16.06.24    காலை முரளி            ஓம் சாந்தி  03.03.20      பாப்தாதா,   மதுபன்


நல்ல (சுபமான) உணர்வு மற்றும் அன்பான உணர்வை வெளிப்படுத்தி கோபம் என்ற மிகப் பெரிய எதிரியின் மீது வெற்றி அடையுங்கள்.

இன்று பாப்தாதா தனது பிறவித் துணைவர்கள் மற்றும் சேவையில் துணையாக இருப்பவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார். இன்று உங்கள் அனைவருக்கும் கூட பாப்தாதா வின் அலௌகீக பிறந்தநாள் மற்றும் பிறவித் துணைவர்களின் பிறந்த நாளுக்கான குஷி இருக்கிறது. ஏன்? இப்படிப்பட்ட விடுபட்ட மற்றும் மிக அன்பான அலௌகீகப் பிறவி வேறு யாருக்கும் இருக்கவே முடியாது. தந்தையின் பிறந்த நாளே குழந்தையின் பிறந்த நாள் என்று ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது விடுபட்ட மற்றும் அன்பான அலௌகீக வைரத்திற்கு சமமான பிறந்த நாளை நீங்கள் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் அனைவருக்கும் இந்த விடுபட்ட மற்றும் அன்பான நினைவும் இருக்கிறது - இந்த அலௌகீக பிறப்பை, விசித்திரமான பிறப்பை சுயம் பகவான் தந்தை குழந்தைகளுக்கு கொண்டாடிக் கொண்டி ருக்கின்றார். பரம் ஆத்மா குழந்தைகளின், சிரேஷ்ட ஆத்மாக்களின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். உலகில் மனிதர்கள் வார்த்தையில் மட்டும் எங்களை பகவான், பரம் ஆத்மா படைத்தார் என்று கூறுகின்றனர். ஆனால் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை, அவர் நினைவிலேயே நடந்து கொள்வதும் இல்லை. நீங்கள் அனைவரும் அனுபவத்தில் கூறுகிறீர்கள் - நாம் பரமாத்மாவின் வம்சத்தினர்கள், பிரம்மாவின் வம்சத்தினர்கள். பரம் ஆத்மா நமது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். நாம் பரமாத்மாவின் பிறந்த நாளை கொண்டாடுகின்றோம்.

இன்று நாலாபுறங்களிலிருந்தும் இங்கு வந்திருக்கிறீர்கள், எதற்காக? வாழ்த்து கொடுப்பதற்கு மற்றும் வாழ்த்து அடைவதற்கு. ஆக பாப்தாதா விசேஷமாக தனது பிறவியின் துணைவர்களுக்கு வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சேவையில் துணையாக இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். வாழ்த்தின் கூடவே பரம பிரியமான முத்துக்கள், வைரங்கள், நகைகளின் மூலம் மழை பொழிந்து கொண்டிருக்கின்றார். அன்பின் முத்துக்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா! அன்பின் முத்துக்களை தெரிந்துள்ளீர்கள் தானே? மலர்களின் மழை, தங்க மழை அனைவரும் செய்கின்றனர். ஆனால் பாப்தாதா உங்கள் அனைவரின் மீதும் உயர்ந்த அன்பு, அலௌகீக அன்பு என்ற முத்துக்களின் மழை பொழிந்து கொண்டிருக்கின்றார். ஒரு மடங்கு அல்ல, பல பல பல மடங்கு உள்ளப்பூர்வமாக வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் அனைவரும் கூட உள்ளப்பூர்வமாக வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதுவும் பாப்தாதாவிடத்தில் வந்தடைந்து கொண்டிருக்கிறது. ஆக இன்று கொண்டாடக்கூடிய மற்றும் வாழ்த்துக்கான நாளாகும். கொண்டாடும் பொழுது என்ன செய்வீர்கள்? பேண்ட் வாசிப்பார் கள். பாப்தாதாவும் அனைத்துக் குழந்தைகளின் மனதில் குஷி என்ற பேண்ட், என்று கூறலாம், வாத்திய ஒலி கேட்டுக் கொண்டிருக்கின்றார். பக்தர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் அன்பில் மூழ்கி விடுகிறீர்கள். மூழ்க வருகிறது தானே? இவ்வாறு மூழ்குவது தான் சமம் ஆவதாகும்.

