19-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள், உங்களிடம் எந்த ஒரு அசுர குணமும் இருக்கக் கூடாது. தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும், தவறுகள் செய்யக்கூடாது.

கேள்வி:
சங்கமயுக பிராமணக் குழந்தைகளாகிய உங்களிடம் எந்த ஒரு நிச்சயம் மற்றும் பெருமிதம் உள்ளது?

பதில்:
இப்பொழுது நாம் ஈஸ்வரிய சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள், நாம் சொர்க்கவாசியாக உலகத்திற்கே அதிபதியாக மாறிக் கொண்டு இருக்கிறோம் என்ற நிச்சயம் மற்றும் பெருமிதம் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. நாம் சங்கமத்தில் டிரான்ஸ்பர் (மாறிக்கொண்டு) ஆகிக் கொண்டிருக்கிறோம். அசுர குழந்தைகளிலிருந்து ஈஸ்வரிய குழந்தைகளாகி 21 பிறவிகளுக்கு சொர்க்கவாசி ஆகின்றோம். இதை விட பெரிய விசயம் எதுவும் இல்லை.

ஓம் சாந்தி.
பெரும்பாலும் மனிதர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஒரு வேளை வீட்டில் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டால் அசாந்தி நிலவு கிறது. அசாந்தியினால் துக்கம் ஏற்படுகிறது. சாந்தியினால் சுகம் கிடைக்கிறது. இங்கே குழந்தை களாகிய நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு உண்மையான அமைதி இருக்கிறது. தந்தையை நினையுங்கள் என உங்களுக்குக் கூறப்பட்டது. தன்னை ஆத்மா என உணருங்கள். ஆத்மாவில் அரைக்கல்பமாக அசாந்தி இருக்கிறது, அமைதியின் கடல் தந்தையை நினைப்பதால் அது விலக வேண்டும். உங்களுக்கு அமைதியின் சொத்து கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அமைதியான உலகம் மற்றும் அமைதியற்ற உலகம் தனித்தனியானது என்பது உங்களுக்குத் தெரியும். அசுர உலகம், ஈஸ்வரிய உலகம், சத்யுகம், கலியுகம் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பது எந்த மனிதருக்கும் தெரியாது. நமக்கும் தெரியவில்லை என்று நீங்களும் கூறுவீர்கள். எவ்வளவு பெரிய நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, பணம் இருப்பவர்களை உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என கூறப்படுகிறது. ஏழை மற்றும் பணக்காரர்கள் புரிந்து கொள்ள முடியும் அல்லவா? அதே போன்று நீங்களும் ஈஸ்வரிய குழந்தைகள், அசுர குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்பொழுது நீங்கள் நாம் ஈஸ்வரிய குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். இதில் உறுதியான நிச்சயம் இருக்கிறதல்லவா? பிராமணர்களாகிய நாம் ஈஸ்வரிய சம்பிரதாயத்தினராக உலகத்திற்கே அதிபதியாக மாறிக் கொண்டு இருக்கிறோம் என நீங்கள் தான் அறிகிறீர்கள். அந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும். மிகச்சிலரே உண்மையாகப் புரிந்து கொள்கிறார் கள். சத்யுகத்தில் ஈஸ்வரிய சம்பிரதாயத்தினர் இருக்கிறார்கள். கலியுகத்தில் அசுர சம்பிரதாயத் தினர். புருஷோத்தம யுக சங்கமயுகத்தில் அசுரத்தன்மை உடையவர்கள் மாறுகிறார்கள். இப்பொழுது நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆகியிருக்கிறோம். இடையில் மறந்து விட்டோம். நாம் சிவபாபாவின் வாரிசுகள் என்பதை இச்சமயத்தில் அறிய வேண்டும். அங்கே சத்யுகத்தில் யாரும் தன்னை ஈஸ்வரிய செல்வத்தினர் என்று கூறுவதில்லை. அங்கே தெய்வீகக் குழந்தை களாக இருக்கிறார்கள். இதற்கு முன்பு நாம் அசுர குழந்தைகளாக இருந்தோம். இப்பொழுது ஈஸ்வரிய குழந்தைகளாக ஆகியிருக்கிறோம். நாம் பிராமணர்கள். பி.கு. ஒரு தந்தையின் படைப்பு கள். நீங்கள் அனைவரும் சகோதரன் சகோதரிகள், ஈஸ்வரிய குழந்தைகள். பாபாவிடமிருந்து உங்களுக்கு இராஜ்யம் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் நாம் தெய்வீக சுய இராஜ்யத்தைப் பெறுவோம், சுகமாக இருப்போம். உண்மையில் சத்யுகம், சுகதாமம். கலியுகம், துக்க தாமம். இதை சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே அறிகிறீர்கள். ஆத்மா ஈஸ்வரிய குழந்தையாகும். பாபா சொர்க்கத்தை உருவாக்குகிறார் என்பதை அறிகிறீர்கள். அவர் படைக்கக் கூடியவர் அல்லவா?. நரகத்தைப் படைக்கக்கூடியவர் கிடையாது. அவரை யார் நினைப்பார்கள். பாபா சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை இனிமையிலும் இனிமையாக குழந்தைகள் நீங்கள் அறிகிறீர்கள். அவர் நம்முடைய மிகவும் இனிமையான தந்தையாவர். நம்மை 21 பிறவிகளுக்கு சொர்க்கவாசியாக மாற்றுகிறார். இதைவிட பெரிய விஷயம் ஏதுமில்லை. நாம் ஈஸ்வரிய குழந்தைகள். நமக்குள் எந்த அசுர அவகுணமும் இருக்கக்கூடாது. நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. இதில் தவறுகள் எதுவும் செய்யக்கூடாது. மறக்கக்கூடாது. பாபா நம்முன் அமர்ந்திருக்கிறார் என்பதைப் பார்க்கிறீர்கள். நாம் அவருடைய குழந்தைகள். நாம் ஈஸ்வர் தந்தையிடம் தெய்வீக குழந்தையாவதற்காக படித்துக் கொண்டு இருக்கிறோம் என்றால் எவ்வளவு குஷியிருக்க வேண்டும். என்னை நினைத்தால் விகர்மங்கள் அழிந்துபோகும் என்று பாபா கூறுகின்றார். தந்தை அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். எவ்வளவுக்கு எவ்வளவு நினைவு செய்கிறீர்களோ அவ்வளவு விகர்மங்கள் அழியும். அறியாமையில் கன்னிகைகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது என்றால், அந்த நினைவு முற்றிலும் பதிந்து விடுகிறது. குழந்தை பிறந்தது என்றால் அந்த நினைவும் பதிகிறது. இந்த நினைவோ சொர்க்கத்திலும் பதிகிறது, நரகத்திலும் பதிவாகிறது. குழந்தை இது என்னுடைய தந்தை என்று கூறும். இப்பொழுது இவரோ எல்லையற்ற தந்தை ஆவார். அவரிடமிருந்து சொர்க்கத்தின் சொத்து கிடைக்கிறது என்றால், அவருடைய நினைவு பதிய வேண்டும். தந்தையிடமிருந்து நாம் எதிர்கால 21 பிறவிகளுக்கு மீண்டும் சொத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம். புத்தியில் சொத்து நினைவு இருக்க வேண்டும்.

