22.06.25    காலை முரளி            ஓம் சாந்தி  15.12.2005      பாப்தாதா,   மதுபன்


இப்பொழுது அன்பு மற்றும் சகயோகத்தின் சொரூபத்தை மேடையில் கொண்டு வாருங்கள், ஒவ்வொருவருக்கும் குணம் மற்றும் சக்திகளின் பரிசைக் கொடுங்கள்.

இன்று பரமாத்ம தந்தை தன்னுடைய நாலாபுறங்களிலும் உள்ள பரமாத்ம அன்பிற்கு அதிகாரியான குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றார். இந்த பரமாத்ம அன்பானது உலகத்தில் கோடியில் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது. இந்த பரமாத்ம அன்பு சுயநலமற்ற அன்பாகும், ஏனெனில், ஒரு பரமாத்ம தந்தை தான் நிராகாரமானவர், அகங்காரம் அற்றவர். மனித ஆத்மா சரீரதாரியாக இருக்கும் காரணத்தினால் ஏதாவது சுயநலம் வந்துவிடுகிறது. பரமாத்ம தந்தை தான் தன்னுடைய குழந்தைகளுக்கு அப்பேற்பட்ட சுயநலமற்ற அன்பு கொடுக்கின்றார். பரமாத்ம அன்பு பிராமண வாழ்க்கைக்கான விசேஷ ஆதாரம் ஆகும், பிராமண வாழ்க்கையின் உயிர் தானம் ஆகும். ஒருவேளை, பிராமண வாழ்க்கையில் பரமாத்ம அன்பின் அனுபவம் குறைவாக உள்ளது என்றால் அன்பு இல்லாத வாழ்க்கை இரமணீகரமாக இருக்காது, வறண்டுபோன வாழ்க்கை ஆகிவிடுகிறது. பரமாத்ம அன்பு தான் வாழ்வில் சதா துணையாகவும் இருக்கிறது மற்றும் துணைவன் ஆகி சதா உதவியும் செய்கிறது. எங்கே அன்பு இருக்கிறதோ, துணை இருக்கிறதோ, அங்கே அனைத்தும் மிகவும் சகஜமாக மற்றும் சரளமாக ஆகிவிடுகிறது. உழைப்பின் அனுபவம் இருக்காது. இத்தகைய அனுபவம் உள்ளது அல்லவா! பரமாத்ம அன்பிற்குரியவர்கள் எந்தவொரு மனிதன் மற்றும் சாதனங்களின் கவர்ச்சியில் செல்ல முடியாது, ஏனெனில், பரமாத்ம கவர்ச்சி, பரமாத்ம அன்பு அப்பேற்பட்ட அனுபவத்தை செய்விக்கின்றது, அந்த அன்பின் காரணத்தினால் சதா அன்பில் மூழ்கி (லவ்லீன்) இருக்கின்றார்கள், இதையே மக்கள் பரமாத்மாவில் இரண்டறக் கலந்துவிடுவது என்று நினைக்கின்றனர். பரமாத்மாவில் இரண்டறக் கலப்பதில்லை, ஆனால், பரமாத்ம அன்பில் லவ்லீன் ஆகிவிடுகின்றார்கள்.

பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளை பார்க்கின்றார்கள் - பரமாத்மாவிற்கு அன்பானவர்களாக அனைவரும் ஆகியிருக்கின்றார்கள், ஆனால், ஒருவிதமானோர் அன்பான (லவ்லி) குழந்தைகளாக இருக்கின்றனர், மற்றொருவிதமானோர் லவ்லீன் (அன்பில் மூழ்கிய) குழந்தைகளாக இருக்கின்றனர். எனவே, அன்பான குழந்தை களாகவோ அனைவருமே உள்ளனர், ஆனால், எந்தளவு லவ்லீன் ஆகி இருக்கின்றீர்கள்? என்று தன்னைத் தானே கேளுங்கள். லவ்லீன் குழந்தைகளின் அடையாளம் - அவர்கள் சதா பரமாத்மாவின் கட்டளைப்படி சகஜமாக நடப்பார்கள். அவர்கள் கட்டளைப்படியும் நடப்பார்கள் மற்றும் தேக உணர்வையும் பலியாக்கி இருப்பார் கள், ஏனென்றால், அன்பிற்காக பலி ஆகுவது கடினம் அல்ல. அனைத்தையும் விட முதல் கட்டளை - யோகி ஆகுக, துய்மை ஆகுக என்பதாகும். தந்தைக்கு குழந்தைகளிடம் அன்பு இருப்பதன் காரணத்தினால், தந்தையால் குழந்தைகள் உழைப்பதைப் பார்க்க முடியவில்லை, ஏனென்றால், 63 பிறவிகளாக அதிகமாக உழைப்பு செய்திருக்கிறார்கள் என்பதை தந்தை அறிந்திருக்கின்றார். இப்பொழுது இந்த அலௌகீக பிறப்பானது உழைப்பில் இருந்து விடுபட்டு அதீந்திரிய சுகத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான பிறப்பு ஆகும். மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக் கின்றீர்களா அல்லது உழைக்க வேண்டியதாக இருக்கின்றதா? அன்பிற்காக கட்டளைப்படி நடப்பது உழைப்பாகத் தோன்றாது. ஒருவேளை, உழைக்க வேண்டி இருக்கிறது என்றால் அன்பின் சதவிகிதம் குறைவாக உள்ளது. எங்கேயோ அன்பில் ஏதோ லீக்கேஜ் (கசிவு) உள்ளது. இரண்டு விசயங்களின் கசிவு உழைக்க வைக்கிறது - ஒன்று பழைய உலகத்தின் கவர்ச்சி, உலகம் என்பதில் சம்பந்தம், பதார்த்தம் அனைத்தும் வந்து விடுகின்றன. மேலும், இரண்டாவது - பழைய சமஸ்காரத் தின் கவர்ச்சி. இந்த பழைய உலகம் மற்றும் பழைய சமஸ்காரம் தன் பக்கம் கவர்ந்து இழுத்து விடுகிறது என்றால் பரமாத்ம அன்பில் சதவிகிதம் வந்துவிடுகிறது. சோதனை செய்யுங்கள் - இந்த இரண்டு கசிவுகளில் இருந்து விடுபட்டு இருக்கின்றேனா? ஆத்மாக்களாகிய உங்களுடைய அனாதி சமஸ்காரம் மற்றும் ஆதி சமஸ்காரம் என்னவாக இருந்தது மற்றும் இப்பொழுது இறுதி பிராமண வாழ்க்கையின் சமஸ்காரம் என்னவாக உள்ளது? என்பதை நினைவு செய்யுங்கள். அனாதியிலும், ஆதியிலும் மற்றும் இறுதியிலும் கூட சிரேஷ்ட சமஸ்காரம் உள்ளது. இந்த பழைய சமஸ்காரமானது மத்திம காலத்தைச் சேர்ந்தது, அனாதியினுடையதும் அல்ல, ஆதியினுடையதும் அல்ல, இறுதி காலத்தைச் சேர்ந்ததும் அல்ல. ஆனால், அனைவருடைய இலட்சியம் என்ன? எந்தக் குழந்தையிடம் கேட்டாலும், தந்தைக்கு சமம் ஆகுவதே இலட்சியம் என்ற ஒரே பதிலைத் தான் தருகின்றார்கள். இது தான் அல்லவா! ஆம் என்றால் கையை உயர்த்துங்கள். இந்த இலட்சியம் உறுதியாக உள்ளதா? அல்லது இடை இடையில் மாறிவிடுகிறதா?

தந்தை மற்றும் தாதா (மூத்த சகோதரர்) ஆகிய இருவருக்கும் சமமான சமஸ்காரம் என்ன? என்று தந்தை குழந்தைகளிடம் கேட்கின்றார். சதா தந்தை ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் பரந்த உள்ளம் உடையவராக இருக்கின்றார். ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் சினேகம் மற்றும் மரியாதை கொடுக்கும் சொரூபத்தில் சகயோகியாக இருந்திருக்கின்றார். அவ்வாறு சுயம் தானும் தன்னை ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் சகயோகியாக இருப்பதாக அனுபவம் செய்கின்றீர்களா? சகயோகம் கொடுத்தால் சகயோகி ஆவேன், அவ்வாறு அல்ல. சினேகம் கொடுத்தால் சினேகி ஆவேன், அவ்வாறு அல்ல. எவ்வாறு பிரம்மா பாபா ஒவ்வொரு குழந்தைக்காகவும் சகயோகி ஆனார், சினேகி ஆனார், அவ்வாறு அனைவருடைய சதா சினேகி மற்றும் சகயோகியாக இருக்கவேண்டும், இதையே சமம் ஆகுவது என்று கூறப்படுகின்றது. ஒருவேளை, எந்தவொரு குழந்தைக்கும் சமஸ்காரத்தை மாற்றுவதற்கு உழைக்க வேண்டி இருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன? பிரம்மா பாபா தன்மீது கவனம் வைத்தார், ஆனால், உழைக்கவில்லை. சமஸ்காரத்தை மாற்றம் செய்வதில் உழைப்பிற்கான காரணம் - அன்பானவராக ஆகியிருக் கின்றீர்கள் (லவ்லி), அன்பில் மூழ்கியவராக (லவ்லீன்) ஆகவில்லை.

