16-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் கல்வியை
கற்க வேண்டும் மேலும் கற்பிக்கவும் வேண்டும். இதில்
ஆசீர்வாதத்திற்கான விஷயம் இல்லை. தந்தையை நினைவு செய்தீர்கள்
என்றால் அனைத்து துக்கமும் விலகி விடும் என்று அனைவருக்கும்
தெரிவியுங்கள்.
கேள்வி:
மனிதர்களுக்கு என்னென்ன கவலைகள்
இருக்கின்றன? குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த கவலையும் இல்லை,
ஏன்?
பதில்:
இந்த சமயத்தில் மனிதர்களுக்கு
கவலையே கவலைதான் - குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றாலும் கவலை,
குழந்தை இறந்து விட்டாலும் கவலை, சிலருக்கு குழந்தை பிறக்க
வில்லை என்றாலும் கவலை, சிலருக்கு அதிகமாக தானியங்களை பதுக்கி
வைத்து போலீஸ் அல்லது வருமான வரித்துறையினரோ வந்து விட்டால்
கவலை...... இது அழுக்கான உலகம், துக்கம் கொடுக்க கூடியதாகும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால்,
உங்களுக்கு சத்குரு பாபா கிடைத்திருக்கிறார். கவலைகளிலிருந்து
விடுவிப்பவரே, சுவாமி, சத்குரு...... என்கிறார்கள். இப்போது
நீங்கள் எங்கு கவலையே இல்லையோ அந்த உலகத்திற்குச் செல்கிறீர்கள்.
பாடல்:
நீங்கள் அன்பின் கடல்.....
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். அதன்
அர்த்தத்தை யும் புரிந்துக் கொள்கிறார்கள். நாமும் மாஸ்டர்
அன்புக் கடலாக மாற வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள்.
நான் எப்படி அன்புக் கடலாக இருக்கிறேனோ அது போன்று மிகவும்
அன்போடு இருக்க வேண்டும் என தந்தை சகோதரர்களாகிய உங்களுக்குக்
கூறுகின்றார். தேவதைகள் மீது மிகவும் அன்பு இருக்கிறது. எவ்வளவு
அவர்களிடம் அன்பு செலுத்துகின்றனர், பிரசாதம் படைக்கின்றனர்.
இப்போது நீங்கள் தூய்மையாக வேண்டும். இது பெரிய விஷயம் இல்லை.
இது மிகவும் மோசமான உலகம் ஆகும். ஒவ்வொரு விஷயத்திற்கும் கவலை
இருக் கிறது. துக்கத்திற்குப் பிறகு துக்கமே தான் இருக்கிறது.
இதற்குத் துக்க தாமம் என்று பெயர். போலீஸோ, வருமான
வரித்துறையினரோ வருகிறார்கள் என்றால் எத்தனை மனிதர்களுக்கு
வீழ்ச்சி (பயம்) ஏற்படுகிறது. கேட்கவே கேட்காதீர்கள். சிலர்
அதிகமாக தானியத்தைப் பதுக்கி வைக்கிறார்கள். போலீஸ் வந்தது
என்றால், (பயத்தால்) முகம் வெளுத்துப் போகிறார்கள். இது
எப்படிப்பட்ட அழுக்கு உலகமாக இருக்கிறது. நரகம் அல்லவா?
சொர்க்கத்தை நினைக்கிறார்கள். நரகத்திற்குப் பிறகு சொர்க்கம்,
சொர்க்கத்திற்குப் பிறகு நரகம் என இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே
இருக்கிறது. இப்போது சொர்க்கவாசியாக மாற்றுவதற்காக தந்தை
வந்திருக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். நரகவாசியிலிருந்து
சொர்க்கவாசியாக மாற்றுகிறார். அங்கே விகாரங்கள் இல்லை.
ஏனென்றால், இராவணன் இல்லை. அதுவே சம்பூரண நிர்விகார சிவாலயம்
ஆகும். இது வேசியாலயம் ஆகும். இப்போது சிறிது பொறுத்துக்
கொள்ளுங்கள், இந்த உலகத்தில் சுகம் இருக்கிறதா அல்லது துக்கம்
இருக்கிறதா என்பது அனைவருக்கும் தெரிந்து விடும். சிறிது
நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டாலே மனிதர்களின் நிலை எப்படி
இருக்கிறது. சத்யுகத்தில் கவலை படுவதற்குரிய விஷயம் எதுவும்
இல்லை. இங்கேயோ நிறைய கவலைகள் உள்ளது. குழந்தைக்கு நோய் வந்தால்
கவலை, குழந்தை இறந்து போனால் கவலை, கவலையே கவலை தான்.
