17-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நினைவு மற்றும் படிப்பின் மூலமாகவே இரட்டை கிரீடம் கிடைக்கும். எனவே உங்களுடைய இலட்சியத்தை முன்னால் வைத்து தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள்

கேள்வி:
உலக படைப்பு கர்த்தாவான தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன சேவை செய்கிறார்?

பதில்:
(1) குழந்தைகளுக்கு எல்லையில்லாத ஆஸ்தி அளித்து சுகமுடையவர்களாக ஆக்குவது, இதுவே சேவை ஆகும். தந்தையைப் போல பலன் எதிர்பாராத சேவையை வேறு யாரும் செய்ய முடியாது. (2) எல்லையில்லாத தந்தை வாடகைக்கு சிம்மாசனத்தை எடுத்து உங்களை உலகத்தின் சிம்மாசனத்தில் அமருபவர்களாக ஆக்கிவிடுகிறார். தான் மயில் சிம்மாசனத்தில் அமர்வதில்லை. ஆனால் குழந்தைகளை மயில் சிம்மாசனத்தில் அமர்த்திவிடுகிறார். தந்தைக்கோ ஜடமான கோயில்கள் அமைக்கிறார்கள். அதில் அவருக்கு என்ன சுவை வரும். ஆனந்தமோ குழந்தை களுக்குத்தான். ஏனெனில் சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியம் பெறுகிறார்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு தந்தை தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். ஓம் சாந்தி என்பதன் பொருளை குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். தந்தையும் ஓம் சாந்தி என்று கூறுகிறார், பின் குழந்தைகளும் ஓம் சாந்தி என்று கூறுகிறார்கள். ஏனெனில் ஆத்மாவின் சுயதர்மமே சாந்தி. நாம் சாந்தி தாமத்தி-ருந்து இங்கு வருகிறோம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்து விட்டீர்கள். முதன் முத-ல் சுகதாமத்தில், பிறகு 84 மறுபிறவி எடுத்து எடுத்து துக்கதாமத்தில் வருகிறீர்கள். இது நினைவில் உள்ளது அல்லவா? குழந்தைகள் 84 பிறவிகள் எடுத்து ஜீவ ஆத்மா ஆகிறார்கள். தந்தை ஜீவ ஆத்மா ஆவதில்லை. நான் தற்கா-கமாக இவரை ஆதாரமாக எடுக்கிறேன் என்று கூறுகிறார். இல்லாவிட்டால் எப்படி படிப்பிப்பது? மன்மனாபவ, தங்கள் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளுக்கு அடிக்கடி எப்படி கூற முடியும்? ஒரு வினாடியில் உலகத்தின் அரசாட்சி என்று இதற்கு கூறப்படுகிறது. எல்லையில்லாத தந்தை ஆவார் அல்லவா? எனவே அவசியம் எல்லையில்லாத மகிழ்ச்சி, எல்லையில்லாத ஆஸ்தி தான் அளிப்பார். தந்தை மிகவும் சகஜமான வழி கூறுகிறார். இப்பொழுது இந்த துக்கதாமத்தை புத்தியி-ருந்து நீக்கி விடுங்கள் என்று கூறுகிறார். தந்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கும் புது உலகமான சொர்க்கத்திற்கு எஜமானர் ஆவதற்கு என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்கள் பாவங்கள் அழிந்து விடும்., நீங்கள் மீண்டும் சதோபிரதானமாக ஆகிவிடுவீர்கள். இது சகஜ நினைவு என்று கூறப்படுகிறது. எப்படி குழந்தைகள் லௌகீக தந்தையை எவ்வளவு சகஜமாக நினைவு செய்கிறார்களோ அவ்வாறே குழந்தைகளாகிய நீங்கள் எல்லையில்லாத தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை தான் துக்கத்திலிருந்து வெளியேற்றி சுகதாமத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு துக்கத்தின் பெயர் அடையாளம் இல்லை. மிகவும் சுலபமான விஷயம் கூறுகிறார் - நீங்கள் சாந்தி தாமத்தை நினைவு செய்யுங்கள். அது தந்தையின் வீடு மற்றும் உங்களது வீடு ஆகும். மேலும் புது உலகத்தை நினைவு செய்யுங்கள். அது உங்களது இராஜதானி ஆகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு சுயநலமற்ற சேவை செய்கிறார்! குழந்தைகளாகிய உங்களை சுகமுடைய வர்களாக ஆக்கிவிட்டு அதன் பிறகு வானப்பிரஸ்தம், பரந்தாமத்தில் அமர்ந்து விடுகிறார். நீங்களும் பரந்தாமத்தில் வசிப்பவர் ஆவீர்கள். அது நிர்வாணதாமம் வானபிரஸ்தம் என்றும் கூறப்படுகிறது. தந்தை வருவதே குழந்தைகளுக்கு சேவை செய்ய அதாவது ஆஸ்தி அளிப்பதற்காகத்தான். இவர் (பிரம்மா பாபா) தானும் தந்தையிட மிருந்து ஆஸ்தி எடுக்கிறார். சிவபாபாவோ உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார். சிவனின் கோவில் கூட உள்ளது. அவருக்கென்று ஒரு தந்தையோ, ஆசிரியரோ கிடையாது. முழு சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் அவரிடம் உள்ளது. எங்கிருந்து வந்தது? ஏதாவது வேத சாஸ்திரம் ஆகியவை படித்தாரா என்ன? இல்லை. தந்தையோ ஞானக்கடல், சுகம், சாந்தியின் கடல் ஆவார். தந்தையின் மகிமை மற்றும் தெய்வீக குணங்கள் கொண்ட மனிதர்களின் மகிமை இவற்றுள் வித்தியாசம் உள்ளது. நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்து தேவதை ஆகிறீர்கள். முதலில் அசுர குணங்கள் இருந்தன. அசுரனலிருந்து தேவதை ஆக்குவது இதுவோ தந்தையினுடைய காரியம் ஆகும். இலட்சியம் கூட உங்கள் முன்னால் உள்ளது. அவசியம் இதுபோன்ற சிரேஷ்ட கர்மங்கள் செய்திருக்க வேண்டும். கர்மம், அகர்மம், விகர்மத்தின் விளைவு அல்லது ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைப்பதில் ஒரு வினாடி பிடிக்கிறது.

