17-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமெனில், ஒவ்வொரு வகையிலும் பத்தியத்தைக் கடைபிடியுங்கள், மலர் ஆக வேண்டுமெனில் தூய்மையான கைகளினால் சமைக்கப்பட்ட சுத்தமான உணவையை சாப்பிடுங்கள்.

கேள்வி:
21 பிறவிகள் வரை இருக்கக் கூடியளவிற்கு குழந்தைகளாகிய நீங்கள் இங்கு என்ன பயிற்சி செய்கிறீர்கள்?

பதில்:
சதா உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்கும் பயிற்சியை நீங்கள் இங்கேயே செய்கிறீர்கள். நீங்கள் ததீட்சி ரிஷியைப் போன்று யக்ஞ சேவைக்கு எலும்பையும் கொடுக்க (தீவிரமாக உழைக்க) வேண்டும், ஆனால் ஹடயோகத்திற்கான விசயம் கிடையாது. தனது சரீரத்தை பலவீனமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. நீங்கள் யோகா (நினைவு) மூலம் 21 பிறவி களுக்கு ஆரோக்கியமானவர்களாக ஆகிறீர்கள், அதற்கான பயிற்சி இங்கிருந்தே செய்கிறீர்கள்.

ஓம் சாந்தி.
கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மாணவர்களின் பக்கம் பார்ப்பார் - ரோஜா மலர் போன்றவர்கள் எங்கு அமர்ந்திருக்கின்றனர்? முதல் வரிசையில் யார் அமர்ந்திருக் கின்றனர் என்று? இதுவும் மலர் தோட்டமாகும், ஆனால் வரிசைக்கிரமமாக இருக்கவே செய்கிறது. இங்கேயே ரோஜா மலரையும் பார்க்கிறேன், கூடவே அருகில் ரத்தினங்களையும் பார்க்கிறேன். சில நேரங்களில் எருக்கம் பூவையும் பார்க்கிறேன். தோட்டக்காரன் பார்க்க வேண்டியிருக்கிறது அல்லவா! அந்த தோட்டக்காரனைத் தான் வந்து இந்த முட்கள் நிறைந்த காட்டை அழித்து மலர்களுக்கான விதை தெளியுங்கள் என்று அழைக்கின்றனர். முட்களுக்கு எவ்வாறு மலர் ஆவதற்கான நாற்று எவ்வாறு நடப்படுகிறது? என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நடைமுறையில் அறிவீர்கள். உங்களிலும் மிகச் சிலர் மட்டுமே இந்த விசயங்களைப் பற்றி சிந்தனை செய்கின்றனர். அவர் தோட்டக்காரனாகவும் இருக்கின்றார், படகோட்டியாகவும் இருக்கின்றார், அனைவரையும் அழைத்துச் செல்கிறார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மலர்களைப் பார்த்து தந்தையும் மகிழ்ச்சியடைகின்றார். நாம் முள்ளிலிருந்து மலராக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்திருக்கிறீர்கள். பாருங்கள், இந்த ஞானம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது! இதை புரிந்துக் கொள்வதற்கும் மிக உயர்ந்த கூர்மையான புத்தி தேவைப்படுகிறது. இவர்கள் கலியுக நரகவாசிகளாக இருக்கின்றனர். நீங்கள் சொர்க்கவாசிகளாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். சந்நியாசிகள் வீட்டை விட்டு சென்று விடுகின்றனர். நீங்கள் சென்று விடக் கூடாது. சில வீடுகளில் ஒரு முள் இருக்கிறது எனில் ஒரு மலரும் இருக்கிறது. பாபாவிடம் சிலர் கேட்கின்றனர் - பாபா, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாமா? நன்றாகச் செய்யுங்கள் என்று பாபா கூறுவார். வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள். இதை கேட்கின்றனர் எனில், இதன் மூலம் தைரியம் இல்லை என்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆக நன்றாகச் செய்யுங்கள் என்று பாபாவும் கூறிவிடுகின்றார். நாம் நோயாளிகளாக இருக்கிறோம் என்று கூறுகின்றனர், பிறகு மருமகள் வருவார், அவரது கைகளினால் சமைத்த உணவை சாப்பிட வேண்டியிருக்கும். பாபா கூறுவார் - நன்றாக சாப்பிடுங்கள், வேண்டாம் என்று கூறுவாரா என்ன? சாப்பிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது, ஏனெனில் பற்றுதல் இருக்கிறது அல்லவா! வீட்டில் மருமகள் வந்து விட்டால் கேட்கவே கேட்காதீர்கள், தேவி வந்து விட்டதாகவே நினைக்கின்றனர். அந்த அளவிற்கு குஷியாகி