இனிமையான குழந்தைகளே! இப்பொழுது பிடி
அளவு கொண்டைக் கடலைக்குப் (உலகீய வருமானம்) பின்னால் தனது
நேரத்தை வீணாக்காதீர்கள். இப்பொழுது தந்தையின் உதவியாளர்களாக
ஆகி, தந்தையின் பெயரை வெளிப்படுத்துங்கள். (விசேஷமாக
குமாரிகளுக்காக)
கேள்வி:
இந்த ஞான மார்க்கத்தில் உங்களது
பாதம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அதன் அடையாளம் என்ன?
பதில்:
புத்தியில் சாந்திதாமம் மற்றும்
சுகதாமத்தின் நினைவு சதா இருந்தால், நினைவு செய்யும் நேரத்தில்
புத்தி எங்கும் அலையவில்லையெனில், புத்தியில் வீண் சிந்தனைகள்
வரவில்லை யெனில், புத்தி ஒருமுகத்துடன் இருக்கின்றதெனில்,
வகுப்பில் கொட்டாவி வரவில்லையெனில், குஷியின் அளவு அதிகரித்துக்
கொண்டிருந்தால் இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது ஞான மார்க்கத்தில்
உங்களது பாதம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
ஓம் சாந்தி.
குழந்தைகள் இவ்வளவு நேரம் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். நாம்
சிவாலயத் தில் அமர்ந்திருக் கின்றோம் என்று உள்ளத்தில்
நினைக்கின்றீர்கள். சிவபாபாவும் நினைவிற்கு வந்து விடுகின்றது,
சொர்க்கத்தின் நினைவும் வந்து விடுகின்றது. நினைவின் மூலம் தான்
சுகம் கிடைக்கின்றது. நாம் சிவாலயத்தில் அமர்ந்திருக் கின்றோம்
என்ற நினைவு புத்தியில் இருந்தால் குஷி ஏற்படும். கடைசியில்
அனைவரும் சிவாலயத்திற்குச் சென்றே ஆக வேண்டும். சாந்தி
தாமத்திலேயே யாரும் அமர்ந்து விட முடியாது. உண்மையில்
சாந்திதாமத்தையும் சிவாலயம் என்று கூறுகின்றோம். சுகதாமத்தையும்
சிவாலயம் என்று கூறுகின்றோம். ஏனெனில் அதனையும் தந்தை தான்
ஸ்தாபனை செய்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இரண்டையும் நினைவு
செய்ய வேண்டும். அந்த சிவாலயமானது அமைதிக்காக மற்றும் இந்த
சிவாலயமானது சுகத்திற்காக. இது துக்கதாமம் ஆகும். இப்பொழுது
நீங்கள் சங்கமத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். சாந்திதாமம்
மற்றும் சுகதாமத்தைத் தவிர வேறு எந்த நினைவும் இருக்கக் கூடாது.
எங்கு வேண்டுமென்றாலும் அமர்ந்திருக்கலாம், தொழில் போன்ற
இடங்களில் அமர்ந்திருந்தாலும் புத்தியில் இரண்டு சிவாலயத்தின்
நினைவும் வர வேண்டும். துக்கதாமத்தை மறந்து விட வேண்டும். இது
வைஷ்யாலயம் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள்,
துக்கதாமம் இப்பொழுது அழிய வேண்டும்.
இங்கு அமர்ந்திருக்கும் பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு
கொட்டாவி போன்றவை வரக் கூடாது. பலரது புத்தியானது எங்கெங்கேயோ
வேறு பக்கம் சென்று விடுகின்றது. மாயையின் தடைகள் ஏற்படுகின்றது.
குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை அடிக்கடி கூறுகின்றார் -
குழந்தைகளே! மன்மனாபவ. வித விதமான யுக்திகளைக் கூறுகின்றார்.
இங்கு அமர்ந்திருந்தாலும் நாம் முதலில் சாந்திதாமம்
சிவாலயத்திற்குச் செல்வோம், பிறகு சுகதாமத்திற்கு வருவோம்
என்பதை புத்தியில் நினைவு செய்யுங்கள். இவ்வாறு நினைவு செய்வதன்
மூலம் பாவங்கள் அழிந்து கொண்டேயிருக்கும். எந்த அளவிற்கு
நீங்கள் நினைவு செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு பாதங்கள்
முன்னேறுகின்றன. இங்கு வேறு எந்த எண்ணங்களுடனும் அமரக் கூடாது.
