18-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சேவை செய்திகளை கேட்பதிலும், படிப்பதிலும் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் ஆர்வம், உற்சாகம் அதிகமாகின்றது. சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

கேள்வி:
சங்கமயுகத்தில் உங்களுக்கு தந்தை சுகம் கொடுப்பது கிடையாது, ஆனால் சுகத்திற்கான வழி காண்பிக்கின்றார். ஏன்?

பதில்:
ஏனெனில் அனைவரும் தந்தையின் குழந்தைகளாக இருக்கின்றீர்கள். ஒரு குழந்தைக்கு மட்டும் சுகம் கொடுப்பது சரியானது கிடையாது. லௌகீக தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு சரி சமமான பங்கு கிடைக்கின்றது. எல்லையற்ற தந்தை பங்காக பிரித்துக் கொடுப்பது கிடையாது. சுகத்திற்கான வழி காண்பிக்கின்றார். யார் அந்த வழிப்படி நடக்கின்றனரோ, முயற்சி செய் கின்றனரோ அவர்கள் உயர்ந்த பதவி அடைகின்றனர். குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும். அனைத்திற்கும் ஆதாரம் முயற்சியில் தான் இருக்கின்றது.

ஓம் சாந்தி.
பாபா புல்லாங்குழல் (முரளி) வாசிக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிந்திருக் கின்றீர்கள். முரளியானது அனைவரிடத்திலும் செல்கின்றது. யார் முரளி படித்து சேவை செய் கின்றார்களோ அந்த செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன. எந்த குழந்தைகள் பத்திரிக்கையை படிக்கின்றார்களோ அவர்கள் எந்தெந்த சென்டர்களில் என்ன சேவைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன போன்ற சேவைச் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். யார் படிக்கவே இல்லையோ அவர்களுக்கு எந்த செய்தியும் தெரியாது மற்றும் முயற்சியும் செய்யமாட்டார்கள். சேவைச் செய்திகளைக் கேட்டு நானும் இவ்வாறு சேவை செய்வேன் என்று உள்ளத்தில் நினைக் கின்றனர். பத்திரிக்கையின் மூலம் நமது சகோதர சகோதரிகள் எந்த அளவிற்கு சேவை செய்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. எந்த அளவிற்கு சேவை செய்கின்றோமோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். ஆகையால் பத்திரிக்கையும் சேவைக்கான உற்சாகத்தைக் கொடுக்கின்றது. இதில் எந்த தவறும் கிடையாது. படிக்காமல் இருப்பது தான் தவறு. எங்களுக்கு வார்த்தைகள் புரியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அட! இராமாயணம், பாகவதம், கீதை போன்றவைகளைக் கேட்பதற்காக செல்கின்றீர் கள், இதையும் கேட்க வேண்டும். இல்லையெனில் சேவைக்கான ஆர்வம் அதிகரிக்காது. இந்த இடத்தில் இவ்வாறு சேவை நடைபெற்றது. ஆர்வம் இருந்தால் படித்து விட்டு மற்றவர்களுக்கும் கூறுவர். பத்திரிக்கை களை படிக்காதவர்கள் பல சென்டர்களில் இருப்பர். பலர் சேவைக்கான பெயர், அடையாளமும் இல்லாமல் இருக்கின்றனர். ஆக பதவியும் அவ்வாறே அடைவர். இராஜ்யம் உருவாகிக் கொண்டிருப்பதை அறிவீர்கள். யார் எந்த அளவிற்கு முயற்சி செய்கின்றார்களோ அந்த அளவிற்கு அங்கு பதவியை அடைகின்றனர். படிப்பில் கவனம் செலுத்தவில்லையெனில் தோல்வி யடைந்து விடுவீர்கள். அனைத்திற்கும் ஆதாரம் இந்த நேரத்திற்கான படிப்பின் மீது இருக்கின்றது. எந்த அளவிற்கு படிக்கின்றோமோ, கற்பிக்கின்றோமோ அந்த அளவிற்கு தனக்கு லாபம் ஏற்படு கின்றது. பல குழந்தைகளுக்கு பத்திரிக்கைகளை படிப்பதற்கான எண்ணம் வருவதே கிடையாது. அவர்கள் ஒரு பைசாவிற்கும் உதவாத பதவியை அடைவார்கள். இவர்கள் முயற்சி செய்யாததால் தான் இந்த பதவியை அடைந்திருக்கின்றனர் என்ற எண்ணம் அங்கு இருக்காது. கர்மம், விகர்மத்திற்கான விசயங்கள் அனைத்தும் இப்பொழுது புத்தியில் இருக்கின்றது.

