19-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! அனைத்தையும் விட முக்கியமான சேவை பாபாவின் நினைவில் இருப்பது மற்றும் மற்றவர்களுக்கு நினைவூட்டுவது, அனைவருக்கும் நீங்கள் பாபாவின் அறிமுகம் கொடுத்து அவர்களுக்கு நன்மை செய்ய முடியும்.

கேள்வி:
எந்த ஒரு சிறிய பழக்கம் கூட மிகப்பெரிய அவமரியாதை செய்ய வைத்துவிடுகிறது? அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான யுக்தி என்ன?

பதில்:
மறைத்து வைக்கக்கூடிய அல்லது திருடக்கூடிய பழக்கம் யாரிடமாவது இருந்தது என்றால், அது மிகப்பெரிய அவமரியாதை ஆகிவிடுகிறது. சில்லரை திருடினாலும் திருட்டு தான், லட்சத்தை திருடினாலும் திருட்டு தான் என்று சொல்லப்படுகிறது. பேராசையின் வசமாகி பசி வந்ததும் கேட்காமல் மறைத்து வைத்து சாப்பிடுவது, திருடுவது போன்றவை மிக மோசமான பழக்கங் களாகும்.. இந்தப் பழக்கங்களிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பிரம்மா பாபாவுக்கு சமமாக டிரஸ்டி ஆகுங்கள். இப்படி என்ன வெல்லாம் பழக்கங்கள் இருக்கிறதோ, அவற்றை பாபா விடம் உண்மையாக சொல்லி விடுங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நாம் எல்லையற்ற தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றோம் என்று குழந்தைகள் தெரிந்திருக் கிறார்கள். நாம் ஈஸ்வரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். ஈஸ்வரன் நிராகார் (சரீர மற்றவர்) என்பதைக் கூட தெரிந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஆத்ம அபிமானியாக அமர்ந்திருக் கின்றீர்கள். இதில் அறிவியலுக்கான விசயமோ அல்லது ஹடயோகம் போன்றவை செய்வதற் கான விசயமோ கிடையாது. இது (இராஜயோகம்) புத்தியின் வேலை ஆகும். இந்த சரீரத்திற்கு எந்த வேலையும் கிடையாது. ஹடயோகத்தில் சரீரத்துக்கான விசயம் இருக்கிறது. இங்கே நாம் குழந்தைகள் என்று புரிந்து தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றோம். பாபா நமக்கு படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்திருக்கிறோம். தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்தால், இனிமையான குழந்தைகளே! உங்களுடைய அனைத்து பாவங்களும் அழிந்து விடும் என்று சொல்லப்படுகிறது. கூடவே சக்கரத்தைச் சுழற்றுங்கள், மற்றவர்களுக்கு சேவை செய்து தனக்குச் சமமாக ஆக்குங்கள். இவர் என்ன சேவை செய்து கொண்டிருக் கிறார் என்று பாபா ஒவ்வொருவரையும் வந்து பார்க்கின்றார். ஸ்தூல சேவை செய்கின்றாரா? அல்லது சூட்சும சேவை செய்கின்றாரா? அல்லது முக்கியமான சேவை செய்கின்றாரா? ஒவ்வொருவரையும் பாபா பார்க்கின்றார். இவர் அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்கின்றாரா? என்பது தான் முக்கியமான விசயம். ஒவ்வொரு குழந்தைக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்கின்றார்கள், என்னை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பிறவி பிறவிகளுக்கான பாவம் அழிந்து விடும் என்று பாபா சொல்வதாக மற்றவர்களுக்குப் புரிய வைக்கின்றார்கள். எந்தளவு இந்த