17-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே : இந்த சரீரத்தைப் பார்க்காமல் ஆத்மாவைப் பாருங்கள், தன்னை ஆத்மா என்று புரிந்து ஆத்மாவிடம் பேசுங்கள், இப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும். இது தான் உயர்ந்த குறிக்கோளாகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் பாபாவுடன் கூடவே எப்போது வீட்டிற்குச் செல்வீர்கள்?

பதில்:
எப்போது தூய்மையற்ற தன்மை சிறிதளவு கூட இல்லாமல் இருக்குமோ அப்போது தான் செல்ல முடியும். எப்படி பாபா தூய்மையாக இருக்கிறாரோ அதுபோல குழந்தைகளாகிய நீங்கள் கூட தூய்மையாகி விடுவீர்கள், அப்போது மேலே செல்ல முடியும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் பாபாவுக்கு முன்னால் இருக்கின்றீர்கள். ஞானக் கடலிடமிருந்து ஞானத்தைக் கேட்டு கேட்டு எப்போது நிரம்பி விடுவீர்களோ, பாபாவுடைய ஞானம் காலி ஆகி விடுமோ பிறகு அவர் கூட அமைதியாகி விடுவார், மேலும் குழந்தைகளாகிய நீங்கள் கூட சாந்தி தாமம் சென்று விடுவீர்கள் அங்கே ஞானம் சொட்டுவது (கூறுவது) முடிந்து விடுகிறது. அனைத்தையும் (ஞானம் முழுமையும்) கொடுத்து விட்ட பிறகு அவர் (பாபா) அமைதிக்குச் சென்று விடுவார்.

ஓம் சாந்தி.
சிவபகவானுடைய மகாவாக்கியம். எப்போது சிவபகவானுடைய மகாவாக்கியம் என்று சொல்லப்படுகிறதோ, அப்போது ஒரு சிவன் தான் பகவான் அல்லது பரமபிதா என்று புரிந்துக் கொள்ள வேண்டும். அவரைத் தான் குழந்தைகளாகிய நீங்கள், அதாவது ஆத்மாக்கள் நினைவு செய்கின்றீர்கள். படைக்கக் கூடிய தந்தையிடமிருந்து நமக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக வரிசைக்கிரமமான முயற்சியின்படி தான் நினைவு செய்வார்கள். அனைவரும் ஒரேமாதிரியாக நினைவு செய்ய மாட்டார்கள். இது மிகவும் சூட்சுமமான விஷயம் ஆகும். தன்னை ஆத்மா என்று புரிந்து மற்றவர்களையும் ஆத்மா என்று புரிந்து கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதில் நேரம் பிடிக்கிறது. அந்த மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. எதுவும் தெரியாத காரணத்தினால் சர்வ வியாபி என்று சொல்லி விட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்கின்றீர்கள், பாபாவை நினைவு செய்கின்றீர்கள், இப்படி வேறு யாரும் நினைவு செய்ய முடியாது. எந்த ஆத்மாவுடைய யோகமும் பாபாவிடம் இல்லை. இந்த விஷயங்கள் மிகவும் ஆழமானது மற்றும் நுட்பமானதாகும். தன்னை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நாம் சகோதர சகோதரர்கள் என்று சொல்லவும் செய் கின்றார்கள், ஆக ஆத்மாவைத் தான் பார்க்க