18-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! இது ருத்ர ஞான யக்ஞமாகும் (வேள்வி), இதை சுயம் பகவான் படைத்திருக்கிறார், இதில் நீங்கள் உங்களுடைய அனைத்தையும் சுவாஹா செய்யுங்கள் ஏனென்றால் இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும்

கேள்வி:
சங்கமயுகத்தில் எந்தவொரு அதிசயமான விளையாட்டு நடக்கிறது?

பதில்:
பகவானால் படைக்கப்பட்ட யக்ஞத்தில் தான் அசுரர்களின் தடை ஏற்படுகிறது. இது கூட சங்கம யுகத்தில் தான் இந்த அதிசயமான விளையாட்டு நடக்கிறது. இது போன்ற யக்ஞம் முழு கல்பத்திலும் வேறு எப்போதும் படைக்கப்படுவதில்லை. இது சுயராஜ்யம் அடைவதற்கான இராஜஸ்வ அஸ்வமேத யக்ஞமாகும். இதில் தான் தடை ஏற்படுகிறது.

ஓம் சாந்தி.
நீங்கள் எங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்? இதனை பள்ளி அல்லது பல்கலைக் கழகம் என்றும் சொல்லலாம். விஷ்வ வித்தியாலயம், இந்த ஈஸ்வரிய வித்தியாலயத்தின் கிளைகள் இருக்கின்றன. பாபா பெரியதிலும் பெரிய பல்கலைக்கழகத்தை திறந்திருக்கிறார். சாஸ்திரங்களில் ருத்ர ஞான யக்ஞம் என்று எழுதி விட்டார்கள், இந்த சமயத்தில் சிவபாபா இந்த பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்தை திறந்திருக்கின்றார் என்பதை குழந்தை களாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை கற்பிக்கின்றார். பகவான் நமக்குக் கற்பிக் கின்றார் என்பது குழந்தைகளுடைய புத்தியில் நினைவிருக்க வேண்டும். பகவானுடைய யக்ஞம் படைக்கப்பட்டுள்ளது, இது பெயர் பெற்றதாகும். இராஜஸ்வ அஸ்வமேத ருத்ர ஞான யக்ஞமாகும், இராஜஸ்வ என்றால் சுயராஜ்யத் திற்காக என்பதாகும். அஸ்வமேத என்றால், பார்ப்பதற்கு என்ன வெல்லாம் தெரிகிறதோ, அவையனைத்தையும் சுவாஹா செய்து கொண்டிருக்கிறீர்கள், சரீரம் கூட சுவாஹா ஆகி விடுகிறது. ஆத்மா சுவாஹா ஆக முடியாது. அனைவருடைய சரீரங்களும் சுவாஹா ஆகி விடும். மீதி ஆத்மாக்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். இது சங்கமயுகமாகும். நிறைய ஆத்மாக்கள் சென்று விடுவார்கள், மீதி சரீரங்கள் அழிந்து விடும். இவையனைத்தும் நாடகமாகும், நீங்கள் நாடகத்தின் கட்டுப்பாட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். பாபா கூறுகின்றார், நான் இராஜஸ்வ யக்ஞம் படைத்திருக்கின்றேன். இது நாடகத்தின் திட்டப்படி படைக்கப் பட்டிருக்கிறது. நான் யக்ஞத்தை படைத்தேன் என்று சொல்ல முடியாது. நாடகத்தின் திட்டப்படி குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக கல்பத்திற்கு முன் போல ஞான யக்ஞம் படைக்கப்பட்டுள்ளது. நான் (பாபா) படைத்தேன் என்பதற்கும் கூட அர்த்தம் இல்லை. நாடகத்தின் திட்டப்படி படைக்கப்பட்டுள்ளது. கல்பம்-கல்பமும் படைக்கப்படுகிறது. இந்த நாடகம் உருவாக்கப் பட்டுள்ளது அல்லவா! நாடகத்தின் திட்டப்படி ஒரு முறை தான் யக்ஞம் படைக்கப்படுகிறது, இது ஒன்றும் புதிய விசயம் இல்லை. சரியாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட சத்யுகம் இருந்தது, இப்போது மீண்டும் சக்கரம் திரும்ப சுற்றிக் கொண்டிருக்கிறது. மீண்டும் புதிய உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் புதிய உலகத்தில் சுயராஜ்யத்தை அடைவதற்காகப் படித்துக் கொண்டிருகிறீர்கள். கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும். யார் ஆவார்கள் என்றால் யார் நாடகத்தின்படி கல்பத்திற்கு முன் ஆகியிருந்தார்களோ அவர் கள் தான் ஆவார்கள். இப்போதும் ஆவார்கள். சாட்சியாக