விடுகின்றனர். இப்பொழுது இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நாம் மலராக ஆக வேண்டுமெனில், தூய்மையான கைகளினால் சமைக்கப்பட்ட உணவு தான் சாப்பிட வேண்டும். அதற்கான ஏற்பாடும் செய்ய வேண்டும், இதற்கு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. தந்தை புரிய வைக்கின்றார் - நீங்கள் தேவதைகளாக ஆகக் போகிறீர்கள், இதற்கு இந்த பத்தியம் தேவை. எந்த அளவு அதிகமாக பத்தியம் கடைபிடிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நன்மை ஏற்படும். அதிகம் பத்தியத்தைக் கடை பிடிப்பதற்கு சிறிது உழைப்பும் ஏற்படுகிறது. பிரயாணத்தின் பொழுது பசி ஏற்படும், கைகளில் உணவு கொண்டு செல்லுங்கள். சில அசௌகரியங்கள் ஏற்படும், வேறு வழியில்லையெனும் பொழுது நிலையத்தில் (ஸ்டேசனில்) இரண்டு ரொட்டி (ப்ரட்) வாங்கி சாப்பிடுங்கள். தந்தையை நினைவு செய்தால் போதுமானது. இது தான் யோக பலம் என்று கூறப் படுகிறது. இதில் ஹடயோகத்திற்கான விசயம் ஏதுமில்லை. சரீரத்தை பலவீனமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. ததீட்சி ரிஷியைப் போன்று எலும்பையும் கொடுக்க (உழைக்க) வேண்டும். இதில் ஹடயோகத்திற்கான விசயம் கிடையாது. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விசயங் களாகும். சரீரத்தை முற்றிலும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். யோகா மூலம் 21 பிறவிகளுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி இங்கேயே செய்ய வேண்டும். இதற்கு கேட்க வேண்டிய அவசியமே கிடையாது என்று பாபா புரிய வைக்கின்றார். ஏதாவது பெரிய விசயமாக இருக்கிறது, குழப்பமாக இருக்கிறது எனில் கேட்கலாம். சிறு சிறு விசங்களை பாபாவிடம் கேட்கும் பொழுது எவ்வளவு நேரம் வீணாகி விடுகிறது! பெரிய மனிதர்கள் மிகக் குறைவாகப் பேசுவார்கள். சிவபாபா சத்கதியின் வள்ளல் என்று கூறப்படுகின்றார். இராவணனை சத்கதியின் வள்ளல் என்று கூறுவது கிடையாது. ஒருவேளை அவ்வாறு இருந்தால் பிறகு ஏன் எரிக்கின்றனர்? இராவணன் மிகவும் பிரபலமாக இருக்கிறார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். இராவணனிடத்தில் அதிக சக்திகள் இருக்கலாம், ஆனால் எதிரி அல்லவா! அரை கல்பம் இராவண இராஜ்யம் நடைபெறுகிறது. ஆனால் எப்பொழுதாவது மகிமை பாடப்பட்டிருக் கிறதா? எதுவும் கிடையாது. 5 விகாரங்கள் தான் இராவணன் என்று கூறப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சாது, சந்நியாசிகள் தூய்மையாக ஆகின்றனர் எனில் அவர் களுக்கு மகிமை செய்கின்றனர் அல்லவா! இந்த சமயத்தில் மனிதர்கள் அனைவரும் பதீதமாக இருக்கின்றனர். யார் வேண்டுமென்றாலும் வரட்டும், பெரிய மனிதர் வருவதாக வைத்துக் கொள்ளுங்கள், பாபாவைச் சந்திக்க வேண்டும் என்று கூறுவார், பாபா அவரிடம் என்ன கேட்பார்? இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம், மனிதன் மற்றும் தேவதை என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக் கிறீர்களா? என்று அவரிடம் கேட்பார். இந்த நேரத்தில் மனிதர்களின் இராஜ்யமா? அல்லது தேவதை களின் இராஜ்யமா? மனிதர்கள் என்று கூறப்படு பவர்கள் யார்? தேவதைகள் என்று கூறப்படுபவர்கள் யார்? எந்த இராஜ்யத்தில் தேவதைகள் வாழ்ந்தனர்? தேவதைகள் சத்யுகத்தில் இருப்பர். இராஜா ராணி போன்று பிரஜைகள் சுகமாக இருப்பார்கள் இது புது உலகமா? அல்லது பழைய உலகமா? என்று நீங்கள் கேட்க முடியும். சத்யுகத்தில் யாருடைய இராஜ்யம் இருந்தது? இப்பொழுது யாருடைய இராஜ்யமாக இருக்கிறது? சிலைகள் எதிரில் இருக்கிறது. பக்தி என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இதை தந்தை தான் வந்து புரிய வைக்கின்றார்.