கவலையிலிருந்து விடுவியுங்கள் சுவாமி..... அனைவருக்கும் சுவாமி
ஒருவர் தான் அல்லவா? நீங்கள் சிவபாபாவின் முன்பு அமர்ந்திருக்
கிறீர்கள். இந்த பிரம்மா ஒன்றும் குரு இல்லை. இவரோ பாக்கியசாலி
ரதம் ஆவார். பாபா இந்த பாக்கிய ரதம் மூலமாக உங்களைப் படிக்க
வைக்கிறார். அவர் ஞானக்கடல் ஆவார். உங்களுக்குக் கூட அனைத்து
ஞானமும் கிடைக்கிறது. நீங்கள் அறியாத தேவதை யாரும் இல்லை. உண்மை
மற்றும் பொய்யின் பகுத்தறிவு உங்களிடம் இருக்கிறது. உலகத்தில்
யாருக்கும் தெரியவில்லை. உண்மையான கண்டம் இருந்தது. இப்போது
பொய்யாகி இருக்கிறது. இது யாருக்கும் தெரியவில்லை. உண்மை யான
கண்டத்தை யார் எப்போது ஸ்தாபனை செய்தார். இதுவே அறியாமையின்
இருட்டான இரவாகும். தந்தை வந்து வெளிச்சம் தருகிறார்.
உங்களுடைய வழியைப் பற்றி உங்களுக்குத் தான் தெரியும் என
பாடுகிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அவர் ஒருவரே. மற்றபடி
அனைத்தும் படைப்பாகும். அவரே எல்லயைற்ற தந்தை படைக்கக் கூடியவர்
ஆவார். அந்த எல்லைக்குட்பட்ட தந்தை இரண்டு, நான்கு குழந்தைகளைப்
படைக்கிறார். குழந்தை இல்லை என்றால் கவலை ஏற்படுகிறது. அங்கே
இது போன்ற விஷயங்கள் இல்லை. ஆயுஷ்வான் பவ, செல்வந்தர் ஆகுக......
நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் எந்த ஆசீர்வாதமும்
கொடுப்பதில்லை. இது படிப்பல்லவா? நீங்கள் டீச்சர். நீங்கள்
சிவபாபாவை நினைத்தால் விகர்மம் வினாசம் ஆகும் என்று மட்டும்
கூறுகிறீர்கள். இதுவும் புரிந்து விட்டது அல்லவா. இதற்கு தான்
சகஜ யோகம் அல்லது நினைவு என்று பெயர். ஆத்மா அழிவற்றது. சரீரம்
அழியக் கூடியது. நானும் அழியாதவன் என்று பாபா கூறுகிறார்.
தூய்மை இல்லாத எங்களை வந்து தூய்மை யாக்குங்கள் என்று நீங்கள்
என்னை அழைத்தீர்கள். ஆத்மா தான் கூறுகிறது! அசுத்தமான ஆத்மா,
மகான் ஆத்மா என்று கூறப்படுகிறது. தூய்மை இருந்தால் சுகம்,
சாந்தி கூட இருக்கும்.
இதுவே, புனிதத்திலும் புனிதமான சர்ச் (தேவாலயம்) ஆகும்.
கிறிஸ்துவர்களுடையது புனிதமான சர்ச் கிடையாது. அங்கே விகாரிகள்
செல்கின்றனர். இங்கே விகாரிகள் வருவதற்கு கட்டளை (அனுமதி) இல்லை.
ஒரு கதை கூட இருக்கிறது அல்லவா? இந்திர சபையில் ஒரு தேவதை
யாரையோ மறைத்து அழைத்து சென்றது, அவருக்குத் (இந்திரன்)
தெரிந்ததும் அவர்களுக்கு கல்லாகுக என்ற சாபம் கிடைத்து. இங்கே
சாபம் போன்ற விஷயம் எதுவும் இல்லை. இங்கேயோ ஞான மழை பொழிகிறது.
