22-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இந்த கண்களினால் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ அவையனைத்தும் இந்த பழைய உலகின் பொருட்களாகும், அவை அழிந்து போய்விடும். ஆகையால் இந்த துக்கதாமத்தை புத்தியால் மறந்து விடுங்கள்.

கேள்வி:
மனிதர்கள் தந்தையின் மீது எந்த களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்? ஆனால் அந்த களங்கம் யாருடையதும் அல்ல?

பதில்:
இவ்வளவு பெரிய விநாசம் நடக்கும் போது பகவான் தான் செய்விக்கின்றார், துக்கமும் அவர் தான் கொடுக்கின்றார், சுகமும் அவர் தான் கொடுக்கின்றார் என்று மனிதர்கள் நினைக் கின்றனர். தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! நான் சதா சுகம் கொடுக்கும் வள்ளலாக இருக் கிறேன், நான் யாருக்கும் துக்கம் கொடுக்கவே முடியாது. ஒருவேளை நான் விநாசம் செய்வித்தால் அந்த பாவம் அனைத்தும் என்னிடத்தில் வந்து விடும். அவையனைத்தும் நாடகப்படி நடைபெறு கிறது, நான் செய்விப்பது கிடையாது.

பாடல்:
இரவுப் பயணிகளே களைப்படையாதீர்கள் ........

ஓம் சாந்தி.
குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக சில பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. பாட்டின் பொருள் கூறுவதனால் வாய் திறக்கப்பட்டு விடுகிறது. நாம் அனைவரும் பகல் யாத்திரை யாளர் இருக்கிறோம், இரவு யாத்திரை முடிவடைகிறது என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. பக்தி மார்க்கம் என்றாலே இரவு யாத்திரையாகும். இரவில் ஏமாற்றம் அடைய வேண்டியிருக்கும். அரை கல்பம் இரவு யாத்திரை செய்து கீழே இறங்கி வந்தோம். இப்பொழுது பகல் யாத்திரைக்கு வந்திருக்கிறோம். இந்த யாத்திரை ஒரே ஒரு முறை தான் நடைபெறுகிறது. நினைவு யாத்திரையின் மூலம் நாம் தமோ பிரதானத்திலிருந்து சதோபிரதானமாகி பிறகு சதோ பிரதான சத்யுகத்திற்கு எஜமானர்களாக ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சதோபிரதானம் ஆவதன் மூலம் சத்யுகத்திற்கு எஜமானர்களாக, தமோ பிரதானம் ஆவதன் மூலம் கலியுகத்திற்கு எஜமானர்களாகவும் ஆகிறோம். அது சொர்க்கம் என்றும், இது நரகம் என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். தந்தையிடமிருந்து சுகம் மட்டுமே கிடைக்கிறது. மற்றவர்களுக்கு வேறு எதையும் கூற முடியாதவர்கள் இது ஒன்றை மட்டும் நினைவு செய்தால் போதும் - சாந்திதாமம் ஆத்மாக்களாகிய நமது வீடாகும், சுகதாமம் சொர்க்கத்தின் இராஜ்யமாகும், மேலும் இப்பொழுது இது துக்கதாமம், இராவண ராஜ்யமாகும். இந்த துக்கதாமத்தை மறந்து விடுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார். இங்கு இருந்தாலும் கூட புத்தியில் இந்த கண்களினால் எதையெல்லாம் பார்க்கிறோமோ அவையனைத்தும் இராவண இராஜ்யமாகும். இந்த சரீரங்களைப் பார்க்கிறீர்கள், இவைகளும் பழைய உலகின் பொருட்களாகும். இந்த அனைத்து பொருட்களும் இந்த யக்ஞத்தில் அர்ப்பணமாகி விடும். அந்த பதீத பிராமணர்கள் யக்ஞத்தை உருவாக்குகின்றனர் எனில், அதில் எள், தானியம் போன்றவைகளை அர்ப்பணம் செய்வர். இங்கு விநாசம் ஆகிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை, பிறகு பிரம்மா மற்றும் விஷ்ணு. சங்கருக்கு அந்த அளவிற்கு பாகம் கிடையாது. விநாசம் ஆகியே தீர