பாபா, தாரணை ஏற்படுவது கிடையாது என்று எந்த குழந்தைகள் கூறுகிறார்களோ அவர்களிடம் தந்தை மற்றும் ஆஸ்தி என்பது எளிதானது அல்லவா! என்று கேட்கின்றார். அல்லாவாகிய தந்தை கூறுகின்றார் - தந்தையாகிய என்னை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைத்துவிடும். பாரதத்தில் சிவஜெயந்தியும் கொண்டாடு கின்றனர், ஆனால் எப்பொழுது பாரதத்திற்கு வந்து சொர்க்கமாக ஆக்கினார்? பாரதம் சொர்க்கமாக இருந்தது என்பதை அறியவில்லை, மறந்து விட்டனர். நாம் தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தோம் என்பதை நாமும் அறியாமல் இருந்தோம் என்று நீங்கள் கூறுவீர்கள். இப்பொழுது தந்தையின் மூலம் நாம் மீண்டும் தேவதைகளாக ஆகிக் கொண்டி ருக்கிறோம். புரிய வைக்கக் கூடியவன் நான் தான். விநாடியில் ஜீவன் முக்தி என்று பாடப் பட்டிருக்கிறது. ஆனால் இதன் பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. விநாடியில் நீங்கள் சொர்க்கத்தின் தேவதைகளாக ஆகிறீர்கள் அல்லவா! இதை இந்திர சபை என்றும் கூறுகிறோம். ஆனால் அவர்கள் மழை பொழிகின்ற கடவுளாக இந்திரனை நினைக்கின்றனர். மழைக்காக ஒரு கடவுளுக்கென்று சபை இருக்குமா என்ன? இந்திரலோகம், இந்திர சபை என்று என்ன என்ன கூறுகின்றனர்!

இப்பொழுது மீண்டும் இந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், படிப்பு அல்லவா! சட்டப்படிப்பு படிக் கின்றனர் எனில் நாளை நான் வக்கீல் ஆவேன் என்று நினைக்கின்றனர். நீங்கள் இன்று படிக் கிறீர்கள், நாளை சரீரத்தை விடுத்து இராஜ்ய குடும்பத்தில் பிறப்பீர்கள். நீங்கள் எதிர்காலத்திற்கான பிராப்தி அடைகிறீர்கள். இங்கு படித்து விட்டு செல்வீர்கள், பிறகு நமது பிறப்பு சத்யுகத்தில் இருக்கும். இளவரசர்-இளவரசி ஆவது தான் இலட்சியமாகும். இராஜயோகம் அல்லவா! பாபா, எனது புத்தி திறக்கப்படுவது கிடையாது என்று சிலர் கூறுகின்றனர். உங்களது அதிர்ஷ்டம் இவ்வாறு இருக்கிறது. நாடகத்தில் பாகம் இவ்வாறு இருக்கிறது. இதை பாபா எப்படி மாற்ற முடியும்! சொர்க்கத்திற்கு எஜமானர் ஆவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் வரிசைக் கிரமம் இருக்கும் அல்லவா! அனைவரும் சக்கரவர்த்தி ஆகிவிடுவர் என்பது கிடையாது. ஈஸ்வரனிடம் சக்தியிருக் கிறது எனில் அனைவரையும் சக்கரவர்த்திகளாக ஆக்கி விட வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். பிறகு பிரஜைகள் எங்கிருந்து வருவர்? இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லவா! இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இப்பொழுது பெயரளவிற்கு மகாராஜா, மகாராணி இருக்கின்றனர். பட்டமும் கொடுத்து விடுகின்றனர். இலட்சம் கொடுத்து விட்டால் ராஜா, ராணி என்ற பட்டம் கிடைத்து விடுகிறது. பிறகு நடத்தையும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