தூய்மையற்றோர் யாரும் இந்த புனிதமான இடத்தில வர முடியாது. ஒரு
நாள் இதுவும் நடக்கும். அரங்கம் மிகவும் பெரியதாக மாறும். இதுவே,
புனிதத்திலும் புனித மான ஸ்தலம் ஆகும். நீங்களும்
புனிதமாகிறீர்கள். விகாரம் இல்லாமல் இந்த சிருஷ்டி எப்படி
இயங்கும் என மனிதர்கள் நினைக்கிறார்கள். இது எப்படி நடக்கும்.
தன்னைப்பற்றிய ஞானம் இருக்கிறது. தேவதைகளுக்கு முன்பு தாங்கள்
சர்வ குணம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள், நாங்கள் பாவியாக
இருக்கிறோம் என கூறுகிறார்கள். எனவே சொர்க்கம் என்பது
புனிதத்திலும் புனிதமானது. அவர்களே 84 பிறவிகள் எடுத்து
புனிதத்திலும் புனிதமாக மாறுகிறார்கள். அது பரிசுத் தமான உலகம்
ஆகும். இது அழுக்கான உலகம் ஆகும். குழந்தை பிறந்ததும்
மகிழ்ச்சியில் கொண்டாடு கிறார்கள். நோய் ஏற்பட்டு விட்டால்
முகம் வெளுத்துப் போகிறது. இறந்து விட்டால் ஒரேயடியாக
பைத்தியமாகி விடுகிறார்கள். இவ்வாறும் சிலர் ஆகிறார்கள்.
இப்படிப்பட்டவர் களையும் அழைத்து வருகிறார்கள். பாபா
இவர்களுடைய குழந்தை இறந்து போனதால் புத்தி கெட்டு விட்டது.
என்கின்றனர். இது துக்கத்தின் உலகம் அல்லவா? இப்போது பாபா
சுகமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே ஸ்ரீமத்படி
நடக்க வேண்டும். குணமும் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். யார்
செய்வார்களோ அவர்களே அடைவார்கள். தெய்வீக நடத்தை வேண்டும்.
பள்ளிக் கூடத்தில் பதிவேட்டில் நடத்தை பற்றி கூட எழுதுகிறார்கள்.
ஒரு சிலர் வெளியில் அடி, தடியில் ஈடுபடுகிறார்கள். தாய்
தந்தையருக்குக் கூட தொல்லை தருகிறார்கள். இப்போது பாபா நம்மை
சாந்திதாமம் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். இதற்குத்
தான் அமைதியின் டவர் என்று கூறப்படுகிறது. அதாவது அமைதியின்
உச்சம். அங்கே ஆத்மாக்கள் வசிக்கின்றன. அதுவே அமைதியின் டவர்
ஆகும். சூட்சுமவதனத்தில் சைகை, அதனுடைய காட்சிகள் நீங்கள்
பார்த்திருக்கிறீர்கள். மற்றபடி அதில் எதுவும் இல்லை இதுவும்
குழந்தைகளுக்கு காட்சியாகக் கிடைத்திருக்கிறது. சத்யுகத்தில்
வயதாகி விட்டது என்றால் மகிழ்ச்சியில் உடலை விடுகிறார்கள். இது
84 பிறவிகளின் பழைய உடல் ஆகும். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள்,
இப்போது அழுக்காகி விட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார்.
இப்போது பாபா உங்களை தூய்மை யாக்குவதற்காக வந்திருக்கின்றார்.
நீங்கள் என்னை அழைத்தீர்கள் அல்லவா? ஜீவாத்மாவும் அசுத்தமாகி
யிருக்கிறது. பிறகு அதுவே தூய்மையாகிறது. நீங்கள் இந்த தேவி
தேவதா வம்சத்தினர் அல்லவா. இப்போது அசுர குலத்தினராக
இருக்கிறீர்கள். அசுர மற்றும் ஈஸ்வரிய அல்லது தெய்வீக குலத்தில்
எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இது உங்களுடைய பிராமண குலம்
ஆகும். வம்சம் என்று ராஜ வம்சத்திற்குக் கூறப்படுகிறது. அங்கே
இராஜ்யம் நடக்கிறது. இங்கே இராஜ்யம் இல்லை. கீதையில் பாண்டவர்
மற்றும் கௌரவர்களின் இராஜ்யம் என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால்
அவ்வாறு இல்லை.