இல்லை யெனில் நீங்கள் மற்றவர்களுக்கு நஷ்டத்தை
ஏற்படுத்துகின்றீர்கள். இலாபத்திற்குப் பதிலாக மேலும் நஷ்டத்தை
உருவாக்குகின்றீர்கள். முன்பு நினைவில் அமர்கின்றபொழுது யார்
கொட்டாவி விடுகின்றனர்? யார் கண்களை மூடி அமர்ந்திருக்கின்றனர்?
என்பதை சோதிப்பற்கு எதிரில் அமர வைத்தனர், அதனால் அப்பொழுது
மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். இவரது புத்தியானது எங்கு
அலைகின்றது? கொட்டாவி விடுகின்றாரா என்ன? என்பதை தந்தையும்
பார்க்கின்றார். எதையும் புரிந்து கொள்ளாதவர்களும் அதிகமாக
வருகின்றனர், பிராமணிகள் அழைத்து வருகின்றனர். சிவபாபாவின் முன்
குழந்தைகள் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். தவறுகள் செய்யாத
வர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர் சாதாரண ஆசிரியர் அல்ல.
தந்தை வந்து புரிய வைக்கின்றார், இங்கு மிகவும் கவனத்துடன் அமர
வேண்டும். பாபா 15 நிமிடங்களுக்கு அமைதியாக அமர வைக்கின்றார்.
நீங்கள் ஒரு மணிநேரம், 2 மணி நேரத்திற்கு அமருகின்றீர்கள்.
அனைவரும் மகாரதிகள் கிடையாது. பக்குவமடையாதவர்களுக்கு
எச்சரிக்கை கொடுக்க வேண்டும். எச்சரிக்கை செய்வதன் மூலம்
தேர்ந்தவர்களாக ஆகிவிடுவார்கள். யார் நினைவில் இல்லையோ, வீண்
எண்ணங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனரோ அவர்கள் தடைகளை
ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றனர். ஏனெனில் புத்தி எங்கேயாவது
அலைந்து கொண்டே இருக்கின்றது. மகாரதி, குதிரைப் படை, காலாட்படை
அனைவரும் அமர்ந்திருக்கின்றனர்.
பாபா இன்று ஞானச் சிந்தனை செய்து வந்திருக்கின்றார் -
மியூசியம் அதாவது கண்காட்சிகளில் குழந்தைகளாகிய நீங்கள்
சிவாலயம், வைஷ்யாலயம் மற்றும் புருஷோத்தம சங்கமயுகம் மூன்றையும்
கூறுகின்றீர்கள். இது புரிய வைப்பதற்கு மிகவும் நல்ல
விசயங்களாகும். இதனை மிகவும் பெரிது பெரிதாக உருவாக்க வேண்டும்.
மனிதர்களின் புத்தியில் பதியச் செய்வதற்காக இதற்கு மிகப் பெரிய
ஹால் இருக்க வேண்டும். இதில் நாம் எவ்வாறு மாற்றம் கொண்டு
வருவது? என்பது போன்ற சிந்தனைகள் குழந்தைகள் செய்ய வேண்டும்.
புருஷோத்தம சங்கமயுகத்தை மிகவும் நன்றாக உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் மனிதர்களுக்கு மிக நல்ல அறிவு கிடைக்கும். 5-6
பேரையும் தபஸ்யாவில் அமரச் செய்கின்றீர்கள். ஆனால் 10-15 பேரை
தபஸ்யாவில் அமரச் செய்ய வேண்டும். பெரிய பெரிய சித்திரங்களை
உருவாக்கி தெளிவான வார்த்தைகள் எழுத வேண்டும். நீங்கள் எவ்வளவு
தான் புரிய வைத்தாலும் புரிந்து கொள்வதே கிடையாது. புரிய
வைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள், கல் புத்தியல்லவா!
ஆக எவ்வளவு முடியுமோ நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும்.
