக்குக் கல்வி கற்றுத் தருகிறார் - குழந்தைகளே, தெய்விக
குணங்களை தாரணை செய்யுங்கள். சர்வசக்திவான் பதிதபாவனராகிய என்னை
நினைவு செய்யுங்கள். நான் கல்ப-கல்பமாக வந்து சொல்கிறேன்-என்னை
மட்டுமே நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும்.
மனதில் இது வர வேண்டும், நாம் எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளோம்.
பாபா சொல்கிறார், நான் குப்தமாக (மறைமுகமாக) இருக்கிறேன். ஆத்மா
சொல்கிறது, நான் குப்தமாக இருக்கிறேன். நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் போகிறோம், சிவபாபாவிடம், பிரம்மா
தாதாவிடம். இணைந்திருப் பவர்களைச் (பாப்தாதா) சந்திப்பதற்காகச்
செல்கிறோம். அவர்களால் நாம் உலகத்தின் எஜமானராக ஆகிறோம்.
உள்ளுக்குள் எவ்வளவு எல்லையற்ற குஷி இருக்க வேண்டும்! எப்போது
மதுபனுக்கு வருவதற்காகத் தனது வீட்டிலிருந்து வெளியில்
வருகிறீர்களோ, அப்போது உள்ளுக்குள் குதூகலமடைய வேண்டும். பாபா
நமக்கு ஆன்மீக படிப்பு சொல்லித் தருவதற்காக வந்துள்ளார். நமக்கு
தெய்வீக குணங்களை தாரணை செய்வதற்கான யுக்தி சொல்கிறார்.
வீட்டிலிருந்து வெளியில் வரும் சமயத்திலேயே உள்ளுக்குள் இந்தக்
குஷி இருக்க வேண்டும். எப்படி கன்யா கணவனோடு சந்திக்கிறாள்
என்றால், நகைகள் முதலியவற்றை அணிகிறாள். அப்போது முகம் மலர்ந்து
விடுகின்றது. அந்த முகம் மலர்வது துக்கத்தை அடைவதற்காக. உங்கள்
முகம் மலர் கின்றது, சதா சுகம் பெறுவதற்காக. ஆக, அப்படிப்பட்ட
தந்தையிடம் வரும் போது எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! இப்போது
நமக்கு எல்லையற்ற தந்தை கிடைத்துள்ளார். சத்யுகத்திற்குச்
செல்வீர்கள். பிறகு கலை குறைந்து கொண்டு போகும். இப்போதோ
நீங்கள் பிராமணர்கள், ஈஸ்வரிய குழந்தைகள். பகவான் அமர்ந்து
படிப்பு சொல்லித் தருகிறார். அவர் நம்முடைய தந்தை யாகவும்
உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார். படிப்பிக்கிறார். பிறகு
பாவனமாக்கி கூடவே அழைத்துச் செல்வார். நாம் ஆத்மா இப்போது இந்த
இராவண இராஜ்யத்தில் இருந்து விடுபடு கிறோம். உள்ளுக்குள்
அளவற்ற குஷி இருக்க வேண்டும் - பாபா உலகத்தின் எஜமானராக ஆக்கு
கிறார் என்றால் படிப்பை எவ்வளவு நன்றாகப் படிக்க வேண்டும்!
மாணவர்கள் நல்லபடியாகப் படிக் கின்றனர் என்றால் நல்ல மார்க்
வாங்கிப் பாஸ் ஆவார்கள். குழந்தைகள் சொல்கின்றனர் - பாபா,
நாங்கள் ஸ்ரீநாராயணனாக ஆவோம் என்று. இது தான் சத்யநாராயணனின்
கதை, அதாவது நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான கதை. அந்தப்
பொய்யான கதைகளை ஜென்ம-ஜென்மாந்தரமாகக் கேட்டே
வந்திருக்கிறீர்கள். இப்போது பாபாவிடமிருந்து ஒரே ஒரு தடவை
நீங்கள் உண்மையிலும் உண்மையான கதையைக் கேட்கிறீர்கள். அது பிறகு
பக்தி மார்க்கத்தில் நடந்து வந்துள்ளது. எப்படி சிவபாபா ஜென்மம்
எடுத்தார், அதைப் பிறகு வருடா-வருடம் ஜெயந்தி யாகக் கொண்டாடியே
வந்துள்ளனர். அவர் எப்போது வந்தார், என்ன செய்தார், எதுவும்
தெரியாது. நல்லது, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றனர். அவரும்
எப்போது வந்தார், எப்படி வந்தார், எதுவும் தெரியாது.
