20-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! தந்தையின் அன்பைப்
பெற வேண்டும் என்றால், ஆத்ம அபிமானி ஆகி (ஆத்ம உணர்வுடையவராக)
அமருங்கள். தந்தையிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியைப்
பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற இதே குஷியில் இருங்கள்.
கேள்வி:
சங்கமயுகத்தில் நீங்கள்
பிராமணரிலிருந்து ஃபரிஷ்தா ஆவதற்காக எந்த ஒரு மறைமுகமான உழைப்பு
செய்கிறீர்கள்?
பதில்:
பிராமணர்களாகிய நீங்கள்
தூய்மையாக ஆவதற்கான மறைமுகமான உழைப்பு (முயற்சி) செய்ய வேண்டி
உள்ளது. பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் சங்கமத்தில் சகோதர
சகோதரி கள் ஆவீர்கள். சகோதர சகோதரிகளிடையே அசுத்தமான பார்வை
இருக்க முடியாது. கணவன் மனைவி சேர்ந்து வசிக்கும் பொழுது கூட
தங்களை பி.கே. என்று உணர்கிறீர்கள். இந்த நினை வினால் நீங்கள்
முழுமையாக தூய்மை ஆனீர்கள் என்றால், பிறகு ஃபரிஷ்தா ஆக முடியும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தன்னை ஆத்மா என்று உணர்ந்து
இங்கு அமர வேண்டும். இந்த ரகசியத்தை குழந்தைகளாகிய நீங்களும்
புரிய வைக்க வேண்டும். ஆத்ம உணர்வு டையவராக ஆகி அமர்ந்தீர்கள்
என்றால், தந்தையிடம் அன்பு இருக்கும். பாபா நமக்கு இராஜயோகம்
கற்பிக்கிறார். பாபாவிடமிருந்து நாம் சொர்க்கத்தின் ஆஸ்தியை
எடுத்து கொண்டி ருக்கிறோம். இந்த நினைவு நாள் முழுவதும்
புத்தியில் இருக்க வேண்டும். இதில் தான் உழைப்பு (முயற்சி)
உள்ளது. இதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். அப்பொழுது குஷியின்
பிரகாசம் மங்கிப் போய் விடுகிறது. குழந்தைகளே ! ஆத்ம
உணர்வுடையவர்களாக ஆகி அமருங்கள் என்று பாபா எச்சரிக்கிறார்.
தன்னை ஆத்மா என்று உணருங்கள். இப்பொழுது ஆத்மாக்கள் மற்றும்
பரமாத்மாவின் (மேளா) சந்திப்பு ஆகும் அல்லவா? மேளா
நடந்திருந்தது. எப்பொழுது நடந்திருந்தது? அவசியம் கலியுகக்
கடைசி மற்றும் சத்யுக ஆரம்பத்திற்கு இடைபபட்ட சங்கமத் தில் தான்
நிகழ்ந்திருக்கக் கூடும். இன்று குழந்தைகளுக்கு தலைப்பு பற்றி
புரிய வைக்கிறார். நீங்கள் அவசியம் தலைப்பு தயாரிக்க வேண்டும்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். பிறகு கீழே வந்தீர்கள்
என்றால், பிரம்மா விஷ்ணு சங்கரர். தந்தை மற்றும் தேவதைகள்.
சிவன் மற்றும் பிரம்மா விஷ்ணு சங்கரருக்கிடையே என்ன சம்பந்தம்
உள்ளது என்பது மனிதர்களுக்குத் தெரியாது. யாருக்குமே
அவர்களுடைய வாழ்க்கை சரித்திரம் பற்றி தெரியாது.
திரிமூர்த்தியின் படம் பிரசித்தமானது. இந்த மூவரும் தேவதைகள்
ஆவார்கள். மூவருக்கு மட்டுமே ஒரு தர்மம் (மதம்) இருக்குமா என்ன?