பாப்தாதாவோ ஒவ்வொரு குழந்தையையும் அன்பான குழந்தை என்று புரிந்திருக்கின்றார்கள், அறிந்தும் இருக்கின்றார்கள், ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் அறிந்திருக்கின்றார்கள், பிறகும் என்ன கூறுவார்கள்? அன்பானவர்களாக இருக்கின்றார்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே படிப்பு, ஒரே பாலனை, ஒரே வரதானத்தை சதா கொடுக்கின்றார்கள். இது கடைசி நம்பர் குழந்தை என்று தெரிந்து இருக்கிறது, பிறகும் கூட பாப்தாதா எந்தவொரு குழந்தையின் அவகுணம், பலவீனத்தை சங்கல்பத்தில் கூட வைப்பதில்லை. செல்லமானவர், தேடிக் கண்டெடுக் கப்பட்டவர், இனிமையிலும் இனிமையானவர் . . . இத்தகைய திருஷ்டி மற்றும் விருத்தி யோடு பார்க்கின்றார்கள், ஏனெனில், இத்தகைய விருத்தி மற்றும் சிரேஷ்ட திருஷ்டியினால் பலவீனமானவர் மகாவீரர் ஆகிவிடுவார் என்பதை பாப்தாதா அறிந்திருக்கின்றார்கள். அதுபோன்று தன்னுடைய சிரேஷ்ட விருத்தி மற்றும் சுபபாவனை, சுபவிருப்பத்தின் மூலம் எவர் ஒருவரையும் உங்களால் பரிவர்த்தனை செய்ய முடியும். இயற்கை யையும் கூட மாற்றிக் காட்டுவோம் என்று நீங்கள் சவால் விடுத்திருக்கின்றீர்கள் என்றால் ஆத்மாக்களை மாற்ற முடியாதா என்ன! இயற்கையை வென்றவர்களாக ஆகின்றீர்கள் என்றால் ஆத்மாவானது, ஆத்மாவின் சிரேஷ்ட பாவனையின் மூலம், நன்மை நிறைந்த விருப்பதின் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாதா!

இப்பொழுது புது வருடம் ஆரம்பம் ஆகப்போகிறது அல்லவா - ஆகவே, புது வருடத்தில் அனைத்து எல்லையற்ற பிராமண பரிவாரத்திற்கு மத்தியில் ஒருவருக்கொருவர் தன்னுடைய சுபபாவனை, சிரேஷ்டமான விருப்பத்தின் மூலம் ஒவ்வொருவரும், ஒருவரை ஒருவர் பரிவர்த்தனை செய்வதில் சகயோகி ஆகுங்கள். இவர் பலவீனமாக இருக்கின்றார், இவருடைய சமஸ்காரத்தில் இந்த பலவீனம் இருக்கிறது என்பதை அறிந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் சினேகம் மற்றும் சகயோகத்தின் சக்தி மூலம் சகயோகி ஆகுங்கள். ஒருவருக்கொருவர் சகயோகத்தின் கரம் நீட்டுங்கள். இந்த சகயோகத்தின் கரம் கொடுப்பது அப்படிப்பட்ட காட்சியாகிவிடும், கரத்தோடு அன்பின் கரம் கோர்க்கும்பொழுது, சகயோகத்தின் கரம் கோர்க்கும்பொழுது, அது பார்ப்பதற்கு மாலை போன்று ஆகிவிடும். போதனை கொடுக்காதீர்கள், அன்பு நிறைந்த சகயோகம் கொடுங்கள். விடுபட்டவர் ஆகாதீர்கள், ஒதுக்கி விடாதீர்கள், ஆதரவு அளிப்பவர் ஆகுங்கள், ஏனெனில், வெற்றிமாலை உங்களுடைய நினைவுச்சின்னம் ஆகும். ஒவ்வொரு மணியும், மணியோடு இணைந்து சகயோகி யாக இருப்பதனாலேயே மாலையின் சித்திரம் உருவாகி உள்ளது.