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாகத்தை ஏற்று நடித்தே ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். இந்த பாகம் (நடிப்பு) உங்களுக்கு அனாதி, அவினாசியாக கிடைத்துள்ளது. நீங்கள் எத்தனை முறை சுகம் துக்கத்தின் விளையாட்டில் வந்துள்ளீர்கள்!. எத்தனை முறை நீங்கள் உலகத்தின் எஜமானர் ஆகியுள்ளீர்கள். தந்தை எவ்வளவு உயர்ந்தவராக உங்களை ஆக்குகின்றார்! சுப்ரீம் சோல் என்று அழைக்கப்படும் பரமாத்மா அவர் கூட அவ்வளவு சிறியதாகவே இருக்கிறார். அந்த தந்தை ஞானக்கடல் ஆவார். எனவே ஆத்மாக்களையும் தனக்கு சமமாக ஆக்குகிறார். நீங்கள் அன்புக்கடல், சுகக்கடலாக ஆகின்றீர்கள். தேவதைகளிடத்தில் தங்களுக்குள் எவ்வளவு அன்பு இருக்கின்றது! ஒருபொழுதும் சண்டை ஏற்படாது. எனவே தந்தை வந்து உங்களை தனக்கு சமானமாக ஆக்குகிறார். வேறு யாரும் அதுபோல ஆக்க முடியாது. நாடகம் ஸ்தூல வதனத்தில் நடக்கிறது. முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் பிறகு இஸ்லாமியர், பௌத்த தர்மத்தினர் ஆகியோர் வரிசைக்கிரமமாக இந்த மேடையில் அல்லது நாடக சாலையில் வருகிறார்கள். 84 பிறவிகள் நீங்கள் எடுக்கிறீர்கள். ஆத்மாக்களும், பரமாத்மாவும் வெகுகாலம் பிரிந்திருந்தனர் என்ற பாடலும் உள்ளது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, முதன் முதலில் உலகில் பாகம் ஏற்று நடிக்க நீங்கள் வந்துள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். நானோ சிறிது காலத்திற்கு மட்டுமே இவருக்குள் பிரவேசம் செய்கிறேன். இதுவோ பழைய செருப்பு ஆகும். ஆண்கள் ஒரு மனைவி இறந்து விட்டால் பழைய செருப்பு போய்விட்டது என்பார்கள். இப்பொழுது பின் புதியது எடுக்கிறோம் என்பார்கள்! இதுவும் பழைய சரீரம் ஆகும் அல்லவா? 84 பிறவிகளின் சக்கரம் சுற்றி வந்துள்ளார். தத்-துவம்- (நீங்களும் அதேபோல) எனவே நான் வந்து இந்த இரதத்தை ஆதாரமாக எடுக்கிறேன். பாவன (தூய்மையான உலகம்) உலகத்திலோ ஒருபோதும் நான் வருவதேயில்லை. நீங்கள் பதீதமாக உள்ளீர்கள். வந்து எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்றே என்னை அழைக்கிறீர்கள். கடைசியில் உங்களது நினைவு பலனளிக்கக் கூடியதாக ஆகும் அல்லவா? பழைய உலகம் முடிவதற்கான நேரம் வரும்பொழுது நான் வருகிறேன். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, பிரம்மா மூலமாக என்றால் பிராமணர்கள் மூலமாகவும்.

