18-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! அவகுணங்களை நீக்குவதற்கான முழு முயற்சி செய்யுங்கள். எந்த குணத்தின் குறைபாடு உள்ளதோ அதன் குறிப்பை எழுதி வையுங்கள். குணங்களை தானம் செய்வீர்களாயின் குணவான் ஆகிவிடுவீர்கள்.

கேள்வி:
குணவான் ஆவதற்காக முதன் முத-ல் என்ன ஸ்ரீமத் கிடைத்துள்ளது?

பதில்:
இனிமையான குழந்தைகளே! - குணவான் ஆகவேண்டுமானால் -- 1. எந்த ஒருவருடைய தேகத்தையும் பார்க்காதீர்கள். தன்னை ஆத்மா என உணருங்கள். ஒரு பாபா சொல்வதையே கேளுங்கள். ஒரு பாபாவைப் பாருங்கள். மனிதர்களின் வழிமுறையைப் பார்க்காதீர்கள். 2. தேக அபிமானத்தின் வசமாகி, பாபாவின் அல்லது பிராமண குலத்தின் பெயரைக் கெடுக்கிற மாதிரி எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம். தலைகீழான நடத்தையுள்ளவர்கள் குணவான் ஆக முடியாது. அவர்கள் குலத்திற்குக் களங்கம் செய்தவர்கள் எனப்படுவார்கள்.

ஓம் சாந்தி.
(பாப்தாதாவின் கையில் மல்லிகை மலர்கள் இருந்தன). பாபா சாட்சாத்காரம் செய்விக்கிறார், இதுபோன்ற மணமுள்ள மலராக ஆகவேண்டும். குழந்தைகளுக்குத் தெரியும், நிச்சயமாக நாம் மலராக இருந்தோம். ரோஜா மலராக, மல்லிகை மலராகவும் ஆகியிருந்தோம். அதாவது வைரமாகவும் ஆகியிருந்தோம். இப்போது மீண்டும் ஆகிக்கொண்டிருக்கிறோம். இப்போது உண்மையானவர்கள். முன்பு பொய்யாக இருந்தோம். பொய்யிலும் பொய்யாக - உண்மை என்பது சிறிதளவும் இல்லை. இப்போது நீங்கள் உண்மையானவர்களாக ஆகிறீர்கள், பிறகு உண்மை யானவர்களிடம் அனைத்து நற்குணங்களும் இருக்க வேண்டும். ஒருவரிடம் எவ்வளவு குணங்கள் உள்ளனவோ, அவ்வளவு மற்றவர்களுக்கும் தானம் கொடுத்துத் தன்னைப் போல் ஆக்க முடியும். அதனால் பாபா குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் -- குழந்தைகளே, உங்களுடைய குணங்களின் அன்றாடக் குறிப்பினை எழுதி வையுங்கள். நம்மிடம் எந்த ஒரு அவகுணமும் இல்லாதிருக்கிறதா? தெய்வீக குணங்களில் என்ன குறைவாக உள்ளது? இரவில் தினந்தோறும் தனது நாட்குறிப்பை எழுதுங்கள். உலகத்தின் மனிதர்களுடைய விஷயமே தனிப்பட்டது. நீங்கள் இப்போது மனிதர்களோ இல்லை அல்லவா? நீங்கள் பிராமணர்கள். மனிதர் களோ அனைவரும் மனிதர்கள் தாம். ஆனால் ஒவ்வொருவரின் குணங்களில், நடத்தையில் வேறுபாடு உள்ளது. மாயாவின் இராஜ்யத்திலும் கூட ஒரு சில மனிதர்கள் நல்ல குணவான்களாக உள்ளனர். ஆனால் தந்தையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மிகவும் தர்ம சிந்தனை உள்ளவர் களாக, மென்மையான மனம் கொண்டவர்களாக உள்ளனர். உலகத்திலோ மனிதர்களின் குணங்கள் விதவிதமாக உள்ளன. எப்போது தேவதை ஆகிறார்களோ அப்போது தெய்வீக குணங்களோ அனைவரிடமும் உள்ளன. மற்றப்படி படிப்பின் காரணத்தால் பதவி குறைந்து விடுகின்றது. ஒன்று, படிக்க வேண்டும். அடுத்து அவகுணங்களை நீக்க வேண்டும். இதையோ குழந்தைகள் அறிவார்கள், நாம் முழு உலகத்திலிருந்தும் தனிப்பட்டவர்களாக உள்ளோம். இங்கே ஒரே ஒரு பிராமண குலம் மட்டுமே