புது வருடத்தில் என்ன செய்ய வேண்டும்? என்று அனைவரும் பாப்தாதாவிடம் கேட்கின்றார்கள். செய்தி கொடுப்பதற்கான காரியமோ அதிகம் செய்து விட்டீர்கள், செய்து கொண்டும் இருக்கின்றீர் கள், செய்து கொண்டே இருப்பீர்கள். இப்பொழுது தூதுவர்களாகிய நீங்கள் சகயோகம் மற்றும் சினேகத்தின் சொரூபத்தை மேடையில் கொண்டு வாருங்கள். மகாதானி ஆகுங்கள், தன்னுடைய குணங்களைக் கொடுத்து சகயோகி ஆகுங்கள், ஆக்குங்கள். அப்பேற்பட்ட தன்னுடைய குணங்களுடைய, அவையோ (உண்மையில்) பரமாத்மாவின் குணங்கள் ஆகும், ஆனால், எந்த குணத்தை நீங்கள் தனக்குள் கொண்டு வந்திருக்கின்றீர்களோ, அந்த குணத்தின் சக்தியினால் அவர்களின் பலவீனத்தை தூரமாக்குங்கள். இதை செய்ய முடியுமா? செய்ய முடியுமா அல்லது கடினமாக உள்ளதா? டீச்சர்ஸ் கூறுங்கள், செய்ய முடியுமா? செய்ய முடியுமா அல்லது செய்தே ஆகவேண்டுமா? செய்தே ஆக வேண்டும். எந்த பலவீனமும் இருக்கக்கூடாது, ஏனெனில், கோடியில் ஒருவர் அல்லவா! அவர் கடைசி மணியாகக் கூட இருக்கட்டும், ஆனால் அவர் கோடியில் ஒருவர் அல்லவா. உங்களது பட்டமே - மாஸ்டர் சர்வ சக்திவான் என்பதாகும். எனவே, சர்வ சக்திவானின் கடமை என்ன? சக்தியினை கொடுக்கல் - வாங்கல் செய்வது. தந்தை மூலம் கிடைத்திருக்கும் குணங்களை தங்களுக்குள் கொடுக்கல் - வாங்கல் செய்யுங்கள். இந்த சகயோகத்தின் பரிசை ஒருவருக்கொருவர் கொடுங்கள். புது வருடத்தில் ஒருவருக்கொருவர் பரிசு கொடுக்கின்றார்கள் அல்லவா! இந்த வருடத்தில் ஒருவருக்கொருவர் குணங்களின் பரிசு கொடுங்கள். ஒருவேளை, நன்மை நிறைந்த பாவனை வைத்தீர்கள் என்றால், எவ்வாறு சொற்பொழிவு செய்து வார்த்தைகள் மூலம் செய்தி கொடுக்கின்றீர்கள் அல்லவா, அதுபோல் தன்னுடைய நன்மை நிறைந்த பாவனை மூலம், நன்மை நிறைந்த விருத்தி மூலம், நன்மை நிறைந்த வாயுமண்டலத்தின் மூலம் இந்த குணங்களின் பரிசு கொடுங்கள், சக்திகளின் பரிசு கொடுங்கள். பலவீனமானவருக்கு சகயோகம் கொடுப்பது, இது தக்க சமயத்தில் பரிசு கொடுப்பதாகும், கீழே விழுந்தவர்களைத் தள்ளிவிடாதீர்கள், தூக்கிவிடுங்கள், உயரே தூக்கிவிடுங்கள். இவர்கள் இப்படி, இவர்கள் இப்படி, . . . இது கூடாது. இவர்கள் பிரபுவின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள், கோடியில் ஒரு ஆத்மா, விசேஷ ஆத்மா, வெற்றியாளர் ஆகப்போகிற ஆத்மா, இந்த திருஷ்டி வைத்திடுங்கள். இப்பொழுது விருத்தி, திருஷ்டி, வாயுமண்டலத்தை மாற்றுங்கள். ஏதாவது புதுமை செய்ய வேண்டும் அல்லவா! பலவீனத்தைப் பார்த்தாலும் பார்க்காதீர்கள், ஊக்கம் கொடுங்கள், சகயோகம் கொடுங்கள். அப்பேற்பட்ட பிராமண குழுவைத் தயார் செய்யுங்கள். அப்பொழுது பாப்தாதா வெற்றிக்கான கை தட்டுவார்கள். நீங்களும் கூட அடிக்கடி கை தட்டுகின்றீர்கள் அல்லவா, பாப்தாதாவும் கூட வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் என்று கை தட்டுவார்கள். நீங்களும் உடன் சேர்ந்து கை தட்டுவீர்கள் அல்லவா. இப்பொழுது கை தட்டினீர்கள், நல்லது செய்தீர்கள். ஆனால், விஷ்வத்திற்கு முன்னால் கை தட்டவேண்டும். அனைவருடைய வாயில் இருந்தும் நம்முடைய இஷ்ட தேவதைகள் வந்து விட்டனர், நம்முடைய பூஜைக்குரியவர்கள் வந்துவிட்டனர் என்ற இந்த சப்தம் வெளிப்பட வேண்டும். இலட்சியம் உறுதியாக உள்ளது அல்லவா! இலட்சியம் உறுதியாக உள்ளதா, செய்து தான் ஆகவேண்டும் அல்லவா? அல்லது பார்க்கலாம், திட்டம் போடுவோம்! என்று கூறுகின்றீர்களா? செய்தே ஆக வேண்டும், திட்டம் போடுவதென்ன, செய்தே ஆக வேண்டும். இப்பொழுது அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள், இப்பொழுது அவர்களுடைய காத்திருப்பை முடிவடையச் செய்யுங்கள். பிரத்யட்சம் ஆகுவதற் கான ஏற்பாடு செய்யுங்கள். இயற்கை கூட இப்பொழுது எவ்வளவு துன்பம் அடைந்துகொண்டு இருக்கின்றது, பாருங்கள். இயற்கையையும் அமைதியாக்குங்கள். நீங்கள் பிரத்யட்சம் ஆகிவிட்டீர்கள் என்றால் உலக அமைதி தானாக வந்துவிடும். நல்லது.