கல்பத்தின் சங்கமயுகத்தில் தான் தந்தை புரிய வைக்கின்றார். புரிந்து கொள்ளாதவர்கள் கல் புத்தியுடைவர்கள் ஆவர். நாமும் அற்பமான புத்தியுடையவர்களாக இருந்தோம். அதிலும் சத விகிதம் இருக்கின்றது. குழந்தைகளுக்கு பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார், இப்பொழுது க-யுகமாக இருக்கின்றது, இதில் அளவற்ற துக்கம் இருக்கின்றது. பாபா சரியாகத் தான் கூறுகின்றார் என்பதை புத்திசா-களாக இருப்பவர்கள் உடனே புரிந்துக் கொள்கின்றனர். நேற்று நாமும் எவ்வளவு துக்கமானவர்களாக இருந்தோம், அளவற்ற துக்கங்களுக்கு நடுவில் இருந்தோம் என்பதை நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது மீண்டும் அளவற்ற சுகத்தினுள் சென்று கொண்டிருக்கின்றோம். இது இராவண இராஜ்யம், க-யுகம் என்பதையும் நீங்கள் அறிந்திருக் கின்றீர்கள். அறிந்து கொண்டும் மற்றவர்களுக்குப் புரிய வைக்கவில்லையெனில் எதையும் அறிந்திருக்கவில்லையென்று பாபா கூறுவார். அறிந்திருக்கின்றீர்கள் எனில் சேவை செய்து, அந்த செய்தியானது பத்திரிக்கையில் வர வேண்டும். நாளுக்கு நாள் பாபா மிகவும் எளிய கருத்துகளை கூறிக் கொண்டே இருக்கின்றார். க-யுகம் குழந்தையாக இருக்கின்றது என்று அவர்கள் நினைக் கின்றனர். சங்கமத்தை புரிந்து கொண்டால் தான் சத்யுகம் மற்றும் க-யுகத்தின் வேறுபாட்டை உணர முடியும். க-யுகத்தில் அளவற்ற துக்கம் இருக்கின்றது, சத்யுகத்தில் அளவற்ற சுகம் இருக்கின்றது. அளவற்ற சுகத்தை குழந்தைகளாகிய நமக்கு தந்தை கொடுத்துக் கொண்டிருக் கின்றார், அதனை நாம் வர்ணனை செய்து கொண்டிருக்கின்றோம் என்று கூறுங்கள். வேறு யாரும் இவ்வாறு புரிய வைக்க முடியாது. நீங்கள் புது விசயங்களைக் கூறுகின்றீர்கள். நீங்கள் சொர்க்க வாசிகளாக இருக்கின்றீர்களா? அல்லது நரகவாசிகளாக இருக்கின்றீர்களா? என்று யாரும் கேட்க முடியாது. குழந்தைகளாகிய உங்களிலும் வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள். இவ்வளவு கருத்து களை நினைவு செய்ய முடிவதில்லை, புரிய வைக்கின்ற நேரத்தில் தேகாபிமானம் வந்து விடு கின்றது. ஆத்மா தான் கேட்கின்றது அல்லது தாரணை செய்கின்றது. ஆனால் நல்ல நல்ல மகாரதிகளும் இதனை மறந்து விடுகின்றனர். தேக அபிமானத்தில் வந்து பேச ஆரம்பித்து விடுகின்றனர். இவ்வாறு அனைவருக்கும் ஏற்படுகின்றது. அனைவரும் முயற்சியாளர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மா என்று உணர்ந்து பேசுகின்றனர் என்பது கிடையாது. ஆத்மா என்று நினைத்து தான் தந்தை ஞானம் கொடுக்கின்றார். இப்படிப்பட்ட நிலையில் நிலைத்திருப்பதற்கு சகோதர சகோதரர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். க-யுகத்தில் அளவற்ற துக்கம் இருக்கின்றது, சத்யுகத்தில் அளவற்ற சுகம் இருக்கின்றது என்று குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது சங்கமயுகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பாபா வழி கூறுகின்றார், பாபா சுகம் கொடுக்கின்றார் என்பது கிடையாது. சுகத்திற்கான வழி கூறுகின்றார். பிறகு யார், எந்த அளவிற்கு முயற்சி செய்கின்றனரோ அந்த அளவிற்கு சுகத்தை அடைகின்றனர். சுகத்தை கொடுப்பது கிடையாது. தந்தையின் ஸ்ரீமத் படி நடப்பதன் மூலம் சுகம் அடைகின்றீர்கள். பாபா வழி மட்டுமே கூறுகின்றார், இராவணனிடமிருந்து துக்கத்திற்கான வழி தான் கிடைக்கின்றது. ஒருவேளை தந்தை கொடுக்கின்றார் எனில் பிறகு அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆஸ்தி கிடைக்க வேண்டும். லௌகீக தந்தை சொத்தை பிரித்துக் கொடுப்பது போன்று. இங்கு யார் எவ்வளவு முயற்சிக்கின்றார்களோ! தந்தை மிக எளிய வழி கூறுகின்றார். இவ்வாறு செய்தீர் களெனில் இந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவீர்கள். நான் அனைத்தையும் விட உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்று குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும், படிக்க வேண்டும். இவர் உயர்ந்த பதவி அடையட்டும், நான் இப்படியே அமர்ந்திருக்கின்றேன் என்று இருக்கக் கூடாது. முதல் முயற்சி. நாடகப்படி கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டியிருக்கின்றது. சிலர் தீவிரமாக முயற்சி செய்கின்றனர், சிலர் குறைவாக. அனைத்தும் முயற்சியில் தான் இருக்கின்றது. என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை வழி கூறியிருக்கின்றார். எந்த அளவிற்கு நினைவு செய்கின்றோமோ அந்த அளவிற்கு விகர்மங்கள் அழிந்து விடும். நாடகம் என்று விட்டு விடக் கூடாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்.