அமர்ந்துள்ளது. சூத்திர குலத்தில் உள்ளது மனிதர்களின் வழிமுறை. முதல்-முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இன்னார் வாக்குவாதம் செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பாபா சொல்லிப் புரிய வைத்திருந்தார், எழுதி வையுங்கள் -- நாங்கள் பிராமணர்கள் அல்லது பிரம்மா குமார், குமாரிகள் என்றால் ஈஸ்வரிய வழிப்படி நடப்பவர்கள். அப்போது இவர்களை விட உயர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை என்று புரிந்து கொள்வார்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் என்றால் அவருடைய குழந்தைகளாகிய நாமும் கூட அவருடைய வழிமுறைப்படி நடப்பவர்கள் தாம். மனிதர்களின் வழிமுறைப் படி நாம் நடப்பதில்லை. ஈஸ்வரிய வழிமுறைப்படி நடந்து நாம் தேவதை ஆகின்றோம். மனிதர்களின் வழிமுறையை முற்றிலும் விட்டு விட்டோம். பிறகு உங்களோடு யாரும் வாக்குவாதம் செய்ய முடியாது. யாராவது கேட்கலாம், இதை எங்கிருந்து கேட்டீர்கள்? யார் கற்றுத் தந்தார்கள்? நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் ஈஸ்வரிய வழிமுறைப்படி நடப்பவர்கள். இது பிரேரணையின் விஷயமல்ல. எல்லையற்ற தந்தையாகிய ஈஸ்வரனிடமிருந்து நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். சொல்லுங்கள், பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களின் வழிமுறைப் படியோ நாம் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளோம். இப்போது நமக்குக் கிடைத்துள்ளது ஈஸ்வரிய வழிமுறை. குழந்தைகளாகிய நீங்கள் பாபாவுக்குத் தான் மகிமை செய்ய வேண்டும். முதன் முதலில் புத்தியில் பதிய வைக்க வேண்டும் -- நாம் ஈஸ்வரிய வழிமுறைப்படி நடப்பவர்கள். மனிதர்களின் வழிமுறைப்படி நாம் நடப்பதில்லை, கேட்பதில்லை. ஈஸ்வரன் சொல்லியிருக்கிறார் - தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்... மனிதர்களின் வழிமுறை. ஆத்மாவைப் பாருங்கள், சரீரத்தைப் பார்க்காதீர்கள். இதுவோ தூய்மையற்ற சரீரம், இதை எதற்காகப் பார்க்க வேண்டும்? இந்தக் கண்களால் இதைப் பார்க்காதீர்கள். இந்த சரீரமோ பதீதத்திலும் பதீத்தமாகவே உள்ளது. இங்குள்ள இந்த சரீரமோ தூய்மையாகப் போவதில்லை. இன்னும் கூடப் பழையதாக ஆகப் போகின்றது. நாளுக்கு நாள் தூய்மையாவது ஆத்மா தான். ஆத்மா தான் அழியாதது. அதனால் பாபா சொல்கிறார், தீயதைப் பார்க்காதீர்கள். சரீரத்தையும் கூடப் பார்க்கக் கூடாது. தேகத்துடன் கூட தேகத்தின் சம்பந்தங்கள் என்னென்ன உள்ளனவோ, அவை அனைத்தையும் மறக்க வேண்டும். ஆத்மாவைப் பாருங்கள், ஒரு பரமாத்மா சொல்வதைக் கேளுங்கள். இதில் தான் முயற்சி உள்ளது. இது பெரிய பாடம் என உணர்கிறீர்கள். யார் திறமைசாலிகளாக உள்ளனரோ அவர்களுக்குப் பதவியும் அவ்வளவு உயர்ந்ததாகக் கிடைக்கும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைக்கும். ஆனால் முழுமையாகப் புருஷார்த்தம் செய்யவில்லை என்றால் பிறகு தண்டனைகளும் அதிகமாக அடைய நேரிடும்.

குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் அறிமுகம் கொடுப்பதற்காகக் குருடர்களின் ஊன்றுகோல் ஆகவேண்டும். ஆத்மா பார்க்கப்படுவதில்லை, அறியப்படுகின்றது. ஆத்மா எவ்வளவு சிறியது! இந்த ஆகாச தத்துவத்தில் பாருங்கள், மனிதர்கள் எவ்வளவு இடத்தை எடுக்கிறார்கள்! மனிதர்களோ வருவதும் போவதுமாக இருக்கிறார்கள் இல்லையா? ஆத்மா எங்காவது வருவதும் போவதுமாக இருக்கிறதா என்ன? ஆத்மாவுக்கு எவ்வளவு சிறிய இடம் இருக்கும்! இது சிந்தனைக்குரிய விஷயமாகும். ஆத்மாக்களின் கூட்டம் இருக்கும். சரீரத்துடன் ஒப்பிடும் போது ஆத்மா எவ்வளவு சிறியது! அது எவ்வளவு சிறிய இடத்தை எடுத்துக் கொள்ளும்! உங்களுக்கோ வசிப்பதற்கு அதிக இடம் வேண்டும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் விசாலபுத்தி உள்ளவர்களாக ஆகியிருக் கிறீர்கள். பாபா புதிய உலகத்திற்காகப் புதிய விஷயங்களைச் சொல்லிப் புரிய வைக்கிறார். மனிதர்களோ அனைவரிடமும் கருணை வேண்டிக் கொண்டே இருக்கிறார்கள். தங்கள் மீது இரக்கம் கொள்வதற்கு தங்களுக்குள் சக்தி இல்லை. உங்களுக்கு சக்தி கிடைக்கின்றது. நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்திருக்கிறீர்கள். வேறு யாரையும் கருணை உள்ளம் கொண்டவர் என்று சொல்லப்படுவதில்லை. மனிதர்கள் ஒருபோதும் தேவதை எனச் சொல்லப் படுவதில்லை. கருணை உள்ளம் கொண்டவர் ஒரு பாபா மட்டுமே. அவர் தான் மனிதர்களை தேவதைகளாக மாற்றுகிறார். அதனால் சொல்கின்றனர், பரமபிதா பரமாத்மாவின் மகிமை அளவற்றது, அதற்கு எல்லை கிடையாது. இப்போது நீங்கள் அறிவீர்கள், அவருடைய கருணைக்கு அளவு கிடையாது. பாபா புதிய உலகத்தை உருவாக்குகின்றார், அதில் அனைத்துமே புதிதாக இருக்கும். மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் அனைத்தும் சதோபிரதான (மிகவும் தூய்மையான) நிலையில் இருக்கும். பாபா சொல்லிப் புரிய வைத்துள்ளார், நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகிறீர்கள் என்றால் உங்களுடைய ஃபர்னிச்சரும் கூட அவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்ததாக இருக்கும் என்பது பாடப்பட்டுள்ளது. பாபாவையும் கூட சொல்கிறார்கள், உயர்ந்தவரிலும் உயர்ந்தவர், அவரிடமிருந்து உலகத்தின் இராஜ பதவி கிடைக்கின்றது. பாபா தெளிவாகச் சொல்கிறார், நான் உங்களுக்காக உள்ளங்கையில் சொர்க்கத்தைக் கொண்டு வருகின்றேன். அந்த மனிதர்கள் உள்ளங்கையிலிருந்து குங்குமப்பூ முதலியவற்றை வெளிப்படுத்துகின்றனர். இங்கோ படிப்பின் விஷயமாகும். இது உண்மையான படிப்பு. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். பாடசாலைக்கு வந்துள்ளோம். நீங்கள் பாடசாலைகள் அதிகமாகத் திறப்பீர்களானால் உங்கள் செயல்பாட்டைப் பாருங்கள். யாராவது தலைகீழான நடத்தையில் சென்றால் பிறகு பெயரைக் கெடுக்கிறார்கள். தேக அபிமானம் உள்ளவர்களின் செயல்பாடே தனிப்பட்டதாக இருக்கும். இப்படிப்பட்ட செயல்பாடு உள்ளது என்பதைப் பார்த்தார்களானால் பிறகு அனைவர் மீதும் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இவர்களுடைய செயல் பாட்டில் வேறுபாடு இல்லை எனப் புரிந்து கொள்கிறார்கள் என்றால் பாபாவின் பெயரைக் கெடுத்ததாக ஆகின்றது இல்லையா? நேரம் பிடிக்கின்றது. எல்லாக் குற்றமும் அவர்கள் மேல் வந்து விடுகின்றது. நடத்தை மிக நன்றாக இருக்க