ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கின்றார். ஆன்மீகக் குழந்தைகள் தான் இந்த காதுகளின் மூலம்
கேட்கின்றார்கள். எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை குழந்தைகளுக்குக்
கூறுகின்றார் -- தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இதை
அடிக்கடி கேட்பதின் மூலம் புத்தி அலைபாய்வது நின்று ஒரு
நிலைபெற்று விடும். தன்னை ஆத்மா என்று புரிந்து அமர்ந்து
கொள்வார்கள். நாம் இங்கே தேவதையாக ஆவதற்காக வந்துள்ளோம், என்று
குழந்தைகள் புரிந்துள்ளார்கள். நாம் தத்தெடுக்கப்பட்டக்
குழந்தைகளாவோம். பிராமணர்களாகிய நாம் படிக்கின்றோம். என்ன
படிக்கின்றோம்? பிராமணனிலிருந்து தேவதையாக ஆவதற்கு
படிக்கின்றோம். எப்படி யாராவது குழந்தைகள் கல்லூரிக்கு
செல்கிறார்கள் என்றால் நாம் இப்போது படித்து இஞ்சினியர்,
டாக்டர் போன்றவர்களாக ஆவோம், என்று புரிந்து கொள்கிறார் களே
அதுபோலாகும். உட்கார்ந்தவுடனேயே புரிந்து கொள்வார்கள்.
நீங்களும் கூட பிரம்மாவின் குழந்தைகளாக ஆகின்றீர்கள் என்றால்,
நாம் பிராமணனிலிருந்து தேவதையாக ஆவோம், என்று புரிந்து
கொள்கிறீர்கள். மனிதனிலிருந்து தேவதையாக......... என்று
பாடப்பட்டுள்ளது, ஆனால் யார் ஆகிறார்கள்? ஹிந்துக்கள் அனைவரும்
தேவதையாக ஆவதில்லை. உண்மையில் ஹிந்து என்பது ஒரு தர்மமே இல்லை.
ஆதி சனாதன தர்மம் ஒன்றும் ஹிந்து தர்மம் இல்லை. யாரிடம் வேண்டு
மானாலும் ஹிந்து தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தது? என்று
கேளுங்கள். குழம்பி விடுவார்கள். ஞானமில்லாமல் இந்தப் பெயரை
வைத்து விட்டார்கள். ஹிந்துஸ்தானில் வசிக்கக் கூடியவர்கள்
தங்களை ஹிந்துக்கள், என்று சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையில்
இதனுடைய பெயர் பாரத மாகும், ஹிந்துஸ்தான் இல்லை. பாரத கண்டம்
என்று சொல்லப்படுகிறதே தவிர ஹிந்துஸ்தான் கண்டம், என்று
சொல்லப்படுவதில்லை. இது பாரதமே ஆகும். எனவே அவர்களுக்கு இது
என்ன கண்டம் என்பதே தெரியவில்லை. தூய்மையற்று இருப்பதின்
காரணமாக தன்னை தேவதை என்று புரிந்து கொள்ள முடிவதில்லை.
தேவி-தேவதைகள் தூய்மையானவர்களாக இருந்தார்கள். இப்போது அந்த
தர்மம் இல்லை. மற்ற அனைத்து தர்மங்களும் நடந்து வருகிறது --
புத்தருடைய பௌத்த தர்மம், இப்ராஹிம்முடைய இஸ்லாம் தர்மம்,
கிறிஸ்துவின் கிறிஸ்துவ தர்மமாகும், மற்றபடி ஹிந்து தர்மத்தைச்
சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. இந்த ஹிந்துஸ்தான் என்ற பெயர்
வெளிநாட்டினர் வைத்தார்கள். தூய்மையற்றவர்களாக இருந்த
காரணத்தினால் தங்களை தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்கள், என்று
புரிந்து கொள்ளவில்லை. ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம், பழையதிலும்
பழைய தர்மம் என்று பாபா புரிய வைத்துள்ளார். ஆரம்பத்தில்
இருந்த தர்மம் எது? தேவி-தேவதா தர்மமாகும். ஹிந்து தர்மம் என்று
சொல்ல மாட்டார்கள். இப்போது நீங்கள் பிரம்மாவின்
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் பிராமணர்களாகிவிட்டீர்கள்.
பிராமணனிலிருந்து தேவதையாக ஆவதற்குப் படிக்கின்றீர்கள்.