சேவையில் இருக்கின்றார்கள்? தங்களுக்குள்ளே ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்- அனைவரையும் விட அதிகமான சேவை யார் செய்கிறார்கள்? இவரை விட நான் ஏன் அதிகமான சேவை செய்யக்கூடாது! இவரை விட அதிகமாக நினைவு யாத்திரையில் ஓட முடியுமா? முடியாதா? ஒவ்வொருவரையும் பாபா பார்க்கின்றார். பாபா ஒவ்வொருவரிடமும் செய்தியைக் கேட்கின்றார் - என்னென்ன சேவை செய்கின்றீர்கள்? பிறருக்கு பாபாவின் அறிமுகம் கொடுத்து அவர்களுக்கு நன்மை செய்கின்றீர்களா? நேரத்தை வீணாக்குவதில்லை தானே? இது தான் முக்கியமான விசயம். இந்த நேரம் அனைவரும் அநாதைகளாக இருக்கின்றனர். எல்லை யற்ற தந்தையை யாருமே தெரிந்து கொள்ளவில்லை. தந்தையிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தி கிடைக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு முக்தி மற்றும் ஜீவன் முக்திதாமம் இரண்டுமே புத்தியில் இருக்கிறது. இப்போது நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு சொர்க்கத்தில் வந்து ஜீவன் முக்திக்கான இராஜ்ய பாக்கியத்தைப் பெறுவார்கள். மற்றபடி பிற தர்மத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் யாருமே சொர்க்கத்தில் இருக்க மாட்டார்கள். நாம் மட்டும் தான் பாரதத்தில் இருப்போம். புத்தியில் என்னென்ன இருக்க வேண்டும் என்று பாபா குழந்தைகளுக்கு அமர்ந்து கற்றுக் கொடுக்கிறார். இங்கே நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்றால் கண்டிப்பாக சாப்பிடுவது, பானங்கள் பருகுதல் கூட சுத்தமாக, தூய்மையாக இருக்க வேண்டும். நாம் எதிர்காலத் தில் சர்வகுணங்கள் நிறைந்தவர்கள், 16 கலைகள் முழுமையானவர்கள், முழுமையான விகாரமற்ற வர்களாக ஆகின்றோம் என்று தெரிந்திருக்கிறீர்கள். இந்த மகிமை சரீரம் கொண்ட ஆத்மாக்களுக்கு ஆகும், ஆத்மாவுக்கு மட்டும் மகிமை என்பது கிடையாது. இங்கே வந்து நடிப்பை நடிக்கக்கூடிய ஒவ்வொரு ஆத்மாவின் பாகமும் தனித்தனியானது. நாம் இவர்களைப் (லக்ஷ்மி நாராயணரை) போல ஆக வேண்டும் என்று உங்களுடைய புத்தியில் குறிக்கோள் இருக்கிறது. பாபாவின் கட்டளை - குழந்தைகளே! தூய்மை ஆகுங்கள். எப்படி தூய்மையாக இருப்பது? என்று கேட்பார்கள். ஏனெனில் மாயையின் புயல் நிறைய வருகிறது. புத்தி எங்கெங்கெல்லாமோ போய் விடுகிறது. அவற்றை எப்படி விடுவது? என்று குழந்தைகள் சிந்திக்கிறார்கள் அல்லவா! வேறு யாருடைய புத்தியும் இப்படி சிந்திப்பதில்லை. தந்தை, ஆசிரியர், குரு கூட உங்களுக்கு கிடைத்திருக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்பதைக் கூட நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். அவர் தந்தை, ஆசிரியர், ஞானக்கடலும் ஆவார். ஆத்மாக்களாகிய நம்மை தன் கூடவே அழைத்துச் செல்வதற்கு பாபா வந்திருக்கிறார். சத்யுகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தேவி தேவதைகள் இருக்கிறார்கள். இந்த விசயங்கள் உங்களைத் தவிர யாருடைய புத்தியிலும் இருக்காது. விநாசத் திற்குப் பிறகு நாம் மட்டும் தான் இருப்போம் என்று உங்களுடைய