வேண்டும், சரீரத்தைப் பார்க்கக் கூடாது. இது மிகவும் உயர்ந்த குறிக்கோளாகும். நிறைய பேர் பாபாவை ஒரு போதும் நினைவு செய்வதே இல்லை. ஆத்மாவில் துரு படிந்து இருக்கிறது. ஆத்மாவுடைய விஷயம் தான் முக்கியமானதாகும். சதோபிர தானமாக இருந்த ஆத்மா தான் இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டது. இந்த ஞானம் ஆத்மாவிற்குள் இருக்கிறது. ஞானக்கடல் என்பது பரமாத்மா தான். நீங்கள் தன்னை ஞானக்கடல் என்று சொல்ல முடியாது. நாம் பாபாவிடமிருந்து முழுமையான ஞானத்தை பெற வேண்டும் என்று தெரிந்திருக்கிறீர்கள். பாபா தன்னிடம் ஞானத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்! அழியாத ஞான இரத்தினங்களின் செல்வத்தை குழந்தைகளுக்கு தர வேண்டும். குழந்தைகள் வரிசைக்கிரமமான முயற்சியின் படி ஞானத்தை எடுக்கின்றார்கள். யார் நிறைய ஞானம் பெறுகி ன்றார்களோ அவர்கள் தான் நல்ல சேவை செய்ய முடியும். பாபாவை ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. அவரும் ஆத்மா, நீங்களும் கூட ஆத்மாக்கள் தான். ஆத்மாக்களாகிய நீங்கள் முழு ஞானத்தையும் பெற்று விடுகின்றீர்கள். எப்படி அவர் எப்போதும் தூய்மையாக இருக் கின்றாரோ அதுபோல நீங்களும் எப்போதும் தூய்மையானவராகி விடுவீர்கள். எப்போது தூய்மை யற்ற தன்மை சிறிதளவு கூட இல்லாமல் போகுமோ அப்போது மேலே செல்ல முடியும். பாபா நினைவு யாத்திரையின் யுக்தியைக் கற்றுக் கொடுக்கின்றார். முழுநாளும் நினைவு இருப்பதே இல்லை என்று தெரிந்திருக்கின்றார். இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா முன்னால் அமர்ந்து புரிய வைக்கின்றார், மற்ற குழந்தைகள் (மற்ற சென்டரில் உள்ளவர்கள்) முன்னால் அமர்ந்து முரளி கேட்பது இல்லை. முரளியை படிக்கின்றனர். இங்கே நீங்கள் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் ஞானத்தையும் தாரணை செய்யுங்கள். நாம் பாபா போல முழுமையான ஞானக்கடல் ஆக வேண்டும். முழு ஞானத்தையும் புரிந்து கொள்ளும் போது பாபாவுடைய ஞானம் காலியாகி (தீர்ந்து போய்) விடும், பிறகு அவர் அமைதியாகி விடுவார். அவருக்குள் ஞானம் சொட்டிக் கொண்டிருக்கும் என்பது கிடையாது. முழு ஞானத்தையும் கொடுத்து விட்ட பிறகு அவருடைய அமைதிக்கான பாகம் ஆரம்பமாகி விடுகிறது. நீங்கள் அமைதியில் (பரந்தாமத்தில்) சென்று விட்ட பிறகு ஞானம் இருப்பது இல்லை. ஆத்மா சமஸ்காரத்தை கொண்டு செல்கிறது என்பதை பாபா புரிய வைத்திருக்கிறார். சந்நியாசி ஆத்மாவாக இருந்தால் சிறு வயதிலிருந்தே அவர்கள் சாஸ்திரத்தைப் படிக்க (மனப்பாடம் செய்ய) ஆரம்பித்து விடுவார்கள். பிறகு