நீங்கள் ஆன்மீகக் குழந்தைகள். இனிமையான குழந்தைகளே! மிக மிக
இனிமையாக மாறுங்கள் என பாபா கூறுகின்றார். அன்பின் கடல்
ஆகுங்கள். தேக உணர்வின் காரணமாகத்தான் அன்புக் கடல் ஆகவில்லை.
ஆகவே, பிறகு நிறைய தண்டனைகள் அடைய வேண்டியிருக்கும். ஒரு புறம்
தண்டனை மற்றும் ரொட்டி கிடைக்கிறது. சொர்க்கத்திற்குச்
செல்வீர்கள். ஆனால் தண்டனை நிறைய அடைவீர்கள். தண்டனைகள் எப்படி
கிடைக்கிறது? அது கூட குழந்தைகளாகிய உங்களுக்கு காட்சிகள்
கிடைத்திருக்கிறது. மிகவும் அன்போடு நடந்துக் கொள்ளுங்கள்.
இல்லை என்றால் கோபத்தின் அம்சமாகி விடுகிறது என்று பாபா புரிய
வைக்கிறார். நம்மை நரகத்திலிருந்து வெளியே எடுத்து
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்கு தந்தை கிடைத்திருக்கிறார்.
எனவே நன்றி கூறுங்கள். தண்டனைகள் அடைவது மிகவும் கெட்டது.
சத்யுகத்தில் அன்பான இராஜ்யம் இருக்கும் என அறிகிறீர்கள்.
அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. இங்கேயோ சிறிய விஷயத்
திற்குக் கூட முகம் மாறி விடுகிறது. நான் தூய்மை இல்லாத
உலகத்தில் வந்திருக்கிறேன், என்னை தூய்மை இல்லாத உலகத்தில் தான்
அழைத்தீர்கள் என பாபா கூறுகிறார். பிறகு பாபா அனைவரையும்
அமிர்தம் குடியுங்கள் என்று அழைக்கிறார். விஷம் மற்றும்
அமிர்தத்தைப் பற்றி ஒரு புத்தகம் வெளி வந்துள்ளது. புத்தகம்
எழுது பவருக்கு பரிசு கிடைத் திருக்கிறது. புகழ் வாய்ந்தது.
என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள். உங்களுக்கு ஞான
அமிர்தத்தைக் குடிக்க வைக்கிறேன். நீங்கள் ஏன் விஷத்தை
அருந்துகிறீர்கள் என பாபா கேட்கிறார். ரக்ஷா பந்தன் கூட
இச்சமயத்தின் நினைவு சின்னம் அல்லவா? இது கடைசி பிறவி, தூய்மை
ஆவதற்கு உறுதி மொழி எடுங்கள் என அனைவருக்கும் பாபா கூறுகின்றார்.
தூய்மையானால் யோகத்தில் இருந்தால் பாவம் விலகிப் போகும். நாம்
தந்தையின் நினைவிலிருக்கிறோமா அல்லது இல்லையா என உங்கள் மனதிடம்
கேளுங்கள். குழந்தைகளை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள் அல்லவா?
மனைவி கணவனை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார் அல்லவா? இவர் யார்?
பகவான் வாக்கு, நிராகாரர். நான் இவருடைய (ஸ்ரீகிருஷ்ணரின்) 84
பிறவிக்குப் பிறகு மீண்டும் சொர்க்கத்திற்கு அதிபதியாக
மாற்றுகிறேன். இப்போது மரம் சிறியதாக இருக்கிறது. நிறைய
மாயையின் புயல் வீசுகிறது. இது அனைத்தும் குப்தமான விஷயங்கள்
ஆகும். குழந்தைகளே! நினைவு யாத்திரையில் இருங்கள். மேலும்
தூய்மையாகுங்கள் என்று பாபா கூறுகிறார். இங்கே தான் முழு
இராஜ்யமும் உருவாக வேண்டும். கீதையில் போரை காண்பிக்கிறார்கள்.