வேண்டும். உங்கள் கேரக்டர் மாறுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கின்றது! நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஒரு சிலருடைய கேரக்டர்கள் மிகவும் நல்ல முதல் தரமானதாக உள்ளன. அது வெளிப்படையாகத் தெரியவும் செய்யும். பாபா ஒவ்வொரு குழந்தையையும் அமர்ந்து பார்க்கின்றார் -- இவர்களிடம் என்ன குறைபாடு உள்ளது, அது வெளியேற்றப் படவேண்டியுள்ளது? ஒவ்வொருவரையும் சோதித்துப் பார்க்கிறார். குறைகளோ அனைவரிடமும் உள்ளன. ஆக, பாபா அனைவரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். ரிசல்ட்டை (முடிவை)ப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பாபாவுக்கோ குழந்தைகள் மீது அன்பு உள்ளது இல்லையா? பாபா அறிந்திருக்கிறார், இவர்களிடம் இந்தக் குறைபாடு உள்ளது, இந்தக் காரணத்தால் இவ்வளவு உயர்ந்த பதவியை இவர்களால் அடைய முடியாது. குறைபாடுகள் நீங்கவில்லை என்றால் மிகவும் கஷ்டம். பார்த்தாலே தெரிந்து விடு கின்றது. (இவர்கள் சீர்திருந்த) இன்னும் நேரம் பிடிக்கும் என்பதை அறிந்திருக்கிறார். ஒவ்வொரு வரையும் சோதித்தறியும் போது பாபாவின் பார்வை ஒவ்வொருவரின் குணங்களின் மீது படும். உங்களுக்குள் எந்த ஓரு அவகுணமும் இல்லாதிருக்கிறதா என்று கேட்பார். பாபாவுக்கு முன்பு உண்மையைச் சொல்லி விடுகிறார்கள். ஒரு சிலருக்கு தேக அபிமானம் உள்ளது என்றால் உண்மையைச் சொல்வதில்லை. பாபாவோ சொல்லிக் கொண்டே இருக்கிறார் -- தாமாகவே செய்பவர்கள், தேவதைகள். சொல்லிச் செய்பவர்கள் மனிதர்கள். யார் சொல்லியும் செய்வ தில்லையோ... பாபா சொல்லிக் கொண்டே இருக்கிறார், இந்த ஜென்மத்தின் குறைகள் என்னென்ன உள்ளனவோ, அவற்றை பாபாவுக்கு முன்னால் தாங்களாகவே சொல்லி விடுங்கள். பாபாவோ அனைவருக்கும் சொல்கிறார், குறைகளை சர்ஜனிடம் சொல்லி விட வேண்டும். சரீரத்தின் நோயை அல்ல, உள்ளுக்குள் இருக்கும் (ஆத்மாவின்) நோயைச் சொல்ல வேண்டும். உங்களிடம் என்னென்ன அசுர சிந்தனைகள் உள்ளன? ஆக, இவற்றைப் பற்றி பாபா சொல்லிப் புரிய வைப்பார். இந்த நிலைமையில், அவகுணங்கள் நீங்காத வரை நீங்கள் இவ்வளவு உயர்ந்த பதவியை அடைய முடியாது, அவகுணங்கள் மிகவும் நிந்தனை செய்விக்கின்றன. பகவான் இவர்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறாரா? என்பதில் மனிதர்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது -- பகவானோ பெயர்- ரூபத்திற்கு அப்பாற்பட்டவர், சர்வவியாபி, அவர் எப்படி இவர்களுக்குக் கற்றுத் தருவார்? இவர்களின் நடத்தை எப்படி உள்ளது? இதை பாபா அறிவார் -- உங்களுடைய குணங்கள் எவ்வளவு முதல் தரமானதாக இருக்க வேண்டும்! அவகுணங்களை மறைத்து விடுவீர்களானால் இவ்வளவு புத்தியில் பதியாது. அதனால் எவ்வளவு முடியுமோ தனக்குள் இருக்கும் அவகுணங்களை நீக்கிக் கொண்டே செல்லுங்கள். குறித்து வையுங்கள், நமக்குள் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்றால் மனம் அரித்துக் கொண்டே இருக்கும். வியாபாரிகள் தங்கள் கணக்கை தினந்தோறும் பார்க்கின்றனர் -- இன்று எவ்வளவு இலாபம் வந்தது? தினசரி கணக்கைப் பார்க்கின்றனர். பாபாவும் சொல்கிறார், நாள் தோறும் உங்கள் நடத்தையைப் பாருங்கள். இல்லையென்றால் தனக்குத் தான் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பாபாவின் கௌரவத்தை இழக்கச் செய்து விடுவீர்கள்.