இருந்து நாடகத்தைப் பார்க்க வேண்டும் மேலும் முயற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது. குழந்தைகள் வழியையும் கூற வேண்டும், முக்கியமான விசயம் தூய்மையினுடையதாகும். பாபாவை அழைப்பதே, வந்து எங்களை தூய்மையாக்கி இந்த மோசமான உலகத் திலிருந்து அழைத்துச் செல்லுங்கள் என்பதற்காகவே ஆகும். பாபா வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தான் வருகின்றார். குழந்தைகளுக்கு நிறைய பாயிண்டுகள் கொடுக்கப் படுகிறது. இருந்தாலும் பாபா கூறுகின்றார், முக்கியமான விசயம் மன்மனாபவ ஆகும். தூய்மை யாவதற்காக பாபாவை நினைவு செய்கிறோம், இதை மறக்கக் கூடாது. எந்தளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்தளவிற்கு நன்மை ஏற்படும், சார்ட் வைக்க வேண்டும். இல்லையென்றால் பிறகு கடைசியில் தோற்றுப் போய் விடுவீர்கள். நாம் தான் சதோபிரதானமானவர்களாக இருந் தோம், வரிசைக்கிரமமான முயற்சியின்படி யார் உயர்ந்தவர்களாக ஆகிறார்களோ, அவர்கள் தான் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள், பிறகு சுகத்தின் நாட்கள் வரும் என்பது நினைவில் இருக்க வேண்டும். நம்முடைய அளவற்ற சுகத்தின் நாட்கள் வரப்போ கிறது. பாபா ஒரு முறை தான் வருகின்றார், துக்க தாமத்தை அழித்து நம்முடைய சுகதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இப்போது நாம் ஈஸ்வரிய குடும்பத்தில் இருக்கின்றோம், பிறகு தெய்வீக குடும்பத்திற்குச் செல்வோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். இந்த சங்கமம் தான் உயர்ந்த புருஷோத்தமர்களாக ஆவதற்கான யுகம் என்று இந்த சமயத்தைப் பற்றி தான் பாடப்பட்டுள்ளது. நமக்கு எல்லையற்ற தந்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு போகப்போக சந்நியாசிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள். அந்த சமயம் கூட வரும் அல்லவா! இப்போது உங்களுடைய தாக்கம் ஏற்பட முடியாது. இப்போது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, இன்னும் கொஞ்ச சமயம் இருக்கிறது. கடைசியில் இந்த சந்நியாசிகள் போன்றவர்கள் கூட வந்து புரிந்து கொள்வார்கள். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற ஞானம் யாரிடத்திலும் இல்லை. தூய்மையில் எவ்வளவு தடைகள் வருகிறது என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். அபலைகள் மீது கொடுமைகள் நடக்கிறது. திரௌபதி அழைத்தார் அல்லவா! உண்மையில் நீங்கள் அனைவரும் திரௌபதிகள், சீதைகள், பார்வதிகளாவீர்கள். நினைவில் இருப்பதின் மூலம் அபலை கள், கூனிகள் (ஊன முற்றோர்) கூட பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து விடுகிறார்கள். தந்தையின் நினைவில் இருக்க முடியும் அல்லவா! பகவான் வந்து யக்ஞத்தை படைத்துள்ளார், இதில் எவ்வளவு தடைகள் வருகின்றன! இப்போதும் கூட தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது, கன்னியர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்விக்கிறார்கள், இல்லையென்றால் அடித்து விரட்டி விடுகிறார்கள் ஆகையினால் ஹே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே வாருங் கள்! என்று அழைக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவருக்கு இரதம் வேண்டும், அதில் வந்து தூய்மை யாக்குவதற்கு. கங்கை நீரின் மூலம் தூய்மையாக மாட்டார்கள். பாபா தான் வந்து தூய்மையாக்கி தூய்மையான உலகத்திற்கு எஜமானர்களாக்குகின்றார்.