அவர்களுடைய பெயர் பிரபலமாகி விடுகிறது. இப்போது நீங்கள் புதிய உலகம் செல்வதற்காக வந்திருக்கின்றீர்கள். அங்கே ஞானத்தின் சமஸ்காரத்தைக் கொண்டு செல்ல முடியாது. இந்த சமஸ்காரம் இங்கேயே முடிந்து மறந்து போய் விடுகின்றது. மற்றபடி ஆத்மா வரிசைக்கிரமமான முயற்சியின்படி தன்னுடைய பதவியை அடைகின்றது. பிறகு உங்களுடைய சரீரத்திற்குப் பெயர் வைக்கப் படுகின்றது. சிவபாபா நிராகார மாக இருக்கின்றார். இந்த உறுப்புகளை கடனாகப் பெறுகின்றேன் என்று பாபா சொல்கின்றார். பாபா ஞானம் சொல்வதற்காக மட்டும் வருகின்றார். அவர் யாருடைய ஞானத்தையும் கேட்பதில்லை, ஏனெனில் அவரே ஞானக்கடலாக இருக்கின்றாரல்லவா! வெறும் வாய் மூலமாகத் தான் அவர் முக்கியமான காரியத்தைச் செய்கின்றார். அவர் வருவதே அனைவருக்கும் வழி சொல்வதற்காகத்தான். மற்றபடி அவர் ஞானத்தைக் கேட்டு என்ன செய்வார்! இப்படி-இப்படி செய்யுங்கள் என்று அவர் சொல்லிக் கொண்டிருக் கின்றார். முழு மரத்தினுடைய ஞானத்தையும் சொல்கின்றார். புதிய உலகம் மிகவும் சிறியதாக இருக்கும் என்று குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கின்றது. இந்த பழைய உலகமோ எவ்வளவு பெரியது. முழு உலகத்தில் எவ்வளவு லைட் (விளக்கு) எரிகிறது, வெளிச்சம் மூலமாக என்னென்ன நடக்கிறது! அங்கேயோ உலகமும் சிறியது, லைட் கூட குறைவாகத் தான் இருக்கும். சிறிய சிறிய ஊர்கள் இருக்கும். இப்போதோ எவ்வளவு பெரிய பெரிய ஊர்கள் இருக்கின்றன. அங்கே இவ்வளவு இருக்காது. முக்கியமான நல்ல பாதைகள் கொஞ்சம் இருக்கும். ஐந்து தத்துவங்கள் கூட அங்கே சதோபிரதானமாக ஆகிவிடு கின்றது. அவை ஒருபோதும் குழப்பம் (சீற்றம் போன்று) ஏற்படுத்துவதில்லை. அதை சுகதாமம் என்று சொல்லப்படுகிறது. அதன் பெயரே சொர்க்கம் ஆகும். போகப்போக நீங்கள் எவ்வளவு நெருக்கத்தில் வருகின்றீர்களோ, அந்தளவு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பாபா காட்சி காண்பித்துக் கொண்டே இருப்பார். பிறகு அந்த நேரம் போர் நடக்கும் போது விமானம் ஆகியவற்றின் அவசியம் இருக்காது. நாங்கள் இங்கே அமர்ந்தபடி அனைத்தையும் அழித்து விடுவோம் என்று சொல்கின்றார்கள். ஆகையால் இந்த விமானம் போன்றவை வேலைக்கு உதவாது. பிறகு நிலா போன்றவற்றிற்குச் சென்று அங்கே நிலம் வாங்க போக மாட்டார்கள். இவையனைத்தும் அறிவியலின் தவறான அகங்காரம் ஆகும். அறிவியலில் எவ்வளவு வேடிக்கை காட்டுகின்றனர்! ஞானத்தில் எவ்வளவு அமைதி இருக்கிறது, இது ஈஸ்வரன் அளித்தது என்கின்றோம். அறிவியலிலோ பிரச்சினைகள் தான் அதிகமாகிறது. அவர்கள் அமைதி பற்றி தெரிந்து கொள்வதே இல்லை.