புத்தியில் இருக்கிறது. மற்ற இந்த அனைத்து தர்மங்கள், கண்டங்கள் போன்றவை இருக்காது. நாம் தான் உலகத்திற்கு எஜமானராக இருப்போம். நம்முடைய ஒரு இராஜ்யம் மட்டும் தான் இருக்கும். மிகுந்த சுகம் நிறைந்த இராஜ்யமாக இருக்கும். மற்றபடி அதில் வித விதமான பதவியை வகிப்பவர்கள் இருப்பார்கள். நம்முடைய பதவி என்னவாக இருக்கும்? நாம் எந்தளவு ஆன்மீக சேவை செய் கின்றோம்? பாபா கூட கேட்கின்றார். பாபா அனைவருடைய மனதுக்குள் இருப்பதை அறிபவர் (அந்தர்யாமி) என்பது கிடையாது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று குழந்தைகள் ஒவ்வொருவரும் தன்னைத் தெரிந்து கொள்ள முடியும். முதல் நம்பர் சேவையை இந்த தாதா தான் ஸ்ரீமத் படி செய்து கொண்டிருக்கிறார் என்று கண்டிப்பாக புரிந்து கொள்கின்றனர். அடிக்கடி பாபா புரிய வைக்கின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், தேக அபிமானத்தை விடுங்கள். ஆத்மா என்று எவ்வளவு நேரம் புரிந்து கொள்கின்றீர்கள்? நாம் ஆத்மா என்பதை உறுதி ஆக்க வேண்டும். பாபாவை நினைவு செய்ய வேண்டும், இதன் மூலம் தான் படகு கரை சேர்கிறது. நினைவு செய்து செய்து பழைய உலகத் திலிருந்து புதிய உலகத்திற்குச் சென்று விடுவோம். இப்போது மீதம் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது. பிறகு நாம் நம்முடைய சுகதாமத்திற்கு சென்று விடுவோம். முக்கியமானது ஆன்மீக சேவை - அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பது, இது அனைத்தையும் விட சகஜமான விசயம் ஆகும். ஸ்தூல சேவை செய்வதில், உணவு சமைப்பதில், உணவு சாப்பிடுவதில் கூட உழைப்பு தேவைப்படுகிறது. இதில் (பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பதில்) உழைப்பிற் கான எந்த விசயமும் இல்லை. தன்னை ஆத்மா என்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மா அழியாதது சரீரம் அழியக்கூடியது. ஆத்மா தான் முழு நடிப்பையும் நடிக்கிறது. எப்போது விநாசத்தின் நேரம் வருகின்றதோ, அப்போது இந்தப் படிப்பை பாபா ஒரே ஒரு முறை வந்து கொடுக்கின்றார். புதிய உலகமே தேவி தேவதைகளுடையது ஆகும். அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். மற்றபடி முழு உலகமும் சாந்திதாமம் செல்ல வேண்டும். இந்தப் பழைய உலகமே இருக்காது. நீங்கள் புதிய உலகத்தில் இருக்கும் போது இந்தப் பழைய உலகத்தின் நினைவு இருக்குமா என்ன! சிறிது கூட இருக்காது. நீங்கள் சொர்க்கத்தில் தான் இருப்பீர்கள், இராஜ்யம் செய்து கொண்டிருப்பீர்கள். இது புத்தியில் இருப்பதன் மூலம் குஷி ஏற்படுகிறது. சொர்க்கத்திற்கு நிறைய பெயர் கொடுக்கப்பட்டிருகிறது. பாவ ஆத்மாக்களின் உலகம், நரகம், துக்கதாமம் என்றெல்லாம் நரகத்திற்கு கூட நிறைய பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லையற்ற தந்தை ஒரே ஒருவர் தான் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக் கிறீர்கள். நாம் அவருடைய கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளாக இருக்கின்றோம். ஆக அப்படிப்பட்ட பாபாவிடம் அன்பு கூட