சேவையில் இருக்கக் கூடியவர்கள் சேவையை அதிகப்படுத்துவதற்காக
சிந்திக்க வேண்டும். மியூசியத்தில் உள்ள மகிழ்ச்சி புரொஜக்டர்,
கண்காட்சிகளில் கிடையாது. புரொஜக்டரின் மூலம் எதையும் புரிந்து
கொள்வதே கிடையாது. அனைத்தையும் விட மிகச் சிறந்தது மியூசியம்
ஆகும். சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு அறையில் சிவாலயம்,
வைஷ்யாலயம் மற்றும் புருஷோத்தம சங்கமயுகத் தின் காட்சி இருக்க
வேண்டும். புரிய வைப்பதற்கு மிகவும் விசால புத்தியிருக்க
வேண்டும். எல்லையற்ற தந்தை, எல்லையற்ற ஆசிரியர்
வந்திருக்கின்றார் எனில் குழந்தைகள் எம்.ஏ., பி.ஏ.
தேர்ச்சியடைய வேண்டும் என்று அமர்ந்து விட மாட்டார்கள். தந்தை
சதா அமர்ந்திருக்க மாட்டார். சிறிது காலத்தில் சென்று விடுவார்.
குறுகிய காலம் தான் இருக்கின்றது என்றாலும் விழிப் படைவது
கிடையாது. நான்கு அல்லது ஐநூறு ரூபாய்காக ஏன் தனது நேரத்தை
வீணாக்க வேண்டும், பிறகு நாம் சிவாலயத்தில் என்ன பதவியை அடைவோம்?
என்று நல்ல நல்ல குழந்தைகளாக இருக்கக் கூடியவர்கள் கூறுவர்.
குமாரிகள் ஓய்வாக (எழ்ங்ங்) இருப்பதை பாபா பார்க்கின்றார்.
எவ்வளவு தான் மிகப் பெரிய ஊதியமாக இருந்தாலும், இது பிடியளவு
கொண்டைக் கடலைப் போன்றதாகும். இவையனைத்தும் அழிந்து விடும்.
எதுவும் இருக்காது. பிடியளவு கொண்டைக் கடலையிலிருந்து
விடுவிப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். ஆனால் விடுவதே
கிடையாது. அதில் பிடியளவு கொண்டைக்கடலை, இதில் உலக சக்கரவர்த்தி.
அது எதற்கும் உதவாத கொண்டைக்கடலையாகும், அதற்குப் பின்னால்
எவ்வளவு துக்கமடைகின்றனர். குமாரிகள் ஓய்வாக இருக்கின்றனர்.
அந்த படிப்பும் பைசாவிற்கும் உதவாததாகும். அதனை விட்டு விட்டு
இந்த ஞானத்தைப் படித்துக் கொண்டிருந்தால் புத்தி திறக்கும்.
இவ்வாறு சிறிய சிறிய குமாரிகள் சிவாலயத்தை ஸ்தாபனை செய்வதற்காக
தந்தை வந்திருக்கின்றார் என்று பெரியவர் களுக்கு ஞானம் கொடுக்க
வேண்டும். இங்கிருக்கும் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும்
என்பதை அறிந்திருக்கின்றீர்கள். இந்த கொண்டைக் கடலையும்
அதிஷ்டத்தில் வராது. சிலரிடத் தில் 5 கொண்டைக் கடலை அதாவது 5
லட்சம் இருக்கும். அதுவும் அழிந்து விடும். இப்பொழுது குறுகிய
காலம் தான் இருக்கின்றது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்
கொண்டே செல்கின்றது. திடீரென்று ஆபத்துக்கள் வந்து விடுகின்றன.
மரணமும் திடீரென்று ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. பிடியளவு
கொண்டைக் கடலை இருந்தும் உயிர் பிரிந்து விடுகின்றது. ஆக
மனிதர்களை இந்த குரங்குத் தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.
மியூசியத்தைப் பார்த்து மட்டும் சந்தோஷமடைந்து விடக் கூடாது,
அதிசயம் செய்து காண்பிக்க வேண்டும். மனிதர்களை விழிப்படையச்
செய்ய வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உலக
இராஜ்யத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். மற்றபடி யாருடைய
அதிஷ்டத்திலும் கொண்டைக் கடலை சேராது. அனைத்தும் அழிந்து விடும்.
