18-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தன் மீது தாமே
கருணை காட்டுங்கள், தந்தை என்ன வழி கூறுகின்றாரோ அதன் படி
நடக்கும் பொழுது அளவற்ற குஷி ஏற்படும், மாயையின்
சாபத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள்.
கேள்வி:
மாயையின் சாபம் ஏன் ஏற்படுகிறது?
சாபம் அடைந்த ஆத்மாவின் நிலை எப்படி இருக்கும்?
பதில்:
1) தந்தை மற்றும் படிப்பை (ஞான
இரத்தினங்கள்) ஆதாரமாக்காமல் இருப்பதனால், தனது வழிப் படி
நடப்பதனால் மாயையின் சாபம் ஏற்பட்டு விடுகிறது. 2) அசுர நடத்தை
இருந்து, தெய்வீக குணங்கள் தாரணை செய்யவில்லையெனில் தன் மீது
கருணை கொள்ளவில்லை என்று பொருள். புத்தி பூட்டு பூட்டப்பட்டு
விடும். அவர்கள் தந்தையின் உள்ளத்தில் அமர முடியாது.
ஓம் சாந்தி.
நாம் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும் மற்றும் தந்தையை நினைவு
செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை ஆன்மீகக் குழந்தைகளிடத்தில்
இருக்கிறது. மாயை என்ற இராவணன் சாபம் கொடுத்து துக்கமானவர்களாக
ஆக்கி விடுகிறது. சாபம் என்ற வார்த்தையே துக்கம் தான். ஆஸ்தி
என்ற வார்த்தை சுகம் ஆகும். எந்தக் குழந்தைகள் நேர்மையாகவும்,
கட்டளைப்படி நடக் கின்றவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்கள்
நல்ல முறையில் அறிவர். யார் கட்டளைப்படி நடக்கவில்லையோ, அவர்கள்
குழந்தைகளே அல்ல. தன்னை என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக்
கொள்ளட்டும், ஆனால் தந்தையின் உள்ளத்தில் அமர முடியாது, ஆஸ்தி
அடைந்திட முடியாது. யார் மாயை கூறும் வழிப்படி நடக்கிறார்களோ
மற்றும் தந்தையை நினைக்கவும் இல்லையோ அவர்கள் மற்றவர்களுக்குப்
புரிய வைக்கவும் முடியாது. அதாவது தனக்குத் தானே சாபம்
கொடுத்துக் கொள்கின்றனர். மாயை மிகவும் சாமர்த்தியமானது என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். ஒருவேளை எல்லையற்ற தந்தை கூறுவதை
ஏற்றுக் கொள்ளவில்லையெனில் மாயை கூறுவதை ஏற்றுக் கொள்கின்றனர்
என்று பொருள். மாயைக்கு வசமாகி விடுகின்றனர். பிரபுவின்
கட்டளையை தலைமீது வைத்து (முக்கியத்துவம் கொடுத்து) நடக்க
வேண்டும் என்று கூறப்படுகிறது அல்லவா! ஆக தந்தை கூறுகின்றார் -
குழந்தைகளே! முயற்சி செய்து தந்தையை நினைவு செய்தால் மாயையின்
மடியிலிருந்து நீங்கி பிரபுவின் மடியில் வந்து விடுவீர்கள்.
தந்தை புத்திசாலிகளுக்கெல்லாம் புத்திசாலி ஆவார். தந்தை கூறுவதை
ஏற்றுக் கொள்ளவில்லையெனில் புத்தி பூட்டப்பட்டு விடுகிறது.
பூட்டைத் திறக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். ஸ்ரீமத் படி
நடக்க வில்லையெனில் அவர்களது நிலை என்ன ஆகும்? மாயையின்
வழிப்படி நடந்தால் எந்த பதவியும் அடைய முடியாது. கேட்கலாம்,
ஆனால் எந்த தாரணையும் செய்யவும் முடியாது, செய்விக்கவும்
முடியாது. ஆக அவர்கள் என்ன நிலையடைவர்? தந்தை ஏழைப்பங்காளன்
ஆவார். மனிதர்கள் ஏழைகளுக்குத் தானம் செய்கின்றனர், தந்தையும்
வந்து எவ்வளவு எல்லையற்ற தானம் செய்கின்றார்! ஒருவேளை ஸ்ரீமத்
படி நடக்க வில்லையெனில் புத்தி ஒரேயடியாக பூட்டப்பட்டு
விடுகிறது. பிறகு என்ன பிராப்தி அடைவார்கள்? ஸ்ரீமத் படி
நடப்பவர்கள் தான் தந்தையின் குழந்தைகள் ஆவர். தந்தை
கருணையுள்ளம் உடையவர் ஆவார். வெளியில் சென்றதும் மாயை
முற்றிலும் அழித்து விடும் என்பதை தந்தை புரிந்திருக்கின்றார்.