தர்மமோ பெரியதாக இருக்கும். தேவதா தர்மம். இவர்கள் சூட்சும
வதனவாசி ஆவார்கள். மேலே இருப்பவர் சிவபாபா ஆவார்.
முக்கியமானவர்கள் பிரம்மா மற்றும் விஷ்ணு இப்பொழுது பிரம்மாவே
விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா எப்படி ஆகிறார்கள் என்ற தலைப்பை
நீங்கள் கொடுக்க வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். எப்படி
நீங்கள் கூறுகிறீர்கள் - நாங்கள் சூத்திரர்களே பிராமணர்கள்,
பிராமணர்களே தேவதைகள், அதே போல இவர்களுடையதும் ஆகும். முதன்
முதலில் பிரம்மாவே விஷ்ணு விஷ்ணுவே பிரம்மா. அவர்களோ ஆத்மாவே
பரமாத்மா, பரமாத்மாவே ஆத்மா என்பார்கள். இதுவோ தவறாகும்.
அவ்வாறு ஆகவும் முடியாது. எனவே இந்த டாபிக் (தலைப்பு) பற்றி
நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். ஒரு சிலர் பரமாத்மா
கிருஷ்ணரின் சரீரத்தில் வந்துள்ளார் என்று கூறுகிறார் கள். ஒரு
வேளை கிருஷ்ணருக்குள் வந்திருந்தார் என்றால், பிறகோ பிரம்மாவின்
பாகம் முடிந்து போய் விடுகிறது. கிருஷ்ணரோ சத்யுகத்தின் முதல்
இளவரசர் ஆவார். அங்கு கிருஷ்ணர் வந்து தூய்மைப்படுத்தும்
வகையில் பதீதமானவர்கள் (தூய்மையற்றவர்கள்) எவ்வாறு இருக்க
முடியும்? முற்றிலுமே தவறானதாகும். இந்த விஷயங்களைக் கூட மகாரதி
சர்விசபிள் (சேவை செய்யும்) குழந்தைகள் தான் புரிந்துள்ளார்கள்.
மற்றபடி யாருடைய புத்தியிலும் பதிவதே இல்லை. இந்த டாபிக்
தலைப்போ மிகவுமே (ஃபர்ஸ்ட் கிளாஸ்) முதல் தரமானது ஆகும்.
பிரம்மாவே விஷ்ணு, விஷ்ணுவே பிரம்மா எப்படி ஆகிறார்?.
அவர்களுடைய வாழ்க்கை சரித்திரம் பற்றிக் கூறுகிறார். ஏனெனில்,
இவர்களுடைய (கனெக்ஷன்) தொடர்பு இருக்கிறது. ஆரம்பமே இது போல
ஆரம்பிக்க வேண்டும். பிரம்மாவே விஷ்ணு ஒரு நொடியில். விஷ்ணுவே
பிரம்மா ஆவதற்கு 84 பிறவிகள் பிடிக்கின்றது. இது மிகவுமே
புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இப்பொழுது நீங்கள்
பிராமண குலத்தினர் ஆவீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பிராமண
குலம் எங்கே சென்றது? பிரஜாபிதா பிரம்மாவினுடையதோ புது உலகம்
வேண்டும் அல்லவா? புது உலகம் என்பது சத்யுகம் ஆகும். அங்கோ
பிரஜாபிதா கிடையாது. கலியுகத்தில் கூட பிரஜாபிதா இருக்க
முடியாது. அவர் இருப்பது சங்கமயுகத்தில். நீங்கள் இப்பொழுது
சங்கமத்தில் உள்ளீர்கள். சூத்திரரிலிருந்து நீங்கள் பிராமணர்
ஆகி உள்ளீர்கள். தந்தை பிரம்மாவை சுவீகாரம் செய்துள்ளார்.
சிவபாபா இவரை எப்படிப் படைத்தார் என்பது யாருக்கும் தெரியாது.