அனைவரும் இறக்கத்தான் வேண்டும் என்பதை அறிகிறீர்கள். ஒருவர் கூட இருக்க முடியாது. யார் எவ்வளவு அன்பிலும் அன்பானவராக இருந்தாலும் அனைவரும் சென்று விடுவார்கள். இந்த பழைய உலகம் இப்பொழுது முடிந்து விட்டது என்பதை பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் அறிகிறீர்கள். அது அழிவதற்கு முன்பாக முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வரிய குழந்தையாக ஆகிவிட்ட பிறகு அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். குழந்தைகளே ! உங்களுடைய வாழ்க்கையை வைரம் போன்று மாற்றிக் கொள்ளுங்கள் என பாபா கூறிக் கொண்டு இருக்கிறார். அது தெய்வீக உலகம் ஆகும். இது அசுர உலகம் ஆகும். சத்யுகத் தில் அளவற்ற சுகம் இருக்கிறது. அதை பாபா தான் கொடுக்கிறார். இங்கே நீங்கள் பாபாவிடம் வந்திருக்கிறீர்கள். இங்கேயே அமர்ந்து கொள்ள முடியாது. அனைவரும் ஒன்றாக இருப்போம். ஏனென்றால், எல்லை யற்ற குழந்தைகள் தான் என்றாலும் முடியாது. இங்கே நீங்கள் மிகவும் உற்சாகத்தோடு வருகிறீர் கள். நாம் எல்லையற்ற தந்தையிடம் செல்கிறோம். நாம் ஈஸ்வரிய குழந்தைகள், இறை தந்தை யின் குழந்தைகள் என்றால் நாம் ஏன் சொர்க்கத்திற்குச் செல்லக் கூடாது. இறை தந்தை சொர்க்கத்தைப் படைக்கிறார் அல்லவா? இப்பொழுது முழு உலகத்தின் வரலாறு புவியியல் உங்கள் புத்தியில் நிறைந்துள்ளது. சொர்க்கத்தின் தந்தை நம்மை சொர்க்கத்திற்குத் தகுதியடைய வைக்கிறார் என்பதை அறிகிறீர்கள். ஒவ்வொரு கல்பத்திற்குப் பிறகும் மாற்றுகிறார். ஒருவருக்குக் கூட நாம் நடிகர்கள் என்பது தெரியவில்லை. இறை தந்தையின் குழந்தைகள் என்றால் நாம் ஏன் துக்கப்பட வேண்டும். தங்களுக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். ஆத்மாக்கள் நாம் அனைவரும் சகோதரர்கள் அல்லவா? சகோதரர்கள் தங்களுக்குள் எப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்! சண்டையிட்டுக் கொண்டு அழிந்து போவார்கள். இங்கே நாம் தந்தையிடமிருந்து சொத்தை அடைந்து கொண்டு இருக்கிறோம். சகோதரர்கள் தங்களுக்குள் ஒரு போதும் உப்புத் தண்ணீராக இருக்கக் கூடாது. இங்கேயோ தந்தையிடம் கூட உப்புத் தண்ணீராக இருக்கிறார்கள். நல்ல நல்ல குழந்தைகள் கூட உப்புத் தண்ணீராக இருக்கிறார்கள். மாயா எவ்வளவு வலிமை யானது. நல்ல நல்ல குழந்தைகளின் நினைவு பாபாவிற்கு வருகிறதல்லவா? பாபாவிற்கு குழந்தை கள் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது! பாபாவிற்கு குழந்தைகளைத் தவிர நினைப்பதற்கு வேறு யாரும் இல்லை. உங்களுக்கோ பலர் இருக்கிறார்கள். உங்களுடைய புத்தி இங்கு அங்கு சென்று கொண்டு இருக்கிறது. வேலை, தொழில்களிலும் புத்தி செல்கிறது. எனக்கோ எந்த வேலையும் கிடையாது. நீங்கள் பல குழந்தைகள். உங்களுக்கு பல வேலைகள் உள்ளன. எனக்கோ ஒரு வேலை தான் இருக்கிறது. நான் வந்திருப்பதே குழந்தைகளை சொர்க்கத்தின் வாரிசாக மாற்று வதற்காகும். எல்லையற்ற