பாண்டவர்கள் மலையில் சென்று கரைந்து இறந்து விட்டனர். அவ்வளவு
தான் ரிசல்ட் ஒன்றுமே இல்லை.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சிருஷ்டியின் முதல், இடை, கடையை
அறிகிறீர்கள். பாபா ஞானக்கடல் அல்லவா. அவரே பரமாத்மா ஆவார்.
ஆத்மாவின் ரூபம் என்ன? இது யாருக்கும் தெரியவில்லை. உங்களுடைய
புத்தியில் அவர் புள்ளியாக இருக்கிறார். உங்களிலும் ஒரு சிலர்
யதார்த்தமாகப் புரிந்துக் கொள்ளவில்லை. பிறகு புள்ளியை எப்படி
நினைவு செய்வது என்கிறார்கள். எதையும் புரிந்துக் கொள்ளவில்லை.
சிறிது கேட்டால் கூட ஞானம் அழிவதில்லை என்று பாபா கூறுகிறார்.
ஞானத்தில் வந்து பிறகு சென்று விடுகிறார்கள். ஆனால் கொஞ்சம்
கேட்டாலும் சொர்க்கத்திற்கு நிச்சயம் வருவார்கள். யார் நிறைய
கேட்கிறார்களோ, தாரணை செய்கிறார்களோ இராஜ்யத்தில் வந்து
விடுவார்கள். சிறிது கேட்பவர்கள் பிரஜையில் வருவார்கள்.
இராஜ்யத்தில் ராஜா ராணி போன்ற அனைவரும் இருக்கிறார்கள் அல்லவா?
அங்கே அமைச்சர் கிடையாது. இங்கே விகார ராஜாக்களுக்குத் தான்
அமைச்சர் வைக்க வேண்டி இருக்கிறது. பாபா உங்களை மிகவும் விசால
புத்தி உடையவராக மாற்றுகிறார். அங்கே அமைச்சரின் அவசியம் இல்லை.
சிங்கமும் ஆடும் இணைந்து தண்ணீர் குடிக்கிறது. நீங்களும் உப்பு
தண்ணீர் ஆகாதீர்கள். பாலும் சர்க்கரையும் போன்று ஆகுங்கள் என
பாபா புரிய வைக்கிறார். பால் மற்றும் சர்க்கரை இரண்டும் நல்ல
பொருட்கள் அல்லவா. கருத்து வேறுபாடு எதுவும் வைக்காதீர்கள்.
இங்கே மனிதர்கள் எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இது
பயங்கரமான நரகம் ஆகும். நரகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாபா வந்து வெளியே எடுக்கிறார். வெளியே வந்து விட்டு மீண்டும்
மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் மற்றவர்களை எடுப்பதற்காகச்
செல்கிறார்கள். பிறகு தானும் மூழ்கி விடுகிறார்கள். ஆரம்பத்தில்
பலரை மாயை என்ற முதலை பிடித்து விட்டது. ஒரேயடியாக முழுவதுமாக
விழுங்கி விட்டது. சிறிது அடையாளம் கூட இல்லை. ஒரு சிலரின்
அடையாள மாவது இருக்கிறது. பிறகு திரும்பி வருகிறார்கள். ஒரு
சிலரோ ஒரே யடியாக தீர்ந்தனர். இங்கே நடைமுறையில் அனைத்தும்
நடந்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வரலாற்றைக் கேட்டீர்கள்
என்றால் அதிசயப்படுவீர்கள். நீங்கள் அன்பைக் காட்டுங்கள் அல்லது
உதையுங்கள் என்ற பாடல் இருக்கிறது. நாங்கள் உங்கள் வாயிலை
விட்டு வெளியே செல்ல மாட்டோம். பாபா ஒரு போதும் நாவினால்
இவ்வாறு கூற மாட்டார். எவ்வளவு அன்போடு படிக்க வைக்கிறார்.
எதிரில் குறிக்கோள் இருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த பாபா
இவ்வாறு (விஷ்ணுவாக) மாற்றுகிறார். அதே விஷ்ணு தான் பிறகு
பிரம்மா ஆகிறார். ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைக்கிறது. பிறகு
84 பிறவிகள் எடுத்து இவ்வாறு மாறுகிறார். (ததத்வம்) ஆத்மா
உங்களுடைய மாற்றமும் அதுபோலவே உங்களுடைய போட்டோ கூட எடுத்தார்
அல்லவா. நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள்.