திரிமூர்த்தியில் படைப்பவரான சிவனின் படமே இல்லை. பின்
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்பது எப்படி தெரிய வரும்?
மற்றது எல்லாமே அவரது படைப்பாகும். இது பிராமண சம்பிரதாயம்
ஆகும். எனவே அவசியம் பிரஜா பிதா வேண்டும். கலியுகத்திலோ இருக்க
முடியாது. சத்யுகத்திலும் இல்லை. பிராமண தேவி தேவதாய நம: என்று
பாடப்படுகிறது. இப்பொழுது பிராமணர்கள் எந்த இடத்தைச்
சேர்ந்தவர்கள்? பிரஜாபிதா பிரம்மா எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
அவசியம் சங்கமயுகத்தினர் என்றே கூறுவார்கள். இது புருஷோத்தம
சங்கமயுகம் ஆகும். இந்த சங்கமயுகத்தின் வர்ணனை எந்த
சாஸ்திரங்களிலும் இல்லை. மகாபாரத போர் கூட சங்கமத்தில் தான்
நிகழ்ந்ததே அன்றி சத்யுகத்திலோ அல்லது கலியுகத் திலோ அல்ல.
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இவர்கள் இருப்பது சங்கமத்தில்.
பாண்டவர்களாகிய நீங்கள் சங்கமயுகத்தினர் ஆவீர்கள் பின்
கௌரவர்கள் கலியுகத்தினர் ஆவார் கள். கீதையில் கூட பகவானுவாச (பகவானின்
மகா வாக்கியம்) என்றுள்ளது அல்லவா? நீங்கள் பாண்டவர்கள்
தெய்வீக சம்பிரதாயத்தினர் ஆவீர்கள். நீங்கள் ஆன்மீக வழிகாட்டி
ஆகிறீர்கள். உங்களுடையது ஆன்மீக யாத்திரை ஆகும், அதை நீங்கள்
புத்தியால் செய்கிறீர்கள்.
தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று தந்தை கூறுகிறார். நினைவு
யாத்திரையில் இருங்கள். ஸ்தூல யாத்திரையில் தீர்த்தங்கள்
ஆகியவற்றிற்குச் சென்ற பிறகு திரும்பி வருகிறார்கள். அது
அரைகல்பம் நடக்கிறது. இந்த சங்கமயுகத்தின் யாத்திரை ஒரே ஒரு
முறைதான் ஆகும். நீங்கள் சென்று மரண உலகத்தில் திரும்பி வர
மாட்டீர்கள். தூய்மையாக ஆகி, பின் நீங்கள் தூய்மையான உலகில் வர
வேண்டும். எனவே நீங்கள் இப்பொழுது தூய்மையாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நாம் பிராமண சம்பிரதாயத்தினராக
இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு தெய்வீக
சம்பிரதாயம், விஷ்ணு சம்பிரதாயத்தினராக ஆகிறீர்கள்.சத்யுகத்தில்
தேவி தேவதைகள் விஷ்ணு சம்பிரதாயத்தினர் ஆவார்கள். அங்கு
சதுர்புஜத்தின் சிலை இருக்கும். அதன் மூலம் இவர்கள் விஷ்ணு
சம்பிரதாயத்தினர் ஆவார்கள் என்பது தெரியவருகிறது. இங்கு
இராவணனின் சிலை இருக்கிறது. எனவே இராவண சம்பிரதாயம் ஆகும். எனவே
இந்த விஷயம் பற்றிய தலைப்பு வைத்தீர்கள் என்றால், மனிதர்கள்
ஆச்சரியப்படுவார்கள். இப்பொழுது நீங்கள் தேவதை ஆவதற்காக
இராஜயோகம் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். பிரம்மா முகவம்சாவளி
பிராமணர்கள், நீங்கள் சூத்திரரிலிருந்து பிராமணர் ஆகி
உள்ளீர்கள். தத்து எடுக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். பிராமணர்கள்
கூட இங்கு இருக்கிறார்கள். பிறகு தேவதைகள் கூட இங்கு ஆகிவிடு
வார்கள். (டினாஸ்டி) பரம்பரை இங்கு தான் ஆகிறது. பரம்பரை என்று
அரசாட்சிக்கு கூறப்படு கிறது. விஷ்ணுவின் பரம்பரை ஆகும்.