தந்தையின் சொத்து குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே ! இறை தந்தை அல்லவா? அனைத்து ஆத்மாக்களும் அவருடைய சொத்தாகும். மாயை சீ சீ ஆக்கி விட்டது. இப்போது பாபா ரோஜா மலர்களாக மாற்றுகிறார். எனக்கு நீங்கள் மட்டும் தான் என பாபா கூறுகின்றார். உங்கள் மீது எனக்கு பற்று இருக்கிறது. கடிதம் இல்லை என்றால் கவலை ஏற்படுகிறது. நல்ல நல்ல குழந்தைகளின் கடிதங்கள் வருவதில்லை. நல்ல நல்ல குழந்தைகளை ஒரேயடியாக மாயை அழிக்கிறது. நிச்சயம் தேக உணர்வு ஆகும். தங்களுடைய நலத்தைப் பற்றி எழுதுங்கள் என்று பாபா கூறிக் கொண்டே இருக்கிறார். குழந்தைகளே ! உங்களை மாயை வீழ்த்த வில்லையா என குழந்தைகளிடம் பாபா கேட்கிறார். பராக்கிரமசாலியாகி மாயையிடம் வெற்றி அடைந்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் யுத்த மைதானத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? கர்மேந்திரியங்கள் சஞ்சலம் அடையாத அளவிற்கு வசப்படுத்த வேண்டும். சத்யுகத்தில் அனைத்து கர்மேந்திரி யங்களும் வசத்தில் இருக்கிறது. எந்த கர்மேந்திரியத்தின் சஞ்சலமும் ஏற்படுவதில்லை. வாயினாலும் இல்லை, கையினாலும் இல்லை, காதினாலும் இல்லை...... எந்த சஞ்சலத்தின் விஷயமும் கிடயாது. அங்கே எந்த அழுக்கான விஷயமும் கிடையாது. இங்கே யோக பலத்தினால் கர்மேந்திரியங்களை வெற்றி அடைய வேண்டும். எந்த ஒரு அழுக்கான விஷயமும் கிடையாது என பாபா கூறுகின்றார். கர்மேந்திரியங்களை வசப்படுத்த வேண்டும். நன்கு முயற்சி செய்ய வேண்டும். நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. நிறைய காலம் சென்று விட்டது. மிகக் குறைவாகவே இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. இப்பொழுது சிறிது தான் இருக்கிறது. புதிய கட்டிடம் கட்டும் பொழுது இன்னும் சிறிது நேரம் தான் இருக்கிறது என புத்தியில் இருக்கிறதல்லவா? இப்பொழுது இது தயாராகிவிடும், இன்னும் சிறிது வேலை இருக்கிறது. அது எல்லைக்குட்பட்ட விஷயம் ஆகும். இது எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம் ஆகும். அவர்களுடையது விஞ்ஞானத்தின் பலம், உங்களுடையது அமைதியின் பலம் என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடையதும் புத்தி பலம் தான், உங்களுடையதும் புத்தி பலம் தான். விஞ்ஞானத்தில் எவ்வளவு கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே யிருக்கிறது. இப்போதோ எங்கேயோ அமர்ந்து கொண்டே கூட நகரத்தையே அழித்துவிடக்கூடிய அணுகுண்டுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பிறகு இந்த படைகள், விமானங்கள் போன்றவைகள் கூட பயன்படாது. அது தான் விஞ்ஞானத்தின் புத்தி. உங்களுடையது அமைதியின் புத்தி. அவை அழிவிற்கு நிமித்தமாக இருக்கிறது. நீங்கள் அழிவற்ற பதவியைப் பெறுவதற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள். இதைக் கூட புரிந்து கொள்ள புத்தி வேண்டும்.