முதலில் உச்சியில் பிராமணர்கள், பின் தேவதை, க்ஷத்திரியர்... ஆக குட்டிக்கரணம் போடுகிறீர்கள். இப்பொழுது தேக அபிமானத்தை விடுத்து தேஹீ (ஆத்ம) அபிமானி ஆகவேண்டும். நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். நானோ ஒரே ஒருமுறை இந்த சரீரத்தை கடனாக மட்டும் எடுக்கிறேன். வாடகைக்கு எடுக்கிறேன். நான் இந்த வீட்டின் எஜமானன் அல்ல. இதை பிறகு நான் விட்டுவிடுவேன். வாடகையோ அளிக்க வேண்டியிருக்கும் அல்லவா? தந்தையும் கூறுகிறார் - நான் வீட்டின் வாடகை கொடுக்கிறேன். எல்லையில்லாத தந்தை சிறிதாவது வாடகை கொடுத்திருக்க கூடும் அல்லவா? உங்களுக்கு புரிய வைப்பதற்காக இந்த பீடத்தை ஆதாரமாக எடுக்கிறார். நீங்கள் கூட உலகின் சிம்மாசனத்தில் அமருபவர் ஆகிவிடுகிறீர்கள் என்று புரிய வைக்கிறார். நான் ஆகுவதில்லை என்று தந்தை அவரே கூறுகிறார். சிம்மாசனத்திற்கு உரியவராக அதாவது மயில் பீடத்தில் அமர்த்துகிறார். சிவபாபாவின் நினைவில் தான் சோமநாதரின் கோவில் அமைத்திருக்கிறார்கள். இதில் எனக்கு என்ன சுவை இருக்கும் என்று தந்தை கூறுகிறார். ஜட மூர்த்தி வைத்து விடுகிறார்கள். ஆனந்தமோ குழந்தை களாகிய உங்களுக்கு சொர்க்கத்தில் இருக்கிறது. நானோ சொர்க்கத்தில் வருவதே யில்லை. பின் பக்தி மார்க்கம் ஆரம்பமாகும்பொழுது இந்த கோவில் ஆகியவை கட்டுவதில் எவ்வளவு செலவு செய்தீர்கள். பிறகும் திருடர்கள் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்கள். இராவணனுடைய இராஜ்யத்தில் உங்களது பணம், செல்வம் ஆகிய எல்லாமே அழிந்து போய்விடுகிறது. இப்பொழுது அந்த மயில் சிம்மாசனம் எங்கே உள்ளது? எனக்கு அமைக்கப்பட்ட கோவிலை கஜினி முகம்மது வந்து கொள்ளையடித்து எடுத்து சென்றார் என்று தந்தை கூறுகிறார்.