உலகத்தின் சரித்திர பூகோளம் திரும்பவும் நடைபெறுகின்றது. ஆக யார் என்ன நடிப்பு நடித்திருக் கின்றார்களோ அதையும் மீண்டும் நடிக்க வேண்டியிருக்கும். அனைத்து தர்மங்களும் மீண்டும் தங்களது நேரத்தில் வரும். கிறிஸ்தவர்கள் இப்பொழுது 100 கோடி இருக்கின்றனர் எனில் அவர்கள் மீண்டும் நடிப்பதற்காக வருவார்கள். ஆத்மா விநாசம் ஆவது கிடையாது, அதன் நடிப்பையும் ஒருபொழுதும் விநாசம் செய்ய முடியாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். யார் புரிந்து கொள்கின்றனரோ அவர்கள் கண்டிப்பாக புரிய வைக்கவும் செய்வார்கள். செல்வம் தானம் கொடுப்பதால் ஒருபொழுதும் குறையாது. தாரணை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், மற்றவர் களையும் செல்வந்தர்களாக ஆக்கிக் கொண்டே இருப்பர். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் தன்னையும் தாழ்வாக நினைக்கின்றனர். உங்களால் கூற முடியவில்லையெனில் உங்களது அதிர்ஷ்டத்தில் பைசாவிற்கு உதவாத பதவி கிடைக்கும் என்று ஆசிரியர் கூறுவார். அதிர்ஷ்டம் இல்லையெனில் என்ன முயற்சி செய்ய முடியும்? இது எல்லையற்ற பாடசாலையாகும். ஒவ்வொரு ஆசிரியரின் பாடமும் தனித்தனியானதாக இருக்கும். பாபா கற்றுக் கொடுக்கும் முறையானது அவருக்கு மட்டுமே தெரியும், மேலும் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக் கின்றீர்கள். வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றீர்கள், இருந்தாலும் புரிந்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. புத்தியில் அமருவதே கிடையாது. எந்த அளவிற்கு நெருக்கத்தில் வருகின்றார்களோ, புத்திசா-களாக ஆவதை பார்க்க முடிகின்றது. இப்பொழுது மியூசியம், ஆன்மீக கல்லூரி போன்றவற்றை திறக்கின்றோம். உங்களுடையதோ பெயரே தனிப்பட்டது - ஆன்மீக பல்கலைக் கழகம். அரசாங்கமும் பார்க்கும். உங்களுடையது உலகாய பல்கலைக்கழகம், இது ஆன்மீகம் என்று கூறுங்கள். ஆத்மா படிக்கின்றது. முழு 84 பிறப்புச் சக்கரத்தில் ஒரே ஒரு முறை ஆன்மீக தந்தை வந்து ஆன்மீக குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றார். 3 மணி நேரத்திற்குப் பின்பு நாடகம் (சினிமா) மீண்டும் அது போன்றே நடப்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். இதுவும் 5 ஆயிரம் ஆண்டிற்கான நாடகம் அது போன்றே திரும்பவும் நடைபெறுகின்றது. இதனை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அவர்கள் பக்தியில் சாஸ்திரங்களை மட்டுமே சரி என்று நினைக்கின்றனர். உங்களிடத்தில் எந்த சாஸ்திரமும் கிடையாது. தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். தந்தை ஏதாவது சாஸ்திரத்தை யாவது படித்திருக்கின்றாரா என்ன? அவர்கள் கீதையை படித்து விட்டு கூறுவார்கள். தாயின் வயிற்றிலேயே படித்து விட்டு பிறக்கமாட்டார்கள். எல்லையற்ற தந்தையின் பாகமே கற்பிப் பதாகும். தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். உலகத்தினருக்குத் தெரியவே இல்லை. தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார் என்று பாடவும் செய்கின்றனர். கிருஷ்ணரை ஞானக் கடல் என்று கூறுவதில்லை. இந்த லெட்சுமி நாராயணன் ஞானக் கடலாக இருக்கின்றார்களா என்ன? இல்லை. இது தான் அதிசயமானதாகும். பிராமணர்களாகிய நாம் தான் ஸ்ரீமத்படி இந்த ஞானத்தைக் கூறுகின்றோம். இந்த வகையில் நாம் பிராமணர்கள் தான் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக இருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிய வைக்கின்றீர்கள். அநேக முறை ஆகியிருந்தோம், மீண்டும் ஆவோம். மனிதர்கள் எப்பொழுது புரிந்து கொள்கின்றார்களோ அப்பொழுது தான் ஏற்றுக் கொள்வார்கள். கல்ப கல்பத்திற்கும் நாம் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக ஆகின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். யார் புரிந்து கொள்கின்றார் களோ அவர்கள் நிச்சயபுத்தியுடையவர்களாகவும் ஆகி விடுகின்றனர். பிராமணன் ஆகாமல் தேவதைகளாக எப்படி ஆக முடியும்? ஒவ்வொருவரின் புத்தியில் தான் இருக்கின்றது. பள்ளிகளில் சிலர் ஸ்காலர்சிப் (உதவி தொகை) அடைகின்றனர், சிலர் தோல்வியடைந்து விடுகின்றனர். பிறகு மீண்டும் புதிதாக படிக்க வேண்டியிருக்கும். விகாரத்தில் விழுந்து விட்டால் செய்த வருமானம் எல்லாம் அழிந்து விடும், பிறகு புத்தியில் எதுவும் அமராது. உள்ளுக்குள் நெருடல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்று தந்தை கூறுகின்றார்.