பாபா எவ்வளவு எளிதான வழியைத் தெரிவிக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள் கிறீர்கள். எவ்வளவு தான் அகில்யாக்களாகவும், கூப்ஜாக்களாக இருந்தாலும் சரி, தந்தை ஆஸ்தி என்ற இரண்டு வார்த்தை களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் போதும் ! பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் நினைக்கட்டும். மற்ற சங்கத்தை விட்டு விட்டு ஒரு தந்தையை நினைக்க வேண்டும். நாம் பரந்தாமத்தில் இருந்தபோது பக்தி மார்க்கத்தில் பாபா தாங்கள் வந்துவிட்டால் தங்களிடம் நாங்கள் அனைவரும் சரணடைந்து விடுவோம் என்று அழைத்தீர்கள் என பாபா கூறுகின்றார். இது வெட்டியான், வெட்டியானுக்கு பழைய பொருளைக் கொடுப்பதைப் போன்று ஆகும். நீங்கள் பாபாவிற்கு என்ன கொடுப்பீர்கள். இவருக்கு (பிரம்மா) கொடுப்பதில்லை அல்லவா? இவரே அனைத்தையும் கொடுத்துவிட்டார். இவர் இங்கே உட்கார்ந்து மாளிகையைக் கட்ட முடியாது. இது அனைத்தும் சிவபாபாவிற்கு ஆகும். அவருடைய வழிப்படி செய்து கொண்டு இருக்கிறார். அவர் செய்விக்கக் கூடியவர் டைரக்ஷன் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். குழந்தைகள் பாபா எங்களுக்கு நீங்கள் ஒருவரே, தங்களுக்கோ நிறைய குழந்தைகள் இருக்கிறார் கள் என்று கூறுகின்றார்கள். எனக்கு குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே என பாபா கூறுகின்றார். உங்களுக்கோ பலர் இருக்கிறார்கள். எவ்வளவு தேக சம்பந்தமானவர்களின் நினைவு இருக்கிறது. இனிமையிலும் இனிமையாக குழந்தைகளே ! எவ்வளவு முடியுமோ தந்தையை நினையுங்கள், மற்ற அனைவரையும் மறந்து கொண்டே செல்லுங்கள் என பாபா கூறுகின்றார். சொர்க்கத்தில் இராஜ்ய பதவி என்ற வெண்ணெய் உங்களுக்கு கிடைக்கிறது. சிறிது சிந்தியுங்கள் இந்த விளையாட்டு எப்படிப் படைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் பாபாவை மட்டும் நினைக்கிறீர்கள். மேலும் சுயதர்ஷன சக்கரதாரி ஆவதால் சக்ரவர்த்தி இராஜா ஆகிறீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நடைமுறையில் அனுபவம் அடைந்துள்ளீர்கள். பக்தி பரம்பரையாக நடந்து கொண்டு வந்தது என மனிதர்கள் நினைக்கிறார்கள். விகாரங்கள் பரம்பரையாக வந்திருக்கிறது. நாம் லட்சுமி நாராயணன், இராதை கிருஷ்ணரின் குழந்தைகளாக இருந்தோம் அல்லவா?. அட, ஆம் ஏன் குழந்தைகளாக இருந்திருக்க மாட்டோம். ஆனால் அவர்களுக்கு சம்பூர்ண நிர்விகாரி என்று பெயர். இங்கே சம்பூர்ண விகாரியாக இருக்கிறார்கள். ஒருவருக் கொருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு தந்தை ஸ்ரீ ஸ்ரீயின் ஸ்ரீமத் கிடைக்கிறது. உங்களை சிரேஷ்டமாக மாற்றுகிறார். பாபா சொல்வதை ஏற்க