ஹிந்துவிலிருந்து தேவதையாக ஆவதற்கு படிக்கின்றீர் கள் என்பது
கிடையாது. பிராமணனிலிருந்து தேவதையாக ஆகின்றீர்கள். இதை நல்ல
விதத்தில் தாரணை செய்ய வேண்டும். இப்போது பாருங்கள் நிறைய
தர்மங்கள் இருக்கின்றன. அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
எப்போதெல்லாம் எங்கேனும் சொற்பொழிவாற்று கின்றீர்கள் என்றால்
இதைப் புரிய வைப்பது நல்லதாகும். இப்போது கலியுகம், அனைத்து
தர்மங்களும் இப்போது தமோபிர தானமாக இருக்கிறது. படத்தை வைத்து
புரிய வைத்தீர்கள் என்றால், பிறகு நான் இன்னாராக இருக்கின்றேன்,
நான் இந்தப் பதவியில் இருக்கின்றேன்..... என்ற கர்வம் உடைந்து
விடும். நாம் தமோபிரதானமாக இருக்கின்றோம், என்று புரிந்து
கொள்வார்கள். முதல்-முதலில் பாபாவின் அறிமுகத்தை கொடுத்து
விட்டீர்கள், பிறகு இந்த பழைய உலகம் மாற வேண்டும், என்பதை
காட்ட வேண்டும். நாளுக்கு நாள் படங்கள் கூட அழகாகிக் கொண்டே
செல்கிறது. பள்ளி களில் எப்படி வரைபடம் குழந்தைகளின் புத்தியில்
இருக்கிறது. அதேபோல் உங்களுடைய புத்தியில் இது இருக்க வேண்டும்.
நம்பர் ஒன் வரைபடம் இதுவே ஆகும், மேலே திருமூர்த்தியும்
இருக்கிறது, இரண்டு உருண்டைகளிலும் சத்யுகம் மற்றும் கலியுகம்
இருக்கிறது. இப்போது நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில்
இருக்கிறோம். இந்த பழைய உலகம் வினாசம் ஆகும். ஒரு ஆதி சனாதன
தேவி-தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆதி
சனாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாவீர்கள். ஹிந்து
தர்மம் என்பது கிடையாது. எப்படி சன்னியாசி கள் வசிக்கின்ற
இடமான பிரம்மத்தை ஈஸ்வரன், என்று புரிந்து கொண்டார்களோ, அதேபோல்
ஹிந்துஸ்தானத்தில் வசிக்கக் கூடியவர்கள் ஹிந்து தர்மத்தைச்
சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டார்கள். யாரிடமாவது நல்ல
குணங்கள் இருந்தது என்றால், இவரிடத்தில் தேவதை குணம் இருக்கிறது
என்று சொல்கிறார்கள்.
இந்த இராதா-கிருஷ்ணன் தான் சுயம்வரத்திற்குப் பிறகு
இலஷ்மி-நாராயணன் ஆகிறார்கள், அவரை விஷ்ணு என்று சொல்லப்படுகிறது,
என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனை வருடைய
சித்திரங்களும் இருக்கின்றன, ஆனால் யாரும் தெரிந்திருக்கவில்லை.
குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார்,
பாபாவைத் தான் அனைவரும் நினைவு செய்கிறார்கள். பகவான் என்ற
வார்த்தை வாயில் வராத மனிதனே இருக்க மாட்டான். பகவானை
நிராகாரமானவர் என்று சொல்லப்படுகிறது. நிராகாரம் என்பதின்
அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. இப்போது நீங்கள்
அனைத்தையும் தெரிந்து கொள்கிறீர்கள். கல் புத்தியிலிருந்து
தங்கபுத்தியுடையவர்களாக ஆகி விடுகிறீர்கள். இந்த ஞானம்
பாரதவாசிகளுக்காகத் தான், மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்காக
அல்ல. மற்றபடி இவ்வளவு வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது மற்ற
கண்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, என்பதைப் புரிய வைக்கலாம்.