பாப்தாதா குழந்தைகளை தன்னிடமிருந்து தனிமைப்படுத்த முடியாது. குழந்தைகளும் கூட தனியாக இருக்க விரும்புவது கிடையாது. ஆனால் அவ்வபொழுது மாயாவின் விளையாட்டில் சிறிது தனிமை ஆகிவிடுகிறீர்கள். பாப்தாதா கூறுகின்றார் - நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றேன். ஆனால் குழந்தைகள் சேட்டை செய்வார்கள் தானே! மாயை சேட்டை செய்ய வைத்து விடுகிறது, உண்மையில் அவ்வாறு கிடையாது, மாயை தன்னுடையவராக மாற்றி விடுகிறது. பிறகு ஆதரவிலிருந்து தூரமாக்கி விடுகிறது. இருந்தாலும் கூட பாப்தாதா ஆதரவாகி நெருக்கத்தில் கொண்டு வருகின்றார். பாப்தாதா அனைத்து குழந்தைகளிடமும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் என்ன விரும்புகின்றீர்கள் என்ற கேள்வியை கேட்கின்றார்? இரட்டை அயல் நாட்டினருக்கு பிடித்தமான இரண்டு வார்த்தைகள் என்ன? (துணைவன் மற்றும் துணை). இவை இரண்டும் பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால் ஒரு கை உயர்த்துங்கள். பாரதவாசிகளுக்கு பிடித்திருக்கிறதா? துணைவனாகவும் ஆக வேண்டும் மற்றும் துணையும் அவசியமாகும். துணை யின்றி இருக்க முடியாது, துணைவன் இன்றியும் இருக்க முடியாது. ஆக உங்கள் அனைவருக்கும் என்ன கிடைத்திருக்கிறது? துணைவன் கிடைத்திருக்கிறாரா? ஆம் அல்லது இல்லை என்று கூறுங்கள்? (ஆம்) துணை கிடைத்திருக்கிறதா? (ஆம்). இப்படிப்பட்ட துணை மற்றும் துணைவன் முழு கல்பத்திலும் கிடைத்திருந்தாரா? கல்பத்திற்கு முன்பு கிடைத்திருந்தாரா? ஒருபோதும் தூர விலகி விடாத ஒரு துணைவன், எவ்வளவு தான் குறும்பு செய்தாலும் ஆதரவாகத் தான் இருப்பார். மேலும் உங்களது உள்ளத்தின் பிராப்திகள் அனைத்தையும் நிறைவேற்றுகின்றார். ஏதாவது குறை இருக்கிறதா? அனைவரின் உள்ளம் கூறுகிறதா? அல்லது நியமத்திற்காக ஆம் என்று கூறுகிறீர்களா? எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம் என்று பாடுகிறீர்கள். அடைந்து விட்டீர்களா? அல்லது அடைய வேண்டுமா? அடைந்து விட்டீர்களா? இப்பொழுது அடைவதற்கு ஒன்றுமில்லையா? அல்லது சிறிது ஆசைகள் இருக்கின்றதா? அனைத்து ஆசைகளும் நிறைவேறி விட்டதா? அல்லது பாக்கி இருக்கின்றதா? இருக்கின்றது என்று பாப்தாதா கூறுகின்றார். (தந்தையை வெளிப்படுத்தும் ஆசை பாக்கி இருக்கின்றது? அனைத்து குழந்தைகளுக்கும் தெரிய வேண்டும் என்பது தந்தையின் ஆசையாகும். தந்தை வந்திருக்கின்றார், சிலர் தெரியாமல் இருந்து விடலாமா! ஆக அனைவருக்கும் குறைந்தது, நமது சதா கால தந்தை வந்திருக்கின்றார் என்பது தெரிய வேண்டும் என்பது பாப்தாதாவின் விசேஷ ஆசையாகும். ஆனால் குழந்தைகளின் மற்ற எல்லைக்குட்பட்ட ஆசைகள் நிறைவேறி விட்டது, அன்பான ஆசைகள். மேடைக்கு வர வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர், இந்த ஆசை இருக்கிறதா? (இப்பொழுது சுயம் பாபா அனைவரிடத்திலும் வருகின்றார்? இந்த ஆசையும் நிறைவேறி விட்டதா? திருப்தி ஆத்மாக்களாக இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். ஏனெனில் அனைத்து ஆத்மாக்களும் புத்திசாலிகளாக இருக்கிறீர்கள். ஏனெனில் நேரம் எப்படியோ அப்படி சொரூபம் உருவாக்கியே தீர வேண்டும். ஆகையால் பாப்தாதாவும் நாடகத்தின் பந்தனத்தில் இருக்கிறார் அல்லவா! எனவே தான் அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு நேரத்திலும் திருப்தியாக இருக்கின்றனர் மற்றும் சதா திருப்திமணி யாக ஜொலித்துக் கொண்டே இருக்கின்றனர். ஏன்? எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டோம் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள். இது பிரம்மா பாபாவின் ஆதி அனுபவ வார்த்தை யாகும். எது பிரம்மா பாபாவின் வார்த்தையோ அதுவே அனைத்து பிராமணர்களின் வார்த்தை யாகும். எனவே பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் இதுவே மறுபரிசீலனை செய்வித்துக் கொண்டிருக்கின்றார் - சதா தந்தையின் துணையில் இருங்கள். தந்தை அனைத்து சம்பந்தங்களின் அனுபவம் செய்வித்திருக்கின்றார். தந்தை தான் அனைத்து சம்பந்தமாக இருக்கின்றார் என்று கூறுகிறீர்கள். சர்வ சம்பந்தங்களை நேரத்திற்கு தகுந்தாற்போன்று சம்பந்தத்தை காரியத்தில் ஏன் பயப்டுத்துவது கிடையாது? மேலும் இந்த சர்வ சம்பந்தத்தை நேரத்திற்கு தகுந்தாற் போன்று அனுபவம் செய்து கொண்டே இருந்தீர்கள் எனில் துணைவனாக இருப்பார், துணையாகவும் இருப்பார். வேறு எந்த துணைவர்களிடத்திலும் மனம், புத்தி செல்ல முடியாது. பாப்தாதா அனைத்து சம்பந்தங்களை முன் வந்து கொடுக்கிறார் - எனவே சர்வ சம்பந்தத்தின் சுகம் எடுத்துக் கொள்ளுங்கள். சம்பந்தங்களை காரியத்தில் பயன்படுத்துங்கள்.