தற்சமயத்தில் உலகத்தில் இரண்டு விசயங்கள் நடக்கின்றன. ஒன்று - உடற்பயிற்சி மற்றும் இரண்டாவது உணவின் மீது கவனம். நீங்களும் இந்த இரண்டு விசயங்களை செய்கின்றீர்களா? உங்களுடைய பயிற்சி எது? சரீரத்திற்கான பயிற்சியையோ அனைவரும் செய்கின்றனர், ஆனால், மனதிற்கான பயிற்சி - இப்பொழுது பிராமணன், பிராமணனில் இருந்து ஃபரிஷ்தா மற்றும் ஃபரிஷ்தாவில் இருந்து தேவதை என்பதாகும். இந்த மனதினுடைய டிரில்லிற்கான பயிற்சியை சதா செய்து கொண்டே இருங்கள். மேலும், சுத்தமான சங்கல்பமே மனதினுடைய சுத்தமான உணவு ஆகும். ஒருவேளை, வீணான எண்ணம், எதிர்மறையான எண்ணம் வருகிறது என்றால் இது மனதினுடைய அசுத்தமான உணவு ஆகும். எனவே, மனதில் சதா சுத்தமான சங்கல்பம் இருக்க வேண்டும், இரண்டும் செய்ய வருகிறது அல்லவா! எவ்வளவு நேரம் விரும்புகின்றீர்களோ, அவ்வளவு நேரம் சுத்த சங்கல்பத்தின் சொரூபம் ஆகிவிடுங்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள பரமாத்ம அன்பிற்கு அதிகாரியான விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா ஒருவருக் கொருவர் சகயோகி ஆகக்கூடிய தந்தையினுடைய சினேகி மற்றும் சகயோகி ஆத்மாக் களுக்கு, சதா வெற்றியாளர் மற்றும் வெற்றிக்கான கொடியை உலகத்தில் பறக்கவிட வேண்டும் என்ற இந்த இலட்சியத்தை நடைமுறையில் கொண்டு வரக்கூடிய வெற்றியாளர் குழந்தைகளுக்கு, சதா இந்த பழைய உலகம் மற்றும் சமஸ்காரத்தின் கவர்ச்சியில் இருந்து கடந்து இருக்கக்கூடிய தந்தைக்கு சமமான குழந்தைகளுக்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தந்தையின், உள்ளத்தில் இருந்து அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாதிஜீ அவர்களுடன் - மிகவும் நல்ல பாகத்தை நடித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்களைப் பார்த்து அனைவருக்கும் ஃபரிஷ்தா வாழ்க்கையின் நினைவு வருகின்றது. விடுபட்ட நிலை மற்றும் அன்பான நிலை.