வேண்டும். யாருக்கும் பாவம் ஏற்பட்டு விடக் கூடாது, அப்படிப்பட்டவர்கள் மூலம் தான் தந்தை விநாசம் செய்விக்கின்றார். பகவான் விநாசம் செய்விக்கின்றார் என்று யாராவது கூறினால் பிறகு களங்கம் அவருக்கு ஏற்பட்டு விடும். ஆகையால் இவையனைத்தும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இது எல்லையற்ற நாடகமாகும், இதனை யாரும் அறியவில்லை. வீட்டில் தந்தையில்லையெனில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் எனில் உங்களுக்கென்று யாருமில்லையா? என்று (பிறர்) கேட்கின்றனர். இப்பொழுது கோடிக் கணக்கான மனிதர்கள் இருக்கின்றனர், இவர்களுக் கென்று யாரும் கிடையாது. நாடுகளுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஒரே வீட்டில் குழந்தை தந்தையிடத்தில், கணவன் மனைவியிடத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக் கின்றனர். துக்கதாமத்தில் இருப்பதோ அசாந்தியாகும். பகவான் தந்தை துக்கத்தைப் படைக் கின்றார் என்பது கிடையாது. துக்கம், சுகத்தை தந்தை தான் கொடுக்கின்றார் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் தந்தை ஒருபொழுதும் துக்கம் கொடுக்கவே முடியாது. சுகம் கொடுக்கும் வள்ளல் என்று அவர் கூறப்படும் பொழுது பிறகு எப்படி துக்கம் கொடுக்க முடியும்? நான் உங்களை மிகவும் சுகமானவர்களாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். ஒன்று தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா அழிவற்றது, சரீரம் அழியக் கூடியது. ஆத்மாக்களாகிய நாம் வசிக்குமிடம் பரந்தாமம் ஆகும். அது சாந்திதாமம் என்றும் கூறப்படுகிறது. இந்த வார்த்தை சரியானது ஆகும். சொர்க்கத்தை பரந்தாமம் என்று கூறுவது கிடையாது. பரம் என்றால் தொலை தூரமாக இருப்பது. சொர்க்கம் என்பது இங்கு தான் ஏற்படுகிறது. மூலவதனம் வெகு தொலைவில் இருக்கிறது. அங்கு தான் ஆத்மாக்களாகிய நாம் இருக்கிறோம். சுகம், துக்கத்தின் பாகத்தை நீங்கள் இங்கு தான் நடிக்கிறீர்கள். இன்னார் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று கூறுவது முற்றிலும் தவறாகும். சொர்க்கம் இங்கு தான் இருக்கிறது. இப்பொழுது கலியுகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். மற்ற அனைவரும் கலியுகத்தில் இருக்கின்றனர். ஒரே வீட்டில் தந்தை கலியுகி என்றால் குழந்தை சங்கமயுகத்தில் இருப்பார்.. மனைவி சங்கமயுகத்தில் எனில், கணவன் கலியுகியாக இருக்கின்றார். எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது! மனைவி ஞானம் அடைகிறாள், கணவன் ஞானம் அடைவது கிடையாது எனில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுப்பது கிடையாது. வீட்டில் சண்டை சச்சரவு ஏற்பட்டு விடுகிறது. மனைவி மலராக ஆகிவிடுகிறாள், இவர் முள்ளாகவே இருந்து விடுகிறார். ஒரே வீட்டில் நான் புருஷோத்தம சங்கமயுகத்தில் தூய்மையான தேவதை யாக ஆகிக் கெண்டிருக்கிறேன் என்பதை குழந்தை அறிந்திருப்பார், ஆனால் சரீரத்தின் தந்தை கூறுகின்றார் திருமணம் செய்து கொண்டு நரகவாசி ஆகு. இப்பொழுது ஆன்மீகத் தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! தூய்மையாக ஆகுங்கள். இப்போதைய தூய்மையானது 21 பிறவி களுக்குக் கூடவே இருக்கும். இந்த இராவண இராஜ்யம் அழிந்து போக வேண்டும். யார் எதிரியாக