சொல்கின்றனர், கம்சபுரியில் வருகிறார், இப்போது அவர்
தூய்மையற்ற உலகத்தில் எப்படி ஜென்மம் எடுப்பார்? குழந்தைகளுக்கு
எவ்வளவு குஷி இருக்க வேண்டும் - நாம் எல்லையற்ற தந்தையிடம்
செல்கிறோம். அனுபவம் சொல்கின்றனர் இல்லையா? - எங்களுக்கு
இன்னார் மூலம் புத்தியில் பதிந்தது, பாபா வந்துள்ளார் என்று.........
அவ்வளவு தான் அந்த நாள் தொடங்கி நாம் பாபாவைத் தான் நினைவு
செய்கிறோம்.
இந்த உங்களுடைய யாத்திரை, பெரியவரிலும் பெரியவரான தந்தையிடம்
வருவதற்கான யாத்திரை. பாபாவோ சைதன்யமாக உள்ளார். குழந்தைகளிடம்
செல்லவும் செய்கிறார். அதெல்லாம் ஜட யாத்திரைகள். இங்கோ பாபா
சைதன்யமாக உள்ளார். எப்படி நாம் ஆத்மா பேசு கிறோம், அதுபோல்
அந்த பரமாத்மா தந்தையும் பேசுகிறார், சரீரத்தின் மூலம். இந்தப்
படிப்பு வரப்போகும் 21 பிறவிகளுக்கான சரீர நிர்வாகத்திற்காக.
அது இந்த ஒரு பிறவிக்காக. இப்போது எந்தப் படிப்பைப் படிக்க
வேண்டும், அல்லது எந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்? பாபா
சொல்கிறார், இரண்டையும் செய்யுங்கள். சந்நியாசிகள் போல்
வீடு-வாசலை விட்டுக் காட்டுக்குச் செல்ல வேண்டாம். இதுவோ இல்லற
மார்க்கம் இல்லையா? இருவருக்குமான படிப்பாகும். அனைவருமே
படிக்க மாட்டார்கள். சிலர் நன்றாகப் படிப்பார்கள். சிலர்
குறைவாகப் படிப்பார்கள். சிலருக்கு சட்டென்று உடனே புத்தியில்
பதிந்து விடும். சிலரோ சூடான தோசைக்கல் போல் பேசிக் கொண்டே
இருப்பார்கள். சிலர் சொல்கின்றனர்- ஆம், நான் புரிந்து
கொள்வதற்கு முயற்சி செய்கிறேன். சிலர் சொல்வார்கள், இதுவோ
தனிமையில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அவ்வளவு தான்! பிறகு
மறந்து போவார்கள். சிலருக்கு ஞானத்தின் அம்பு தைத்து விட்டால்
உடனே வந்து புரிந்து கொள்வார்கள். சிலர் சொல்வார்கள்-எனக்கு
நேர மில்லை. அப்போது புரிந்து கொள்ளுங்கள், அவர்களுக்கு எதுவும்
புத்தியில் பதியவில்லை. பாருங்கள், (பிரம்மா) பாபாவுக்கு உடனே
புரிந்து விட்டதால் அப்போதே அனைத்தையும் விட்டு விட்டார்
இல்லையா? புரிந்து கொண்டார், இராஜ்ய பதவி கிடைக்கிறது, அதற்கு
முன்னால் இதெல்லாம் என்ன? நாமோ பாபாவிடமிருந்து இராஜ்யத்தைப்
பெற வேண்டும். இப்போது பாபா சொல்கிறார், அந்தத் தொழில்
முதலியவற்றையும் செய்யுங்கள். ஒரு வாரம் மட்டும் இதை நல்ல
படியாகப் புரிந்து கொள்ளுங்கள். இல்லற விவகாரங்களையும்
பார்த்துக் கொள்ள வேண்டும். படைப்புகளின் பாலனையும் செய்ய
வேண்டும். அவர்களோ படைத்து விட்டுப் பிறகு ஓடிப்போய்
விடுகின்றனர். பாபா சொல்கிறார், நீங்கள் படைத்திருக்கிறீர்கள்
என்றால், பிறகு நல்லபடியாகப் பரிபாலனம் செய்யுங்கள். மனைவியோ
குழந்தையோ நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கின்றனர் என்றால்
நல்லவர்கள். புரிந்து கொள்ளவில்லை என்றால், தூய்மையற்றவர்கள்,.
நல்லவர் கெட்டவர் பற்றித் தெரிந்து விட்டது இல்லையா? பாபா
சொல்கிறார், நீங்கள் ஸ்ரீமத் படி நடப்பீர்களானால் உயர்ந்த
வர்களாக ஆவீர்கள். இல்லையென்றால் ஆஸ்தி கிடைக்காது.
தூய்மையானவராகி, நல்ல குழந்தை யாகி பெயரை விளங்கச் செய்யுங்கள்.