அதிகமாக இருக்கவேண்டும். யார் நிறைய சேவை செய்கின்றார்களோ, முட்களை மலராக்கு கின்றார்களோ, அந்தக் குழந்தைகள் மீது பாபாவுக்குக் கூட மிகுந்த அன்பு இருக்கிறது. மனிதரிலிருந்து தேவதை ஆக வேண்டுமல்லவா! பாபா அப்படி ஆவதில்லை, நம்மை உருவாக்க வந்திருக்கின்றார். ஆக உள்ளுக்குள் மிகுந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும். சொர்க்கத்தில் நாம் எந்தப் பதவி அடைவோம்? நாம் என்ன சேவை செய்கின்றோம்? வீட்டில் வேலைக்காரர்கள் இருக்கின்றார் கள் என்றால் அவர்களுக்கும் கூட அறிமுகம் கொடுக்க வேண்டும். யார் தொடர்பில் வருகின்றார் களோ, அவர்களுக்கு படிப்பினை கொடுக்க வேண்டும். அனைவருக்கும் சேவை செய்ய வேண்டு மல்லவா! அபலைகளுக்கு, ஏழைகளுக்கு, காட்டுவாசிகளுக்கு சேவை செய்ய வேண்டும். நிறைய ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் தன்னை மாற்றிக் கொள்வார்கள், பாவம் எதுவும் செய்ய மாட்டார்கள். ஞானம் இல்லை என்றால் பாவ கர்மம் செய்து கொண்டே இருப்பார்கள். பொய், திருட்டு கூட எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கின்றீர்கள். வேலைக்காரர்கள் கூட திருடி விடுகின்றார்கள். இல்லையானால் வீட்டில் குழந்தைகள் இருக்கும்போது ஏன் பூட்டு போடு கின்றார் கள்? ஆனால் இன்றைக்கு குழந்தைகள் கூட திருடர்கள் ஆகி விடுகின்றார்கள். எதையேனும் மறைத்து வைத்து எடுத்துக் கொள்கிறார்கள், யாருக்காவது பசி எடுத்தது என்றால் பேராசை காரணமாக சாப்பிட்டு விடுகின்றார்கள். பேராசை உடையவர்கள் கண்டிப்பாக ஏதேனும் திருடி சாப்பிட்டு விடுவார்கள். இது சிவபாபாவின் பண்டாரா ஆகும். இதில் அணா பைசா கூட திருடக் கூடாது. பிரம்மா டிரஸ்டியாக இருக்கின்றார். எல்லையற்ற தந்தை பகவான் உங்களிடம் வந்திருக்கின்றார். பகவானுடைய வீட்டில் எப்போதாவது யாராவது திருடுவார்களா என்ன? கனவில் கூட திருட மாட்டார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபகவான் என்று நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். நாம் அவருடைய குழந்தைகள் ஆவோம். ஆகையால் நாம் தெய்வீக காரியம் செய்ய வேண்டும்.

நீங்கள் திருடுபவர்களுக்குக் கூட ஜெயிலில் சென்று ஞானம் கொடுக்கின்றீர்கள். ஆக இங்கே எப்படி திருட முடியும்! சிலநேரம் மாம்பழம் எடுக்கின்றார்கள், ஏதேனும் பொருளை எடுத்து சாப்பிடு கின்றார்கள் என்றால் இது கூட திருட்டு அல்லவா! எந்தப் பொருளையும் கேட்காமல் எடுக்கக் கூடாது. கை கூட வைக்ககூடாது. சிவபாபா நம்முடைய தந்தை, அவர் கேட்கின்றார், பார்க்கின்றார். குழந்தைகளிடம் எந்த அவகுணமும் இல்ல தானே? ஏதாவது அவகுணம் இருந்தால் சொல்லி விடுங்கள், தானமாகக் கொடுத்து விடுங்கள் என்று கேட்கின்றார். தானமாகக் கொடுத்துவிட்டு பிறகு ஏதேனும் அவமரியாதை செய்தால், மிகுந்த தண்டனை அடைவார்கள். திருடக்கூடிய பழக்கம் மிகவும் மோசமானது ஆகும். யாரேனும் சைக்கிள் எடுத்துச் சென்று விடுகிறார்கள் என்றால் பிடிபட்டு விடுகிறார்கள். கடைக்கு செல்லும் போது, பிஸ்கட் டப்பாவை மறைத்து வைத்து விடுகிறார்கள் அல்லது