18.05.25 காலை முரளி
ஓம் சாந்தி 25.03.2005 பாப்தாதா,
மதுபன்
மாஸ்டர் ஞான சூரியனாகி அனுபவமெனும் கிரணங்களை பரப்புங்கள்,
ஞானத்தை வழங்கும் வள்ளல் ஆகுங்கள், தபஸ்வி ஆகுங்கள்.
இன்று பாப்தாதா நாலாபுறமும் உள்ள தனது தூய அன்னப் பறவைகளான
குழந்தைகளுடன் ஹோலி கொண்டாட வந்துள்ளார். குழந்தைகளும்
அன்பெனும் கயிற்றில் இணைந்து ஹோலி கொண்டாட வந்துள்ளீர்கள்,
பாப்தாதா அனைத்து குழந்தைகளின் பாக்கியத்தை பார்த்துக்
கொண்டிருக்கின்றார் எவ்வளவு பெரிய பாக்யம். எந்தளவு தூய்மையோ
அந்தளவிற்கு உயர்ந்த நிலை கல்பம் முழுவதிலும் உங்களது
பாக்கியத்தை விட உயர்ந்த பாக்யம் வேறு எவருக்கும் கிடையாது.
தங்களது பாக்யம் என்னவென தெரிந்துள்ளீர்களா? நிகழ்காலத்திலும்
பரமாத்மாவின் பராமரிப்பு, பரமாத்மாவின் கல்வி, பரமாத்மாவின்
வரதானங்களால் வளர்கின்றீர்கள். நாளையும் விஸ்வ ராஜ்யதிகாரி
ஆகின்றீர்கள். ஆகவே வேண்டும், நிச்சயம் உறுதியானது. பிறகும்
பூஜைக்குரியவர் ஆகும் பொழுது சிரேஸ்ட ஆத்மாக்களான உங்களது பூஜை
விதிப்பூர்வமானது வேறு யாருக்கும் அப்படி நடப்பதில்லை, ஆக
நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் பூஜ்ய சொரூபத்தில் மிக மிக
உயர்ந்தவர்களே உங்களுடைய ஜட சித்திரங்களுக்கும் கூட ஒவ்வொரு
செயலுக்கும் பூஜை நடைபெறுகின்றது. அனேக தர்ம பிதா, மகான்
ஆத்மாக்கள் உள்ளனர். ஆனால் இவ்வாறு விதிப் பூர்வமான பூஜை
உயர்ந்ததிலும் உயர்ந்த பரமாத்மாவின் குழந்தைகளான உங்களுக்கே
நடைபெறு கின்றது.ஏனெனில் இப்போது ஒவ்வொரு செயலையும்
கர்மயோகியாகி விதிப்பூர்வமாக செய்வதன் பலனாக விதிப்பூர்வமாக
பூஜை நடைபெறுகின்றது. உயர்விலும் உயர்வான பகவான் குழந்தை களான
உங்களுக்கும் உயர்விலும் உயர்வான பிராப்தி தருகின்றார்.
ஹோலி என்றாலே தூய்மை (ஹோலியஸ்ட், ஹையஸ்ட்) மிக மிக தூய்மை, மிக
மிக உயர்வு, இந்த பிராமண வாழ்வின் அஸ்திவாரமே தூய்மை தான்.
எண்ணத்திலும் தூய்மையின்மை உயர்நிலை பெற விடாது. தூய்மையே சுகம்,
சாந்தியின் பிறப்பிடம். தூய்மை சர்வ பிராப்திகளின் சாவி. எனவே
உங்களுக்கான சுலோகன் இதுதான். தூய்மை ஆகுக, யோகி ஆகுக
நினைவார்த்த மான ஹோலியிலும் பாருங்கள், முதலில் எரிக்கிறார்கள்,
பிறகு கொண்டாடுகின்றார்கள். எரிக்காமல் கொண்டாடுவதில்லை.