வில்லை என்றால் பிறகு மாறவே முடியாது. இப்பொழுது ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளுங் கள், ஏற்றுக் கொள்ளாமலும் போங்கள். நல்ல குழந்தைகள் உடனே ஏற்றுக் கொள்வார்கள். முழுமையாக உதவி செய்யவில்லை என்றால், தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நான் கல்ப கல்பமாக வருகிறேன் என பாபா கூறுகின்றார். எவ்வளவு முயற்சி செய்விக்கிறேன். எவ்வளவு மகிழ்ச்சியில் கொண்டு வருகிறேன். தந்தையிடமிருந்து முழு சொத்தை அடைவதில் தான் மாயை தவறு செய்விக்கிறது. ஆனால் நீங்கள் அந்த வலையில் மாட்டிக் கொள்ளக்கூடாது. மாயையிடம் தான் சண்டை நடைபெறுகிறது. மிகப்பெரிய பெரிய புயல் வரும். அதிலும் வாரிசுகள் மீது மாயை நிறைய போரிடும். அதுவும் பலசாலிக்கு பலசாலியாகி போரிடும். வைத்தியர்கள் மருந்து கொடுக்கும் பொழுது நோய் அனைத்தும் வெளியே வருகிறது. இங்கேயும் என்னுடையவர் ஆகிவிட்டால் பிறகு அனைவரின் நினைவும் வரும். புயல் வரும். இதில் (புத்தியின்) லைன் தெளிவாக இருக்க வேண்டும். நாம் முதலில் தூய்மையாக இருந்தோம். பிறகு அரைக்கல்பமாக அசுத்தமாகி விட்டோம். இப்போது மீண்டும் திரும்பிப் போக வேண்டும். என்னை நினைத்தால் இந்த யோக அக்னியில் பாவங்கள் அழிந்து போகும் என பாபா கூறுகின்றார். எவ்வளவு நினைக்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவி பெறலாம். நினைக்க நினைக்க நீங்கள் வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். இதில் முற்றிலும் உள்நோக்குப் பார்வை வேண்டும். ஞானமும் ஆத்மாவில் தாரணை ஆகிறதல்லவா? ஆத்மா தான் படிக்கிறது. ஆத்மாவின் ஞானம் கூட பரமாத்மா பாபா தான் வந்து கொடுக்கிறார். உலகத்திற்கே அதிபதியாவதற்காக இவ்வளவு உயர்ந்த ஞானத்தை நீங்கள் எடுக்கிறீர்கள். நீங்கள் என்னை பதீத பாவனன், ஞானக்கடல், அமைதியின் கடல் என கூறு கின்றீர்கள். என்னிடம் என்ன இருக்கிறதோ அதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். மற்றபடி திவ்ய திருஷ்டியின் சாவியை மட்டும் கொடுப்பது இல்லை. அதற்குப் பதிலாக உங்களை உலகத்திற்கு அதிபதியாக மாற்றுகின்றேன். சாட்சாத்காரத்தில் எதுவும் இல்லை. முக்கியமானது படிப்பாகும். படித்து விட்டால் பிறகு என்ன இருக்கிறது? பக்தியின் மாலை தனியாகும். ஞான மாலை தனியாகும். இராவணனின் இராஜ்யம் தனி உங்களுடைய இராஜ்ஜியம் தனி, அதற்கு பகல், இதற்கு இரவு என்று கூறப்படுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நினைவு பலத்தினால் தங்களுடைய கர்மேந்திரியங்களை எந்த சஞ்சலமும் அடையாத அளவிற்கு வசப்படுத்த வேண்டும். நேரம் மிகக்குறைவாக இருக்கிறது. ஆகவே நன்கு முயற்சி செய்து மாயாஜீத் ஆக வேண்டும்.