அம்பு தைத்து விட்டது (புத்தியில் பதிந்து விட்டது) என்றால்
சொல்வார்கள் - சரி, இப்போதோ நாங்கள் உண்மையான வருமானத்தை
சம்பாதிப்போம். பாபா வந்துள்ளார், சிவாலயத்திற்கு அழைத்துச்
செல்வதற்காக. ஆக, சிவாலயத்திற்குச் செல்வதற்காகப் பிறகு தகுதி
யுள்ளவராக ஆக வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். சொல்லுங்கள்,
இப்போது சிவபாபாவை நினைவு செய்யுங்கள், மரணம் எதிரில் உள்ளது.
நன்மையோ அவர்களுக்கும் செய்ய வேண்டும் இல்லையா? சொல்லுங்கள்,
இப்போது நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். பெண்
குழந்தைகளாகிய உங்கள் கடமை, தந்தை வீடு மற்றும் மாமனார் வீட்டை
உயர்த்துவது. உங்களை அழைக்கின்றனர் என்றால், உங்கள் கடமை
அவர்களுக்கு நன்மை செய்வது. இரக்க மனம் உள்ளவராக ஆக வேண்டும்.
பதீத் தமோபிரதான மனிதர்களுக்கு சதோபிரதானம் ஆவதற்கான வழி சொல்ல
வேண்டும். நீங்கள் அறிவீர்கள், ஒவ்வொரு பொருளும்
புதியதிலிருந்து பழையதாக அவசியம் ஆகின்றது. நரகத்தில் அனைவரும்
தூய்மை இழந்த ஆத்மாக்கள். அதனால் தான் கங்கையில் குளித்துப்
பாவனமாவதற்காகச் செல்கின்றனர். முதலிலோ புரிந்து கொள்ள வேண்டும்,
நாம் தூய்மையற்றவர் ஆகிவிட்டோம், அதனால் பாவனமாக வேண்டும் என்று.
பாபா ஆத்மாக்களுக்குச் சொல்கிறார்-என்னை நினைவு செய்வீர்
களானால் உங்கள் பாவங்கள் விநாசமாகும். சாது-சந்நியாசிகள்
அனைவருக்கும் என்னுடைய இந்த செய்தியைச் சொல்லுங்கள்-பாபா
சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள் என்று. இந்த யோக
அக்னியால் அல்லது நினைவு யாத்திரை மூலம் உங்கள் கறைகள் நீங்கிக்
கொண்டே போகும். நீங்கள் பவித்திரமாகி என்னிடம் வந்து
விடுவீர்கள். நான் உங்கள் அனைவரையும் உடன் அழைத்துச் செல்வேன்.
எப்படி தேள் சென்று கொண்டே இருக்கும். எங்காவது மென்மையான
பொருளைப் பார்த்தால் கொட்டி விடும். கல்லை எப்படிக் கொட்ட
முடியும்? நீங்களும் பாபாவின் அறிமுகம் கொடுங்கள். இதையும் பாபா
புரிய வைத்துள்ளார் - என்னுடைய பக்தர்கள் எங்கே இருக்கிறார்கள்?
சிவாலயத்தில், கிருஷ்ணரின் ஆலயத்தில், லட்சுமி-நாராயணர்
கோவிலில். பக்தர்கள் எனக்கு பக்தி செய்து கொண்டே இருக்கின்றனர்.
அவர்களும் குழந்தைகள் தான் இல்லையா? என்னிடமிருந்து இராஜ்யத்தை
அடைந்திருந்தனர். இப்போது பூஜைக்குரிய நிலை யிலிருந்து
பூஜாரிகளாக ஆகி விட்டுள்ளனர். தேவதைகளின் பக்தர்கள் இல்லையா?
நம்பர் ஒன் சிவனுக்கு செய்யப்படும் கலப்படமற்ற பக்தி. பிறகு
இறங்கி-இறங்கி இப்போதோ பூத பூஜை செய்து கொண்டுள்ளனர். சிவனுடைய
பூஜாரிகளுக்குப் புரிய வைப்பதில் சகஜமாக இருக்கும். இவர்
ஆத்மாக்கள் அனைவரின் தந்தை சிவபாபா. சொர்க்கத்தின் ஆஸ்தி
தருகிறார். இப்போது பாபா சொல்கிறார், என்னை நினைவு
செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். நான் உங்களுக்கு வழி
சொல்கிறேன். இப்போது பாபா சொல்கிறார், தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவர், ஞானக்கடலாக நான் இருக்கிறேன். ஞானமும்
சொல்லிக் கொண்டிருக்கிறேன். பாவனமாவதற்காக யோகமும் கற்றுத்
தந்து கொண்டிருக்கிறேன். பிரம்மாவின் உடல் மூலம் செய்தியை
கொடுத்துக் கொண்டிருக்கிறேன்-என்னை நினைவு செய்யுங்கள்.