சில குழந்தைகள் சில நேரங்களில் தன்னை தனியாக இருப்பதாக அல்லது சிறிது நிராசையின் அனுபவம் செய்கின்றனர் என்பதை பாப்தாதா பார்க்கும் போது கருணை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சிரேஷ்ட துணை இருக்கிறது, துணையை காரியத்தில் ஏன் பயன்படுத்துவது கிடையாது. பிறகு என்ன கூறுகிறீர்கள்? ஏன், ஏன். பாப்தாதா கூறியிருக்கின்றார் - ஏன் என்று கூறாதீர்கள். ஏன் என்பது எதிர்மறையானது, பறப்பது (பிளை) என்பது நேர்மறையாகும். எனவே ஏன் ஏன் என்று ஒருபோதும் கூறாதீர்கள், பறக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். தந்தையை துணையாக ஆக்கி பறக்கும் போது மஜா ஏற்படும். அவரது துணை மற்றும் துணைவன் இரண்டு ரூபத்தையும் முழு நாளும் காரியத்தில் பயன்படுத்துங்கள். இப்படிப்பட்ட துணைவன் பிறகு எப்போதாவது கிடைப் பாரா? புத்தியளவில் மற்றும் சரீர அளவில் இரண்டிலும் களைப்படைந்து விடும் போது உங்களுக்கு இரண்டு ரூபத்திலும் மாலிஷ் செய்வதற்கு தயாராக இருக்கின்றார். மனதை மகிழ்விப்பதற்கும் எவரெடியாக இருக்கின்றார். பிறகு எல்லைக்குட்பட்ட மன மகிழ்ச்சிக்கான அவசியமே இருக்காது. இவ்வாறு பயன்படுத்துவதற்கு வருகிறதா? அல்லது உயர்ந்த பாபா, ஆசிரியர், சத்குரு என்று நினைக்கிறீர்களா? ஆனால் சர்வ சம்பந்தம் இருக்கிறது. புரிந்ததா! இரட்டை அயல்நாட்டினர் புரிந்து கொண்டீர்களா?