ஆகிவிடுகிறார்களோ அவருடைய உருவ பொம்மையை வைத்து எரிப்பார்கள் அல்லவா! அதாவது இராவணனை எரிக்கின்றனர்! ஆக எதிரியிடத்தில் எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும்! ஆனால் இராவணன் யார்? என்பது யாருக்கும் தெரியாது. செலவு அதிகம் செய்வார்கள், மனிதர்களை எரிப்பதற்கு அவ்வளவு செலவு செய்வதில்லை, சொர்க்கத்தில் இது போன்ற விசயமே இல்லை. அங்கு மின்சாரத்தில் வைக்கின்றனர், அவ்வளவு தான் முடிந்து விடுகிறது. இவர்களது மண் காரியத்திற்கு உதவும் என்ற எண்ணமும் அங்கு வராது. அங்கிருக்கும் வழக்கங்கள் அப்படிப் பட்டது, அதாவது எந்த கஷ்டம் மற்றும் களைப்பிற்கான விசயமே கிடையாது. அந்த அளவிற்கு சுகம் இருக்கும். ஆக இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார் - என் ஒருவனை நினைவு செய்யும் முயற்சி செய்யுங்கள். நினைவு செய்வதில் தான் யுத்தம் இருக்கிறது. குழந்தைகளுக்குத் தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார் - இனிய குழந்தைகளே! தன் மீது கவனம் என்ற காவல் செய்து கொண்டே இருங்கள். மாயை ஒருபொழுதும் காது, மூக்கு துண்டித்து விடக் கூடாது, ஏனெனில் எதிரி அல்லவா! நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள், ஆனால் மாயை புயல்கள் தூக்கி விசி விடுகிறது. ஆகையால் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தேன்? மனம் எங்கு அலை பாய்ந்தது? என்று முழு நாளுக்கான சார்ட் வைக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். டைரியில் குறிப்பெடுங்கள் - எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தேன்? தன்னை சோதித்துக் கொள்ளும் பொழுது மாயையும் பார்க்கிறது - இவர் மிகவும் சாதுர்யமானவர், தன் மீது அதிக கவனம் செலுத்துகின்றார். முழுமையாக காவல் காக்க வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை வந்து அறிமுகம் கொடுக்கின்றார். வீட்டைக் கவனியுங்கள், இருந்தாலும் என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். இவர் அந்த சந்நியாசிகள் போன்று கிடையாது. அவர்கள் யாசிக்கின்றனர், இருப்பினும் காரியங்கள் செய்ய வேண்டியிருக் கிறது அல்லவா! நீங்கள் அவர்களுக்கும் கூற முடியும் - நீங்கள் ஹடயோகிகள், இராஜயோகம் கற்பிப்பவர் ஒரே ஒரு பகவான் தான். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இந்த சங்கமயுகத்தைத் தான் நினைவு செய்ய வேண்டும். இப்பொழுது நாம் சங்கமயுகத்தில் சர்வோத்தம தேவதைகளாக ஆகின்றோம். நாம் உத்தம புருஷர்கள் அதாவது பூஜ்ய தேவதைகளாக இருந்தோம், இப்பொழுது கனிஷ்ட (தாழ்ந்த) நிலையிலிருக்கிறோம். எதற்கும் உதவாதவர் களாக இருக்கிறோம். இப்பொழுது நாம் என்ன ஆகிறோம்? மனிதர்கள் வழக்கறிஞர் படிப்பு படிக்கின்ற பொழுது பதவிகள் அடைவது கிடையாது. தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் பதவிக்கான தொப்பி கிடைக்கிறது. சென்று அரசாங்க சேவை செய்வர். இப்பொழுது நமக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் கற்பிக்கின்றார் எனில் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி கண்டிப்பாக கொடுப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது இலட்சியம் மற்றும் குறிக்கோளாகும். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள், நான் யார்? எப்படிப்பட்டவன்? என்பதைப் புரிய வைத்து விட்டேன். ஆத்மாக்களின் தந்தையாகிய நான் பிந்துவாக இருக்கிறேன், என்னிடத்தில் முழு ஞானம் இருக்கிறது. நான் பிந்துவாக இருக்கிறேன் என்ற ஞானம் உங்களிடம் முன்பு இல்லாமல் இருந்தது, அதில் 84 பிறவிக்கான அழிவற்ற பாகம் பதிவாகியிருக்கிறது. கிறிஸ்து நடிப்பை நடித்துச் சென்றிருந்தார், பிறகு மீண்டும் அவசியம் வருவார். கிறிஸ்துவின் ஆத்மாவும் இப்பொழுது திரும்பிச் செல்லும். கிறிஸ்துவின் ஆத்மாவும் இப்பொழுது தமோ பிரதானமாக இருக்கும். உயர்ந்ததிலும் உயர்ந்த தர்ம ஸ்தாபகர்கள் அனைவரும் இப்பொழுது தமோ பிரதானமாக இருக்கின்றனர். பல பிறவிகளின் கடைசியில் நான் தமோ பிரதானமாக ஆகி விட்டேன், இப்பொழுது மீண்டும் சதோ பிரதானமாக ஆகின்றேன் என்றும் கூறுகின்றனர். அவ்வாறே ஆகுக.

நாம் இப்பொழுது தேவதை ஆவதற்காக பிராமணன் ஆகியிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். விராட ரூப சித்திரத்தின் பொருளை யாரும் அறியவில்லை. இப்பொழுது குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள், ஆத்மா இனிய வீட்டில் இருந்தபொழுது தூய்மையாக இருந்தது. இங்கு வந்து பதீதமாக ஆகி விட்டது. அதனால் தான் ஹே பதீத பாவனனே! வந்து எங்களை தூய்மையாக ஆக்குங்கள், நாமும் நமது முக்தி தாம வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறது. இந்த கருத்தும் தாரணை செய்ய வேண்டிய கருத்தாகும். முக்தி, ஜீவன் முக்திதாமம் என்று எது கூறப்படுகிறது? என்பதை மனிதர்கள் அறியவில்லை. முக்திதாமம் தான் சாந்திதாமம் என்று கூறப்படுகிறது. ஜீவன்முக்தி தாமம் என்று சுகதாமம் கூறப்படுகிறது. இங்கு துக்கத்தின் பந்தனமாகும். ஜீவன்முக்தியை சுகமான சம்பந்தம் என்று கூறுகிறோம். இப்பொழுது துக்கமான பந்தனம் தூரமாகி விடும். உயர்ந்த பதவியடைவதற்காக நாம் முயற்சி செய்கின்றோம். ஆக இந்த போதை இருக்க வேண்டும். நாம் இப்பொழுது ஸ்ரீமத் மூலம் நமது இராஜ்ய பாக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஜெகதம்பா முதல் நம்பரில் செல்கிறார். நாமும் அவரைப் பின்பற்றுவோம். எந்த குழந்தைகள் இப்பொழுது தாய், தந்தையின் உள்ளத்தில் அமர்கிறார்களோ அவர்கள் தான் எதிர்காலத்தில் சிம்மாசனதாரிகளாக ஆவார்கள். யார் இரவு, பகல் சேவையில் பிசியாக இருக்கிறார்களோ அவர்கள் தான் உள்ளத்தில் அமர முடியும். தந்தையை நினைவு செய்யுங்கள் என்று அனைவருக்கும் செய்தி கூற வேண்டும். பணம் போன்ற எதுவும் வாங்கக் கூடாது. இவர்கள் ராக்கி கட்ட வருகிறார்கள் எனில், ஏதாவது கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைக் கின்றனர். நமக்கு வேறு எதுவும் வேண்டாம், 5 விகாரங்களைத் தானம் கொடுத்தால் போதும் என்று கூறுங்கள். இதை தானமாகப் பெறுவதற்காக நாங்கள் வந்திருக் கிறோம். அதனால் தான் தூய்மைக்கான ராக்கி கட்டுகிறோம். தந்தையை நினைவு செய்யுங்கள், தூய்மை ஆகுங்கள், இந்த தேவதைகளாக ஆகிவிடுவீர்கள். மற்றபடி நாம் பணம் எதுவும் வாங்குவது கிடையாது. நாம் அப்படிப்பட்ட பிராமணர்கள் அல்ல. 5 விகாரங்களை தானம் கொடுத்தால் போதும், கிரஹச்சாரம் நீங்கிவிடும். இப்பொழுது எந்த கலைகளும் கிடையாது. அனைவரின் மீதும் கிரஹச்சாரம் அமர்ந்திருக்கிறது. நீங்கள் பிராமணர்கள் அல்லவா! எங்கு வேண்டுமென்றாலும் செல்லுங்கள், தானம் கொடுத்தால் கிரஹச்சாரம் நீங்கிவிடும் என்று கூறுங்கள். தூய்மையாக ஆகுங்கள். ஒருபொழுதும் விகாரத்தில் செல்லாதீர்கள். தந்தையை நினைவு செய்தால் விகர்மம் விநாசமாகும், மேலும் நீங்கள் மலர்களாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் தான் மலர்களாக இருந்தீர்கள், பிறகு முள்ளாக மாறி விட்டீர்கள். 