பிராமணர்களின் பரம்பரை என்று கூற மாட்டார்கள். பரம்பரையில்
அரசாட்சி நடக்கிறது. முதலாவது அதற்கு பின் இரண்டாவது, பின்
மூன்றாவது. இப்பொழுது நாம் பிராமண குல பூஷணர்கள் ஆவோம் என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு தேவதை ஆகிறோம். பிராமணர்களே
விஷ்ணு குலத்தில் வருகிறார்கள். விஷ்ணு குலத்திலிருந்து
க்ஷத்திரிய சந்திர வம்ச குலத்தில் வருகிறார்கள். பிறகு வைசிய
குலத்தில் பிறகு சூத்திர குலத்தில். பிறகு பிராமணர்களே தேவதை
ஆவார்கள். பொருள் எவ்வளவு தெளிவாக உள்ளது. படங்களில் என்னென்ன
காண்பிக்கிறார்கள். பிராமணர்களாகிய நாமே தான் விஷ்ணுபுரிக்கு
அதிபதி ஆகிறோம். இதில் குழம்பி விடக் கூடாது. பாபா அளிக்கும்
கட்டுரை மீது ஞான மனனம் (சிந்தனை கடலை கடைதல்) செய்ய வேண்டும்.
இவர்களுடைய விளக்கவுரையோ மிகவும் நன்றாக உள்ளது என்று மனிதர்கள்
ஆச்சரியப்படும் வகையில் யாருக்கு எப்படி புரிய வைக்கலாம்?
என்பது பற்றி ஞான மனனம் செய்ய வேண்டும். ஞானக் கடலைத் தவிர வேறு
யாருமே புரிய வைக்க முடியாது. ஞான மனனம் (சிந்தனைக் கடலை கடைதல்
- விசார் சாகர் மந்தன்) செய்து பின் அமர்ந்து எழுத வேண்டும்.
பிறகு படியுங்கள். அப்பொழுது இன்னின்ன வார்த்தைகளைச் சேர்க்க
வேண்டும் என்ற எண்ணம் எழும். பாபா கூட முதன் முதலில் முரளி
எழுதி உங்கள் கையில் கொடுத்து கொண்டிருந்தார். பிறகு கூறுவார்
- இங்கோ நீங்கள் வீட்டில் பாபாவுடன் கூட இருக்கிறீர்கள்.
இப்பொழுது நீங்கள் வெளியில் சென்று கூற வேண்டி உள்ளது. இந்த
டாபிக் (தலைப்பு) மிகவும் (வண்டர்ஃபுல்) அதிசயமானது. பிரம்மாவே
விஷ்ணு இவரை யாருக்கும் தெரியாது. விஷ்ணுவின் நாபியி-ருந்து
பிரம்மா என்று காண்பிக்கிறார்கள். எப்படி காந்தியின்
நாபியி-ருந்து நேரு. ஆனால் பரம்பரையோ வேண்டும் அல்லவா? பிராமண
குலத்தில் அரசாட்சி இல்லை. பிராமண சம்பிரதாயமே தேவதா
பரம்பரையாக ஆகிறது. பிறகு சந்திர வம்ச பரம்பரையில் செல்வார்கள்.