இந்த பிறப்பில் செய்த பாவங்கள் என்ன? என்பதை அனைவருக்கும் தெரியும். மற்றபடி முந்தைய பிறப்புகளில் என்ன பாவங்கள் செய்தோம்? என்பது நினைவில் இருக்காது. கண்டிப்பாக பாவங்கள் செய்திருக்கின்றீர்கள். புண்ணிய ஆத்மாக்களாக இருந்தவர்களே பிறகு பாவ ஆத்மாக்களாக ஆகின்றனர். கணக்கு வழக்குகளை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். பல குழந்தைகள் மறந்து விடுகின்றனர், படிப்பது கிடையாது. ஒருவேளை படிக்கின்றார்களெனில் கண்டிப்பாக கற்பிப்பார்கள். மந்த புத்தியுடைய சிலர் புத்திசா-களாக ஆகி விடுகின்றனர், எவ்வளவு உயர்ந்த படிப்பாக இருக்கின்றது! தந்தையின் இந்த படிப்பின் மூலம் தான் சூரிய வம்சம், சந்திர வம்சம் உருவா கின்றது. அவர்கள் இந்த பிறப்பில் படித்து பிறகு பதவியை அடைகின்றனர். இந்த படிப்பிற்கான பதவி புது உலகில் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அது அதிக தூரம் கிடையாது. எவ்வாறு ஆடையை மாற்றுகின்றீர்களோ அவ்வாறு பழைய உலகை விடுத்து புது உலகிற்குச் செல்ல வேண்டும். விநாசமும் கண்டிப்பாக ஏற்படும். இப்பொழுது நீங்கள் புது உலகத்தைச் சார்ந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். பிறகு இந்த பழைய ஆடையை விட்டு செல்ல வேண்டும். வரிசைக்கிரமமான இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. யார் நன்றாகப் படிக்கின்றார்களோ அவர்களே சொர்க்கத்தில் முத-ல் வருவார்கள். மற்றவர்கள் பின்னால் வருவார்கள். சொர்க்கத்தில் வர முடியாது. சொர்க்கத்தில் தாச, தாசிகளாக இருக்கக் கூடியவர்களும் உள்ளத்தில் இடம் பிடித்தவர்களாக இருப்பர். அனைவரும் வந்து விடுவார்கள் என்பது கிடையாது. இப்பொழுது ஆன்மீக கல்லூரிகளை திறந்து கொண்டு இருக்கின்றீர்கள். அனைவரும் வந்து முயற்சி செய்வார்கள். படிப்பில் யார் வேகமாகச் செல்கின்றார்களோ அவர்களே உயர்ந்த பதவியை அடைவார்கள். மந்தப் புத்தியுடையவர்கள் குறைவான பதவியை அடைவார்கள். நாளடைவில் மந்தப் புத்தியுடையவர்களும் நன்றாக முயற்சி செய்ய ஆரம்பித்து விடும் நிலை ஏற்படலாம். புத்திசா-களாக இருக்கும் சிலர் கீழேயும் சென்று விடலாம். முயற்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த முழு நாடகமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆத்மா சரீரத்தை தாரணை செய்து இங்கு நடிப்பு நடித்துக் கொண்டிருக்கின்றது. புது ஆடையை தாரணை செய்து புது நடிப்பை நடிக்கின்றது. வித விதமான நிலையை அடைகின்றது. சம்ஸ்காரம் ஆத்மாவில் இருக்கின்றது. வெளியில் யாரிடத்திலும் ஞானம் சிறிதும் கிடையாது. தந்தை வந்து படிப்பிக்கின்ற பொழுது தான் ஞானம் கிடைக்கின்றது. ஆசிரியரே இல்லையெனும் பொழுது ஞானம் எங்கிருந்து வரும்? அது பக்தியாகும். பக்தியில் அளவற்ற துக்கம் இருக்கின்றது. மீராவிற்கு சாட்சாத்காரம் (காட்சி) ஏற்பட்டது, ஆனால் சுகம் இருக்கவில்லை அல்லவா! நோய் ஏற்பட வில்லையா என்ன? அங்கு எந்த வகையான துக்கத்திற்கான விசயமும் இருக்காது. இங்கு அளவற்ற துக்கம் இருக்கின்றது, அங்கு அளவற்ற சுகம் இருக்கின்றது. இங்கு அனைவரும் துக்கமானவர்களாக இருக்கின்றனர். அரசர்களுக்கும் துக்கம் இருக்குமல்லவா! பெயரே துக்க தாமமாகும். அது சுகதாமம். சம்பூர்ண துக்கம் மற்றும் சம்பூர்ண சுகத்தின் இது சங்கமமாக இருக்கின்றது. சத்யுகத்தில் முழுமையான சுகம், க-யுகத்தில் முழுமையான துக்கம் இருக்கின்றது. துக்கத்திற்கான வகைகளும் விருத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. நாளடைவில் இன்னும் துக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அளவற்ற துக்கத்திற்கான மலை விழும்.