தங்களின் 84 பிறவிகளை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு பக்தர்கள்
கோவில்களிலும் கும்ப மேளாவிலும் கிடைப்பார்கள். அங்கே சென்று
பதித-பாவன் கங்கையா அல்லது பரமாத்மாவா என்று நீங்கள் புரிய
வைக்க முடியும்.
ஆக, குழந்தைகளுக்கு இந்தக் குஷி இருக்க வேண்டும் - நாம் யாரிடம்
செல்கிறோம்? எவ்வளவு சாதாரணமாக உள்ளார்! பெருமையைக் காட்டவா?
பெரிய மனிதராகக் காட்டுவதற்கு சிவபாபா என்ன செய்வார்?
சந்நியாசிகளின் ஆடையையோ அணிந்து கொள்ள முடியாது. பாபா
சொல்கிறார், நானோ சாதாரண உடலை எடுத்துக் கொள்கிறேன். நீங்களே
ஆலோசனை சொல்லுங்கள், நான் என்ன செய்வது என்று. இந்த ரதத்தை
அலங்கரிக்கவா? அவர்கள் (பக்தியில்) உசேனின் குதிரையை பற்றி
கூறுகின்றனர். அதை அலங்கரிக்கின்றனர். இங்கே சிவபாபாவின்
ரதத்தைப் பிறகு காளைமாடாக (நந்தி) ஆக்கி விட்டுள்ளனர். காளை
மாட்டின் நெற்றியில் வட்ட-வட்டிவமான சிவனுடைய சித்திரத்தைக்
காட்டுகின்றனர். இப்போது சிவபாபா காளைமாட்டின் மீது எங்கிருந்து
வருவார்? சரி, கோவிலில் நந்தியை ஏன் வைத்துள்ளனர்? சங்கரின்
சவாரி எனச் சொல்கின்றனர். சூட்சுமவதனத்தில் சங்கரின் சவாரி
நடைபெறுகிறதா என்ன? இவையனைத்தும் பக்தி மார்க்கம். அது
டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தனக்குத் தானே உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்-இப்போது நான்
உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பேன். தன்னை சிவாலயத்திற்குச்
செல்வதற்குத் தகுதியுள்ள வனாக ஆக்கிக் கொள்வேன். நல்ல குழந்தை
ஆகி, ஸ்ரீமத் படி நடந்து பாபாவின் பெயரை விளங்கச் செய்வேன்.
2) இரக்க மனம் உள்ளவராகி, தமோபிரதானமான மனிதர்களை சதோபிரதானமாக
ஆக்க வேண்டும். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். இறப்பதற்கு
முன்பே அனை வருக்கும் பாபாவை நினைவு படுத்த வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அவர்களது மூன்று காலத்தையும்
தரிசனம் செய்ய வைக்கும் தெய்வீக நிலைக் கண்ணாடி ஆகுக
குழந்தைகளான நீங்கள் மனித ஆத்மாக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது
மூன்று காலத்தை யும் தரிசனம் செய்ய வைக்கும் தெய்வீக
நிலைக்கண்ணாடி ஆகுங்கள். நாம் நேற்று எப்படி இருந்தோம், இன்று
எப்படி இருக்கின்றோம், நாளை என்னவாக மாற உள்ளோம் என்பது
அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக தென்படவேண்டும். எப்போது இதனை
தெரிந்து அனுபவம் செய்வார்களோ அப்போது அனேக பிறவிகளான ஆசைகள்
மற்றும் தாகம் தனியப் பெற்றவராக முக்தி மற்றும் சொர்க்கம்
செல்ல வேண்டும், முழுமை பெறும் நேரம் இது என்பதை புரிந்து
கொண்டு சுலபமாகவே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற ஈர்ப்புடன்
வருவார்கள்.
சுலோகன்:
ஒரே பலம் ஒரே நம்பிக்கை இந்த பாடத்தில் சதா உறுதியாக இருந்தால்
கடலின் நடுவே சூறாவளியிலும் சுலபமாகவே கடந்தேறி விடுவீர்கள்.
அவ்யக்த இசாரா: ஆன்மீக ஆளுமை மற்றும் தூய்மை எனும்
தனித்தன்மையையும் கையாளுங்கள்
எப்போது நீங்கள் தூய்மையிலும் தனித்தன்மையுடன் விளங்குவீர்களோ
அப்போதே வாரிசுத் தன்மை வெளிப்படும். எல்லைக்குப்பபட்ட எந்த ஒரு
கவர்ச்சியின் பக்கமும் கண்கள் கவர்ந்து செல்லக்கூடாது. வாரிசு
என்றாலே அதிகாரி. எனவே இங்கே ஒருவர் ஒருபோதும் மாயையின்
அடிமையாகாது எப்போதம் அதிகாரி நிலையில் பெருமிதத்தில் இருப்பாரோ
அவேர அங்கேயும் அதிகாரி ஆகின்றார்.
|
|
|