பிறகு வைசிய பரம்பரை. இது போல ஒவ்வொரு பரம்பரையும் நடக்கிறது
அல்லவா? சத்யுகம் என்பது நிர்விகாரி உலகம். கலியுகம் என்பது
விகாரி உலகம். இந்த இரண்டு வார்த்தைகள் கூட யாருடைய
புத்தியிலும் இல்லை. இல்லை என்றால் (விஷியஸ்) விகாரியிலிருந்து
(வைஸ்லெஸ்) நிர்விகாரி எப்படி ஆகிறோம் என்பது அவசியம்
புத்தியில் இருக்க வேண்டும். மனிதர்களுக்கு (வைஸ்லெஸ்)
நிர்விகாரி பற்றியும் தெரியாது. (விஷியஸ்) விகாரி பற்றியும்
தெரியாது. தேவதைகள் நிர்விகாரி (வைஸ்லெஸ்) ஆவார்கள் என்பது
உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. பிராமணர்கள் (வைஸ்லெஸ்)
நிர்விகாரி என்று ஒரு பொழுதும் கேள்விப்பட்ட தில்லை. புது உலகம்
(வைஸ்லெஸ்) நிர்விகாரி, பழைய உலகம் (விஷியஸ்) விகாரி. எனவே
அவசியம் சங்கமயுகத்தைக் காண்பிக்க வேண்டி உள்ளது. இது பற்றி
யாருக்குமே தெரியாது. புருஷோத்தம மாதம் கொண்டாடுகிறார்கள்
அல்லவா? அது அவர்கள் 3 வருடங் களுக்குப் பிறகு 1 மாதம்
கொண்டாடுகிறார்கள். உங்களுடையது 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு
ஒரு சங்கமயுகம் வருகிறது. மனித ஆத்மா மற்றும் பரமாத்மாவை
சரியாக அறியாமல் உள்ளார்கள். அதிசயமான நட்சத்திரம்
பிரகாசிக்கிறது என்று மட்டும் கூறி விடுகிறார்கள். அவ்வளவே !
எப்படி காண்பிக் கிறார்கள் - இராம கிருஷ்ண பரமஹம்சரின் சிஷ்யர்
விவேகானந்தர் கூறுவார் : நான் குருவிற்கு முன்னால்
அமர்ந்திருந்தேன் - குருவை மனதில் எண்ணி கூட தியானம்
செய்கிறார்கள் அல்லவா? இப்பொழுது என் ஒருவனை நினைவு செய்யுங்கள்
என்று தந்தை கூறுகிறார். தியானத் தினுடையதோ விஷயமே கிடையாது.
குருவின் நினைவோ இருக்கவே இருக்கிறது. குறிப்பாக அமர்ந்து
நினைவு செய்வதால் நினைவு வந்து விடுமா என்ன? அவருக்கு குருவிடம்
இவர் பகவான்! என்ற பாவனை இருந்தது. எனவே அவருடைய ஆத்மா வெளியேறி
எனக்குள்ளே கலந்து விட்டது என்று உணர்தார். அவருடைய ஆத்மா எங்கு
போய் அமர்ந்தது. பிறகு என்ன ஆகியது எதுவுமே வர்ணனை கிடையாது.
அவ்வளவு தான். பகவானின் சாட்சாத்காரம் ஆகியது என்று குஷி
ஏற்பட்டது. பகவான் என்றால் என்ன, இதை அறியாமல் உள்ளார்கள்.
ஏணிப் படியின் படத்தின் மீது நீங்கள் புரிய வையுங்கள் என்று
தந்தை புரிய வைக்கிறார். இது பக்தி மார்க்கம் ஆகும். ஒன்று
பக்தியின் படகு மற்றொன்று ஞானத்தினுடையது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். ஞானம் என்பது தனி. பக்தி என்பது தனி. நான்
உங்களுக்கு முந்தைய கல்பத்தில் ஞானம் கொடுத் திருந்தேன்,
உலகத்தின் அதிபதி ஆக்கி இருந்தேன் என்று பாபா கூறுகிறார்.