அங்கே (சத்யுகத் தில்) பாரதக் கண்டத்தை தவிர வேறு எந்த கண்டமும்
இருக்காது. இப்போது அந்த ஒரு தர்மம் இல்லை, மற்ற அனைத்தும்
இருக்கின்றன. ஆலமரத்தின் உதாரணம் துல்லியமானதாகும். ஆதிசனாதன
தேவி-தேவதா தர்மமான அடித்தளம் இல்லை, மற்ற முழு மரமும் நின்று
கொண்டி ருக்கிறது. எனவே ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது,
ஹிந்து தர்மம் இல்லை என்று சொல்ல வேண்டும். இப்போது நீங்கள்
பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், தேவதையாக ஆவதற்கு முதலில்
கண்டிப்பாக பிராமணனாக ஆக வேண்டும். சூத்திர வர்ணம் மற்றும்
பிராமண வர்ணம், என்று சொல்லப்படுகிறது. சூத்திர இராஜ்ஜியம்
என்று சொல்ல மாட்டார்கள். இராஜா-இராணி இருக்கிறார்கள். முதலில்
தேவி-தேவதைகள் மஹாராஜா-மகாராணியாக இருந்தார்கள். இங்கே இந்து
மகாராஜா மகாராணி. பாரதம் ஒன்று தான் பிறகு தனித்தனியாக எப்படி
ஆகிவிட்டது? அவர்களுடைய பெயர் அடையாளத்தையே மறைத்து விட்டார்கள்,
வெறும் சித்திரங்கள் மட்டுமே இருக்கின்றன. நம்பர் ஒன்
சூரியவம்சமாகும். இராமரை சூரிய வம்சத்தவர் என்று சொல்ல முடியாது.
இப்போது நீங்கள் சூரிய வம்சத்தவர்களாக ஆக வந்துள்ளீர்கள்,
சந்திரவம்சத்தவர்களாக ஆவதற்கு அல்ல. இது இராஜயோகம் அல்லவா. நாம்
லஷ்மி-நாராயணனாக ஆவோம், என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது.
மனதில் குஷி இருக்கிறது - மகாராஜா-மகாராணியாக ஆக்குவதற்காக பாபா
நமக்கு படிப்பிக்கின்றார். இது சத்திய நாராயணனின்
உண்மையிலும்-உண்மையான கதையாகும். முன்னால் நீங்கள்
பிறவி-பிறவியாக சத்திய நாராயணனுடைய கதையை கேட்டீர்கள். ஆனால்
அவை உண்மையான கதைகள் இல்லை. பக்தி மார்க்கத்தில் ஒருபோதும்
மனிதனிலிருந்து தேவதையாக ஆக முடியாது. முக்தி-ஜீவன் முக்தியை
அடைய முடியாது. அனைத்து மனிதர்களும் கண்டிப்பாக
முக்தி-ஜீவன்முக்தி அடைகிறார்கள். இப்போது அனைவரும் பந்தனத்தில்
இருக்கிறார்கள். மேலிருந்து இன்றைக்கு கூட ஆத்மா வந்தது என்றால்
ஜீவன் முக்தியில் வருமேயன்றி ஜீவன் பந்தனத்தில் வராது. பாதி
காலம் ஜீவன் முக்தியிலும், பாதிகாலம் ஜீவன் பந்தனத்தில் வரும்.
இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லையற்ற
விளையாட்டில் நாம் அனைவரும் நடிகர்கள், இங்கே நடிப்பை
நடிப்பதற்காக வருகிறோம். ஆத்மாக்களாகிய நாம் இங்கே வசிப்பவர்கள்
இல்லை. எப்படி வருகிறோம், என்ற அனைத்து விஷயங்களையும் அமர்ந்து
புரிய வைக்கின்றார். நிறைய ஆத்மாக்கள் இங்கேயே மறுபிறவி எடுத்து
கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ஆரம்பத்
திலிருந்து கடைசிவரை முழு உலகத்தின் வரலாறு-புவியியல்
புத்தியில் இருக்கிறது. எல்லையற்ற தந்தை மேலே அமர்ந்து கொண்டு
என்ன செய்கிறார், எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆகையினால்
அவர்களுக்கு துச்சபுத்தி என்று சொல்லப்படுகிறது. நீங்களும்
துச்சபுத்தியுடைய்வர்களாக இருந்தீர்கள். இப்போது பாபா
உங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியைப்
புரிய வைத்திருக்கிறார். நீங்கள் ஏழைகள், சாதாரண மானவர்கள்
அனைத்தையும் தெரிந்துள்ளீர்கள். நீங்கள் தூய்மையான
புத்தியுடையவர்களாவீர்கள். சுத்தமானவர்கள் என்று
தூய்மையானவர்களை சொல்லப்படுகிறது. துச்சபுத்தியுடையவர்கள்
அபவித்திரமானவர் களே. இப்போது நீங்கள் என்னவாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள், என்று பாருங்கள். பள்ளியில் கூட படிப்பின்
மூலம் உயர்ந்த பதவி அடைய முடியும். உங்களுடைய படிப்பு
உயர்ந்ததிலும் உயர்ந்த தாகும், அதன்மூலம் நீங்கள் இராஜ்ய பதவி
அடைகிறீர்கள். அவர்கள் தானம்-புண்ணியம் செய்வதின் மூலம்
இராஜாவிடம் பிறவி எடுக்கிறார்கள், பிறகு இராஜா ஆகிறார்கள்.