நல்லது, அனைவரும் பிறந்த நாள் கொண்டாட வந்திருக்கிறீர்கள் அல்லவா! கொண்டாட வேண்டும் தானே! பிறந்த நாள் கொண்டாடும் போது, யாருடைய பிறந்த நாள் கொண்டாடுகிறீர்களோ அவருக்கு பரிசு கொடுப்பீர்களா? கொடுக்க மாட்டீர்களா? (கொடுப்போம்) ஆக இன்று நீங்கள் அனைவரும் தந்தையின் பிறந்த நாள் கொண்டா வந்திருக்கிறீர்கள். பெயரே சிவராத்திரி. குறிப்பாக தந்தைக்கு கொண்டாட வந்திருக்கிறீர்கள். கொண்டாட வந்திருக்கிறீர்கள் அல்லவா? இன்று பிறந்த நாளன்று என்ன பரிசு கொடுத்தீர்கள்? அல்லது வெறும் வண்ண விளக்குகள் மட்டும் எரிய விடுவது, கேக் கட் செய்வது இது தான் கொண்டாட்டமா? இன்று பரிசு என்ன கொடுத்தீர்கள்? அல்லது நாளை கொடுப்பீர்களா? சிறியது கொடுத்தாலும், பெரியதாக கொடுத்தாலும், பரிசு கொடுப்பார்கள் அல்லவா! ஆக என்ன கொடுத்தீர்கள்? யோசிக்கிறீர்கள். நல்லது, கொடுக்க வேண்டும் தானே? கொடுப்பதற்கு தயாராக இருக்கிறீர்களா? பாப்தாதா என்ன கூறுகிறாரோ அதை கொடுப்பீர்களா? அல்லது தனது விருப்பபடி கொடுப்பீர்களா? (பாப்தாதா என்ன கூறுகிறாரோ அதை கொடுப்போம்) பார்க்கலாம், சிறிது தைரியம் வைக்க வேண்டும். தைரியம் இருக்கிறதா? மதுவனத்தில் இருப்பவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? இரட்டை அயல்நாட்டினருக்கு தைரியம் இருக்கிறதா? கைகளை மட்டும் மிக நன்றாக உயர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது. சக்திகளிடம், பாண்டவர்களிடம் தைரியம் இருக்கிறதா? பாரதவாசிகளிடம் தைரியம் இருக்கிறதா? மிகவும் நல்லது. இதுவே தந்தைக்கு வாழ்த்தாக கிடைத்து விட்டது. கூறட்டுமா? யோசிக்க வேண்டியிருக்கும் என்று கூறமாட்டீர்கள் தானே? பார்க்கலாம் என்று கூறக் கூடாது. மெஜாரிடி ஆத்மாக்களிடம் பாப்தாதா ஒரு விசயத்தை பார்த்தார். மைனாரிடி அல்ல, மெஜாரிடி. என்ன பார்த்தார்? ஏதாவது பிரச்சனைக்கான சூழல் வரும் பொழுது மெஜாரிடி ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையில் கோபத்தின் அம்சம் விரும்பா விட்டாலும் வெளிப்பட்டு விடுகிறது. சிலரிடம் கோபம் மிகப் பெரிய ரூபத்தில் வருகிறது, சிலரிடம் ஆவேசத்தின் ரூபத்தில் வருகிறது, சிலரிடம் மூன்றாவது நம்பர் சிடு சிடு என்ற ரூபத்தில் வெளிப்படுகிறது. சிடுசிடு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்கிறீர்களா? அதுவும் கோபத்தின் அம்சமாகும், லேசானது. மூன்றாவது நம்பர் அல்லவா, அதனால் அது லேசாக இருக்கிறது. முதல் நம்பர் ஜோராக இருக்கிறது, இரண்டாவது அதை விட குறைந்தது. இன்றைய நாட்களில் அனைவரின் மொழியும் ராயலாக ஆகிவிட்டது. ராயல் ரூபத்தில் என்ன கூறுகிறீர்கள்? பிரச்சனை இவ்வாறு