உங்களுக்கு இப்போது கிரீடம் இல்லை. எதிர் காலத்தில் கிடைக்கிறது.
ஆகவே உங்களுடைய இந்த போட்டோவும் வைக்கப்படுகிறது. பாபா வந்து
குழந்தைகளை இரட்டை கிரீடம் உடையவராக மாற்றுகிறார். உண்மையில்
முதலில் நமக்குள் 5 விகாரங்கள் இருந்தது என உணருகிறீர்கள் (நாரதரின்
உதாரணம்) முதன் முதலில் நீங்கள் தான் பக்தர் ஆகிறீர்கள்.
இப்போது பாபா எவ்வளவு உயர்ந்தவராக மாற்றுகிறார்.
அசுத்தத்திலிருந்து ஒரேயடியாக தூய்மை யாக்குகிறார். பாபா
எதையும் வாங்குவதில்லை. பின் சிவபாபா என்ன வாங்குவார். நீங்கள்
சிவபாபாவின் பொக்கிஷத்தில் போடுகிறீர்கள். நான் டிரஸ்டியாக
இருக்கிறேன். கொடுக்கல் வாங்கல் அனைத்து கணக்கும் சிவபாபாவுடன்
இருக்கிறது. நான் படிக்கிறேன், படிக்க வைக்கிறேன். யார்
தன்னுடைய அனைத்தையும் கொடுத்து விட்டாரோ அவர் என்ன எடுப்பார்?
எந்த பொருளிலும் பற்று இருக்கக் கூடாது. இன்னார்
சொர்க்கத்திற்குச் சென்று விட்டனர் என்று பாடுகின்றனர். பிறகு
அவர்களுக்கு நரகத்தின் உணவுகளை ஏன் கொடுக்க வேண்டும். அறியாமை
அல்லவா? நரகத்தில் இருக்கிறார்கள் என்றால் மறுபிறவியும்
நரகத்தில் தான் இருக்கும் அல்லவா. இப்போது நீங்கள் அமர
உலகத்திற்குச் செல்கிறீர்கள். இது குட்டிக்கரணம் போன்றாகும்.
நீங்கள் பிராமணர்கள் உச்சியில் இருக்கிறீர்கள். பிறகு தேவதை,
சத்ரியர் ஆவீர்கள். ஆகவே, மிகவும் இனிமை யாகுங்கள் என பாபா
புரிய வைக்கிறார். இருப்பினும் திருந்தவில்லை என்றால்,
அவர்களின் அதிர்ஷ்டம் என்று கூறுவார். தனக்குத்தானே நஷ்டத்தை
ஏற்படுத்திக் கொள்கிறார்கள். திருந்தவே இல்லை என்றால் ஈஸ்வரனின்
முயற்சி கூட என்ன செய்யும்.
நான் ஆத்மாக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என பாபா கூறுகிறார்.
அழியாத ஆத்மாக்களுக்கு அழியாத பரமாத்மா பாபா ஞானம் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். ஆத்மா காதுகள் மூலமாக கேட்டுக் கொண்டி
ருக்கிறது. எல்லையற்ற தந்தை இந்த ஞானத்தை கூறிக்
கொண்டிருக்கிறார். உங்களை மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுகிறார்.
வழியைக் காண்பிக்கக் கூடியவர் சுப்ரீம் வழிகாட்டி
அமர்ந்திருக்கிறார். தூய்மையாகுங்கள், என்னை நினைத்தால்
உங்களுடைய பாவம் எரிந்து போகும் என்று ஸ்ரீமத் கூறுகிறது. நீ
தான் தூய்மையாக இருந்தாய். 84 பிறவிகள் நீ எடுத்திருக்கின்றாய்.