இப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் முழு ஞானம் உள்ளது. எப்படி மற்ற
பரம்பரைகள் வருகின்றன. எப்படி விருட்சம் வளருகிறது. எப்படி
பூச்செண்டு இருக்கிறது அல்லவா? இந்த சிருஷ்டி என்ற விருட்சம்
கூட மலர்ச் செண்டு ஆகும். நடுவில் உங்களுடைய தர்மம். பிறகு
இதிலிருந்து மற்ற 3 தர்மங்கள் வெளிப்படுகின்றன. பிறகு
அவற்றிலிருந்து விருத்தி ஆகிக் கொண்டே போகிறது. எனவே இந்த
விருட்சத்தையும் நினைவு செய்ய வேண்டும். எவ்வளவு கிளைகள்
கொடிகள் ஆகியவை வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. கடைசியில்
வருபவர் களுக்கு மதிப்பு கூட ஏற்பட்டு விடுகிறது. ஆல மரம்
உள்ளது அல்லவா?வேர்ப் பகுதி இல்லை. மற்றது முழு விருட்சம்
நின்றுள்ளது. தேவி தேவதா தர்மம் கூட முடிந்து போய் விட்டது.
முற்றிலுமே அழுகிப் போய் விட்டுள்ளது. பாரதவாசிகள் தங்கள்
தர்மம் பற்றி முற்றிலும் அறியாமல் உள்ளார்கள். மற்ற எல்லோரும்
தங்கள் தர்மத்தைப் பற்றி அறிந்துள்ளார்கள். இவர்கள் நாங்கள்
தர்மத்தை ஏற்றுக் கொள்வதே இல்லை என்பார்கள். முக்கியமாக
இருப்பதே 4 தர்மங்கள். சிறிய சிறியவையவோ அநேகம் உள்ளன. இந்த
விருட்சம் மற்றும் சிருஷ்டி சக்கரத்தைப் பற்றி நீங்கள்
இப்பொழுது அறிந்துள்ளீர்கள். தேவி தேவதா தர்மத்தின் பெயரையே
இல்லாமல் செய்து விட்டார்கள். பிறகு தந்தை அந்த தர்மத்தின்
ஸ்தாபனை செய்து மற்ற எல்லா தர்மங்களையும் விநாசம் செய்து
விடுகிறார். காலச் சக்கரத்தின் படத்தின் பக்கம் கூட அவசியம்
அழைத்துச் செல்ல வேண்டும். இது சத்யுகம் அது கலியுகம்.
கலியுகத்தில் எவ்வளவு தர்மங்கள் உள்ளன? சத்யுகத்தில் இருப்பது
ஒரு தர்மம். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை அநேக தர்மங்களின் விநாசம்
வேறு யார் செய்திருக்கக் கூடும்? பகவான் கூட அவசியம் யாராவது
ஒருவர் மூலமாகத்தான் செய்விப்பார் அல்லவா? பிரம்மா மூலமாக ஆதி
சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்விக்கிறேன் என்று
தந்தை கூறுகிறார். பிராமணர்களே விஷ்ணுபுரியின் தேவதை ஆகிறார்கள்.
சங்கமத்தில் பிராமணர்களாகிய நீங்கள் தூய்மையாக ஆவதற்கான
மறைமுகமான உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. பிரம்மாவின்
குழந்தைகளாகிய நீங்கள் சங்கமத்தில் சகோதர சகோதரி கள் ஆவீர்கள்.