இருந்தால் ஆவேசம் வரத் தான் செய்யும். ஆக இன்று பாப்தாதா இன்று அனைவரிடத் திலும் இந்த பரிசு பெற விரும்புகின்றார் - கோபத்தை விடுங்கள், ஆனால் கோபத்தின் அம்சம் கூட இருக்கக் கூடாது. ஏன்? கோபத்தில் வந்து அவமதிப்பு செய்கிறீர்கள். ஆனால் கோபம் இருவருக்கு நடுவில் ஏற்படுகிறது. தனியாக ஏற்படுவது கிடையாது, இருவருக்கு நடுவில் ஏற்படும் போது தென்பட்டு விடுகிறது. மனதளவில் கூட ஒருவர் மீது வெறுப்புணர்வின் அம்சம் இருந்தாலும் மனதளில் அந்த ஆத்மாவின் மீது கண்டிப்பாக ஆவேசம் வரும். ஆக அவமதிப்பிற்கான இந்த காரணம் பாப்தாதாவிற்கு பிடிக்கவில்லை. எனவே கோப உணர்வு துளியளவும் உருவாகக் கூடாது. பிரம்மச்சரியத்தின் மீது கவனம் கொடுப்பது போன்று காமம் மிகப் பெரிய எதிரி, கோபம் மிகப் பெரிய எதிரி என்று பாடப்பட்டிருக்கிறது. நல்ல (சுபமான) உணர்வு, அன்பான உணர்வு வெளிப்படுவது கிடையாது. பிறகு மனதை கெடுத்துக் கொள்கிறீர்கள். அந்த ஆத்மாவை தூர விலக்கி வைத்து விடுகிறீர்கள். எதிரில் வரமாட்டீர்கள், பேசமாட்டீர்கள். அவரது விசயத்தை ஒதுக்கி விடுகிறீர்கள், முன்னேற விடமாட்டீர்கள். இவை அனைத்தும் வெளியில் உள்ளவர் களுக்கும் தெரிகிறது, பிறகு இவருக்கு இன்று உடல் நிலை சரியில்லை, வேறு ஒன்றுமில்லை என்று கூறிவிடுகிறீர்கள். ஆக பிறந்த நாள் பரிசாக இதை கொடுக்க முடியுமா? முயற்சிக்கிறேன் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். பரிசு கொடுப்பதற்கு யோசிப்பவர்கள், முயற்சிப்பவர்கள் கை உயர்த்துங்கள். உண்மையான உள்ளத்தில் தான் பகவான் திருப்தி அடைகின்றார். (சில சகோதர, சகோதரிகள் எழுந்து நிற்கின்றனர்) மெதுவாக எழுந்து கொண்டிருக்கிறீர்கள். உண்மை கூறியதால் வாழ்த்துக்கள். முயற்சிக்கிறேன் என்று கூறியவர்களுக்கு சரி, முயற்சி செய்யுங்கள், ஆனால் அதற்கு எவ்வளவு காலம் தேவை? ஒரு மாதம் தேவையா? 6 மாதங்கள் தேவையா? எவ்வளவு காலம் தேவை? விட்டு விடுவீர்களா? அல்லது விடுவதற்கான இலட்சியமே கிடையாதா? முயற்சிக்கிறேன் என்று கூறியவர்கள் மீண்டும் எழுந்து நில்லுங்கள். இரண்டு, மூன்று மாதங்களில் முயற்சி செய்து விட்டு விடுவேன் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். 6 மாதங்கள் தேவை என்று நினைப்பவர்கள் 6 மாதங்கள் முடிந்ததும் குறைக்க வேண்டும். இந்த விசயத்தை விட்டு விடக் கூடாது. ஏனெனில் மிகவும் அவசியமாகும். இதில் அவமதிப்பு தென்படுகிறது. வாயில் கூறாதீர்கள், தோற்றம் வெளிப்படுத்துகிறது. ஆனால் யாரெல்லாம் தைரியம் வைத்தீர்களோ, அவர்கள் அனைவரின் மீதும் பாப்தாதா ஞானம், அன்பு, சுகம், சாந்திக்கான முத்து மழையை பொழிந்து கொண்டிருக்கின்றார். நல்லது.