நாம் ஸ்ரீமத் மூலம் நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கு அனைவரும் அழகாக, தூய்மையாக இருப்பர். இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது அல்லவா! சாஸ்திரங்களில் கல்பத் தின் ஆயுள் நீண்டதாக எழுதிய காரணத் தினால் மனிதர்கள் மறந்து விட்டனர். இப்பொழுது நீங்கள் அசுத்தத்திலிருந்து தூய்மையானவர்களாக ஆவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். தேவதைகள் அசுத்தமாக இருப்பார்களா என்ன? கிருஷ்ணரை நீல நிறத்திலும், இராதையை வெள்ளையாகவும் காண்பிக்கின்றனர். இருவரும் தூய்மையானவர்களாகத் தான் இருப்பார் கள் அல்லவா! பிறகு காமச் சிதையில் விழுந்து இருவரும் அசுத்தமாகி விடுகின்றனர். அங்கு அழகான உலகிற்கு எஜமானர்களாக இருந்தனர், இது அசுத்தமான உலகமாகும். குழந்தைகளாகிய உங்களுக் குள் ஒன்று குஷியிருக்க வேண்டும், மேலும் தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். பாபா, பீடி குடிப்பதை விட முடியவில்லை என்று சிலர் கேட்கின்றனர். நல்லது, நன்றாக குடி என்று பாபா கூறுவார். கேட்கிறார் எனில் வேறு என்ன சொல்ல முடியும்? பத்தியத்தின் படி நடக்கவில்லையெனில் வீழ்ச்சியடைந்து விடுவீர்கள். சுயம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா! நாம் தேவதையாக ஆகப் போகிறோம் எனில் நமது நடத்தைகள், உணவு முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? நாம் லெட்சுமியை, நாராயணனை திருமணம் செய்து கொள்வேன் என்று அனைவரும் கூறுகிறீர்கள். அப்படிப்பட்ட குணம் இருக்கிறதா? என்று தன்னிடம் கேளுங்கள். நான் பீடி குடித்தால் நாராயணன் ஆக முடியுமா? நாரதரின் கதையும் இருக்கிறது அல்லவா! ஒரே ஒருவர் தான் நாரதர் கிடையாது அல்லவா! அனைத்து மனிதர்களும் பக்தர்கள் (நாரதர்) ஆவர்.