தூய்மையின்மையை எரிப்பது. யோக அக்னியால் தூய்மை யின்மையை
எரிக்கின்றீர்கள். இதன் நினைவாகவே அவர்கள் நெருப்பில்
எரிக்கின்றார்கள். எரித்த பிறகே தூய்மையடைந்து குஷியில்
கொண்டாடுகின்றார்கள். தூய்மையின் நினைவாக சந்திப்பை
கொண்டாடுகின்றனர் ஏனெனில் நீங்கள் அனைவரும் தூய்மையின்மையை
எரிக்கின்றீர்கள், பரமாத்மாவின் தொடர்பால் செந்நிறமாகின்றீர்கள்.
அப்போது அனைத்து ஆத்மாக்கள் குறித்து நல்லாசை
நல்விருப்பங்களுடன் (சுபபாவனை, சுபகாமனா) சந்திப்பை
கொண்டாடுகின்றீர்கள். இதன் நினைவாகவே மங்களகரமான சந்திப்பாக
கொண்டாடுகின்றார்கள். எனவே பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும்
இதனையே நினைவூட்டுகின்றார். எப்போதும் ஒருவருக்கொருவர் ஆசியே
தருக, ஆசியே பெருக. தனது ஆசிகளெனும் சுபபாவனையுடன் மங்களகரமான
சந்திப்பை கொண்டாடுங்கள். ஏனெனில் ஒருவர் உங்களுக்கு சாபமே
கொடுத்தாலும் அவர் தூய்மை யின்மைக்கு வசமாகி உள்ளார். ஒருவேளை
நீங்கள் சாபத்தை மனதில் வைத்திருப்பீர்களேயானால் மகிழ்ச்சியாக
இருப்பீர்களா? சுகம் பெறுவீர்களா? மாறாக ஏன் என்ன, எப்படி, யார்
எனும் வீண் எண்ணங்களின் வரிசையால் துக்கத்தை அனுபவம்
செய்வீர்களா ? சாபம் பெறுவதென்பது தன்னையும் அமைதியிழக்கச்
செய்து துக்கத்தை அனுபவம் செய்விப்பதாகும், அதனால் பாப்தாதாவின்
ஸ்ரீமத்தான சுகமே தருக. சுகமே பெறுக இதற்கு ஊறு
விளையவித்ததாகும். ஆக குழந்தைகள் அனைவரும் ஆசி பெறவும் ஆசி
தரவும் கற்றுக் கொண்டீர்கள் தானே. கற்றுக் கொண்டீர்களா?
உறுதி மொழி மற்றும் உறுதித் தன்மை. உறுதியுடன் உறுதி மொழி
செய்க. சுகமே தருவேன் சுகமே பெறுவேன். ஆசி தருவேன் ஆசி பெறுவேன்.
உறுதி மொழியா ? தைரியம் உள்ளதா? யாரிடம் தைரியம் உள்ளதோ இன்று
முதல் ஆசி தருவேன், ஆசி பெறுவேன் எனும் திட சங்கல்பம்
செய்வீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். பக்காவா? (உறுதியா)
பக்காவா? கச்சா ஆகக் கூடாது. காயானால் காயான பழத்தை பறவைகள்
அதிகம் தின்று விடும். உறுதியே வெற்றியின் திறவு கோள் (சாவி).
அனைவரிடமும் சாவி உள்ளதா? உள்ளதா சாவி? சாவி பத்திரமாக உள்ளதா,
மாயை திருடிவிடவில்லையே? அதற்கும் சாவி மிகவும் பிடிக்கும்.
எப்போதும் இந்த எண்ணத்தை நினையுங்கள், மறந்து விடாதீர்கள்.
நினைவில் வையுங்கள். நான் செய்தே தீருவேன், செய்தே தீருவேன்,
ஆகியே தீருவேன், நடந்தே தீரும், நடந்தேறியே உள்ளது. இதனையே
நிச்சய புத்தி விஜயந்தி என்று சொல்லப்படும். நாடகம் வெற்றியாகவே
அமைக்கப்பட்டுள்ளது. திரும்ப செய்தால் மட்டும் போதும். முன்பே
அமைக்கப்பட்ட நாடகம் அமைந்தே உள்ளது திரும்ப செய்ய வேண்டும்.