கைமாறாக பாப்தாதா அனைவருக்கும் விசேஷமாக இந்த வரதானம் கொடுத்துக் கொண்டிருக் கின்றார் - தவறுதலாக, விரும்பா விட்டாலும் சில நேரம் கோபம் வந்து விட்டாலும் மனதார இனிமையான பாபா என்று கூறும் போது தந்தையின் அதிகப்படியான உதவி தைரியமானவர் களுக்கு கண்டிப்பாக கிடைத்துக் கொண்டே இருக்கும். இனிமையான பாபா என்று கூற வேண்டும், வெறும் பாபா என்று கூறக் கூடாது. இனிமையான பாபா என்று கூறும் போது உதவி கிடைக்கும், கண்டிப்பாக கிடைக்கும். ஏனெனில் இலட்சியம் வைத்திருக்கிறீர்கள் அல்லவா! இலட்சியத்தின் மூலம் இலட்சணம் வந்தே ஆக வேண்டும். மதுவனத்தில் உள்ளவர்கள் கை உயர்த்துங்கள். செய்தே ஆக வேண்டும் தானே! (ஆம்) வாழ்த்துக்கள். மிகவும் நன்று. இன்று விசேஷமாக மதுவனத்தில் உள்ளவர்களுக்கு டோலி கொடுப்பேன். அதிக உழைப்பு செய்கின்றனர். கோபத் திற்காக கொடுக்கவில்லை, உழைப்பிற்காக கொடுப்பேன். அனைவரும் புரிந்து கொண்டு கை உயர்த்திருக்கிறீர்கள், ஆகையால் டோலி கொடுப்பேன். மிக நன்றாக உழைப்பு செய்கிறீர்கள். சேவையின் மூலம் அனைவரையும் திருப்திபடுத்துவது - இது மதுவனத்தின் உதாரணமாகும். ஆகையால் இன்று வாயை இனிப்பாக்குவேன். இவர்களது இனிப்பான வாயை பார்த்து நீங்கள் அனைவரும் கூட வாயை இனிப்பாக்கிக் கொள்ளுங்கள், குஷி ஏற்படும் அல்லவா! இதுவும் பிராமணக் குடும்பத்தின் ஒரு நாகரீகமாகும். இன்றைய நாட்களில் நீங்கள் அமைதிக்கான நாகரீகம் (கல்சர் ஆப் பீஸ்) என்ற நிகழ்ச்சி கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா! எனவே இதுவும் முதல் நம்பர் நாகரீகமாகும் - பிராமண குலத்தின் நாகரீகமாகும். பாப்தாதா பார்த்தார் - தாதி பரிசு கொடுக்கும் போது அதில் ஒரு துணிப் பையும் இருக்கும். அதில் குறைவாக பேசுங்கள், மெதுவாக பேசுங்கள், இனிமையாக பேசுங்கள் என்று எழுதப்பட்டிருக்கும். ஆக இன்று பாப்தாதா இந்த பரிசு கொடுத்துக் கொண்டிருக்கின்றார். துணிப் பை கொடுக்கவில்லை, வரதானமாக இந்த வார்த்தைகளை கொடுக்கின்றார். ஒவ்வொரு பிராமணனின் முகம் மற்றும் நடத்தையில் பிராமண நாகரீகம் வெளிப்பட வேண்டும். நிகழ்ச்சிகள் செய்வீர்கள், சொற்பொழிவும் செய்வீர்கள். ஆனால் முதலில் தனக்குள் இந்த நாகரீகம் அவசியமாகும். ஒவ்வொரு பிராமணனும் புன்முறுவலுடன் ஒவ்வொருவரின் சம்பந்தத்தில் வர வேண்டும். சிலர் எப்படி உள்ளனர், சிலர் எப்படியில்லை. மற்றவர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி! அவரைப் பார்த்து நீங்கள் நாகரீகத்தை விட்டு விடாதீர்கள். கடந்து போன விசயங்களை மறந்து விடுங்கள். புது கலாச்சார நாகரீகத்தை வாழ்க்கையில் காட்டுங்கள். இப்பொழுது காட்ட வேண்டும், சரி தானே! (அனைவரும் ஆம் என்று கூறினர்).