குருவின் பெயரைக் கெடுப்பவர்கள் நல்ல பதவி அடைய முடியாது. தேக அபிமானியாக இருப்பவர்கள் நல்ல பதவி அடைய முடியாது. ஆத்ம அபிமானிகள் நல்ல பதவி அடைவார்கள். ஆத்ம அபிமானி ஆவதற்காகவே அனைவரும் புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறோம். நாளுக்கு நாள் சீர்திருந்திக் கொண்டே செல்கின்றோம். தேக அபிமானத்தினால் என்ன காரியங்கள் நடைபெறுகின்றனவோ அவற்றை நீக்கிக் கொண்டே செல்ல வேண்டும். தேக அபிமானத்தினால் பாவம் நிச்சயமாக நடைபெறுகின்றது. அதனால் ஆத்ம அபிமானி ஆகிக் கொண்டே இருங்கள். இதையோ நீங்கள் புரிந்து கொள்ள முடியும், பிறந்த உடனேயே யாரும் இராஜா ஆவதில்லை. உங்களுக்கு எத்தனை வருடங்கள் ஆகின்றன! ஆத்ம அபிமானி ஆவதில் நேரம் பிடிக்கின்றது. இதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். பாபாவிடம் குழந்தைகள் வருகின்றனர். சிலர் 6 மாதங்களுக்குப் பிறகு வருகின்றனர். சிலர் 8 மாதங்களுக்குப் பிறகும் வருகின்றனர் என்றால் பாபா பார்க்கின்றார், இவ்வளவு காலத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? நாளுக்கு நாள் கொஞ்சம் செம்மையாகிக் கொண்டே இருக்கிறார் களா, அல்லது ஏதேனும் குறை மறைந்திருக்கிறதா? சிலர் போகப் போகப் படிப்பை விட்டுவிடு கின்றனர். பாபா சொல்கிறார், இது என்ன, பகவான் பகவதி ஆக்குவதற்காக பகவான் உங்களுக்குக் கற்றுத் தருகிறார், இத்தகைய படிப்பையா நீங்கள் விட்டு விடுகிறீர்கள்? உலகத்தின் இறைவனாகிய தந்தை படிப்பு சொல்லித் தருகிறார். இதில் தவறி விடுகிறீர்கள்! மாயா எவ்வளவு சக்தி வாய்ந்ததாக உள்ளது! முதல் தரமான படிப்பிலிருந்து உங்கள் முகம் திரும்பிக் கொள்கின்றது. அநேகம் பேர் சென்று கொண்டே இருக்கிறார்கள், பிறகு படிப்பை எட்டி உதைத்து விடுகின்றனர். இதையோ நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இப்போது நமது முகம் சொர்க்கத்தின் பக்கம் உள்ளது, கால் நரகத்தின் பக்கம் உள்ளது. நீங்கள் சங்கமயுக பிராமணர்கள். இது பழைய இராவணனின் உலகம். நாம் சாந்திதாம் வழியாக சுகதாம் பக்கம் செல்வோம். குழந்தைகள் இதையே நினைவில் வைக்க வேண்டும். நேரம் மிகவும் குறைவாக உள்ளது. நாளையே கூட சரீரம் விடலாம். பாபா நினைவு இல்லை என்றால் பிறகு கடைசிக் காலத்தில்.... பாபா சொல்லிப் புரிய வைப்பதோ அதிகம்! இவையனைத்தும் இரகசியமான விஷயங்கள். ஞானமும் குப்தமானது. இதையும் அறிவீர்கள், கல்பத்திற்கு முன் யார் எவ்வளவு புருஷார்த்தம் செய்திருக்கிறார்களோ அதையே செய்து கொண்டிருக்கிறார்கள். டிராமாவின் படி பாபாவும் கல்பத்திற்கு முன்போலவே சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இதில் வித்தியாசம் இருக்க முடியாது. பாபாவை நினைவு செய்து கொண்டே இருப்பீர்களானால் விகர்மங்கள் வினாசமாகிக் கொண்டே போகும். தண்டனை அடையக் கூடாது. பாபாவுக்கு முன்னால் வந்து தண்டனை பெற்றீர்களானால் பாபா என்ன சொல்வார்! நீங்கள் சாட்சாத்காரமும் பார்த்திருக்கிறீர்கள், அந்தச் சமயத்தில் மன்னிப்புத்தர முடியாது. இவர் (பிரம்மா) மூலம் பாபா கற்றுத் தருகிறார் என்றால் இவரது சாட்சாத்காரம் தான் ஆகும். இவர் மூலம் அங்கேயும் புரிய