பேசுவதற்கு அவர்கள் உங்களுக்கு மிகவும் குறைந்த நேரத்தையே கொடுக்கின்றனர். இரண்டு நிமிடம் கொடுத்தாலும் புரிய வையுங்கள் - சத்யுகத்தில் அளவற்ற சுகம் இருந்தது, அதனை தந்தை கொடுக்கின்றார். இராவணனின் மூலம் அளவற்ற துக்கம் கிடைக்கின்றது. காமத்தின் மீது வெற்றியடையும் பொழுது உலகத்தையே வெல்ல முடியும் என்று தந்தை கூறுகின்றார். இந்த ஞானத்திற்கு விநாசம் ஏற்படுவது கிடையாது. சிறிது கேட்டாலும் சொர்க்கத்திற்கு வருவார்கள். பிரஜைகளாக அதிகமானவர்கள் ஆகின்றனர். அரசர் பதவி எங்கே?, பிரஜையாக இருப்பது எப்படி ! ஒவ்வொருவரின் புத்தி தனிப்பட்டதாகும். யார் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புரிய வைக்கின்றார்களோ அவர்களே நல்ல பதவியை அடைகின்றனர். இந்த பள்ளிக்கூடமும் மிகப் பொதுவானது அல்ல. பகவான் வந்து கற்பிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணரும் கூட தெய்வீக குணமுடைய தேவதையாவார். நான் தெய்வீக குணம் மற்றும் அசுர குணத்தி-ருந்து விடுபட்டவனாக இருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். உங்களது தந்தையாகிய நான் உங்களுக்கு கற்பிப்பதற்காக வருகின்றேன். ஆன்மீக ஞானத்தை சுப்ரீம் ஆத்மா தான் கொடுக் கின்றார். கீதை ஞானத்தை எந்த தேகதாரி மனிதனோ அல்லது தேவதையோ கொடுக்கவில்லை. விஷ்ணு தேவதாய நமக என்று கூறுகின்றனர் எனில் கிருஷ்ணர் யார்? தேவதை கிருஷ்ணர் தான் விஷ்ணு என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. உங்களிலும் சிலர் மறந்து விடுகின்றீர்கள். சுயம் முழுமையாக புரிந்திருக்கும் பொழுது தான் மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியும். சேவை செய்து நிரூபணம் கொண்டு வர வேண்டும், அப்பொழுது தான் சேவை செய்திருக்கின்றார் என்று புரிந்து கொள்ள முடியும். ஆகையால் பாபா கூறுகின்றார்- மிக நீளமான செய்திகளை எழுத வேண்டாம், இன்னார் வரயிருக்கின்றார், இவ்வாறு கூறி சென்றிருக்கின்றார் ....... இவ்வாறு எழுத வேண்டிய அவசியமில்லை. குறைவாக எழுத வேண்டும். வருகின்றனர், நிலைத்திருக் கின்றார் களா? என்று பாருங்கள். புரிந்து கொண்டு சேவை செய்ய ஈடுபட்டு விட்டால் செய்தி எழுதுங்கள். சிலர் பகட்டுக்காக செய்தியை கொடுக்கின்றனர். பாபாவிற்கு ஒவ்வொரு விசயத்தின் பலன் தேவை. பாபாவிடத்தில் அதிகமானவர்கள் வருகின்றனர், பிறகு சென்று விடுகின்றனர், அவர்களால் என்ன லாபம் ஏற்படுகின்றது? அவர்களுக்கு பாபா என்ன செய்வார்? அவர்களுக்கு எந்த லாபமும் ஏற்படுவதில்லை, உங்களுக்கும் எந்த லாபமும் கிடையாது. உங்களது இயக்கம் விருத்தியாகவே இல்லை. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எந்த விசயத்திற்கும் வசமாகக் கூடாது. தனக்குள் ஞானத்தை தாரணை செய்து தானம் செய்ய வேண்டும். மற்றவர்களின் அதிர்ஷ்டத்தையும் எழுப்பச் செய்ய (உருவாக்க) வேண்டும்.