84 பிறவிகள் எடுத்து எடுத்து வீழ்ச்சியடைந்து கொண்டே வந்தீர்கள். இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். இவர் மூலமாக பாபா வழி காட்டுகின்றார். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான், அவருக்கென்று சரீரம் கிடையாது. நல்லது, பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு சரீரம் இருக்கிறதா? ஆம், சூட்சும சரீரம் இருக்கிறது என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் அது மனித சிருஷ்டி கிடையாது. விளையாட்டு அனைத்தும் இங்கு தான் நடைபெறுகிறது. சூட்சும வதனத்தில் நாடகம் எப்படி நடைபெறும்? மூலவதனத்திலும் சூரியன், சந்திரன் இல்லாததால் நாடகமும் கிடையாது. இது மிகப் பெரிய மேடையாகும். இங்கு தான் மறுபிறப்பும் ஏற்படுகிறது. சூட்சுமவதனத்தில் ஏற்படுவது கிடையாது. இப்பொழுது உங்களது புத்தியில் முழு எல்லையற்ற விளையாட்டும் இருக்கிறது. தேவி தேவதை களாக இருந்த நாம் பிறகு எப்படி விகார மார்க்கத்தில் வந்தோம்? என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். வாம மார்க்கம் என்றால் விகார மார்க்கம் ஆகும். அரைகல்பம் நாம் தூய்மையாக இருந்தோம், நமக்குத் தான் வெற்றி, தோல்விக்கான விளையாட்டு ஏற்படுகிறது. பாரதம் அழிவற்ற கண்டமாகும். இது ஒரு பொழுதும் விநாசம் ஆவது கிடையாது. ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்த பொழுது வேறு எந்த தர்மமும் இல்லை. உங்களது இந்த விசயத்தை யார் கல்பத்திற்கு முன்பு ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் தான் ஏற்றுக் கொள்வார்கள். 5 ஆயிரம் ஆண்டிற்கும் மேலான பழமையான பொருள் எதுவும் கிடையாது. சத்யுகத்திற்கு நீங்கள் முதலில் சென்று தனது மாளிகையை உருவாக்குவீர்கள். சமுத்திரத்தின் அடியிலிருந்து தங்கத்தினால் ஆன துவாரகை வெளியில் வரும் என்பது கிடையாது. கடலிலிருந்து தேவதைகள் ரத்தினங்கள் நிறைந்த தட்டுக்களை நிறைத்துக் கொடுத்தனர் என்று காண்பிக்கின்றனர். உண்மையில் ஞானக் கடலான தந்தை ஞான ரத்தினங்கள் நிறைந்த தட்டுக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சங்கர் பார்வதிக்கு கதை கூறியதாகக் காண்பிக்கின்றனர். ஞான ரத்தினங்களினால் பையை நிரப்பு கின்றனர். சங்கர் போதை ஏற்படுத்தும் பானங்கள் குடித்தார் என்று கூறுகின்றனர், பிறகு அவர் முன் சென்று பையை நிறைத்து விடுங்கள், எமக்கு செல்வம் கொடுங்கள் என்று கேட்கின்றனர். ஆக பாருங்கள் சங்கரையும் நிந்தித்து விட்டனர். அனைவரையும் விட அதிகம் என்னைத் தான் நிந்திக்கின்றனர். இதுவும் ஒரு விளையாட்டாகும், இது மீண்டும் நடைபெறும். இந்த நாடகத்தை யாரும் அறியவில்லை. நான் வந்து ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்குமான முழு இரகசியத் தையும் புரிய வைக்கின்றேன். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை என்பதையும் அறிவீர்கள். விஷ்ணுவிலிருந்து பிரம்மா, பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக எப்படி ஆகின்றனர்? என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது.