வேறு ஏதேனும் சிறிய பொருட்களை மறைத்து வைத்து விடுகிறார்கள். கடைக்காரர்கள் மிகவும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆக இது கூட மிகப் பெரிய அரசாங்கம் ஆகும். பாண்டவ அரசாங்கம் தன்னுடைய தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறது. நானோ இராஜ்யம் செய்வதில்லை என்று பாபா சொல்கின்றார். பாண்டவர் களாகிய நீங்கள் தான் இராஜ்யம் செய்கின்றீர்கள். அவர்கள் பாண்டவபதி என்று பிறகு கிருஷ்ணரை சொல்லி விடுகிறார்கள். பாண்டவர்களின் தந்தை யார்? அவர் எதிரில் அமர்ந்திருக் கிறார் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். நாம் பாபாவுடைய சேவையில் என்ன சேவை செய்கின்றோம் என்று ஒவ்வொருவரும் உள்ளுக்குள் புரிந்துக் கொள்ள முடியும். பாபா நமக்கு உலகத்தின் அரசாட்சியைக் கொடுத்து விட்டு அவர் வானபிரஸ்தத்துக்கு சென்று விடுகிறார். எவ்வளவு தன்னலமற்ற சேவை செய்கின்றார்! அனைவரும் சுகமாக அமைதியாக ஆகி விடு கின்றார்கள். மனிதர்களோ, உலகத்தில் அமைதி ஏற்படட்டும் என்று மட்டும் சொல்கிறார்கள். அமைதிக்காக பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு இங்கே மிகப்பெரிய பரிசு கிடைக்கிறது என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். யார் நல்ல சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு பெரிய பரிசு கிடைக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த சேவை பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பது ஆகும். இதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். குழந்தைகளுக்கு தேவதை ஆக வேண்டும் என்றால் சேவை கூட செய்ய வேண்டும். இவரைப் (பிரம்மாவை) பாருங்கள், இவர் கூட லௌகீகக் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தார் அல்லவா! இவர் மூலமாக பாபா செய்வித்தார். இவருக்குள் பிரவேசம் செய்து, இதை செய்யுங்கள் என்று இவருக்கும் சொல்கின்றார், ஆக உங்களுக்கும் சொல்கின்றார். நமக்கு எப்படி சொல்வார்? என்னுள் (பிரம்மா பாபா) பிரவேசமாகி செய்விக்கின்றார். செய்பவர்-செய்விப்பவர் அல்லவா! பிரம்மாவிற்குக் கூறினார் - இதை விடுங்கள், இதுவோ அழுக்கான உலகம் ஆகும், வைகுண்டத் திற்குச் செல்லுங்கள். இப்போது வைகுண்டத் திற்கு எஜமானர் ஆக வேண்டும். வைராக்கியம் வந்து விட்டது, அவ்வளவு தான். அனைவரும் நினைத்தனர் - இவருக்கு என்ன ஆகிவிட்டது. இவ்வளவு நல்ல லாபம் ஈட்டும் வியாபாரி என்ன செய்கின்றார்! இவர் என்ன ஆகப்போகின்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அனைத்தையும் விடுவது பெரிய விசயமா என்ன! அனைத்தையும் தியாகம் செய்து விட்டார், அவ்வளவுதான். மேலும் அனைவரையும் தியாகம் செய்வித்தார். குழந்தைகளையும் (பெண்) தியாகம் செய்வித்தார். இப்போது இந்த ஆன்மீக சேவை செய்ய வேண்டும், அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். நாங்கள் ஞான அமிர்தம் குடிக்கச் செல்கின்றோம் என்று அனைவரும் கூறினார்கள். மம்மாவின் பெயரை சொன்னார்கள். ஓம் ராதையிடம் ஞான