யாராவது தற்கொலை செய்து கொள்கின்றனர் எனில் தன்னைத் தான்
அழித்து கொள்கின்றனர். தந்தை புரிய வைத்துக் கொண்டே
இருக்கின்றார் - தன் மீது கருணை காட்டுங்கள், ஸ்ரீமத் படி
நடங்கள், தன் மன வழிப்படி நடக்காதீர்கள். ஸ்ரீமத்படி நடக்கும்
பொழுது குஷியின் அளவு அதிகரிக்கும். இலட்சுமி நாராயணனின்
முகத்தைப் பாருங்கள் எவ்வளவு குஷியாக இருக்கின்றனர்! ஆக முயற்சி
செய்து இவ்வாறு உயர்ந்த பதவியடைய வேண்டும் அல்லவா! தந்தை
அழிவற்ற ஞான இரத்தினங்கள் கொடுக்கின்றார் எனில் அவைகளை ஏன்
புறக்கணிக்க வேண்டும்? இரத்தினங்களினால் பையை நிறைத்துக் கொள்ள
வேண்டும். கேட்கத் தான் செய்கிறீர்கள், ஆனால் பை நிறைவது
கிடையாது. ஏனெனில் தந்தையை நினைவு செய்வது கிடையாது. அசுர
நடத்தையுடன் இருக்கிறீர்கள். தந்தை அடிக்கடி புரிய வைத்துக்
கொண்டே இருக்கின்றார் - தன் மீது கருணை காட்டுங்கள், தெய்வீக
குணங்களை தாரணை செய்யுங்கள். அது அசுர குடும்பமாகும். அதை தந்தை
வந்து தேவதைகள் உலகமாக ஆக்குகின்றார். பரிஸ்தான் என்றால்
சொர்கமாகும். மனிதர்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து கொண்டே
இருக்கின்றனர்! சந்நியாசிகள் போன்றவர்களிடம் செல்கின்றனர்,
மனதிற்கு அமைதி கிடைக்கும் என்று நினைக்கின்றனர். உண்மையில்
இந்த வார்த்தையே தவறாகும். இதற்கு எந்த பொருளும் கிடையாது.
அமைதி ஆத்மாவிற்குத் தான் தேவை அல்லவா! ஆத்மா சுயம் அமைதி
சொரூபமாக இருக்கிறது. ஆத்மாவிற்கு அமைதி எப்படிக் கிடைக்கும்?
என்று கூறுவது கிடையாது. மனதிற்கு அமைதி எப்படிக் கிடைக்கும்?
என்று தான் கேட்கின்றனர். இப்பொழுது மனம் என்றால் என்ன? புத்தி
என்றால் என்ன? ஆத்மா என்றால் என்ன? என்று எதையும் அறியவில்லை.
என்னவெல்லாம் கூறுகின்றனர் மற்றும் செய்கின்றனரோ அவையனைத்தும்
பக்தி மார்க்கமாகும். பக்தி மார்க்கத்தினர் ஏணியில் கீழே இறங்கி
இறங்கி தமோ பிரதானம் ஆகிவிடுகின்றனர். யாரிடத்திலாவது அதிக
செல்வம், சொத்துக்கள் இருக்கலாம், ஆனால் இருப்பது இராவண
இராஜ்யத்தில் அல்லவா!