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விஷ்ணு குலத்தைச் சார்ந்தவர்களாக ஆவதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறீர்கள். விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆவதற்காக நீங்கள் பிராமணர்களாக ஆகியிருக் கிறீர்கள். பிராமணர்களாகிய நாம் நமக்காகவே ஸ்ரீமத் மூலமாக சூரியவம்சி, சந்திரவம்சி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களது உள்ளத்தில் இருக்கிறது. இதில் யுத்தத்திற்கான விசயம் ஏதுமில்லை. தேவதைகள் மற்றும் அசுரர்களுக்கும் ஒருபொழுதும் யுத்தம் நடைபெறவில்லை. தேவதைகள் சத்யுகத்தில் இருக் கின்றனர், அங்கு எப்படி யுத்தம் ஏற்படும்? இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் யோக பலத்தின் மூலம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். தேக பலமுள்ளவர்கள் விநாசத்தை பலனாக அடைகின்றனர். நீங்கள் அமைதி பலத்தின் மூலம் விஞ்ஞான பலத்தின் மீது வெற்றி அடை கிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். நான் ஆத்மா, நான் எனது வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆத்மா மிகவும் வேகமானது. இப்பொழுது அப்படிப்பட்ட விமானம் உருவாக்கியிருக்கின்றனர், ஒரு மணி நேரத்தில் எங்கிருந்து எங்கேயோ கொண்டு போய் சேர்த்து விடுகிறது! இப்பொழுது ஆத்மா அதை விட வேகமானது. ஒரு நொடியில் ஆத்மா எங்கிருந்து எங்கேயோ சென்று பிறப்பு எடுக்கிறது! சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று பிறப்பு எடுக்கின்றனர். ஆத்மா அனைத்தையும் விட வேகமான ராக்கெட் ஆகும். இதில் மிஷினுக்கான விசயம் எதுவும் கிடையாது. சரீரம் விட்டதும் அது ஓடிவிடுகிறது. நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், பதீத ஆத்மா செல்ல முடியாது என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்கிறது. நீங்கள் பாவனம் ஆகித் தான் செல்வீர்கள், மற்ற அனைவரும் தண்டனை அடைந்து செல்வார்கள். அதிக தண்டனைகள் அடைவர். அங்கு கர்ப மாளிகையில் மிகவும் ஓய்வாக இருப்பர். குழந்தைகள் சாட்சாத்காரம் செய்திருக்கின்றனர். கிருஷ்ணரின் பிறப்பு எப்படி ஏற்படும்? அசுத்தத்தின் விசயம் ஏதும் கிடையாது. முற்றிலும் ஒளி நிறைந்ததாக ஆகிவிடுகிறது. இப்பொழுது நீங்கள் வைகுண்டத் திற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள் எனில் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்? சுத்தமான, தூய்மையான உணவு முறைகள் வேண்டும். பருப்பு, உணவு அனைத்தையும் விட மிகவும் நல்லது. ரிஷிகேஷில் சந்நியாசிகள் ஒரு ஜன்னல் வழியாக எடுத்துக் கொண்டு சென்று விடுவர், ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக இருப்பர். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தன் மீது கவனம் என்ற காவல் முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். மாயையிட மிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நினைவிற்கான உண்மையிலும் உண்மையான சார்ட் வைக்க வேண்டும்.