அமிர்தம் குடிக்கச் சென்றனர். யார் இந்த யுக்தியைப் படைத்தது? சிவபாபா இவருக்குள் பிரவேசமாகி எவ்வளவு நல்ல யுக்தி படைத்திருக்கிறார்! யார் வந்தாலும் ஞான அமிர்தம் குடிப்பார்கள். அமிர்தத்தை விடுத்து விஷத்தை அருந்தலாமா? என்று பாடல் கூட இருக்கிறது. விஷத்தை விடுத்து ஞான அமிர்தம் குடித்து தூய்மையான தேவதை ஆக வேண்டும். யார் வந்தாலும் அவர்களிடம் தூய்மையாக ஆகுங்கள் என்று சொன்னார்கள். ஆரம்பத்தில் இந்த விசயங்கள் இருந்தன. அமிர்தத்தைக் குடிக்க வேண்டுமென்றால் விஷத்தை விட்டுவிட வேண்டும். தூய்மையான வைகுண்டத்தின் எஜமானர் ஆக வேண்டும் என்றால் ஒருவரையே நினைவு செய்ய வேண்டும். ஆக கண்டிப் பாக சண்டை ஏற்படுமல்லவா! ஆரம்பத்தில் வந்த பிரச்சினைகள் இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. அபலைகள் மீது எவ்வளவு கொடுமைகள் செய்யப் படுகிறது! எந்தளவு நீங்கள் மிகவும் உறுதியாக ஆகிக்கொண்டே செல்வீர்களோ, அந்தளவு தூய்மை மிகவும் நல்லது என்று புரிந்து கொள்வீர்கள். பாபா, வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று அழைக்கின்றனர். முதலில் உங்கள் குணங்கள், நடத்தைகள் கூட எப்படி இருந்தது? இப்போது என்ன ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்? முன்பு தேவதைகளின் முன்னால் சென்று நாங்கள் பாவிகளாக இருக்கின்றோம் என்று கூறினீர்கள். இப்போது அப்படி சொல்ல மாட்டீர்கள். ஏனெனில் நாம் இப்போது தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கிறீர்கள்.

நாம் எந்தளவு சேவை செய்கின்றோம் என்று குழந்தைகள் தனக்குத் தான் கேட்டுக் கொள்ள வேண்டும். உணவு சமைப்பவர்கள் உங்களுக்காக எவ்வளவு சேவை செய்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கிறது. நிறைய பேருக்கு சேவை செய்யும் போது, அனைவருடைய ஆசீர்வாதமும் அவர்களுக்கு கிடைக்கிறது. நிறைய மகிமைகள் எழுதுகின்றனர். அனைத்தும் உணவு சமைப்பவர்களின் அதிசயம் ஆகும், எவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது ஸ்தூல சேவை ஆகிவிடுகிறது. சூட்சும சேவையும் செய்ய வேண்டும். குழந்தைகள் சொல்கின்றனர் - பாபா, இந்த 5 பூதங்கள் மிகவும் கடுமையாக இருக்கிறது, நினைவில் இருக்கவிடுவதில்லை. பாபா சொல்கின்றார் - குழந்தைகளே, சிவபாபா நினைவில் இருந்து உணவு சமையுங்கள். ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருமில்லை. அவர் தான் உதவி செய்கின்றார். நான் அவருடைய (குடை) நிழலில் சென்றேன்.... என்ற பாடல் கூட இருக்கிறதல்லவா! சத்யுகத்தில் இப்படி சொல்வார்களா என்ன! இப்போது நீங்கள் பாபாவின் குடை நிழலில் வந்துள்ளீர்கள். யாருக்கேனும் பூதம் வந்துவிட்டால், மிகவும் வேதனைப் படுகிறார்கள். அசுத்தமான ஆத்மா வருகிறது. உங்களுக்குள் எவ்வளவு பூதங்கள் இருக்கின்றன! காமம், கோபம், பேராசை, மோகம்......