இது மிகவும் நன்றாக இருக்கிறது, இரட்டை அயல்நாட்டினர் சரி என்று கூறுவதில் நன்றாக இருக்கின்றனர். பாரதவாசிகளுக்கு சரி என்று கூறுவது ஒரு நியமமாகவே இருக்கிறது. மாயாவிடம் முடியாது என்று கூறுங்கள் போதும். ஆத்மாக்களிடம் சரி, சரி என்று கூறுங்கள். மாயாவிற்கு இல்லை, முடியாது என்று கூறுங்கள். நல்லது. அனைவரும் பிறந்த நாள் கொண்டாடி விட்டீர்களா? கொண்டாடினீர்கள், பரிசு கொடுத்து விட்டீர்கள், பரிசு அடைந்து விட்டீர்கள்.

நல்லது. உங்கள் கூடவே மற்ற இடங்களிலும் வேறு சபைகள் கூட்டப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சிறிய சபை, சில இடங்களில் பெரிய சபை - அனைவரும் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பாப்தாதா இதையே கூறுகின்றார் - இன்றைய நாளில் நீங்கள் அனைவரும் கூட பரிசு கொடுத்தீர்களா? இல்லையா? ஆமாம் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது, தூரத்தில் அமர்ந் திருந்தாலும் எதிரில் கேட்டுக் கொண்டிருப்பது போன்று இருக்கிறது. ஏனெனில் விஞ்ஞானிகள் அந்த அளவிற்கு முயற்சி செய்கின்றனர், அதிக உழைப்பு செய்கின்றனர் அல்லவா! ஆகையால் அதன் அதிகப் படியான இலாபம் பிராமணர்களுக்கு ஏற்பட வேண்டும். எப்போது சங்கமயுகம் ஆரம்பம் ஆனதோ, அப்போதிலிருந்தே இந்த விஞ்ஞான சாதனங்களுக்கும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. சத்யுகத் தில் தேவதை ரூபத்தில் உங்களுக்கு இந்த விஞ்ஞானம் உதவி செய்யும். ஆனால் சங்கமயுகத் திலும் விஞ்ஞான சாதனம் பிராமணர்களாகிய உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது, சேவைக்காகவும் கிடைக்கிறது. பிரத்டசம் செய்வதிலும் கூட இந்த விஞ்ஞான சாதனம் மிகவும் பரந்த ரூபத்தில் உதவி செய்யும். ஆகையால் விஞ்ஞானத்திற்கு நிமித்தமாக இருப்பவர்களுக்கும் பாப்தாதா உழைப்பிற்கான வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்.