2) தாய் தந்தையைப் பின்பற்றி இதய சிம்மாசனதாரிகளாக ஆக வேண்டும். இரவு பகல் சேவை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள், 5 விகாரங்களை தானம் செய்தால் கிரஹச்சாரம் நீங்கிவிடும் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

வரதானம்:
சென்ஸ் மற்றும் எசென்ஸ் - என்பதன் சமநிலை மூலமாக தனது என்ற தன்மையை ஸ்வாகா செய்யக்கூடிய (அக்னிக்கு இரையாக்கக்கூடிய) உலகை மாற்றுபவர் ஆகுக

சென்ஸ் என்றால் - ஞானத்தின் விஷயங்கள், புரிந்து கொள்ளுதல் என்பதாகும் மேலும் எசென்ஸ் என்றால் - சர்வ சக்திகள் நிறைந்த நினைவு மற்றும் சக்திசாலியான நிலையாகும். இந்த இரண்டின் சமநிலை இருந்தால், தனது என்ற தன்மையானது அல்லது பழமையானது என்பது ஸ்வாகா ஆகிவிடும். ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு சொல்லும் மேலும் ஒவ்வொரு செயலும் உலக மாற்ற சேவைக்காக ஸ்வாகா செய்யப்படும் போது உலக மாற்றம் தானாகவே நடந்து விடும். யார் தனது தேகம் என்ற நினைவு முதற்கொண்டு அனைத் தையும் ஸ்வாகா செய்கின்றார்களோ, அவர்களுடைய உயர்ந்த அதிர்வலைகள் (வைப்ரேஷன்) மூலமாக சூழ்நிலையின் மாற்றம் சகஐமாக நடந்தேறும்.

சுலோகன்:
பிராப்திகளை (பலன்களை) நினைவு செய்யுங்கள், அப்பொழுது துக்கம் மற்றும் தொந்தரவு தரக்கூடிய விஷயங்கள் மறந்து போய்விடும்

அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும் ஆளுமையையும் கையாளுங்கள்.

உயர்ந்த செயலுக்கான அஸ்திவாரம் - பவித்ரதா. ஆனால் - பவித்ரதா என்பது வெறும் பிரம்மச் சரியம் அல்ல. பிரம்மச்சர்யம் என்பதும் உயர்ந்தது தான் ஆனால் மனதில் எண்ணத்தின் அளவில் கூட எந்தவொரு ஆத்மாவின் மீதும் தனிப்பட்ட பற்று வைப்பது அல்லது ஒருதலை பட்சமாக நடப்பது என்பது, எந்த ஒர் ஆத்மாவின் சிறப்பையும் பார்த்து, அதற்கு வசப்படுவது அல்லது அவர் களுக்காக எதிர்மறையான எண்ணங்களை படைப்பது அல்லது மரியாதையற்ற வார்த்தைகளை சொற்களை சொல்வது என்பது கூட அபவித்ரம் (தூய்மையற்றது) என்பதாகும்.