தந்தை கூறுகின்றார் - தேவதை ஆகக் கூடிய குழந்தைகளே! உள்நோக்கு முக முடையவராகி தனக்குள் உரையாடிக் கொள்ளுங்கள் - நான் தேவதையாக ஆகப் போகிறேன் எனில், எனது நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? நான் தேவதையாக ஆகப் போகிறேன் எனில் மது அருந்த கூடாது, பீடி குடிக்கக் கூடாது, விகாரத்தில் செல்லக் கூடாது, பதீதமானவர்களின் கைகளால் சமைக்கப்பட்ட உணவு சாப்பிடக் கூடாது. இல்லை யெனில் மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தி விடும். இந்த விசயங்களை தந்தை வந்து புரிய வைக்கின்றார். நாடகத்தின் ரகசியங்களையும் யாரும் அறியவில்லை. இது நாடகமாகும், அனைவரும் நடிகர்கள். ஆத்மாக்களாகிய நாம் மேலிருந்து வருகிறோம். முழு உலகிலும் உள்ள நடிகர்களும் நடிப்பை நடித்தே ஆக வேண்டும். அனை வருக்கும் அவரவர்களுக்கென்று பாகம் இருக்கிறது. எவ்வளவு நடிகர்கள் இருக்கின்றனர்! எப்படி நடிக்கின்றனர்! இது பலவிதமான தர்மங்கள் நிறைந்த மரமாகும். ஒரு மா மரத்தை பலவகையான மரம் என்று கூற முடியாது. அதில் மாம்பழம் மட்டுமே இருக்கும். இது மனித சிருஷ்டியின் மரம் ஆகும். ஆனால் இதன் பெயர் பலவகை யான தர்மங்களின் மரமாகும். விதை ஒன்று தான், மனிதர்களிடத்தில் எத்தனை விதமானவர்கள் இருக்கின்றனர் என்பதைப் பாருங்கள்! சிலர் இப்படி, சிலர் வேறு எப்படியெல்லாம் இருக்கின்றனர்! இதை தந்தை வந்து புரிய வைக் கின்றார், மனிதர்கள் எதையும் அறியாமல் இருக்கின்றனர். மனிதர்களை தந்தை தான் தங்க புத்தியுடையவர் களாக ஆக்குகின்றார். இந்த பழைய உலகில் இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்கின்றன என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். கல்பத்திற்கு முன்பு போன்று நாற்று நடப்படுகிறது. நல்ல பிரஜை, சாதாரண பிரஜை களுக்கான நாற்றும் நடப்படுகிறது. இங்கேயே இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் ஒவ்வொரு விசயத் திலும் புத்தியை பயன்படுத்த வேண்டும். முரளி கேட்டும் கேட்காதது போன்று இருந்து விடக் கூடாது. இங்கு அமர்ந்திருந்தாலும் புத்தி வெளியில் சென்று விடுகிறது. சிலர் நேரடியாக முரளி கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து விடுபவர்களாகவும் இருக்கின்றனர். முரளிக்காக ஓடோடி வருகின்றனர். பகவான் கற்பிக்கின்றார் எனில், இப்படிப்பட்ட படிப்பை விடவே கூடாது. டேப்பில் மிகச் சரியாக பதியப்படுகிறது, அதை கேட்க வேண்டும். செல்வந்தர்கள் வாங்குகின்றனர் எனில் ஏழைகள் கேட்பார்கள். எவ்வளவு பேருக்கு நன்மை ஏற்பட்டு விடும்! ஏழைக் குழந்தைகளும் தங்களது பாக்கியத்தை மிக உயர்ந்ததாக ஆக்கிக் கொள்ள முடியும். பாபா குழந்தைகளுக்காக கட்டிடங்களைக் கட்டுகின்றார், ஏழைகள் இரண்டு ரூபாய் மணி ஆர்டர் அனுப்பி வைக்கின்றனர் - பாபா, ஒரு செங்கல் வாங்கி வைத்து விடுங்கள், ஒரு ரூபாயை யக்ஞத்திற்கு பயன்படுத்துங்கள். பிறகு யாராவது உண்டியலை நிறைப்பவர்களாகவும் இருப்பார்கள் அல்லவா! மனிதர்கள் மருத்துவ மனை கட்டு கின்றனர், எவ்வளவு செலவாகிறது! செல்வந்தர்கள் அரசாங்கத்திற்கு அதிகம் உதவி செய்கின்றனர். அவர்களுக்கு என்ன கிடைக்கும்! அல்ப கால சுகம். இங்கு நீங்கள் என்ன செய்தாலும் 21 பிறவிகளுக்கு கிடைக்கிறது. பாபா (பிரம்மா) அனைத்தையும் கொடுத்தார், உலகிற்கு எஜமானராக முதல் நம்பர் ஆனார் என்பதை பார்க்கிறீர்கள். 21 பிறவிகளுக்கான இப்படிப்பட்ட வியாபாரம் யாராவது செய்யாமல் இருப்பார்களா! அதனால் தான் சிவபாபாவை கள்ளங்கபட மற்றவர் என்று கூறுகின்றனர் அல்லவா! அது இப்போதைய வியமாகும். எவ்வளவு கள்ளங் கபடமற்றவராக இருக்கின்றார்! என்ன செய்ய வேண்டுமோ செய்து விடுங்கள் என்று கூறுகின்றார். ஏழைக் குழந்தைகள் பலர் இருக்கின்றனர், தையல் வேலை செய்து வயிற்றை நிறைத்துக் கொள்கின்றனர். இவர்கள் மிக உயர்ந்த பதவியடையக் கூடியவர்கள் என்பதை பாபா அறிவார். சுதாமாவிற்கான உதாரணம் இருக்கிறது அல்லவா! பிடி அரிசி அவலுக்கு கைமாறாக 21 பிறவிகளுக்கு மாளிகை கிடைத்தது. நீங்கள் இந்த விசயத்தை வரிசைக் கிரமமான முயற்சியின்படி புரிந்திருக்கிறீர்கள். நான் கள்ளங்கபடமற்றவன் அல்லவா என்று தந்தை கூறுகின்றார். இந்த தாதா (பிரம்மா) கள்ளங்கபடமற்றவர் கிடையாது. சிவபாபா கள்ளங்கபட மற்றவர் என்று இவரும் கூறுகின்றார். அதனால் தான் அவர் வியாபாரி, ரத்தின வியாபாரி, மந்திரவாதி என்று கூறப்படுகின்றார். நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். இங்கு பாரதம் ஏழையாக இருக்கிறது, பிரஜைகள் செல்வந்தர்களாக இருக்கின்றனர், அரசாங்கம் ஏழையாக இருக்கிறது. பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது! சொர்க்கமாக இருந்தது! என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்திருக்கிறீர்கள். அதற்கான அடையாளங்களும் உள்ளன. சோமநாத் கோயில் தங்க, வைர நகைகளினால் எவ்வளவு அலங்கரிக்கப்பட்டிருந்தன! அவைகளை ஒட்டகங்களில் நிறைத்துக் கொண்டு எடுத்துச் சென்றனர். இந்த உலகம் இப்பொழுது அவசியம் மாற வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதற்காகவே நீங்கள் ஏற்பாடு செய்து கொண்டி ருக்கிறீர்கள். யார் செய்வார்களோ அவர்கள் அடைவார்கள். மாயையின் எதிர்ப்பு அதிகம் ஏற்படு கிறது. நீங்கள் ஈஸ்வரனின் சீடர்கள், மற்ற அனைவரும் இராவணன் சீடர்கள். நீங்கள் சிவபாபா வினுடையவர்கள், சிவபாபா உங்களுக்கு ஆஸ்தி கொடுக்கின்றார். தந்தையைத் தவிர வேறு எந்த விசயமும் புத்தியில் வரக் கூடாது. நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உள்நோக்கு முகமுடையவர்களாகி தனக்குள் உரையாடிக் கொள்ள வேண்டும் - நான் தேவதையாக ஆகப் போகிறேன், ஆகையால் எனது நடத்தைகள் எப்படி இருக்கிறது? எந்த அசுத்த உணவுகளையும் சாப்பிடவில்லை தானே?