குழந்தைகளாகிய நீங்கள் சித்திரங்களின் மூலம் புரிய வைக்கும்
பயிற்சி மிகவும் நன்றாக செய்ய வேண்டும். தந்தை அனைத்து
சென்டர்களிலும் இருக்கக் கூடிய குழந்தைகளுக்குப் புரிய வைத்துக்
கொண்டே இருக்கின்றார். வரிசைக்கிரமம் அல்லவா! சில குழந்தைகள்
இராஜ்ய பதவி அடைவதற் கான முயற்சி செய்யவில்லையெனில் பிரஜைகளில்
என்ன நிலை அடைவார்கள்! சேவை செய்வது கிடையாது, நான் என்ன
நிலையடைவேன்? என்று தன் மீது கருணையும் கொள்வது கிடையாது எனில்
நாடகத்தில் இவர்களது பாகம் அவ்வளவு தான் என்று புரிந்து கொள்ள
வேண்டும். தனக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமெனில் ஞானத்தின்
கூடவே யோகாவும் இருக்க வேண்டும். யோகாவில் இருக்கவில்லையெனில்
எந்த நன்மையும் ஏற்படாது. யோகா இன்றி பாவனம் ஆக முடியாது. ஞானப்
பாடம் தனி, யோகா பாடம் தனி. யோகாவில் பலர் பக்குவமற்று
இருக்கின்றனர். நினைவு செய்வதற்கான அறிவே கிடையாது. ஆக நினைவு
இல்லாமல் விகர்மம் விநாசம் எப்படி ஆகும்? பிறகு அதிக தண்டனை
அடைய வேண்டியிருக்கும், அதிகம் பட்சாதாபப் பட வேண்டியிருக்கும்.
அந்த ஸ்தூல வருமானம் செய்யவில்லையெனில் எந்த தண்டனையும்
அடையமாட்டீர்கள். இங்கு பாவங்களின் சுமைகள் தலை மீது அதிகம்
இருக்கிறது. அதற்கு அதிக தண்டனையடைய வேண்டியிருக்கும்.
குழந்தையாக ஆன பின்பு அவர் சொல்படி நடக்கவில்லையெனில் அதிக
தண்டனை அடைய வேண்டியிருக்கும். தந்தை கூறு கின்றார் - தன் மீதே
கருணை காட்டுங்கள். யோகாவில் இருங்கள். இல்லையெனில் தன்னையே
நாசமாக்கிக் கொள்வீர்கள். எப்படி யாராவது மேலிருந்து கீழே
குதிக்கின்றனர், இறக்காமல் மருத்துவமனையில் இருக்கின்றனர் எனில்
கதறிக் கொண்டே இருப்பர்! தன்னை ஏமாற்றிக் கொண்டனர், இறக்கவில்லை,
பாக்கி என்ன வேலைக்கு பயன்படுவர்! இங்கும் இவ்வாறு
இருக்கின்றனர். மிகவும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும்!
ஸ்ரீமத் படி நடக்கவில்லையெனில் கீழே விழுந்து விடுவீர்கள். நான்
என்ன நிலை அடைவேன்? என்று ஒவ்வொருவரும் நாளடைவில் அவரவர்களது
பதவியைப் பார்ப்பீர்கள். யார் சேவாதாரிகளாக, கட்டளைப்படி
நடப்பவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவி
அடைவார்கள். இல்லையெனில் தாசன், தாசிகளாக ஆவீர்கள். பிறகு
தண்டனைகளும் அதிகமாக கிடைக்கும். அந்த நேரத்தில் இருவரும்
தர்மராஜராகவே ஆகிவிடுவர். ஆனால் குழந்தைகள் புரிந்து கொள்வது
கிடையாது, தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றனர். தண்டனைகள்
இங்கேயே அடைய வேண்டியிருக்கும் அல்லவா! யார் எந்த அளவு சேவை
செய்கிறார்களோ அந்த அளவு ஜொலிப்பார்கள். இல்லையெனில் எந்த
காரியத்திற்கும் பயன்படாதவர்களாக ஆகிவிடுவீர்கள்.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடிய வில்லையெனில் தனக்காவது நன்மை
செய்து கொள்ளுங்கள். பந்தனமுள்ளவர்களும் சுய நன்மை செய்து
கொண்டே இருக்கின்றனர். இருப்பினும் எச்சரிக்கையாக இருங்கள்
என்று தந்தை கூறுகின்றார். பெயர், உருவத்தில் மாட்டிக் கொண்டால்
மாயை அதிகம் ஏமாற்றி விடும். பாபா, இன்னாரை பார்த்ததும் எனக்கு
கெட்ட எண்ணங்கள் வருகின்றன என்று கூறுகின்றனர். தந்தை புரிய
வைக்கின்றார் - கர்மேந்திரியங்களின் மூலம் ஒருபொழுதும் கெட்ட
காரியம் செய்யக் கூடாது. அசுத்த மனிதன் அதாவது நடத்தை
சரியில்லாதவராக இருந்தால் அவரை சென்டருக்கு வரவே விடக் கூடாது.