ஆக இதனை விடுத்து நாம் ஏன் தந்தையிடமிருந்து ராஜ்ஜியத்தை அடையக்
கூடாது. எந்த கஷ்டத்திற்கான விசயமும் கிடையாது. தந்தையை நினைவு
செய்ய வேண்டும் மற்றும் சுயதரிசன சக்கரத்தை சுற்ற வேண்டும்.
கையிலுள்ள கொண்டைக் கடலையை நீக்கி விட்டு வைர வைடூரியங்களை
கைகளில் நிறைத்துக் கொள்ள வேண்டும்.
தந்தை புரிய வைக்கின்றார் - இனிய குழந்தைகளே! இந்த பிடியளவு
கொண்டைக் கடலைக்குப் பின்னால் நீங்கள் ஏன் தங்களது நேரத்தை
வீணாக்குகின்றீர்கள்? ஆம், வயோதிகர் களாக இருக்கின்றனர்,
குழந்தைகள் அதிகமாக உள்ளனர் எனில், அவர்களை வளர்க்க வேண்டி
யிருக்கின்றது. குமாரிகளுக்கு மிகவும் எளிதாகும். தந்தை நமக்கு
இந்த இராஜ்யத்தை கொடுக் கின்றார் என்பதை யார் வந்தாலும் புரிய
வைக்க வேண்டும். ஆக ராஜ்ஜியத்தை அடைய வேண்டு மல்லவா! இப்பொழுது
உங்களது கைகள் வைரங்களினால் நிறைந்து கொண்டிருக்கின்றது. மற்ற
அனைத்தும் விநாசம் ஆகிவிடும். நீங்கள் 63 பிறவிகளாக பாவம்
செய்தீர்கள். தந்தை மற்றும் தேவதைகளுக்கு நிந்தனை செய்வது
மற்றொரு பாவமாகும். விகாரிகளாகவும் ஆனீர்கள் மற்றும் திட்டவும்
செய்தீர்கள். தந்தைக்கு எவ்வளவு நிந்தனை செய்தீர்கள்! தந்தை
குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! நேரத்தை
வீணாக்கக் கூடாது. பாபா, எங்களால் நினைவு செய்ய முடியவில்லை
என்று கூறாதீர்கள். பாபா, என்னால் ஆத்மா என்று நினைவு செய்ய
முடிய வில்லை என்று கூறுங்கள். தன்னை மறந்து விடுகின்றீர்கள்.
தேகாபிமானத்தில் வருகின்றோ மெனில், தன்னை மறந்து விடுகின்றோம்.
தன்னை ஆத்மா என்று நினைக்க முடியவில்லை யெனில், பிறகு தந்தையை
எப்படி நினைப்பீர்கள்? மிகப் பெரிய இலட்சியமாகும். மிகவும்
எளிமையானதாகவும் இருக்கின்றது. மற்றபடி மாயையின் எதிர்ப்பு
இருக்கின்றது.
மனிதர்கள் கீதை போன்றவற்றை படிக்கின்றனர். ஆனால் எந்த
பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. பாரதத்திற்கு
முக்கியமானது கீதையாகும். ஒவ்வொரு தர்மத்திற்கும் தனித்தனியான
சாஸ்திரம் இருக்கின்றது. தர்மத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர்களை
சத்குரு என்று கூற முடியாது. இது மிகப் பெரிய தவறாகும்.
சத்குருவானவர் ஒரே ஒருவரே. மற்றபடி குரு என்று கூறிக் கொள்ளக்
கூடியவர்கள் பலர் உள்ளனர். யாராவது தச்சுத் தொழிலை கற்றுக்
கொடுக்கின்றார் எனில், யாராவது இன்ஜினியரிங் தொழில் கற்றுக்
கொடுக்கின்றார் எனில், அவர்களும் குருவாக ஆகி விட்டனர். கற்றுக்
கொடுக்கும் ஒவ்வொருவரும் குருவாக இருக்கின்றனர், சத்குரு ஒரே
ஒருவர். இப்பொழுது உங்களுக்கு சத்குரு கிடைத்திருக்கின்றார்.