மதுவனத்திலும் உள்நாடு, அயல்நாட்டிலிருந்து அழகான கார்ட், கடிதம் மற்றும் அன்பு நினைவிற் கான செய்தி அதிகம் அனுப்பியிருப்பதை பாப்தாதா பார்த்தார். பாப்தாதா அவர்களுக்கும் விசேஷமாக அன்பு நினைவுகள் மற்றும் பிறந்த நாளிற்கான பல கோடி மடங்கு வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அனைத்து குழந்தைகளும் பாப்தாதாவின் கண்களின் எதிரில் வந்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் அட்டை (கார்ட்) மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் பாப்தாதா குழந்தைகளை கண்களால் பார்த்துக் கொண்டிருக்கின்றார். மிக அன்பாக அனுப்பியிருக்கிறீர்கள். அதே அன்புடன் பாப்தாதா அதை ஏற்றுக் கொண்டார். சிலர் தங்களது மனநிலையைப் பற்றியும் எழுதியிருக்கின்றனர். பாப்தாதா கூறுகின்றார் - பறந்து செல்லுங்கள் மற்றும் பறக்க வையுங்கள். பறப்பதன் மூலம் அனைத்து விசயங்களும் கீழே இருந்து விடும். மேலும் நீங்கள் சதா உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையுடன் உயர்வாக இருப்பீர்கள். விநாடியில் முற்றுப் புள்ளி மற்றும் சக்திகளின், குணங்களின் பங்கை வெளிப்படுத்துங்கள். நல்லது.

நாலாப்புறங்களிலும் உள்ள சர்வ சிரேஷ்ட பிராமண ஆத்மாக்களுக்கு, சதா தந்தையின் துணையில் இருக்கக் கூடியவர்களுக்கு, தந்தையை துணைவனாக ஆக்கிக் கொள்ளக் கூடிய அன்பான ஆத்மாக் களுக்கு, சதா தந்தையின் குணக் கடலில் மூழ்கியிருந்து பாப்தாதாவிற்கு சமம் ஆகக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா விநாடியில் முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய மாஸ்டர் சிந்து சொரூப ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் கோடி மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதா நமஸ்தே செய்கின்றார், இன்றும் நமஸ்தே.

வரதானம்:
தூய்மையின் சக்திசாலியான திருஷ்டி, விருக்தியின் மூலம் அனைத்து பிராப்திகளையும் செய்விக்கக் கூடிய துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர் ஆகுக.

விஞ்ஞான மருந்துக்களில் அல்பகால சக்தி இருக்கிறது. அது துக்கம், வலியை போக்கி விடுகிறது. ஆனால் தூய்மையின் சக்தி அதாவது அமைதி சக்தியில் ஆசீர்வாதத்தின் சக்தி இருக்கிறது. தூய்மையின் இந்த சக்திசாலியான திருஷ்டி மற்றும் விருக்தி சதா கால பிராப்தி செய்விக்கக் கூடியதாகும். அதனால் தான் உங்களது ஜட சிலையின் முன் - கருணை காட்டுங்கள், இறக்கம் காட்டுங்கள் என்று கூறி கருணை மற்றும் ஆசிர்வாதம் கேட்கின்றனர். சைத்தன்ய ரூபத்தில் இவ்வாறு மாஸ்டர் துக்கத்தை நீக்கி சுகம் கொடுத்து, கருணை காட்டியுள்ளீர்கள். எனவே தான் பக்தியிலும் பூஜிக்கப்படுகிறீர்கள்.

சுலோகன்:
நேரத்தின் அருகாமைக்கான ஆதாரம் உண்மையான தபஸ்யா அல்லது சாதனை என்பது தான் எல்லையற்ற வைராக்கியமாகும்.

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை, அகில உலக யோகா தினமாகும். அனைத்து பிராமணர்களும் குழுவாக மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை விசேஷமாக தனது மாஸ்டர் வள்ளல் சொரூபத்தில் நிலைத்திருந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் மனதின் மூலம் சர்வசக்திகளை தானம் கொடுத்து, வரதானம் கொடுத்து நிறைந்த அனுபவம் செய்விக்க வேண்டும்.