பள்ளியில் யாராவது தீய வழியில் நடந்தால் அதிக அடி வாங்க வேண்டி
யிருக்கும். ஆசிரியர் அனைவரின் முன்பும் இவர் இவ்வாறு நடந்து
கொண்டார், அதனால் இவரை பள்ளியிருந்து நீக்கிவிடுகிறோம் என்று
கூறுவார். உங்களது சென்டர்களிலும் இவ்வாறு அசுத்த பார்வை யுடன்
வருகின்றனர், ஆக அவர்களை வெளியேற்றி விட வேண்டும். ஒருபொழுதும்
கெட்ட பார்வை இருக்கக் கூடாது என்று தந்தை கூறுகின்றார். சேவை
செய்யவில்லை, தந்தையை நினைவு செய்யவில்லை எனில் அவசியம் ஏதாவது
அசுத்தம் இருக்கிறது. யார் நன்றாக சேவை செய்கிறார்களோ அவர்களது
பெயரும் வெளிப்பட்டு விடும். சிறிது சங்கல்பம் வந்தது, பார்வை
கெட்டது எனில் மாயை யுத்தம் செய்கிறது என்று புரிந்து
கொள்ளுங்கள். முற்றிலும் விட்டு விட வேண்டும். இல்லையெனில்
அதிகரித்து விடும் பிறகு நஷ்டப்படுத்தி விடும். தந்தையை நினைவு
செய்து கொண்டே இருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள். பாபா
அனைத்து குழந்தை களுக்கும் எச்சரிக்கை செய்கின்றார் - கவனமாக
இருங்கள், ஒருபொழுதும் தனது குலத்தின் பெயரை கெடுத்து
விடாதீர்கள். சிலர் கந்தர்வ திருமணம் செய்து கொண்டே ஒன்றாக
சேர்ந்து இருக்கின்றனர் எனில் பெயரை எவ்வளவு
வெளிப்படுத்துகின்றனர்! சிலர் அசுத்தமாக ஆகிவிடுகின்றனர். இங்கு
நீங்கள் தன்னை சத்கதியடையச் செய்வதற்காக வந்திருக்கிறீர்கள்
தவிர கெட்ட (தாழ்ந்த) கதியடையச் செய்வதற்காக அல்ல. கெட்டதிலும்
கெட்டது காமம், பிறகு கோபம். தந்தையிடம் ஆஸ்தி யடைவதற்காக
வருகின்றனர், ஆனால் மாயை யுத்தம் செய்து சாபம் கொடுத்து
விடுகிறது, பிறகு முற்றிலும் விழுந்து விடுகின்றனர். அதாவது
தனக்குத் தானே சாபம் கொடுத்துக் கொள்கின்றனர். ஆக மிகவும்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தந்தை புரிய
வைக்கின்றார். யாராவது இவ்வாறு வந்தால் அவர்களை அனுப்பி வைத்து
விட வேண்டும். அமிர்தம் குடிக்க வந்தனர், பிறகு வெளியில் சென்று
அசுரனாகி அசுத்தமாகி விடுகின்றனர் என்று காண்பிக்கின்றனர்
அல்லவா! அவர்களால் பிறகு இந்த ஞானம் கூற முடியாது. பூட்டு
பூட்டப்பட்டு விடுகிறது. தனது சுய சேவைக்குத் தயாராக இருக்க
வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். தந்தையின் நினைவில் இருந்து
இருந்து கடைசியில் வீட்டிற்குச் சென்று விட வேண்டும். இரவுப்
பயணிகளே களைப்படையாதீர்கள்.....என்ற பாட்டும் இருக்கிறது அல்லவா!