அவர் சத்திய தந்தையாகவும் இருக்கின்றார், சத்திய ஆசிரியராகவும்
இருக்கின்றார். ஆகையால் குழந்தை கள் அதிக தவறுகளை செய்யக்
கூடாது. இங்கிருந்து மிகவும் நல்ல முறையில் புத்துணர்வு அடைந்து
செல்கின்றீர்கள், பிறகு வீட்டிற்குச் சென்றதும் இங்கிருக்கும்
அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள். கர்ப்பச் சிறையில் அதிக
தண்டனைகள் கிடைக்கின்றது. அங்கு கர்ப்ப மாளிகை இருக்கும்.
தண்டனை அடையும் அளவிற்கு எந்த விகர்மமும் ஏற்படாது. தந்தையின்
எதிரில் நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் நினைக்கின்றீர்கள். வெளியில் தங்களது
வீட்டில் இவ்வாறு கூறமாட்டீர்கள். சகோதரர் படிப்பிக்கின்றார்
என்று அங்கு நினைக் கின்றீர்கள். இங்கு தந்தையிடத்தில்
நேரடியாக வந்திருக்கின்றீர்கள். தந்தை குழந்தைகளுக்கு மிகவும்
நல்ல முறையில் புரிய வைக்கின்றார். தந்தை புரிய வைப்பதற்கும்,
குழந்தைகள் புரிய வைப்பதற்கும் வித்தியாசம் ஏற்பட்டு
விடுகின்றது. குழந்தைகளுக்கு தந்தை எச்சரிக்கை செய்கின்றார்.
குழந்தைகளே, குழந்தைகளே என்று கூறி புரிய வைக்கின்றார். நீங்கள்
சிவாலயம், வைஷ்யாலயத்தைப் புரிந்திருக்கின்றீர்கள், எல்லையற்ற
விசயமாகும். இதனை தெளிவுபடுத்திக் காண்பிக்கும் பொழுது
மனிதர்களுக்கு சிறிதாவது மகிழ்ச்சி வரும். அங்கு மேலோட்டமாகப்
புரிய வைக்கின்றீர்கள், சீரியசாக புரிய வைக்கின்ற பொழுது நல்ல
முறையில் புரிந்து கொள்வார்கள். தன் மீது கருணை காட்டுங்கள்,
இந்த வைஷ்யாலத்திலேயே இருக்க வேண்டுமா என்ன? எப்படி யெல்லாம்
புரிய வைப்பது? என்று பாபாவிற்கு எண்ணங்கள் ஓடுகின்றதல்லவா!
குழந்தைகள் எவ்வளவோ முயற்சி செய்கின்றனர், இருப்பினும்
மூடியிருக்கும் டப்பாவில் உள்ள பொருள் போன்று இருக்கின்றனர்.
சரியானது, சரியானது என்று கூறிவிட்டுச் செல்கின்றனர். மிகவும்
நன்றாக இருக்கின்றது, ஊரில் உள்ளவர்களுக்கு புரிய வைக்க
வேண்டும் என்றும் கூறுகின்றனர். சுயம் புரிந்து கொள்வது
கிடையாது. செல்வந்தர்கள், பணம் படைத்தவர்கள் புரிந்து கொள்ளவே
மாட்டார்கள். முற்றிலும் கவனம் கொடுக்கமாட்டார்கள். அவர்கள்
கடைசியில் வருவார்கள், பிறகு மிகவும் தாமதம் (பர் ப்ஹற்ங்)
ஆகிவிடும். அவர்கள் செல்வமும் காரியத்திற்குப் பயன்படாது,
யோகாவிலும் இருக்க முடியாது. மற்றபடி கேட்பதன் மூலம் பிரஜைகளாக
வந்து விடுவர். ஏழைகள் மிகவும் உயர்ந்த பதவியை அடைய முடியும்.
கன்னிகளாகிய உங்களிடத்தில் என்ன இருக்கின்றது? கன்னியாவை ஏழை
என்று கூறப்படுகின்றது. ஏனெனில் தந்தையின் ஆஸ்தியானது ஆண்
குழந்தைகளுக்குத் தான் கிடைக்கின்றது. மற்றபடி கன்னியாதானம்
கொடுக்கப்படுகின்றது. அப்பொழுது தான் விகாரத்திற்குச்
செல்கின்றனர். திருமணம் செய்து கொண்டால் பணம் கொடுப்பேன் என்று
கூறுவர். தூய்மையாக இருக்க வேண்டுமெனில் ஒரு பைசாவும் கொடுக்க
மாட்டேன். எவ்வாறெல்லாம் மனோ நிலை உள்ளது பாருங்கள்! நீங்கள்
யாருக்கும் பயப்படாதீர்கள். தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.