சகோதர சகோதரிக் கிடையே அசுத்தமான பார்வை இருக்க முடியாது. கணவன்
மனைவி இருவருமே தாங்கள் பி.கே. என்று உறுதியுடன்
நினைக்கிறார்கள். இதில் மிகுந்த உழைப்பு உள்ளது. ஆண்
பெண்ணிற்கிடையே கவர்ச்சி எப்பேர்ப்பட்டது என்றால், கையால்
தீண்டாமல் இருக்க முடியாது. இங்கு சகோதர சகோதரிகள் கையால்
தீண்டவே கூடாது. இல்லை என்றால் பாவத்தின் உணர்வு வருகிறது. நாம்
பி.கே. ஆவோம் என்பதை மறந்து விடும் பொழுது முடிந்து போய்
விடுகிறார்கள். இதில் மிகுந்த மறைமுகமான (குப்தமாக) உழைப்பு
உள்ளது. தம்பதி களாக கூட இருக்கிறார்கள். ஆனால் யாருக்கு என்ன
தெரியும்? நாம் பி.கே. ஆவோம். ஃபரிஷ்தாக் கள் ஆவோம் என்பதை
அவர்கள் சுயம் அறிந்துள்ளார்கள். கையால் தீண்டக் கூடாது.
இவ்வாறு செய்து செய்து சூட்சும வதனவாசி ஃபரிஷ்தா ஆகி
விடுவீர்கள். இல்லையென்றால் ஃபரிஷ்தா ஆக முடியாது. ஃபரிஷ்தா ஆக
வேண்டும் என்றால், பவித்திரமாக இருக்க வேண்டி உள்ளது. இப்பேர்ப்
பட்ட ஜோடிகள் வெளி வந்தால் முதல் நம்பரில் சென்று விடலாம்.
கூறுகிறார்கள் - தாதாவோ எல்லாமே அனுபவம் செய்து விட்டு பின்னால்
போய் சந்நியாசம் செய்தார் என்று. யார் ஜோடி ஆகிறார்களோ
அவர்களுக்குத் தான் மிகுந்த உழைப்பு (முயற்சி) உள்ளது. பிறகு
அதில் ஞானம் மற்றும் யோகம் கூட வேண்டும். நிறைய பேரை தனக்குச்
சமானமாக ஆக்கினீர்கள் என்றால் தான் பெரிய ராஜா ஆகலாம்.
ஒருவருடைய விஷயம் மட்டும் கிடையாது அல்லவா? நீங்கள் சிவபாபாவை
நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். இவர் பிரஜாபிதா
ஆவார். எங்களுடைய வேலையோ சிவபாபாவிடம் தான் என்று இது போல
கூறுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் பிரம்மாவை
ஏன் நினைவு செய்ய வேண்டும்! அவருக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்!
இப்படியும் இருக்கிறார்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய
வேண்டும். எனவே பாபா போட்டோ (புகைப்படம்) ஆகியவை கூட
கொடுப்பதில்லை. இவருக்குள் சிவபாபா வருகிறார். இவரோ தேகதாரி
ஆவார் அல்லவா? இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அவர்கள் தங்களை இறைவன்
என்று கூறுகிறார்கள். பின் அவர்களிடமிருந்து என்ன கிடைக்கிறது.
பாரதவாசிகளுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாரதவாசிகள்
ஒரேயடியாக திவால் ஆகி உள்ளார்கள். பிரஜைகளிடம் பிச்சைகேட்டுக்
கொண்டிருக் கிறார்கள். 10-20 வருடங்களின் கடன் வாங்குகிறார்கள்.
பிறகு திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்குமா என்ன? வாங்குபவர்கள்
கொடுப்பவர்கள் இருவருமே முடிந்து போய் விடுவார்கள். நாடகமே
முடிந்து விட போகிறது. அநேக கஷ்டங்கள் தலை மீது உள்ளது. திவால்
ஆவது, நோய்கள் ஆகியவை நிறைய உள்ளன. ஒருவர் பணக்காரரிடம்
கொடுத்து வைக்கிறார். பின் அவர் திவால் ஆகி விட்டார் என்றால்,
ஏழைகளுக்கு எவ்வளவு துக்கம் ஆகிறது. அடிக்கு அடி துக்கமே
துக்கமாக உள்ளது. திடீரென்று அமர்ந்தபடியே இறந்து விடுகிறார்கள்.