பாரதம் போன்ற செழிப்பு நிறைந்த தேசம் வேறு எதுவும் கிடையாது. இதுபோன்ற தீர்த்தஸ்தலம் வேறு எதுவும் ஆக முடியாது. ஆனால் இன்றோ இந்து தர்மத்தில் அநேக தீர்த்த ஸ்தலங்கள் ஆகிவிட்டன. உண்மையில் தீர்த்த ஸ்தலம் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் அந்த தந்தைக்குத் தான் இருக்க வேண்டும். இதுவும் நாடகம், அமைக்கப்பட்டுள்ளது. புரிந்து கொள்வது மிகவும் எளிது. ஆனால் நம்பர் பிரகாரம் தான் புரிந்து கொள்கிறார்கள். ஏனெனில் இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சொர்க்கத்தின் எஜமானர் இந்த இலட்சுமி-நாராயணர் ஆவார்கள். இவர்கள் உத்தமரிலும் உத்தம புருஷர்கள் ஆவார்கள். பிறகு அவர்கள் தேவதை என்று அழைக்கப்படு கிறார்கள். தெய்வீக குணங்கள் உடையோர், தேவதை என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் உயர்ந்த தேவதா தர்மத்தினர், இல்லற மார்க்கத்தினராக இருந்தார்கள். அச்சமயம் உங்களுடைய இல்லற மார்க்கம் தான் இருக்கிறது. தந்தை உங்களை இரட்டை கிரீடம் உடையோராக ஆக்குகிறார். இராவணன் பின் இரண்டு கிரீடங்களையும் இறக்கி விட்டான். இப்பொழுதோ எந்த கிரீடமும் இல்லை. தூய்மையின் கிரீடமும் இல்லை. செல்வத்தின் கிரீடமும் இல்லை. இரண்டையுமே இராவணன் இறக்கிவிட்டுவிட்டான். பின் தந்தை வந்து உங்களுக்கு இரண்டு கிரீடமும் அளிக்கின்றார் - இந்த நினைவு மற்றும் படிப்பின் மூலமாகத் தான். எனவே பாடு கிறார்கள் ஓ, காட் ஃபாதர் எங்களுக்கு வழிகாட்டி ஆகுங்கள், விடுவிக்கவும் செய்யுங்கள். அதனால் தான் உங்கள் பெயர் கூட பண்டா (வழிகாட்டி) என்று வைக்கப்பட்டுள்ளது. பாண்டவர்கள், கௌரவர்கள், யாதவர்கள் என்ன செய்து விட்டுச் சென்றார்கள். பாபா எங்களை துக்கத்தின் இராஜ்யத்திலிருந்து விடுவித்து கூட அழைத்து செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். தந்தை தான் சத்தியமான கண்டத்தினை ஸ்தாபனை செய்கின்றார். அது சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு இராவணன் பொய்யான கண்டத்தை அமைக்கிறான். அவர்கள் கிருஷ்ண பகவான் வாக்கு என்கிறார்கள். தந்தை சிவபகவான் வாக்கியம் என்று கூறுகிறார். பாரத வாசிகள் பெயரை மாற்றிவிடும் பொழுது முழு உலகமே மாற்றி விட்டது. கிருஷ்ணரோ தேகதாரி ஆவார். ஒரே ஒரு சிவபாபா மட்டும் தான் விதேகி (தேக மற்றவர்) ஆவார். இப்பொழுது தந்தை மூலமாக குழந்தைகளாகிய உங்களுக்கு பலம் கிடைக்கிறது. முழு உலகிற்கு நீங்கள் எஜமானர் ஆகிறீர்கள். முழு ஆகாயம், பூமி உங்களுக்கு கிடைத்து விடுகிறது. முக்கால் கல்பத்திற்கு யாருக்குமே உங்களிடமிருந்து பிரித்து விடக்கூடிய சக்தி இருக்காது. அவர்களுடையதோ விருத்தி அடைந்து கோடிக்கணக்கை எட்டும் பொழுது வேண்டுமானால் படை எடுத்து வந்து உங்கள் மீது வெற்றி பெறுவார்கள். தந்தை குழந்தைகளுக்கு எவ்வளவு சுகம் அளிக்கிறார். அவருக்கான பாடலே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என்பது தான். இச்சமயம் தந்தை உங்களுக்கு கர்மம், அகர்மம், விகர்மத்தின் கதி பற்றி அமர்ந்து புரிய வைக்கின்றார். இராவண இராஜ்யத்தில் கர்மம், விகர்மம் ஆகிவிடுகிறது. சத்யுகத்தில் கர்மம் அகர்மம் (உயர்ந்த) ஆகிவிடுகிறது. இப்பொழுது உங்களுக்கு ஒரே ஒரு சத்குரு கிடைத்துள்ளார். அவரை கணவர்களுக்கெல்லாம் கணவன் என்று கூறு கிறார்கள். (பதிக்கெல்லாம் பதி பரமேஸ்வரர்) ஏனெனில் கணவர்கள் கூட அவரை நினைவு செய்கிறார்கள். எனவே இது எவ்வளவு அதிசயமான நாடகம் ஆகும் என்று தந்தை புரிய வைக்கிறார். இவ்வளவு சிறிய ஆத்மாவில் அவினாஷி (அழிவற்ற) பாகம் நிரம்பியுள்ளது. அது ஒருபோதும் அழிந்து போய்விடுவதில்லை. இது அனாதி, அவினாசி (ஆதியும் அந்தமும் இல்லாத) டிராமா என்று கூறப்படுகிறது. இறைவன் ஒருவரே. படைப்பு அல்லது ஏணிப்படி மற்றும் சக்கரம் எல்லாமே ஒன்றே ஒன்று தான். யாருக்குமே படைப்பவர் பற்றியும், படைப்பு பற்றியும் தெரியாமல் உள்ளது. ரிஷி முனிவர்கள் கூட எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறிவிடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் அமர்ந்துள்ளீர்கள். உங்களுடையது மாயையுடன் யுத்தமாகும். அது விடுவதேயில்லை. பாபா! மாயையின் அடி விழுந்துவிட்டது என்று குழந்தைகள் கூறுகிறார்கள். குழந்தைகளே! சேர்த்து வைத்த சம்பாத்தியத்தை இல்லாமல் செய்து விட்டீர்களே என்று பாபா கூறுகிறார். உங்களுக்கு பகவான் படிப்பிக்கிறார் எனவே நல்ல முறையில் படிக்க வேண்டும். இதுபோன்ற படிப்போ மீண்டும் 5000 வருடங்களுக்கு பின்னால் தான் கிடைக்கும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த துக்க தாமத்திலிருந்து புத்தியோகத்தை நீக்கி புது உலகத்தை ஸ்தாபனை செய்யும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். சதோபிரதானமாக ஆக வேண்டும்.