உலகத்தில் அமைதி புது உலகத்தில் இருந்தது, அது சுகதாமம் என்று நீங்கள் புரிந்து இருக்கின்றீர்கள். இப்போதோ துக்கம், அசாந்தியாக இருக்கிறது. இதைக்கூட புரிய வைக்க வேண்டும் - நீங்கள் அமைதியை விரும்புகின்றீர்கள், ஒருபோதும் அசாந்தி ஏற்படக் கூடாது என்று விரும்புகின்றீர்கள், அது சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தில் தான் இருக்கும். சொர்க்கத்தை அனைவரும் விரும்புகின்றனர். பாரதவாசிகள் தான் வைகுண்டம் அல்லது சொர்க்கத்தை நினைவு செய்கின்றனர். மற்ற தர்மத்தினர் வைகுண்டத்தை நினைவு செய்வது இல்லை. அவர்கள் அமைதியை மட்டும் நினைவு செய்கின்றனர், சுகத்தை நினைவு செய்ய முடிவதில்லை. அப்படி சட்டம் இல்லை. சுகத்தை நீங்கள் தான் நினைவு செய்கின்றீர்கள், ஆகையால் தான் எங்களை துக்கத் திலிருந்து விடுவியுங்கள் என்று அழைக்கின்றீர்கள். ஆத்மாக்கள் உண்மையில் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் ஆவார்கள். இதைக்கூட யாரும் தெரிந்து கொள்வதில்லை. நீங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். எப்போதிலிருந்து ஒன்றும் புரியாதவராக ஆனீர்கள்? 16 கலைகளிலிருந்து 14-12 கலைகளாக குறையும் போது புரியாதவர் ஆகிக் கொண்டே போகின்றீர்கள். இப்போது எந்தக் கலையும் இல்லை. நிறைய கூட்டங்கள் கூட்டுகின்றனர். பெண்களுக்கு ஏன் நிறைய துக்கம் ஏற்படுகின்றது? என்று ஆலோசிக்கின்றனர். துக்கம் முழு உலகத்திலும் இருக்கிறது. அளவற்ற துக்கமாக இருக்கிறது. இப்போது உலகத்தில் அமைதி எப்படி ஏற்பட முடியும்? இப்போது நிறைய தர்மங்கள் இருக்கின்றன. முழு உலகத்திலும் இப்போது அமைதி ஏற்பட முடியாது. சுகத்தைப் பற்றி மனிதர்களுக்கு தெரிவதே இல்லை. இந்த உலகத்தில் பலவிதமான துக்கம், அசாந்தி இருக்கிறது என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்கின்றீர்கள். நாம் எங்கிருந்து வந்தோமோ, அது சாந்திதாமம், மற்றும் ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் எங்கிருந்ததோ அது சுகதாமமாக இருந்தது. ஆதி சனாதன ஹிந்து தர்மம் என்று சொல்ல மாட்டார்கள். ஆதி என்றால் பழமையானது என்று பொருள். இந்த தர்மம் சத்தியுகத்தில் இருந்தது. அந்த நேரம் அனைவரும் தூய்மையாக இருந்தனர். அது நிர்விகாரி உலகமாகும், விகாரத்தின் பெயரே இருக்காது. வித்தியாசம் இருக்கிறதல்லவா! முதன் முதலில் நிர்விகாரி ஆக வேண்டும். ஆகையால் தான், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே காமத்தின் மீது வெற்றி அடையுங்கள் என்று பாபா சொல்கின்றார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இப்போது ஆத்மா தூய்மையற்று இருக்கிறது, ஆத்மாவில் துரு படிந்து இருக்கும் போது சரீரம் கூட அப்படியே இருக்கிறது. ஆத்மா தூய்மையாகி விடும்போது சரீரமும் தூய்மையாகி விடும். அதைத்தான் விகாரமற்ற உலகம் என்று சொல்லப்படுகிறது------ இதனுடைய உதாரணம் கூட நீங்கள் சொல்ல முடியும். முழு மரமும் இருக்கின்றது ஆனால் அடிமரம் இல்லை. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இல்லை, மற்ற அனைத்தும் இருக்கிறது. அனைவரும் தூய்மையற்று இருக்கிறார்கள், இவர்களை மனிதர்கள் என்று சொல்கின்றார்கள். அவர்களோ தேவதைகள் ஆவார்கள். நான் மனிதர்களை தேவதைகளாக மாற்ற வந்திருக்கின்றேன். மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். தமோபிரதானமானதும் ஹிந்து என்று சொல்லி விடுகின்றனர். இந்த ஏணிப்படியைக் காட்டி புரிய வைக்க வேண்டும். தூய்மை இழந்து விட்ட பிறகு தேவதை என்று சொல்ல முடியாது. நாடகத்தில் இந்த இரகசியம் அடங்கியிருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஹிந்து தர்மம் என்று எதுவுமே இல்லை. ஆதி சனாதனர்களாகிய நாம் தான் தேவி தேவதைகளாக இருந்தோம். பாரதம் தான் தூய்மையாக இருந்தது, இப்போது தூய்மையற்று இருக்கிறது. ஆகையால் தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஹிந்து தர்மத்தை யாரும் ஸ்தாபனை செய்யவில்லை. இதை குழந்தைகள் நல்ல முறையில் புரிந்து மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இன்றைய காலத்தில் புரிய வைப்பதற்கு அவ்வளவு நேரம் கிடைப்பதில்லை. குறைந்த திலும் அரை மணி நேரம் கிடைத்தாலும் கருத்துகளைப் புரிய வைக்க முடியும். நிறைய கருத்துகள் இருக்கின்றன. பிறகு அதிலிருந்து முக்கியமான கருத்துகள் சொல்லப்படுகிறது. படிப்பில் கூட எளிமையான படிப்பாகிய அல்லா மற்றும் ஆஸ்தி போன்றவை நினைவில் இருப்பதில்லை. அது மறந்து போய் விடுகிறது. உங்களுடைய ஞானம் மாறி விட்டது என்று கூட உங்களை சொல்வார்கள். படிப்பில் மேலே செல்ல செல்ல முதல் பாடம் மறந்து போய் விடுகிறதல்லவா! பாபா கூட தினமும் நமக்கு புதிய புதிய கருத்துகளைச் சொல்கின்றார். முதலில் எளிமையான படிப்பாக இருந்தது, இப்போது பாபா ஆழமான விஷயங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். ஞானக்கடல் அல்லவா! சொல்லி சொல்லி பிறகு கடைசியில் இரண்டு வார்த்தைகளை சொல்கின்றார், அல்லாவை புரிந்து கொண்டாலே போதுமானது. அல்லாவை புரிந்து கொள்வதனால் ஆஸ்தியையும் தெரிந்து கொள்வார்கள். இந்தளவு புரிய வைத்தால் கூட நல்லது. யார் நிறைய ஞானத்தை தாரணை செய்ய முடிவதில்லையோ அவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது. பாஸ் வித் ஹானர் ஆக முடியாது. கர்மாதீத் நிலை அடைய முடியாது. இதில் மிகுந்த உழைப்பு தேவை. நினைவு செய்வதில் கூட உழைப்பு தேவை. ஞானத்தை தாரணை செய்வதில் கூட உழைப்பு இருக்கிறது. இரண்டிலுமே அனைவருமே புத்திசாலிகள் என்பதும் கிடையாது. இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நரனிலிருந்து நாரயணனாக எப்படி மாறுவார்கள்! இந்த கீதா பாடசாலையினுடைய குறிக்கோள் இதுதான். இது கீதை ஞானம் ஆகும். இதை யார் கொடுக்கின்றார் என்பது உங்களைத் தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. இப்போது உலகம் சுடுகாடாக இருக்கின்றது, பிறகு தேவதைகளின் உலகமாகிவிடும்.