இது இருப்பதே மரண உலகமாக. அமரலோகத்திற்கு நீங்கள் இப்பொழுது
சென்று கொண்டிருக்கிறீர்கள். அமரபுரியின் சக்கரவர்த்தி
ஆகிறீர்கள். அமரநாத் பார்வதிகளாகிய உங்களுக்கு உண்மையிலும்
உண்மையான அமரகதையைக் கூறிக் கொண்டிருக்கிறார். அமர பாபா ஆவார்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரிடமிருந்து நாம் அமர
கதையைக் கேட்டு கொண்டிருக்கிறோம். இப்பொழுது அமரலோகம் செல்ல
வேண்டி உள்ளது. இச்சமயம் நீங்கள் சங்கமயுகத்தில் உள்ளீர்கள்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. (விசார் சாகர் மந்தன்) சிந்தனைக் கடலைக் கடைதல் - ஞான மனனம்
செய்து பிரம்மாவே விஷ்ணு எப்படி ஆகிறார் என்ற தலைப்பு பற்றி
கூற வேண்டும். புத்தியை ஞான மனனம் செய்வதில் (பிஸி)
சுறுசுறுப்பாக ஆக வைக்க வேண்டும்.
2. ராஜ்ய பதவியை அடைவற்காக ஞானம் மற்றும் யோகத்துடன் கூடவே
தனக்குச் சமானமாக ஆக்கும் சேவையும் செய்ய வேண்டும். தங்களது
பார்வையை மிகவும் தூய்மையானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வரதானம்:
சர்வ சம்பந்தத்தின் அனுபவம் ஒரு தந்தையிடம் செய்யக் கூடிய
களைப்பற்ற மற்றும் தடைகளை வென்றவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் அனைத்து சம்பந்தங்களும் ஒரு தந்தையிடம்
வைக்கிறார்களோ அவர்களுக்கு மற்ற அனைத்து சம்பந்தங்களும்
பெயரளவிற்கு அனுபவமாகும். அவர்கள் சதா மகிழ்ச்சியில் ஆட
வைப்பவர்களாக இருப்பர். ஒருபோதும் களைப்பின் அனுபவம்
செய்யமாட்டார்கள், களைப்பற்று இருப்பார்கள். தந்தை மற்றும் சேவை
இந்த ஈடுபாட்டில் மூழ்கியிருப்பார்கள். தடைகளின் காரணத் தினால்
நிற்பதற்குப் பதிலாக சதா தடைகளை வென்றவர்களாக இருப்பார்கள்.
அனைத்து சம்பந்தங் களின் அனுபவம் ஒரு தந்தையிடம் இருக்கின்ற
காரணத் தினால் டபுள் லைட்டாக இருப்பார்கள், எந்த சுமையும்
இருக்காது. அனைத்து புகார்களும் முடிந்து விடும். முழுமை
நிலையின் அனுபவம் ஏற்படும். சகஜயோகி ஆவார்கள்.
சுலோகன்:
சங்கல்பத்திலும் எந்த தேகதாரிகளின் பக்கம் ஈர்க்கப்படுகிறோம்
என்றால் , நேர்மையற்றவர்களாக ஆகிறோம்.
அவ்யக்த இஷாரே: ஆன்மிக ஸ்திதியின் இருப்பதற்கான பயிற்சி
செய்யுங்கள், உள்நோக்கு முகமுடையவர் ஆகுங்கள்.
விண்வெளியில் செல்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற
காரணத்தினால் முழு பூமியில் எங்கு சித்திரம் எடுக்க
விரும்புகிறார்களோ எடுக்க முடியும். அதே போன்று அமைதி சக்தியின்
மூலம் உள்நோக்கு முகம் என்ற வாகனத்தின் மூலம், மன சக்தியின்
மூலம் எந்த ஒரு ஆத்மா வையும் சரித்திரவான், சிரேஷ்ட ஆத்மா
ஆவதற்கான தூண்டுதல் கொடுக்க முடியும்.