2. மற்றவர்களிடம் பேசுகின்ற பொழுது தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு ஆத்மாவிடம் பேச வேண்டும். சிறிதும் தேக அபிமானம் வந்து விடக் கூடாது. தந்தையிடமிருந்து அடைந்த அளவற்ற சுகத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

வரதானம்:
மனம் மற்றும் புத்தி இரண்டையும் சம நிலையில் வைத்து சேவை செய்யக் கூடிய வெற்றியின் மூர்த்தி ஆவீர்களாக !

சில நேரம் குழந்தைகள் சேவையில் புத்தியை மட்டும் பயன்படுத்துகிறார்கள், ஆனால் மனம் மற்றும் புத்தி இரண்டையும் பயன்படுத்தும்போது தான் சேவையில் வெற்றியின் மூர்த்தி ஆவீர்கள். யார் வெறும் புத்தியை பயன்படுத்துகிறார்களோ, அவர்களின் புத்தியில் சிறிது நேரம் பாபாவின் நினைவு இருக்கும், ஹா, பாபா தான் செய்ய வைக்க கூடியவர் பின்பு, கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு நான் என்னும் தன்மை வெளிப்படுகிறது. ஆனால் யார் மனதால் செய்கிறார்களோ அவர்களுக்கு பாபா தான் செய்விக்கின்றார் என்ற எண்ணம் மனதில் இருக்கும். மனதாள் சேவை செய்யும் போது பலன் கிடைக்கும். மற்றும் இரண்டும் சமநிலையில் இருந்தால் வெற்றி கிடைக்கும்.

சுலோகன்:
எல்லைக்கப்பாற்பட்டு இருங்கள் அப்பொழுது எல்லைக்குட்பட்ட விசயங்கள் தானாகவே சமாப்தியாகி விடும்.