கடினமா? அவ்வப்போது கடினமாகிறதா? ஏன் கடினமாகிறது? தானாகவே
சுலபமானதை கடினமாக்கி விடுகின்றீர்கள். சிறிய தவறு செய்து
விடுகின்றீர்கள் தெரியுமா, அது என்ன தவறு? பாப்தாதாவிற்கு அந்த
சமயத்தில் இரக்கம் தான் வருகின்றது, என்ன சொல்வது. அன்பு
ஏற்படுகிறது, என்ன அன்பு வருகிறது? ஒரு புறம் பாபா என்னுடன்
இணைந்துள்ளார் என்று சொல்கின்றீர்கள். உடனல்ல (என்னுடன்
இணைந்துள்ளார். இணைந்துள்ளாரா? இரட்டை அயல் நாட்டவர்
இணைந்தேயுள்ளார். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் இûண்ந்துள்ளாரா?
கேலரியில் அமர்ந்திருப்பவர்கள் இணைந் துள்ளாரா? நல்லது. இன்று
மதுபன் வாசி, பாண்டவபவன், ஞானசரோவர், இங்குள்ளவர்களும் கூட
தனியறையில் கேட்டுக் கொண்டிருப்பதாக பாப்தாதாவிற்கு செய்து
கிடைத்தது. அவர்களிடம் பாப்தாதா கேட்கின்றார். பாப்தாதா
கம்பைண்டாக உள்ளாரா? கை உயர்த்துகின்றார்கள் சர்வ சக்திவான்
பாப்தாதாவே கம்பைண்டாக இருக்கும்போது பிறகு ஏன் தனியே
செல்கின்றீர்கள்? நீங்கள் பலவீனமாகவே இருந்தாலும் கூட பாப்தாதா
சர்வசக்திவான் அல்லவா. தந்தையை விட்டு தனித்திருக்கும் பொழுதே
பலவீனமடைகின்றீர்கள். கம்பைன்டாகவே இணைந்தே இருங்கள். பாப்தாதா
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு நேரமும் சகயோகியாகவே
இருக்கின்றார். சிவபாபா பரந்தாமத்திலிருந்து வந்தது ஏன்?
எதற்காக வந்துள்ளார்? குழந்தைகளுக்கு உதவி செய்யவே வந்துள்ளார்.
பாருங்கள் பிரம்மா பாபாவும் பூத உடலை விடுத்து ஒளி உடல்
எடுத்தது எதற்காக? மானுடலை விட ஒளி உடலில் மிக அதிகமாகவே உதவி
செய்ய முடியும், பாப்தாதாவே உதவி செய்ய முன் வரும்போது நீங்கள்
ஏன் தனித்திருக்கின்றீர்கள். கடின உழைப்பை ஏன்
மேற்கொள்கிறீர்கள். 63 பிறவிகளாக உழைத்தீர்கள். அந்த உழைக்கும்
சம்ஸ்காரம் இன்னும் ஈர்க்கிறது? அன்பில் இருங்கள். லவ்லீன்
ஆகுங்கள், அன்பு உழைப்பை களைவது, உழைப்பு நன்றாக உள்ளதா?
பழக்கத்தில் ஊறி விட்டீர்களா? சகஜயோகி தானே. பாப்தாதா
முக்கியமாக பரந்தாமத்திலிருந்து குழந்தைகளுக்காகவே பரிசு கொண்டு
வந்துள்ளார். என்ன பரிசு தெரியுமா? உள்ளங்கையில் சொர்க்கம்
கொண்டு வந்துள்ளார். உங்களது சித்திரமும் உள்ளது தானே
குழந்தைகளுக்காகவே ராஜபாக்கியம் கொண்டு வந்துள்ளார். எனவே
பாப்தாதாவிற்கு உழைப்பு விருப்பமில்லை.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் உழைப்பிலிருந்து விடுபட்டு
அன்பில் மூழ்கிய நிலையை பார்க்க விரும்புகின்றார். ஆகவே
உழைப்பெனும் மாயையின் யுத்தத்திலிருந்து விடுபட சங்கல்பம்
மூலமாக ஹோலி எரிப்பீர்களா? எரிப்பீர்களா? எரிப்பது என்றாலே
பெயர் அடையாளமும் அழிந்தே போகும். எந்த பொருளையும் எரித்தால்
பெயர் உருவம் அழிந்தே போகுமல்லவா. அவ்வாறு ஹோலி கொண்டாடுவீர்களா?