இந்த தூய்மையற்ற உலகத்தின் வினாசம் முன்னால் நிற்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஏன் பாபா வினுடையவர்களாக ஆகி சுவாஹா ஆகி விடக்கூடாது. எப்படி சுவாஹா ஆவது என்று கேட்கிறார் கள்? எப்படி அனைத்தையும் யக்ஞத்திற்கு மாற்றுவது? பாபா கூறுகின்றார் - குழந்தைகளாகிய, நீங்கள் இந்த சாகார (பிரம்மா) பாபாவைப் பார்க்கின்றீர்கள் அல்லவா? இவர் சுயம் செய்து காண்பித்து கற்றுக் கொடுத்துக் கொண்டிருக் கின்றார். எப்படிப்பட்ட கர்மத்தை நாம் செய் கிறோமோ, அப்படி நம்மைப் பார்த்து மற்றவர்கள் செய்வார்கள். பாபா இவரின் மூலம் கர்மத்தை செய்ய வைத்தார் அல்லவா? அனைத்தையும் யக்ஞத்தில் சுவாஹா செய்து விட்டார். சுவாஹா ஆவதில் ஏதாவது கஷ்டம் இருக்கிறதா என்ன? இவர் ஒன்றும் செல்வந்தரும் இல்லை, ஏழையும் இல்லை. சாதாரணமானவராக இருந்தார். யக்ஞம் படைக்கப்படுகிறது என்றால் உணவிற்கான பொருட்கள் அனைத்தும் வேண்டும் அல்லவா. இது ஈஸ்வரிய யக்ஞமாகும். ஈஸ்வரன் வந்து இந்த ஞான யக்ஞத்தை ஸ்தாபனை செய்திருக்கின்றார். உங்களுக்குப் படிப்பிக்கின்றார், இந்த யக்ஞத்தின் மகிமை மிகப்பெரியதாகும். ஈஸ்வரிய யக்ஞத்திலிருந்து தான் உங்களுடைய சரீர நிர்வாகம் நடக்கிறது. யார் தங்களை அர்பணமானவர்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் நாம் கருவிகளாக இருக்கிறோம், இவை அனைத்தும் ஈஸ்வரனுடையது, நாம் சிவபாபா வின் யக்ஞத்திலிருந்து உணவை சாப்பிடுகிறோம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய விசய மல்லவா? அனைவரும் இங்கே வந்து தங்கி விடக் கூடாது. இவர் எப்படி அனைத்தையும் சுவாஹா செய்தார் என்ற உதாரணத்தை பார்த்தீர்கள் அல்லவா? எப்படி இவர் கர்மம் செய்கிறாரோ, இவரைப் பார்த்து மற்றவர்களுக்கும் சிந்தனையில் வந்தது என்று பாபா கூறுகின்றார். நிறைய பேர் சுவாஹா ஆனார்கள். யார்-யார் ஆனார்களோ, அவர்கள் தங்களுடைய ஆஸ்தியை எடுக்கிறார்கள். புத்தியின் மூலம் புரிந்து கொள்ளப்படுகிறது - ஆத்மா சென்று விடும், மீதம் சரீரம் அனைத்தும் அழிந்து விடும். இது எல்லையற்ற யக்ஞமாகும், இதில் அனைத்தும் சுவாஹா ஆகும். எப்படி புத்தியின் மூலம் சுவாஹா ஆகி பற்றற்றவர்களாக ஆவது என்று குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சாம்பலாகப்போகிறது என்பதையும் தெரிந்துள்ளீர்கள். எவ்வளவு பெரிய யக்ஞமாக இருக்கிறது! பிறகு சத்யுகத்தில் எந்த யக்ஞமும் படைக்கப் படுவதில்லை. எந்த தொந்தரவும் இல்லை. இந்த பக்தி மார்க்கத்தின் அநேக யக்ஞங்கள் அனைத்தும் முடிந்து விடுகிறது. ஞானக்கடல் ஒரு பகவானே ஆவார். அவர் தான் மனித சிருஷ்டியின் விதையாக இருக்கின்றார், சத்தியமானவராக உயிரோட்டமானவராக (சைதன்யமாக) இருக்கின்றார். சரீரம் ஜடமாகும், ஆத்மா தான் உயிரோட்ட முள்ளதாகும். அவர் ஞானக்கடலாக இருக்கின்றார், குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானக்கடல் அமர்ந்து கற்பிக்கின்றார். அவர்கள் வெறுமனே பாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் பாபா உங்களுக்கு ஞானம் அனைத்தை யும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஞானம் ஒன்றும் அதிகமாக இல்லை. உலக நாடகச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது, என்பதை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே தந்தை அவரே உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். சாதாரண உடலில் பிரவேசிக் கின்றேன் என்று கூறுகின்றார். பாக்கிய ரதம் கூட புகழ்பெற்றதாக இருக்கிறது, பாபா கண்டிப்பாக மனித உடலில் தான் வருவார். அவருக்கு சிவன் என்ற ஒரே பெயர் தான் இருந்து வருகிறது, மற்ற அனைவருடைய பெயரும் மாறுகிறது, இவருடைய பெயர் மாறுவதில்லை. மற்றபடி பக்தியில் அநேக பெயர்களை வைத்து விட்டார்கள். இங்கே சிவபாபா தான் இருக்கின்றார். சிவன் நன்மை செய்பவர் என்று சொல்லப்படுகிறது. பகவான் தான் வந்து புதிய உலகமான சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். எனவே நன்மை செய்பவர் தான் அல்லவா? பாரதத்தில் சொர்க்கம் இருந்தது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது நரகமாக இருக்கிறது பிறகு கண்டிப்பாக சொர்க்கமாக ஆகும். இதனை புருஷோத்தம சங்கமயுகம் என்று சொல்லப்படுகிறது, இப்போது பாபா படகோட்டியாக வந்து உங்களை இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு அழைத்துச் செல்கின்றார். இது பழைய துக்கம் நிறைந்த உலகமாகும் பிறகு நாடகத்தின்படி கண்டிப்பாக புதிய உலகமாக ஆகும், அதற்காகவே நீங்கள் இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். பாபாவினுடைய நினைவு தான் அடிக்கடி மறந்து விடுகிறது, இதில் தான் உழைப்பு இருக்கிறது மற்றபடி உங்களின் மூலம் என்ன பாவ கர்மம் நடந்ததோ, அதனுடைய தண்டனை கர்மவினையின் ரூபத்தில் அனுபவிக்கத் தான் வேண்டும், கர்மவினையை கடைசி வரை அனுபவிக்கத் தான் வேண்டும், அதில் மன்னிப்பு கிடைக்க முடியாது. பாபா மன்னித்துவிடுங்கள் என்பது கிடையாது. மன்னிப்பு எதுவும் கிடையாது. அனைத்தும் நாடகத்தின்படி நடக்கிறது. மன்னிப்பு போன்ற எதுவும் இல்லை. கணக்கு-வழக்குகளை முடிக்கத் தான் வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானமாக ஆக வேண்டும், அதற்கு ஸ்ரீமத்தும் கிடைக்கிறது, ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவினுடைய ஸ்ரீமத்தின் மூலம் நீங்கள் உயர்ந்தவர்களாக தேவதையாக ஆகின்றீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை உங்களை உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், பாபா கல்பம்-கல்பமாக வந்து நமக்கு படிப்பிக்கின்றார் என்ற நினைவு இப்போது உங்களுக்கு வந்துள்ளது. அரைக்கல்பம் அந்த படிப்பினுடைய பலன் கிடைக்கிறது. சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது, என்ற ஞானத்தின் அவசியம் இருப்பதில்லை. கல்பம்- கல்பமாக ஒரே முறை வந்து இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்று கூறுகின்றார்.