2. தந்தைக்கு சமமாக அன்புகடல், சாந்தி மற்றும் சுகத்தின் கடல் ஆகவேண்டும். கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் கதியை (விளைவை) அறிந்து சதா சிரேஷ்ட கர்மம் செய்ய வேண்டும்.

வரதானம்:
எப்போதும் ஊக்கம், உற்சாகத்தில் இருந்து மனதில் மகிழ்வாக பாடலை பாடிக் கொண்டிருக்கும் அழியாத அதிர்ஷ்டசாலி ஆகுக

அதிர்ஷ்டசாலி குழந்தைகளான நீங்கள் அழியாத விதிமுறையால் அழியாத பிராப்திகளை பெறுகின்றீர்கள். உங்களுடைய மனதிலிருந்து ஆஹா ஆஹா என்ற கீதம் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. ஆஹா பாபா, ஆஹா அதிர்ஷ்டம், ஆஹா இனிய குடும்பமே, ஆஹா மங்களகரமான சங்கமயுகமே என்று. ஒவ்வொரு செயலிலும் ஆஹா ஆஹா எனவே நீங்கள் அழிவற்ற அதிர்ஷ்டசாலிகள். உங்களுடைய மனதில் ஒருபோதும் ஏன், நான் என்றறெல்லாம் வரமுடியாது. ஏன் என்பதற்கு பதிலாக ஆஹா, ஆஹா மற்றும் நான் என்பதற்கு பதிலாக பாபா, பாபா என்ற வார்த்தையே வரும்.

சுலோகன்:
நினைக்கும் எண்ணம் அனைத்திலும் அழியாத அரசு முத்திரையை குத்தி விடுங்கள் அது நிலையாகி விடும்.

மாதேஷ்வரி அவர்களின் இனிய மகாவாக்கியம் - வாழ்க்கையின் ஆசை பூர்த்தி ஆகுவதற்கான அழகான சமயம்