2) தனது எதிர்காலத்தை 21 பிறவிகளுக்காக உயர்வானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் எனில், சுதாமாவைப் போன்று என்னவெல்லாம் இருக்கிறதோ கள்ளங்கபடமற்ற தந்தை யிடம் கொடுத்து விடுங்கள். படிப்பிற்காக எந்த சாக்கும் கூறக் கூடாது.

வரதானம்:
ஆதி மற்றும் அனாதி சொரூபத்தின் நினைவு மூலமாக உண்மையான சுய தர்மத்தை கடைபிடித்து நடக்கக்கூடிய தூய்மையானவர் மற்றும் யோகி ஆவீர்களாக.

பிராமணர்களின் உண்மையான சுயதர்மம் தூய்மை ஆகும். தூய்மையற்ற நிலை என்பது பரதர்மம் ஆகும். எந்த தூய்மையை கடைபிடிப்பதை மனிதர்கள் கடினம் என்று கருதுகிறார்களோ அது குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவுமே சுலபமானது ஆகும். ஏனெனில் நம்முடைய உண்மை யான ஆத்ம சொரூபம் எப்பொழுதுமே தூய்மை என்ற நினைவு உங்களிடம் உள்ளது. அனாதி சொரூபம் பவித்திர ஆத்மா ஆகும். மேலும் ஆதி சொரூபம் பவித்திர தேவதை ஆகும். இப்பொழுதைய கடைசி பிறவி கூட பவித்திர பிராமண வாழ்க்கை ஆகும். எனவே தூய்மைதான் பிராமண வாழ்க்கையின் தனித்தன்மை ஆகும். யார் பவித்திரமாக இருக்கிறார்களோ அவர்களே யோகி ஆவார்கள்.

சுலோகன்:
சகஜயோகி என்று கூறி கவனக்குறைவை எடுத்து வராதீர்கள், சக்தி ரூபம் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: ஆத்மீக ஸ்திதியில் இருப்பதற்கான பயிற்சி செய்யுங்கள், உள்முகமானவர் ஆகுங்கள்.

அந்தர்முகி சதா சுகி உள்முகமே சதா சுகம் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு வெளியிலிருக்கும் கவர்ச்சிகள் அவர்களை கவரவே முடியாது. ஒருபொழுதும் மனவழிகளோ அந்நிய வழிகளோ கவர முடியாது. உள்முகமாக இருந்து எப்பொழுதும் சுகமாக இருப்பவர்கள் சுகமளிக்கும் வள்ளலின் குழந்தைகள் மாஸ்டர் சுகமளிக்கும் வள்ளலாக இருப்பார்கள். வெளிமுகத்தன்மையிலிருந்து விடுபட்டு இருப்பார்கள்.