குஜராத்தில் உள்ள முக்கியமான 13 சகோதரிகளுடன்:- நல்ல நல்ல மகாவீரர் ஆவீர்கள். மகாவீரர்களின் வேலை வெற்றியாளராகி வெற்றியாளர் ஆக்குவதாகும். அனைவரும் நன்றாக சேவை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் மற்றும் எதிர்காலத்திலும் சேவை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பாப்தாதா குழந்தைகளின் ஊக்கம், உற்சாகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடை கின்றார்கள். நன்றாக குஜராத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் எதிர்காலத்திலும் பரப்பிக் கொண்டு இருப்பீர்கள். பாப்தாதாவிற்கு அனைத்து குழந்தைகளும் ஆசைகளின் தீபங்களாகத் தெரிந்து கொண்டிருக்கின்றனர். நன்றாக உள்ளது. குழுவும் நன்றாக உள்ளது. ஒவ்வொருவரிடமும் விசேஷத்தன்மை உள்ளது. நல்லது. மகிழ்ச்சியாக இருப்பவர்கள், மகிழ்ச்சியை பகிர்ந்து அளிக்கக்கூடியவர்கள். (சரளா தீதி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள், தாதி மாலையில் யாரை வைத்திருக்கின்றார்கள்) நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? நாம் அவசியம் இருப்போம் அல்லவா, அவ்வாறு நினைக்கின்றீர்களா? கொஞ்சம் ஒருவருக் கொருவர் சகயோகம் கொடுத்தால், இன்னும் என்னவெல்லாம் மீதம் உள்ளதோ, அது முடிவடைந்துவிடும். அனைவரும் தந்தைக்கு சமம் ஆகக்கூடியவர்கள் தான். (புதுமை என்ன செய்வது) சொன்னோம் அல்லவா - ஒவ்வொரு சென்டரும் குறைந்ததிலும் குறைந்தது ஒரு வாரிசைத் தயார் செய்ய வேண்டும். இந்த வருடம் அவரை அழைத்து வரவேண்டும், 21 வாரிசுகளை அழைத்து வரவேண்டும். இதை ஆரம்பம் செய்யுங்கள். முதல் நம்பரில் வாருங்கள். அனைவரும் சரி என்று கூறுகின்றனர். வாரிசு ஆத்மாக்களின் தகுதியைப் பற்றி அறிவீர்கள் அல்லவா? இவர்கள் அனைவரையும் பாபாவினு டையவர்களாகத் தான் ஆக்குவீர்கள் அல்லவா, தன்னுடையவர்களாகவோ ஆக்கமாட்டீர்கள். நல்லது. ஓம்சாந்தி.