வைத்துக் கொண்டிருப்பார், நீங்கள் என்னென்ன செய்திருக் கிறீர்கள். பிறகு அந்த சமயம் அதிகமாக அழுவீர்கள், கூக்குரலிடுவீர்கள், வருத்தப்படவும் செய்வீர்கள். சாட்சாத்காரம் இல்லாமல் தண்டனை கொடுக்க முடியாது. சொல்வார், நான் உங்களுக்கு இவ்வளவு கற்றுத் தந்திருக்கிறேன், பிறகு இப்படி-இப்படிக் காரியங்கள் செய்தீர்கள். இராவணனின் வழிமுறைப்படி நாம் எவ்வளவு பாவங்கள் செய்திருக்கிறோம் என்று நீங்களும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பூஜைக்குரிய நிலையிலிருந்து பூஜாரியாக ஆகி விட்டிருக்கிறீர்கள். பாபாவை சர்வவியாபி எனச் சொல்லியே வந்திருக்கிறீர்கள். இதுவோ முதல் நம்பர் அவமதிப் பாகும். இதனுடைய கணக்கு-வழக்கும் கூட அதிகம் உள்ளது. நீங்கள் தனக்கே எப்படி அடி கொடுத்திருக்கிறீர்கள் என்று பாபா புகார் செய்கிறார். பாரதவாசிகளே எவ்வளவு கீழே விழுந்திருக்கிறார்கள்! பாபா வந்து சொல்லிப் புரிய வைக்கிறார். இப்போது உங்களுக்கு எவ்வளவு அறிவு கிடைத்துள்ளது! அதுவும் டிராமாவின் படி நம்பர் வார் புரிந்து கொள்கின்றனர். முன்பும் கூட இதுபோலவே இச்சமயம் வரையிலான வகுப்பின் இந்த முடிவு இருந்தது. பாபா சொல்வாரென்றால் சரி தான் இல்லையா? ஆகவே குழந்தைகள் தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். மாயா அப்படிப்பட்டது, ஆத்ம அபிமானியாக இருக்க விடாது. இது தான் பெரிய பாடமாகும். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்தால் பாவங்கள் பஸ்மமாகி விடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தேக அபிமானத்தில் வருவதால் நிச்சயமாகப் பாவங்கள் ஏற்படுகின்றன. தேக அபிமானிக்குப் பதவி கிடைக்காது. அதனால் ஆத்ம அபிமானி ஆவதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு கர்மமும் பாபாவின் பெயரைக் கெடுப்பதாக இருக்கக் கூடாது.

2. உள்ளுக்குள் இருக்கும் நோய்களை பாபாவிடம் உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும். அவகுணங்களை மறைக்கக் கூடாது. தன்னை சோதித்தறிய வேண்டும் -- எனக்குள் என்னென்ன அவகுணங்கள் உள்ளன? படிப்பினால் தன்னை குணவானாக ஆக்க வேண்டும்.

வரதானம்:
எல்லைக்குட்பட்ட ராயல் இச்சைகளிலிருந்து விடுபட்டு சேவை செய்யக் கூடிய சுயநலமில்லாத சேவாதாரி ஆவீர்களாக.

எப்படி பிரம்மா தந்தை கர்மத்தின் பந்தனத்திலிருந்து விடுபட்டு விலகி இருப்பதற்கான நிரூபணம் அளித்தார். சேவை மீது சிநேகத்தை தவிர வேறு எந்த பந்தனமும் இருக்கவில்லை. சேவையில் ஏற்படக் கூடிய எல்லைக்குட்பட்ட ராயல் இச்சைகள் கூட கணக்கு வழக்குகளின் பந்தனத்தில் பிணைத்து விடுகிறது. உண்மையான சேவாதாரி இந்த கணக்கு வழக்குகளிலிருந்து கூட விடுபட்டு இருப்பார். எப்படி தேகத்தினுடைய பந்தனம், தேகத்தின் சம்பந்தத்தினுடைய பந்தனம் இருக்கிறதோ, அதே போல சேவையில் சுயநலம் -இதுவும் பந்தனம் ஆகும். இந்த பந்தனத் திலிருந்து அதாவது ராயல் கணக்கு வழக்குகளிலிருந்து கூட விடுபட்டவராகி சுயநலமில்லாத சேவாதாரி ஆகுங்கள்.

சுலோகன்:
வாக்குறுதிகளை பைலில் வைக்காதீர்கள், பைனல் - சம்பூர்ணமாகி காண்பியுங்கள்.