நீ சதோபிரதானத்திலிருந்து இப்போது தமோபிரதானமாகி இருக்கிறாய்,
இப்போது மீண்டும் என்னை நினை, என்று பாபா இவருக்குத் தான்
புரிய வைக்கிறார். இதற்குத் தான் யோக அக்னி என்று பெயர். இந்த
ஞானம் கூட இப்போது உங்களுக்கு இருக்கிறது. சத்யுகத்தில் என்னை
யாரும் நினைப்பதில்லை. இச்சமயம் தான் என்னை நினைத்தால் உங்களின்
பாவங்கள் விலகும். வேறு வழி இல்லை என்று நான் கூறுகிறேன். இது
பள்ளிக் கூடம் அல்லவா? இதற்கு விஷ்வ வித்தியாலயம், உலக
பல்கலைக்கழகம் என்று பெயர். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்,
இடை, கடை ஞானம் வேறு யாருக்கும் இல்லை. இந்த லஷ்மி
நாராயணனுக்குள் கூட இந்த ஞானம் இல்லை என சிவ பாபா கூறுகிறார்.
இது பிராப்தி அல்லவா? நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அன்பான இராஜ்யத்திற்குச் செல்ல வேண்டும். ஆகவே, தங்களுக்குள்
(இனிமையாக) பாலும், சர்க்கரையும் போல் இருக்க வேண்டும். ஒரு
போதும் உப்புத் தண்ணீர் போன்று ஆகி கருத்து வேறு பாட்டில் வரக்
கூடாது. தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும்.
2. தேக உணர்வை விட்டு விட்டு மாஸ்டர் அன்புக் கடல் ஆக வேண்டும்.
தனக்குள் தெய்வீக நடத்தை உருவாக்க வேண்டும். மிக மிக இனிமையாக
நடக்க வேண்டும்.
வரதானம்:
மனதின் சுதந்திரதன்மை மூலமாக எல்லா ஆத்மாக்களுக்கும் அமைதியின்
தானத்தை வழங்கக்கூடிய மனதால் மகாதானி ஆவீர்களாக.
பந்தனத்தில் இருக்கும் பெண்கள் உடலால் அடிமைப்பட்டவர்களாக
இருந்தாலும் கூட மனதால் அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்
என்றால் அவர்கள் தங்களது உள்ளுணர்வு மூலமாக தூய எண்ணங்கள்
மூலமாக உலகத்தின் வாயுமண்டலத்தை மாற்றி விடக்கூடிய சேவை செய்ய
முடியும். தற்சமயத்தில் உலகத்திற்கு மன அமைதியின் அவசியம்
இருக்கிறது. எனவே மனதால் சுதந்திரமாக இருக்கும் ஆத்மா மனதின்
மூலமாக அமைதியின் அதிர்வலைகளை பரப்ப முடியும். அமைதிக் கடலான
தந்தையின் நினைவில் இருப்பதால் இயல் பாகவே அமைதியின் கிரணங்கள்
பரவுகிறது. இது போல அமைதியின் தானம் வழங்குபவர்கள் மனதால்
மகாதானி ஆவார்கள்.
சுலோகன்:
மற்ற ஆத்மாக்கள் உங்களை பார்த்து பின்பற்றும் படியான முயற்சி
செய்யுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
ஒவ்வொரு பிராமணரும் தந்தைக்கு சமானமாக உயிரோட்டமான சித்திரம்
ஆகுங்கள். (லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ்) ஒளியின், சக்தியின்
இருப்பிடத்தின் தரிசனம் அளிப்பவராக ஆகுங்கள். சங்கல்ப சக்தியின்,
அமைதியின் சொற்பொழிவை தயார்படுத்துங்கள். மேலும் கர்மாதீத்
நிலையின் மீது வரதானம் அளிக்கும் மூர்த்தியின் பாகம் ஏற்று
நடியுங்கள். அப்பொழுது சம்பூர்ணதன்மை சமீபத்தில் வந்து விடும்.
பிறகு ஒரு நொடியை விட குறைவான நேரத்தில் எங்கு காரியம்
செய்விக்க வேண்டியிருக்குமோ அங்கு வயர்லெஸ் கம்பியில்லா தந்தி
மூலமாக உத்தரவுகளை கொடுக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். ஒரு
நொடியில் கர்மாதீத் நிலையின் ஆதாரத்தில் சங்கல்பம் செய்த உடனேயே
அந்த சங்கல்பம் எங்கு போய் சேர்ந்து விட வேண்டுமோ அங்கு போய்
சேர்ந்து விடும்.