கையை அசைக்கின்றீர்கள், பாப்தாதாவும் கையை பார்த்து
மகிழ்கின்றார். ஆனால் ..... ஆனால் ஆனால் என்பது கூடாது இல்லையா?
மனமெனும் கையை அசையுங்கள், இந்த கையை அசைப்பது மிக எளிது,
மனதால் ஏற்றுக் கொண்டால் செய்தே ஆக வேண்டும், சந்திக்க
வந்துள்ளார்கள் கை உயர்த்துங்கள். இரட்டை அயல் நாட்டவரும்
உள்ளனர்,
இப்போது முதன் முறையாக வந்துள்ளவர்களுக்கு முக்கியமாக பாப்தாதா
நீங்கள் தனது பாக்யத்தை உருவாக்கியமைக்க வாழ்த்துக்களை
தெரிவிக்கின்றார். ஆனால் இந்த வாழ்த்தை நினைவில் வையுங்கள்.
இப்போது உங்கள் அனைவருக்கும் இறுதியாக வந்தாலும் விரைவாக
செல்வதற்கான வாய்ப்பு உள்ளது, ஏனெனில் முடிவான ரிசல்ட் இன்னும்
வெளியாகவில்லை. ஆக இறுதியாக வந்தவர்களும் முதலில் வந்தவர்களின்
இறுதியில் வந்துள்ளீர்கள் தானே, ஆகவே இறுதியே ஆனாலும் விரைவாக
வந்து முதன்மை இடத்தைப் பெற முடியும், அனுமதி உள்ளது. வரலாம்.
எனவே, எப்போதும் இந்த இலட்சியத்தை நினைவில் வையுங்கள்.
ஆத்மாவாகிய நான் விரைவாக சென்று முதலிடத்தை அடைந்தே தீருவேன்.
ஆம் முக்கிய பிரமுகர்களும் அதிகம் வ்ந்துள்ளனர், வி.ஐ.பி. என்று
சொல்கிறோம் ஆனால் இப்போது முக்கிய பிரமுகர் என்பதிலிருந்து மிக
முக்கிய பிரமுகர்களாக வேண்டும். பாருங்கள், தேவதைகள் உங்களது
ஜட சித்திரங்கள் மிக மிக மிக முக்கிய பிரமுகர்கள். நீங்களும்
அனைவருக்கும் மூதாதையர் ஆகியேத் தீர வேண்டும். பாப்தாதா
குழந்தைகளைப் பார்த்து மகிழ்கின்றார் உறவில் வந்துள்ளீர்கள்.
வி.ஐ.பியாக வந்துள்ளவர்கள் எழுந்திருங்கள். உட்கார்ந்து
உட்கார்ந்து களைத்திருப்பீர்கள். சிறிது எழுந்திரி யுங்கள்.
நல்லது.
நிகழ்காலத்தில் பாப்தாதா இரு விசயங்களில் மீண்டும் மீண்டும்
கவனத்தை ஈர்க்கின்றார். ஒன்று ஸ்டாப்- முற்றுப் புள்ளி
வையுங்கள். மற்றொன்று ஸ்டாக் சேமித்து வையுங்கள். இரண்டும் மிக
அவசியமானது. முக்கியமாக மூன்று பொக்கிஷங்களை சேமிப்பு
செய்யுங்கள். ஒன்று தனது முயற்சிக்கான கைமேல் பலன் சேமியுங்கள்.
இரண்டாவது திருப்தியாக இருந்து பிறரையும் திருப்தி செய்வது.