இந்த பூதங்கள் உங்களை மிகவும் வேதனைப்பட வைக்கிறது. அந்த அசுத்த ஆத்மா யாருக்காவது துக்கம் கொடுக்கிறது. இந்த 5 பூதங்களோ (பஞ்சவிகாரங்கள்) 2500 வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் எவ்வளவு துக்கமடைந்தீர்கள்! இந்த 5 பூதங்கள் நம்மை ஒன்றுமில்லாததாக ஆக்கி விட்டது. தேக அபிமானம் நம்பர் ஒன் பூதம் ஆகும். காமம் கூட பெரிய பூதம் ஆகும். இது கூட உங்களை எவ்வளவு துன்புறுத்தி இருக்கிறது! இதைக் கூட பாபா சொல்லி இருக்கிறார். கல்ப-கல்பமாக இந்த பூதம் உங்களுக்குள் வருகிறது. ராஜா ராணி போலவே பிரஜைகள் அனைவருக்கும் பூதம் பிடித்திருக்கிறது. ஆக இதை பூதங்களின் உலகம் என்று சொல்லலாம். இராவண இராஜ்யம் என்றாலே அசுர இராஜ்யம் ஆகும். சத்யுகம்-திரேதா யுகத்தில் பூதம் இருப்பதில்லை. ஒரு பூதம் கூட எவ்வளவு துக்கம் கொடுக்கிறது. இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. 5 விகாரங்கள் என்ற இராவணனின் பூதம் ஆகும். இதிலிருந்து பாபா வந்து விடுவிக்கிறார். உங்களில் கூட யார் புத்திசாலிகளோ, அவருடைய புத்திக்குத் தான் இது புரிகிறது. இந்த பிறவியில் அப்படி எந்த ஒரு (விகாரத்தின்) காரியமும் செய்து விடக் கூடாது. திருடி விட்டார், தேக அபிமானம் வந்துவிட்டது என்றால் விளைவு என்னவாக இருக்கும்? பதவி குறைந்து போய்விடும். எதையாவது திருடி விடுகிறார்கள். சில்லரை திருடினாலும் திருட்டு தான் லட்சத்தை திருடினாலும் திருட்டு தான் என்று சொல்கிறார்கள். நரகத்திற்குக் கூட நிறைய பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது - யக்ஞத்தில் இது போன்ற காரியம் ஒருபோதும் செய்யக் கூடாது. பழக்கம் வந்துவிட்டால் பிறகு போகவே போகாது. எவ்வளவு தலையை உடைத்துக் கொள்கின்றனர்! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஸ்தூல சேவையின் கூடவே சூட்சும மற்றும் முக்கியமான சேவையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் பாபாவின் அறிமுகம் கொடுப்பது, ஆத்மாக்களுக்கு நன்மை செய்வது, நினைவு யாத்திரையில் இருப்பது இவை தான் உண்மையான (முக்கியமான) சேவை ஆகும். இந்த சேவையில் (சதா ஈடுபட்டு) இருக்க வேண்டும், தன்னுடைய நேரத்தை வீணாக்கக் கூடாது.

2. புத்திசாலி ஆகி 5 விகாரங்கள் என்ற பூதங்கள் மீது வெற்றி அடைய வேண்டும். திருட்டு அல்லது பொய் பேசும் பழக்கத்தை நீக்கிவிட வேண்டும். தானமாகக் கொடுத்த பொருளை திரும்பப் பெறக் கூடாது.

வரதானம்:
சரீர நோய்கள் பற்றிய சிந்தனையில் இருந்து விடுபட்டு, ஞான சிந்தனை மற்றும் சுய சிந்தனை செய்யக்கூடிய சுப சிந்தனையாளர் ஆகுக.

சரீரத்துக்கு நோய் வருவது என்பது ஒன்று, நோயில் அசைந்து விடுவது என்பது வேறு. நோய் வருவதோ விதிக்கப்பட்டது. ஆனால் சிரேஷ்ட ஸ்திதியில் அசைந்து விடுவது என்பது பந்தன் முக்த்தின் அடையாளம். யார் சரீர நோயின் சிந்தனையில் இருந்து விடுபட்டு இருந்து, சுய சிந்தனை, ஞான சிந்தனை செய்கிறாரோ, அவர் தாம் சுப சிந்தனையாளர். இயற்கையின் சிந்தனை (தேகம் மற்றும் தேக சம்பந்தமானவை) அதிகம் செய்வதால் கவலை ரூபம் ஆகி விடுகிறது. இந்த பந்தனத்திலிருந்து விடுபடுவது தான் கர்மாதீத் ஸ்திதி எனச் சொல்லப் படுகிறது.

சுலோகன்:
அன்பின் சக்தியானது பிரச்சினை என்ற மலையைத் தண்ணீர் போல் லேசாக்கி விடும்.