ஆத்மா வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆத்மா தான் வழிப்போக்கனாக
இருக்கிறது. ஆத்மாவிற்குத் தான் தினமும் புரிய வைக்கப்படுகிறது
- இப்பொழுது சாந்திதாமம் செல்லும் வழிப்போக்கனாக இருக்கின்றாய்.
ஆக இப்பொழுது தந்தை, வீட்டை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து
கொண்டே இருங்கள். எதிலும் மாயை ஏமாற்றி விடவில்லை தானே? நான்
எனது தந்தையை நினைவு செய்கிறேனா? என்று தன்னை பார்க்க வேண்டும்.
உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் பக்கம் தான் பார்வை இருக்க
வேண்டும். இது தான் மிகவும் உயர்ந்த முயற்சியாகும். தந்தை
கூறுகின்றார் - குழந்தைகளே! கெட்ட பார்வையை விட்டு விடுங்கள்.
தேக அபிமானம் என்றால் கெட்ட பார்வையாகும், ஆத்ம அபிமானி என்றால்
சுத்த பார்வையாகும். ஆக குழந்தைகளின் பார்வை தந்தையின் பக்கம்
இருக்க வேண்டும். ஆஸ்தி மிகவும் உயர்ந்தது ஆகும், உலக
சக்கரவர்த்தி, குறைந்த விசயமா என்ன! படிப்பின் மூலம், யோகாவின்
மூலம் உலக சக்கரவர்த்தியாக ஆக முடியும் என்று கனவிலும் கூட
யாரும் நினைத் திருக்கமாட்டீர்கள். படித்து உயர்ந்த பதவி
அடையும் பொழுது தந்தையும் குஷியடைவார், ஆசிரியரும் குஷியடைவார்,
சத்குருவும் குஷியடைவார். நினைவு செய்து கொண்டே இருந்தால்
தந்தையும் செல்லம் கொடுத்துக் கொண்டே இருப்பார். தந்தை
கூறுகின்றார் - குழந்தைகளே! இந்தக் குறைகளை நீக்கி விடுங்கள்.
இல்லையெனில் பெயரைக் கெடுத்து விடுவீர்கள். தந்தை உலகிற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றார், சௌபாக்கியத்தை திறக்கின்றார்.
பாரதவாசிகள் தான் 100 சதவிகிதம் சௌபாக்கியசாலிகளாக இருந்தனர்,
பிறகு 100 சதவிகிதம் துர்பாக்கியசாலிகளாக ஆகி விட்டனர்.
மீண்டும் உங்களை சௌபாக்கியசாலிகளாக ஆக்குவதற்காக
கற்பிக்கப்படுகிறது.
தர்மத்தின் பெரிய பெரிய மனிதர்களும் உங்களிடத்தில் வருவார்கள்
என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். யோகா கற்றுக் கொண்டு
செல்வார்கள். மியூசியத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும்
நீங்கள் புரிய வைக்க முடியும் - இப்பொழுது சொர்க்கத்தின் கதவு
திறக்கப்பட இருக்கிறது. மரம் பற்றி புரிய வையுங்கள். நீங்கள்
இந்த கால கட்டத்தில் வருகிறீர்கள். பாரதவாசிகளின் பாகம் இந்த
குறிப்பிட்ட நேரத்தில் இருக்கிறது. நீங்கள் இந்த ஞானம்
கேட்கிறீர் கள், பிறகு தங்களது தேசத்திற்குச் சென்று கூறுங்கள்
- தந்தையை நினைவு செய்தால் தமோ பிரதானத்திலிருந்து சதோ
பிரதானமாக ஆகிவிடுவீர்கள். அவர்கள் யோகாவைத் தான் விரும்பு
கின்றனர். ஹடயோகிகள், சந்நியாசிகள் அவர்களுக்கு யோகா கற்பிக்க
முடியாது. உங்களது இயக்கமும் வெளியில் செல்லும். புரிய
வைப்பதற்கு மிகுந்த யுக்தி தேவை. தர்மத்தின் பெரிய பெரிய
தலைவர்கள் வந்தே ஆக வேண்டும். உங்களிடமிருந்து ஒரே ஒருவர் நல்ல
முறையில் இந்த ஞானம் எடுத்துச் சென்றால் ஒருவரின் மூலம் பலர்
புரிந்து கொள்வர். ஒருவரின் புத்தியில் வந்து விட்டால் பிறகு
செய்தித்தாள் போன்றவைகளில் வெளியிடுவார்கள். இதுவும் நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. இல்லையெனில் தந்தையை நினைவு செய்ய எப்படி
கற்றுக் கொள்ள முடியும்? தந்தையின் அறிமுகம் அனைவருக்கும்
கிடைக்க வேண்டும். யாராவது வெளிப்படுவர். கண்காட்சி கூடத்தில்
(மியூசியம்) மிகப் பழமையான பொருட்களை பார்க்கச் செல்கின்றனர்.