சேவைக்கான முறையும் குஜராத்தினுடையது ஆகும், குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தான் சந்திப்பைக் கொண்டாட வந்திருக்கின்றார்கள்:- குஜராத்தைச் சேர்ந்தவர்கள் யாரெல்லாம் இருக்கின்றீர்களோ, அவர்கள் சந்திக்க வந்திருந்தாலும், சேவைக்காக வந்திருந்தாலும், அவர்கள் கை உயர்த்துங்கள். நிறைய பேர் இருக்கின்றனர், மிகவும் நல்லது. நன்றாக வாய்ப்பைப் பயன்படுத்தி யுள்ளீர்கள். யார் சமையற்கூடத்தில் இருக்கின்றார்களோ, அவர்கள் உள்ளத்தில் இருக்கின்றார்கள் என்ற ஒரு பழமொழி சிந்தியில் உள்ளது என்று குஜராத்திற்கு பாப்தாதா கூறுகின்றார்கள். எனவே, அனைவரையும் விட மிகவும் அருகாமையில் குஜராத் உள்ளது. அருகாமையில் இருப்பார்கள் அல்லவா, அவர்களை கைக்கெட்டும் தூரத்தில் (முற்றிலும் அருகாமையில்) உள்ளனர் என்று கூறப்படுகின்றது. கூப்பிடுங்கள், வந்துவிடுவார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு எவரெடியாக இருக்கின்றீர்கள் அல்லவா - வாருங்கள் என்று எப்பொழுது அழைத்தாலும், வந்துவிடு வீர்களா? அப்படித்தானே? பரிவாரத்தைப் பார்க்கமாட்டீர்களா, என்ன செய்வீர்கள், வந்துவிடுவீர்களா? எவரெடியாக இருக்கின்றீர்கள். நல்லது, குஜராத் சாகார பிரம்மாவின் தூண்டுதலினால் ஸ்தாபனை ஆகியிருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்தவர்கள் குஜராத்தினருக்கு அழைப்பு கொடுக்கவில்லை, பிரம்மா பாபா குஜராத்தைத் (சென்டரை) திறந்தார்கள். எனவே, குஜராத்தின் மீது விசேஷமாக பிரம்மா பாபாவின் பார்வை பதிந்துள்ளது. மேலும், குஜராத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சியும் செய்திருக்கின்றீர்கள், நல்ல முறையில் சென்டரைத் திறந்திருக்கின்றீர்கள். எத்தனை சென்டர்கள் உள்ளன? (300 சேவைக் கேந்திரங்கள், உபசேவை கேந்திரங்கள் உள்ளன மற்றும் 3 ஆயிரம் கீதா பாடசாலைகள் உள்ளன) நல்லது, அனைத்தையும் விட அதிகமான சென்டர் எந்த ஜோனில் இருக்கின்றது? (பம்பாய்-மகாராஷ்டிராவைச் சேர்ந்தது) நல்லது - மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கின்றார்களா? (இன்று வரவில்லை) குஜராத்தைச் சேர்ந்தவர்கள் சேவையோ நன்றாக செய்து கொண்டு இருக்கின்றார்கள், குஜராத்தினுடைய விரிவாக்கம் கூட நன்றாக உள்ளது. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? விஸ்தாரமாகவோ இருக்கின்றது, விஸ்தாரமோ நன்றாக செய்துள்ளீர்கள், இப்பொழுது குஜராத்தைச் சோர்ந்தவர்கள் நம்பர்ஒன் வாரிசை தயார் செய்ய வேண்டும். குறைந்ததிலும் குறைந்தது பெரிய சேவைக்கேந்திரங்கள் எவையெல்லாம் உள்ளனவோ, பழைய வாரிசுகளாக யார் இருக்கின்றார்களோ, அவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள், ஆனால், புதிய வாரிசு யாரையாவது உருவாக்குங்கள். ஒருவரையாவது உருவாக் குங்கள், ஏனென்றால், யார் வாரிசு ஆகும் தகுதியுடையவர்களாக இருப்பார்களோ, அவர்களே மாலையின் மணியாக ஆகுவார்கள். எனவே, மாலையோ தயார் செய்ய வேண்டும் அல்லவா! 16108னுடைய மாலையும் உள்ளது. இப்பொழுது ஒருவேளை பாப்தாதா 108ன் மாலை தயார் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள் என்றால் செய்ய முடியுமா? தயார் செய்ய முடியுமா? தாதிகள் கூறுங்கள், 108க்கான மாலை உருவாக்க முடியுமா? (தாதிஜீ செய்ய முடியும் என்று கூறினார்கள்) தயாராக உள்ளனரா? 108ன் மாலை தயார் ஆகிவிட்டதா? (ஆமாம் பாபா தயராராக உள்ளது) நல்லது எழுதிக் காட்ட வேண்டும். தயாராக உள்ளது என்றால் மிகவும் நல்லது, வாழ்த்துக்கள். நல்லது 16 ஆயிரத்திற்கான மாலை, பாதியாவது தயார் ஆகியுள்ளதா? (பாதி என்ன அதைவிடவும் அதிகமாக உள்ளது) நல்லது தானே. பாருங்கள் மறைமுகமான ரூபத்தில் தயாராகியுள்ளது, மேலும், உங்களுடைய தாதி பார்த்திருக்கின்றார்கள். நல்லது மாலையில் என்னுடைய பெயர் இருக் கின்றதா? என்று இப்பொழுது அனைவரும் உங்களிடம் கேட்பார்கள். நன்றாக உள்ளது. அப்படிப் பட்ட சுபமான பாவனை, சுபமான நம்பிக்கைகள் தயார் செய்துவிடுகிறது. இப்பொழுது அனைவரும் கேட்டீர்கள் அல்லவா, நான் அந்த மாலையில் எவரெடியாக இருக்கின்றேனா? என்று தன்னை சோதனை செய்ய வேண்டும். நல்லது. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