இப்போது நீங்கள் ஞான சிதையில் அமர்ந்து பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராக ஆக வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட எவ்வளவு புத்திசாலிகளாகிக் கொண்டே போகிறார்கள்! கண்டுபிடித்துக் கொண்டே போகிறார்கள்! பாரதவாசிகள் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அங்கிருந்து (வெளி நாட்டிலிருந்து) கற்றுக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் கூட கடைசியில் வருவார்கள், ஆனாலும் அவ்வளவு ஞானம் எடுக்க மாட்டார்கள். பிறகு அங்கு வந்தும் கூட இஞ்சினியரிங் போன்ற வேலைகளை செய்வார்கள். அவர்கள் ராஜா, ராணி ஆக முடியாது, ராஜா, ராணிக்கு முன்னால் சேவையில் இருப்பார்கள். நிறைய கண்டுபிடிப்பு களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். ராஜா, ராணி ஆவதே சுகமடைவதற்காகத் தான் ஆகும். அங்கே அனைத்து சுகமும் கிடைத்து விடுகிறது. ஆகையால் குழந்தைகள் முழுமையான முயற்சியை செய்ய வேண்டும். முழுமையான தேர்ச்சியடைந்து கர்மாதீத் நிலையை அடைய வேண்டும். சீக்கிரம் செல்ல வேண்டும் (சரீரத்தை விட வேண்டும்) என்ற எண்ணம் வரக் கூடாது. இப்போது நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள் ஆவீர்கள். பாபா படிப்பித்துக் கொண்டிருக்கின்றார். இது மனிதர்களை மாற்றக்கூடிய ஈஸ்வரிய மிஷன் ஆகும். புத்த மதத்தினருக்கு, கிறிஸ்தவர்களுக்கு மிஷன் (ஒரு இயக்கம்) இருப்பதைப் போல இதுவும் மிஷன் ஆகும். கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்தவத்துக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களுடைய கொடுக்கல் வாங்கலிலும் கூட நிறைய தொடர்பு (கிருஷ்ண பக்தியுடன்) இருக்கிறது. கிறிஸ்தவர்கள் நிறைய உதவி செய்கிறார்கள், அவர்களுடைய மொழியை விலக்கி விடுவது கூட ஒருவிதமான அவமரியாதையாகும். அவர்கள் வருவதே கடைசியில் தான். நிறைய சுகமும் அடைவதில்லை, நிறைய துக்கமும் அடைவதில்லை. எல்லாக் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் உருவாக்குகிறார்கள். இங்கே முயற்சி செய்தாலும் கூட துல்லியமான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியாது. வெளிநாட்டுப் பொருட்கள் நல்லதாக இருக்கிறது. நேர்மையோடு உருவாக்குகிறார்கள். இங்கேயோ நேர்மையற்றத் தன்மையில் பொருட்களை உருவாக்குகின்றார்கள், அளவற்ற துக்கமாக இருக்கிறது. அனைவருடைய துக்கத்தையும் நீக்குபவர் ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. உலகத்தில் அமைதி ஏற்பட வேண்டுமென்று எவ்வளவு கூட்டங்களைக் கூட்டுகிறார்கள், முட்டிமோதிக் கொள்கிறார்கள். தாய்மார்களுக்கு மட்டும் துக்கம் என்பது கிடையாது, இங்கே அநேகவிதமான துக்கங்கள் இருக்கின்றன. முழு உலகத்திலும் சண்டை, அடிதடியின் விஷயம் தான் இருக்கிறது. சில்லரை பைசாவிற்கான விஷயத்தில் அடித்துக் கொள்கிறார்கள். அங்கேயே துக்கத்தின் விஷயமே இருப்பதில்லை. இந்த கணக்கைக்கூட புரிய வைக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் போர் ஆரம்பம் ஆகலாம். பாரதத்தில் இராவணன் எப்போது வருகின்றானோ, அப்போது முதன் முதலில் வீட்டில் சண்டை ஆரம்பம் ஆகின்றது. தங்களுக்குள் அடித்துக் கொண்டு இறக்கின்றார் கள், பிறகு வெளியிலிருந்து (வெளி நாட்டிலிருந்து) உள்ளே வந்து சண்டை போடுகிறார்கள். முதலில் ஆங்கிலேயர்கள் கிடையாது, பிறகு