2. பாபா கொடுக்கின்ற ஞானத்தை உள்நோக்கு பார்வை உடையவராகி தாரணை செய்ய வேண்டும். ஒருபோதும் உங்களுக்குள் உப்புத் தண்ணீராக இருக்க கூடாது. பாபாவிற்கு தன்னுடைய நலத்தைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும்.

வரதானம்:
கல்யாணகாரி (நன்மைபயக்கும்) உணர்வினால் சேவை செய்யக்கூடிய அனைத்து ஆத்மாக்களின் ஆசீர்வாதங்களின் அதிகாரி ஆகுக.

கல்யாணக்காரி விருத்தி மூலமாக சேவை செய்வது - இது அனைத்து ஆத்மாக்களின் ஆசீர்வாதங்களைப் அடைய வைக்கும் சாதனமாகும். விஷ்வ கல்யாணகாரி என்ற இலட்சியம் இருக்கும்போது அமங்கல காரியம் இருக்க முடியாது. எப்படி காரியமோ அப்படி தனது தாரணை இருக்கும். இந்த காரியம் சதா நினைவில் இருந்தால் சதா இரக்க உள்ளம், சதா மகாதானியாக இருப்பார்கள். ஒவ்வொரு அடியிலும் கல்யாணகாரி விருத்தியுடன் செல்வார்கள், நான் என்பது வராது, பொறுப்புணர்வு நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட சேவாதாரிக்கு கைமாறாக அனைத்து ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தின் அதிகாரமும் கிடைத்துவிடும்.

சுலோகன்:
சாதனங்களின் கவர்ச்சி சாதனையை துண்டித்துவிடுகின்றது.

அவ்யக்த பிரேரணை - ஆத்மிக ஸ்திதியில் இருக்கும் பயிற்சி செய்யுங்கள், அந்தர்முகி (உள்நோக்குமுகம்) ஆகுங்கள்.

அந்தமுகி ஆத்மாக்கள் மூன்று விதமான பாஷையின் அனுபவியாக இருக்கின்றார்கள். 1. கண்களின் பாஷை, 2. பாவனையின் பாஷை 3. சங்கல்பத்தின் பாஷை. இந்த மூன்று விதமான பாஷைகள் ஆன்மிக யோகி வாழ்க்கையின் பாஷைகளாகும், எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அந்தர்முகி இனிமையான சைலன்ஸ் ஸ்திதியில் நிலைத்திருக்கின்றீர்களோ அவ்வளவு இந்த மூன்று பாஷைகளின் மூலம் அனைத்து ஆத்மாக்களையும் அனுபவம் செய்விக்க முடியும். இப்பொழுது இந்த ஆன்மிக பாஷையின் பயிற்சி செய்பவராகுங்கள்.