கேட் (CAD) குரூப் (இருதய நோயாளிக்கானது) வந்திருக்கின்றார்கள்:- நன்றாக உள்ளது, இந்த சப்தத்தைப் பரப்புவதற்கான சாதனம் கூட மிகவும் நன்றாக உள்ளது, ஏனெனில், நடைமுறையில் நிரூபணம் பார்க்கின்றார்கள் அல்லவா, மேலும், செலவு இல்லாமல் தியானத்தின் மூலம் குணம் அடைவது என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது. இப்பொழுது மெதுமெதுவாக இதனை வளர்ச்சி அடையச் செய்யுங்கள். பாப்தாதா கேள்வியுற்றார்கள் - செய்து கொண்டு இருக்கின்றீர்கள் மற்றும் வெற்றியும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது, மேலும் கூட கிடைத்துக் கொண்டே இருக்கும், மற்றபடி பாப்தாதா இந்த காரியத்திற்காக நிமித்தம் ஆனவர்களுக்கு வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரசாங்க அதிகாரிகள் வரை ரிசல்ட் சென்றடைந்து கொண்டிருக்கின்றது, இன்னும் பரப்பிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் தியானத்தின் மகத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்லும். மற்றபடி பாப்தாதாவிற்கு இந்த விதி பிடித்திருக்கின்றது. நல்லது.

ஆசீர்வாதம்:
மனதின் மௌனத்தினால் சேவையின் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கக்கூடிய ஸித்தி (வெற்றி) சொரூபம் ஆகுக.

எவ்வாறு முதன் முதலில் மௌன விரதம் வைக்கப்பட்டதோ, அப்பொழுது அனைவரும் ஃபரீ ஆகிவிட்டனர், நேரம் சேமிப்பானது, அவ்வாறு இப்பொழுது மனதின் மௌனம் வைத்திடுங்கள், அதன்மூலம் வீணான சங்கல்பம் வரவே முடியாது. எவ்வாறு வாயில் இருந்து சப்தம் வெளிப் படாதோ, அதுபோல் வீணான சங்கல்பம் வரக்கூடாது - இது தான் மனதின் மௌனம் ஆகும். இதில் நேரம் சேமிப்பாகிவிடும். இந்த மனதின் மௌனத்தினால், சேவையில் அப்பேற்பட்ட புதிய கண்டு பிடிப்பு உருவாகும், இதில் தவம் குறைவாகவும் மற்றும் வெற்றி அதிகமாகவும் ஏற்படும். எவ்வாறு அறிவியல் சாதனம் நொடியில் விதியை (புதிய கண்டுபிடிப்பிற்கான விதி) கிடைக்கச் செய் கின்றதோ, அதுபோல் இந்த அமைதியின் சாதனத்தின் மூலம் நொடியில் விதி கிடைத்துவிடும்.

சுலோகன்:
யார் சுயம் சமர்ப்பண ஸ்திதியில் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு முன்னால் அனைவருடைய சகயோகமும் சமர்ப்பணம் ஆகிவிடுகிறது.


அவ்யக்த சமிக்ஞை

அனேக விதமான மனிதர்கள், வைபவம் அதாவது அனேகவிதமான பொருட்களின் தொடர்பில் வந்தாலும் ஆன்மிக உணர்வு மற்றும் பற்றற்ற உணர்வை தாரணை செய்யுங்கள். இந்த வைபம் மற்றும் பொருட்கள் பற்றற்றவர்களுக்கு முன்பாக பணிப்பெண்ணாக இருக்கும் மற்றும் பற்று உள்ளவர்களுக்கு முன்னால் காந்தம் போல் மாட்டவைக்கக் கூடியதாக இருக்கும்.