இங்கு உங்களது பழைய ஞானம் கேட்பார்கள். பலர் வருவார்கள். அதில்
சிலர் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். இங்கிருந்து தான்
திருஷ்டி அடைவர் அல்லது இயக்கம் வெளியில் செல்லும். தந்தையை
நினைவு செய்தால் நீங்கள் உங்களது தர்மத்தில் உயர்ந்த பதவி
அடைவீர்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். மறுபிறப்பு எடுத்து
எடுத்து அனைவரும் கீழான நிலைக்கு வந்து விட்டீர்கள். கீழான நிலை
என்றால் தமோ பிரதானம் ஆவதாகும். தந்தையை நினைவு செய்யுங்கள்
என்று போப் போன்றவர்கள் கூற முடியாது. தந்தையை அறியவேயில்லை.
உங்களிடத்தில் மிக நல்ல ஞானம் இருக்கிறது. சித்திரங்களும் மிக
அழகாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அழகான பொருட்களாக
இருந்தால் மியூசியம் மேலும் அழகாக ஆகிவிடும். பார்ப்பதற்கு பலர்
வருவார்கள். எவ்வளவு பெரிய சித்திரமாக இருக்குமோ அவ்வளவு நல்ல
முறையில் புரிய வைக்க முடியும். நான் இவ்வாறு புரிய வைக்க
வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். நாம் பிராமணர்களாக
ஆகியிருக்கிறோம், ஆக எந்த அளவு சேவை செய்கிறோமோ அந்த அளவிற்கு
மரியாதை கிடைக்கும் என்று உங்களது புத்தியில் இருக்க வேண்டும்.
இங்கும் மரியாதை, அங்கும் மரியாதை கிடைக்கும். நீங்கள்
பூஜைக்குரியவர்களாக ஆகிவிடுவீர்கள். இந்த ஈஸ்வரிய ஞானம் தாரணை
செய்ய வேண்டும். சேவைக்காக ஓடிக் கொண்டே இருங்கள் என்று தந்தை
கூறுகின்றார். தந்தை சேவைக்காக எங்கு அனுப்பினாலும் இதில் நன்மை
இருக்கிறது. முழு நாளும் புத்தியில் சேவைக்கான சிந்தனைகள் ஓடிக்
கொண்டே இருக்க வேண்டும். அயல்நாட்டினர்களுக்கும் தந்தையின்
அறிமுகம் கொடுக்க வேண்டும். மிக அன்பான தந்தையை நினைவு
செய்யுங்கள், எந்த தேகதாரிகளையும் குருவாக ஆக்கிக்
கொள்ளாதீர்கள். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் அந்த ஒரே
ஒரு தந்தை ஆவார். இப்பொழுது ஒட்டு மொத்தமாக மரணம் எதிரில்
இருக்கிறது. மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் என்று
இருக்கிறது அல்லவா! தந்தையும் மொத்த வியாபாரியாகி, ஆஸ்தியும்
மொத்தமாக கொடுக்கின்றார். 21 பிறவிகளுக்கு உலக இராஜ்யத்தை
எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான சித்திரங்கள் திரிமூர்த்தி,
சக்கரம், ஏணி, விராட ரூப சித்திரங்களாகும். மேலும் கீதையின்
பகவான் யார்? இந்த சித்திரம் மிகவும் முதல் தரம் வாய்ந்ததாக
இருக்கிறது. இதில் தந்தையின் மகிமை முழுமையாக இருக்கிறது. தந்தை
தான் கிருஷ்ணரை இவ்வாறு ஆக்கியிருக்கின்றார். இந்த ஆஸ்தி இறை
தந்தை தான் கொடுத் திருக்கின்றார். கலியுகத்தில் இவ்வளவு
மனிதர்கள் இருக்கின்றனர்! சத்யுகத்தில் குறைவாக இருப்பர்.
இவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியது யார்? என்பதை சிறிதும் யாரும்
அறியவில்லை. ஆக சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக பெரிய பெரிய
நகரங்களுக்குச் செல்கின்றனர். அவர்களும் வந்து தந்தையின்
அறிமுகம் பெறுவார்கள். சேவைக்காக பல கருத்துகள் கிடைத்துக்
கொண்டு இருக்கின்றன. அயல்நாட்டிற்கும் செல்ல வேண்டும். ஒருபுறம்
நீங்கள் தந்தையின் அறிமுகம் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள்,
மறுபுறம் சண்டை சச்சரவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
சத்யுகத்தில் குறைவான மனிதர்கள் இருப்பர் எனில் அவசியம் மற்ற
அனைவரும் அழிந்து விடுவர் அல்லவா! உலக சரித்திர பூகோளம்
மீண்டும் நடைபெறும். எது நடந்து முடிந்ததோ அது மீண்டும்
நடைபெறும். ஆனால் மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கும் அறிவு தேவை.
நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நன்ஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சதா ஒரு தந்தையின் பக்கம் தான் பார்வையை வைத்திருக்க
வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்து மாயையின்
ஏமாற்றத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒருபொழுதும்
கெட்ட பார்வையினால் தனது குலத்தின் பெயரைக் கெடுத்து விடக்
கூடாது.
2) ஓடோடி சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். சேவாதாரி மற்றும்
கட்டளைப்படி நடப்பவர்களாக ஆக வேண்டும். தனக்கும்
மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். எந்த கெட்ட நடத்தையும்
இருக்கக் கூடாது.
வரதானம்:
முற்றுப்புள்ளியின் நிலையின் மூலம் இயற்கையின் குழப்பங்களை
நிறுத்தக் கூடிய மாஸ்டர் இயற்கையின் அதிகாரி ஆகுக.
நிகழ்காலம் குழப்பம் அதிகரிக்கும் நேரமாகும். கடைசி சோதனையில்
ஒருபுறம் இயற்கையும் மற்றொருபுறம் ஐந்து விகாரங்களின் மிகப்
பெரிய ரூபமும் இருக்கும். தமோ குண ஆத்மாக்களின் யுத்தம் மற்றும்
பழைய சன்ஸ்காரங்கள் அனைத்தும் கடைசி நேரத்தில் தனது வாய்ப்பை
எடுத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட நேரத்தில் கட்டுப்படுத்தும்
சக்தியின் மூலம் அவ்வப்பொழுது சாகாரி, அவ்வப்பொழுது ஆகாரி
மற்றும் அவ்வப்பொழுது நிராகாரி நிலையில் நிலைத்திருக்கும்
பயிற்சி தேவை. பார்த்தும் பார்க்காது இருங்கள், கேட்டும்
கேட்காது இருங்கள். எப்போது இவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கும்
நிலை ஏற்படுமோ அப்போது இயற்கைக்கு அதிகாரியாகி இயற்கையின்
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
சுலோகன்:
தடையற்ற இராஜ்ய அதிகாரி ஆவதற்கு தடையற்ற சேவாதாரி ஆகுங்கள்.
அவ்யக்த இஷாரே: இணைந்த ரூப நினைவின் மூலம் சதா வெற்றியாளர்
ஆகுங்கள்
நான் ஆத்மா, பரமாத்மாவுடன் இணைந்திருக்கிறேன் என்ற நினைவு சதா
இருக்க வேண்டும். பரமாத்மா ஆத்மாவாகிய நான் இல்லாமல் இருக்க
முடியாது மற்றும் நானும் பரமாத்மா இல்லாமல் தனியாக இருக்க
முடியாது. இவ்வாறு ஒவ்வொரு விநாடியும் இறைவனின் துணையை அனுபவம்
செய்வதன் மூலம் ஆன்மிக நறுமணத்தில் அழிவற்ற மற்றும் ஏக்ரஸ் ஆக
இருப்பீர்கள்.