உங்களுடைய வேலை படிப்பது மற்றும் தூய்மையாவதாகும். யோகத்தில் இருக்க வேண்டும். பாபா வினுடையவர்களாக ஆகிவிட்டு பிறகு தூய்மையாக ஆகவில்லை என்றால் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். பெயர் கெட்டு விடுகிறது. சத்குருவை நிந்தனை செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது என்று பாடப்பட்டுள்ளது. இவர் யார் என்று மனிதர்களுக்குத் தெரிய வில்லை! சத்தியமான தந்தை தான் சத்குரு, சத்தியமான ஆசிரியராக இருப்பார் அல்லவா! அவர் தான் உங்களுக்குப் படிப்பிக்கின்றார், உண்மையான சத்குருவும் அவரே ஆவார். எப்படி பாபா ஞானக்கடலாக இருக்கின்றாரோ, அதுபோல் நீங்களும் கூட ஞானக் கடல் அல்லவா. பாபா முழு ஞானத்தையும் கொடுத்துவிட்டார், யார் எந்தளவிற்கு கல்பத்திற்கு முன்பு தாரணை செய்தார்களோ, அவ்வளவு தான் செய்வார்கள். முயற்சி செய்ய வேண்டும், கர்மம் செய்யாமல் யாரும் இருக்க முடியாது. எவ்வளவு ஹடயோகம் போன்றவைகளை செய்கிறார்கள், அதுவும் கர்மம் தானே? இது கூட வாழ்க்கைக்கான ஒரு தொழிலாகும். புகழ் கிடைக்கிறது, நிறைய பணம் கிடைக்கிறது, நீரின் மீது, நெருப்பின் மீது நடக்கிறார்கள். பறக்க மட்டும் முடியாது. அதற்கு பெட்ரோல் போன்றவை வேண்டும் அல்லவா. ஆனால் இவற்றின் மூலம் எந்தப் பலனும் இல்லை. தூய்மையாக ஆவதே இல்லை. அறிவியலாளர்களுடைய போட்டி கூட இருக்கிறது. அவர்களுடையது அறிவியலின் போட்டி உங்களுடையது அமைதியினுடையதாகும். அனைவரும் அமைதியைத் தான் வேண்டு கிறார்கள். பாபா கூறுகின்றார், அமைதி உங்களுடைய சுயதர்மம், உங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய வீடான சாந்திதாமத்திற்கு செல்ல வேண்டும். இது துக்கதாமமாகும். நாம் சாந்திதாமத்திலிருந்து பிறகு சுகதாமத்திற்கு வருவோம். இந்த துக்கதாமம் அழிய வேண்டும். இதை நல்ல விதத்தில் தாரணை செய்து பிறகு மற்றவர்களை தாரணை செய்ய வைக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கிறது, அந்தப் படிப்பை படித்து விட்டு பிறகு சரீர நிர்வாகத் திற்காக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிர்ஷ்டமுடைய குழந்தைகள் நாம் எந்த படிப்பை படிக்க வேண்டும் என்று உடனே நிர்ணயம் செய்து விடுகிறார்கள். அந்த படிப்பின் மூலம் என்ன கிடைக்கிறது மற்றும் இந்த படிப்பின் மூலம் என்ன கிடைக்கிறது? இந்தப் படிப்பின் மூலம் 21 பிறவிகளுக்கு பலன் உருவாகிறது. எனவே நாம் எந்தப் படிப்பை படிக்க வேண்டும் என்று சிந்தனை செய்ய வேண்டும். யார் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டுமோ, அவர்கள் எல்லையற்ற படிப்பை படிப்பதில் ஈடுபடுவார்கள். ஆனால் நாடகத்தின் திட்டப்படி யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் பிறகு அந்த படிப்பில் மூழ்கி விடுகிறார்கள். இந்த படிப்பைப் படிப்பதில்லை. நேரம் இல்லை என்று சொல்கிறார்கள். எந்த ஞானம் நன்றாக இருக்கிறது? என்று பாபா கேட்கிறார். அந்தப் படிப்பின் மூலம் என்ன கிடைக்கும் மற்றும் இதன்மூலம் என்ன கிடைக்கும்? உலகாயக் கல்வியின் மூலம் என்ன கிடைக்கும் பாபா ஏதோ கொஞ்சம் சம்பாதிப்போம். இங்கே பகவான் படிப்பிக்கின்றார். நாம் படித்துவிட்டு இராஜ்ய பதவி அடைய வேண்டும் எனும்போது எந்த விசயத்தில் அதிக கவனம் கொடுக்க வேண்டும். பாபா அந்தப் படிப்பை படித்து விட்டு பிறகு வருவோம் என்று சிலர் கூறு கிறார்கள். இவர்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்று பாபா புரிந்து கொள்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை இன்னும் போகப் போகத்தான் பார்க்க வேண்டும். சரீரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று புரிந்து கொள்கிறார்கள், அப்படி என்றால் உண்மையான வருமானத்தை சம்பாதிப்பதில் ஈடுபட வேண்டும் அல்லவா? யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்குமோ அவர்கள் தான் தங்களுடைய அதிர்ஷ்டத்தை உருவாக்குவார்கள். நாங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தி எடுத்து விட்டுத் தான் விடுவோம் என்ற வேகம் முழுமையாக இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை நமக்கு இராஜ்யத்தை கொடுக்கின்றார் என்றால் ஏன் இந்த ஒரு கடைசி பிறவி நாம் தூய்மையாகக் கூடாது? இவ்வளவு குழந்தைகள் தூய்மையாக இருக்கிறார்கள்! பொய்யா சொல்கிறேன்! அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். படித்துக் கொண்டிருக்கிறார்கள், இருந்தாலும் நம்புவதில்லை. எப்போது பழைய உலகத்தை புதியதாக்க வேண்டுமோ அப்போது தான் பாபா வருகின்றார். பழைய உலகத்தின் அழிவு முன்னால் நிற்கிறது. இது மிகத் தெளிவாக இருக்கிறது. நேரமும் அதே நேரம் தான், அநேக தர்மங்களும் இருக்கின்றன, சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருந்தது. இது கூட உங்களுடைய புத்தியில் தான் இருக்கிறது. உங்களில் கூட சிலர் இன்னும் கூட நம்பிக்கையை மெதுவாக ஏற்படுத்திக் கொண்டே இருக் கிறார்கள். அட, நம்பிக்கை கொள்வதற்கு நேரம் ஆகுமா என்ன? சரீரத்தின் மீது கூட ஏதும் நம்பிக்கை இருக்கிறதா என்ன, வாய்ப்பை கொஞ்சமும் இழந்து விடக்கூடாது. யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் கொஞ்சம் கூட புத்தியில் வருவதில்லை. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உண்மையான வருமானத்தை சம்பாதித்து 21 பிறவிகளுக்கு உங்களுடைய அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சரீரத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை ஆகையினால் சிறிதளவும் கூட வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