ஆனால் நீங்கள் இந்த படிப்பின் மூலம் இராஜா ஆகின்றீர்கள். பாபா
தான் கூறுகின்றார், நான் குழந்தை களாகிய உங்களுக்கு இராஜயோகம்
கற்றுக் கொடுக்கின்றேன். பாபாவைத் தவிர வேறு யாரும் இராஜயோகம்
கற்றுத் தர முடியாது. பாபா தான் உங்களுக்கு இராஜயோகப் படிப்பினை
படிப்பிக் கின்றார். பிறகு நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய
வைக்கின்றீர்கள். நீங்கள் தூய்மையற்ற நிலை யிலிருந்து
தூய்மையாகி விடுங்கள், என்று பாபா இராஜயோகம் கற்றுக்
கொடுக்கின்றார். தங்களை ஆத்மா என்று புரிந்து நிராகார பாபாவை
நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள்
மேலும் சக்கரத்தைத் தெரிந்து கொள்வதின் மூலம் சத்யுகத்தில்
சக்கரவர்த்தி இராஜா வாக ஆகிவிடுவீர்கள். இதைப் புரிய வைப்பது
மிகவும் சுலபமாகும். இப்போது தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்கள்
யாரும் இல்லை. அனைவரும் மற்ற தர்மங்களுக்கு மாறி விட்டார்கள்.
நீங்கள் யாருக்காவது புரியவைத்தால் முதலில் பாபாவின்
அறிமுகத்தைக் கொடுங்கள். பாபா புரிய வைக்கின்றார், மற்ற
தர்மங்களில் எவ்வளவு பேர் சென்று விட்டார்கள். நிறைய பேர்
பௌதர்களாக, முஸ்லீம்களாக ஆகி விட்டார்கள். கத்தி முனையிலும்
நிறைய பேர் முஸ்லீம்களாக ஆகியிருக் கிறார்கள். பௌதர்களாகவும்
நிறைய பேர் ஆகியிருக்கிறார்கள். ஒருமுறை சொற்பொழிவாற்றி னால்
ஆயிரமாயிரம் பேர் பௌதர்களாக ஆகிவிட்டனர். கிறிஸ்த்துவர்கள் கூட
அதுபோல் சொற்பொழிவாற்றுகின்றனர். இந்த சமயத்தில் அதிக மக்கள்
தொகை அவர்களுடையதாகும். எனவே குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் இப்போது முழு சிருஷ்டிச் சக்கரமும் சுற்றிக்
கொண்டிருக்கிறது, அப்போது தான் பாபா கூறுகின்றார், நீங்கள்
சுயதரிசன சக்கரதாரிகளாவீர்கள். விஷ்ணுவிற்கு சுயதரிசன
சக்கரத்தைக் காட்டுகிறார்கள். விஷ்ணுவிற்கு ஏன் கொடுத்தார்கள்?
என்பது மனிதர்களுக்குத் தெரியவில்லை. சுயதரிசன சக்கரதாரி என்று
கிருஷ்ணரையோ அல்லது நாராயணனையோ சொல்கிறார்கள். அவர்களுக்குள்
என்ன தொடர்பு, என்பதையும் புரிய வைக்க வேண்டும். இவர்கள்
இருவருமே ஒருவர் தான். உண்மையில் இந்த சுயதரிசன சக்கரம்
பிராமணர் களாகிய உங்களுக்கானதாகும். ஞானத்தின் மூலம் தான்
சுயதரிசன சக்கரதாரியாக ஆகின்றனர். மற்றபடி சுயதரிசன சக்கரம்
கொல்வதற்கோ அல்லது அறுப்பதற்கோ அல்ல. இது ஞானத்தின்
விஷயங்களாகும். எந்தளவிற்கு உங்களுடைய இந்த ஞானத்தின் சக்கரம்
சுற்றுமோ, அந்தளவிற்கு உங்களுடைய பாவம் பஸ்பம் ஆகும். மற்றபடி
தலையை துண்டிப்பதற்கான விஷயம் எதுவும் இல்லை. சக்கரம் ஒன்றும்
ஹிம்சைக்காக அல்ல. இந்த சக்கரம் உங்களை அஹிம்சையாளர் களாக
மாற்றுகிறது. எங்கேயுள்ள விஷயத்தை எங்கே கொண்டு சென்று
விட்டார்கள்! பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது.
குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற குஷி ஏற்படுகிறது! நாம்
ஆத்மா, என்று இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முன்னால்
நீங்கள் தன்னை ஆத்மா என்பதையும் மறந்து விட்டீர்கள், வீட்டையும்
மறந்து விட்டீர்கள். இருந்தாலும் ஆத்மாவை ஆத்மா என்றாவது
சொல்கிறார்கள். பரமாத்மாவையோ கல்லிலும்- முள்ளிலும் இருக்கிறார்
என்று சொல்லி விட்டார்கள். ஆத்மாக் களின் தந்தையை எவ்வளவு
நிந்தனை செய்திருக் கிறார்கள்! பிறகு பாபா வந்து ஆத்மாக்களுக்கு
ஞானம் கொடுக்கின்றார். ஆத்மாவைப் பற்றி சொல்லும் போது
கல்லிலும்-முள்ளிலும், ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறது
என்றெல்லாம் சொல்வதில்லை. விலங்குகளின் விஷயமே தனியான தாகும்.
படிப்பு போன்றவையெல்லாம் மனிதர்களுக்கு தான் நடக்கிறது. நாம்
இவ்வளவு பிறவிகள் இப்படி-இப்படியெல்லாம் ஆகியிருக்கிறோம், என்று
இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். 84 பிறவிகள்
முடித்திருக்கிறீர்கள். மற்றபடி 84 இலட்சம் இல்லை. மனிதர்கள்
எவ்வளவு அஞ்ஞான இருளில் இருக்கிறார்கள். ஆகையினால் தான்
சொல்லப்படுகிறது-- ஞான சூரியன் வந்தது....... அரை கல்பம்
துவாபர-கலியுகத்தில் இருள், அரைகல்பம் சத்யுகம்-திரேதாவில்
பிரகாசமாகும். இது பகல் மற்றும் இரவு, ஒளி மற்றும் இருளின்
ஞானமாகும். இது எல்லையற்ற விஷயமாகும். அரைகல்பம் இருளில்
எவ்வளவு ஏமாற்றம் அடைந்தீர்கள், நிறைய அலைய வேண்டியிருக்கிறது.
பள்ளியில் படிக்கிறார்களே, அவர்கள் அலைபவர்கள், என்று
சொல்லப்படு வதில்லை. சத்சங்கங்களில் மனிதர்கள் எவ்வளவு
அலைகிறார்கள். வருமானம் எதுவும் வருவதில்லை, இன்னும் நஷ்டம்
தான், ஆகையினால் அதை அலைவது என்று சொல்லப்படுகிறது.
அலைந்து-அலைந்து, செல்வம் அனைத்தையும் இழந்து எதுவும்
இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இப்போது இந்தப் படிப்பில் யார்
எந்தளவிற்கு நல்ல விதத்தில் தாரணை செய்வார்களோ, அந்தளவிற்கு
நன்மையே நன்மை யாகும். பிராமணர்களாக ஆகிவிட்டால் நன்மையே
நன்மையாகும். பிராமணர்களாகிய நாம் தான் சொர்க்கவாசிகளாக ஆகிறோம்,
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அனைவரும் சொர்க்கவாசி களாக
ஆவார்கள். ஆனால் நீங்கள் அதில் உயர்ந்த பதவி அடைவதற்கான முயற்சி
செய்கிறீர்கள்.
இப்போது உங்கள் அனைவருக்கும் வானப்பிரஸ்த நிலையாகும்.
நீங்கள் தாங்களே கூறுகின்றீர்கள் -- பாபா, எங்களை வானப்பிரஸ்த
நிலைக்கு அல்லது தூய்மையான உலகத்திற்கு கொண்டு செல்லுங்கள், அது
ஆத்மாக்களின் உலகமாகும். நிராகார உலகம் எவ்வளவு சிறியதாக
இருக்கிறது! இங்கேயோ சுற்றித்-திரிவதற்கு எவ்வளவு நிலம்
இருக்கிறது! அங்கே இந்த விஷயம் இல்லை, சரீரம் இல்லை, நடிப்பு
இல்லை. நட்சத்திரம் போல் ஆத்மாக்கள் நின்று கொண்டி ருக்கின்றன.
இது அதிசயமல்லவா! சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எப்படி
நின்று கொண்டிருக் கின்றன! ஆத்மாக்களும் கூட பிரம்ம
தத்துவத்தில் தன்னுடைய ஆதாரத்தில் இயற்கையாக நின்று
கொண்டிருக்கிறது. நல்லது.
"இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட
செல்லக் குழந்தைகளுக்கு தாயும்-தந்தையுமான பாப்-தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்"