தான் மட்டும் திருப்தியாக இருப்பது அல்ல பிறரையும் திருப்தி
செய்தல், அதன் பலனாக ஆசிகளை சேமியுங்கள். அவ்வப்போது ஆசிகளை
சேமிப்பு செய்தபோதும் போகப் போக சின்ன சின்ன விசயங்களில்
குழப்பமடைந்து தைரியமிழந்து சேமித்த பொக்கிஷங் களையும் இழந்து
விடுகின்றனர். ஆகவே ஆசிகளின் கணக்கும் சேமிப்பாக வேண்டும்.
அதற்கான விதி திருப்தியாக இருப்பது, திருப்தி செய்வது,
மூன்றாவது சேவை மூலமாக பலனை சேமிப்பது. சேவையிலும் முக்கியமாக
நிமித்தமான (கருவி) உணர்வு, பணிவு அகங்காரமற்ற வார்த்தை
எல்லையில்லா சேவை எனதல்ல பாபா செய்விப்பவர் பாபா கருவியான என்
மூலம் செய்ய வைக்கின்றார் இதுவே எல்லையில்லாத சேவை.
இம்மூன்றையும் சோதனை செய்க. மூன்றும் சேமிப்பில் உள்ளதா? எனது
எனும் அகந்தை உள்ளதா? ஆசை யென்றாலே என்னவென்று தெரியாத நிலை
உள்ளதா இந்த ஆண்டு என்ன செய்யலாம் என யோசிக்கின்றீர்களா? சீசன்
முடிவடைந்தது. இப்போது 6 மாதம் என்ன செய்யலாம்? ஒன்று கணக்கை
சேமியுங்கள். நன்கு சோதனை செய்க, எங்கேனும் ஒரு மூளையிலாவது
எல்லைக்குட்பட்ட ஆசை உள்ளதா? நான் எனது என்பது இல்லை தானே?
பெறுபவர் அல்லவே? ஞானம் தருபவர் ஆகுங்கள், பெறுபவர் அல்ல. பெயர்,
புகழ் கௌரவம் எதையும் பெறுபவர் அல்ல வள்ளல் ஞானம் வழங்கும்
வள்ளல் ஆகுக.
இப்போது மிக மிக துக்கம் அதிகரிக்கின்றது. இன்னும் அதிகமாகும்.
எனவே மாஸ்டர் சூரியனாகி அனுபவமெனும் ஒளிக் கதிர்களை பரப்புங்கள்.
ஒரே நேரத்தில் சூரியன் எத்தனை நற்பலனைத் தருகின்றது. ஒன்றல்ல
ஒளி மட்டும் தருவதல்ல. சக்தியும் தருகின்றது. அனேக பலனைத்
தருகின்றது அவ்வாறே நீங்கள் அனைவரும் 6 மாதத்தில் ஞான சூரியனாகி
சுகம், குஷி, அமைதி, ஒத்துழைப்பு எனும் கதிர்களை பரப்புங்கள்.
அனுபவம் செய்ய வையுங்கள். உங்கள் முகத்தைப் பார்த்த மாத்திரமே
துக்கமான முகம் சிறிதேனும் மலர வேண்டும். இதில் கவனம் தர
வேண்டும். ஞானம் வழங்குபவர் (விதாதா) தபஸ்வி ஆகுங்கள். நீங்கள்
செய்யும் தபஸ்யாவின் ஜீவாலை ஏதேனும் ஒன்றை அனுபவம் செய்விக்கும்
வகையில் அத்தகைய தபஸ்வி ஆகுக! வாணி சொல்வது மட்டும் போதாது,
அனுபவம் செய்ய வையுங்கள், அனுபவம் என்றென்றும் நிலைத்
திருக்கும். வார்த்தைகள் கேட்கும் போது மட்டும் நன்றாக
இருக்கும், எப்போதும் நினைவில் நிற்காது. எனவே அனுபவத்தின்
அத்தாரிட்டியாகி அனுபவம் செய்ய வையுங்கள். தனது தொடர்பில்
வருபவர் அனைவருக்கும் தனது ஒத்துழைப்பால் தைரியம், ஊக்கம்
உற்சாகம் பெறச் செய்து பாப்தாதாவுடன் தொடர்பை இணைத்து விடுங்கள்.