அவர்கள் இடையே புகுந்து லஞ்சம் கொடுத்து தன்னுடைய இராஜ்யத்தை உருவாக்குகின்றார்கள். எவ்வளவு இரவு பகலுக்கான வேறுபாடு இருக்கிறது. புதிதாக வருபவர்கள் யாரும் இதை புரிந்துக் கொள்ள முடியாது. புதிய ஞானம் அல்லவா, இது பிறகு மறைந்து விடுகிறது. பாபா ஞானம் கொடுக்கின்றார், பிறகு அவர் கூட மறைந்து போய் விடுகிறார். இது ஒரேயொரு படிப்பு, ஒரே ஒருமுறை ஒரே ஒரு தந்தையிடமிருந்து கிடைக்கிறது. போகப்போக நீங்கள் இப்படி ஆவீர்கள் என்று அனைவருக்கும் சாட்சாத்காரம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்த நேரம் என்ன செய்ய முடியும். அந்த நேரம் முன்னேற்றத்தை அடைய முடியாது. முடிவு வெளியானதும் பிறகு மாற்றம் அடைவதற்கான விஷயம் வந்து விடுகிறது. பிறகு அழுவார்கள், அடித்துக் கொள்வார்கள். நாம் புதிய உலகத்திற்கு மாறிச் சென்று விடுவோம். சீக்கிரமாக நாலாபுறமும் சப்தம் வெளிப்பட வேண்டும் என்று நீங்கள் உழைக்கின்றீர்கள். பிறகு தானாகவே அனைவரும் சென்டர்களுக்கு ஓடி வருவார்கள். ஆனால் எவ்வளவு நேரமாகிக் கொண்டே போகுமோ, அவ்வளவு டூ லேட் (மிகவும் தாமதம்) ஆகிக்கொண்டே இருப்பார்கள். பிறகு எதையும் செய்ய முடியாது. பைசாவிற்கு கூட அவசியம் இருக்காது. நீங்கள் புரிய வைப்பதற்கு இந்த பேட்ஜ் மட்டுமே போதுமானது. பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா. அனைத்து சாஸ்திரங்களினுடைய சாரமும் இந்த பேட்ஜில் இருக்கிறது. பாபா பேட்ஜுக்கு நிறைய மகிமை செய்கின்றார். உங்களுடைய இந்த பேட்ஜை அனைவரும் கண்களில் ஒத்திக் கொள்வார்கள், அப்படிப்பட்ட நேரம் கூட வரும். மன்மனாபவ, என்னை நினைவு செய்தால் இப்படி ஆவீர்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. பிறகு இவர்களே (இலட்சுமி - நாராயணன்) 84 பிறவிகள் எடுக்கின்றனர். மறு பிறவி எடுக்காதவர் ஒரேயொரு சிவ பாபா மட்டும் தான் ஆவார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) நினைவிற்கான உழைப்பு மற்றும் ஞானத்தின் தாரணை மூலம் கர்மாதீத் நிலையை அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஞானக்கடலின் முழுமையான ஞானத்தையும் தனக்குள் தாரணை செய்ய வேண்டும்.

(2) ஆத்மாவில் படிந்திருக்கக்கூடிய துருவை நீக்கி முழுமையான விகாரமற்றவராக வேண்டும். சிறிதளவு கூட தூய்மையற்றத் தன்மையின் அம்சம் இருக்கக் கூடாது. நாம் ஆத்மாக்கள் சகோதர சகோதரர்கள்...... என்ற பயிற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
சமயம் மற்றும் சங்கல்பம் எனும் பொக்கிசங்களின் மீது கவனம் செலுத்தி சேமிப்புக் கணக்கை அதிகப்படுத்த கூடிய பன்மடங்கு பிராப்திகளின் அதிபதி ஆகுங்கள்.

பொக்கிசங்கள் பலவாறு இருந்தாலும், சமயம் மற்றும் சங்கல்பத்தின் மீது மிகுந்த கவனம் வேண்டும். ஒவ்வொரு நேரமும் சங்கல்பமானது, சுபமாக மற்றும் உயர்ந்ததாக இருந்தால் மட்டுமே சேமிப்புக் கணக்கு அதிகமாகும். இப்போதைய நேரத்தின் கணக்கு, ஒன்றை சேமித்தால் பலமடங்கு கிடைக்கும். ஒன்றை பலமடங்காக திருப்பி கொடுக்கும் பேங்க் இதுவாகும். அதனால், என்னதான் ஆனாலும் சரி, தியாகம், தபஸ்யா செய்ய வேண்டினும், பணிவாக இருக்க நேரிட்டாலும்... இந்த இரண்டு விசயங்களிலும் கவனம் செலுத்தினால் பலமடங்கு பிராப்திகளின் அதிபதி ஆவீர்கள்.

சுலோகன்:
மனோ பலத்தினால் சேவை செய்தால், அதற்கான பலன் அதிகமாக கிடைக்கும்.