வாழ்வில் எப்பொழுதும் சுகம், சாந்தி கிடைக்க வேண்டும் என்ற ஆசை ஆத்மாக்களாகிய நம் அனைவருக்கும் நீண்டகாலமாக இருந்தது. நீண்டகாலத்தின் ஆசை எப்பொழுதாவது பூர்த்தியாகும். இப்பொழுது இது நம்முடைய இறுதிப் பிறவி ஆகும், இந்த இறுதிப் பிறவியிலும் கூட இறுதியாகும். நானோ இப்பொழுது சிறியவர் என்று ஒருபொழுதும் எவரும் நினைக்க வேண்டாம். சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்கும் சுகம் தேவை அல்லவா! ஆனால், துக்கம் எந்தப் பொருள் மூலம் கிடைக்கிறது என்ற ஞானம் முதலில் வேண்டும். இந்த பஞ்ச விகாரங்களில் மாட்டியிருக்கும் காரணத்தினால், என்ன கர்மபந்தனம் உருவாகியிருக்கிறதோ, அதை பரமாத்மா வின் நினைவு என்ற அக்னி மூலம் எரிக்க வேண்டும் என்ற ஞானம் இப்பொழுது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இது கர்மபந்தனத்திலிருந்து விடுபடுவதற்கான சுலபமான வழி ஆகும். சர்வசக்திவான் பாபாவை நடந்தாலும், சுற்றினாலும், சுவாச சுவாசத்திலும் நினைவு செய்யுங்கள். இப்பொழுது இந்த வழியை சொல்லும் உதவியை, சுயம் பரமாத்மா வந்து செய்கின்றார், ஆனால், இதில் ஒவ்வொரு ஆத்மாவும் முயற்சி செய்ய வேண்டும். பரமாத்மாவோ தந்தை, ஆசிரியர், குரு ரூபத்தில் வந்து நமக்கு ஆஸ்தி கொடுக்கின்றார். எனவே, முதலில் அந்தத் தந்தையினுடையவர் ஆக வேண்டும், பிறகு, ஆசிரியரிடம் படிக்க வேண்டும், இந்தப் படிப்பின் மூலம் எதிர்கால ஜென்ம ஜென்மங்களுக்கான சுகத்தின் பிராப்தி உருவாகும் அதாவது ஜீவன் முக்தி பதவியில் முயற்சியின் அனுசாரம் பதவி கிடைக்கிறது. மேலும், குரு ரூபத்தில் தூய்மை ஆக்கி முக்தி கொடுக்கின்றார். இந்த இரகசியத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முயற்சி செய்ய வேண்டும். பழைய கணக்கை முடித்துவிட்டு புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான சமயம் இதுவே ஆகும். இந்த சமயத்தில் எந்தளவு முயற்சி செய்து தனது ஆத்மாவைத் தூய்மை ஆக்குவீர்களோ, அந்தளவே சுத்தமான ரெகார்ட் (பதிவு) நிரம்பும், பிறகு, முழு கல்பமும் இந்தப் பதிவின்படியே நடைபெறும். எனவே, முழு கல்பத்திற்கும் ஆதாரம் இந்த சமயத்தின் வருமானம் ஆகும். பாருங்கள்! இந்த சமயத்தில் தான் உங்களுக்கு முதல், இடை, கடை பற்றிய ஞானம் கிடைக்கிறது, நாமே தேவதை ஆக வேண்டும் மற்றும் நம்முடையது முன்னேறும் கலையாகும், பிறகு, அங்கு சென்று பிராப்தியை அனுபவிப் போம். நாம் கீழிறங்கிவிடுவோம் என்பது அங்கு தேவதைகளுக்குத் தெரியாது. ஒருவேளை, சுகத்தை அனுபவித்து பிறகு கீழிறங்க வேண்டும் என்பது தெரியவந்தால், கீழிறங்கும் கவலையில் சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எனவே, மனிதர்கள் எப்பொழுதும் முன்னேறுவதற்கான முயற்சி செய்கின்றனர். அதாவது சுகத்திற்காக வருமானம் செய்கின்றனர், இந்த ஈஸ்வரிய நியமம் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால், நாடகத்தில் பாதி பாதியாக நடிப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இந்த இரகசியத்தை நாம் அறிந்திருக்கிறோம், எந்த சமயம் சுகத்தின் முறை வருமோ, அதற்கான முயற்சி செய்து சுகத்தைப் பெற வேண்டும், இது முயற்சியின் சிறப்பு ஆகும். நடிகரின் வேலையானது நடிக்கும் சமயம் முழுமையான திறமையோடு நடிப்பு நடிக்க வேண்டும், அதைப் பார்ப்பவர்கள் ஆஹா! ஆஹா! என்று கூற வேண்டும். ஆகையினால், கதாநாயகன், கதாநாயகி நடிப்பு தேவதை களுக்குக் கிடைத்துள்ளது, அவர்களுடைய நினைவுச்சின்ன சித்திரங்கள் மகிமை செய்யப்படுகிறது, பூஜிக்கப்படுகிறது. நிர்விகாரி இல்லறத்தில் இருந்து தாமரை மலர் போன்ற ஸ்திதியை உருவாக்குவது, இதுவே தேவதைகளின் சிறப்பு ஆகும். இந்த சிறப்பியல்பை மறப்பதனாலேயே பாரதத்திற்கு இத்தகைய கீழான நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது மீண்டும் அத்தகைய வாழ்க்கையை உருவாக்கக்கூடிய பரமாத்மா தானே வந்திருக்கின்றார், இப்பொழுது அவரது கையைப் பிடித்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கைப் படகு கரை சேர்ந்துவிடும்.