அதிகம் கடின உழைப்பை கொடுக் காதீர்கள். தானும் கஷ்டப்படாதீர்கள்.
பிறரையும் கஷ்டப்பட விடாதீர்கள். நீங்கள் நிமித்தமான கருவிகளே.
கம்பீரமானவர்களும் ஊக்கம் உற்சாகம் பெறும் வகையில் ஊக்கம்
உற்சாகத்திற்கான நல்லதோர் அதிர்வலைகளை அமையுங்கள்.
மகிழ்ச்சியில் மனம் நடனமாடட்டும், என்ன செய்ய வேண்டும்
கேட்டீர்களா? ரிசல்ட்டை பார்க்கலாம். எந்த இடம் எத்தனை
ஆத்மாக்களை உறுதி பெறச் செய்தீர்கள், தானும் உறுதி பெற்றீர்களா,
எத்தனை ஆத்மாக்களை திடப்படுத்தினீர்கள்? தவறேதும் செய்யவில்லையே,
பொய் பேசவில்லையே, விகர்மம் செய்யவில்லையே என சாதாரண கணக்கை
பார்க்க மாட்டோம், எத்தனை ஆத்மாக்களை ஊக்கம் உற்சாகத்தில்
கொண்டு வந்தீர்கள், அனுபவம் செய்ய வைத்தீர்கள், உறுதி பெற சாவி
கொடுத்தீர்கள்? சரி தானே, செய்தே ஆக வேண்டும், பாப்தாதாவும்
செய்வீர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும். இல்லை செய்தே ஆக
வேண்டும். நீங்கள் செய்யாது வேறு யார் செய்வது? பின்னால்
வருபவர்களா? நீங்களே ஒவ்வொரு சங்கல்பமும் தந்தையிடமிருந்து
அதிகாரம் பெற்றவர்கள். அதிகாரி ஆனீர்கள் ஒவ்வொரு சங்கல்பமும்
ஆவீர்கள். அத்தகைய உறுதி வாய்ந்த குழந்தைகளின் குழுவை பாப்தாதா
காண விரும்புகின்றார். சரி தானே கை உயர்த்துங்கள். ஆகியே தீர
வேண்டும், மனதின் கையை உயர்த்துங்கள் உறுதியான நம்பிக்கை யெனும்
கையை உயர்த்துங்கள் இதில் எல்லோரும் பாசாகி விட்டீர்கள்.
பாஸ்தானே? நல்லது.
நாலாபுறமும் உள்ள தந்தையின் உள்ளத்தில் உறைந்த குழந்தைகளுக்கு,
தொலைவில் அமர்ந்தபோதும் பரமாத்மாவின் அன்பினை அனுபவம் செய்யும்
குழந்தைகளுக்கு சதா ஹோலி யெனும் தூய்மையின் அஸ்திவாரத்தினை
உறுதி செய்யும் குழந்தைகளுக்கு கனவிலும் தூய்மை யின்மையின்
அம்சத்தையும் விரட்டிவிடும் மகாவீர், மகாவீரனி குழந்தைகளுக்கு
எப்போதும் ஒவ்வொரு பொழுதும் சேமிப்பு கணக்கால் முழுமையாக
நிறைந்துள்ள குழந்தைகளுக்கு என்றென்றும் திருப்தியின் மணியாகி
தானும் திருப்தியுடன் இருந்து பிறரையும் திருப்தி செய்யும்
தந்தைக்கு நிகரான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
ஆசிகள் மற்றும் நமஸ்காரம் !
தாதி மார்களுடன்:
தாதி மார்கள் குருபாயாக விளங்குபவர்கள் எனவே அருகே அமருங்கள்
சகோதரர் அருகே அமருவார். நல்லது. பாப்தாதா தினமும் அன்பெனும்
அரவணைப்பை தருகிறார். நிமித்தமானவரல்லவா. இந்த அரவணைப்பே
நடத்திக் கொண்டிருக்கின்றது. நல்லது, உதாரணமாக திகழும்
உங்களையெல்லாம் பார்க்கும் போது அனைவர் மனதிலும் தைரியம்
வருகின்றது,. நிமித்தமான கருவிகளாக திகழும் தாதிமார்களுக்கு
நிகராக சேவையில் நிமித்த பாவனையில் முன்னேற வேண்டும். நல்லது
உங்களுக்கெல்லாம் செய்பவர் செய்ய வைக்கின்றார், நடத்திக்
கொண்டிருக்கின்றார் என்பதில் உறுதியான நம்பிக்கை உள்ளதல்லவா!