தைரியம் இருக்க வேண்டும். நீங்கள் முற்றிலும் உண்மையைக்
கூறுகின்றீர்கள். இது சங்கமயுகமாகும். அந்த பக்கம் கைப்பிடியளவு
கொண்டைக் கடலை, இந்தப்பக்கம் வைரங்கள் நிறைந்த கையாகும்.
இப்பொழுது நீங்கள் குரங்கிலிருந்து (பந்தர்) பூஜைக்குத் (மந்திர்)
தகுந்தவர்களாக ஆகின்றீர்கள். முயற்சி செய்து வைரம் போன்ற
வாழ்க்கையை அடைய வேண்டுமல்லவா! தோற்றமும் துணிச்சலான
சிம்மவாகினி போன்று இருக்க வேண்டும். சிலரது தோற்றம் கோழையான
ஆடு போன்று இருக்கின்றது. சிறு சப்தத்திலேயே பயந்து
விடுகின்றனர். ஆக அனைத்து குழந்தைகளுக்கும் தந்தை எச்சரிக்கை
கொடுக்கின்றார். கன்னியர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. மேலும்
பந்தனங்களில் மாட்டிக் கொண்டால் பிறகு விகாரத்திற்கான தண்டனை
அடைவீர்கள். ஞானத்தை நல்ல முறையில் தாரணை செய்தால் உலக
மகாராணியாக ஆவீர்கள். நான் உங்களுக்கு உலக இராஜ்யத்தைக்
கொடுப்பதற்காகவே வந்திருக்கின்றேன். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம்
இல்லை. தந்தை ஏழை பங்காளனாக இருக் கின்றார். கன்னிகைகள்
ஏழைகளாக இருக்கின்றனர். தாய் தந்தையினால் திருமணம் செய்விக்க
முடியவில்லையெனில் கொடுத்து விடுகின்றனர். ஆக, அவர்களுக்கு நஷா
அதிகரிக்க வேண்டும். நான் நல்ல முறையில் படித்து நல்ல பதவியை
அடைய வேண்டும். நல்ல மாணவர் களாக உள்ளவர்கள் நாம் நேர்மையுடன்
தேர்ச்சியடைய வேண்டுமென்பதற்காக படிப்பில் கவனம் செலுத்துவர்.
அவர்களுக்குத் தான் பிறகு உதவித் தொகை (நஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்)
கிடைக்கின்றது. எந்த அளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ அந்த
அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள், அதுவும் 21 பிறவிகளுக்கு.
இங்கு அற்பகால சுகம் இருக்கின்றது. இன்று ஏதாவது பதவி
கிடைக்கின்றது, நாளை மரணம் ஏற்பட்டு விட்டால் அவ்வளவு தான்.
யோகிக்கும் போகிக்கும் வித்தியாசம் இருக் கின்றதல்லவா! ஆக
ஏழைகளின் மீது அதிக கவனம் செலுத்துமாறு தந்தை கூறுகின்றார்.
செல்வந்தர்கள் ஏற்றுக் கொள்வது கடினமாகும். மிகவும் நன்றாக
இருக்கின்றது! இந்த இயக்கம் மிகவும் நல்லதாக இருக்கின்றது!
அதிகமானவர்களுக்கு நன்மை செய்யும் என்று மட்டுமே கூறுவர்.
தனக்கு எந்த நன்மையும் செய்து கொள்வது கிடையாது. மிகவும்
நன்றாக இருக்கின்றது என்று கூறி விட்டு வெளியில் சென்றதும்
அவ்வளவு தான். மாயை பெரிய தடியை வைத்துக் கொண்டு
காத்திருக்கின்றது. ஆர்வத்தையே மறைத்து விடுகின்றது. ஒரே ஒரு
அடியிலேயே அறிவை இழக்கச் செய்து விடுகின்றது. தந்தை புரிய
வைக்கின்றார் - பாரதத்தின் நிலை என்ன ஆகி விட்டது என்று
பாருங்கள்! குழந்தைகள் நாடகத்தைப் பற்றி நல்ல முறையில்
அறிந்திருக் கின்றீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தை
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.