2) பற்றற்றவர்களாக ஆகி தங்களுடைய அனைத்தையும் ருத்ர யக்ஞத்தில் சுவாஹா செய்ய வேண்டும். தங்களை அர்ப்பணித்து ஒரு பொறுப்பாளராகி பராமரிக்க வேண்டும். சாகார (பிரம்மா) தந்தையைப் பின்பற்ற வேண்டும்.

வரதானம்:
ஈஸ்வரிய நஷா (போதை) மூலம் பழைய உலகை மறக்கக் கூடிய சர்வ பிராப்தி சம்பன்னம் ஆகுக.

எப்படி அந்த நஷா (போதை) அனைத்தையும் மறக்க வைக்கிறதோ, அது போல் இந்த ஈஸ்வரிய நஷா துக்கங்களின் உலகை சகஜமாகவே மறக்கச் செய்யும். அந்த நஷாவிலோ அதிக நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. அதிகம் அருந்துவதால் அழிந்து போகிறார்கள். ஆனால் இந்த நஷா அவிநாசி ஆக்கி விடும். யார் சதா ஈஸ்வரிய நஷாவில் மூழ்கி இருக்கிறார்களோ, அவர்கள் சர்வ பிராப்தி சம்பன்னம் ஆகி விடுகிறார்கள். ஒரு பாபா தவிர வேறு யாரும் இல்லை - இந்த ஸ்மிருதி மூலம் சமர்த்தி (சக்தி) வந்து விடும்.

சுலோகன்:
ஒருவர் மற்றவரைக் காப்பி அடிப்பதற்கு பதிலாக பாபாவைக் காப்பி அடியுங்கள்.

அவ்யக்த இஷாரா -ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

உள்முக நோக்கில் இருப்பவர்கள் தாம் ஒவ்வொரு ஞான ரத்தினத்தின் ஆழத்தில் போக முடியும். ஞானத்தின் ஒவ்வொரு பாயின்ட்டின் ரகசியம் என்ன? மற்றும் எந்தச் சமயம் எந்த விதி மூலம் அதனைக் காரியத்தில் அல்லது சேவையில் ஈடுபடுத்த வேண்டும்? இவ்விதமாக அது பற்றிச் சிந்தனை செய்து, அந்த ரகசியத்தின் ரசனையில் சென்று விடுங்கள். அப்போது நஷாவை அனுபவம் செய்ய முடியும்.