இந்த நமித்த பாவனை சேவை செய்கின்றது. நான் எனும் உணர்வா?
ஏதேனும் ஒருவகையில் நான் எனும் உணர்வு வருகிறதா? நல்லது. முழு
உலகிற்கும் முன்பாக உதாரணமாக திகழ்பவர்கள் நிமித்தமானவர்களே
ஆகவே பாப்தாதாவும் எப்போதும் பிரத்யேகமான அன்பையும் ஆசியையும்
வழங்கிக் கொண்டி ருக்கின்றார். நல்லது நிறைய பேர்
வந்துள்ளீர்கள் நல்லது. இறுதி முறை விரைவாக நடந்தேறியது. நல்லது.
இரட்டை அயல் நாட்டவர் முக்கிய ஆசிரியர் சகோதரிகளுடன்:
அனைவரும் இணைந்து அனைவருக்கும் பராமரிப்பு தருவதில் நிமித்தமாக
உள்ளீர்கள். இந்த நடிப்பை நன்கு செய் கின்றீர்கள். தானும்
புத்துணர்வு பெற்று பிறரையும் புத்துணர்வு பெறச்
செய்கின்றீர்கள். நன்கு நிகழ்ச்சிகளை செய்கின்றீர்கள்.
பாப்தாதாவிற்கு பிடித்துள்ளது. தான் முதலில் புத்துணர்வு பெரும்
பொழுதே பிறரையும் புத்துணர்வு பெறச் செய்வீர்கள். மிக நல்லது.
அனைவரும் நன்கு புத்துணர்ச்சி பெற்றுள்ளீர்கள். பாப்தாதாவிற்கு
மகிழ்ச்சியே. மிக்க நல்லது. ஓம் சாந்தி.
ஆசீர்வாதம்:
ஞானம் நிறைந்த மனோ நிலை மூலமாக இன்னல்களை கடந்து செல்லும்
அங்கதனைப் போன்று ஆடாது அசையாதவராகுக!
இராவணன் இராஜ்யத்தின் எந்த ஒரு இன்னலும் மனிதரும்
எண்ணத்தளவிலும் இம்மியும் அசைத்து விட முடியாது. அத்தகைய ஆடாத
அசையாதவரெனும் வரதானம் பெற்றவராகுக. ஏனெனில் இன்னல்கள் எது
வாயினும் அது நம்மை வீழ்த்த வரவில்லை மாறாக உறுதிபெறச் செய்யவே
வருகின்றது, ஞானம் நிறைந்தவர் கள் ஒருபோதும் காகிதத்தைக் கண்டு
குழப்ப மடைவதில்லை. மாயை எந்த ரூபத்திலும் வரக் கூடும். ஆனால்
நீங்கள் யோகக்னியை ஏற்றி வையுங்கள், தடம் தெரியாமல் தானே
அழிந்து போகும்அசையாது மனோநிலையில் நிலைத் திருப்பீர்கள்.
சுலோகன்:
சுத்த சங்கல்பங்களின் பொக்கிஷம் சேமிப்பாகியிருந்தால் வீண்
சங்கல்பங்களால் நேரம் விரயமாகாது.
அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும்
ஆளுமையையும் கையாளுங்கள்.
தூய்மையின் ஆதாரத்திலேயே பிரம்ம பாபா ஆதிதேவன் முதல்
இளவரசனாகிறார். அவ்வாறே நீங்களும் தந்தையை பின்பற்றி முதல்
எண்ணுக்கான பட்டியலில் வாருங்கள் ஏனெனில் பிராமண பிறவியில்
சம்ஸ்காரமே தூய்மை தான். உங்களது உன்னத உயர்வே தூய்மை தான்.